நான் என்னுடைய வங்கியின் மும்பை கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய குமாஸ்தாக்களில் ஒருவர் காசோலைகளின் டோக்கனை மாற்றிக் கொடுத்ததன் விளைவாக ஏற்பட்ட குழப்பத்தை பற்றி எழுதியிருந்தேன்.
அதுபோன்ற ஒரு அசம்பாவிதம் கோடம்பாக்கம் கிளையில் இருந்த சமயத்திலும் நடந்தது.
என்னுடைய கிளை புதிய கிளையானதால் துவங்கிய முதல் வணிக வருடத்திலேயே (Financial Year April-March) லாபம் ஈட்டுவதற்கான ஒரே வழி முடிந்த அளவுக்கு கடன் வழங்குவதுதான்.
ஒரு வர்த்தகருக்கோ, தொழிலதிபருக்கோ கடன் வழங்குவதென்றால் அத்தனை சுலபமல்ல.
முதலில் அவர் வங்கியில் சுமார் ஒரு வருட காலத்திற்காவது கணக்கு வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல. அக்கணக்கில் அவர் செய்துவந்திருந்த வரவு-செலவுகள் திருப்திகரமானதாக இருந்திருக்க வேண்டும்.
அவர் வெளியாருக்கு அளித்திருந்த காசோலைகள் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பி சென்றிருக்கலாகாது.. அவருடைய வர்த்தகம் குறைந்தது முந்தைய மூன்றாண்டுகள் லாபத்தில் இயங்கியிருக்க வேண்டும். வருமான வரி, தொழில் வரி, விற்பனை வரி என எல்லா ‘வரி’களையும் தவறாமல் செலுத்தியிருக்க வேண்டும்..
இப்படி பல கட்டுபாடுகள் உண்டு.
இவை எதுவும் இல்லாமல் கொடுக்க கூடிய ஒரே கடன் தங்க நகைகளுக்கு மீதான கடன்தான்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள வங்கி கிளைகளுக்கு பிற வணிக மற்றும் தொழில்களுக்கு கடன் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் தங்க நகைகளின் மீது கடன் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஆனால் என்னுடைய கிளை புதிய கிளை என்பதால் என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்து பிரத்தியேக அனுமதி எனக்கு கொடுக்கப்பட்டது..
இதற்கு வேறொரு காரணமும் உண்டு. என் வங்கி அமைந்திருந்த கோடம்பாக்கம், வட பழனி போன்ற இடங்களில் 1980களில் மிக அதிக அளவில் Pawn Brokers எனப்படுகிற தனியார்களால் நடத்தப்படுகின்ற தங்க நகைகளின் மேல் கடன் வழங்கும் நிறுவனங்கள் இருந்தன. இத்தகைய நிறுவனங்கள் இப்போதும் காணப்படுகின்றன என்றாலும் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்துவிட்டன.
தங்க நகைகளின் மேல் கடன் கொடுப்பது மிகவும் சிக்கலான காரியம். முதலில் தங்கத்தில் உள்ள சுத்த தன்மையை (Purity) கண்டுபிடிக்க வங்கி அதிகாரிகளுக்கு பிரத்தியேக பயிற்சி ஒன்றும் கொடுக்கப்பட்டதில்லை..
நகைகளை உரைத்து பார்க்க ஒரு சாணா கல்லும் (Touch Stone) ஒரு குப்பி nitric acid, துகள்களை ஒற்றி எடுக்க ஒரு மெழுகு (Wax) உருண்டையும் இருக்கும். தங்க நகைகளை கல்லில் உரைத்து அதன்மேல் அமிலத்தை லேசாய் வைத்ததும் சுர்ர்ர்ர்ர் என்று React செய்தால் அது போலி என கண்டுகொள்ளலாம் என்று மட்டுமே வங்கியின் பயிற்சி கல்லூரியில் சொல்லித்தருவார்கள்.
சொல்லித்தரும்போது பார்ப்பதற்கும் பயிற்சி முறையில் செய்து பார்க்கும்போதும் மிக எளிதாய் தெரியும். ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதல்ல. அதுவும் கடன் பெறுபவர் நமக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சமயத்தில் அவர்களுடைய நகைகளை கல்லில் தேய்த்து அமிலத்தை ஊற்றி பரிசோதிக்க தர்மசங்கடமாயிருக்கும்.
அதுவும் கோடம்பாக்கம் ஏரியா சினிமாக்காரர்களுக்கும், வெளியில் பணக்கார வேடம் கட்டி அலைவர்களுக்கும் பஞ்சமே இல்லை. பெரும்பாலும் என்னைப் போன்ற வங்கி அதிகாரிகள் கடன் வாங்க வரும் ஆட்களை வைத்துத்தான் நகைகளின் தரத்தையும் எடை போடுவோம்.
கடன் பெறுபவர் வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர் ஒருவரால் சிபாரிசு செய்யப்பட்டிருந்தால் எந்தவித தயக்கமும் இன்றி கடன் கொடுத்துவிடுவது வழக்கம். நகைகளின் தரத்தை பிறகு சரிபார்த்துக்கொள்வோம். இல்லையென்றால் பிரச்சினைதான்.
பார்ப்பதற்கு எந்த வித்தியாசமுமில்லாமல் அசல் தங்கம் போலவே முலாம் பூசிய நகைகளை எந்தவித தயக்கமுமில்லாமல் பெரிய மனுஷ தோரணையுடன் அடகு வைக்க வருபவர்களும் உண்டு.
