எம்.ஜி.ஆருடன் சந்திப்பு - இறுதிப் பகுதி
என்னுடைய புதிய கிளைக்கு முதல் வர்த்தக நாளன்றே என்னுடைய வங்கித்தலைவர் மரித்த துக்க நாளாகிப் போனது என்னுடைய பெரிய துரதிர்ஷ்டம்.
குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் உறங்க முடியாமல் அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றபோது வேறொரு பிரச்சினை காத்திருந்தது!
துவக்க நாளன்று கட்சித்தொண்டர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினரின் துணையோடு வெளியேற்றினேன் என்று சொன்னேனல்லவா? அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு நான் வங்கியினுள் நுழைந்தவுடனே வட்ட செயலாளர் தலைமையில் சுமார் முப்பது தொண்டர்கள் கொண்ட படை அலுவலகத்தை முற்றுகை செய்தது.
எனக்கு உதவி செய்வதற்காக மத்திய கிளையிலிருந்து அனுப்பப்பட்டிருந்தத உதவி மேலாளர் இக்கூட்டத்தைக் கண்டு மிரண்டு போய் என்னிடம் சொல்லாமலே அலுவலகத்தை விட்டு வெளியே போய் விழாவுக்கு வந்திருந்த காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டு விஷயத்தை விளக்க அவரும் உடனே இரு காவலாளர்களை அலுவலகத்திற்கு அனுப்பினார்.
இந்த விஷயம் காவலாளர்கள் இருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து தொண்டர்களை விசாரிக்க துவங்கியபோதுதான் எனக்கு தெரிந்தது. அன்று மட்டும் நான் உடனே தலையிட்டு விஷயத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வராதிருந்தால் விபரீதமாக போயிருக்கும். ஆத்திரத்தில் தொண்டர்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்.
நான் காவலாளர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தேன். பிறகு வட்ட செயலாளரை அறைக்குள் அழைத்து அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு ஐந்து பேருக்கு அன்றே - வங்கியின் நடைமுறைக்கு முற்றிலும் முரண்பட்டு - கடன் வழங்கினேன். பிறகு யார் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என அவர் முன்பே கொடுத்திருந்த பட்டியலை அவர்முன் வைத்து அடுத்து வரும் வாரத்திலிருந்து வாரத்திற்கு 25 பேர் வீதம் நான்கு வாரத்துக்குள் அனைவருக்கும் கடன் கொடுப்பதாய் வாக்குறுதி கொடுத்தேன். தனக்கு வேண்டப்பட்டவருக்கு கடன் கிடைத்த திருப்தியில் செயலாளர் உடன் வந்திருந்த கூட்டத்தை அழைத்துக்கொண்டு வெளியேறிய பிறகுதான் என்னால் நிம்மதியாய் என்னுடைய அலுவலை கவனிக்க முடிந்தது. ஆனால் என்னுடைய செயல் என்னுடைய மத்திய கிளை மேலாளர் வழியாக தலைமை அலுவலகத்துக்கு சென்று எனக்கு பிரச்சினையை ஏற்படுத்தியது வேறு விஷயம்.
கடன் கொடுக்கப் பட்டவர்களுள் பலரும் எந்த தொழிலும் செய்யாதவர்கள் மட்டுமல்ல. எந்த தொழிலும் செய்ய தகுதியில்லாதவர்களாயிருந்தார்கள் என்பதுதான் உண்மை. அடுத்திருந்த காய்கறி மார்க்கெட்டில் சிறு வியாபாரம் செய்துவந்த ஒருசில பெண்களைத்தவிர பெரும்பாலானோனர் செயலாளரின் கைத்தடிகள் என்பதும் உண்மை.
அதில் ஒரு பெண்மனி, கடன் பெற்ற மூன்றாம் நாள் வந்து 'ஐயா அந்த படுபாவி (செயலாளரைத்தான் சொல்கிறார்) நீங்க கொடுத்த லோன்ல பாதிய பிடிங்கிக்கிட்டான்யா.' என்று கண்ணீரோடு நின்றார்.
