29 நவம்பர் 2005

(50) திரும்பிப் பார்க்கிறேன் - 24

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. 'ரொம்ப முக்கியம்!' அப்படீன்னு நீங்க முனகுவது கேட்கின்றது. ஏதோ சொல்லணும்னு தோனிச்சி. சொல்லிட்டேன். 23/09/05 அன்னைக்கி 'நண்பனே, நண்பியே'ன்னு ஆரம்பிச்சது. இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இனியும் போறதுக்கு எவ்வளவோ தூரம் இருக்கு.

இப்ப என் பதிவுக்கு செல்வோம், வரீங்களா?

என் வங்கி கிளை தினமும் காலை 8.45 மணிக்கே துவங்கிவிடும். அன்று நான் அலுவலகத்தினுள் நுழைந்தபோது மணி காலை 10.00.

என் அறைக்கதவை திறந்த நான் என் வட்டார மேலாளரைக் கண்டு அதிர்ந்துபோனேன். நான் என்ன நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது.

வட்டார மேலாளர், அவருடைய வட்டாரத்திலுள்ள கிளைகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை விசிட் செய்து மத்திய அலுவலகத்திலிருந்து அவ்வப்போது இடும் நடைமுறை விதிகளை கிளைகள் சரிவர கடைப்பிடிக்கின்றனவா என்று ஆய்வு நடத்துவது வழக்கம். ஆனால் என்னுடைய கிளை திறக்கப்பட்டு மூன்று மாதங்களே கடந்திருந்தன. ஆகவே அவருடைய விசிட் கண்டிப்பாய் வழக்கமான (Routine) விசிட் அல்ல, நேற்று நடந்த விஷயத்தை எப்படியோ கேள்விப்பட்டுத்தான் முன்னறிவிப்பில்லாமல் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

என்னுடைய அதிர்ச்சியை ஒரு நொடியில் மறைத்துக்கொண்டு புன்னகையுடன் ‘வாங்க சார். குட்மார்னிங்.’ என்றேன். அவர் பதில் வணக்கம் தெரிவிக்காமல் மிகவும் சீரியசாக, ‘என்ன மிஸ்டர் ஜோசஃப் தினமும் இந்த நேரத்துக்குத்தான் ஆஃபீசுக்கு வருவீங்களா?’ என்றார்.

என்ன சொல்வது? நான் எங்கே போயிருப்பேன் என்று என்னுடைய உதவி மேலாளருக்கு தெரியும். நேற்று வீட்டுக்கு செல்லும்போதே அவரிடம் சொல்லிவிட்டுத்தான் போயிருந்தேன். ஆனால் அவர் இவரிடம் என்ன கூறினார் என்று எனக்கு தெரியாததால் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நின்றேன்.

‘சொல்லுங்க ஜோசஃப். அந்த Pawn Brokerஐ பாத்தீங்களா? என்ன சொன்னார்?’ என்றவரை ஒரு நொடி பார்த்தேன் ஒன்றும் கூறாமல்.

‘என்ன ஜோசஃப், இவருக்கு எப்படி தெரியும்னு பாக்கறீங்களா?’

‘இல்ல சார். நானே இன்னைக்கி ரிப்போர்ட் பண்ணலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.’

அவர் இன்னும் திருப்தியடையவில்லை என்பது அவருடைய இறுகிய முகத்திலிருந்தே தெரிந்தது. நான் என்னுடைய இருக்கையில் அமராமல் நின்றுகொண்டிருந்ததை பார்த்தவர் என் இருக்கையை நோக்கி சைகை செய்தார். நான் அமரும்வரை பொறுத்திருந்தவர், ‘இதுதான் உங்களுக்கு முதல் கிளை, ஆஸ் எ பிராஞ்ச் மானேஜர், இல்லையா?’ என்றார்.

‘யெஸ் சார்’ என்றேன் அவர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பத்துடன்.

‘இருந்தாலும் நீங்க இதுவரை மெட்ரோ ப்ராஞ்சஸ்ல அதுவும் சீனியர் ஆஃபீசர்ஸ்ங்க கீழத்தான் ஒர்க் பண்ணியிருக்கீங்க, இல்லையா?’

‘ஆமாம் சார்.’

