10 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 11

எம்.ஜி.யாருடன் சந்திப்பு - 2

சிறிது நேரத்திற்கு பிறகு..

‘சொல்லுங்க சேட்.. யார் இந்த தம்பி? நீங்க சொன்னவர்தானா.. ரொம்ப சின்னவரா இருக்காரே.. இவரா மேனேஜர்?’ என்ற பிள்ளையிடம் என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் திகைத்த ‘சேட்’ என்னைப் பார்த்து ஒரு மாதிரி ‘வழிந்தார்’ என்றே சொல்லவேண்டும்..

பிறகு சமாளித்துக்கொண்டு..

இல்ல சார் .. இவர் வயசுலதான் சின்னவரு.. ஆனா திறமையிருக்கு.. (நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் சில பதிவுகளில் சுயபுராணம் இருக்கும் என்று. இது அதில் ஒன்று) என பதில் கூற..

பிள்ளை அப்போதும் திருப்தியடையாமல் என்னைப் பார்த்தார்..

பிறகு என்ன நினைத்தாரோ திரும்பி சேட்டைப் பார்த்தார்....

‘சார் எனக்கு இப்ப இருக்கற மினிஸ்டருங்கள்ல எல்லாரையும் தெரியும். இருந்தாலும் நம்ம ... அமைச்சரை எனக்கு ரொம்ப நாளா பழக்கம். அவர் நம்ம ஊர்காரர் வேற..
தம்பி ரொம்ப சின்ன வயசா இருக்கறதுனால நாம மினிஸ்டர பாக்க போறப்போ இப்ப இருக்கற பிராஞ்ச் மானேஜர்ல யாராவது ஒருத்தரையும் இந்த தம்பியோட சேர்த்து கூட்டிக்கிட்டு போனா நல்லதுன்னு நினைக்கறேன், தம்பி நீங்க தப்பா நெனச்சுக்காதீங்க.. இந்த மினிஸ்டருங்களே ஒருமாதிரி ஆளுங்க.. அதான் சொல்றேன்.’ என்றார்.

சேட் தர்மசங்கடத்துடன் என்னைப் பார்த்தார். பிள்ளையோடு சோபாவில் ஈஷிக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணின் பார்வையிலும் ஏளனம் தெரிந்தது..

நான் சட்டென்று முடிவுக்கு வந்தவன்போல் அவரைப் பார்த்து.. ‘நீங்க சொல்றது சரிதான். நம்ம மேனேஜரையே கூட்டிக்கிட்டு போலாம் சார். நான் அவர்கிட்ட பேசிக்கறேன். நீங்க என்னைக்கி போலாம்னு சொல்லுங்க..’ என்றேன்.

சேட் பிள்ளையைப் பார்த்தார்..

அவர், 'சரிங்க தம்பி. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க. நான் மினிஸ்டர் பி.ஏ. கிட்ட பேசிட்டு சொல்றேன்'. என்று கூற நானும் சேட்டும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம்.

அந்த சிறிதுநேர பேச்சில் பிள்ளை என்னுடைய வங்கி கிளை திறக்கப்பட்டதுமே ‘ஒரு மூனு பஸ்சுக்கு கடன் தரணும் சார்’ என்ற வேண்டுகோளை (ஏன் Order என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆரை ஏற்பாடு செய்வதென்றால் சும்மாவா என்பது போலிருந்தது அவருடைய பார்வை) முன் வைத்தார். ‘அதெல்லாம் சார் செய்திருவார். நீங்க நம்ம தலைவரோட டேட் வாங்கி குடுங்க’ என்று சேட்டும் மறுமொழிய.. ‘பிடிச்சிதுரா சனியன்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அசடு வழிந்தேன் ஒன்றும் சொல்லாமல்.

‘சேட். டேட் வாங்கிக் குடுக்கறது என் பொறுப்பு. அதே போல நான் கேட்டதை முடிச்சி குடுக்கற வேலை உங்களோடதும் இந்த சாரோடதும் பொறுப்பு.(அதுவரை ‘ரொம்ப சின்னவராயிருக்காரே’ என கேலியுடன் பார்த்தவர் சட்டென்று ‘சார்’ என குறிப்பிட்டதை நான் கவனிக்க தவறவில்லை)

சேட் என்னைப் பார்த்து சைகை செய்ய நானும் சரியென்று ஒப்புக்கு தலையசைத்து வைத்தேன். என்னையுமறியாமல் கலைஞரிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அழைத்துச் சென்ற ‘செட்டியாரை’ நினைத்துக்கொண்டேன்.

ரெண்டு நாள் என்றவர் இரண்டு வாரமாகியும் யாதொரு தகவலும் தராதிருக்கவே தொலையட்டும் தொல்லை என்ற நினைப்பில் சென்னை மாவட்ட ஆட்சியரை அழைக்கலாமா என்ற எண்ணத்தில் சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம்..

சுமார் நான்கு வாரங்களுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் சேட் என்னை தொலைப்பேசியில் அழைத்து ‘சார்.. நாளைக்கி காலைல ஏழு, ஏழரை மணிக்கி State Guest Houseக்கு மேனேஜரை கூட்டிக்கிட்டு வந்துருங்க.. மினிஸ்டர் Secretariatடுக்கு போறதுக்குள்ள புடிச்சிரலாம்னு பிள்ளை சொல்றார், வர்றீங்களா’ என நானும் மேனேஜரும் செல்வதென தீர்மானித்து அடுத்த நாள் காலையிலேயே எழுந்து Guest House வாயிலை அடைந்தோம். சேட்டும் பிள்ளையும் அரை மணிகழித்து அவரவர் கார்களில் வந்தனர்.

பிள்ளை கூறிய அமைச்சர் மிகவும் இளைஞராயிருந்தார் (பெயர் வேண்டாம். அவர் இப்போதும் அரசியலில் இருக்கிறார். எதிர்கட்சிகளில் ஒன்றில். பதவியில் இல்லையென்றாலும் அவர் இப்போதும் சற்று வல்லமையுள்ளவர். பெரிய பந்தா பேர்வழி. நான் அவரை முதன் முதலில் சந்தித்தபோது வேட்டி, கைவைத்த பனியனில் - அங்கும் இங்கும் ஓட்டைகள் - கையில் அன்றைய தமிழ் செய்தித்தாளுடன் ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார். இப்போது அவருக்கு மூன்று நான்கு ரைஸ் மில் என கோடி கணக்கில் சொத்து!) அப்போதுதான் முதன் முதலாய் தேர்தலில் நின்று ஜெயித்து அமைச்சராகியிருந்தார்.

பிள்ளை மிகவும் சர்வசாதாரணமாக அவரைப் பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் இவரைப் பார்த்த பார்வையில் ‘யோவ் என்ன ரொம்பத்தான் பண்றே..’ என்பது தெளிவாய் தெரிந்தது. அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னையும் என்னுடைய கிளை மேலாளரையும் பார்த்து, ‘சார் நீங்க நினைக்கறா மாதிரி தலைவரை இந்த மாதிரி பங்ஷனுக்கெல்லாம் கூப்டுற முடியாது.. இருந்தாலும் முயற்சி பண்றேன்.. நீங்க ரெண்டு வாரம் கழிச்சி என் பி.ஏ.வை கூப்டு ஞாபகம் படுத்துங்க. என்னால என்ன முடியுமோ செய்யறேன். ஆனா ஒன்னு. இப்பவே சொல்லிடறேன்.. தலைவர் வர்ற அன்னைக்கி சாமான்யபட்டவங்களுக்கு அவர் கையால ஏதாச்சும் லோன், கீன் உங்க பேங்க்லருந்து குடுக்கணும். எவ்வளவு குடுக்கணும் எத்தனை பேருக்கு குடுக்கணும்னு நம்ம லோக்கல் வட்ட செயலாளர் உங்க கிட்ட சொல்லுவார்.. என்ன சொல்றீங்க?’ என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்.

அவர் வேகத்துடன் பேசிய தமிழ் சரியாய் புரியாமல் என்னுடன் வந்த மேலாளார் (கேரளாவைச் சேர்ந்தவர்) எல்லாவற்றுக்கும் முகம் நிறைய சிரிப்புடன் ‘நோ ப்ராப்ளம் சார், நோ ப்ராப்ளம் சார்.’ என ஆமோதிக்க நான் சங்கடத்துடன் நெளிந்தேன்.

பிள்ளையும் அவருடைய அவமதிப்பை பொருட்படுத்தாமல் அசட்டு சிரிப்புடன் ‘சார் (என்னைத்தான் சொல்கிறார்!) அதெல்லாம் செஞ்சிருவார் தம்பி (இது அமைச்சரை!). நீங்க கவலைப்படாதீங்க..’என வழிமொழிந்தார்..

அமைச்சர் பெரிய பந்தாவுடன் எழுந்து நிற்க (அதாவது நீங்க போகலாம் என்ற தோரணையில்) நாங்களும் எழுந்து பேருக்கு சிறிதாய் புன்னகைத்துவிட்டு வெளியே வந்தோம்.

பிள்ளை எங்களுடன் வெளியே வராமல் ‘சேட் நான் அமைச்சருடன் சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது நீங்க சாரைக் கூப்டுக்கிட்டு போங்க’ எங்களை வழியனுப்பி வைத்தாலும் அடுத்த சில நொடிகளிலேயே அவரும் வெளியே வந்ததிலிருந்தே அமைச்சரிடம் அவருக்கிருந்த செல்வாக்கு எனக்கு புரிந்தது!

இருப்பினும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் (சூரியனில் வரும் கவுண்டமனியை நினைவுக்கு வருகிறது) வெளியே வந்து சேட்டை தனியே அழைத்துக்கொண்டு போய் ‘.....யா பய. போஸ்ட்டுக்கு வந்ததுமே பழசையயெல்லாம் மறந்துடறானுங்க... சிங்கிள் டீக்கு என் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில வந்து கிடப்பான் சேட் இவன்.. வச்சிக்கறேன் இவன..’ என்று அடிக்குரலில் புலம்பிவிட்டு (அவருடைய அடிக்குரலே பத்தடி தூரம் வரைக் கேட்டது. தொலைப்பேசியில் அவர் பேசுவதைக் கேட்பதே ஒரு வேடிக்கை. கை, கால், உடம்பு என எல்லாவற்றையும் சேர்த்து ஆட்டிக்கொண்டு தொண்டைக் கிழிய கத்துவார். எதிர்முனையில் இருப்பவர் ஒலிவாங்கியை குறைந்தபட்சம் ஒரு அடியாவது தள்ளி பிடிக்கவேண்டும்) என்னைப் பார்த்து, ‘சார்.. மினிஸ்டர்கிட்ட தம்பி நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்னு சொல்லிட்டு வந்தேன். நீங்க மானேஜர கூட்டிக்கிட்டு தைரியமா போங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். என்ன சேட், சொல்லுங்க சார் கிட்ட’ என்று அசடு வழிந்துவிட்டு.. அவருடைய காரில் ஏறி செல்ல.. நானும், மானேஜரும், சேட்டும் ஒரு காரில் ஏறி திரும்பி வந்தோம்..

சங்கடங்கள் தொடரும்..

24 கருத்துகள்:

  1. பெயரில்லா11:51 AM

    I think that I am addicted to this MGR series. Pls post the next one asap

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:51 AM

    அரசியல்வாதிகளை நாடினாலே இப்படித்தான் ஜோசப் சார்.

    அதுவும் பிள்ளையைப் போன்ற இடைத்தரகர்கள் வழியாக போனால் கேட்கவே வேண்டாம்.

    சரி, பிள்ளைக்கு லோன் குடுத்தீங்களா இல்லையா? தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலாயிருக்கு.

    கட கடன்னு விஷயத்துக்கு வாங்க..

    பதிலளிநீக்கு
  3. MGR ஒரு கவர்ச்சியான மனிதர்தான். அவரை முதன் முதலில் நெருக்கத்தில் பார்த்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

    இத்தொடரின் முடிவில் பாருங்கள் அவருடை சுயரூபம் தெரியும்.

    அப்புறம் சே இவ்வளவுதானா என்றாகிவிடும்.

    அடக்கித்தான் வாசிக்க போறேன். இல்லாட்டி தர்ம அடியை யார் வாங்குறது?

    பதிலளிநீக்கு
  4. விஷயத்துக்கு வந்திடறேன், வந்திடறேன்.

    கொஞ்சம் பொறுமையாயிருங்க..
    எல்லாத்தயும் சொல்லிறணும் இல்ல?

    அப்பத்தான் சுவாரசியமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா12:01 PM

    சார் நீங்க சொல்ற மினிஸ்டர் யார்னு லேசா ஒரு கோடு போட்டு காட்டுங்களேன்.

    மூனு ரைஸ் மில்லா.. அதுவும் கிழிஞ்ச பனியன் போட்டுக்கிட்டிருந்த ஆளு!

    ரைஸ் மில்லுன்னா தஞ்சாவூர சேர்ந்தவரா?

    சார் தலைய வெடிக்கிது..

    லேசா ஒரு Hint குடுங்களேன்..

    பதிலளிநீக்கு
  6. ஏன் சார் வம்பு?

    எனக்கு இன்னும் நாலரை வருஷ சர்வீஸ் இருக்கு.

    ஒரே ஒரு ஹின்ட். இப்ப ரீசண்டா அவரு தன் பெயரில் சிறு மாற்றம் செய்துக்கொண்டார்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா12:31 PM

    enna sir.. Raja K* ya... nenachean :-)

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா12:38 PM

    "Namaarkkum kudiyallom... Namanai Anjom" avara?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12:39 PM

    naavukku arasa(r)- aa?

