10 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 13

"CRPC 437 (5)  Any Court which has released a person on bail under sub-section (1) or sub-section (2),may, if it considers it necessary so to do, direct that such person be arrested and commit him to custody.
Grounds for Cancellation of Bail
Power to cancel bail, must be exercised with care and circumspection and in appropriate cases-Crl.P.C. (Act 11 of 1974), 1973, s. 439(2). Bail cancellation of-Grounds must bear casual connection with same act or conduct of accused–CrI.P.C. (Act 2 of 1974). 1973, Ss. 439(2) r/w 437(5) - Nityanand Rai vs State Of Bihar & Anr on 11 April, 2005

Consideration of an application for grant of bail stands on a different footing than one for cancellation of bail. Grounds for cancellation of bail should be those which arose after the grant of bail and should be referable to the conduct of the accused while on bail."

முன்கதை

சென்னை சைதாப்பேட்டை 12ம் மாநகர நீதிமன்ற நடுவர் எரிச்சலுடன் தன் முன் நின்றவர்களை பார்த்தார். அவருடைய பார்வையிலேயே அவருடைய அப்போதைய மூட் சரியில்லை என்பதை உணர்ந்துக்கொண்ட ராஜசேகர் தன் அருகில் நின்றிருந்த அரசு வழக்கறிஞர் மாதவனைப் பார்த்தான். மாதவன் அவனுடைய பார்வையின் அர்த்தத்தை உணர்ந்துக்கொண்டவனாய் 'அவர் மூட் சரியில்லன்னா நாம என்ன பண்றது?' என்பதுபோல் உதட்டை பிதுக்கினார்.

'என்ன மாதவன்... எதுக்கு இவர மறுபடியும் கொண்டு வந்திருக்கீங்க? பெய்ல் குடுத்து ரெண்டு நாள் கூட ஆவலையே?'

மாதவன் தன் குறிப்புகளை ஒருமுறை பார்த்துவிட்டு ப்ராசிக்யூஷன் தரப்பில் அமர்ந்திருந்த ஆய்வாளர் தன்ராஜைப் பார்த்தான். 'இந்தாளோட அவசரப்புத்திக்கி நாம பதில் சொல்ல வேண்டியதாருக்கு....' என்று தனக்குள் நினைத்தவாறு நடுவரைப் பார்த்தான். 'யுவர் ஆனர் இவர் அரசுத்தரப்பு சாட்சி ஒருவருக்கு நேரடியாக ஃபோன் செய்து மிரட்டுனதா புகார் வந்துருக்கு.... அதனால பெய்ல கேன்சல் பண்ணி ரிமான்ட் பண்ணணும்னு கேட்டுக்கறேன்.'

நடுவர் பதில் கூறுவதற்கு முன்பு ராஜசேகர் குறுக்கிட்டான். 

'யுவர் ஆனர் குறுக்கிடறதுக்கு மன்னிக்கணும்....'

'அதான் குறுக்கிட்டுட்டீங்களே, என்ன விஷயம் சொல்லுங்க?' என்று எரிந்து விழுந்தார் நடுவர்.

அவருடைய கோபத்தைக் கண்டு மிரண்டுபோன ராஜசேகர் சுதாரித்துக்கொண்டு. 'யுவர் ஆனர், அரசுத்தரப்பு சாட்சியம் யாருன்னு எனக்கே தெரியாதப்போ என் கட்சிக்காரருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை....'

'அதானே' என்பதுபோல் நடுவர் மாதவனைப் பார்த்தார்.

மாதவன் கேலியுடன் ராஜசேகரை பார்த்தவாறு பதிலளித்தான். 'ஒங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம் சார்... ஆனா மிஸ்டர் கோபாலுக்கு அவங்க யாருன்னு நிச்சயம் தெரியும்.'

நடுவர் தன் சுத்தியலை ஓங்கி தட்டினார். 'மிஸ்டர் மாதவன்.... அட்ரஸ் தி கோர்ட்....'

