Indian Evidence. ACT 1882. Sec.26. Confession by accused while in custody of police not to be proved (USED) against him. No confession made by any person whilst he is in the custody of a police officer, unless it be made in the immediate presence of a Magistrate,17 shall be proved as against such person.
****
Gian Singh v. State (Delhi Administration) 1981 Cr L J 100
It is prudent for the police to allow a lawyer where the accused wants to have one at the time of interrogation if they want to escape the censure that police interrogation is carried on in secrecy by physical and psychic torture.
****
***
'அது தேவையில்லை யுவர் ஆனர்.'என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர் மாதவன்.
'என் கட்சிக்காரரோட ஃபாதர் போலீஸ் ஏதாச்சும் தேர்ட் டிகிரி மெத்தட்ஸ யூஸ் பண்ணி இவர்கிட்டருந்து கன்ஃபெஷன் ஏதாச்சும் வாங்கிருவாங்களோன்னு பயப்படறார்..... அதான்... நானும் கூட இருக்கணும்னு....' நடுவர் ஒரு கேலி புன்னகையுடன் தன்னை கவனிப்பதை உணர்ந்த ராஜசேகர் பாதியிலேயே நிறுத்திக்கொண்டான்...
'என்ன மாதவன் அப்படி ஏதாச்சும் ஐடியா இருக்கா? அப்படியே செஞ்சாலும் இங்க அதுக்கு வேல்யூ இல்லேன்னு தெரியும்னு நினைக்கறேன், சரிதானே.'
'தெரியும் யுவர் ஆனர்.'
மஜிஸ்திரேட் அதே புன்னகையுடன் ராஜசேகரைப் பார்த்தார். தன் புருவங்களை உயர்த்தினார்.
'In that case I will withdraw my request your honour'
'அப்போ மேட்டர் ஓவர்.... ரெண்டு நாள் போலீஸ் கஸ்டடி...' மஜிஸ்திரேட் பாஸ்கரை பார்த்தார் 'அடுத்தது என்ன?'
நடுவரின் தீர்ப்பில் திருப்தியடையாத துணை ஆய்வாளர் தன்ராஜ் மாதவனை முறைத்து பார்த்துவிட்டு வெளியேற பெஞ்சில் அமர்ந்திருந்த கோபாலை அழைத்துக்கொண்டு காவலர்கள் அவரை தொடர்ந்து அறையை விட்டு வெளியேறினர்.
மாதவன் ராஜசேகரைப் பார்த்து பிறகு பார்க்கலாம் என்பதுபோல் தலையை அசைத்தான். அவனுக்கு இன்னும் வேறு சில வழக்குகளை இருப்பதை உணர்ந்துக்கொண்ட ராஜசேகர் அறையை விட்டு வெளியேறி வராந்தாவில் காத்திருந்த சீனிவாசனை நெருங்கினான். 'போலீஸ் அஞ்சி நாள் கஸ்டடி கேட்டாங்க... மஜிஸ்திரேட் ரெண்டு நாள் போறும்னுட்டார்...'
'நீங்க கூட இருக்கேன்னு கேக்கப்போறேன்னு சொன்னீங்களே?' என்றார் மகாதேவன். அவருடைய குரலில் ஒலித்த கேலியை ராஜசேகர் பொருட்படுத்தாமல் சீனிவாசனை பார்த்தான்.