    பதிலளிநீக்கு
  10. உங்களின் சம்பவங்களை விவரிக்கும் நடையே அழகு. ஆனாலும் மிகவும் ஆபத்தான விதயங்கள்.கவனம் தேவை.சேஷன் அண்ணாவைப் பற்றி கூறி மாட்டிக் கொண்டது போல ஏதாவது சொல்லி மாட்டிக்காதீங்க :)

    பதிலளிநீக்கு
  11. ஆனாலும் மிகவும் ஆபத்தான விதயங்கள்.கவனம் தேவை//

    உங்க Concernக்கு ரொம்ப நன்றி மணியன்!

    மக்கள் திலகம் அவர்கள் தமிழ்நாட்டின் Icon என்பது எனக்கு தெரியும்.

    I am not the right person to judge him in public.

    I'll take care when I write about him.

    பதிலளிநீக்கு
  12. சுவையான விஷயங்கள்.

    பிறர் சொன்னது போலவே கவனமாகவே எழுதுங்கள். அடிதடிக்குப் பயந்து அல்ல. ஆனால் எழுத்து தர்மத்துக்கு நியாயமாக... அதாவது தேவையற்ற லைபல் எதுவும் இருக்கக்கூடாது. ருசுவாகாத குற்றங்களைப் பற்றி எழுதும்போது பெயர்களை, அதுவும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களின் பெயர்களை நேரடியாக உபயோகிக்காமல் எழுதவும். அதே நேரம் அவர் இன்னார்தான் என்று கண்டுபிடிக்கும்படியாக எழுதுவதும் சரியல்ல. கிசுகிசு என்றாகி விடும். "எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் ஓர் அமைச்சர்" என்று மட்டும் விட்டாலேயே போதும்.

    பதிலளிநீக்கு
  13. ஆனால் இறந்தவர்களைப் பற்றி எழுதும்போது கொஞ்சம் தைரியமாக, பெயர்களை வெளியே விடலாம். ஆனால் அங்கும் வெறும் யூகத்தில் பேரால் குற்றம் சாட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் கூறியது மிகவும் சரி,


    இத்தொடரின் நோக்கம் என்னுடைய அனுபவங்களை எழுவது மட்டுமே.

    மற்றவருடைய நடவடிக்கைகளை, குறிப்பாக பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களை, விமர்சிப்பதல்ல.

    யாராலும் எப்போதும் ஊகிக்க இயலாத வகையிலேயே என் வாழ்க்கையில் சந்தித்தவர்களைப் பற்றி எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. உங்களுக்கு ஈமெய்ல பண்றதுல ஒன்னும் பிரச்சினையில்லை ராஜ்.

    ஆனா அவருக்கு உங்கள விட பத்து பதினஞ்சு வயசு ஜாஸ்தியாயிருக்கும். பரவால்லையா?

    நடிகை பிரபலம்தான் ஆனால் திரையில் அல்ல!

    நீங்களே ஊகிச்சுக்குங்க.

    நீங்க சரியா ஊகிச்சி சொன்னாலும் நான் தப்புன்னுதான் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  16. it is very easy to guess the personalities mentioned by you...i feel you should restrain yourself..donot get carried away by requests by anonymous people..you may land in trouble..

    பதிலளிநீக்கு
  17. you yourself has mentioned that you have around four year service left..take care..

    பதிலளிநீக்கு
  18. Thank you for your concern Muthu.

    Is it that easy to guess the personalities?

    I dont think so.

    What you have in mind need not the people I refer to.

    Anyway thankyou for your advice.

    I'll keep it in mind.

    There are so much that I have left out for fear of backlash.

    பதிலளிநீக்கு
  19. What you have in mind need not the people I refer to.//

    It should read as What you have in mind need not be>the people I refer to.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் அய்யா,

    நடந்ததை அப்படியே கொஞ்சம்கூட கற்பனை கலக்காமல் ஆனால் படிக்க சுவை கூட்டி எழுதுங்கள். மிகவும் விருவிருப்பாகச் செல்கிறது பதிவு.

    பதிலளிநீக்கு
  21. சம்பவங்கள் யாவும் உண்மையே.

    வசனங்களை என்னுடைய நினைவில் நின்றவரை எழுதிகிறேன். அவ்வளவே..

    என்னால் இயன்றவரை சுவையை கூட்டுகிறேன்.

    நன்றி மூர்த்தி.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா8:14 PM

    பத்திரிகைகளில் வெளியாகும் தொடர்களைப்போல இருக்கிறது உங்கள்
    அனுபவங்கள்.அடுத்த பதிவை விரைவில்
    எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி கரிகாலன்.

    அடுத்த பதிவு நாளை - 12.11.05

    பதிலளிநீக்கு