தன் தவற்றை உணர்ந்த மாதவன் அவரை பார்த்தான். 'சாரி யுவர் ஆனார். அரசுத்தரப்பு சாட்சி யாருன்னு நிச்சயம் மிஸ்டர் கோபாலுக்கு தெரியும். தெரிஞ்சித்தான் அவர ஃபோன் செஞ்சி மிரட்டியிருக்கார். தேவைப்பட்டா அந்த சாட்சியை இப்பவே கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்றதுக்கும் நாங்க ரெடி யுவர் ஆனர்.'

'அதெல்லாம் தேவையில்லை...அஃபிடவிட் ஃபைல் பண்ணிருக்கீங்க இல்ல? அது போதும்.' என்று மீண்டும் எரிந்து விழுந்த நடுவர் கூண்டில் நின்ற கோபாலை பார்த்தார். 'என்ன சார்.... ஃபோன் பண்ணீங்களா?'

கோபால் எப்படி பதிலளிப்பது என தெரியாமல் மிரட்சியுடன் நடுவரையும் ராஜசேகரையும் மாறி மாறி பார்த்தார். 

அவருடைய மவுனம் நடுவரை மேலும் கோபமடையச் செய்தது. 'என்ன சார் பேசாம இருந்தா என்ன அர்த்தம்? Say yes or no... did you call that witness?'

'ஆமா சார்.... ஆனா....'

'Enough. I agree with the prosecution. Bail cancelled. Remanded to judicial custody. Post it after two weeks.' 

'Your honour' என்றவாறு ராஜசேகர் நடுவரின் கவனத்தை கவர்வதற்கு முயன்றான். 

அதை பொருட்படுத்தாத நடுவர் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த நீதிமன்ற ஊழியரிடம், 'அடுத்த கேஸ கூப்டுங்க.' என்றார். 

திகைத்துப்போய் கூண்டில் நின்றிருந்த கோபாலை இரு காவலர்கள் அழைத்துச் செல்ல ராஜசேகர் அவர்களுக்கு பின்னால் ஓடினான். 'என்ன சார்... நாந்தான் புறப்படும்போதே சொன்னேனே... இப்படி பண்ணிட்டீங்களே?' 

கோபால் பதிலளிக்காமல் தலையை குணிந்துக்கொண்டு செல்ல அவனிடம் சீனிவாசனின் உடல்நிலையைப் பற்றி கூறலாமா வேண்டாமா என்ற ஆலோசனையுடன் அவர்கள் காவல்துறை வேனில் ஏறும் வரை அவர்கள் பின்னாலேயே சென்றான். 

காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு கோபால் திரும்பி ராஜசேகரை பார்த்தார். 'மறுபடியும் பெய்ல் கிடைக்க சான்ஸ் இருக்கா சார்?' 

'போலீஸ் சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ணி முடிக்கட்டும்... மறுபடியும் ட்ரை பண்லாம்... தேவைப்பட்டா அப்புறம் வந்து உங்கள பாக்கறேன்..' 

சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு தன் கையிலிருந்த தன்னுடைய செல்ஃபோனை ராஜசேகரிடம் கொடுத்துவிட்டு கோபால் காவலர்களுடன் வாகனத்தில் ஏற அது உடனே புறப்பட்டுச் சென்றது. 

ராஜசேகர் திரும்பி நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிப் பார்த்தான். சற்று தொலைவில் மாதவனும் காவல்துறை துணை ஆய்வாளர் தன்ராஜும் உரையாடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் தன்ராஜ் விடைபெற்றுக்கொண்டு செல்ல மாதவன் திரும்பி தன்னை கவனிப்பதைக் கண்ட ராஜசேகர் அவனை நோக்கி விரைந்தான்.

'என்ன மாதவன் இப்படி பண்ணிட்டீங்க?'

மாதவன் தோள்களை குலுக்கினான். 'என்னை என்ன பண்ண சொல்றீங்க சேகர்? அந்த விட்னஸ்கிட்டருந்து ஃபோன் வந்ததா எஸ்,ஐ. தன்ராஜ் ஃபோன் பண்ணப்போ நா கோர்ட்ல இருந்துருக்கேன். லைன நம்ம பி.பி.க்கு குடுத்துருக்காங்க. அவர் என்ன சொன்னாரோ பி.பி. ஒடனே அவரெ ரீஅரஸ்ட் பண்ண சொல்லி காஞ்சிபுரம் கூப்ட்டு சொல்லிருங்கன்னு சொல்லிட்டாராம். அப்புறம் அவரே என்னையும் கூப்ட்டு அக்யூஸ்டோட பெய்ல கேன்சல் பண்ண சொல்லி பெட்டிஷன் போடுங்கன்றார்... என்னால என்ன பண்ண முடியும்?   எல்லாம் நம்ம பி.பி பண்ற வேலை.'