'கவர்ன்மென்ட் ப்ராசிக்யூட்டர் ஒத்துக்க மாட்டேன்னுட்டார்....நா எந்த தேர்ட் டிகிரி மெத்தேட்சும் யூஸ் பண்ணி கோபால்கிட்டருந்து கன்ஃபெஷன் எதையும் போலீஸ் வாங்கக் கூடாதுன்னு சொன்னேன்... மஜிஸ்திரேட் அந்த கண்டிஷனோடதான் கஸ்டடிக்கு பர்மிட் பண்ணியிருக்கார்.... ரெண்டு நாள் கழிச்சி மறுபடியும் இங்கதான் வரணும்... வேணும்னா மைலாப்பூர் ஸ்டேஷனுக்கு போய் கோபால மீட் பண்ணலாம்... ஆனா அந்த எஸ்.ஐ. ஒத்துப்பாரான்னு பாக்கணும்.... இந்த ஸ்டேஜ்ல அந்த ஆளையும் நாம ஆன்டகனைஸ் பண்ணாம பாத்துக்கணும்.... நீங்க கவலைப்படாதீங்க... அந்த ஸ்டேஷன்லருக்கற லா அன்ட் ஆர்டர் எஸ்.ஐ எனக்கு தெரிஞ்சவர்தான்.... நா பாத்துக்கறேன். எனக்கு இங்கயே இன்னொரு ஹியரிங் இருக்கு... அப்புறம் நா ஈவ்னிங் உங்கள மீட் பண்ணி ஏதாச்சும் டெவலப்மென்ட்ஸ் இருந்தா சொல்றேன்... ' என்று கூறியவாறு அவருடைய பதிலுக்கு காத்திராமல் சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய குமாஸ்தாவை நோக்கி நகர்ந்தான் ராஜசேகர்.
அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த மகாதேவன், 'எனக்கென்னவோ இந்தாளு....' என்று மீண்டும் ஆரம்பிக்க சீனிவாசன் இடையிலேயே குறுக்கிட்டார். 'மறுபடியும் ஆரம்பிச்சிராத மகா... வா கோபால எங்க கொண்டு போறாங்கன்னு பாத்துட்டு போலாம், வா' என்றவாறு அவர் தன்னுடைய வாகனத்தை நோக்கி நடக்க மகாதேவன் வேறு வழியில்லாமல் அவரை பின்தொடர்ந்தார்.
*****
'சொல்லுங்க பாஸ், எப்படி போச்சிது. எத்தனை நாள் போலீஸ் கஸ்டடி?'
ஏதோ யோசனையில் இருந்த ராஜசேகர் சட்டென்று நிமிர்ந்து தன் எதிரில் அமர்ந்திருந்த வசந்தைப் பார்த்தான். 'எ.. என்ன கேட்டே?'
வசந்த் சிரித்தான். 'என்ன பாஸ், என்ன யோசனை?'
ராஜசேகர் இல்லையென்பது போல் தலையை அசைத்தான். 'ஒன்னுமில்ல வசந்த். விதியோட விளையாட்டும்பாங்களே கேள்விப்பட்டிருக்கியா?'
வசந்த் மேலும் சிரித்தான். 'என்ன பாஸ் தத்துவமா? அதுவும் இந்த நேரத்துல? என்ன சொல்ல வறீங்க?'
'இந்த கோபால் விஷயத்தத்தான் சொல்றேன்.'
'ஏன் அவர ஸ்பாட்டுல பாத்ததாத்தான் ஒரு ஐவிட்னஸ் இருக்குன்னு சொன்னீங்களே? அப்புறம் விதி எங்க விளையாடுச்சி?'
'அத வச்சே இவர்தான் கொலையாளின்னு எப்படி சொல்றது?'
'முடியாதுதான்.. சரி அத விடுங்க... என்னெ எதுக்கு வரச் சொன்னீங்க?'
அவன் பதிலளிப்பதற்கு முன் சர்வர் மெனு கார்டுடன் தங்கள் மேசையை நோக்கி வருவதைக் கவனித்த ராஜசேகர் அவன் வந்து நின்றதும், 'மெனு கார்டெல்லாம் வேணாங்க.' என்று கூறிவிட்டு வசந்தை பார்த்தான். 'நா லைட்டா டிஃபன் பண்லாம்னு பாக்கறேன்... உனக்கு மீல்ஸ்தான?'
'ஆமா பாஸ்.. நமக்கு டிஃபன் எல்லாம் சரிவராது. லஞ்ச்ன்னா ஃபுல் மீல்ஸ்தான்..'
