Suspense element in crime stories: "Suspense is a feeling of pleasurable fascination and excitement mixed with apprehension, tension, and anxiety developed from an unpredictable, mysterious, and rousing source of entertainment. The term most often refers to an audience's perceptions in a dramatic work. Suspense is not exclusive to fiction."
"Suspense is what gives a person the "on-edge" feeling. Suspense builds in order to make those final moments, no matter how short, the most memorable. The suspense in a story just keeps the person hooked into reading or watching more until the climax is reached, and the thrill and amusement of the suspension finally come to a close.The suspense in the story is the most important element, which was never ignored by writers throughout the ages" Wikipedia.
****
'ஆமா சார்...' என்று பதிலளித்த ராஜசேகர் தன் குறிப்பேட்டை எடுத்து முந்தைய தின இரவில் அவரிடம் கேட்பதற்கென குறித்துவைத்தவற்றை நோட்டம் விட்டான். 'முதல்ல அத தெரிஞ்சிக்கிட்டா நல்லதுன்னு நினைக்கறேன் சார்.'
'சொல்றேன்... அந்த பொண்ணு குடியிருந்த வீட்ட அவ பேருக்கே எழுதிக்குடுத்துறப் போறேன்... கிஃப்ட் டீட் ஒன்னெ ரெடி பண்ணுங்கன்னு சொன்னான்.' என்றார் மகாதேவன்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜசேகர் 'அப்படியா? அந்த லேடி இவருக்கு ரிலேட்டிவா என்ன?' என்றான் வியப்புடன்.
மகாதேவன் சிரித்தார். 'அதத்தான் நானும் அவன் கிட்ட கேட்டேன்.... அதுக்கு ரிலேட்டிவாத்தான் ஆகப் போறா சார்னு எகத்தாளமா சொன்னான்.'
மீண்டும் அப்படியா என்பதுபோல் ராஜசேகர் அவரை பார்த்தான்.
'ஆமா சார்... நானும் ஒரு செக்கன்ட் திகைச்சித்தான் போய்ட்டேன்...என்னடா சொல்றேன்னேன்... மல்லிகாவ டைவர்ஸ் பண்ணிட்டு மாதவியத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. அதனால நீங்க கிஃப்ட் டீடே பண்ணிருங்கன்னான்.... இது ஒங்கப்பாவுக்கு தெரியுமாடான்னேன்... அதப் பத்தி நீங்க ஒர்றி பண்ணாதீங்க... நா பாத்துக்கறேன்னான்... நா முடியாது... நீ முதல்ல ஒன் அப்பாண்ட பேசிறு.... அவர் சொன்னாத்தான் நீ சொன்ன டாக்குமென்ட ப்ரிப்பேர் பண்வேன்னு சொன்னேன்..... இப்படிச் சொன்னா பய பயப்படுவான்னு பார்த்தா அதுக்கு நேர் மாறா அடப்போய்யா நீ இல்லேன்னா இன்னொரு வக்கீல்னுட்டான்.... சரிடாப்பான்னு கட் பண்ணிட்டேன்.... இதான் நடந்தது.'
கோபால் மாதவியை திருமணம் செய்துக்கொள்ள நினைத்தாரா? என்ன முட்டாள்தனமான யோசனை? தினம் ஒன்றுக்கு ஒருவனுடன் கொஞ்சி குலாவுவதையே தொழிலாகக் கொண்டிருந்தவளை..... எப்படி இவருக்கு இப்படியொரு சிந்தனை? ஒருவேளை தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி மாதவி மிரட்டியிருப்பாளோ? இருக்கும்.... எத்தனை நாள்தான் நம்மைப் போன்ற சில்லறை பேர்வழிகளை நம்பிக்கொண்டிருப்பது? பசையுள்ள பார்ட்டி கிடைத்ததும் அப்படியே ஒட்டிக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாள்.... சரி, விஷயம் இப்படியிருக்க நாம் கேட்டபோது மட்டும் மாதவிக்கும் தனக்கும் வீட்டு உரிமையாளர், குடியிருப்பவர் என்கிற உறவைத் தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று கூறினாரே, ஏன்? அவள் குடியிருந்த வீட்டையே எழுதிக் கொடுக்கும் அளவுக்கு துணிந்தபிறகு அதை மறைப்பானேன்...?
'என்ன சார் பதிலே பேசாம ஒக்காந்துருக்கேள்....? ஷாக்காருக்கா?'