'அப்படீன்னா நீங்க சும்மா டம்மி பீசா?' என்றான் ராஜசேகர் புன்னகையுடன். 'சாரி... சும்மா தமாஷுக்குத்தான்.'

'தமாஷோ இல்லையோ நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான். பி.பி. இந்த கேஸ்ல காட்ற இன்ட்ரஸ்ட்ட பார்த்தா எனக்கும் அப்படித்தான் தோனுது.'

'அப்ப அவரே இந்த கேஸ்ல ஆஜராக வேண்டியதுதானே?'

மாதவன் ஒரு மர்ம புன்னகையுடன் அவனை பார்த்தான். 'அதான் நடக்கப் போவுது...'

ராஜசேகர் வியப்புடன் மாதவனை பார்த்தான். 'என்ன சொல்றீங்க? புரியல.'

'இந்த கேஸ் நிச்சயம் செஷன்ஸ் கோர்ட்டுக்குத்தான போகப்போவுது? அங்க நம்மள யார் யூஸ் பண்ணப் போறா? சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ற வரைக்கும்தான் நான் அவருக்கு வேணும்.' என்றவாறு மாதவன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இன்னொரு அறையை நோக்கி நகர ராஜசேகர் அவர் பின்னால் ஓடினான்.

'சார்ஜ் ஷீட் ரெடியானதும் சொல்றீங்களா?' என்றான்.

'சொல்றேன்.' 

'தாங்ஸ்.'

மாதவன் நீதிமன்ற அறைகள் ஒன்றினுள் நுழைய ராஜசேகர்  வசந்திடம் தான் ஒப்படைத்த வழக்குகள் என்ன்னவாயிற்றோ என்ற கவலையுடன் அந்த வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நீதிமன்ற அறையை நோக்கி விரைந்தான். 

*********

நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் தன்ராஜ் கோபால் அழைத்துச்செல்லப்பட்ட காவல்துறை வாகனத்தை பின் தொடர்ந்து சென்று புழல் சிறையில் அவர் ஒப்படைக்கப்படும் வரை உடன் இருந்தார். 

'இவர யார் விசிட் பண்ணணும்னு அப்ளை பண்ணாலும் எங்கிட்ட கேக்காம அலவ் பண்ணக்கூடாது... என்ன புரியுதுங்களா?' என்று சிறை அதிகாரியிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி நேரே தன்னுடைய காவல்நிலையத்தை  அடைந்தார். 

அவர் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடனேயே வாசலில் அமர்ந்திருந்த ரைட்டர், 'சார் பி.பி கிட்டருந்து ரெண்டு, மூனு டைம் ஒங்கள கேட்டு ஃபோன் வந்துது சார்.. நீங்க வந்ததுமே கனெக்ட் பண்ணி குடுக்க சொன்னார். இப்ப ட்ரை பண்ணட்டுங்களா?' என்றார்.

'ஒரு பத்து நிமிஷம் போவட்டும்....' என்றவாறு தன்னுடைய இருக்கையை அடைந்து மின்விசிறியை சுழலவிட்டு கண்களை மூடியவாறு சில நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்தார். 

எதற்காக இந்த பி.பி. இந்த வழக்கில் அசாதாரண அக்கறை காட்டுகிறார் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. மாதவி கொலை வழக்கை பொருத்தவரை கோபாலைத் தவிர வேறு யாராவது இதில் சம்மந்தப்பட்டிருக்க வாய்ப்புண்டா என்ற கோணத்தில் விசாரனை செய்ய அவர் விரும்பினாலும் பி.பியின் வழக்கத்திற்கு மாறான தலையீடு அதை செயல்படுத்த விடாமல் தடுப்பதை அவர் உணர்ந்தார். 

