08 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 8

மும்பை ரெட்-லைட் அனுபவம் - 2

வீட்டின் வாயில் குறுகியதாக இருந்தாலும் வீடு உள்ளே விசாலமாக இருந்தது.

நாயகனில் காட்டப்பட்ட ‘பலான’ வீட்டை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். ஏறக்குறைய அதேபோல் நடுவே பெரிய ஹால், அதைச்சுற்றிலும் வாயிலில் Gaudy கலர்களில் தொங்கிய திரைச்சீலைகளுக்குப் பின்னாலிருந்த, புறாக்கூடுபோன்ற அறைகள்.. (கீழே ஒரு சாம்பிள் அறையின் உள்ளே) என திரையில் காட்டப்பட்ட அதே வீடு, அப்படியே அச்சாய்.

Image hosted by Photobucket.com

எங்களுடன் வந்த நிரூபரை முன்னே விட்டு நாங்கள் அவர் பின்னாலேயே போனோம்.

நடுவிலிருந்த ஹால் நிறைய பெண்கள், பெண்கள், பெண்கள்.. எல்லா வயசிலும் (படிவாலி (வயதானவர்கள்), சோட்டிவாலி (வாலிபிகள்)), நிறத்திலும், உயரமாய், குட்டையாய், மெலிவாய், தடியாய்..

எல்லோர் கண்களும் கூட்டமாய் உள்ளே நுழைந்த எங்களையே பார்க்க (தப்பித்தவறி நம் கண்கள் அவர்களுடைய கண்களை சந்தித்துவிட்டால் கண்களை சிமிட்டி, ஆபாச சைகைகளுடன் அழைத்தனர்), எங்கள் தலைவர் நேராக நடு ஹாலைக் கடந்து நேர் எதிரே அமைந்திருந்த ஒரு அறையின் கதவைத் திறந்துகொண்டு நுழைந்தார்.. நாங்களும் அவசர அவசரமாய் அவர் பின்னே நுழைய அறைக் கதவுகள் மூடப்பட்டன..

உள்ளே ஆச்சரியப்படக்கூடிய அளவிலான நவீன அலங்காரங்களுடன் கூடிய விசாலமான ஹால்.. சுற்றிலுமிருந்த சுவரையொட்டி தரையில் இடப்பட்டிருந்த வெள்ளை நிற மெத்தைகள்.. ஹிந்தி திரைப்படங்களில் வருவதுபோல்.. பணம் படைத்தவர்களை உபசரிக்க இப்படி சில வீடுகளில் மட்டும் வசதிகள் உண்டாம்!

ஹாலுக்கு நடுவே ஐந்து பேரடங்கிய இசைக்குழு.. நடுநாயகமாய் ஆஜானுபாகுவான.. அளவுக்கு மிஞ்சிய அரிதாரம், நகைகள் (போலியாகத்தானிருக்க வேண்டும்) நெற்றியில் பெரீஈஈஈய (அத்தனை பெரிசு!) சாந்து பொட்டு..என அமர்ந்திருந்த ஒரு பெண்மனியிடம் சென்று குனிந்து நம்முடைய நிரூபர் ஏதோ சொல்ல.. அந்த பெண் திரும்பி ‘ஆவோரே..’ என்று ஹாலுக்கு வலகோடியிலிருந்த மாடிப்படியை நோக்கி கூவ.. ஹிந்தி படங்களில் வருவதுபோல் ஆடை அலங்காரங்களுடன் நான்கைந்து பெண்கள் வெளியேறி ஹாலுக்கு வர... அடுத்த இருபது நிமிடங்கள்.. It was really a wonderful performance of hindusthani music and dance..

அன்றைய காமத்திப்புரா விஜயத்தில் இது ஒன்றுதான் இன்றும் சந்தோஷத்துடன் நினைவிலிருப்பது...

