வெளியே நின்றிருந்த அடகு கடைக்காரரிடம் என்னுடைய உதவி மேலாளர் பேசுவதை என்னுடைய அறையிலிருந்தே கண்ணாடி வழியாக பார்க்க முடிந்தது.
எதற்காக வந்திருப்பார்கள்? அந்த ஃப்ராடு பான் புரோக்கர் மாட்டிக்கொண்டிருப்பானோ? என்னுடைய வட்டார மேலாளரை பார்த்தேன். இவரிடம் சொல்லலாமா? எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று தெரியாமல் யோசித்தேன்.
‘என்ன மிஸ்டர் ஜோசஃப்? I told you to call the Police. What are you waiting for? Call them, now.’ அவருடைய குரலில் இருந்த finality என்னை ஒரு விநாடி யோசிக்க வைத்தது. மீண்டும் வெளியே என் உதவி மேலாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் அடகு கடைக்காரரை பார்த்தேன். இவரிடம் சொல்லிவிடலாம்.
‘சார்.. அந்த பான் புரோக்கரே வந்திருக்கிறார். Would you like to talk to him?’ என்றேன்.
வியப்புடன் எழுந்து நின்ற அவர் என்னுடைய பார்வை சென்ற திசையில் பார்த்தார். ‘Why didn’t you tell me? Call them inside.’
நான் அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியே சென்று அடகு கடைக்காரரையும் அவருடைய சகோதரரையும் உள்ளே வரச் சொல்லி சைகை காண்பித்தேன். அவர்களோ என்னை அவர்களுக்கருகே வரும்படி சைகை காண்பிக்கவே அவர்களை நெருங்கி, ‘எங்க வட்டார மேலாளர் வந்திருக்காரு சார். நீங்களே வந்து அவர்கிட்ட நடந்தத சொன்னீங்கனாத்தான் எனக்கும் என் உதவி மேலாளருக்கும் நல்லது.’ என்றேன்.
என் உதவி மேலாளர் குறுக்கிட்டு, ‘சார், நான்தான் பியூன் மூலம் சார் வந்திருக்கற விஷயத்த இவர்கிட்ட சொல்லி வரச் சொன்னேன். இவரு வேற நகையை அடகு வச்சி அந்த கணக்குல ஒரு ரூபா பாலன்ஸ் வச்சிட்டு மீதி பணத்தை கட்டிடறேன்னு சொல்றார் சார்.’
அப்பாடா என்றிருந்தது. அவர்கள் இருவரையும் பார்த்தேன். அவர்களும் படபடப்புடன் இருந்தார்கள். எப்படியாவது போலீஸ் புகாரைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கம் அவர்கள் கண்களில் தெரிந்தது.
‘நீங்க பணம் கட்டறேங்கறது சந்தோஷம். ஆனா அதோட இந்த பிரச்சினை சால்வாயிறாது. நீங்க ரெண்டு பேரும் அவர் உங்களுக்கு நல்லா தெரிஞ்சவருதான். அவரையே யாரோ ஏமாத்திட்டிருக்காங்கங்கறா மாதிரி எங்க வட்டார மேலாளர்கிட்டா சொன்னீங்கன்னா ஒருவேளை இவர் இந்த விஷயத்தை மேல ரிப்போர்ட் பண்ணமாட்டார்னு நினைக்கிறேன். அவர் உங்கள சந்தேகப்படறாமாதிரி வச்சிக்காதீங்க. அப்புறம் நீங்க இதுவரை நம்ம பேங்க்ல எடுத்திருக்கற எல்லா லோனையும் க்ளோஸ் பண்ண சொன்னாலும் சொல்வார். அதோட இனி உங்களுக்கு எந்த லோனும் கொடுக்கக்கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிருவார். என்ன சொல்றீங்க?’ என்றேன்.
இருவரும் உடனே என்னுடன் என் அறைக்குள் வந்து வட்டார மேலாளரிடம் நான் கூறியபடி கூற அவர் என்னை சந்தேகத்துடன் பார்த்தார். ‘என்ன ஜோச·ப் are these people telling the truth, or are you colluding with them to avoid the police complaint? (என்னுடைய வட்டார மேலாளரை பற்றி ஒரு வார்த்தை. இவருக்கும் என்னை இந்த கிளைக்கு மேலாளராக பரிந்துரைத்த என்னுடைய முதல் மேலாளருக்கும் இடையில் ஏதோ ஒரு ஈகோ பிரச்சினை. நான் அவருடைய சிஷ்யன் என்ற விதத்தில் என்னை எப்படியாவது குற்றப்படுத்தி தண்டனை பெற்றுத் தருவதில் குறியாயிருந்தார் என்று சில வாரங்கள் கழித்து எனக்கு தெரியவந்தது. இவரே பிறகு ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு பதவியிறக்கப்பட்டார். அவர் ஓய்வுபெற்று பத்து வருடங்களாகின்றன.)
என் மனதில் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அவரை பார்த்தேன். ‘Sir, these two are officer bearers in the local Pawnbrokers’ association. You can believe them.’ என்றேன்.
‘How do you know them? Do they have any account with us?’ இந்த விஷயத்தை அவர் அவ்வளவு எளிதாக விடமாட்டார் என்று தோன்றியது.
‘Yes Sir, right from the inauguration of this branch they are dealing with us. If you want I can show you the details of their past records.’ என்றேன்.
அப்படியும் திருப்தியடையாமல் எங்கள் மூன்று பேரையும் மாறி, மாறி பார்த்தார். பிறகு, ‘ஓகே. Let them go and remit the amount. But you should locate the original borrower and take an explanation in writing and forward to me along with your clarifications as to how it happened.’
‘சரி சார்.’ என்றேன்.
அத்துடன் திருப்தியடைந்தவராய் வந்ததற்கு பேருக்கு வேறு சில கணக்குகளையும் பரிசோதித்துவிட்டு என்னுடைய உதவி மேலாளரையும் கவனமாய் இருக்கவேண்டும் அறிவுறுத்திவிட்டு மாலையில் விடைபெற்று சென்றபிறகுதான் தலைக்கு வந்தது தலைப்பாயோடு போச்சு என்றிருந்தது.
ஒரு வாரத்திற்கு பிறகு கோடம்பாக்கத்திலிருந்த வேறொரு வங்கியிலும் அதே பான் புரோக்கர் வைத்திருந்த அடகு நகைகள் போலி என்று கண்டுபிடிக்கப்பட அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவன் கைது செய்யப்பட்டு லோக்கல் பத்திரிகைகளில் எல்லாம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
அடுத்த நாள் காலையிலேயே என்னுடைய வங்கியின் சேர்மனிடமிருந்து தொலைபேசி வந்தது..
இப்பத்தான் ஒரு தலைவலி தலைப்பாயோடு போச்சின்னு நினைச்சிருந்தா இதோ வரேன் என்று இன்னொரு தலைவலி வந்தது தொலைப்பேசி வழியாக..
தொடரும்
Kattayam neenga serial edukkalam... Nice write up!
பதிலளிநீக்குதலைவலி போயித் திருகுவலியா?
பதிலளிநீக்குஅடக்கடவுளே!
சார் உங்க பதவியில பட்ட கஷ்டத்தையே எழுதறீங்களே. படிக்கும்போதே எங்களுக்கு கஷ்டமாயிருக்கே. அதுவும் முத முதலா மேலாளர் பதவிஏத்துக்கிட்டு இப்படியா?
பதிலளிநீக்குதுளசியக்கா சரியா கேட்டாங்க. தலைவலி போயி திருகு வலியா?
In every episode you are signing off dramatically. That is what make people like me to ready your serial daily.
பதிலளிநீக்குFantastic! keep it up Sir.
மிக்க நன்றி துளசி.
பதிலளிநீக்குநீங்க சொன்னா மாதிரி திருகு வலியே தான். விட்டுட்டு ஓடிரலாமான்னு கூட தோனிச்சி. என்ன பண்றது பூவா வேணுமே..
நாளைக்கி பாக்கலாம்.
Kattayam neenga serial edukkalam//
பதிலளிநீக்குநீங்க ஃபைனான்ஸ் பண்ணா எடுக்கலாம்.
நன்றி கிருஷ்ணா.
நன்றி டிராஜ்.
பதிலளிநீக்குநம்ம எல்லாருடைய வாழ்க்கையுமே ஈவென்ட்ஃபுல்தான். எத்தனை பிரச்சினைகள், தடங்கல்கள், தோல்விகள்!! இதையெல்லாம் கடந்து வந்து வெற்றியடையும்போது கிடைக்கற சந்தோஷம் இருக்கே.. அதுக்காகத்தானே போராடிக்கிட்டேயிருக்கோம்.
படிக்கும்போதே எங்களுக்கு கஷ்டமாயிருக்கே. //
பதிலளிநீக்குஆமாம் சம்பத் (இன்னைக்கி உங்கள மூனு பேர் முந்திக்கிட்டங்க)எனக்கும் ஆரம்பத்துல இதென்னடா சோதனை தீராது போலருக்கே தோணும். அப்புறம் ஒவ்வொரு சோதனையையும் ஜெயிக்கும்போது கிடைச்ச சந்தோஷம் அடுத்த சோதனையை எதிர்நோக்கி காத்திருக்க வச்சிது.
In every episode you are signing off dramatically. //
பதிலளிநீக்குThanks. But it is not intentional.
உங்க சீரியல் ஒரு கைதேர்ந்த மானேஜ்மென்ட் எழுத்தாளர் எழுதிய புத்தகம் மாதிரி இருக்கு சார். பிசினஸ் ஸ்கூல்ல கூட தியரிய தான் சொல்லித்தராங்க. உங்கள மாதிரி பிராக்டிகலா ப்ராப்ளம்ச ஃபேஸ் பண்ணவங்க எழுதறத படிக்கிறப்போ கிடைக்கிற பாடங்கள்தான் எங்களுக்கு உதவும்னு நினைக்கிறேன். உங்க வெற்றிகளைப் பற்றி எழுதுவதை விட உங்க கேரியர்ல நீங்க சந்திச்ச ப்ராப்ளம்ச பத்தி எழுதறதுதான் நல்லாருக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
‘என்ன ஜோச·ப் are these people telling the truth, or are you colluding with them to avoid the police complaint?
பதிலளிநீக்குஎன்ன சார் உங்க மேலதிகாரி சரியான சந்தேகப்பிராணியா இருந்திருப்பார் போலருக்குதே? அவர்கிட்ட எப்படி சார் வேலபாத்தீங்க?
என் மனதில் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அவரை பார்த்தேன்.
பதிலளிநீக்குVery true. There is no use in getting angry with our higherups. That might aggravate the situation further.
Mr.Joseph, you can send some of these episodes to one of the business schools as a problem solving casy study. We have solved many such case studies in our Institute. It is really revealing. Keep writing.
பதிலளிநீக்குThere is no use in getting angry with our higherups.//
பதிலளிநீக்குநம்முடைய மேலதிகாரிகளிடத்தில் மட்டுமல்ல. பொதுவாகவே கோபம் பொல்லாதது. அதனால் ஒரு பயனும் இல்லை. B.P.தான் கூடும்.
சார் இன்னைக்கித்தான் உங்க சீரியல் முழுசுமா வாசிச்சேன். மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து வாசிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். உங்களுடைய அனுபவம் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி சார்.
பதிலளிநீக்குநன்றி மலர்வண்ணன்!
பதிலளிநீக்குExcellent one. You can sure write or direct a mega serial...You have the knack to end them at the correct place..
பதிலளிநீக்குOfftrack, why is the anonymous /sampath etcetra comments always appears/happens just after your comment or in short span of times.. Any anniyan effect?
Any anniyan effect?
பதிலளிநீக்குI don't know. It could be. who knows?
I've asked sampath to reveal his identity, but he has ignored my requests. I haven't seen this name in any other blogs. May be he is one of my friends. Since he writes good about me I keep encouraging him!!!
Thanks Josesh for the explanation!
பதிலளிநீக்கு