ஆனால் என்ன செய்ய? வங்கிக்கு கிடைத்த விளம்பரத்தின் விலை என்று நினைத்துக்கொண்டு மீதமிருந்த கடன் தொகையையும் பட்டுவாடா செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.
இதுதான் இந்நாட்டின் தலைவிதி. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் எல்லா நலத்திட்டங்களுமே உரியவரை சென்றடைவதில்லை. இடைத்தரகர்களாய் செயல்படும் அரசியல்வாதிகள் - எல்லோருமல்ல, பெரும்பாலோனோர் - கடன்/ உதவி தொகைகளை சூரையாடிவிடுகின்றனர்.
இந்நிலைக்கு மத்திய, மாநில ஆளுகிற எல்லா கட்சிகளுமே உடந்தை.
அன்றைய முதலமைச்சரை காண அவருடைய ஆற்காடுசாலை அலுவலகத்துக்கு நானும் என்னுடைய மத்திய கிளை மேலாளரும் பலமுறை சென்றோம் என்று என்னுடைய முந்தைய பதிவுகளில் கூறியிருந்தேன். ஒருமுறைகூட அவரைக் காண வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால்தான் அவருடைய அமைச்சர்கள் இருவரை அணுகவேண்டியிருந்தது.
ஆற்காடுசாலை அலுவலகத்தில் ம.தி. பெரும்பாலான நாட்களில் இரவு வெகு நேரம் வரை இருப்பார்.
கட்சி தொண்டர்கள், பிரபல தொழிலதிபர்கள், சினிமா நடிக, நடிகைகள், அரசு மற்றும் எங்களைப் போன்ற தனியார்துறை அதிகாரிகள் என பலரும் பல்வேறு காரணங்களுக்காக அவரை காண வருவது வழக்கம். அவரைக் காண்பதில் நடிக, நடிகைகளுக்கே முன்னுரிமை தரப்பட்டது!
ஒரு நாள்.
ஒரு ஏழை கைம்பெண் கையில் ஒரு துணிப்பையுடனும், விண்ணப்ப படிவத்துடன் - மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் - யார் யாரையோ பார்த்து ஒன்றும் பலனளிக்காமல் தன் கண்கண்ட தெய்வம், பொன்மன செம்மலை கண்டால் தன் வாழ்வில் ஒளி கிடைக்கும் என்ற நப்பாசையில் வந்திருந்தார்.
வாரக் கணக்கில் தினமும் வந்து இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் வரை காத்திருந்த எங்களைப் போன்றோருக்கே அப்பேறு கிடைக்காத பட்சத்தில் இவருக்கு எப்படி கிடைக்கும்? அது வேறு விஷயம்.
ஆனால் அவரை அங்கிருந்த அலுவலர்கள் அவரை நடத்திய விதம் இருக்கிறதே.. இப்போது நினைத்தாலும் மனதில் ஒருவிட சங்கடத்தை ஏற்படுத்துகிறது..
அவ்வலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்ட நியதிகளில் முதல் நியதி உங்களுடைய விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் அது ஆளும் கட்சியினரால் பரிந்துரைக்கப் பட்டிருக்க வேண்டும். அது அப்பெண்ணிடம் இல்லை..
அங்கிருந்தவர்களுள் ஒருவர் ‘போயி உங்கூருலருக்கற எங்க வட்ட செயலாளர் கிட்ட கையெழுத்து வாங்கிக்கினு வா..’என்று விரட்ட,
அப்பெண், ‘ஐயா.. கலெக்டரு கையெழுத்து போட்டுருக்காருங்க.. இதுக்கு மேல என்னய்யா வேணும்..?’ என்றார்.
ஒரு கேலிச்சிரிப்பு அறையெங்கும் பரவுகிறது. யாரோ ஒருத்தர்..’ ‘தோ பார்றா.. கெய்வி ரூல் பேசறத? நாங்க எங்கூரு கட்சி எம்.எல்.ஏ கிட்ட கையெழுத்து வாங்கிக்கினு வந்தே இங்க ஒன்னும் ஒப்பேற மாட்டேங்குது.. இதுல நீ வேற.. போவியா..’
‘ஐயா.. என் தெய்வத்த ஒரு தபா பாத்தா போறும்யா.. மவராசன் கண்டிப்பா செய்வாரு.. நீங்க கொஞ்சம் அவிரு கிட்ட சொல்லுங்களேன்..’ கெஞ்சுகிறார்.
அதிகாரி ஒருவர் வாயிற்காப்போனை அழைக்கிறார், ‘யோவ் இந்த அம்மாவை யார்யா உள்ற விட்டா.. புடிச்சி வெளிய தள்ளுய்யா..’
அந்த வயதான பெண் அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார்.. ‘ஐயாவ பாக்காம போமாட்டேன். அவரு கையால எவ்வளவு தர்மம் செய்திருக்கார்.. எனக்கு செய்யாம போமாட்டாரு.. நான் பாத்துட்டுதான் போவேன்.’
அவருடைய அழுகையை பொருட்படுத்தாமல் குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போய் வாயிலில் இறக்கி, சாரி, போட்டுவிடுகிறார்கள்.
அத்தோடு நின்று விடவில்லை.. அறையிலிருந்த அனைவரும் - பெரும்பாலோனோர் கட்சி தொண்டர்கள். அதில் ஒரு சில எம்.எல்.ஏக்களும் அடக்கம் - உரத்தகுரலில் சிரிக்கின்றனர்.
ம.தி.யின் படத்தில் வரும் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். அது ஆணவ சிரிப்பு..’ என்ற பாடல்தான் அப்போது நினைவுக்கு வந்தது..
இதுபோன்ற காட்சிகளைத்தான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கோலத்தில் நான் தொடர்ந்து சென்ற மூன்று நான்கு வாரங்களில் அங்கே காணமுடிந்தது. என்னுடன் பல சமயங்களிலும் வந்த என்னுடைய மேலாளருக்கு இதைக் காண மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அவர் சொன்னார்: 'கேரளத்தில் யார் வேணுமானாலும் முதலமைச்சரை அவருடைய அரசு அலுவலகத்திலோ அல்லது கட்சி அலுவலகத்திலே மிக எளிதாக சந்தித்துவிட முடியும். அதுமட்டுமல்ல. தமிழக அமைச்சர்கள் காட்டும் பந்தா கேரள அமைச்சர்களிடம் பார்க்கவே முடியாது.'
அது உண்மைதான். நான் கேரளத்தில், குறிப்பாக கொச்சியில் பல வருடங்கள் பணியாற்றிருக்கிறேன்.
அப்போது ஒரு நாள் கேரளத்தின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான Federal Bankன் நிர்வாக அலுவலகத்தை கொச்சியில் திறந்துவைக்க அப்போதைய கேரள முதல்வர் ஏ.கே. ஆண்டனி அவர்கள் வந்திருந்தார்கள். அவர் வந்ததும் போனதும் அக்கட்டிடத்தின் வெளியில் நின்றுக்கொண்டிருந்த யாருக்குமே தெரியவில்லை..
சாதாரண அம்பாசிடர் காரில் தனியாக சரியான நேரத்தில் வந்தார். அலுவலகத்தை திறந்துவைத்துவிட்டு ஒரு பத்து நிமிடம் உரையாற்றினார். வங்கியினர் வழங்கிய சிற்றுண்டியைக் கூட மறுத்துவிட்டு ஒரு சிறிய கப்பில் வழங்கப்பட்ட டீயில் ஒரு பகுதியை மட்டும் பேருக்கு உறிஞ்சிவிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் தான் வந்த வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார். போக்குவரத்து துளி நிமிடம் கூட நிறுத்தப்படவில்லை.. சாலையில் சென்று கொண்டிருந்தவரில் எவரும் முதலமைச்சர் வந்து சென்றதைக் கூட அறிந்திருக்கவில்லை!
வங்கியின் சேர்மன் வந்திறங்கியது Opel Austra! அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களில் மிகவும் பழையது முதல்வருடையத்தானிருக்கும்!
ஆனால் என்னுடைய கிளையை திறக்க முதல்வர் வந்திறங்கிய நேரத்திற்கு சுமார் பத்து நிமிடத்திற்கு முன்னரே வங்கி இருந்த சாலை முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது!
அடுத்தடுத்த மாநிலங்களுக்குள்தான் எத்தனை வித்தியாசம்.. வேறுபாடு!
அன்று சைக்கிளில் சென்றவர் இன்று சாண்ட்ரோவில்!!
என்னுடைய மேலாளர் அனுபவத்தில் நான் கடன் வழங்கி வெற்றி பெற்ற நிறுவனங்களுள் ஒன்றை பற்றி நாளைய பதிவில் எழுதலாம் என்றிருக்கிறேன்..
தொடரும்
அடுத்தடுத்த மாநிலங்களுக்குள்தான் எத்தனை வித்தியாசம்.. வேறுபாடு!//
பதிலளிநீக்குநீங்கள் கூறியது மிகவும் சரி சார்.
நானும் கேரளத்தில் பணி புரிந்திருக்கிறேன்.
உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏ.கே. ஆண்டனியின் மனைவி இன்றும் ஒரு பொதுவுடமை வங்கியில் கிளார்க்காக பணிபுரிகிறார்கள்!
தமிழ்நாட்டு அமைச்சர்கள் விஷயத்தில் ஒரு வங்கியையே வாங்கிவிடும் அளவுக்கு பணம் பார்த்துவிடுகிறார்கள்.
ம.தி.யின் படத்தில் வரும் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். அது ஆணவ சிரிப்பு..’ என்ற பாடல்தான் அப்போது நினைவுக்கு வந்தது..//
பதிலளிநீக்குசரியான சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமான பாடல் வரிகளை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்.
இதுதான் நிதர்சனமான உண்மை.
இதையறியாமல் நாம்தான் பாமரத்தனமாக பொ.ம செம்மல், கொடுத்து சிவந்த கரங்கள் என்றெல்லாம் பட்டங்கள் கொடுத்து கவுரவித்தோம்.
வெட்கக் கேடு.
உங்களுடைய இன்றைய பதிவும் சுவாரஸ்யமாய் இருக்கிறது சார்.
வாழ்த்துக்கள்.
அவரைக் காண்பதில் நடிக, நடிகைகளுக்கே முன்னுரிமை தரப்பட்டது!
பதிலளிநீக்குஇருக்காதா பின்னே..
அவரும் அந்த துறையிலிருந்து வந்தவர்தானே..
"இடைத்தரகர்களாய் செயல்படும் அரசியல்வாதிகள் - எல்லோருமல்ல, பெரும்பாலோனோர் - கடன்/ உதவி தொகைகளை சூரையாடிவிடுகின்றனர்."
பதிலளிநீக்குஅப்பட்டமான உண்மை.
எந்தவித பயமுமில்லாமல் மு.அ.வின் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை எழுதியதற்கு பாராட்டு.
பதிலளிநீக்குஅத்தகைய நிகழ்ச்சிகள் இப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்க கூடும்.
தி.மு.க காலத்தில் பணியமர்த்தப்பட்ட சாலை தொழிலாளர்களின் பரிதாப நிலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே.
I feel this is an important post which carries so many messages. No one care about the impact created by these type of "Helping Poor". I heard that there were some people who sit opposite to Secretriat for a whole day just to get Rs.10/- from C.M. If they had gone to do any work, they should have got atleast Rs.15/- per day. But, we can't say anything as Tamil Nadu is already immersed with "Ilavasam"s
பதிலளிநீக்குYou are absolutely correct Ramki.
பதிலளிநீக்குThanks for sharing your thoughts.
பின்னூட்டமிடும்போது அவரவர் சொந்த பெயரிலேயே இட்டால் எத்தனை நன்றாயிருக்கும்.
பதிலளிநீக்குஇதுவரை வந்த பின்னூட்டங்கள் எல்லாமே அர்த்தமுள்ளவை.. ஆனால் எல்லாம் Anonymouஆக ஆனதுதான் துரதிர்ஷ்டம்.
இருப்பினும் இவர்களுக்கெல்லாம் நன்றி.