மாதவியின் அதிகாரபூர்வமான பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை மருத்துமனையிலிருந்து பெறப்படவில்லையென்றாலும் பரிசோதனை செய்த குழுவின் தலைமை மருத்துவருடன் அவன் நடத்திய தொலைபேசி உரையாடல் நினைவுக்கு வந்தது. 'அந்த லேடியோட பின்னந்தலையில் ரெண்டு ஊன்ட்ஸ் (wounds) இருக்குதுங்க. ஒரு அரைமணி நேர கேப்புல (gap) நடந்துருக்க சான்ஸ் இருக்கு. அத்தோட அவங்க நெத்தியிலயும் ஒரு வெட்டுக்காயம் இருக்கு. எல்லத்தையும் ரிப்போர்ட்ல சொல்லியிருக்கேன். கிடைச்சதும் ஏதாச்சும் டவுட்டுருந்தா கூப்டுங்க...' மேலும் அவர் பேசும்போது மாதவிக்கு  ஏற்பட்ட காயத்தின் தாக்கத்தைவிட அவருக்கு உடனடியாக கிடைத்திருக்க வேண்டிய மருத்துவ உதவி கிடைக்காமல் போனதால் ஏற்பட்ட அதிக ரத்தப்போக்குத்தான் அவருடைய உயிர் பிரிய காரணம் என்றும் கூறியதும் நினைவுக்கு வந்தது.  

ஆஃபனவர் (half an hour) கேப்புல ரெண்டு காயம்னா.... இதற்கு என்ன அர்த்தம்? மாதவியோட வீட்டுக்கு எதிர்லருக்கற பார்க்கிங் பையன் சொல்றபடி அக்யூஸ்ட் ஆறு மணிக்கே அங்கருந்து போயிருக்கார். ஆனா பக்கத்து  வீட்டு லேடி அவர வீட்டுக்கு முன்னால ஏழு மணிக்கி பாத்ததா சொல்லுது.... ரெண்டுக்கும் இடையில ஒரு மணி நேரம் கேப்.. ஆறு மணிக்கி அடிச்சிப் போட்ட பொம்பளை செத்துட்டாளா இல்லையான்னு பாக்கறதுக்கு மறுபடியும் ஒரு மணி நேரம் கழிச்சி எதிரி போய் பாத்துருப்பாரோ? இல்லன்னா இந்த இடைப்பட்ட நேரத்துல வேற யாராச்சும் வீட்டுக்குள்ள போயிருப்பானா?

போஸ்ட் மார்ட்டெம் டீட்டெய்ல்ஸ் மட்டும் அடுத்த நாளே கிடைச்சிருந்தா அத வச்சே அக்யூஸ்ட் கிட்டருந்து உண்மைய வர வச்சிருக்கலாமே... ஏழு மணிக்கி அங்க போகவே இல்லேன்னு சாதிச்சிட்டாரே? 'அவர் இந்த ஏரியாவுல பெரிய புள்ளிங்க... நீங்க பாட்டுக்கு தேர்ட் டிகிரி மெத்தேட யூஸ் பண்ணி ப்ராப்ளம் பண்ணிறாதீங்க' என்று அவருடைய நிலைய ஆய்வாளர் மட்டும் எச்சரிக்காமல் இருந்திருந்தால்..... 

தொடரும்...

10 கருத்துகள்:


  1. போனபதிவில் பெயில் கண்டிஷன் மீறல். இந்தப் பதிவில் ப்ராசிக்யூஷன் சாட்சி, என்ன எது என்று தெரியாமல் சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிறீர்கள்.கண் கூடான உண்மையை மறைக்க சில camouflages-ஆ.?

    பதிலளிநீக்கு


  2. எப்போதுமே உரிமையியல் வழக்குகளை விட குற்றவியல் வழக்குகள் பார்வையார்களுக்கு சுவாரஸ்யமாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பதற்றமாகவும் இருக்கும் என்பார்கள். அதை உங்கள் பதிவில் ‘காண்கின்றேன்’. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. omments:
    G.M Balasubramaniam said...

