துவக்க விழாவுக்கு முந்தைய நாள்.
நம்முடைய ரஜினி ராம்கி பின்னூட்டத்தில் கூறியதுபோல க்ளைமாக்ஸ் தினம்.
ஆயிற்று. விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாய் செய்தாகிவிட்டது!
முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து மாதிரி விழா அழைப்பிதழை Approve செய்து அனுப்பிவிட்டார்கள். அழைப்பிதழில் Chief Ministerல் ‘Cheif’ என்ற எழுத்துப்பிழை! நானும் என் கிளையில் இருந்த எல்லோரும் கவனமாயிருந்தும் இப்படியொரு பிழை! என்னுடைய மத்திய கிளை மேலாளருக்கு கடும் கோபம்.
‘சாரி சார்’ என்று அசடு வழிவதை தவிர வேறு வழியில்லை.
நல்ல வேளை என்னுடைய வங்கித் தலைவர் (Chairman) வருவதற்குள் தவறைத் திருத்திவிட்டோம்.
வங்கித்தலைவரும் சில சீனியர் Board Membersம் முதலமைச்சரை நேரில் பார்த்து அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே முதலமைச்சர் அலுவலகத்தில் காலை 11.00 மணிக்கு Appointment செய்திருந்தோம்.
யாருடைய தவறு என்று தெரியவில்லை. (முதலமைச்சருக்கு அரசியல் செயலாளர், அரசாங்க செயலாளர் என்று இருவர் இருந்தனர். முன்னவர் மக்கள் திலகத்தின் வளர்ப்பு மகனைப்போன்று பல ஆண்டுகளாக அவருடன் இருந்தவர். ஆனால் அத்தனை படிப்பு இல்லாதவர். எனவே அவருக்கும் அரசாங்க செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் ஒத்து போகாது. எல்லாம் இந்த பாழாய் போன ஈகோ தான் காரணம். முதலமைச்சரின் தினசரி Appointments இவர்கள் இருவருடைய மேற்பார்வையில் கொடுக்கப்படும். இருவரும் கலந்தாலோசித்து இறுதி பட்டியலை முதலமைச்சரின் பார்வைக்கு வைப்பது வழக்கம். அரசியல் செயலாளரை நான் பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன். அவரிடம்தான் அன்றைய Appointmentஐ சொல்லியிருந்தேன். ஒருவேளை நான் அரசாங்க செயலாளரை நேரில் கண்டு இதை கூறவில்லை என்று அவர் கடுப்பாயிருக்கலாம். எப்படியோ இருவரும் தயாரித்த இறுதிப்பட்டியலில் எங்களுடைய Appointment இடம் பெற்றிருக்கவில்லை. அரசியல் செயலாளரும், அரசாங்க செயலாரும் முதலமைச்சரிடம் இத்தவறை அறிவிக்க தைரியமில்லாமல் நீ போ, நீ போ என்று ஒருவர் மற்றவரை சுட்டிக்காட்டுவதிலேயே குறியாயிருந்தனர்.)
என்னுடைய தலைவரும் அவருடன் கூட சென்றவர்களும் சரியாய் 10.45 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு சென்றும் பகல் ஒரு மணிவரை முதலமைச்சரை சந்திக்கமுடியாமல் போகவே நான் (என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்). இரண்டாவதாக சந்தித்த அமைச்சர் - இவர்தான் முதலமைச்சரிடம் தேதி பெற்றுத்தந்தவர் - அன்று தற்செயலாக முதலமைச்சரைக் காண வந்திருந்தார். நான் அவரைக் கண்டதும் அவரை நெருங்கி விஷயத்தை சுருக்கமாக விளக்க அவர் ‘நான் முதலமைச்சரிடம் சொல்கிறேன்’ என்று என்னுடைய வங்கி தலைவரின் Visiting Cardஐ பெற்றுக்கொண்டு உள்ளே சென்று பத்து நிமிடம் கழித்து வெளியே வந்து ‘யாராவது ரெண்டு பேர் மட்டும் வாங்க..’ என்று என் வங்கி தலைவரையும் எங்களுடன் வந்திருந்த Board Membersல் ஒருவரையும் உள்ளே அழைத்து சென்றார்.
சரியாய் இரண்டு நிமிடம்!
முதலமைச்சரின் அறையிலிருந்து வெளியே வந்த இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உள்ளே என்ன நடந்ததோ அன்று முழுவதும் நானும் என்னுடைய மத்திய கிளை மேலாளரும் அவருடைய வசை மழையில் நனைந்தோம் என்பது உண்மை!