நடனம் முடிந்தவுடன் எங்களுடைய அன்றைய தலைவரும் என் நண்பர்களும் கூடி ரகசியமாய் ஹிந்தி, மராத்தி கலந்த கலவையாய் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ள நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

இதற்கிடையில் நடன மற்றும் இசைக்குழு ஹாலிலிருந்து வெளியேற அதே மாடிப்படி வழியாக முன் ஹாலில் பார்த்த பெண்களைப் போலல்லாமல் சற்றே பணக்காரத்தனமான, அழகான, வயது மிகவும் குறைந்த இளம் பெண்கள் இறங்கி வந்து ஹாலை அடைத்துக்கொண்டு வெவ்வேறு போஸ்களில் நின்றுக்கொண்டு எங்களையே வைத்த கண் வாங்காமல் பார்க்க.. அதுவரை என்னிடமிருந்த தைரியம் போய் நிரூபரிடம் பேசிக்கொண்டிருந்த ஐயருடைய சட்டையை பிடித்து இழுத்தேன்..

‘என்ன சார்.. ஏதாவது வேணுமா?’ என்றார் விஷமத்துடன். ‘ஜாஸ்தியா சொல்றாங்களாம் அதுதான் ரேட் பேசிக்கிட்டிருக்கோம்..’

எனக்கோ அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது..

‘இல்ல சாமி, எனக்கென்னவோ இது சரியில்லாத மாதிரி...’ என்று இழுத்தேன்.

‘உங்க டென்ஷன் புரியுது.. உங்களுக்கு வேணாம்னா வேணாம். ஆனா இவ்வளவு தூரம் வந்திட்டு.. ஒன்னும் வேணாம்னு எழுந்து போக முடியாது.. அதுவுமில்லாம.. நம்ம பசங்க விடமாட்டாங்க.. நான் வேணா உங்களோட இங்கயே இருக்கேன். அவனுங்க போயிட்டு வரட்டும். ஜஸ்ட பத்து, பதினஞ்சி நிமிஷம்தான்.. Don’t worry.’

ஐயர் போய் என்ன சொன்னாரோ என் நண்பர்களில் பலரும் பரிதாபமாய் என்னைப் பார்த்தனர். வேறு சிலரின் பார்வையில் ‘யே மதறாசி லோக் ஐசாயி ஹை!’ (இந்த மட்றாஸ் பசங்க அவ்வளவுதான்.) என்பதுபோல் தெரிந்தது. நான் பார்த்தும் பார்க்காததுபோல் குனிந்துக்கொண்டேன்.

அடுத்த இரண்டொரு நிமிடங்களில் ரேட் படிந்து ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை இழுத்துக்கொண்டு சென்று மறைய நான், ஐயர், நிரூபர் (அவர் டியூட்டியில் இருக்கிறாராம். அதனால்தான்..) என மீதமிருந்த எங்களை ஏளனத்துடன் பார்த்து முகத்தை சுளித்து பழிப்பு காட்டிவிட்டு மீதமிருந்த பெண்களும் நகர நாங்கள் மூன்று பேர் மட்டும் அவர்கள் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.

இவ்விஷயத்தில் மிகவும் அனுபவசாலியான அவரிடமிருந்து சேகரித்தவைகளை கீழே கொடுத்துள்ளேன்.

அலிகளின் விளையாட்டு

Image hosted by Photobucket.com

மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே விளங்கும் என்று நினைக்கிறேன் (முகச்சவரம் செய்துகொண்டிருப்பவர்!) முன் பின் தெரியாதவர்கள் தனியாய் காமத்திபுராவில் நுழைந்துவிட்டால் அவர்களை இப்பகுதி முழுவதும் நிறைந்திருக்கும் தரகர்கள் (இவர்களில் சில தாராவிப் பகுதி தமிழர்களும் உண்டு) அழைத்துச் செல்வது இவர்களிடம் தான்!

Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com

குழந்தைகளை அருகிலேயே வைத்துக்கொண்டு தொழிலில் ஈடுபடும் பெண்களும் உண்டு. இந்நரகத்தில் வந்து சிக்கிக்கொள்ளும் குடும்பப் பெண்களும், இங்கு வந்த பிறகு துரதிர்ஷ்டவசமாய் தாய்மை அடைந்தவர்களும் உண்டு. தப்பித்தவறி, கவனக்குறைவால் (ஆரம்பக் காலங்களில்) கருத்தரிக்கும் பெண்கள் கருவுற்றிருப்பதை காலங்கடந்து கண்டுபிடித்து வேறுவழியில்லாமல் பெற்றெடுத்து அவர்களையும் தங்கள் கூடவே வைத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் இங்கே நிறையவே இருந்தனர்.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

ஒரே அறையில் அடுக்கடுக்காக அமைக்கப்பட்ட படுக்கைகளும், ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் இங்கு சர்வசாதாரணம்.

இங்கு வந்துவிட்டு பிரைவசியைத் தேடுபவர்கள் முட்டாள்கள். Where ignorance is bliss it is folly to be wise என்பதுபோல் இங்கு வந்து விட்டால் where accommodation is scarce it is folly to seek private place!!

இங்க இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமனி ஜாடையில் போய்விட வேண்டியதுதான்!

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

பால் மணம் மாறாத வயதிலேயே இளம் பெண்களைக் கடத்திக்கொண்டு வந்து தொழிலில் ஈடுபடச் செய்யும் கயவர்களும் இங்கு ஏராளம், ஏராளம்.

மேலே உள்ள படங்களே இதற்கு சாட்சி (இப் பதிவிலும் இதன் முந்தைய பதிவிலும் வெளியடப்பட்டுள்ள படங்கள் யாவும் பல இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. நான் அங்கே விஜயம் செய்தபோது என்னிடம் நிரூபர் கொடுத்த படங்கள் இப்போது என்னிடம் இல்லை. ஆனால் ஏறத்தாழ இதுபோன்ற படங்கள்தான் அவை.

அன்று நிரூபர் நண்பர் எங்களுடன் பகிர்ந்துக் கொண்டவைகள் பலவும் என்னுடைய மனதை வெகுவாக பாதித்தன.

நாங்கள் அன்று அப்பகுதியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும்போது மும்பை காவல்துறை அவ்வப்போது நடத்தி முடிக்கும் வேட்டை நாடகம் ஆரம்பித்தது. நல்ல வேளை. நம் நிரூபர் மும்பை காவல்துறையினருக்கும் அறிமுகமாயிருந்ததால் நாங்கள் தப்பித்தோம். ஐந்தாறு வேன்கள் நிறைய வந்திறங்கிய காவலர்கள் சகட்டு மேனிக்கு அப்பகுதியிலிருந்த பலரையும் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்களுக்கு ஒழுங்காக 'மாமூல்' கொடுக்காத வீடுகளில் புகுந்து தொழிலில் ஈடுபட்டிருந்த விற்பவர்,வாங்குபவர்! (ஐ மீன் வாடிக்கையாளர்கள்)எல்லோரையும் அள்ளிக்கொண்டு செல்ல அன்றைய எங்களுடைய காமத்திப்புரா விஜயம் என் நண்பர்களில் பலருக்கு மகிழ்ச்சியாகவும் என்னைப் போன்ற சிலருக்கு (உண்மையத்தாங்க சொல்றேன். நம்புங்க)வேதனையையும் தந்தது!

இத்தனை வேதனைகளுக்கிடையிலும் வருவோரை இயந்திரத்தனமாய் மகிழ்வித்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் இவர்களை என்னவென்று அழைக்கிறது இந்த சமுதாயம்?
வேசி!..

ஆங்கிலத்தில் இவர்களை நாசூக்காக செக்ஸ் வொர்க்கர்ஸ் என்கிறார்கள்!

(தொடரும்)

2 கருத்துகள்: