நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 நவம்பர் 2019

கா..கா..கா (நகைச்சுவை)

நடிகர்கள்: பார்த்திபன், வடிவேலு, மற்றும் பலர்.

சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் பார்த்திபன் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்.

தெருமுனையில் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த வடிவேல் தூரத்திலிருந்தே அவரைப் பார்த்துவிடுகிறார். அவர் பார்ப்பதை பார்த்திபனும் பார்த்துவிடுகிறார். உடனே ஒரு விஷமப் புன்னகை அவர் உதடுகளில் தவழ்கிறது. இருப்பினும் பார்த்தும் பார்க்காததுபோல் தன் அருகில் பெஞ்சில் கிடந்த தினத்தந்தி நாளிதழை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டு படிக்கிறார்.

வடிவேலு சைக்கிளிலிருந்து இறங்கி வந்த வழியே செல்ல முயன்றவர் பார்த்திபன் பேப்பரில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்கிறார். நின்று யோசிக்கிறார்.

வடி: அட கன்றாவியே.. இன்னைக்கி பொறப்பட்ட நேரமே சரியில்லை போலருக்குதேடா.. இவன் எங்க இங்க வந்தான்? கேள்வி கேட்டே கொன்னுருவானே.. இப்ப என்ன பண்ணித் தொலையறது? (பார்த்திபனை ஓரக் கண்ணால் பார்க்கிறார்) நம்மள பார்த்திருப்பானோ.. இருக்காது.. அவன்தான் பேப்பர்ல முங்கிட்டான்லே.. நம்மள பார்த்துருக்க மாட்டான்.. நாம வந்த வழியே போனோம்னு வச்சிக்க.. நோட் பண்ணாலும் பண்ணுவான்.. அதனால.. சைலண்ட்டா வண்டிய உருட்டிட்டே போயி.. அந்த பயல தாண்டுனதும் ஏறிக்குவம்.. அதான் கரெக்ட். அப்படியே பார்த்துட்டாலும் அவன் யாருன்னு தெரியாத மாதிரி நடிச்சிருவோம். நடிக்கறதுக்கு நமக்கு சொல்லியா தரணும்.. நடிப்புல நம்ம யாரு? கிங்குல்ல? (தன் பாணியில் கழுத்தை உலுக்கிக் கொண்டு உறுமுகிறார். பிறகு சைக்கிளை உருட்டிக் கொண்டே பார்த்திபன் இருந்த திசைக்கு நேரெதிர் திசையில் பார்த்துக்கொண்டு ‘நான் பார்த்ததிலே இவன் ஒருத்தனைத்தான் அசிங்கம் என்பேன் ரொம்ப அசிங்கம் என்பேன்.’ என்று பார்த்திபனை மனதில் நினைத்துக் கொண்டு வாய்க்குள் பாடியவாறே செல்கிறார். இதை ஆரம்பமுதலே கவனித்துக்கொண்டிருந்த பார்த்திபன் அவர் கடையைக் கடக்கும்வரை பொறுத்திருந்து பேப்பரை கக்கத்தில் வைத்துக்கொண்டு தன் இரண்டு கைகளையும் தட்டுகிறார். பிறகு பேப்பரை மீண்டும் எடுத்து முகத்தை மூடிக்கொள்கிறார்.)

(கைதட்டல் சப்தம் கேட்டு ஷாக் அடித்தாற்போல் நின்ற வடிவேலு தன்னையுமறியாமல் திரும்பிப் பார்க்கிறார். பார்த்திபன் பேப்பரைப் படித்தவாறே ஓரக்கண்ணால் வடிவேலுவைக் கவனிக்கிறார். வடிவேலு பார்த்திபன் பேப்பரில் மூழ்கியிருப்பதை பார்த்து நிம்மதியடைகிறார்.)

வடி: யார்ராவன்? கைதட்டல் சத்தம் மட்டும் கேக்குது திரும்பிப் பார்த்தா ஒரு பய மவனையும் காணோம்.. காலங்கார்த்தால வம்பு பண்றதுக்குன்னே அலையறானுவப்பா.. நிம்மதியா எளுந்திரிச்சமா.. ஒரு வேல சோலிய பாத்தமான்னு இருக்க முடியுதா.. ரோட்டுல நிம்மதியா நடமாடக் கூட முடியாம.. என்ன பொளப்புறா சாமி... பேசாம துபாய்ல கக்கூஸ்... (வாயைப் பொத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்) வாணாம்.. வாய குடுத்து மாட்டிக்கிறாத.. வாய்க்குள்ள பேசினாக் கூட கண்டுபிடிச்சிருவான்.. எமகாதக பய.. உக்காந்துருக்கான் பார், ஒன்னுமே தெரியாதமாதிரி.. அவன் மூஞ்சும், மொவறையும்.. சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு.. இப்பிடியே போயி சந்தைல ஆத்தா குடுத்த லிஸ்ட்டு பிரகாரம் ஜாமான வாங்கிக்கிட்டு ஊர் போய் சேர்வோம்.. சைக்கிளை உருட்ட ஆரம்பித்தவர் சட்டென்று நினைவுக்கு வந்தவர்போல்..) சரிஈஈஈஈ.. அதான் கடை போயிருச்சில்ல.. பொறவெதுக்கு உருட்டறது? சும்மா சல்லுன்னு ஏறிக்கிற வேண்டியதுதான.. (சைக்கிளை நிறுத்தி வலது காலை தூக்கி சீட்டின் மேல் வைக்கிறார்.. மீண்டும் கைதட்டல் சப்தம் கேட்கிறது. பதறியடித்துக் கொண்டு காலை இறக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கிறார். யாரும் காணாமல் மீண்டும் காலை சீட்டுக்கு உயர்த்துகிறார். அவருக்கு பின்னால் இருந்து குரல் மட்டும் கேட்கிறது. ‘டேய் கேன, உன்னைத்தாண்டா. காது கேக்கல?)

வடி: (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். யாரையும் காணோம். பார்த்திபனைப் பார்க்கிறார். அவர் பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நிம்மதியடைகிறார்.) சை.. குரல் மட்டுந்தேன் கேக்குது.. மூஞ்ச காணோமே.. அசரீரிம்பாங்களே அதா இருக்குமோ.. (தலையை ஆட்டிக்கொண்டு) இருக்கும், இருக்கும்.. நமக்கெதுக்கு வம்பு..? திரும்பிப் பாக்காம.. மிதிச்சிக்கிட்டு.. வாணாம்.. கால தூக்கிப் போடறப்பதான குரல் கேக்குது.. உருட்டிக்கிட்டே போய்ட்டா..? ஆமா.. இப்படியே இன்னும் கொஞ்ச தூரம் உருட்டிக்கிட்டே போயி..

(அவர் போவதைப் பார்த்த பார்த்திபன் பேப்பரை மடித்து தன் அருகில் வைத்துவிட்டு மீண்டும் கைகளை தட்டுகிறார்.)

வடி: என்னடாயிது காலங்கார்த்தால ரோதனை.. ?(சடாரென் திரும்பி) எவண்டா அவன்..? என்ன நக்.. (பார்த்திபன் தன்னையே பார்ப்பதைப் பார்த்துவிட்டு தனக்குள்) பார்த்திட்டாண்டா.. பார்த்திட்டாண்டா.. இன்னைக்கி போனாப்பலதான்... சரி, சரி.. அவன யாருன்னு தெரியாதமாதிரி நடிக்கத்தான போறோம்.. முட்டாப் பய மவன்.. கண்டுபிடிக்கிறானான்னு பாப்பம்..

(பார்த்திபன் பெஞ்சிலிருந்து எழுந்திருக்காமலேயே வடிவேலுவை நோக்கி ‘இங்க வா’ என்று சைகை செய்கிறார்.

வடி:(தனக்கு பின்னால் திரும்பி பார்க்கிறார். அங்கே யாரையும் காணாமல் பார்த்திபனைப் பார்க்கிறார்) யாரு, என்னையா?

பார்: ஆமாண்டா.. உன்னையேத்தான்.. நீ என்ன டமார செவிடா? ரெண்டுதரம் கைதட்டியும் திரும்பிப் பாக்காம போற?

வடி: (வேண்டா வெறுப்போடு வந்து அவன் முன்னே நிற்கிறார். ஆனால் அவர் முகத்தைப் பார்க்காமல் மேலே பார்த்துக்கொண்டு நிற்கிறார்) யோவ் யாருய்யா நீ? ரோட்ல பேசாம போய்ட்டிருக்கற ஆள இளுத்து வச்சி வம்பு பண்ற?

பார்: டேய் வெண்ணெ.. என்ன பார்த்து பேசுறா.. அங்க எங்கயோ சூன்யத்த பாத்த்துக்கிட்டு யார்யா நீன்னா? அங்கருந்து யாரு.. செத்துப்போன உங்க பாட்டனா பதில் குடுப்பான்..?

வடி: (கோபத்துடன் பார்த்திபனை முறைக்கிறார்) யோவ்.. எதுக்குய்யா எங்க தாத்தனையெல்லாம் இளுக்கற? வேணாம்.. மரியாத கெட்டுரும்...சொல்லிட்டன்.. ஆளம் தெரியாம கால விட்டுட்டு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் வாயை மூடிக்கொள்கிறார்)

பார்: (நெருங்கி வடிவேலு முகத்தை உற்று பார்க்கிறார்) டேய் என்ன நிறுத்திட்டே.. சொல்லு.. ஆழம் தெரியாம என்னத்த விட்டேன்.. சொல்றா?

வடி: ஒன்னுமில்லப்பா.. ஆள விடு.. சந்தைக்கு போணும்.. ஆத்தா வையும்..ஆள விடு..

பார்: டேய், டேய் நிறுத்துறா... நீ என்ன பதினாறு வயதினில கமல்ஹாசனா.. சொன்னதையே சொல்லிக்கிட்டு.. சரி.. என்னை தெரியல? பார்த்தும் பாக்காத மாதிரி போற...?

வடி: (பார்த்திபனை பார்க்கிறார்) தெரியலயே.. நீ யாருன்னே தெரியலையே (அழுகிறார்) எதுக்குய்யா சும்மா போய்ட்டிருந்த என்ன இளுத்து வச்சி வம்பு பண்றே..?விடுய்யா.. சந்தைக்கு போணும்.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. என்ன விட்டுறு..

பார்: (டீ கடை பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏங்க உங்க யாருக்காவது என்ன அடையாளம் தெரியுதா?

எல்லோரும் கோரசாக: ஓ தெரியுதே.. புதுசா ஊருக்கு வந்துருக்கற தம்பிதானே.. நல்லாத் தெரியுது..

பார்: (சலிப்புடன்) என்னங்க நீங்க..? நா இந்த ஊருக்கு வந்துதான் ஆறு மாசத்துக்கு மேல ஆயிருச்சில்ல..? இன்னும் புதுசா ஊருக்கு வந்த தம்பிங்கறீங்க? சரி அது போட்டும்.. அப்ப என்ன உங்க எல்லாருக்கும் அடையாளம் தெரியுது.. (டீக்கடைக்காரரை பார்க்கிறார்) ஏங்க டீ.. உங்களுக்கு?

டீக்கடைக்காரர்: (தனக்குள்) களவாணிப்பய.. எம்பேரு தெரிஞ்சிருந்தும் நக்கலா டீங்கறாம் பாரு.. பேசாம தெரியலேன்னு சொல்லிரலாமா? ஆனா இவன் குடுக்க வேண்டிய அம்பது ரூவா காசு அம்பேலாயிருமே.. (பார்த்திபனையும் வடிவேலுவையும் மாறி மாறி பார்க்கிறார்) அட என்ன தம்பி கிண்டல் பண்ணிக்கிட்டு... உங்கள் தெரியாம இருக்குமா? நீங்க வேற நமக்கு அம்பது ரூவா பாக்கி வச்சிருக்கீக, உங்கள தெரியாம போயிருமா?

பார்: யோவ்! என்ன சந்துல சிந்து பாடறியா..? பிச்சாத்து அம்பது ரூபா.. (சட்டென்று திரும்பி வடிவேலுவைப் பார்க்கிறார்) சார் ஒரு அம்பது ரூபா இருந்தா குடுங்க சார்.. இந்த டீக்கடைக் காரன் மூஞ்சில விட்டெறியறேன்.. (வடிவேலு இல்லையென்று மறுக்க அதை பொருட்படுத்தாமல் அவருடைய சட்டைப் பையில் கைவிட்டு கொத்தாய் கிடைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து கடைக்காரரை நோக்கி எறிகிறார்) இந்தாய்யா ஒம் பிச்சாத்து அம்பது ரூபா.. சார் யாருன்னு நினைக்கறே? துபாய்ல லச்ச லச்சமா சம்பாதிச்சவரு.. அதையெல்லாம் விட்டுட்டு இந்த ஊர்ல.. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சேவை செய்யணும்னு இங்கயே தங்கிட்டார்.. (வடிவேலுவை பார்த்து) என்ன கக்கூ.. சாரி.. உங்க பேரே இதுவரைக்கும் சொல்லலையா.. அதான்.. கொஞ்சம் கன்ஃப்யூசாயிட்டேன்.. இப்ப சொல்லுங்க.. ஏன் பாத்தும் பாக்காத மாதிரி போனீங்க..ங்க என்ன ங்க.. டேய் சொல்லுறா.. எதுக்கு... பார்த்தும்... பாக்காம... போன?

வடி: யோவ் யார்யா நீ? லூசா..? நாந்தான் தெரியாதுங்கறேன்ல.. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற? கைலருந்த காசையும் எடுத்துக்கிட்டு.. யோவ் வேணாம்.. எடுத்த காச திருப்பி குடுத்துறு.. அப்புறம் சந்தைலருந்து ஜாமான் வாங்காம வீட்டுக்கு போனா.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. காச குடுய்யா.. (அழுகிறார். கடையிலிருந்த எல்லோரும் சிரிக்கின்றனர்)

பார்: டேய்.. (விரல்களை மடக்கிக்கொண்டு முஷ்டியை உயர்த்தி முகத்துக்கு முன்னால் குத்துவதைப் போல் வருகிறார்) டேய் யாரப் பாத்து லூசுங்கற? இப்ப சொல்லு.. நீ அன்னைக்கி பஸ்சுல டிக்கட் வாங்காம.. செக்கிங் இன்ஸ்பெக்டர்கிட்ட லஞ்சம் குடுத்து அடிவாங்குன பார்ட்டி தான?

வடி: (தனக்குள்) படுபாவிப் பய.. நாம முட்டாத்தனமா செஞ்ச காரியத்தையெல்லாம் ஒன்னு விடாம ஞாபகத்துல வச்சிருக்கானே.. இப்ப என்ன பண்றது? சரி.. நாம போட்ட வேஷத்தையே தொடர்ந்து போட வேண்டியதுதான்.. (அசடு வழிகிறார்) யோவ் நெசமாவ நான் அவனில்லைய்யா.. என்ன விட்டுறு..

பார்: (கோபத்துடன்) டேய் என்ன ஜெமினி கனேசன்னு நினைப்பா.. ?கொட்டா டாக்கீஸ்ல நான் அவனில்லை படத்த பாத்துட்டு.. என்ன.. நக்கலா? நீ நான் அவனில்லைன்னு சொன்னா நான் நீ அவனில்லைன்னு நம்பிரணுமா? சொல்றா நீ அவந்தானே...

வடி: நீ என்னய்யா சொல்ற? உனக்கு மட்டும் எப்படீய்யா இப்படியெல்லாம் மாத்தி மாத்தி பேச வருது.. ஜெமினி கனேசங்கற, கொட்டா டாக்கீசுங்கற.. நீ என்ன சொல்ல வரேன்னே தெரியலையேய்யா.. கொஞ்சம் தெளிவாத்தான் பேசேன்.. (டீக்கடையிலிருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏன்யா பாத்துக்கிட்டே இருக்கீகளே.. யாராச்சும் கேக்கப் படாதா.. இவரு சொல்றது உங்களுக்கு யார்க்காச்சும் புரியுதா? (இல்லை என்று தலையசைத்துவிட்டு பார்த்திபன் முறைத்ததும் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு ஒவ்வொருவராய் எழுந்து போகின்றனர்)

வடி: யோவ் என்னய்யா இது.. நா கேட்டப்ப இல்லைன்னவனெல்லாம் உன் மூஞ்ச பார்த்ததும் ஆமாங்கறானுங்க.. யார்யா நீ?

பார்: டேய்.. என்ன நடிச்சே தப்பிச்சிரலாம்னு பாக்கறீயா.. ?உனக்கு ஜெமினி கணேசன் யாருன்னு தெரியாது?

வடி: யோவ் எதிர்ல நிக்கற உன்னையே யாருன்னு தெரியல.. அது யாருய்யா ஜெமினி கணேசன்? அந்தாள எனக்கு எதுக்கு தெரியணுங்கற?

பார்: (திரும்பி டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) ஏங்க, உங்களுக்கு ஜெமினி கணேசன தெரியுமா?

டீ.க: என்ன தம்பி நீங்க கிண்டல் பண்ணிக்கிட்டு.. காதல் மன்னன தெரியாதாக்கும். அந்த தம்பிதான் சும்மா கிண்டல் பண்ணுதுன்னா.. நீங்களும் என்ன கேக்கறீங்களே..

பார்: (வடிவேலுவிடம்) பாத்தியாடா.. நாள் முழுசும் டம்ளர் டம்ளரா டீ, காப்பிங்கற பேர்ல சுடுதண்ணிய வித்துக்கிட்டிருக்கறவருக்குக்கூட (டீக்கடைக்காரர் முகத்தை தொங்கப்போடுகிறார்) ஜெமினி கணேசன்னவுடனே காதல் மன்னன்னு தெரியுது.. நீ தெரியலேன்னு டிராம பண்றியா?

வடி: யோவ் யாரைய்யா சொல்ற? உண்மைலையே தெரியாதுய்யா..

பார்: சரி.. உனக்கு என்ன வயாசாச்சி..

வடி: (சந்தேகத்துடன்) எதுக்கு?

பார்: (முட்டியை வைத்து முகத்தில் லேசாக குத்துகிறார்) ஊம்.. ஒன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு.. சொல்றா.. என்ன வயசாச்சி..? அம்பது, இல்ல அது ஜாஸ்தி.. ஒரு நாப்பத்தஞ்சி..

வடி:(அழுகிறார்) யோவ்.. முழுசா இருபது கூட ஆவலய்யா. என்ன போயி.. ஏன்யா இந்த அழும்பு பண்ற..? எனக்கின்னும் கல்யாணம் கூட ஆவலைய்யா!

பார்: ஐ! எனக்குக்கூடத்தான் முப்பத்தஞ்சி வயசாயும் இன்னும் கல்யாணம் ஆவலே.. அதுக்காக நீ சின்னப் பையன்னு ஆயிருமா? சரி.. என்னை தெரியலை ஒத்துக்கறேன்.. ஜெமினி கணேசன்னு யாருன்னு சொல்லு விட்டுடறேன்.. சொல்லு..

வடி: (அழுகை கூடி குரல் உச்சத்துக்கு போகிறது) யோவ்.. நெசமாலுமே நீ சொல்ற ஆள எனக்கு தெரியாதுய்யா..

பார்: டேய், வேணாம். இந்த ஜிம்கானா வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. சரி.. நீ சினிமால்லாம் பாப்பேல்ல?

வடி: (அழுகையை நிறுத்திவிட்டு.. தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு உறுமுகிறார்.) என்னா நீ அப்படி கேட்டுட்டே..? வாரம் ரெண்டு சினிமான்னாச்சும் பாக்கலேன்னா ஐயாவுக்கு சாப்பாடு எறங்காதுல்லே..

பார்: அதுசரி.. சினிமால்லாம் பாக்கற ஆளுதானா நீ.. பார்த்தா தெரியலையே..

வடி: யோவ்.. சினிமா பாக்கற ஆளுன்னு பாத்தவுடனேயே சொல்லிருவியா நீ? போய்யா.. எவனாச்சும் காதுல பூ வச்சிருப்பான் அவங்கிட்ட போயி சொல்லு.. சரி.. இப்ப ஒனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்ப சினிமா பாக்கறியான்னு கேக்கறே.. ?அதச் சொல்லு..

பார்: (டீக்காரரை திரும்பி பார்க்கிறார்) பாத்தியாய்யா.. என்னையே மடக்கிட்டான்.. (வடிவேலுவைப் பார்த்து) சரி.. அவ்வை சண்முகி படம் பாத்திருக்கியா..

வடி: (சந்தோஷத்துடன்) என்னா நீ அப்படி கேட்டுட்டே.. நம்ம கமல் காசன்னா நமக்கு உசுருல்லே..

பார்: என்னது கமல் காசனா? உன் நாக்குல இடி விழ! கமல் காசன் இல்லடா கமல் ஹாசன்.. எங்க சொல்லு.. கமல் ஹாசன்..

வடி: (தனக்குள்) நமக்கு 'ஹா' வராதுன்னு தெரிஞ்சிருப்பான் போலருக்குதே.. இத வச்சே நம்மள ராவிருவானே.. பேசாம ஜெமினி கணேசன தெரியும்னே சொல்லிட்டு போயிருக்கலாம்.. எல்லாம் இன்னைக்கி முளிச்ச நேரம்.. (பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்)இப்ப என்ன வேணும் ஒனக்கு? அவர் பேரை இன்னொருத்தரம் சொல்லணும்.. அதானே..

பார்: (நெற்றியில் அடிக்கிறார்) அதாண்டா வேணும், வெண்ண.. சொல்லு.. க..ம..ல் ஹா..ச..ன்.. அழுத்தமா கரெக்டா சொல்லு.. விட்டுர்றேன்.. ஜெமினி யார்னு கூட சொல்ல வேணாம்.. இத்த மட்டும் கரெக்டா சொல்லு.. சொல்றா டேய்..

வடி: (அழுகிறார்) அதுக்கேன்யா சும்மா சும்மா அடிக்கறே.. வலிக்குதில்லே..

பார்: டேய் பேச்ச மாத்தாத.. சொல்லு..

வடி: கமல் காசன்.. சொல்லிட்டேன்.. போட்டுமாய்யா.. சந்தைய மூடிரப்போறான்யா.. ஆத்தா வையும்.. விட்டுறுய்யா..

பார்: (டீக்காரரைப் பார்த்து) ஏங்க.. இவன் கரெக்டா சொன்னானா? உங்களுக்கு எப்படி கேட்டிச்சி..?

டீ.கா: (தனக்குள்) சரியாச் சொன்னான்னு சொன்னா புது தம்பி கோச்சிக்கும். தப்புன்னு சொன்னா வீணா அந்த தம்பியோட விரோதமாயிரும். அந்த தம்பியோட ஆத்தா வேற ஊர்ல பெரிய மனுஷி.. எனக்கு இது தேவை தானா? இருந்தாலும் இந்த புது தம்பி படா பேஜார் புடிச்சவந்தான்.. என்ன சொல்றது?

பார்: யோவ் என்ன உனக்கும் காதுல ஏதாச்சும் ப்ராப்ளமா?

டீ.கா: (பதறிக்கொண்டு) இல்லீங்களே தம்பி..

பார்: அப்புறம் என்ன? இவர் சொன்னது சரியா தப்பான்னு கேட்டனே? பதிலையே காணோம்..

(டீ.கா.. பார்த்திபனின் பின்னால் நின்றுக்கொண்டிருந்த வடிவேலுவின் கைகளில் இருந்த நூறு ரூபாய் நோட்டைப் பார்க்கிறார். அவரையுமறியாமல் புன்னகை விரிய.. பார்த்திபன் அவருடைய பார்வை சென்ற பாதையில் பார்க்கிறார். வடிவேலு சட்டென்று ரூபாய் நோட்டை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்.)

பார்: (வடிவேலுவை அப்படியே திருப்பி அவருடைய கையிலிருந்த நூறு ரூபா நோட்டை பிடுங்கிக் கொள்கிறார்) டேய் என்ன லஞ்சமா? சரி.. அதுவும் நல்லதுக்குத்தான்.. காலைலருந்து எந்த லூசு மாட்டுவான் இன்னைக்கி சாப்பாட்டுக்கு புடுங்கலாம்னு பார்த்துக்கிட்டிருந்தேன்.. நீ மாட்டிக்கிட்டே.. ரொம்ப தாங்க்ஸ்.. (பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார்) ஆமா, நான் அம்பது ரூபா எடுத்ததுக்கு ஜாமான் வாங்கணும், ஆத்தா வையும்னு ஒப்பாரி வச்சியே.. இப்ப சொளையா நூறு ரூபா நோட்ட எடுத்த நீட்டுற? 

வடி: (கெஞ்சுகிறார்) யோவ், யோவ், வேணாம்யா.. நா முட்டாத்தனமா காச எடுத்து நீட்டிட்டேன்யா.. அத குடுத்துறுய்யா.. அது ஆத்தா காசுய்யா.. நா ஓன் கால்ல வேணும்னாலும் விழறேன்.. குடுத்துறுய்யா.. (காலில் விழ குனிகிறார்)

பார்: (வலது கரத்தை உயர்த்து ஆசீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. கல்யாணம் பண்ணிக்கிட்டு வீணா போ. எழுந்திரு. இன்னொரு தரம் கமல் ஹாசன்னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம ஓடு..

வடி: (தரையில் கைகளை ஊன்றி தடுமாறி எழுந்து அழுக்கான கைகளை மறந்து போய் தன் சட்டையில் தேய்க்க.. சட்டை முழுவதும் அழுக்காகிறது. அதைப் பார்த்துவிட்டு மீண்டும் அழுகிறார்) யோவ் இது ஒனக்கே நல்லாருக்கா.. வெள்ளையும் சொள்ளையுமா சந்தைக்கு போயிட்டிருந்தவன கூட்டி வச்சி வம்பு பண்ணி.. ஒன் கால்ல விழ வச்சி இப்படி அலங்கோலமாக்கிட்டியே.. நியாயமாய்யா.. சொல்லுய்யா.. நியாயமா?

பார்: (டீக்கடை பெஞ்சில் சென்று அமர்ந்தவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார். திரும்பி டீக்காரரை பார்க்கிறார்) ஏங்க, ஐயா இப்பத்தான் அம்சமா இருக்காருல்லே.. (வடிவேலுவிடம்) இப்படியே போ.. கரெக்டா கூலிக்காரன் மாதிரியிருக்கே.. சந்தையில எல்லாம் சீப்பா தருவான்.. உங்கையிலயும் நூத்தம்பது ரூபா கம்மியா இருக்கில்லே.. இந்த வேஷம் கரெக்டா இருக்கு.. போ.. டாடா.. (டீக்காரரிடம்) யோவ்.. சூடா ஒரு டீ போடு.. தண்ணி கலக்காத பால்ல போடு.. அதான் சார் நூறு ரூபா குடுத்துருக்காரே.. அப்படியே ரெண்டு பப்ஸ எடு..

வடி: (இரண்டு பேரையும் மாறி மாறி பார்க்கிறார்) யோவ் நீங்க ரெண்டு பேருமே நல்லாருக்க மாட்டீங்க.. சொல்லிட்டேன்.. (அழுக்கான சட்டையை தட்டிவிட்டுக்கொண்டே சைக்கிளை நோக்கி செல்கிறார்)

பார்: (கைதட்டி) டேய் நில்றா.

வடி: (திடுக்கிட்டு நின்று திரும்பி பார்க்கிறார்) இன்னுமென்னய்யா? அதான் கைலருந்ததெல்லாத்தையும் பிடுங்கிட்டே இல்ல.. பொறவென்ன?

பார்: பயந்துராத.. காசெல்லாம் வேணாம்.. ஹா ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரியேன்.. சிரிச்சிக்கிட்டே போனா காசு போனதெல்லாம் மறந்துருமில்லே அதான் கேட்டேன்.. எங்க கொஞ்சம் சிரி..

(வடிவேலு அவர் சொன்னதன் சூட்சுமம் புரியாமல் அழுதுக்கொண்டே ஹா.. ஹா.. ஹா.. என்று சிரிக்க அது கா, கா, கா என்று ஒலிக்கிறது. பார்த்திபனும், டீக்காரரும்.. சற்று முன் பெஞ்சிலிருந்து எழுந்து சென்று ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க வடிவேலு தன் தவறைப் புரிந்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சைக்கிளில் ஏறிக்கொண்டு ஒரே ஓட்டமாய் சென்று மறைகிறார்.)




முற்றும்.

18 செப்டம்பர் 2013

வாடைகைக்கு வீடு ( நகைச்சுவை கலாட்டா.)

பாத்திரங்கள்

வீட்டு உரிமையாளர் - பார்த்திபன்
தரகர் -                                வடிவேலு
வாடிக்கையாளர் -        கவுண்டமனி.

**

(வீட்டுத் தரகர் வடிவேலு வெள்ளை ஆனால் காவியேறிய வேட்டி, அதே கலரில் சட்டை.., கக்கத்தில் ஜிப் வைத்த, நைந்து போயிருந்த ஹைதர் காலத்து ரெக்ஸின் பை சகிதம் சரக் சரக் என்று ஏற்கனவே பாதி தேய்ந்து போயிருந்த காலணிகளுடன் சற்றே தெனாவட்டான நடையில் சாலையின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை பார்த்தவாறே வருகிறார். அவருடன் முட்டிக்கு மேல் மடித்து கட்டிய சங்கு மார்க் லுங்கி, உள்புறம் அணிந்திருந்த ஜன்னல் பனியன் வெளியே தெரியும் அளவுக்கு மெல்லிய கலர் ஜிப்பா..  இரண்டு கைகளும் கக்கம் வரை பிரிமணைபோல் சுருட்டப்பட்டிருக்க.. ஒரு சுருட்டலுக்குள்ளே துருத்திக்கொண்டு நின்ற சங்கு மார்க் கைக்குட்டை.. வாயின் ஓரத்தில் பாதி காய்ந்துபோயிருந்த பீடி.. வீடு தேடி அலையும் தரகரின் வாடிக்கையாளர்..’)

க.மனி: யோவ் தரகரே.. தோ.. வீடு வருது, வீடு வருதுன்னு ஊர விட்டே வந்தாச்சு போலருக்கு.. வீட்ட காணம்?

வடி:(சிரிப்புடன்) ‘போங்கண்ணே.. ஒங்களுக்கும் எப்பவும் நக்கல்தான்’ (க.மனியின் தோளில் குத்துகிறார்.)

க.மனி:யோவ் பாத்துய்யா.. ( எட்டி குதிக்க அவருக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த ஒரு அறுபது வயது மூதாட்டியின் மேல் மோதுகிறார் அவர் எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.)

பாட்டி:களவானிப்பயலுக.. பொம்பளைங்கள மோதுறதுக்குன்னே கெளம்பி வந்துடுருவானுவ..(முனுமுனுத்தவாறே செல்கிறார். க.மனி எட்டி மூதாட்டியின் சேலைத் தலைப்பை பிடிக்கிறார்..)

க.மனி: ஏய் ஓல்ட் லேடி ஸ்டாப்..

பாட்டி: (விருட்டென்று திரும்பி..) ‘என்னடே எப்படியிருக்கு ஒடம்பு.. ஓல்ட் லேடியாம்லே.. ஓல்ட் லேடி? (சலித்துக்கொள்கிறார்)

க.மனி: (வியப்புடன்) பார்றா? நீயென்ன ஓல்ட் லேடியில்லாம நியூ லேடியா? (மூதாட்டியின் மொட்டைத் தலையை தடவி விடுகிறார்) தரகர் சார், தரகர் சார்.. கொஞ்சம் பாத்து சொல்லுங்க.. இது ஓல்ட் லேடியா இல்ல பால்ட் லேடியா?

வடி: (விளங்காமல் தாடையை சொரிந்தவாறு) என்னண்ணே சொல்றீய.. ஓல்ட் லேடின்னா வயசான லேடி.. வெளங்குது.. அதென்ன பால்ட் லேடி.. எளவு ஒன்னும் விளங்கலையே..

க.மனி: ஆம்பள மாதிரி முழுசா சொட்டெ.. அப்புறம் பால்ட் லேடிதானெ.. (மூதாட்டி, தலையை விடுவித்துக்கொண்டு )நீ போற காரியம் உருப்படாது டே. (செல்கிறார்)

வடி: அண்ணே.. இது ஒங்களுக்கு தேவையா? சும்மா போற கெளவிய புடிச்சி, வம்பு பண்ணி.. வாங்கி கட்டிக்கிறணுமா.. ஏண்ணே.. பாருங்க அந்த கெளவி சபிச்சிட்டு போறத.. இன்னைக்கி போற காரியம் வெளங்குனாப்பலத்தான்.. போய்ட்டு இன்னொரு நாளைக்கு வருவோமாண்ணே.. (வந்த வழியே செல்ல திரும்புகிறார். எதிரில் சற்று தொலைவில் பார்த்திபன் வருவது தெரிகிறது. சட்டென்று திரும்பி வேகமாக நடக்கிறார். கவுண்டமனி ஒன்றும் விளங்காமல் அவர் பின்னே ஓடுகிறார்.)

க.மனி: யோவ் தரகர்.. என்ன இது ஏதோ பேய கண்டா மாதிரி ஓடறீரூ?

வடி: (திரும்பி பார்க்காமல்) அண்ணே.. போன காரியம் வெளங்காதுன்னு அந்த கெளவி சொன்னப்பவே நெனச்சேன்.. அது இப்ப நடக்கப்போவுது..

க.மனி: யோவ்.. நில்லுய்யா.. நின்னு பதில் சொல்லிட்டு போய்யா.. வீடு காட்டுறேன்னு நீ கூப்ட்டுத்தானய்யா வந்தேன்.. இப்ப நீ பாட்டுக்கு நாளைக்கு பாத்துக்கலாம்னா எப்படிய்யா?

வடி: அண்ணே.. இப்ப அது முடியும்னு தோனலண்ணே.. நாளைக்கு பாத்துக்கலாம்..

க.மனி: என்னது நாளக்கா? யோவ் என்ன வெளையாடறியா? நாம்பாட்டுக்கு அந்த முள்ளம்பன்றி தலையன்கூடவாவது போயிருப்பேன்.. அவன் அளும்பு பண்ணாலும் எப்பவும் கைவசம் நாலஞ்சி வீடு வச்சிருப்பான்.. அதுவும் வேணாம்னுட்டு ஒங்கூட வந்தா என்னா வெள்ளாடறியா? நில்லுய்யா.. (எட்டி வடிவேலுவின் சட்டையைப் பிடிக்கிறார்) நின்னு பதில் சொல்லிட்டுப் போ.. எதுக்கு இப்ப வேணாங்கற?

வடிவேலு: (நின்று ஓரக்கண்ணால் திரும்பி பார்க்கிறார். பார்த்திபன் அங்கிருந்தே ஒதைப்பேன் என்று சைகைக் காட்டுகிறார்..) ஐயைய்யோ.. பாத்துட்டானே.. பாத்துட்டானே.. இப்ப இவன்கிட்டருந்து தப்பிக்கறதே பெரும்பாடாருக்கறப்ப அவன் வேற வந்து நிக்கிறானே.. நா இப்ப என்ன பண்ணுவேன்.. என்ன பண்ணுவேன்.. பேசியே கொன்னுருவானே..

க.மனி: யோவ் என்னத்தய்யா வாய்க்குள்ளவே மொனகுற? சத்தமா பேசினா நானும் சேந்து பொலம்புவேன்லே..

வடிவேலு: எண்ணே.. ஒங்களுக்கு சொன்னா வெளங்காதுண்ணே.. என்னைய விட்டுருங்க.. நாளைக்கு நானே வந்து இத விட நல்ல வீடா ஒன்னு பாத்துக்குடுக்கறேண்ணே.. நீங்க தரகர் ஃபீஸ் கூட தரவேணாம்.. போறுமா? (கெஞ்சுகிறார்)

க.மனி: என்னது தரகர் ஃபீஸ் கூட வேணாமா.. அப்ப சரி.. யூ.. கோ.. டுமாரோ.. கம்..

(வடிவேலு ஒலிம்பிக்கில் ஸ்பீட் வாக் செய்பவரைப் போல வேகமாக நடக்க கக்கத்திலிருந்த பை விழுந்து வாய் பிளந்து உள்ளே இருந்த முடியில்லாத பேனா, கிழிந்துபோன கைக்குட்டை, பொடி மட்டை.. இத்யாதிகள் சாலை முழுவதும் சிதறி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உருண்டு ஓட.. வடிவேலு நாலு காலில் பரபரத்து எல்லாவற்றையும் சேகரித்து நிமிரவும் பார்த்திபன் அவருடைய முதுகில் ஓங்கியடிக்கவும் சரியாக இருக்கிறது. வடிவேலு பதறிக்கொண்டு திரும்பி பார்க்க.. பார்த்திபன் விஷமத்துடன் புன்னகை செய்தவாறே கவுண்டமனியைப் பார்க்கிறார்.)

பார்: (கவுண்ட மனியிடம்) சார்.. இவன் ஒங்க கூடத்தான வந்துக்கிட்டுருந்தான்?

க.மனி: (சலிப்புடன் கைகளைத் தட்டியவாறு) ஆமா சார்.. சும்மாருந்த என்னைய வீடு காட்டறேன்னு கூட்டிட்டு வந்துட்டு இப்ப நேரம் சரியில்ல நாளக்கு காட்டறேன்னு ஓடறான் சார்.. இவனெ நம்பி நா வந்தேன் பாருங்க.. என்னைய..

பார்: என்ன செருப்பால அடிச்சிக்கணும் போல இருக்கா?

க.மனி: ஆமா சார்.. பின்னே ஒங்களையா அடிக்க முடியும்?

பார்: என்னெ எதுக்கு சார் அடிக்கறீங்க? இதோ இவனெ அடிங்க. இவந்தான ஒங்கள கூட்டிக்கிட்டு வந்தான்? இவனெத்தான் அடிக்கணும்.. (வடிவேலுவின் பின்னந்தலையில் அடிக்கிறார்)

வடி: (கோபத்துடன் அவருடைய கையைப் பிடித்து தள்ளுகிறார்) யோவ்.. வேணாம்.. பேசிக்கிட்டிருக்கறப்ப ஏன்யா அடிக்கறே? என்ன இது சின்னப்புள்ளதனமாருக்கு?

பார்: டேய்.. டேய்.. இந்த டைலாக்க எத்தனதடவடா சொல்வே.. வேற டைலாக்கே இல்லையா?

வடி: என்னது டைலாக்கா.. யோவ் இது என்ன சினிமாவா, சீரியலா.. டைலாக்கு..கிய்லாக்குன்னுட்டு..

பார்: மாட்டினியா.. மவனே. அதென்னடா கிய்லாக்கு..

வடி: (புரியாததுபோல் பார்க்கிறார்) என்னய்யா சொல்ற? கிய்லாக்கா.. அப்படீன்னா?

பார்: டேய் பேச்ச மாத்தாத.. நீ தான இப்ப சொன்ன?

வடிவேலு: நானா.. இப்பவா? என்னய்யா சொன்னேன்?

பார்: நீதானடா சொன்னே.. டைலாக்கு கிய்லாக்குன்னு.. டைலாக்கு சரி.. தமிழ்ல வசனம்னு மொழிபெயர்ப்பு பண்லாம்.. அதென்ன கிய்லாக்கு.. சைனா பாஷையா.. ஒனக்கு அதெல்லாம் கூட தெரியுமா? துபாய் மாதிரி அந்த ஊர் கக்கூசெல்லாம் கூட கழுவிருக்கியா?

வடி: யோவ்.. யோவ்.. ஒரு பேச்சுக்குச் சொன்னா.. ஏன்யா எங்க போனாலும் இப்படி தொரத்தி தொரத்தி வந்து அழும்பு பண்றே.. (அழுகிறார்)

பார்: டேய், டேய்.. நிறுத்துரா.. எதுக்கெடுத்தாலும் சின்ன பப்பாமாதிரி அழுவறே.. அதென்ன பேச்சுக்கு.. பேசாம கூட சொல்வியா?

வடி: (கவுண்ட மனியிடம்) அண்ணே.. நீங்களாச்சும் சொல்லுங்கண்ணே.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்னு சொல்றதில்லையாண்ணே..

க.மனி: எப்பா. நம்மள விட்டுருங்க.. நமக்கு அந்த கடாரத்தலையந்தான் லாயக்கு.. நீங்க ரெண்டு பேரும் பேசறது ஒரு எளவும் நமக்கு புரியமாட்டேங்குது.. நா அம்பேல்.. நாளைக்கி பாக்கலாம்.. (நழுவுகிறார். ஆனால் வடிவேல் அவரைத் தாவிப் பிடித்துக்கொள்கிறார்)

வடி: அண்ணே.. நீங்களும் போய்ட்டீங்கன்னா என்னெ இவரு பேசியே கொன்னுருவாருன்னே.. ஒரேயொரு நிமிஷம் நில்லுங்கன்னே.. நானும் ஒங்களோடவே வந்துடறேன்.. .

பார்: சார்.. நீங்க ஏன் சார்.. போறீங்க? இவன் ஒங்கள எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தானோ அந்த காரியத்த முடிச்சி குடுத்தானா?

க.மனி: இல்லே.. அதுக்கென்ன இப்போ?

பார்: அதுக்கில்ல சார்.. ஒங்க காரியத்த இவன் முடிச்சி குடுத்துருந்தா நீங்க இவனுக்கு ஏதாச்சும் குடுப்பீங்க இல்லே.. அதான் சார் தரகர் ஃபீஸ்..

க.மனி: ஆமா.. அதான மொற..

பார்: சரி சார்.. ஆனா இவன் ஒங்கள கூட்டிக்கிட்டு வந்துட்டு வேலைய முடிக்கல்லேல்ல?

க.மனி: ஆமா.. அதுவும் சரிதான்..

பார்: அப்போ ஒங்களுக்கு இவன் ஏதாச்சும் குடுக்கணுமா இல்லையா?

வடி: (பதறிக்கொண்டு) யோவ்.. யோவ்.. என்னய்யா இது.. அக்கிரமமாருக்கு.. நாம்பாட்டுக்கு செவனேன்னு அண்ணனுக்கு ஒரு வீட்ட புடிச்சி குடுக்கலாம்னு போய்ட்டிருந்தா இப்படி இடையில வந்து வம்பு பண்றியே.. இது ஒனக்கே நல்லாருக்கா?

பார்: டேய்  நீ சும்மாரு.. ஒன்னைய கேட்டனா? நீங்க சொல்லுங்க சார்.. இவன் ஏதாச்சும் ஒங்களுக்கு குடுக்கணுமா, இல்லையா?

க.மனி: (சந்தேகத்துடன் பார்த்திபனைப் பார்க்கிறார்) நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு.. (வடிவேலுவைப் பார்க்கிறார்.. அவர் இருவருக்கும் தன் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்)

பார்: பாத்தீங்களா.. நா சொன்னா எப்பவுமே சரியாத்தான் இருக்கும்.. இவன் ஒளியறத பாருங்க. டேய் திரும்புடா (வடிவேலுவைப் பிடித்து திருப்புகிறார்)

வடி: என்னய்யா.. சொல்லு.. இப்ப நா என்ன பண்ணனுங்கற?

க.மனி: சார் சொன்னத கேட்டீல்லே.. சீக்கிரம் குடுத்துரு.. நா போட்டும்..

வடி: என்னண்ணே நீங்களுமா? இது நல்லால்லேண்ணே.. சொல்லிட்டேன்.. ஆம்மா..

(வடிவேலு சாலையில் சிதறி ஓடியவைகளை பொறுக்கி எடுக்க முடியாதபடிக்கு சாலையில் போவோரும் வருவோரும் தடை செய்ய வெறுத்துப் போய் கையிலிருந்த பையையும் வீசி எறிகிறார்.)

வடி: (எரிச்சலுடன்) போங்கய்யா.. போங்க.. இதையும் எடுத்துக்குங்க..

பார்: (வடிவேலுவின் தோளில் கைவைத்து தன் பக்கம் திருப்புகிறார்) டேய்.. என்ன என்னமோ பாரிவள்ளல் தேர குடுத்தா மாதிரி ஆக்ட் குடுக்கறெ? பிச்சாத்து பேக்.. என்னா ஒரு முப்பது வருசத்துக்கு முன்னால வாங்கிருப்பியா?

வடி: (பார்த்திபனின் கையை உதறிவிட்டு க.மனியை பார்க்கிறார்) அண்ணே நீங்க வாங்க.. ஒங்களுக்கு வீடுதானே வேணும்? இன்னக்கே பாத்துரலாம். இந்தாள்கிட்ட பேசிக்கிட்டிருந்தா பைத்தியம் புடிச்சிரும்.. நீங்க வாங்கண்ணே.. (அவர் முன்னே நடக்க.. க.மனி பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.)

பார்: போங்க சார். அவர்தான் முடிச்சிடறேன்னுட்டாருல்ல.. (கழுத்தை அறுப்பதுபோல் சைகை செய்கிறார்)

(க.மனி அதை பொருட்படுத்தாமல் வடிவேலுவின் பின்னால் செல்கிறார். பார்த்திபன் சற்று தள்ளி அவர்களை பின் தொடர்கிறார்.)

வடி: (சாலையில் போவோர் ஒருவரிடம்) சார் இங்க 111 வன்னியர் தெரு எதுய்யா?

ஒருவர்: (நின்று கேலியுடன் வடிவேலுவையும் அவருடன் நின்ற க.மனியையும் மேலும் கீழும் பார்க்கிறார்) இன்னா கேட்டே.. யோவ்.. ஒன்னு வீட்ட கேளு.. இல்லாங்காட்டி ரோட்ட கேளு.. அதென்னா 111 வன்னியர் தெரு..? என்னமோ நூறு வன்னியர் தெரு இருக்கறா மாதிரி.. இன்னா ஊருக்கு புச்சா?

வடி: தப்புத்தான்யா.. தப்புத்தான்.. சரி.. வன்னியர் தெருங்கறது இதுதானய்யா..

ஒரு: ஆமாய்யா.. தோ இங்கருந்து சூளை மேடு கடோசி வரைக்கும் வன்னியர் தெருதான்.. ஒனக்கு எங்க போணும் அத்த சொல்லு.. (இருகைகளையும் முடிந்தமட்டும் விரித்து காட்டுகிறார்)

வடி: என்னய்யா இவ்வளவு விரிச்சி காட்றே.. அவ்வளவு பெரிய தெருவா.. இதுல நூத்தி பதினொன்ன நா எங்க போய் தேடறது? என்னடாது ரோதனையா போயிருச்சி.. ஏன்னே பாத்தீங்கல்லே.. போற காரியம் உருப்படாதுன்னு அந்த கெளவி சும்மாவா சொல்லிச்சு..?

க.மனி: யோவ்.. ஒனக்கு வீடே தெரியாதா? அப்ப இது வரைக்கும் ஜன்னலெ தொறந்தா தலைய பிச்சிக்கிறா மாதிரி காத்து வரும்.. (முடியை பிய்த்து எடுப்பதுபோல் ஆக்ஷன் கொடுக்கிறார்) பைப்ப திறந்தா இருபத்து நாலு மணி நேரமும் தண்ணி அருவியா (காலை மடக்கியவாறு குதித்துக் காட்டுகிறார்) கொட்டும்னுல்லாம் சொன்னியே அதெல்லாம் கப்ஸாவா?

வடி: (க.மனியின் தோளில் செல்லமாக குத்துகிறார்) போங்கண்ணே.. ஒங்களுக்கு எப்பவுமே குறும்புதான்.. அதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொன்னா.. நம்ம தொளில்ல இதல்லாம் இருக்கறதுதானெண்ணே..?

க.மனி: (தோளை தடவிக் கொண்டே) எது.. வீட்ட பாக்காமயே புருடா விடறதா? இதெல்லாம் ஒரு தொளிலாய்யா..?

(அவர்களை நெருங்கிய பார்த்திபன்) என்ன சார் மறுபடியும் பிரச்சினை பண்றானா?

க.மனி: (சலிப்புடன்) ஆம்மா சார்.. இவன் கூட படா ரோதனை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால காத்து மூஞ்சிய பிச்சிக்கிட்டு போவும்.. தண்ணி இருபத்துநாலு மணி நேரம் கொட்டும்னு சொல்லிட்டு இப்ப என்னடான்னா வீட்டையே தேடிக்கிட்டு அலையறான் சார்.. நீங்களே கேளுங்க..

வடி: அண்ணே.. என்னண்ணே.. நீங்க.. அதுக்கு இந்தாள் எதுக்கு...? நீங்க வாங்கண்ணே நா கூட்டிக்கிட்டு போறேன். (க.மனியின் கைகளைப் பிடித்து இழுக்கிறார்)

பார்: டேய்.. சார் சொல்றத பாத்தா ஒனக்கே வீடு சரியா தெரியலை.. இதுல இவர எப்படி கூட்டிக்கிட்டு போயி காமிக்க போற? சரி.. இப்ப சொல்லு வீட்டு விலாசமாவது கைல வச்சிருக்கியா? இல்ல அது அந்த பிஞ்சிப்போன பையோட போயிருச்சா?

வடி: யோவ் வேணாம்.. நீ ஒஞ்சோலிய பாத்துக்கிட்டு போ.. எங்களுக்கு தெரியும்.. நாங்க போய்க்குவோம்..

பார்: டேய்.. எஞ்சோலியே நீ என்ன பித்தலாட்டம்லாம் பண்றேன்னு பாக்கறதுதானடா.. அதான ஒவ்வொரு தடவையும் எங்கிட்டயே வந்து மாட்டிக்கறே.. சரி.. எந்த வீட்டுக்கு இவர கூட்டிக்கிட்டு போறே.. எனக்கு தெரியுதான்னு பாப்பம்.. ஏன்னா நானும் இங்கதாண்டா இருக்கேன்.. சொல்லு தெரு பேர் என்ன..

வடி:ஊம்? வன்னியர் தெரு..

பார்: அது இதுதான்.. வீட்டு நம்பர்?

வடி: 111

பார்: (திடுக்கிடுகிறார்) புதுசா, பழசா?

வடி: அப்படீன்னா?

பார்: அதாண்டா.. புது நம்பரா, பழைய நம்பரா?

வடி: (குழம்புகிறார்) இது வேறயா? சரி பழசுன்னே வச்சுக்குவோம்.. எங்கருக்கு?

பார்: (க.மனியைப் பார்க்கிறார்) பாத்தீங்களா சார்.. பழசா புதுசான்னு கேட்டா வச்சுக்குவோங்கான்.. (வடிவேலுவிடம்) டேய் இதென்ன சின்ன வீடா? வச்சிக்கலாங்கறே..

வடி: யோவ் தெரியும்னா தெரியும்னு சொல்லு.. இல்லன்னா ஆள விடு.. இப்படி இடக்கு மடக்.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் நிறுத்திக்கொண்டு தனக்குள்) ‘ஆஹா வேணாம்யா.. இந்த விளையாட்டு வேணாம்யா..’

பார்: டேய் என்னமோ சொல்ல வந்துட்டு முழுங்கறே.. சொல்லு என்னன்னுதான் கேப்பமே.. (க.மனியிடம்) என்ன சார்..

க.மனி: (சலிப்புடன்) ஒங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னெ ஏன் சார் இழுக்கறீங்க? புதுசோ.. பழசோ எங்கருக்குன்னு சொல்லிருங்க சார்.. நேரம் போய்க்கிட்டேருக்குல்ல? இதுக்கு அந்த சட்டித்தலையன் கூடவே போயிருக்கலாம்.. எல்லாம் என் நேரம்..

வடி: அது ஒங்க நேரம் இல்லேண்ணே.. என் நேரம்.. அந்த கெளவி தலைய தடவுனீங்களே.. அப்ப ஆரம்பிச்சது..

பார்: (க.மனியிடம்) சார் நா கூட்டிக்கிட்டு போறேன்.. வாங்க (வடிவேலுவிடம்) டேய் நீ வேணாம்.. சார்க்கு நானே வீட்ட முடிச்சி குடுத்துடறேன்.. (இருவரும் செல்கின்றனர்)

வடி: (அவர்கள் பிறகு ஓடுகிறார்) யோவ்.. யோவ்.. இது அடுக்காதுய்யா.. எம் பொளப்புல மண்ணெ போட்றாத.. அண்ணே, அண்ணே நீங்களாச்சும் கேளுங்க.. இவன்கூட போகாதீங்க.. ஒங்கள பேசிய கவுத்துறுவான்..

பார்: (திரும்பி பார்க்காமலே) டேய்.. பின்னால வராத.. இவர்கிட்டருந்து  தரகர் ஃபீஸ் கிடைக்கும்னு மட்டும் கனவு கானாத..

க.மனி: அதான? வீடே தெரியாத ஆளு எனக்கெப்படி புடிச்சி குடுக்கறது? இதுல காத்து வரும் தண்ணி வரும்னு புருடா வேற.. நீங்க வாங்க சார்.. வந்து காமிங்க சார்.. (பார்த்திபனின் காதில் ரகசியமாக) சார் ஒங்களுக்கு கமிஷன் இருக்கா?

வடி: அண்ணே வேணாம்னே.. இவன் கூட போயிராதீங்க. வீட்டுக்காரனயும் பேசியே கொன்னுருவான்.. பெறவு வீடு கெடைக்காது ஒததான் கெடக்கும்.. இப்பவே  சொல்லிட்டன்..

க.மனி: (தனக்கே உரிய பாணியில்) போட்டே.. வீடு கெடச்சா வீடு ஒத கெடச்சா ஒத.. என்ன சார்?

பார்: அதெல்லாம் ஒங்கள மாதிரி டீசெண்டான ஆளுங்களுக்கில்ல சார்.. இவனெ மாதிரி டுபாக்கூர்ங்களுக்குத்தான்.. நீங்க வாங்க.. (வீடு வந்துவிடுகிறது) இதோ இந்த வீடுதான்.. வாங்க.. (திரும்பி வடிவேலுவை பார்க்கிறார்) டேய்.. உள்ள கிள்ள வந்த? மவனே?

வடி: (முறைக்கிறார்) யோவ்.. இப்ப என்ன சொன்னே?

பார்: யாரு.. நானா? ஏன் காதும் பொட்டையாயிருச்சா? (க.மனியிடம்) சார் நா இவன வராதேன்னு சொன்னது ஒங்களுக்கு கேட்டுதில்லே?

வடி: யோவ் பேச்ச மாத்தாத.. இப்ப நீ எங்க வராதேன்னு சொன்னே.. அத்த சொல்லு..

பார்: ஏன்? வீட்டுக்குள்ள வராதேன்னு சொன்னேன்..

வடி: இல்ல.. இல்ல.. நீ பேச்ச மாத்தற.. அப்படியா சொன்னே..? உள்ள, கிள்ள வராதேன்னு சொல்லலே? என்னெ சொல்லிட்டு நீ மட்டும் கிங்கன மங்கனன்னு பேசலாமாக்கும்? என்னண்ணே நீங்களே சொல்லுங்க.. உள்ள சரி.. அதென்ன கிள்ள? இவரு கேக்கும்போது நா மட்டும் கேக்க கூடாதாக்கும்.. இதென்னண்ணே நியாயம்? கேளுங்கண்ணே.. கேளுங்கண்ணே..

க.மனி (மாட்டிக்கிட்டியாடா என்பதுபோல் ஓரக்கண்ணால் பார்த்திபனை பார்க்கிறார்) சார்.. இது ஒங்களுக்கு தேவையா?

பார்: (சமாளித்துக்கொண்டு) டேய்.. ஞான சூன்யம்.. உள்ள, கிள்ள வராதேன்னா.. வீட்டுக்குள்ள வந்து ஒன் தொணதொண பேச்சால உள்ள இருக்குறவங்கள கிள்ளாதேன்னு அர்த்தம்.. அதாவது டார்ச்சர் பண்ணாதேன்னு அர்த்தம்.. புரியுதா? (க.மனியிடம்) நீங்க வாங்க சார்.. இந்த அரையணா பயகிட்ட பேசிக்கிட்டு..

வடி: ஆஹ்ஹா.. என்னமா பிலிம் காட்டறான்யா.. (தனக்குள்) சரீஈஈ.. இவனுக்கு இந்த வீட்டுக்காரனெ உண்மையிலயே தெரிஞ்சிருக்குமோ.. ரொம்ப வெரசால்லே போறான்.. எதுக்கும் பின்னாலயே பூனை மாதிரி போய் பாப்போம்.. (அக்கம் பக்கம் பார்த்துவிட்டு காவியேறிய வேட்டியை அண்டர்வேருக்கு மேலே தூக்கி கட்டிக்கொண்டு காலணியை வாசலில் கழற்றி வைத்துவிட்டு உள்ளே பதுங்கி, பதுங்கி நுழைகிறார்)

வீட்டுக்குள்..

க.மனி (ஒரு மர நாற்காலியில் அமர்ந்தவாறு) என்னடாயிது.. தோ வீட்டுக்காரனோட வரேன்னு போன இந்த ஆளையும் காணம்..? அவன் என்னைக்கி வந்து என்னைக்கி வீட்ட் பாத்து.. இன்னைக்கி யார் மொகத்துல முளிச்சனோ.. அந்த ஓல்ட் லேடி சொன்னது சரியாத்தான் இருக்கும் போலருக்கே..

வடி: (கதவு மறைவிலிருந்து) பின்னே.. நாளைக்கு பாத்துக்கலாம்னு சொன்னப்பவே போயிர வேண்டியதானே..

க.மனி (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்..) என்ன இது.. அந்த தரகர் கொரல் மாதிரி இருக்கு.. அந்தாளு ஆவியாருக்குமோ..

(வீட்டுக்குள் இருந்து பார்த்திபன் உடை மாற்றிக்கொண்டு கெத்தாக ஒரு அகண்ட புன்னகையுடன் வருகிறார்)

க.மனி: (எரிச்சலுடன்) என்ன சார் நீங்க மட்டும் வரீங்க? வீட்டுக்காரர கூப்டுங்க சார்.. பேசிட்டு போவேணாமா..? (வீட்டுக்குள் எட்டிப்பார்த்து) சார்.. சார்.. வாங்க சார்.. வந்து வீட்ட காமிங்ங்ங்க சார்.. (அழுத்தி குரலெழுப்புகிறார்)

பார்: சார்.. (அவர் வாயை பொத்துகிறார்) நீங்க மொதல்ல வீட்ட சுத்தி பாருங்க.. பிடிச்சிருந்தா வீட்டுக்காரர கூப்டறேன்..

க.மனி: (பார்த்திபனை மேலும் கீழும் பார்க்கிறார்) சரீஈஈஈ.. நீங்க எப்படி டிரஸ்ஸையெல்லாம்.. ஏன் சார் இது ஒங்க வீடுதானே?

பார்: (விஷமத்துடன் சிரிக்கிறார். பிறகு ரகசியமாக) ஆமா சார்.. அந்த புரோக்கர் பயலுக்கு நீங்களும் கமிசன் குடுக்க வேணாம், நானும் குடுக்க வேணாம் பாருங்க.. அதான் சும்மா அப்படி நடிச்சேன்.. இப்ப பாருங்க.. நான் வீட்டுக்காரன்.. நீங்க வாடகைக்கு வர போறவர்.. இதுல மூனாம் மனுசன் அவன் எதுக்கு? நீங்க வாங்க வந்து வீட்ட பாருங்க.. பிடிச்சிருந்தா முடிச்சிருவோம்..

(வடிவேலு மறைவிலிருந்து) அட பாவிப் பயலுவளா.. இதுக்குத்தான் இந்த அளவுக்கு பம்முனானுவளா? சை.. நாசமா போக.. நாள் பூரா சுத்துனதுக்கு இதுதான் கூலியா.. வீட்டு நம்பர் 111னு இருந்தப்பவே நினைச்சேன்.. ஆனா அது இப்படி முடியும்னு தெரியாம போயிருச்சே.. (சலிப்புடன் வந்த வழியே வெளியேறுகிறார்)


நிறைவு..


13 செப்டம்பர் 2013

காவல்துறையில் ஈகோ பிரச்சினை - நகைச்சுவை பதிவு:)

நான் எழுதி வரும் 'சொந்த செலவில் சூன்யம்..' என்ற தொடரின் இன்றைய பகுதியின் துவக்கத்தில் இடுவதற்காக பொருத்தமான quotes எதுவும் உள்ளதா என கூகுளில் தேடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு தேவைப்பட்ட தலைப்பு 'EGO PROBLEMS IN POLICE DEPARTMENT'.

என்னுடைய தேடலில் கிடைத்த பட்டியலில் முதலில் தென்பட்டது 

Now Ego Clash In Police Department 201308180058 : Inextlive

inextlive.jagran.com/now-ego-clash-in-police-departm...


Aug 18, 2013 - Allahabad : किसी भी वर्किंग सिस्टम में जूनियर को हमेशा सीनियर ही आर्डर देता है. लेकिन जब जूनियर स्टॉफ अपने ...


ஆனால் இந்த கட்டுரைய் இந்தியில் இருந்ததால் கூகுள் மொழிமாற்று வசதியை (translation) பயன்படுத்தி ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்தேன். 

அதைப்  படித்துப் பார்த்தபோது  பயங்கரமான நகைச்சுவை பதிவு போல இருந்தது. அதை அப்படியே ஒரு தனிப் பதிவாக போடலாம் என்கிற அளவுக்கு காமெடி.

சரி... ஆங்கிலத்தில்தானா இந்த காமெடி என்று நினைத்து அதை மீண்டும் தமிழில் மொழிமாற்றம் செய்தேன். அது முன்னதை விட காமெடி..

அந்த இரண்டையும் கீழே அளித்துள்ளேன். படித்து மகிழுங்கள்.

*********

Now, these police Ego Clash
 Updated on: Sun 18-Aug-2013 10:49:03 (GMT)



Now ego clash in police department

Allahabad: Junior in any working system always gives seniors the same order.But the junior to his senior staff to order it, then the ego is bound to be trouble.Ego Clash of the Police Department's dealing with something similar.Yun was recently promoted to inspector inspector was given them by.Two Star Three Star took the shoulder.But the issue even if it's stuck promotions have become the Inspector, but it was posted in the police station is in the hands of his Thanedari inspector.Inspector Inspector Order now and it is obvious they will be struck somewhere.

After a long battle got the right

To my right, he fought for years with the system.Had pleaded to go to court.It is evident now that the promotion has come to be this difference in attitude.But even under sub-inspector on duty, he'd have to ring.City inspector in charge of a police station who had been promoted to inspector ordered his Sbardinet he refused.Sources said he also determined that the duty of a junior.The inspector in charge to understand this change your decision, and he immediately put on duty on the other.

Not yet posting

Most police stations in the city nowadays the situation has become.Under the duty of the Police Inspector in charge and there are promotions.Still enough time has passed after becoming inspector, sub-inspector of them has to work.And the other thing is that after becoming an inspector is not enjoying his working well.Because it is certain that his posting is now the new place to be.


Some of the station
At the police station, where dozens fade in the city has become a somewhat similar situation.It is not just the city, including the police station of Gangapar and Ymunapar.City of Georgetown, including Khuldabad are many such stations.


To be the responsibility of each police inspector

All stations in a bid to control crime police station in Allahabad has been made.After becoming the police station inspector who shall be its responsibility.At the inspector will then be sub-inspector deployed.City were promoted after the rule has increased restlessness of the inspector.


Inspector of posting list is being prepared.It is the responsibility of IG zone.The new inspector will be posting soon.


 காவல் துறை இப்போது ஈகோ மோதல்

 சன் 18-Feb-2013 10:49:03 (GMT): அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
காவல் துறை இப்போது ஈகோ மோதல்

அலகாபாத்: எந்த வேலை அமைப்பு ஜூனியர் எப்போதும் மூத்த அதே வரிசையில் கொடுக்கிறது.ஆனால் அதை வாங்க அவரது மூத்த ஊழியர்களுக்கு ஜூனியர், பின் ஈகோ பிரச்சனை தான் இருக்கவேண்டும்.பொலிஸ் திணைக்களம் ஈகோ மோதல் போன்ற ஏதாவது கையாள்வதில்.யுன் சமீபத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டது இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் உயர்த்தப்பட்டார்.இரண்டு ஸ்டார் த்ரீ ஸ்டார் தோள்பட்டை எடுத்தது.ஆனால் அதை விளம்பரங்கள் இன்ஸ்பெக்டர் மாறிவிட்டன, ஆனால் அதை காவல் நிலையத்தில் வெளியிடப்பட்டது ஒட்டிக்கொண்டிருக்கிறது கூட பிரச்சினை தனது Thanedari இன்ஸ்பெக்டர் கைகளில் உள்ளது.இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் இப்போது ஆர்டர் மற்றும் அதை அவர்கள் எங்காவது நடக்கவிருக்கிறது தெளிவாக இருக்கிறது.

ஒரு நீண்ட போரில் உரிமை கிடைத்தது பின்னர்

என் வலது, அவர் அமைப்பு ஆண்டுகள் போராடினார்.நீதிமன்றம் சென்று வாதிட்டார்.இது பதவி உயர்வு மனப்பான்மை இந்த வேறுபாடு இருக்கும் வந்துவிட்டது என்று இப்போது தெளிவாக உள்ளது.ஆனால் கூட பணியில் துணை ஆய்வாளர் கீழ், அவர் அடிக்க வேண்டும் என்று.இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு என்று ஒரு போலீஸ் நிலையத்தின் பொறுப்பு நகரம் இன்ஸ்பெக்டர் அவர் மறுத்து அவரது Sbardinet உத்தரவிட்டது.ஆதாரங்கள் அவர் உறுதியாக கூறினார் இளைய கடமை என்று.இந்த புரிந்து கொள்ள பொறுப்பான ஆய்வாளர் உங்கள் முடிவை மாற்ற, அவர் உடனடியாக மற்ற கடமை மீது.

இன்னும் தகவல்களுக்கு

நகரில் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் இப்போதெல்லாம் நிலைமை மாறிவிட்டது.பொறுப்பான பொலிஸ் இன்ஸ்பெக்டர் கடமை கீழ் மற்றும் பதவி உயர்வுகள் உள்ளன.இன்னும் போதுமான நேரம் இன்ஸ்பெக்டர் ஆனதற்கு பிறகு கடந்து, அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் வேலை செய்ய வேண்டும்.மற்ற விஷயத்தை ஒரு இன்ஸ்பெக்டர் ஆனதற்கு பிறகு அவரது பணி அனுபவிக்கும் இல்லை என்று.அது அவரது தகவல்களுக்கு இப்போது இருக்கும் புதிய இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட காரணம்.


நிலையம் சில
போலீஸ் நிலையத்தில், அங்கு டஜன் கணக்கான நகரில் மங்காது ஒரு சற்றே ஒத்த நிலைமை மாறிவிட்டது.இது Gangapar மற்றும் Ymunapar போலீஸ் நிலையம் உட்பட, ஒரு நகரம் ஆகும்.குல்தாபாத் உட்பட ஜார்ஜ்டவுன் நகரம், பல நிலையங்கள் உள்ளன.


ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு இருக்க வேண்டும்
அலகாபாத் நகரில் குற்றம் போலீஸ் நிலையத்தில் கட்டுப்படுத்த முயற்சியில் அனைத்து நிலையங்கள் செய்யப்பட்டது.போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனதற்கு பிறகு அதன் பொறுப்பை இருக்கும்.இன்ஸ்பெக்டர் பிறகு சப் இன்ஸ்பெக்டர் நிறுத்தி இருக்கும்.ஆட்சி ஆய்வாளர் அமைதியின்மை அதிகரித்துள்ளது பின்னர் நகரம் வளர்த்தெடுத்த.


தகவல்களுக்கு பட்டியல் இன்ஸ்பெக்டர் தயார்.இது IG மண்டல பொறுப்பு.புதிய இன்ஸ்பெக்டர் விரைவில் தகவல்களுக்கு.



**********