‘அப்படியிருந்தும் எப்படி உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பேசிக் ப்ரொசீஜர் கூட தெரியாம போச்சி?’

என்ன சொல்ல வரார் இவர்? என்னுடைய குழப்பம் என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும்.

‘உங்க அசிஸ்டெண்ட் இன்எக்ஸ்பீரியன்ஸ்டுன்னு தெரிஞ்சும் எப்படி நீங்க அவரை இவ்வளவு பெரிய கடனை நீங்க இல்லாத நேரத்துல appraise பண்ண சொல்லலாம்? சரி, செஞ்சீங்க. நீங்க என்ன பண்ணியிருக்கணும்? திரும்பி வந்தவுடனே அவர் எடுத்த நகைகளை செக் பண்ணியிருக்கணும். அதுவும் செய்யலை. If you had done that, you could have found out that they are spurious and initiated recovery action without much loss of time. Not only that, you did not report either to me or to our Head Office when you realised that you would not be able to recover the amount before the end of the day. What should I infer from your actions Joseph? Can I infer that you purposely tried to conceal this from higher authorities?'என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.

அவர் கூறியதெல்லாம் முற்றிலும் சரி. இதற்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? மவுனமாய் நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

‘இதுக்கு என்ன சொல்ல போறீங்க ஜோசப்? ஷால் ஐ புட் திஸ் இன் மை ரிப்போர்ட்? டோன்ட் யூ நோ தட் இட் மைட் அஃபெக்ட் யுவர் கேரியர் ஆஸ் எ மேனேஜர்?’

‘ஐ நோ தட் சார். பட்..’

‘ஒகே. லெட் அஸ் கீப் தட் அசைட் ஃபார் எ மோமென்ட். சொல்லுங்க, அந்த Borrowerஐ ட்ரேஸ் பண்ணீங்களா?’

அன்று காலையில் அந்த பான் புரோக்கரை சந்தித்த விஷயத்தை சுருக்கமாக சொன்னேன். அவருடைய கோபம் இன்னும் அதிகரித்தது.

‘How can you be so stupid Joseph? Who gave you the authority to give him two more days? Call the Police and report the incident. NOW!' அவருடைய குரல் உயர்ந்து அறைக்கு வெளியே இருந்து என்னுடைய உதவி மேலாளரும் ஊழியர்களும் எங்களைப் பார்ப்பது தெரிந்தது.

காவல்துறையினரிடம் புகார் செய்துவிட்டால் பணத்தை திருப்பிப் பெற வழியேயில்லாமல் போய்விட வாய்ப்புண்டு. மேலும் அன்று பிரபலாமாயிருந்த 'நாத்திகம்' பத்திரிகை அலுவலகமும் அருகிலேயே இருந்ததால் விஷயம் காவல்துறையினரின் வழியாக பத்திரிகையினருக்கும் தெரிந்துவிட வாய்ப்புண்டு. இதை இவரிடம் எப்படி விளக்குவதென தெரியாமல் குழம்பி போய் நின்று கொண்டிருந்தேன்.

அந்த நேரம் பார்த்து அன்று காலையில் நான் சந்தித்த பான் புரோக்கரும் அவருடைய சகோதரரும் அலுவலகத்தினுள் நுழைவதை பார்த்தேன்.

தொடரும்.

28 கருத்துகள்:

  1. பெயரில்லா11:20 AM

    ஜோசப் சார், இன்னைக்கிம் நான்தான் முதல் பின்னூட்டம்.

    50 பதிவு போட்டுட்டீங்களா? அதுக்குள்ள? அதுல ஏறக்குறைய பாதிக்கு மேல முத்துக்கள் சார்.

    மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:21 AM

    50 பதிவு. அதுவும் மூனு மாசத்துல!

    வாழ்த்துக்கள். பயணம் தொடரட்டும்.

    இன்றைய பதிவும் நல்லா விறுவிறுப்பா இருந்தது. கடைசியில இருக்கற சஸ்பென்ஸ் உள்பட.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11:22 AM

    பாதி கிணறு தாண்டிட்டீங்க. உங்க 50 வது பதிவை சொன்னேன்.

    இந்த பதிவில உங்களுக்கு கிடைச்ச டோஸ்சை கூட அருமையா சொல்லியிருக்கீங்க.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அம்பது பதிவுதான் ஆயிருக்கா?
    நிறைய படிச்சுக்கிட்டே வர்றமாதிரி இருக்கு.

    அம்பதா இல்லே நூத்தி அம்பதா? சரியாப் பார்த்தீங்களா?

    வாழ்த்துக்கள்.

    இப்படி டக் டக் ன்னு தொடரும் போட்டுடறீங்களே.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா11:25 AM

    அட! ஐம்பது பதிவு ஆயிருச்சா? நீங்க இப்பத்தான் வந்தாப்ல இருக்கு! தினமும் எழுதி எழுதி இந்த மூனு மாசத்துல நிறைய பேரை ரசிகர்களா ஆக்கிக்கிட்டீங்க சார்.

    இன்னைக்கிம் சூப்பரா இருக்கு. பாவம் ரொம்ப டென்ஷனாயிருப்பீங்க இல்ல?

    உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா11:27 AM

    உங்க வட்டார மேலாளர் ரொம்ப அன்ரீசனபிள் ஆன ஆள்னு நினைக்கிறேன். தப்பு செஞ்சவர விட்டுட்டு உங்கள ஃபையர் பண்ராறு?
    இந்த மாதிரி ஆளுங்க எல்லா ஆபீசுலயும் இருப்பாங்க போல இருக்குது. வேலைக்குன்னு வந்துட்டா இதுக்கெல்லாம் சோர்ந்து போகக்கூடாது. என்ன சொல்றீங்க?

    உங்க ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  7. அம்பது பதிவுதான் ஆயிருக்கா?
    நிறைய படிச்சுக்கிட்டே வர்றமாதிரி இருக்கு.//

    ஒரே சமயத்துல ரெண்டு வலைப்பூக்களிலும் எழுதறதுனால அப்படி தோனியிருக்கு!

    உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி துளசி.

    உங்களுடைய இன்றைய பதிவை வாசிக்க முடியலையே. உங்க blog backgroundல photobucket அட்வர்டைஸ்மென்ட் இருந்துக்கிட்டு படிக்கவே முடியலை.

    கொஞ்சம் போய் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  8. ஜோசப் சார், இன்னைக்கிம் நான்தான் முதல் பின்னூட்டம்.

    உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை சம்பத். ஒரு stalker மாதிரி என் பின்னாலேயே வர்றீங்க.

    மிக்க நன்றி! உங்க வாழ்த்துகளுக்கு.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய பதிவும் நல்லா விறுவிறுப்பா இருந்தது. கடைசியில இருக்கற சஸ்பென்ஸ் உள்பட. //


    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இந்த பதிவில உங்களுக்கு கிடைச்ச டோஸ்சை கூட அருமையா சொல்லியிருக்கீங்க.//

    எனக்கு கிடைத்த பாராட்டுகளை விட இந்த மாதிரி விஷயங்களைத்தான் நான் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். இல்லையென்றால் இது ஒரு சுயபுராணமாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  11. தினமும் எழுதி எழுதி இந்த மூனு மாசத்துல நிறைய பேரை ரசிகர்களா ஆக்கிக்கிட்டீங்க சார்.

    அ! அப்படியா? சந்தோஷம்.

    அதென்ன சார் அ!ன்னு ஒரு பேரு.

    நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. தப்பு செஞ்சவர விட்டுட்டு உங்கள ஃபையர் பண்ராறு?

    பழி ஓரிடம் பாவம் ஓரிடம்னு கேள்வி பட்டதில்லை. எனக்கு இதுமாதிரி அனுபவங்கள் நிறைய ஏற்பட்டிருக்கு.எல்லாத்தையும் எழுதினா ஒரு பெரிய சோகக்கதை மாதிரி ஆயிடும்.

    உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஐம்பது ஆச்சா ஜோசப் சார். வாழ்த்துகள். ஐம்பது ஆயிரமாகனும். என்னுடைய உளப்பூர்வமான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. மிக்க நன்றி ராகவன்.

    ஆயிரமாவது பதிவைப் போடும்போது நான் அநேகமா Retire ஆயிருப்பேன்.