அன்று இரவுதான் தெரிந்தது. முதலமைச்சர் அவர்கள் இருவரையும் தகுந்த மரியாதையுடன் நடத்தவில்லை என்பது. பேருக்கு அமரச்சொல்லிவிட்டு கொடுத்த அழைப்பிதழை பிரித்துக்கூட பார்க்காமல் சிறு புன்னகையுடன் வழியனுப்பிவிட்டாராம்! (ஒருவேளை அவருக்கிருந்த அலுவல்களின் நிமித்தம் அப்படி நடந்திருக்கலாம். இருப்பினும கலைஞருடனான என்னுடைய சந்திப்பை நினைத்துப் பார்த்தேன். எத்தனை லகுவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது அச்சந்திப்பு!)
திறப்பு விழாவுக்கு வந்திருந்த அரசியல் செயலாளர் என்னை முற்றிலுமாக புறக்கணித்ததிலிருந்து அவருக்கும் முதலமைச்சரிட மிருந்து சரியான ‘டோஸ்’ கிடைத்தது என்பது தெளிவானது.
திறப்பு விழா தினம்
மாலையில்தான் திறப்பு விழா என்றாலும் காலையிலிருந்தே லோக்கல் வட்டத்தினரும், கட்சித்தொண்டர்களும் அவர்களுடைய ஆக்கிரமிப்பை துவங்கி எனக்கும் என்னுடன் இருந்த சக வங்கி அதிகாரிகளுக்கும் பயங்கர டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
முகப்பு பந்தலிலிருந்து முதலமைச்சரின் இருக்கை வரை குற்றம் கண்டுபிடித்து இதை மாற்று, அதை மாற்று என்று ஒவ்வொன்றாய் மாற்ற நாங்கள் கவனமாய் செய்திருந்த எல்லா ஏற்பாடுகளும் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டு என்னுடைய வங்கி தலைவரும் எங்களுடைய Board Membersம் மாலை நான்கு மணிக்கு (விழா ஆறுமணிக்கு) வந்தபோதும் ஏற்பாடுகள் முடிவடையாமலிருக்கவே தலைவருடைய முந்தைய நாள் கோபம் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்தது.. அவரை திருப்தி படுத்துவதா அல்லது விழா அரங்கு முழுவதும் நிரம்பிவழிந்த கட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதா என்று தெரியாமல் நாங்கள் பட்டபாடு ... போதும், போதும் என்றாகிவிட்டது.
சரியாரக ஐந்து மணிக்கு முதலமைச்சரின் பாதுகாப்பு படை, என் வட்டார காவல் நிலைய அதிகாரிகளளுடன் வந்து சேர என்னுடைய வங்கி தலைவரே தலையிட்டு , ‘Sir This is a private function. Please ensure that all the party cadres and local leaders leave the hall. They have been a big nuisance to us since this morning.’ என்று முறையிட காவல்துறை அதிகாரியொருவர் லோக்கல் வட்ட செயலாளரை அணுகி கெஞ்சி (Yes. He was literally begging him!) கால் மணி நேரத்தில் அவர்கள் எல்லோரையும் வெளியேற்றினார். ( ஆனால் அதனுடைய பலனை நான் பிற்பாடு அனுபவிக்க வேண்டியிருந்தது)
அரங்கிலிருந்து வெளியேறிய அனைவரும் சாலையின் இருமருங்கிலும் நின்றுகொண்டு திறப்பு விழாவுக்கு பிரத்தியேகமாய் அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வந்து இறங்கியபோதெல்லாம் கூக்குரலிட்டு (முக்கியமாய் நான் முன்னே கூறிய நடிகைகள் வந்திறங்கியபோது அவர்களிட்ட கூச்சலில் அவர்கள் இருவருடைய முகமும் கோபத்தால் சிவக்க.. நாங்கள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றோம்.) கலாட்டா செய்ய.. ‘Sorry Sir, we can’t do anything. It might provoke them further. Please ignore them.’ என்று காவல்துறையினரும் கைவிரித்தனர்.
சரியாய் ஆறு மணி. முதலமைச்சரும், அவருக்கு பின்னால் இரு அமைச்சர்களும் வந்திறங்க குழுமியிருந்த கட்சித்தொண்டர்களின் ‘வாழ்க’ கோஷம் வின்னைப் பிளைந்தது.
