"Gathering information about the case is one of the major tasks performed by criminal defense lawyer. In some cases, he also hires investigators for collecting evidences and proving his client's innocence."
"Defense lawyers are ethically bound to represent all clients even those they know are guilty. Here the concept of actual guilt and legal guilt is relevant." - Law Journal (March, 2008 issue)
******
'கரெக்ட் பாஸ்...' என்றான் வசந்த் மகிழ்ச்சியுடன். 'எப்படி நா அத மிஸ் பண்ணேன்? சூப்பர் பாஸ்.'
ஆனால் வசந்தின் பாராட்டை ரசிக்கும் மனநிலையில் ராஜசேகர் இல்லை. மாதவியை அன்று மாலை அவன் அழைத்தபோது தொலைபேசி டெம்பரரிலி அவுட் ஆஃப் சர்வீஸ் என்று வந்ததே? அஞ்சி மணிக்கு ரிப்பேரா இருந்த ஃபோன் எப்படி ஒரு மணி நேரத்துக்கப்புறம்....? நாம அங்கருந்து கிளம்புனப்புறம் கோபாலோட ஃபோன மாதவி அட்டென்ட் பண்ணியிருக்கிறாள்னா.....அப்போ நாம தள்ளிவிட்டதால அவ சாகலையா?
அப்பாடா என்று இருந்தது அவனுக்கு!
'என்ன பாஸ் திடீர்னு சைலன்ட்டாய்ட்டீங்க?'
ராஜசேகர் சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தான். 'எ.. என்ன கேட்டே?'
'என்ன பாஸ்... மறுபடியும் ஏதோ ஃப்ளாஷ்பேக் மாதிரி இருக்கு?'
ராஜசேகர் இல்லை என்று தலையை அசைத்தான். 'அதில்லடா... போலீசோட ஸ்டேட்ன்மென்ட் படி பார்த்தா மாதவியோட மரணம் சாயந்தரம் ஏழுலருந்து எட்டுக்குள்ள நடந்துருக்கணும்...'
'ஆமா...'
'இந்த லிஸ்ட் பிரகாரம் 6.25க்கு அவங்க உயிரோட இருந்துருக்காங்க.'
'ஆமா பாஸ்.'
'கோபால் மாதவி வீட்லருந்து ஆறு மணிக்கி இறங்கி போனத பாத்ததுக்கு அந்த பார்க்கிங் லாட் பையன் சொன்னான்னு போலீஸ் சொல்லுது.'
'ஆமா பாஸ்.'
'அப்போ, அவர் ஆறு மணிக்கி அங்கருந்து போனப்பவும் அந்தம்மாவ உயிரோடதான் இருந்துருக்கணும்.'
'இருக்கலாம்.'
'அப்படீன்னா அந்தம்மா எப்பத்தான் அடிபட்டு இருப்பாங்க? போறாததுக்கு கோபால மாதவி வீட்டு முன்னால வச்சி சாயந்தரம் ஏழு மணிக்கி பாத்ததா சாட்சி இருக்குன்னு வேற போலீஸ் சொல்றாங்க. இந்த டைமிங் கன்ஃப்யூஷன்லதான் என்னமோ இருக்கு... நீ என்ன சொல்றே?'
'ஒருவேளை நா மறுபடியும் அங்க வரேன்னு சொல்றதுக்காகத்தான் சாயந்தரம் 6.25க்கு ஃபோன் பண்ணாரோ என்னவோ?'
'ஆறு மணிக்கி பார்த்துட்டு போனவர் மறுபடியும் ஒரு மணி நேரத்துக்கப்புறம் போய் பாக்கணும்னா அதுக்கு ஏதாச்சும் வேலிட் ரீசன் இருக்கணும். என்ன சொல்றே?'
'ஆமா பாஸ். அப்படி என்ன தலைபோற விஷயம்னு கோபாலத்தான் கேக்கணும்.'