நான் தொடர்கதைகளின் சஸ்பென்ஸ் கூட தாள பிடிக்காமல் புத்தகமாய் வெளிவரும் வரை காத்திருந்து மொத்தமாய் படிக்கும் சாதி. ஆனலும் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாமல் படிக்கும் சில தொடர்களும் உண்டு. அவற்றுள் ஒன்று . உங்களின் இந்த "திரும்பி பார்க்கிறேன்" பதிவுகள்.
பதிலளிநீக்குஉங்களின் தனிப்பட்ட வெறுப்புகளை வெளிக்காட்டாமல் அழகாய் கோடிட்டு காட்டி எழுதியிருக்கிறிர்கள். சுவையாய் எழுதுகிறிர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்,
விக்னேஷ்
நன்றி விக்னேஷ்.
பதிலளிநீக்குநம்ம ரஜினி ராம்கி சொன்னாப்ல இது ஒரு மிக அருமையான, முக்கியமான பதிவுதான்..
பதிலளிநீக்குஆனா பாருங்க.. பின்னூட்டங்களைத்தான் அதிகமாய் காணோம்.. அவங்கவளுக்கு நாட்டு நடப்பை விட எத்தனையோ முக்கியமாய் படுது..
என்ன செய்ய?
ஆனா உங்க தொடர டெய்லி படிச்சி டெய்லி பின்னூட்டம் போடறவங்கள்ல நானும் ஒருத்தன்.
பேர் போட்லைன்னு கவலைப்படாதீங்க.. அதுக்கு நெறய காரணம் இருக்கு..
போக போக புரிஞ்சிக்குவீங்க..
தொடர்ந்து எழுதுங்க..
வாழ்த்துக்கள்..
டி.பி.ஆர், மிக வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். இன்னமும் தமிழக கிராமப்புறத்தில் இந்த தலைவரைப் பற்றி இப்படி பேசினால் அடிதான்.
பதிலளிநீக்குமிகவும் விறுவிறுப்பாகப் போகிறது உங்கள் திரும்பிப் பார்த்தல்.
அண்ணாச்சி ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரதுக்கு எத்தன லட்சம்,ஏன் கோடி செலவு பண்றான்னு தெரியுமா உங்களுக்கு?
பதிலளிநீக்குபதவிக்கு வந்த பின்ன ஏழை பாளைக்கு சர்வீஸ் பண்ணிக்கிட்டிருந்தா போட்ட பணத்தைஎப்படி எடுக்கறது..
அதுக்குத்தான் யாருக்கு என்ன பண்ணா பணம் வருமோ அத செய்துக்கிட்டிருக்காங்க..
விடுங்க.. இந்த மாதிரி ஆளுங்க இருந்தாலும் நாடு வளர்ந்துக்கிட்டுத்தான் இருக்கும்.
நீங்க மேல எழுதுக்கிட்டே போங்க..
நாங்க படிக்கறோம்ல?
நன்றி சுதர்சன்..
பதிலளிநீக்குகிராமப் புறமென்ன நகரங்களிலும்தான்..
அதான் தெருவுக்குத் தெரு ரிக்ஷா ஸ்டான்ட் இருக்கே..
ஆட்டோன்னா ரஜினி.. ரிக்ஷான்னா.. அவருதான்.
அநா..
பதிலளிநீக்குநீங்க சொல்றது சரிதான்..
டாக்டர்கள் போட்ட பணத்தை எடுக்கறதுக்கு புதுசா டெஸ்ட்டுகள பண்ண சொல்லி கொள்ளை அடிக்கறதில்லையா..
அதுபோலத்தான் அரசியல்வாதியும். தப்பேயில்லதான்.. ஆனா சாத்தானா இருந்துகிட்டு சம்மனுசு வேஷத்த போடாதேன்னுதான் சொல்ல வரேன்.
அதிக விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் செல்கிறது தொடர்.
பதிலளிநீக்குநன்றி மூர்த்தி
பதிலளிநீக்குஜோசப் சார்,
பதிலளிநீக்குமிக அருமை .உங்கள் வெளிப்படையான இந்த தொடர் மிக அவசியமான ஒன்று .நன்றி!
நல்ல பதிவு. நானும் கேரளாவில் பணி புரிந்திருக்கிறேன். காங்கிரஸ்காரர்கள்தான் கொஞ்சமாவது பந்தா(கருணாகரன் கோஷ்டி). கம்யூனிஸ்ட் தோழர்கள் மிகவும் எளிமை. நம்பூதிபாடு,நாயனார், அச்சுதமேனன் போன்ற வர்களை தமிழ்நாட்டில் காணமுடியுமா?
பதிலளிநீக்குநன்றி ஜோ.
பதிலளிநீக்குநீங்கள் கூறியது சரிதான் மணியன்.
காங்கிரஸ்காரர்களில் ஏ.கே. அந்தோணி தனிப்பட்டவர்.. மிகவும் எளிமையானவர். அதிகம் பந்தா கருணாகரனும் அவ்ருடைய இரு பிள்ளைகளும்.
நீங்கள் கூறியதுபோல் இடது சாரி அரசியல்வாதிகள் மிக மிக எளிமையானவர்கள். அவர்களைப் போன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும்கூட காண முடியாது..
மேற்கண்ட பின்னூட்டத்தில் "தற்கால தமிழ்நாட்டில்" என்று சேர்த்து வாசிக்கவும். காமராஜரும் கக்கனும் வாழ்ந்த நாட்டில் இந்நிலை.
பதிலளிநீக்குமணியன்,
பதிலளிநீக்குநீங்கள் கக்கன் என்றதும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது..
அவருடைய - பக்தவத்சலம் அமைச்சரவை என்று நினைக்கிறேன் - பதவிகாலம் முடிந்த நேரத்தில் அவருடைய கட்சி பணிக்காக ஒரு புத்தம் புது Fiat Carஐ அவருடைய தொகுதி மக்கள் அன்பளிப்பாக கொடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அதாவது ஐந்தாண்டுகாலம் பதவியிலிருந்தும் சொந்த வீடு, கார் கூட சொந்தமாய் வாங்கிக்கொள்ள வியலாத ஏமாளி மனிதர் அவர்!
ஸார். உங்களின் இந்த பதிவு கனத்த மெளனத்தை ஏற்படுத்தியது.
பதிலளிநீக்குஏற்கெனவே அறிந்த தகவல்கள் - அநியாயங்கள் தான். ஆனாலும் ஒவ்வொரு முறை இச்செய்திகளைக் கேட்க நேரிடும்போதும் உள்ளம் கொந்தளிப்பு அடைகிறது என்பதே உண்மை.
அறிவிலிகள் கைகளில் ஆட்சி இருந்தால் துக்ளக் ஆட்சிதான் நடக்கும். ஆனால் இவர்கள் கோமாளிகளல்ல. விவரமான கிரிமினல்கள். மோசமான மனநிலை படைத்தவர்கள். பணம் தவிர குறுக்கு வழிகள் தவிர வேறு எதையும் சிந்திக்கும் திறனற்றவர்கள். அதுதான் பயமாயிருக்கிறது.
அற்பர்களைக் கண்டால் தூர விலகு என்று சொல்லிச் சொல்லியே படித்தவர்கள் விலகியாகிவிட்டது. 'அறிவாளிகளை /அறிஞர்களை/நல்லவர்களைக் கண்டால் தூர விலகு' என்று இந்த அற்பர்கள் பயப்படும் காலம் எப்போது வருகிறதோ அப்போதுதான் நாட்டுக்கு மக்களுக்கு விமோசனம். தீயதைப் பார்த்து நல்லன பயப்படும் காலம் போய் நல்லனவற்றைப் பார்த்து தீயன அஞ்சி காணாமல் போக வேண்டும்.
கேரளாவுக்கு நிறைய தடவை அலுவல் நிமித்தம் போயிருக்கிறேன். மீட்டர் போட்டு ஏழே முக்கால் காட்டி, பத்து ரூபாய் கொடுத்ததும் மீதம் இரண்டேகால் ரூபாயை சில்லறை குறையாமல் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை ஏராளம் சந்தித்திருக்கிறேன்.