    இன்னும் 3.5 வருஷம் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா12:48 PM

    துளசி அக்கா சொல்றா மாதிரி இப்படி பொசுக்கு பொசுக்குன்னு தொடரும் போட்டுடறீங்களே.

    இன்னும் கொஞ்சம் எழுதப்படாதா சார்?

    பதிலளிநீக்கு
  16. இப்படி பொசுக்கு பொசுக்குன்னு தொடரும் போட்டுடறீங்களே.

    இன்னும் கொஞ்சம் எழுதப்படாதா சார்?


    நம்ம ரஜினி ராம்கிதான் அட்வைஸ் பண்ணார். ரெண்டு பக்கத்துக்கு மேல எழுதினீங்கன்னா யாரும் ஆர்வமா படிக்க மாட்டாங்க சார்னு.

    அதான்.. தொடரும்னு போட்டுடறேன்.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா12:51 PM

    சார் இந்த மூனே மூனு மாசத்துல ரொம்பத்தான் பாப்புலராயிட்டீங்க. இன்னும் ஸ்டார் பதிவாளராக வேண்டியதுதான் பாக்கி!

    அதுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. இன்னும் ஸ்டார் பதிவாளராக வேண்டியதுதான் பாக்கி!//


    அதுக்கு இன்னும் டைம் ஆவலீங்க. நான் வந்து மூனே மூனு மாசம்தானே ஆகுது. அது வரும்போது வரட்டும். இப்ப என்ன அவசரம்?

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா2:07 PM

    What should I infer from your actions Joseph? Can I infer that you purposely tried to conceal this from higher authorities?/

    ரொம்ப மோசமான ஆளுசார் உங்க வ.மே. நானா இருந்தா போய்யா என்ன வேணும்னா Infer பண்ணிக்கோன்னு சொல்லியிருப்பேன். நீங்க எழுதுனத படிக்கும்போதே எங்களுக்கு கோபம் வருதுன்னா கேட்டுக்கிட்டிருந்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துகள், இன்னொரு ரசிகனிடமிருந்து.

    பதிலளிநீக்கு
  21. ஆமாங்க. இந்த போட்டோ பக்கெட் ஒரே தகராறு. நானோ ஒரு கணினி கை நாட்டு. எப்படியோ தெரிஞ்சவரை இப்போ சரிபண்ணி வச்சிருக்கேன்.

    இந்த ரஜினி ராம்கி தொழில் ரகசியம்( 2 பக்கம்) நமக்குச் சொல்லலை பாருங்க. நான் பாட்டுக்கு நிறைய எழுதிடறேனே.
    இனிமே நானும் ஒன்னரைப் பக்கம்தான்:-))

    பதிலளிநீக்கு
  22. இனிமே நானும் ஒன்னரைப் பக்கம்தான்:-))

    துளசி!திடீர்னு உங்க பதிவோட சைஸ் பாதியாயிருச்சின்னா என்னாச்சி டீச்சர்னு கேக்கப்போறாங்க.. நான் சொன்னேன்னு சொல்லிராதீங்க. சரியா?

    பதிலளிநீக்கு
  23. லை வாழ்த்துக்கள் தலை..நம்ப தொழிலை பற்றி நல்லா எழுதி சமுதாயத்தில் பேங்க ஆசாமிங்களுக்கு கொஞ்சம் மரியாதை வாங்கிக்கொடுக்கீறீங்க...


    வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கு

    பதிலளிநீக்கு
  24. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    பேங்க் ஆசாமிங்களுக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கும் நீங்க போடற பதிவு இல்லைன்னா
    இளவஞ்சி போல கொதிச்சுப் போயிருக்கும் நாங்க எல்லாமே
    இப்பிடி கூலா இருக்க மாட்டோம்.அதுக்கு மொதல்ல நன்றி.
    துளசிம்மா ரஜினி ராம்கி இங்கயும் தொழில் ரகசிய டிப்ஸ் எதுவும் தரல.
    எனக்கும் யானை இல்லாம உங்க பதிவு வாசிக்க சிரமமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  25. நன்றி மதுமிதா.

    அதுசரி உங்க கடைசி வாக்கியம்! புரியலீங்களே.

    பதிலளிநீக்கு
  26. நன்றி ஜோ,

    நன்றி முத்து.

    பதிலளிநீக்கு