'கரெக்ட்... அவர் பெய்ல வந்ததும் கேக்க வேண்டிய முதல் கேள்வி இதுதான்....நோட் பண்ணிக்க.'
'சரி... இரு மத்த கால்கள பாப்பம்.' என்றவாறு ராஜசேகர் பட்டியலில் மீதமிருந்த கால் விவரங்களை உரக்க படித்தான்.
18.15: கண்ஷ்யாம், பெரியமேடு சென்னை 3
18.20: அட்வகேட் மகாதேவன் மாம்பலம்
'அடுத்த கால்... ஏதோ நார்த் இன்டியன் பேர் மாதிரி இருக்கு. அதையும் கோபால் ஆபீஸ்ல கேட்டுப் பார்.'
'சரி பாஸ், ஏற்கனவே நானே இந்த நம்பரையும் பேரையும் நோட் பண்ணி வச்சிருக்கேன்.'
'இந்த கால்ஸ்ல கடைசியா இருக்கற நம்பர் கோபாலோட ஃபேமிலி லாயரோடது. அத நா பாத்துக்கறேன்.'
வசந்த் எழுந்து நின்றான். 'வேற ஒன்னும் இல்லன்னா நா கிளம்பறேன் பாஸ்.'
'சரி நீ சொன்ன தேதிக்குள்ள இன்வெஸ்ட்டிகேஷன முடிச்சுட்டு சொல்லு.....'
'ஓக்கே பாஸ்' என்றவாறு வசந்த் எழுந்திருக்க 'ஒரு நிமிஷன் வசந்த்' என்றான் ராஜசேகர்.
'என்ன பாஸ்?'
ராஜசேகர் தன் முன்னால் இருந்த கால் லிஸ்ட்டை மீண்டும் ஒருமுறை ஆராயத் துவங்கினான்.
'டேய்.. இன்னொரு விஷயத்த கவனிச்சியா?'
'என்ன?' என்றவாறு வசந்த் மீண்டும் இருக்கையில் அமர்ந்து ராஜசேகரின் முன் விரிந்திருந்த பட்டியலைப் பார்த்தான்.
இந்த லிஸ்ட்ல மேஜரா இருக்கற கால்ஸ் மாதவியோட வீட்டு நம்பருக்குத்தான். ஆனா போன நாலஞ்சி நாளா, அதாவது மர்டர் நடந்த அன்னையிலருந்து பின்னோக்கி போனா ஏறக்குறைய நாலு நாள், இந்த ரெண்டு நம்பருக்கும் இடையில எந்த கான்வர்சேஷனும் நடந்தா மாதிரி தெரியல. ஆச்சரியமா இல்ல?'
வசந்த் பட்டியலை எடுத்து ஒருமுறை ஆராய்ந்தான். 'ஆமா பாஸ்..... எட்டாம் தேதியிலருந்து எந்த காலுமே மாதவியோட லைனுக்கு போவல.'
மாதவியின் வீட்டு தொலைபேசி நான்கைந்து நாட்களாகவே பழுதடைந்து இருந்தது ராஜசேகருக்கு தெரியும். இருந்தும் வேண்டுமென்றே 'இதுக்கு என்ன அர்த்தம்?' என்றான்.
'ஒருவேளை லவ்வர்ஸ் ஊடலோ என்னவோ?' என்று சிரித்தான் வசந்த்.
'விளையாட வசந்த்... பி சீரியஸ்.' என்றான் ராஜசேகர் எரிச்சலுடன். 'ஒருவேளை மாதவியோட ஃபோன் அவுட் ஆஃப் ஆர்டரா இருந்திருந்தா?'
'ஆமா பாஸ்... அப்படியும் இருக்கலாம்.... ஆனா எப்படி மர்டர் நடந்த அன்னைக்கி கோபால் கூப்டப்போ சரியாச்சி?'
'அதான் நானும் கேக்கறேன்.... இது எப்படின்னு கண்டுபுடிக்கணும்...'
'அது ஈசி பாஸ்...'