எளிய நேர்மையான தலைவர்கள் இருக்கும்போது மக்களும் அப்படித்தானே இருப்பார்கள். அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே.
நன்றி சுந்தர்.
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டமே ஒரு தனி பதிவுபோல் இருக்கிறது.
கேரளத்தில் பணி புரிந்துக்கொண்டிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் என் மனைவி, பிள்ளைகளை பார்க்க சென்னை வருவேன். சென்ட்ரலில் வந்து இறங்கியவுடனே ஆட்டோகாரர்களின் தொல்லை துவங்கிவிடும்.எப்போதும் கேட்கும் ஒரே பல்லவி சில்லர இல்ல சார்.
திரும்பி சென்று கொச்சி நிலையத்தில் இறங்கி நான் தங்கியிருந்த இடத்திற்கு சென்றும் பதினைந்து ரூபாய் எடுத்துக்கொடுத்துவிட்டு இறங்கி நடந்தால் சாரே சில்லர வேண்டே என்று அழைத்து மீதி 1.50 ரூபாயைக் கொடுத்துவிட்டு செல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள்!
இரண்டு மாநிலங்களிலுமுள்ள அரசியல்வாதிகள் இடையில் மட்டுமல்ல குடிமக்கள் இடையிலும் முக்கியமாக Civic Sense, Social Awareness, Cleanliness போன்றவற்றில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
நன்றி ராஜ்.
பதிலளிநீக்குஉங்களுடைய பின்னூட்டத்தில் நகைச்சுவை கலந்திருந்தாலும் பின்னால் ஒரு நியாயமான வேதனை, ஒரு அங்ககலாய்ப்பு இருப்பதை காண முடிகிறது..
எல்லா துறையிலும் இருப்பதுபோல் வங்கித்துறையிலும் ஊழல் இருக்கத்தான் செய்கிறது..
என்ன செய்ய?
நல்ல அரசியல்வாதிகளைப் பற்றி இங்கு விவாதித்ததால் சொல்கிறேன் .தமிழகத்திலும் அத்தகைய ஒரு அருமையான மனிதர் இருக்கிறார் .நீண்ட அரசியல் வாழ்வுக்கும் எளிமைக்கும் உதாரணமான கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு .சமீபத்தில் அவரது 80 -வது வயது நிறைவை ஒட்டி ,கட்சி நிதி வசூலித்து 1 கோடி ரூபாயும் ஒரு காரும் கொடுத்தார்கள் .மிகுந்த வற்புறுத்தலுக்காக காரை பெற்றுக்கொண்ட அவர் ,1 கோடி ருபாயை கட்சிக்கே கொடுத்து விட்டார் .சோ சொன்னது போல உண்மையிலேயே இந்த நல்லகண்ணு மிக மிக நல்ல கண்ணு!
பதிலளிநீக்குநீங்கள் கூறுவது சரிதான் ஜோ.
பதிலளிநீக்குநல்லக்கண்ணு இன்னொரு கக்கன்.
ஆனால் ஒன்று.. நல்லக்கண்ணு இதுவரை எந்த அரசு பதவியையும் வகிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
சரியா?
சரி தான்.ஆனால் அரசு பதவியில் இருந்திருந்தாலும் நல்லக்கண்ணு நல்ல கண்ணாகவே இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.
பதிலளிநீக்குDear Joe,
பதிலளிநீக்குI agree. அப்படித்தான் இருந்திருப்பார்.
//இதுதான் இந்நாட்டின் தலைவிதி. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் எல்லா நலத்திட்டங்களுமே உரியவரை சென்றடைவதில்லை. இடைத்தரகர்களாய் செயல்படும் அரசியல்வாதிகள் - எல்லோருமல்ல, பெரும்பாலோனோர் - கடன்/ உதவி தொகைகளை சூரையாடிவிடுகின்றனர். //
பதிலளிநீக்குஅப்படியா, அதுக்கு ஏதாவது பண்ணீங்களா? அன்னிக்கு பண்ணலன்னாலும், இன்னைக்கு?
சாரே, நீங்க ஒரு பாட்டு பாடுவீங்களாம் இங்கே
பதிலளிநீக்கு