முதலமைச்சர் கிளையின் நுழைவு வாயிலை அடையவும் கட்சித்தொன்டர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆரத்தி எடுக்கும் பெண்கள் அணி முன்னே வர (எத்தனை முயன்றும் இதை முன்கூட்டியே தடுக்க முடியாமல் போனது) முதலமைச்சரின் கூட வந்தவர்களுள் ஒருவர் ‘போம்மா தள்ளி. இதென்ன உங்க வீட்டு விழாவா? முதலமைச்சர் உடுப்பில கொட்டி கிட்டி வைக்கப்போற.. போ தள்ளி..’ என்று கூற முதலமைச்சரே கையை நீட்டி பெண்களை ஒதுக்கிவிட்டு வாயிலில் கட்டியிருந்த ரிப்பனை வெட்டி பலத்த கரகோஷத்திற்கிடையில் வங்கியை திறந்துவைத்தபோது.. (அப்பாடா என்றிருந்தது எனக்கு).
முதலமைச்சர் கிளையைத் திறந்து வைத்து ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என அவருடைய சிறப்பு சொற்பொழிவைத் துவங்கியதுதான் தாமதம் கட்டிடத்தின் வெளியே தெருவிலும் சுற்றிலுமிருந்த அனைத்து கட்டிடங்களின் மேற்தளங்கள் மேலும் குழுமியிருந்த தொண்டர்களின் கூட்டம் கரகோஷமிட்டு ஆர்ப்பரிக்க - முதலமைச்சர் உங்க விழாவுல அரைமணி நேரம்தான் பங்கு பெறுவார் என முன்னர் அறிவித்திருந்தும் - முதலமைச்சரின் சொற்பொழிவே சுமார் ஒரு மணி நேரம் எடுத்தது.
சொற்பொழிவினூடே அவர் இவ்வாறு கூறினார் ‘உங்களுக்கு இந்த வங்கியிலிருந்து கடனாக அளிக்கப்பட்ட தொகை இந்த வங்கியினருடையதல்ல. அது நம்முடைய பணம். நம்மைப் போன்ற பொதுமக்களுடைய தொகை.. அதை கடன் பெறுபவர் ஒவ்வொருவரும் திருப்பி செலுத்தினால்தான் வங்கிகள் அதை மீண்டும் பிறருக்கு கொடுக்க இயலும்.. நாணயத்தை (கடன் தொகை) பெறுவோர் நாணயமுடன் திருப்பி செலுத்த வேண்டும்’
)ஆனால் அவர் கூறியதில் ‘வங்கியின் தொகையல்ல. அது நம்முடைய பணம்.’ என்பது மட்டுமே கூடியிருந்த தொண்டர்களில் பலருக்கும் பிடித்திருந்தது போலும்.
அதனால்தானோ என்னவோ நான் அடுத்த ஒரு மாதத்தில் கடனாய் கொடுத்ததில் ஒரு சிலர் தவிர யாருமே கடனை திருப்பித் தரவேயில்லை..)
ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சில தடங்கல்களையும் கடந்து திறப்பு விழா சிறப்பாக நடந்தேறியதில் என்னுடைய வங்கித் தலைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி.
விடைபெற்று செல்லும் நேரத்தில் 'nice job TBR! keep it up'என்று என் தோளில் தட்டிவிட்டு சென்றார். அதுதான் அவரை நானும் அன்று என்னுடன் இருந்தவர்களும் கடைசியாய் பார்த்தது!'
அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
கடைசி வரியில என்ன சார் சொல்ல வரீங்க?
பதிலளிநீக்குபுரியலையே..
அடுத்த பதிவை படிக்கற ஆர்வத்தை தூண்டுறதுக்காக ஏதாவது ட்ரிக் பண்றீங்களா..
இருந்தாலும் க்ளைமாக்ஸ் நல்லாத்தான் இருக்கு..
அந்த 'ரத்தத்தின் ரத்தங்களே'. நம்ம மக்கள் திலகத்தின் ட்ரேட் மார்க். அத கேட்டு கைதட்டாத தொண்டனே இருக்க மாட்டான்.
'cheif' ங்கறதுக்கு பதிலா 'Cheap'ன்னு அடிக்காம போனீங்களே.
பதிலளிநீக்குமுதலமைச்சரை அவமதிச்சிட்டீங்கன்னு உங்கள உள்ள தூக்கி போட்டிருப்பாங்க..
ஆனா இந்த மாதிரி தவறுகள் நடக்கறது சகஜம்தான்.