'எப்படி?' என்று வியந்தான் ராஜசேகர், 'அங்கயும் ஒனக்கு ஆள் இருக்கா?'
வசந்த் சிரித்தான். 'இல்ல பாஸ்... ஆனா என் கையிலருக்கற காந்தி நோட்டுக்கு எல்லாரையும் தெரியுமே?'
ராஜசேகரும் சிரித்தான். 'அப்ப நாளைக்கே விசாரிச்சி சொல்லு....'
'அப்படியென்ன அர்ஜன்ட் பாஸ்?'
'இருக்குடா.... மர்டர் நடந்த அன்னைக்கி சாயந்தரம் கோபால் ஃபோன் பண்றார்னா அவருக்கு அந்த ஃபோன் ஒர்க் பண்றது தெரிஞ்சிருக்குன்னு அர்த்தம். அதனால அவர் அங்க இருந்தப்பதான் BSNL ஆள் வந்து ரிப்பேர் பண்ணியிருக்கணும்....'
'அதனால என்ன பாஸ்?'
'டேய்.....ஒருவேளை BSNL ஆள் மர்டர் நடந்த அன்னைக்கி அங்க போயிருந்தா... அவன் அங்க எத்தன மணிக்கி போனான்னு கண்டுபிடிக்கணும்...அப்ப அங்க கோபால் இருந்தாரான்னும் தெரிஞ்சிக்கணும். அதனாலத்தான் சொல்றேன்... முடிஞ்சா இன்னைக்கே கண்டுபிடிக்க பார். என்ன சொல்றே?'
'சரி பாஸ்... அப்ப நா கிளம்பட்டுமா?'
'சரி... நாளைக்கே கூப்டு... BSNL ஆளுங்க யாரும் அங்க போகலைன்னாலும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணு.... சரியா?'
'ஓக்கே பாஸ்...' என்றவாறு வசந்த் வெளியேற ராஜசேகர் மீண்டும் அந்த பட்டியலை ஆராயத் துவங்கினான்.
போன ஒரு மாதத்தில் மாதவியின் வீட்டு தொலைபேசி எண் பல முறை அந்த பட்டியலில் இருந்ததை கவனித்தான். மேலும் ஒவ்வொரு அழைப்பின்போதும் அவர்கள் இருவரும் மணிக்கனக்கில் பேசியிருப்பதையும் பார்த்தபோது கோபாலுக்கும் மாதவிக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
அத்தகைய பெண் ஒருவரிடம் நாமும் இத்தனை நாள் மயங்கிப்போய் இருந்தோமே என்று நினைத்து வெட்கப்பட்டான்.
அந்த தகாத உறவிலிருந்து பலமுறை மீண்டு வந்துவிட வேண்டும் என்று அவன் நினைத்தாலும் அந்த உறுதி அவளுடைய மயக்கும் சிரிப்பைக் கண்டதுமே கரைந்துபோயிருந்ததை இப்போது எண்ணிப் பார்த்தபோது நாம் எந்த அளவுக்கு முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்ற கோபமும் எழுந்தது.
இந்த ரிலேசஷன்ஷிப் இப்படித்தான் முடியணும்னு இருந்துருக்கு போலருக்கு என்று நினைத்தான்...
யாருமில்லாத அவனுடைய அலுவலகத்தில் பழைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த ராஜசேகரை அவனுடைய செல்ஃபோன் எழுப்பியது.
அவன் ஹலோ என்பதற்கு முன்பே எதிர்முனையில் வசந்த் பேசத் துவங்கினான்.
'பாஸ் கோபால் ஆஃபீஸ் கிட்டருந்து பேசறேன்... இங்க போலீஸ் சேர்ச் (search) நடக்குது... இப்பத்தைக்கி ஆஃபீஸ்குள்ள போனா பேஜாராயிரும்... அப்புறமா பாத்துக்கலாம்.'
'அதுக்குள்ளவா? அந்த எஸ்.ஐ. பயங்கர ஃபாஸ்டா இருப்பார் போலருக்கு?' என்றான் ராஜசேகர்.
'ஆமா பாஸ்... ஆனா இதுவும் ஒருவகையில நல்லதுக்குத்தான்.
'எதுக்கு அப்படி சொல்றே?'
'சேர்ச்ல என்னத்தையெல்லாம் அள்ளிக்கிட்டு போனாங்கன்னு நாமளும் தெரிஞ்சிக்கலாமே?'
'ஓ! அதுவும் சரிதான்... சரி அப்புறமா பேசிட்டு சொல்லு, வச்சிடறேன்.'
இணைப்பைத் துண்டித்துவிட்டு எழுந்து அலுவலகத்தை பூட்டிக்கொண்டு கிளம்பினான்.
******
அடுத்த பத்து தினங்களுக்குள் கோபாலைப் பற்றிய விசாரணையை முடித்த வசந்த் ராஜசேகரை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான். நல்லவேளையாக அவன் முன்கூட்டியே தொலைபேசியில் தெரிவித்திருந்ததால் அவன் வரும் வேளையில் அலுவலகத்தில் யாரும், குறிப்பாக அவனுடைய குமாஸ்தா, இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிந்தது.
'என்ன வசந்த்... ரெடியாயிருச்சா?' என்றான் ராஜசேகர் அவன் வந்து அமர்ந்தவுடன்..
அவனுடைய குரலில் இருந்த அவசரம் வசந்தை வியப்படைய வைத்தது.
'என்ன பாஸ் ரொம்ப ஆங்க்ஷியசா இருக்கீங்க போலருக்கு?'
'அப்படியெல்லாம் இல்ல வசந்த்.... கோபால் இன்னும் கஸ்டடியிலதான் இருக்கார்.. ஒருவாரத்துல சார்ஜ் ஷீட் போலீஸ் ஃபைல் பண்ணிருவாங்கன்னு பார்த்தா அந்த தன்ராஜ் இன்வெஸ்ட்டிகேஷன இன்னும் முடிக்காம இழுத்தடிக்கிறான்... கோபாலுக்கு பின்னால நிறைய விஷயம் இருக்கறா மாதிரி தெரியுது.... அதான் கொஞ்சம் டென்ஷன்..'
வசந்த் சிரித்தான். 'இத படிங்க பாஸ்.. எல்லா டென்ஷனும் தீந்துரும்.'
ராஜசேகர் தன் முன்னால் வைக்கப்பட்ட அறிக்கையின் உயரத்தை தன் விரலால் அளந்தான். 'என்ன வசந்த்... ரிப்போர்ட் இவ்வளவு திக்கா இருக்கு.... ஒரு அம்பது பக்கம் தேறும் போல?'
வசந்த் மேலும் சிரித்தான்... 'ஆமா பாஸ்... தோண்ட, தோண்ட போய்கிட்டே இருந்துது... நாந்தான் தோண்டுன வரைக்கும் போறும்னு நிறுத்திட்டேன்...'
'அப்படியா? அவருக்கு பின்னால அவ்வளவு விஷயம் இருக்கா?'
வசந்த் ஒரு புன்னகையுடன் மேசை மீது கைகளை வைத்து ராஜசேகரின் முகத்திற்கு நேராக குனிந்தான். 'பாஸ், நம்மள பத்தி தோண்டுனாலும் இந்த அளவுக்கு இருக்கும்னு நா சொல்றேன்.. என்ன சொல்றீங்க?'
ராஜசேகர் திடுக்கிட்டு அவனைப் பார்த்தான். 'என்ன சொல்ற நீ?'
வசந்த் வாய்விட்டு சிரித்தான். 'என்ன பாஸ் ஷாக்காய்ட்டீங்க? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நீங்க ரிப்போர்ட்ட படிச்சிட்டு ஓக்கேன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க.. ஃபைனலைஸ் பண்ணி அழகா ஸ்பிரல் பைண்ட் பண்ணி கொண்டு வரேன்...' என்றவாறு எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.
ராஜசேகர் அவன் வாசலைக் கடந்து செல்வதையும் கவனியாமல் யோசனையுடன் தன் முன் இருந்த அறிக்கையின் பக்கங்களை புரட்டியவாறு அமர்ந்திருந்தான்.
*****
அடுத்த சில தினங்களில் காவல்துறை தங்களுடைய விசாரனை முடிந்துவிட்டது என்றும் ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அப்படியானால் தன்னுடைய கட்சிக்காரரை உடனே ஜாமீனில் விடவேண்டும் என்று ராஜசேகர் நடுவர் முன்பு வாதாடினான். அவனுடைய வாதத்தை காவல்துறை தரப்பில் எதிர்த்து வாதிட்டாலும் அதை ஏற்க மறுத்த நடுவர் அவருக்கு இருநபர் ஜாமீனில் நிபந்தனை பிணை வழங்கி ஆணையிட்டார். கோபால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்வரை சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் வாரம் மூன்று முறை அருகிலுள்ள காவல்நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையுடனும் பிணை வழங்கப்பட்டிருந்தது..
அதன்படி காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் தங்கியிருந்த கோபாலை சந்தித்து வழக்கு குறித்து விவாதிக்க ராஜசேகர் சென்றான். அவனுடன் கோபாலின் தந்தை சீனிவாசன் தானும் வருவதாக விருப்பம் தெரிவித்தாலும் அவரை அழைத்துச் சென்றால் வழக்குப் பற்றிய விவரங்களை வெளிப்படையாக விவாதிக்க கோபால் தயங்க வாய்ப்புள்ளது என்று கூறி சாமர்த்தியமாக அவரை தடுத்து நிறுத்தினான்.
ராஜசேகர் விடுதியை சென்றடைந்தபோது கோபாலுடைய அறைக் கதவு சாத்தியிருந்ததால் அழைப்பு மணியை அடிக்க கைகளை உயர்த்தினான். ஆனால் கோபால் அறைக்குள் இருந்து தொலைபேசியில் பேசுவது கேட்கவே தயங்கி நின்றான். அவன் முயற்சி செய்யாமலே கோபாலின் குரல் மிகத் தெளிவாக வெளியில் கேட்டது.
'இங்க பார்ங்க, அந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு எத்தன தடவ சொல்றது? மிஞ்சிப் போனா ஆறு மாசம். கேஸ் அதுக்கு மேல போறதுக்கு சான்ஸ் இல்ல.'
'.......'
'சேச்சே.... அதுவரைக்கும் நா இங்க இருக்க தேவையிருக்காது சேட். போலீஸ் சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணிட்டாங்கன்னா இந்த கன்டிஷன ரிலாக்ஸ் பண்ண சொல்லி பெட்டிஷன் ஃபைல் பண்ணிறலாம்.... அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்குங்க... ஒங்க ப்ராஜக்ட முடிச்சி தர்றது என் பொறுப்பு. இன்னைக்கி எங்க அட்வகேட் அநேகமா என்னெ பாக்க வருவாரு... அவர் கூட அப்பாவும் வந்தாலும் வருவார்.... அவர் கிட்ட இதப்பத்தி டீட்டெய்ல்சா பேசிட்டு சொல்றேன். ஏதோ என் போறாத காலம் இப்படியெல்லாம் தேவையில்லாம... நீங்க வொர்றி பண்ணாதீங்க... ஒங்க பணம் அப்படியே எஸ்க்ரோ (escrow) அக்கவுன்ட்லதான் இருக்கு....'
அவன் நின்றிருந்த வராந்தாவில் பணியாள் ஒருவன் நுழைவதை கவனித்த ராஜசேகர் அழைப்பு மணியை அழுத்தினான்.
'யாரோ வர்றாங்க சார்... நா ஈவ்னிங் கூப்டறேன்.... வச்சிடறேன்.'
அறைக்கதவை திறந்த கோபால் ராஜசேகரைப் பார்த்ததும், 'வாங்க சார்... அப்பா வரலையா?' என்றான்.
'இல்ல மிஸ்டர் கோபால். நாம கேச பத்தி டிஸ்கஸ் பண்றப்போ அவர் இருந்தா சரிவராதுன்னு நினைச்சித்தான் நானே வேணாம்னுட்டேன்.... ஏன் ஏதாவது அர்ஜன்ட் மேட்டரா?'
'ஆமா சார்.... ஒரு ஜாய்ன்ட் ப்ராஜக்ட்.... ப்ளான் அப்ரூவலுக்கு அனுப்பியிருந்தேன்... இந்நேரம் அப்ரூவல் ஆயிருக்கணும்... இந்த நேரத்துல இப்படியொரு சிக்கல்... அதான் அந்த பார்ட்டி என்ன சார் இது நடக்குமான்னு கேக்கறார்.... ரெண்டு மாசமா டிஸ்கஷன் பண்ணி ஃபைனலைஸ் பண்ண ப்ராஜக்ட்... அப்பாவுக்கும் தெரியும்... அதான் அப்பாக்கிட்ட சொல்லி அத ஃபாலோ பண்ண சொல்லலாம்னு.....'
ராஜசேகர் பதிலளிக்காமல் அறைக்குள் நுழைந்து கைப்பெட்டியை சுவரோரம் இருந்த சிறிய மேசையின் மீது வைத்துவிட்டு அதன் அருகில் இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
'அது இருக்கட்டும் சார்... நீங்க உக்காருங்க.... முதல்ல உங்க கேசப்பத்தி டிஸ்கஸ் பண்ணி முடிச்சிரலாம்... உங்க ஃபாதர வேணும்னா நாளைக்கி வரச் சொல்றேன்...'
கோபால் பதில் பேசாமல் சரி என்பது தலையை அசைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து அவனை பார்த்தான். 'சொல்லுங்க சார்.'
'அதுக்கு முன்னால ஒரு விஷயம் சார்....' என்றான் ராஜசேகர்
தொடரும்..
சட்டச் செய்தி இதழ் குறிப்பிடும் உண்மையான குற்றத்திற்கும் சட்டப்படியான குற்றத்திற்கும் இடையே என்ன வேறுபாடு எனத் தெரியவில்லை. இருப்பினும் குற்றம் செய்திருந்தாலும், அவரது கட்சிக்காரரை காப்பாற்றுவது வழக்கறிஞரது கடமை என்பது மட்டும் புரிகிறது.
பதிலளிநீக்குஇந்த தொடரைப் படிப்பதன் மூலம் தெரியாத சில சட்ட விதிகளை தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.
In developing countries most of the people select their professions based on the job opportunities. I was also forced choose my profession. The style you write, makes me to think that you have a passion for writing. Very engaging style. Thanks.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குசட்டச் செய்தி இதழ் குறிப்பிடும் உண்மையான குற்றத்திற்கும் சட்டப்படியான குற்றத்திற்கும் இடையே என்ன வேறுபாடு எனத் தெரியவில்லை//
உண்மையான குற்றவாளியும் சட்டத்தின் முன்பு எவ்வித சந்தேகமும் இல்லாமல் குற்றவாளி என நிரூபிக்கப்பட வேண்டும். சாட்சிகள் இல்லாத குற்றவாளி சட்டத்தின் பார்வையில் நிரபராதியாம்! ஆதலால்தான் ஒரு குற்றவாளியின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞரும் அவரை ஒரு நிரபராதியாகவே பார்க்கிறாராம்! சட்டம் ஒரு இருட்டறை என்பது இதனால்தான் போலும்!