ராஜசேகர் சர்வரை பார்த்தான். 'எனக்கு இதுதான் வேணும்னு இல்லை. எது ரெடியா இருக்கோ கொண்டாங்க. தோசை, பொங்கல், தயிர் சாதம்... எதுவானாலும் ஓக்கே... கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கன்னா நல்லாருக்கும்.'
சர்வர் அங்கிருந்து நகர்ந்ததும் வசந்தை பார்த்தான். 'கோபாலப் பத்தின டீட்டெய்ல்ஸ் வேணும் வசந்த். கொஞ்சம் டீப்பாவே போனா நல்லாருக்கும்னு பாக்கறேன்...'
வசந்த் சிரித்தான். 'டீப்பான்னா... அவர் பொறந்ததிலிருந்தா?'
'கிண்டல் பண்ணாத வசந்த். நா சீரியசா சொல்றேன்... அந்த எஸ்,ஐ தன்ராஜ் பயங்கரமான ஆளுன்னு சொல்றாங்க. ஏபிபி மாதவனே அவன் ஒரு திமிர் பிடிச்சவன்னு சொன்னா நாம கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்னு நினைக்கேன். டிரையல் சமயத்துல நமக்கு கோபால பத்தி தெரியாதது எதுவும் வந்துறக் கூடாது. என்ன சொல்றே?'
ஆனால் அவனுடைய உள் மனதில் இருந்தது வேறு. எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதுதானே அவனுடைய நோக்கம்? அதற்கு கோபாலின் பின்னணியை தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம். சந்தர்ப்ப சூழல் அவனுக்கு சாதகமாகவும் கோபாலுக்கு எதிராகவும் இருப்பது மட்டுமே போறாதே? கோபால் அங்கிருந்து வெளியேறும்போது மாதவி உயிருடன் இருந்ததை அவனைத் தவிர வேறு யாராவது பார்த்திருந்தால்? வழக்கின் போக்கே அடியோடு மாறிவிட வாய்ப்புள்ளதே?
'சரி பாஸ்... செஞ்சிரலாம்.. ஒரு பத்து, பதினைஞ்சி வருச சரித்திரத்த டிக் (dig) பண்ணா போறும்னு நினைக்கேன்... என்ன பாஸ்?'
'போறும்... எப்ப ஸ்டார்ட் பண்றே?'
'நீங்க சரின்னு சொல்லிட்டா இப்பவே.'
'குட்... எவ்வளவு ஆவும்...குத்துமதிப்பா சொல்லு போறும்.'
'அதுக்கு முன்னால எனக்கு எவ்வளவு டைம் குடுப்பீங்க, அதச் சொல்லுங்க.'
'இன்னையிலருந்து ரெண்டு நாள் போலீஸ் கஸ்டடி... அவர பாத்ததா சொல்ற ஒரே விட்னஸ வச்சிக்கிட்டு கோர்ட்டுக்கு போலீஸ் போவுமான்னு தெரியல.... அதுவே போறும்னு நினைச்சாங்கன்னா சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ண மேக்சிமம் ஒரு வாரம் ஆகும்னு நினைக்கேன்.... அதுக்கப்புறம்தான் பெய்ல் மூவ் பண்ண முடியும். ஜுடிஷியல் கஸ்டடியில இருக்கறப்போ அவர போயி மீட் பண்றத விட அவர பெய்ல எடுத்துட்டு பாக்கறது நல்லதுன்னு ஃபீல் பண்றேன்... நீ என்ன சொல்றே?'
'நீங்க சொல்றது சரிதான் பாஸ்... அப்போ தோராயமா ஒரு டென் டேய்ஸ்.. சரிதானே?'
'ஆமா... அதுக்குள்ள முடிஞ்சா போறும்.... ஆனா ஒன்னு..'
'என்ன, சொல்லுங்க.'
