ஆரம்பத்தில், வர்த்தக கணக்கில் வைக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் கூட வைக்க முடியாமல் தவித்த நாடார் சிறுக, சிறுக தன்னுடைய வர்த்தகத்தில் முன்னேற ஆரம்பித்தார்.
அவர் கடை இருந்த சுற்றுப்புரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் இருந்ததால் அவருடயை தவணைமுறை வர்த்தகம் எல்லோரையும் கவர்ந்தது. அவருக்கிருந்த அபிரிதமான பேச்சுத் திறமை அவருடைய வர்த்தகத்திற்கு மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. அவருடைய பேச்சுத்திறமையால் கவரப்பட்டு அவருடைய கடைக்கு மிக அருகிலேயே இருந்த மத்திய அரசு ஊழியர் காலனியில் குடியிருந்தவர்களில் பெரும்பாலோனர் அவருடைய வாடிக்கையாளர்கள் ஆனார்கள்.
என்னுடைய வங்கியில் இத்தகைய வீட்டுப் பொருட்களை வாங்க கடன் வழங்க பிரத்தியேக திட்டம் இருந்ததை ஒருநாள் அவரிடம் விளக்க, அடுத்த சில நாட்களிலேயே அவருடைய வாடிக்கையாளர்களுள் மத்திய அரசு ஊழியர்கள் சிலரை என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி அவர்களுக்கு இத்திட்டத்தில் கடன் கொடுக்க சிபாரிசு செய்தார்.
நாடார் கடையிலிருந்த வானொலி பெட்டி, டிரான்சிஸ்டர், ஸ்டீல் அலமாரி போன்ற வீட்டுப்பொருட்களை வாங்கும் அவருடைய வாடிக்கையாளர்களுக்கு பொருட்களின் விலையில் 75% என்னுடைய வங்கியிலிருந்த கடன் வழங்குவதென தீர்மானித்தேன்.
அந்த மத்திய அரசு ஊழியர்கள் காலனியும் என்னுடைய வங்கி கிளைக்கு அருகிலேயே இருந்ததாலும் நாடாரும் தவணைத் தொகையை வசூலிப்பதில் உதவி செய்ததாக உறுதியளித்ததாலும் காலனியில் வசித்தவர்களுள் அதிகாரி பதவியிலிருந்த சுமார் நூறு பேருக்கு தலா ரூ.5000/- வீதம் கடன் தருவதாக ஒரு பிரத்தியேக திட்டத்தை தயாரித்து என்னுடைய வட்டார அலுவலகத்திற்கு அனுப்பினேன். என்னுடைய வட்டார தலைவருக்கு திட்டம் திருப்தியளிக்கவே உடனே அனுமதி கிடைத்தது.
இத்திட்டத்தில் முதல் தவணையில் கடனுதவி பெற்ற அனைவரும் கடனைத் திருப்பி பெற நாடார் மிகவும் ஒத்துழைத்ததால் அவருடைய வணிகத்தை விரிவுபடுத்தவும் என்னுடைய கிளையிலிருந்து கடன் (Overdraft) வழங்கப்பட்டது.
நான் அக்கிளையிலிருந்து மாற்றம் பெற்று சென்றபோது நாடாருடைய வணிகம் கணிசமான அளவுக்கு வளர்ந்திருந்தது. அன்று நாட்டில் பிரபலாமாயிருந்த Dianora TV, Solidaire TV, Weston TV போன்ற தொலைக்காட்சி பெட்டிகள், மீனு மிக்ஸி, ரத்னா மின்விசிறி, கைத்தான் மின்விசிறி போன்ற வீட்டு உபயோக பொருட்களின் டீலர்ஷிப் எடுக்கத் துவங்கியிருந்தார்.
நான் சென்னையைவிட்டு மாற்றலாகிப் போய் சுமார் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னைக்கு வட்டார அலுவலகத்துக்கு திரும்பி வந்த சமயம் நான் கனவிலும் நினைக்காத அளவுக்கு வளர்ந்திருந்தார். அவருடைய விரிவு படுத்தப்பட்ட கடையை கண்டு வியந்துபோனேன். ஆனால் அவர் மட்டும் நான் ஆரம்பத்தில் கண்டதுபோலவே எளிமையாய் இருந்தார். அவருடைய அந்த எளிமை இன்றுவரை தொடர்வதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் என்பது என்னுடைய அனுமானம்.
ஆனால் நாடார் ஒத்துக்கொள்ள மாட்டார். அயராத உழைப்புடன் அதிர்ஷ்டமும் தேவை என்று வாதிடுவார். இந்த அதிர்ஷ்டம் என்ற வார்த்தையில் எனக்கு அதிக நம்பிக்கையில்லை. ‘நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துத்தான் எங்க வீட்ல எதுவும் செய்வோம் சார், அதனால, உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் நீங்க எனக்கு முதல் முதலா கடன் வழங்கற நாள், நேரம் நல்ல நேரமாயிருக்கணும் சார்’ என்று நாடார் நிர்பந்தித்தபோது நான் ஏளனத்துடன் சிரித்தேன். இருப்பினும் அவருடைய வேண்டுகோளை தட்ட முடியாமல் சம்மதித்தேன். இச்சம்பவத்தை இன்றும் அவரை காணும்போதெல்லாம் அவர் என்னுடைய நினைவுக்கு கொண்டுவருவார்.
மேலாளர் பதவி வகித்த கடந்த இருபதாண்டு காலத்தில் நான் மேலாளாரக பணியாற்றிய கிளைகளில் இருந்து கடனுதவி பெற்றவர் பலர். ஆனால் நாடார் போன்ற ஒரு சிலரே அபிரிமிதமான வெற்றி பெற்றுள்ளனர்.
தோல்வி பெற்றவருள் ஒரு சிலரே தவறான வர்த்தகம், தொழில் இவற்றில் முதலீடு செய்தனர். சிலர் ஒழுக்கமின்மை, பொறுப்பின்மை, தவறான அணுகுமுறை, குறைவான சொந்த முதலீடு போன்றவற்றால் தோல்வியடைந்திருக்கலாம். பலருடைய விஷயத்தில் அவர்கள் தெரிந்தெடுத்த வணிகமோ, தொழிலோ சரியானதாயிருந்தும் தேவைக்கும் மேல் முதலீடு செய்திருந்தும் வர்த்தகத்தில்/தொழிலில் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு நடுவீதிக்கு வந்திருக்கின்றனர்.
ஏன், எதனால்? என்னால் முடிந்தவரை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இதுவரை பதில் கிடைக்கவில்லை. ஒருவேளை இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் துணை இல்லாததுதான் காரணமாயிருக்குமோ?
தொடரும்
Tell me about it ....... :(
பதிலளிநீக்குராஜ், நஷ்டம் அடைந்தவர்களுள் ஒருவரின் அனுபவத்தை தனி பதிவாய் எழுதலாம் என்றிருக்கிறேன்.
Can you please wait for some time?
அவருடைய அந்த எளிமை இன்றுவரை தொடர்வதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் என்பது என்னுடைய அனுமானம்.//
பதிலளிநீக்குஒருவர் எளிமையாயிருப்பதால் மட்டுமே வெற்றியடைந்துவிட முடியுமா என்ன? உங்களுடைய வாடிக்கையாளர் கூறியதும் கூட ஓரளவுக்குத்தான் சரி.அயராது உழைப்பு, தன்னம்பிக்கை,
நேர்மை போன்றவற்றால் மட்டுமே ஒருவரால் எடுத்த காரியத்தில் வெற்றியடைய முடியும். அதிர்ஷ்டம் என்பது சினிமா காரர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம்.
எனக்கு முந்தைய பின்னூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
பதிலளிநீக்குநீங்கள் உங்களுடைய பதிவில் கூறியுள்ளதுபோல ஒரு வர்த்தகமோ/தொழிலோ வெற்றியடைய அதிர்ஷ்டம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறதென்பதை மறுக்க முடியாது.
ஒருவேளை இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் துணை இல்லாததுதான் காரணமாயிருக்குமோ? //
பதிலளிநீக்குஇருக்கலாம். நானும் இதை என்னுடைய சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
அயராது உழைப்பு, தன்னம்பிக்கை,
பதிலளிநீக்குநேர்மை போன்றவற்றால் மட்டுமே ஒருவரால் எடுத்த காரியத்தில் வெற்றியடைய முடியும். அதிர்ஷ்டம் என்பது சினிமா காரர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். //
இருக்கலாம். மறுப்பதற்கில்லை.
மனதுக்கு நிறைவாக இருக்கிறது இப்பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்குஅன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் உங்களுடைய பதிவில் கூறியுள்ளதுபோல ஒரு வர்த்தகமோ/தொழிலோ வெற்றியடைய அதிர்ஷ்டம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறதென்பதை மறுக்க முடியாது.//
பதிலளிநீக்குஇதுதான் நான் என்னுடைய அனுபவத்தில் கண்டுணர்ந்தது.
நன்றி.
நன்றி ராகவன் சார்.
பதிலளிநீக்குஉங்க மெய்ல் கிடைத்தது ராஜ்.
பதிலளிநீக்குபதிலும் அனுப்பியிருக்கேன்.
நன்றி.
அதிர்ஷ்டமாவது ஒன்னாவது..
பதிலளிநீக்குஎல்லா ஹம்பக்.
உழைப்புதான் வெற்றிக்கு ஒரே வழி.
எல்லா ஹம்பக்.//
பதிலளிநீக்குappadiyum sollividamudiyaathu.