மற்றபடி You are left to your own instincts and luck. ஆமாங்க.. பெரும்பாலும் நம்முடைய யூகமும் நல்ல நேரம்தான் நம்மை காப்பாற்றும். நேரம் நல்லாயிருந்தா யூகமும் சரியாயிருக்கும். இல்லையென்றால் நம் யூகம் பொய்த்து நஷ்டம்தான்.
அப்படித்தான் நடந்தது எனக்கும்.
தொடரும்
ஒரு வங்கி மேலாளர் வேலைல இவ்வளவு கஷ்டங்கள் இருக்கா சார்?
பதிலளிநீக்குமுதல்ல ஒரு ஆசாரி ட்ரெய்னிங் எடுக்கணும் போலருக்கு?
நகைகளை உரைத்து பார்க்க ஒரு சாணா கல்லும் (Touch Stone) ஒரு குப்பி nitric acid, துகள்களை ஒற்றி எடுக்க ஒரு மெழுகு (Wax) உருண்டையும் இருக்கும். தங்க நகைகளை கல்லில் உரைத்து அதன்மேல் அமிலத்தை லேசாய் வைத்ததும் சுர்ர்ர்ர்ர் என்று React செய்தால் அது போலி என கண்டுகொள்ளலாம் "
பதிலளிநீக்குரொம்ப உபயோகமான தகவல் சார்.
இந்த கல்லும், ஆசிடும், வாக்ஸ்சும் எங்க கிடைக்கும்னு சொல்லுங்களேன்.
ஏன்னா என் வீட்டுக்காரி கொண்டுவந்த நகையெல்லாம் உண்மையானதுதானான்னு பாத்துக்கறேன்.
ஹி, ஹி.
ஆமா சார்.
பதிலளிநீக்குஎங்க சார் கிடைக்கும்.
இது ஹிஹிக்காக இல்லை..
நிஜமாவே வேணும்
அதுவும் கோடம்பாக்கம் ஏரியா சினிமாக்காரர்களுக்கும், வெளியில் பணக்கார வேடம் கட்டி அலைவர்களுக்கும் பஞ்சமே இல்லை.//
பதிலளிநீக்குநூத்துல ஒரு வார்த்தை ஜோசப்
இத்தகைய நிறுவனங்கள் இப்போதும் காணப்படுகின்றன என்றாலும் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்துவிட்டன./
பதிலளிநீக்குஎங்க சார், இப்பவும் மூலைக்கி மூலை அந்த கடைதான் இருக்கு. வடபழனியில இப்பவும் வந்து பாருங்க தெரியும்.
எங்கருந்தோ வந்து நம்ம ரத்தத்த உறிஞ்சர கடைகள் இவை.
இவனுங்களஎல்லாம் அடிச்சி விரட்டணும்.
ஆமாம் சம்பத்,
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் ஒரு கிளையை நிர்வகிப்பதென்பது மிகவும் சிரமமான காரியம்.
ஏனென்றால் வருகின்ற வாடிக்கையாளர்கள் மிகவும் விவரம் தெரிந்தவர்களாக உள்ளனர்.
கொஞ்சம் அசந்தாலும் சரி, தலையில் மிளகாய் அரைத்துவிட்டு போய்விடுவார்கள்.
நன்றி ராஜ்குமார்.
பதிலளிநீக்குசினிமாகாரர்கள் என்றால் இப்போதெல்லாம் வீடே வாடகைக்கு கிடைக்காது.
பெரும்பாலோனோர்- டெக்னீஷியன்களைத் தவிர்த்து - வாழ்க்கையிலும் நடிப்பதுதான் பெரிய பிரச்சினை.
நீங்கள் கூறுவது சரிதான் பாபு.
பதிலளிநீக்குஆயினும் அவர்களும் பிழைப்புக்காகத்தானே அடகு கடைகளை நடத்துகிறார்கள். அதிலும் ஒரு சவுகரியம் இருக்கிறதே. உங்களுக்கு உடனடியாக பணம் தேவையென்றால் இரவு பத்து மணிக்கு போனாலும் கடன் கிடைக்குமே.. எந்த வங்கி உங்களுக்கு பத்து மணிவரை திறந்திருக்கிறது?
இந்த கல்லும், ஆசிடும், வாக்ஸ்சும் எங்க கிடைக்கும்னு சொல்லுங்களேன்.
பதிலளிநீக்குஏன்னா என் வீட்டுக்காரி கொண்டுவந்த நகையெல்லாம் உண்மையானதுதானான்னு பாத்துக்கறேன்.//
ஹி ஹின்னு சொல்லிட்டீங்க.
இருந்தாலும் சொல்றேன். சென்னையிலன்னா N.S.C Bose Road, மதுரை, தூ..டியிலனா காசுகடை பஜார்.
கல்லுல உரசினதையெல்லாம் மெழுகுல ஒத்தி எடுக்கறீங்க சரி. அதுலருக்கற தூளையெல்லாம் உருக்கி எடுத்தா தங்கம் கிடைக்கும்னு சொல்றாங்களே. உண்மையா?
பதிலளிநீக்குஅப்படி நீங்க செஞ்சிருக்கீங்களா?
அதுலருக்கற தூளையெல்லாம் உருக்கி எடுத்தா தங்கம் கிடைக்கும்னு சொல்றாங்களே. உண்மையா?
பதிலளிநீக்குஅப்படி நீங்க செஞ்சிருக்கீங்களா? /
உண்மைதான். வங்கிகள்ல இந்த மெழுகு உருண்டை இரு அதிகாரிகளுடைய க்ஸ்டடியில் இருக்கும். அதை சாதாரணமாக யாரும் கொண்டுபோய் உருக்கிவிட முடியாது. அத்தனை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.