    போனபதிவில் பெயில் கண்டிஷன் மீறல். இந்தப் பதிவில் ப்ராசிக்யூஷன் சாட்சி, என்ன எது என்று தெரியாமல் சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிறீர்கள்.கண் கூடான உண்மையை மறைக்க சில camouflages-ஆ.//

    கோபால் எந்த சாட்சியை கூப்பிட்டு மிரட்டினார் என்பது அவருக்கும் தெரியும் அவருடைய வழக்கறிஞர் ராஜசேகருக்கும் தெரியும். ஆனாலும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் சாட்சிகளின் பட்டியலை சமர்ப்பிக்கும்வரையில் தெரிந்துக்கொள்ள முடியாதல்லவா? ஆகவேதான் தெரிந்தும் தெரியாததுபோல் நடித்து ராஜசேகர் தன் கட்சிக்காரர் யார் சாட்சி என்றே தெரியாமல் இருக்கும் சூழலில் எப்படி கலைக்க முயற்சிக்க முடியும் என்று வாதாடுகிறார். இது எல்லா க்ரிமினல் லாயரும் செய்வதுதான்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  4. வே.நடனசபாபதி said...


    எப்போதுமே உரிமையியல் வழக்குகளை விட குற்றவியல் வழக்குகள் பார்வையார்களுக்கு சுவாரஸ்யமாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பதற்றமாகவும் இருக்கும் என்பார்கள்.//

    உண்மைதான். அதனால்தான் சிவில் லாயர்களை விட குற்றவியல் லாயர்களுக்கு அதிகம் பாப்புலாரிட்டியும் உள்ளது. வருமானமும் அதிகம் என்கிறார்கள்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ஆனால் உங்களுக்கு பிடித்துள்ளதுபோல் இந்த தொடரை ரசிக்க அவ்வளவாக ஆட்கள் இல்லை போலிருக்கிறது. ஆகவேதான் இத்தகைய க்ரிமினல் நாவல்களையும் இப்போதெல்லாம் யாரும் எழுதுவதில்லை.

    இங்கெல்லாம் க்ரிமினல் நாவல்கள் என்றால் வெட்டு, குத்து, ரத்தம் என்று இருக்க வேண்டும். அப்போதுதான் ரசிக்க ஆள் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் போல,சுவாரஸ்யமாக கோர்ட் நிகழ்வுகளை எழுதுகிறீர்கள்.முன்கதை என்பதில் க்ளிக் செய்தால் access deniedஎன்று வருகிறது

    பதிலளிநீக்கு
  6. குட்டன் said...
    தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் போல,சுவாரஸ்யமாக கோர்ட் நிகழ்வுகளை எழுதுகிறீர்கள்.//

    மிக்க நன்றிங்க.

    முன்கதை என்பதில் க்ளிக் செய்தால் access deniedஎன்று வருகிறது.//

    அப்படியா? For public என்ற optionனை தெரிவு செய்யாமல் விட்டுவிட்டேன் போலிருக்கிறது. அதற்கு முந்தைய பதிவில் சரியாக செய்திருப்பேன். முடிந்தால் இப்போதே சரிசெய்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. Every episode brings out some new information about the court system. I wish our courts work with this kind of efficiency and justice. Thanks.

    பதிலளிநீக்கு
  8. Packirisamy N said...
    Every episode brings out some new information about the court system. I wish our courts work with this kind of efficiency and justice//

    There is no doubt that Indian Courts are efficient in their functioning. It is the Police who are slack in their investigations and the lawyers who choose to seek adjournments frequently to suit their convenience. Most of the judgements are delayed only due to such frequent adjournments sought both by the prosecution and the defense.

    Thanks for your visit and a useful comment.

    பதிலளிநீக்கு
  9. நல்ல எழுத்து நடை உண்மையில் ஒரு வக்கில் கூட இப்படி எதையும் விடாமல் எழுத முடியாது போல...

    பதிலளிநீக்கு
  10. Sasi Kala said...
    நல்ல எழுத்து நடை உண்மையில் ஒரு வக்கில் கூட இப்படி எதையும் விடாமல் எழுத முடியாது போல...//

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு