09 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் – 10

எம்.ஜி.ருடன் சந்திப்பு - 1

1979ம் வருடம் ஜனவரி மாதம்..

மும்பையிலலிருந்து மீண்டும் சென்னை மத்திய கிளைக்கு மாற்றப்பட்டேன்.. (இக்கிளை சென்னை தங்கசாலை தெருவிலிருந்து இட நெருக்கடி காரணமாக சென்னை 1 பகுதிக்கு மாற்றப்பட்ட கிளையாகும்).

என்னுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் (பெண் தூத்துக்குடியைச் சார்ந்தவர்) என் தந்தையின் நிர்பந்தம் காரணமாக (மாப்பிள்ளை மும்பையிலிருந்து மாறி சென்னை வந்தால்தான் பெண் கொடுப்போம் என்ற நிபந்தனையாம். எனக்கு அப்போது இது தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் மட்டும் என்ன செய்திருப்பாய் என்று என் தந்தை கேட்பது என் மனதில் கேட்கிறது.என் தந்தை காலமாகி பதினைந்து ஆண்டுகளாகின்றன. ) என்னுடைய மேலதிகாரிகளின் கை, காலில் விழுந்து (ஒரு பேச்சுக்கு சொன்னேன்) மும்பையிலிருந்து மாற்றம் பெற்று வந்தேன்.

காதலர் தினத்தன்று!! (அப்போதெல்லாம் யாருக்கு தெரியும் இது காதலர் தினமென்று?) என்னுடைய திருமணம் தூத்துக்குடியில் நடந்தது..

அதே வருடம் (எத்தனை சுறுசுறுப்பு பாருங்கள்) டிசம்பர் மாதம் அழகாய் ஒரு பெண் குழந்தை.

(போதும் சுயபுராணம். எம்.ஜி.ர் விஷயத்துக்கு வாங்க என்று நீங்கள் முணகுவது கேட்கிறது)

மகள் பிறந்த ராசி..

அடுத்த சில மாதங்களிலேயே மேலாளர் பதவி..

1980ம் வருடம் ஜூலை மாதம்..

மேலாளரான பதவி உயர்வு கிடைத்த எல்லோருமே ஊர் மாற்றம் செய்யப் படுவர். சாதாரணமாக கிராமப்பகுதியில்தான் முதல் Posting இருக்கும்..

என்னுடைய அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை..

சென்னையில் மீண்டும் ஒரு கிளை திறந்தாலென்ன என்று என்னுடைய தலைமை அலுவலகத்துக்கு தோன்றியது..

சென்னை தங்கசாலைத் தெருவில் இடம் பிடித்தவன் என்ற முறையில் மீண்டும் அந்த பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.. அப்போதும் புதிய கிளைக்கு நானே மேலாளராக நியமிக்கப்படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை..

மிகுந்த சிரமத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் ஒரு அருமையான இடம் கிடைத்தது.. அப்போது அச்சாலையில் மூன்றோ நான்கோ வங்கிகளே இருந்தன.

இடம் கிடைத்ததும் மேலாளராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.

அப்போதைய மதுரைக் கிளை மேலாளராக இருந்தவரும்.. தலைமை அலுவலகத்தில் இருந்த வேறொரு சீனியர் அதிகாரியும் அப்பதவிக்கு நீ, நான் என்று போட்டியில் இறங்க.. என்னை ஒரு காம்ப்ரமைஸ் கான்டிடேட்டாக கருதி நியமித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும் (அதாவது என்னுடைய தனித்திறமை என்று எதுவும் இதற்கு காரணமில்லை என்று சொல்ல வருகிறேன்.)!

ஆக என்னுடைய மேலாளர் பதவி காலம் ஒரு புதிய கிளையைத் திறப்பதன் மூலம் ஆரம்பமானது.

சரி.. பிறகு யாரை வைத்து திறப்பது என்ற கேள்வி..

தங்கசாலை தெரு கிளை திறக்கப்படும்போது என்னுடைய வங்கியின் தங்க ( Golden )ஜூபிலி என்றால் 1980ல் வைர (Diamond) ஜூபிலி வருடம்!

ஆகவே அன்று போலவே இன்றைய தமிழக முதல்வரை திறப்பு விழாவுக்கு அழைத்தால் பொருத்தமாயிருக்கும் என எங்களுடைய தலைமை அலுவலகம் தீர்மானித்தது.

அன்று பிடித்த சனி.. என்னை விட்டு அகல சரியாய் மூன்று மாதங்கள் எடுத்தது!

அது எம்.ஜி.ர் அவர்கள் இரண்டாவது முறையாக தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த சமயம்.

என்னுடைய மத்திய கிளையின் வாடிக்கையாளர்களில்(எங்களுடைய வாடிக்கையாளர் ஒரு பெரும் Financier – Hire Purchase திட்டத்தில் பெரிய Transport நிறுவனங்களுக்கு Trucks & Lorries வாங்க கடன் கொடுப்பவர். அவரை சேட் என்று மட்டும் குறிப்பிடுகிறேன்) ஒருவரின் வாடிக்கையாளர். அவருடைய மாவட்டத் தலைநகரத்தில் மிகப்பெரிய Goods மற்றும் Public Transport நிறுவனத்தை நடத்தி வந்தார்.(இப்போதும் பிரபலமாயிருப்பவர். அதனால் அவருடைய பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அவருடைய குலப்பெயரை வைத்து ‘பிள்ளை’ என்று குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்). அவருக்கு தமிழகத்திலுள்ள எல்லா கட்சியினரிடமும் - முக்கியமாக அ.தி.முகவுடன் (அப்போது அது அகில இந்திய கட்சியாக இருக்கவில்லை) மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். இப்போது எப்படியோ தெரியவில்லை..

எங்களுடைய வாடிக்கையாளர் சென்னை மத்திய கிளை தங்கசாலைத் தெருவில் துவக்கப்பட்ட வருடம் முதலே கணக்கு வைத்திருப்பவராதலால் எனக்கு மிகவும் பழக்கமானவர்.

ஆகவே நான்தான் புதிய கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்பதை நான் அறிவதற்கு முன்பே அறிந்ததும் (அவருக்கு என்னுடைய தலைமை அலுவலகத்திலும் அத்தனை செல்வாக்கு இருந்தது.. இப்போது சகோதரர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு தொழிலையே மூடிவிட்டு ராஜஸ்தான் திரும்பி சென்றுவிட்டார் என்று கேள்வி) ‘ஜோசப்.. நம்ம ‘பிள்ளை’ ரெண்டு நாள்ல மெட்றாஸ் வர்றார். எப்படியும் ஒருவாரம் இருப்பார். அவர் கிட்ட அறிமுகப்படுத்தி விடுறேன். அவருக்கு ரெண்டு மூனு மினிஸ்டர்சை நல்லா தெரியும். அவங்க வழியா போனா எம்.ஜி.ர். கண்டிப்பா ஒத்துக்குவார்..’ என்று கூறி அடுத்த சில நாட்களில் என்னை அழைத்துக்கொண்டு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு (அப்போதே அது ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலாக இருந்தது. இப்போது அது சென்னையில் மிகவும் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுள் ஒன்று) அழைத்து சென்றார்.

நாங்கள் வருகிறோம் என்று முன்கூட்டியே அறிவித்திருந்ததால் நாங்கள் ஹோட்டலை அடைந்து அவருடைய அறைவாசலில் இருந்த அழைப்பு மணியை அமுக்க, ‘வாங்க சேட். வாங்க.’ என்று உள்ளிருந்தவாறே குரல் வர அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைய அங்கே நான் கண்ட காட்சி..

இப்போது பிரபலமாயிருக்கும் ஒரு நடிகையின் தாயும்.. அவரும்.. இருந்த கோலம்... (சாரி காசி சார்! இத்தோடு நிறுத்திட்டேன். அப்புறம் இந்த பதிவுக்கும் ‘ரெட்’ போட்டுறாதீங்க).

‘இதெல்லாம் இங்கே சகஜமப்பா’ என்ற கோலத்தில் என்னை அழைத்துவந்த ‘சேட்’ அப்பெண்ணைப் பார்த்து ‘எப்படி இருக்கீங்க மேடம். உங்கள பாத்து ரொம்ப நாளாச்சிதே.’ என்று குசாலம் விசாரிக்க அவர் சாகவாசமாக ஆடையை சரி செய்துக்கொண்டு எழுந்து சோபாவில் அமர்ந்து என்னை கண்டுகொள்ளாமல் ‘சேட்’டிடம் குழைய.. நான் என்ன செய்வதென்று தெரியாமல் பார்வையை அறையை சுற்றி ஓடவிட்டேன்..

சிறிது நேரத்திற்கு பிறகு..

‘சொல்லுங்க சேட்.. யார் இந்த தம்பி? நீங்க சொன்னவர்தானா.. ரொம்ப சின்னவரா இருக்காரே.. இவரா மேனேஜர்?’ என்ற பிள்ளையிடம் என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் திகைத்த ‘சேட்’ என்னைப் பார்த்து ஒரு மாதிரி ‘வழிந்தார்’ என்றே சொல்லவேண்டும்

(நினைவலைகள தொடரும்..)


இப்போது என்னுடைய நேற்றைய பதிவைப் பற்றி..

என்னுடைய மும்பை ரெட்-லைட் அனுபவங்களைப் பற்றி நான் எழுதிய முதல் இரண்டு பதிவுகளைப் பற்றி யாருமே பெரிசாய் கண்டு கொள்ளாததால் என்ன செய்வதென்று குழம்பி எழுதாத ஒரு பதிவை (நேற்றைய பதிவு) யாரோ ‘நிர்வாகி’ நீக்கியதாய் எழுதி ஒரு Sensation ஐ உற்பத்தி செய்யலாம் என்று நினைத்ததன் விளைவுதான்..

Did it create any big response. Yes, to a certain extent. It resulted in the biggest number of hits to my blog since becoming a member in thamizhmanam!!

பலரும் ஆர்வத்துடன் (I don't blame them) தங்களுடைய ஈமெய்ல் விலாசங்களை அனுப்பியிருந்தனர்..

அவர்களுக்கெல்லாம் ஒரு ஹி, ஹி!!

அது சரி! என்னுடைய நேற்றைய பதிவின் தியதியைப் பாருங்கள், புரியும்.

ஒரே ஒருவர்தான் பார்த்துவிட்டு பின்னூட்டம் இட்டுள்ளார்.. அதன் பிறகு யாரும் ஈமெய்ல் அனுப்பவில்லை.. அவருக்கு என் கண்டனங்கள்.. Suspenseஐ உடைத்ததற்காக!

அவருடைய பெயர்தான் தெரியவில்லை.

ஆனாலும் அவருடைய Sense of Observationக்காக அவருக்கு எல்லா தமிழ்மணம் வாசகர்கள் சார்பிலும் ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ போட்டுட்டேன்.

மற்றபடி நம்முடைய தமிழ்மணம் நண்பர்கள் பயங்கர புத்திசாலிகள்..

அவர்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல...

13 கருத்துகள்:

  1. பெயரில்லா12:12 PM

    என்ன ஜோசப் சார்,

    பயங்கர குசும்பு பண்ணீட்டீங்களே.

    ஆறு மாசத்துக்கு முன்னாலருக்கற டேட் போட்டு...

    நாங்க யாருமே அத கவனிக்கவில்லை.

    இருந்தாலும் தமிழ்மணம் வாசகர்களை ஏமாந்தவங்க இல்ல ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:17 PM

    தேவையா சார்.

    உங்க கிட்ட இருந்து இதை நாங்க எதிர்பார்க்கலை சார்.

    இந்த மாதிரியெல்லாம் பண்றதுக்குன்னே எங்கள மாதிரி ஆளுங்க இருக்கோம்.

    எங்க கிட்ட விட்டுருங்க.

    இருந்தாலும் உங்க சென்ஸ் ஆஃப் ஹுயூமர பாராட்டாம இருக்க முடியல சார்.

    உங்களுக்கு வந்த அந்த ஈமெய்ல் லிஸ்ட கொஞ்சம் உங்க அடுத்த பதிவில போடுங்களேன். நாங்களும் எங்கள்ல யாராவது இருக்கோமான்னு பாத்துக்கறோம்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:18 PM

    //ஆனாலும் அவருடைய Sense of Observationக்காக அவருக்கு எல்லா தமிழ்மணம் வாசகர்கள் சார்பிலும் ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ போட்டுட்டேன்.//

    உங்க ஓஓ வுக்கு தாங்க்ஸ்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:38 PM

    //ஆனாலும் அவருடைய Sense of Observationக்காக அவருக்கு எல்லா தமிழ்மணம் வாசகர்கள் சார்பிலும் ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ போட்டுட்டேன்.//

    எனக்கு கிடைக்க வேண்டிய 'ஓ' வை தட்டிப்பறித்தது யார்?

    Please let us not attempt impersonation!

    பதிலளிநீக்கு
  5. அட நீங்க ஒண்ணுங்க

    என் பெயரிலேயே பின்னூட்டம் போடறாங்க..

    நல்ல வேளை. நான் பாத்துட்டு நீக்கிட்டேன்.

    டோண்டு சார்கிட்டதான் கேக்கணும் டூப்ளிகேட் பின்னூட்டங்கள் கொடுக்கும் சிரமங்களை.

    Don't worry impersonation will be there everywhere. Why should blogers be different?

    பதிலளிநீக்கு
  6. //உங்க கிட்ட இருந்து இதை நாங்க எதிர்பார்க்கலை சார்.//


    நான் என்ன விதிவிலக்கா?

    ஓ என் வயச சொல்றீங்களா?

    சாரி, இது வயசுக்கு மீறினதுதான்..

    கொஞ்சம் என் வயச மறந்துருங்க. மொரார்ஜி தேசாய் சொன்னா மாதிரி நான் லீப் வருஷ பிறந்தநாள்காரன்.

    வயசு கம்மிதான், நினைப்பில!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா12:45 PM

    சார் இது அக்கிரமம்,

    உங்க ஏப்ரல் 1 தேதிய முதல்ல கண்டுபிடிச்சது நான்தான்.

    நான்தான் அந்த அநாமதேயம்.

    எனக்குத்தான் போடணும் ஓஓ

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா12:46 PM

    எனக்குத்தான் போடணும் ஓஓ//


    இல்ல எனக்குத்தான்

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12:46 PM

    இல்ல எனக்குத்தான்

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா12:47 PM

    இல்ல எனக்குத்தான்

    பதிலளிநீக்கு
  11. ஐயையோ போதுங்க..


    இந்த அநாமதேயத்துக்கெல்லாம் பதில் போட்டு உங்க நேரத்தை வீணாக்காதீங்கன்னு என் ப்ளாக் நண்பர் ஒருவர் முன்னால சொல்லியிருக்கார்.

    இருந்தாலும் தமாஷாவோ இல்ல சீரியசாவோ எனக்குத்தான், எனக்குத்தான்னு பின்னூட்டம் போட்ட எல்லாருக்குமா சேர்த்து ஒரு பெரிய ஓ! போட்டுட்டேன்.

    ஆளை விடுங்க.

    பதிலளிநீக்கு
  12. என்னங்க சுக்குகாப்பி சூடானதும் சுவையானதும் மாதிரி இன்னாள் நடிகையோட தாயார் கதை மாதிரி நிறைய வச்சிருந்தீங்கன்னா, இன்னொரு பதிவு போட்டற வேண்டியது தானே!

    பதிலளிநீக்கு
  13. ஜோசப் சார் ,

    வணக்கம்.
    பம்பாய்,சென்னை என்று சுத்தி கடைசியில் நீங்கள் எங்க ஊரு(தூத்துக்குடி) மாப்பிள்ளையாக இருக்கிறீர்கள்..மிக்க மகிழ்ச்சி சார்.. என்னுடைய பள்ளிப் படிப்பு தூத்துக்குடியில் தான்..

    ஒரு ஆட்டோகிராப் ரேஞ்சுக்கு கலக்குரீங்க...

    அன்புடன்
    மாயக்கூத்தன் கிருஷ்ணன்

    பதிலளிநீக்கு