'முதல்ல கோபாலோட செல்ஃபோன் கால் டீட்டெய்ல்ஸ் வேணும். நாளை காலைலுக்குள்ள கிடைச்சா நல்லது.'
'Done பாஸ்.'
'அப்புறம் இன்னொன்னு. கோபாலோட ஆஃபீஸ்ல போயி விசாரிக்க வேண்டிய விஷயத்த முதல்ல செஞ்சிரு... அவரு பெய்ல வந்தப்புறம் செய்யிறது கஷ்டமாயிரும்... அதுக்கப்புறம் அவரோட ஒய்ஃப் ஏதோ ஆஸ்பிட்டல்ல இருக்கறதா சீனிவாசன் சொன்னார். அதையும் என்னான்னு விசாரிச்சிரு...?'
'அத எங்கிட்ட வுட்ருங்க பாஸ்... நா பாத்துக்கறேன்... இன்னிக்கி என்ன தேதி எட்டா.... பதனைஞ்சிலருந்து எப்ப வேணும்னாலும் ரெடியாயிரும்.... ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட் ரிப்போர்ட்டோட ஒங்கள வந்து பாக்கறேன்... சரியா?'
'சரி... எவ்வளவு ஆவும்னு சொல்லவே இல்லையே?'
வசந்த் சற்றும் யோசிக்காமல், 'ஒரு அம்பது?' என்றான் புன்னகையுடன்.
'அது ஜாஸ்தி வசந்த். இருபத்தஞ்சி.'
வசந்த் சிரித்தான். 'அது ரொம்ப கம்மி... ஒங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம்... முப்பத்தஞ்சின்னு வச்சிக்கலாம்.'
ராஜசேகர் சிரித்தான்... 'இந்த கத்தரிக்கா பேரத்த நீ உடவே மாட்டியே... சரி... முப்பத்தஞ்சி...'
சர்வர் வந்து அவர்கள் கேட்ட உணவு ஐய்ட்டங்களை மேசை மீது பரப்ப இருவரும் உண்ண ஆரம்பித்தனர்.
*********
வசந்த் வாக்களித்தபடியே அடுத்த நாளே கோபாலின் செல்ஃபோனிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் சென்றிருந்த கால் (Call) விவரங்கள் அடங்கிய பட்டியலை கொண்டு வந்து கொடுத்தான்.
ராஜசேகர் அறிக்கையில் பட்டியலிடப்பட்டிருந்த அழைப்பு விவரங்களை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு மாதவி கொலையான தேதியில் இருந்த கால் விவரங்களை படித்தான்.
அதில் தென்பட்ட ஒரு எண் அவனுடைய கவனத்தை கவர்ந்தது. 'டேய்... இது ஏதோ லேன்ட் லைன் நம்பர் மாதிரி இருக்கு?' அந்த எண் மாதவியின் வீட்டு தொலைபேசி எண் என்று தெரிந்தும் அதை வசந்திடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவங்க நம்பர் ஒங்களுக்கு எப்படி தெரியும் பாஸ்னு கேட்டா என்ன பதில் சொல்றது?
'அதுவா பாஸ்? மாதவியோட வீட்டு லேன்ட் லைன். BSNL நம்பர்.'
ராஜசேகர் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். 'ஒனக்கெப்படி தெரியும்?'
வசந்த் சிரித்தான். 'இது ஒரு பெரிய விஷயமா பாஸ்... ஒரே நாள்ல கால் டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்றப்போ இது முடியாதா என்ன? அதுவுமில்லாம BSNL நம்பர் யார்துன்னு டைரக்டரி என்க்வயரிலயே கண்டுபுடிச்சிறலாமே?'
'அப்படியா?' என்று தலையை அசைத்த ராஜசேகர் சட்டென்று வசந்தை நிமிர்ந்து பார்த்தான். 'டேய் ஒன்னு கவனிச்சியா?'
'என்ன பாஸ்?'
'கோபாலோட ஃபோன மாதவி அட்டென்ட் பண்ணியிருந்தாத்தான் கால்டு லிஸ்ட்ல வந்துருக்கும், சரியா?'
'ஆமா பாஸ், இதுலென்ன ஆச்சரியம்?'
'டேய், நா சொல்ல வர்றத கவனி. அப்படீன்னா மாதவி சாயந்தரம் 6.25க்கு உயிரோடத்தான் இருந்துருக்கணும்.... அவங்க எடுத்து பேசலன்னா டயல்டு நம்பர் லிஸ்ட்டுல வந்துருக்காதே?'
தொடரும்
துப்பறிபவர்கள் எல்லாம் வசந்த் என்ற பெயரில் இருப்பார்களோ? இருந்தாலும் இந்த வசந்த் ‘அந்த வசந்த்’ போல் இருக்கமாட்டார் என நினைக்கிறேன்.கதை சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருக்கிறது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஒவ்வொரு நாளும் தொடர்புடைய சட்டப்பிரிவைக் குறிப்பிட்டுத் தொடங்குவது அசத்தல்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகதை தத்ரூபமாய் நிகழ்வதுபோல் நகர்கிறது. வாழ்த்துக்கள்.
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குதுப்பறிபவர்கள் எல்லாம் வசந்த் என்ற பெயரில் இருப்பார்களோ? இருந்தாலும் இந்த வசந்த் ‘அந்த வசந்த்’ போல் இருக்கமாட்டார் என நினைக்கிறேன்.//
நான் சுஜாதாவின் ரசிகன் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவருடைய கதைகளை விரும்பி படித்தவன். அதில் வரும் கணேஷ் மற்றும் வசந்த் கதாபாத்திரங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக வசந்தின் நகைச்சுவை கலந்த பேச்சும் விளையாட்டுத்தனமான சேஷ்டைகளும்...
ஆகவேதான் ராஜசேகரின் அசிஸ்டென்டாக வரும் கதாபாத்திரத்திற்கு வசந்த் என்று பெயர் வைத்தேன். அவர் பேசுவதும் நகைச்சுவை உணர்வுடன் கொண்டதாகவே இருக்கும். ஆனால் அந்த வசந்தைப் போல் இவர் இருப்பாரா என்று தெரியவில்லை.
உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
சென்னை பித்தன் said...
பதிலளிநீக்குஒவ்வொரு நாளும் தொடர்புடைய சட்டப்பிரிவைக் குறிப்பிட்டுத் தொடங்குவது அசத்தல்//
இந்த கதையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் சட்டங்கள் மூன்று இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் முறைச் சட்டம் மற்றும் இந்தியன் எவிடென்ஸ் சட்டம். இவற்றுடன் இந்திய போலீஸ் சட்டமும், இந்திய வழக்கறிஞர் சட்டங்களும் அவ்வப்போது பயன்படுத்தப்படும். இந்த சட்டங்களையெல்லாவற்றின் bare acts நகல்களை நெட்டிலிருந்து தரவிறக்கம் செய்து முழுவதுமாக படித்துவிட்டுத்தான் இந்த தொடரை எழுதவெ ஆரம்பித்தேன். ஆகவே தேவையான சட்டங்களை தேவையான இடத்தில் பயன்படுத்துவது எளிதாகிவிட்டது.
அதை குறிப்பிட்டு நீங்கள் எழுதும்போது என்னுடைய உழைப்பு வீண் போகவில்லை என்று உணர்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குகதை தத்ரூபமாய் நிகழ்வதுபோல் நகர்கிறது. வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
ஆமாங்க இது கதையா அல்லது உண்மை நிகழ்வா? கால் அட்டன் பண்ணி இருக்கும் போது உயிர் இருந்திருக்கலாம் என்றெல்லாம் படித்ததை வைத்து கேட்கிறேன்.
பதிலளிநீக்கு