சும்மாவா சொன்னாங்க 'Too many cooks spoil the broth'ந்னு.
எப்படியோ திறப்பு விழாவை சக்சஸ்ஃபுல்லா நடத்தி முடிச்சி உங்க பாஸ்கிட்ட நல்ல பேரும் வாங்கிட்டீங்க.
ஆனா அதென்ன சார் 'அதுதான் அவரை கடைசியா பார்த்தது'ன்னு ஒரு சஸ்பென்ஸ் வைக்கறீங்க?
// பேருக்கு அமரச்சொல்லிவிட்டு கொடுத்த அழைப்பிதழை பிரித்துக்கூட பார்க்காமல் சிறு புன்னகையுடன் வழியனுப்பிவிட்டாராம்!
பதிலளிநீக்குசிறு புன்னகை?! perusa ethuvum illaya? :-)
Sir, nitchyama ithu climax illai!
ரஜினி ராம்கி சொன்னது சரிதான் சார்.
பதிலளிநீக்குக்ளைமாக்ஸ்ன்னா கொஞ்சம் கூட த்ரில்லிங்கா இருக்கும்னு நாங்கல்லாம் எதிர்பார்த்தோம்.
நீங்க முதல்ல பாத்த அமைச்சர் அதுக்கப்புறம் ஒன்னும் இம்சை பண்ணலையா?
நீங்க பயந்துட்டீங்கன்னு நினைக்கறேன்.
சரியா?
ஏதாவது Ghost Phone Call வந்து 'மவனே எங்க அமைச்சரை பத்தி இனியும் எழுதுனேன்னு'ஏதாவது மிரட்டல், கிரட்டல்..
இருந்தாலும் உங்க பாணி நல்லாத்தான் இருக்கு..
ரஜினி என்ன எதிர்பார்த்தாரோ..
ர.ராம்கி சார் கேக்குதா?
க்ளைமாக்ஸ் -2 ன்னு ஏதாவது எழுதறதுக்கு வச்சிருக்கீங்களா?
பதிலளிநீக்குஅதனால தான் க்ளைமாக்ஸ் 1ல ரொம்பவும் அடக்கி வாசிச்சிருக்கீங்க..
என்னமோ நடந்திருக்குது..
கட்சித்தலைவர்களாக எந்த விழாவுக்கு அழைச்சாலும் தொண்டர்கள் வந்து இம்சை பண்ணத்தான் செய்வாங்க..
பதிலளிநீக்குஅத யாராலயும் தடுக்க முடியாது..
அது வேண்டாம்னா தலைவர்களே இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடாமெவே இருந்துரணும்.
அதான் பெஸ்ட் பாலிசி..
இன்னைக்கிம் ஒரு வங்கிய நம்ம Central F.M. திறந்து வைக்கிறதா பேப்பர்ல படிச்சேன். உங்கள மாதிரி அந்த மானேஜர் என்ன பாடுபட்டாரோ.
ரஜினி ராம்கி,
பதிலளிநீக்குநீங்க என்ன எதிர்பார்த்தீங்க?
நடந்தத தானே எழுத முடியும்?
சம்பவத் தினத்தன்று ம.தி. அவர்கள் விழாவுக்கு முன் நடந்துக்கொண்டதை எழுதினால் கண்டிப்பாய் அது எனக்கு பின் விளைவுகளை உண்டாக்க கூடும் என்பதால் தவிர்த்துவிட்டேன்.
சம்பத்,
பதிலளிநீக்குநாளைய பதிவைப் பாருங்கள் புரியும்.
அநா1
பதிலளிநீக்குநாளைய பதிவைப் பாருங்கள் புரியும்
ஏதாவது Ghost Phone Call வந்து 'மவனே எங்க அமைச்சரை பத்தி இனியும் எழுதுனேன்னு'ஏதாவது மிரட்டல், கிரட்டல்.. //
பதிலளிநீக்குசேச்சே, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை..
இனியும் அப்படியே இருக்கணும்கறதுக்காக சில விஷயங்கள வேண்டாம்னு விட்டுட்டேன்.
கட்சித்தலைவர்களாக எந்த விழாவுக்கு அழைச்சாலும் தொண்டர்கள் வந்து இம்சை பண்ணத்தான் செய்வாங்க..
பதிலளிநீக்குஅத யாராலயும் தடுக்க முடியாது..
அது வேண்டாம்னா தலைவர்களே இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடாமெவே இருந்துரணும்.//
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.
ஆனா அன்னைக்கி நான் சொன்னத யாருமே கேக்கலை..
அந்த கிளைக்கப்புறம் எங்க வங்கியில அப்படியொரு பாலிசியே போட்டுட்டாங்க..
க்ளைமாக்ஸ் -2 ன்னு ஏதாவது எழுதறதுக்கு வச்சிருக்கீங்களா?//
பதிலளிநீக்குநாளை பதிவ பாருங்க..
ஆனா அது க்ளைமாக்ஸா இல்லையான்னு நீங்கதான் படிச்சிட்டு சொல்லணும்.
‘வங்கியின் தொகையல்ல. அது நம்முடைய பணம்.’ என்பது மட்டுமே கூடியிருந்த தொண்டர்களில் பலருக்கும் பிடித்திருந்தது போலும்.//
பதிலளிநீக்குஅவங்களுக்கு மட்டுமில்ல சார். கடன் வாங்கற எல்லாருக்குமே பிடிக்கிம். திருப்பி கட்ட வேணாம்ல?
எப்பிடியோ ரூ.1 லட்சத்த காந்தி கணக்குல எழுதிட்டீங்க..
பெரிய பெரிய ஃபைனான்ஸ் கம்பெனியெல்லாம் எத்தனை கோடி பாங்குகள்லருந்து சுருட்டியிருப்பாங்க. அதுல இது ஒன்னும் பெரிசில்ல.
போட்டும் விடுங்க.
அதுனால உங்க காரியருக்கு ஏதாச்சும் பாதிப்பு இருந்துச்சா?
எலேய் தம்பி!
பதிலளிநீக்குஒனக்கிதெல்லாம் தேவையா?
அ.வாதிங்க பயங்கரமான ஆளுங்களாச்சே..
ஒன்னோட பழைய பதிவையெல்லாம் இன்னைக்கித்தான் வாசிச்சேன்.
அட!என்ன தைரியம்லே ஒனக்கு?
வேணாம்யா.. போறும். விட்டுப்புட்டு குஸ்பு, கிஸ்புன்னு ஏதாச்சும் எழுது..
இப்பிடியெல்லாம் எளுதினா ஒனக்கென்னா கிரீடமா வக்கெப் போறாவ?
அதிகாரியொருவர் லோக்கல் வட்ட செயலாளரை அணுகி கெஞ்சி (Yes. He was literally begging him!)//
பதிலளிநீக்குபின்னே, தொண்டர்ங்கன்னா சும்மாவா? அவங்கள போய் மொரச்சுக்கிட்டா என்ன ஆவும்னு அவருக்கு தெரியாதா என்ன?
அரசாங்க செயலாரும் முதலமைச்சரிடம் இத்தவறை அறிவிக்க தைரியமில்லாமல் நீ போ, நீ போ என்று ஒருவர் மற்றவரை சுட்டிக்காட்டுவதிலேயே குறியாயிருந்தனர்//
பதிலளிநீக்குமக்கள் திலகத்தின் கோபத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாதென நினைக்கிறேன்.
அப்போது தலைமைச் செயலகத்தில் அதுவும் முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிந்தவன் நான்.
ஐஏஸ் ஆபிசராயிருந்தாலும் அவர் அறைக்குள் நுழைவதென்பது சிம்ம சொப்பனம் தான்.
அமைச்சர்களே முன்னறிவிப்பில்லாமல் அவரை சந்திக்கமுடியாதென்பது என்னைப் போன்ற ஊழியரகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
முதலமைச்சரின் சொற்பொழிவே சுமார் ஒரு மணி நேரம் எடுத்தது.//
பதிலளிநீக்குதிராவிட கட்சித்தலைவர்களுக்கு நாட்டை ஆள தெரிந்ததோ இல்லையோ நன்றாக பேச தெரிந்திருக்கிறது.
சம்பவத் தினத்தன்று ம.தி. அவர்கள் விழாவுக்கு முன் நடந்துக்கொண்டதை எழுதினால் கண்டிப்பாய் அது எனக்கு பின் விளைவுகளை உண்டாக்க கூடும் என்பதால் தவிர்த்துவிட்டேன். //
பதிலளிநீக்குகவனமாயிருங்கன்னு காசி சார் நேத்து சொன்னத வேத வாக்கா நினைச்சிட்டீங்க போல..
சுவை குறைஞ்சி போச்சி சார்..
இருந்தாலும் கடைசி நாள் சம்பவங்கள் க்ளைமாக்ஸ்தானே..
இனி உங்க வேலை சம்பந்தமான விஷயங்கள எழுதுங்க..
அதுனால உங்க காரியருக்கு ஏதாச்சும் பாதிப்பு இருந்துச்சா//
பதிலளிநீக்குஇருக்காதா பின்னே..
பத்தே மாசத்துல பிராஞ்சலருந்து தூக்கி ஒரு பட்டிக்காட்டுல (சாரி அந்த வூருக்காரங்க கோச்சிக்க கூடாது) போட்டுட்டாங்க..
அந்த Stigma லருந்து மீண்டு மறுபடியும் Metro Branchக்கு வர்றதுக்கு அஞ்சு வருஷம் பிடிச்சிது..
அத பத்தி இனி வர்ற பதிவுகள்ல எழுதறேன்.
ஐஏஸ் ஆபிசராயிருந்தாலும் அவர் அறைக்குள் நுழைவதென்பது சிம்ம சொப்பனம் தான்.//
பதிலளிநீக்குநூத்துக்கு நூறு சரி.
இப்போதைய ஆட்சியிலும் அதே நிலைத்தான்னு நினைக்கறேன்.
திராவிட கட்சித்தலைவர்களுக்கு நாட்டை ஆள தெரிந்ததோ இல்லையோ நன்றாக பேச தெரிந்திருக்கிறது. //
பதிலளிநீக்குஉண்மைதான்.
அட!என்ன தைரியம்லே ஒனக்கு?
பதிலளிநீக்கு//
அண்ணாச்சின்னு பேர் வச்சிக்கிட்டு எழுதிட்டீங்க. ஒன்னும் சொல்ல முடியலை..
இப்ப தைரியம் கொஞ்சம் கொறஞ்சி போச்சிண்ணே..
சுவையும் குறைஞ்சி போச்சிங்கறாங்களே..
டி.பி.ஆர்: சுவையில் ஒரு குறைவும் இல்லை. பிரமாதமாக இருக்கிறது. உங்களைப் போல ஆழ்ந்த அனுபவம் உள்ள ஒராயிரம் பேர் தமிழில் வலைப்பதிவுகளை ஆரம்பிக்க வேண்டும்!
பதிலளிநீக்குகலக்குங்கள்!
நன்றி பத்ரி.
பதிலளிநீக்குநல்லா விருவிருப்பாக போகிறது. தொடர்ந்து படித்துக் கொண்டு வரேன். ஆரம்பத்துல வில்லங்கமான விஷயம் எல்லாம் எழுத மாட்டேன்னு சொன்னீங்க, ஆக
பதிலளிநீக்குஇதைவிட வில்லங்கமான விஷயங்கள் இருக்கா :-)
//உங்களுக்கு இந்த வங்கியிலிருந்து கடனாக அளிக்கப்பட்ட தொகை இந்த வங்கியினருடையதல்ல. அது நம்முடைய பணம். நம்மைப் போன்ற பொதுமக்களுடைய தொகை.. அதை கடன் பெறுபவர் ஒவ்வொருவரும் திருப்பி செலுத்தினால்தான் வங்கிகள் அதை மீண்டும் பிறருக்கு கொடுக்க இயலும்.. நாணயத்தை (கடன் தொகை) பெறுவோர் நாணயமுடன் திருப்பி செலுத்த வேண்டும்’
பதிலளிநீக்கு//
என்னதான் அரசியல் தலைவர்களைப் பற்றிக்குறை சொன்னாலும், பெயருக்கு நிகழ்ச்சிக்கு வந்து எதையோ உளறாமல், உருப்படியாகப்பேசி அறிவுரை சொல்லியதைப் பாராட்டத்தான் வேண்டும்.
பிரபலம் என்ற ஒரே காரணத்திற்காக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பலரும் உளறுவதைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். அதற்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை.
"அட போப்பா. இந்த மாதிரி பேசுறதுக்கு எழுதிக் கொடுத்ததே நாங்கதான்'னு நீங்க சொன்னீங்கன்னா நான் அம்பேல்! I will be terribly disappointed! :((
ஜோசப் சார்,
பதிலளிநீக்குநிறைய பேர் பெருசா எதோ எதிர்பார்த்திருக்காங்க போல .உங்களால் சொல்ல முடிந்ததை சுவை குன்றாமல் சொல்லியிருக்கிறீர்கள் .தொடருங்கள்..