இந்த தொடரைப் படிப்பதன் மூலம் தெரியாத சில சட்ட விதிகளை தெரிந்துகொண்டேன். //
இந்த தொடரை எழுத என்னை தயாரித்துக்கொண்டபோதுதான் நானும் இவற்றை தெரிந்துக்கொண்டேன். உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Packirisamy N said...
பதிலளிநீக்குIn developing countries most of the people select their professions based on the job opportunities. I was also forced choose my profession. //
I fully agree with you. Most of us study to get a job as without a respectable job the society will not respect us. A writer until he becomes popular and accepted by the society as a writer is not respectable person!
This could be the one of the several reasons why we are not what we want to be!
Thanks for coming and your encouraging comments.
பல விஷயங்களை விளக்கமாகச் சொல்கிறீர்கள்!
பதிலளிநீக்குசென்னை பித்தன் said...
பதிலளிநீக்குபல விஷயங்களை விளக்கமாகச் சொல்கிறீர்கள்!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
/அடுத்த பத்து தினங்களுக்குள் கோபாலைப் பற்றிய விசாரணையை முடித்த வசந்த் ராஜசேகரை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான்./ அவ்வள்வு நாட்கள் கோபால் எந்த கஸ்டடியில் இருந்தார். ( பழைய பதிவுகளை மீண்டும் படிக்க வேண்டுமா.?) /'பாஸ், நம்மள பத்தி தோண்டுனாலும் இந்த அளவுக்கு இருக்கும்னு நா சொல்றேன்.. என்ன சொல்றீங்க?'/ இங்கேதான் சூனியத்துக்கு சொந்த செலவா.?
பதிலளிநீக்குM Balasubramaniam said...
பதிலளிநீக்கு/அடுத்த பத்து தினங்களுக்குள் கோபாலைப் பற்றிய விசாரணையை முடித்த வசந்த் ராஜசேகரை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான்./ அவ்வள்வு நாட்கள் கோபால் எந்த கஸ்டடியில் இருந்தார்//
ஜூடிஷியல் கஸ்டடியில்தான். முதல் இரண்டு நாள் போலீஸ் கஸ்டடிக்கப்புறம் சிறையில் அடைக்கப்படுகிறார்.
'பாஸ், நம்மள பத்தி தோண்டுனாலும் இந்த அளவுக்கு இருக்கும்னு நா சொல்றேன்.. என்ன சொல்றீங்க?'/ இங்கேதான் சூனியத்துக்கு சொந்த செலவா.?//
அப்படியும் வச்சிக்கலாம் :) ஆனா தலைப்புக்கு தோதா இன்னும் வரவேண்டியது இருக்கு.
சார் எனக்கு ஒரு சந்தேகம். முந்தைய பகுதியில மாதவி ராஜசேகருக்கு போன பண்ணி இன்னைக்கி வரவேண்டாம்னு சொன்னதாக ஞாபகம்,
பதிலளிநீக்குமாதவியின் போன்ல இருந்து கடைசியா பேசின கால்களை போலீஸ் ஏன் ட்ரேஸ் பண்ணவே இல்லை? அப்படி செய்திருந்தால் ராஜசேகரும் விசாரணை வட்டத்துக்குள் சிக்கி இருப்பாரே!
அப்ப இந்த மனுசன் தள்ளி அந்தம்மா இறக்கவில்லை போல... அடடடா அப்ப யாரா இருக்கும் ?
பதிலளிநீக்குஆமா இந்த மனுசன் போன் நம்பரும் இல்ல லிஸ்ட்ல இருக்கனும்.
Sasi Kala said...
பதிலளிநீக்குஅப்ப இந்த மனுசன் தள்ளி அந்தம்மா இறக்கவில்லை போல... அடடடா அப்ப யாரா இருக்கும் ?//
அது கடைசியிலதான் தெரியவரும்!!
ஆமா இந்த மனுசன் போன் நம்பரும் இல்ல லிஸ்ட்ல இருக்கனும்.//
அடுத்தடுத்த பதிவில இதுக்கு விடை கிடைச்சிருக்கணுமே..