மகாதேவனின் வார்த்தைகள் அவனை அவனுடைய சிந்தனைகளில் இருந்து மீட்டன. 'ஆமா சார். எப்படி அவருக்கு இப்படியொரு ஐடியா வந்துருக்கும்னு யோசிச்சேன்.... நா கேள்விப்பட்ட வரைக்கும் அந்த பொண்ணுக்கு கோபால மாதிரி இன்னும் சில பேரோட தொடர்பு இருந்துருக்கு போலருக்கே ...அதான் நீங்க சொன்னத கேட்டதும் கொஞ்சம் ஷாக்காருந்துது....'
'ஒங்களுக்கு அவனெ ரெண்டு வாரமாத்தான் தெரியும்.... எனக்கு இருபது வருசமா தெரியும் சார்.... எனக்கு எப்படி இருக்கும்னு நினைச்சி பாருங்க... நா வேற சும்மா இருக்காம ஆஸ்பத்திரியில இருந்த சீனிவாசன பாக்கப் போனப்போ அவன் சொன்னத சொல்ல அவன் டென்ஷனாயி கத்த நா பயந்தே போய்ட்டேன்... நல்லவேளையா நர்ஸ் வந்து எங்க எல்லாத்தையும் புடிச்சி வெளிய தள்ளிட்டா... இல்லன்னா ரஸாபாசமாயிருக்கும்.... வெளியில வந்தா எஸ்.ஐ. தன்ராஜோட ஃபோன்... என்ன சொன்னான், ஏது சொன்னான்னுட்டு... அதான் அப்போ மனசுல பட்ட ஏதோ ஒன்னெ சொல்லி சமாளிச்சிட்டேன்... ஆனா அதையே ஒங்கக்கிட்டயும் சொன்னா சரிவராதுன்னுட்டு அவன் சொன்னத அப்படியே சொல்லிட்டேன்...'
ராஜசேகர் தன் குறிப்பேட்டை பார்த்துவிட்டு நிமிர்ந்தான். 'தாங்ஸ் சார்....'
மகாதேவன் குழப்பத்துடன் அவனை பார்த்தார். 'எதுக்கு தாங்ஸ்?'
'தன்ராஜ்கிட்ட உண்மைய சொல்லாததுக்கு. அதையே ஒரு மோட்டிவ்வா ஜோடிச்சிரலாம்னு டிசைட் செஞ்சிருவார்.'
மகாதேவன் சிரித்தார். 'நானும் லாயர்தான் சார்... க்ரைம் விஷயங்கள டீல் பண்ணலன்னாலும் எத எப்படி போலீஸ் டீல் பண்ணும்னு தெரியும். அதான் வாய்ல வந்தத சொல்லி வச்சேன்.. ஆனா அந்த ஆளு ரிட்டன் ஸ்டேட்மென்ட் ஏதாச்சும் கேட்ருவானோன்னு இப்ப பயமாருக்கு....'
ராஜசேகருக்கும் அவருடைய அச்சம் சரிதான் என்று பட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அப்படியே தெரிஞ்சாலும் பரவால்லைன்னு நினைக்கேன் சார்... ஏன்னா நாம இதையே நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாமே?' என்றான்.
'எப்படி சொல்றீங்க?'
'கோபால் ஏற்கனவே அந்த பொண்ணெ மேரேஜ் பண்ணிக்கறதுக்கு ரெடியாருந்துருக்கார்... அத்தோட அந்த வீட்டையும் கிஃப்ட்டா குடுக்கறதுக்கும் ரெடி.... அப்படியிருக்கறப்போ எதுக்கு கொலை பண்ணணும்?'
'நீங்க சொல்றதும் சரிதான்... ஒத்துக்கறேன்.. ஆனா இத போலீஸ் நம்பணுமே? அத்தோட கோபால் இப்படி சொன்னதுக்கு வேற யாரும் சாட்சி இல்லையே?'
'ஒங்க சாட்சியம் ஒன்னே போறுமே சார்?'
மகாதேவன் சிரித்தார். 'என் சாட்சியம் மட்டும் போறாது சார்... ஏன்னா நா அவங்களோட குடும்ப வக்கீல்... அவனெ காப்பாத்தறதுக்கு நா என்ன வேணும்னாலும் சொல்வென்னு ப்ராசிக்யூஷன் ஆர்க்யூ பண்ணுவாங்க. அத்தோட இன்னொரு விஷயமும் நா கேள்விப்பட்டேன்.. சரியா தப்பான்னு தெரியலை.'
'என்ன கேள்விப்பட்டீங்க சார்?'
'இப்ப பி.பியா இருக்கானே வேணு... அவனே இந்த கேஸ்ல ஆர்க்யூ பண்ணப் போறானாமே...? ஏற்கனவே கோபால் மேல கோவமா இருக்கான் சார் அவன்.... மறுபடியும் அவனெ தப்பிக்க விடமாட்டான்....'
இதுதான் அவரிடமிருந்து அவன் அடுத்ததாய் தெரிந்துக்கொள்ள விரும்பிய விஷயம். நாமாக எப்படி இந்த விஷயத்தை
கேட்பது அவன் எண்ணியிருந்தான்...
'நானே ஒங்கள கேக்கணும்னு இருந்தேன் சார்... எதுக்கு பி.பி.க்கு இந்த கேஸ்ல இவ்வளவு இன்ட்ரஸ்ட் சார்?'
'அது ஒரு பெரிய ஸ்டோரி சார்...'
'ஒங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா சொல்லுங்க... அதுவும் இந்த கேசுக்கு யூஸ் ஆவும்னா.....'
'சொல்றேன்... யூஸ் ஆவுமா இல்லையான்னு நீங்கதான் டிசைட் பண்ணிக்கணும்...' என்ற மகாதேவன் ஹாலில் இருந்த அவரை விடவும் வயதாகியிருந்த சுவர்க்கடிகாரத்தை பார்த்தார். 'ஒங்களுக்கு அர்ஜன்டா கேஸ் ஏதும் இல்லையே?'
'இல்ல சார்...'
நீங்க கேஸ் இல்லாத வக்கீல்னுதான் எனக்கு தெரியுமே என்று தனக்குள் நினைத்துக்கொண்ட மகாதேவன் 'அப்போ பரவால்லை. எனக்கும் இன்னைக்கி பகலுக்கு மேல கோர்ட்டுக்கு போனா போறும்.' என்று கூறிவிட்டு தொடர்ந்தார்.
'கோபாலுக்கு இப்ப இருக்கறது ரெண்டாவது வய்ஃப் சார்... ஃபர்ஸ்ட் வய்ஃப் இறந்து அஞ்சாறு வருசம் ஆச்சி...'
'அவங்களோட டெத்துல ஏதாச்சும் பிரச்சினை இருந்துதா சார்?'
ஒங்களுக்கெப்படி தெரியும் என்பதுபோல் ராஜசேகரை பார்த்தார் மகாதேவன், 'ஆமா சார்... அது நேச்சுரல் டெத் இல்லை... கோபாலோட ஸ்டேட்மென்ட் படி அவ பாத்ரூம்ல குளிச்சிக்கிட்டிருக்கறப்போ வழுக்கி விழுந்து பின் மண்டையில அடிப்பட்டு செத்துட்டா... ஆனா போலீஸ் அது மர்டர்னு சொல்லி இவனெ அரஸ்ட் பண்ணாங்க... கேஸ் ரெண்டு வருசம் போச்சி... கடைசியில ப்ராசிக்யூசன் சைட் கன்க்ளூசிவா ப்ரூஃப் பண்ணலன்னு சொல்லி அக்விட் பண்ணிட்டாங்க.. அந்த கேஸ்ல ஆஜரானவர்தான் இந்த வேணு.. அதான் பி.பியா அவருக்கு மொதல் கேஸ். மொதல் கேஸ்லயே தோத்துட்டமேங்கற ஆதங்கமா இருக்கும்....அதான் இவன் பேர கேட்டதும் இந்த தடவ விட்டேனா பார்னு விறைச்சிக்கிட்டு வறார்...'
அவர் ஏதோ விலாவாரியாக சொல்லப் போகிறார் என்று நினைத்த ராஜசேகருக்கு அவர் நாலே வரிகளில் முடித்துவிட சப்பென்று ஆகிவிட்டது. 'போலீசுக்கு இவர் மேல எதுக்கு சார் சஸ்பிஷன் வந்துது?' என்றான் விடாப்பிடியாக. அவர் எதையோ மறைப்பதாக நினைத்தான் அவன்.
'காரணம் என்னமோ இருக்கத்தான் செஞ்சிது. இல்லேன்னு சொல்ல முடியாது.'
'என்ன சார் சொல்றீங்க?'
'ஆமா சார். அந்த பொண்ணு பாத்ரூம்ல குளிச்சிக்கிட்டிருந்தப்போ கோபால் வீட்லதான் மாடியில இருந்துருக்கான். அவங்க ரெண்டு பேரையும் தவிர வீட்ல வேற யாரும் இல்லை. தலையில அடிபட்டப்போ அந்த பொண்ணு பலமா கத்தியிருக்க சான்ஸ் இருக்குல்ல? ஆனா எனக்கு ஒன்னும் கேக்கலை நா மத்தியானம் ஒரு மணிக்கி லஞ்சுக்கு கீழ எறங்கி வந்தப்போத்தான் அவ பாத்ரூம்ல அடிபட்டு கிடந்ததே தெரிஞ்சிதுன்னுட்டான்.'
'அதெப்படி? அந்த லேடி பாத்ரூம் கதவ மூடிக்கிட்டுத்தான குளிச்சிருப்பாங்க?'
'அட ஆமா சார்... ஆனா பாத்ரூம் கதவுக்குக் கீழ் வழியா ப்ளட் ஃப்ளோ ஆயி பெட்ரூம் தரையில வடிஞ்சிருந்திருக்கு போல. அதப்பார்த்துட்டுத்தான் கதவ ஒடச்சி பார்த்தேன்னு கோபால் சொன்னான். ஆனா போலீசுக்கு நம்பிக்கையில்லை. இவனே கொன்னுட்டு அப்புறம் கதவ வெளியிலருந்து தொறந்தா மாதிரி உடச்சி வச்சிட்டு போலீச கூப்ட்ருக்கான்னு ஆர்க்யூ பண்ணாங்க. ஆனா அவனெ அப்போ டிஃபென்ட் பண்ண நம்ம லாயர் படே கில்லாடி. பாப்புலரான கிரிமினல் லாயர். இன்வெஸ்ட்டிகேட் பண்ண எஸ்.ஐ. க்ராஸ் எக்ஸாமினேஷன்ல உண்டு இல்லன்னு ஆக்கிட்டார். நேரடி ஐ விட்னஸ் யாரும் இல்லாததால கோபால் தப்பிச்சிண்டுட்டான்.'
'கேஸ் தோத்ததுக்கு போலீசோட இன்வெஸ்ட்டிகேஷன்லயும் குளறுபடி இருக்க சான்ஸ் இருக்குல்ல? அவங்க தர்ற எவிடென்சஸ வச்சித்தான வக்கீல் கோர்ட்ல ஆர்க்யூ பண்ண முடியும்?'
' உண்மைதான். கோர்ட்லயும் ஜட்ஜ் போலீஸ் சரியா இன்வெஸ்ட்டிகேட் பண்ணலைன்னு அப்சர்வ் பண்ணார். அத்தோட நின்னுருந்தா பரவால்லை. ப்ராசிக்யூஷனும் சரியா கேஸ ப்ரெசன்ட் பண்ணலைன்னுட்டு ஜட்ஜ் அப்சர்வ் பண்ணது வேணுக்கு பயங்கர கடுப்பு. அத அவர் இன்னமும் ஞாபகத்துல வச்சிருக்கார் போலருக்கு. அத்தோட இன்னொரு விஷயமும் இருக்கு.... நீங்க நோட் பண்ணீங்களான்னு தெரியலை.'
ராஜசேகர் வியப்புடன் கேட்டான். 'இன்னொரு விஷயமா? என்ன சார்?'
தொடரும்
பதிலளிநீக்கு"Suspense is what gives a person the "on-edge" feeling.”
உண்மைதான். தங்களின் ஒவ்வொரு நாள் பதிவும் அந்த உணர்வைத்தான் தருகின்றன. எப்போது அந்த ஸஸ்பென்ஸ் தீரும் எனக் காத்திருக்கிறேன்.
“கௌரவம்” ஞாபகத்துக்கு வருகிறது. கொலை செய்தபொழுது தப்பித்துவிட்டு, செய்யாதபொழுது தண்டனை பெற்றது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
பதிலளிநீக்கு"Suspense is what gives a person the "on-edge" feeling.”
உண்மைதான். தங்களின் ஒவ்வொரு நாள் பதிவும் அந்த உணர்வைத்தான் தருகின்றன. எப்போது அந்த ஸஸ்பென்ஸ் தீரும் எனக் காத்திருக்கிறேன்.//
கதை முடியும்போது நிச்சயம் தீர்ந்துவிடும் :))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Packirisamy N said...
பதிலளிநீக்கு“கௌரவம்” ஞாபகத்துக்கு வருகிறது. கொலை செய்தபொழுது தப்பித்துவிட்டு, செய்யாதபொழுது தண்டனை பெற்றது நினைவுக்கு வருகிறது.//
நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் கூட நாம் செய்த தவறுகளில் இருந்து தப்பித்து பிறகு செய்யாத ஒரு தவறுக்காக தண்டிக்கப்படுவதுண்டு அல்லவா? இதைத்தான் தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களோ!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஒவ்வொரு பதிவிலும் ஒரு புது விஷயம். தொடர்கிறேன்
M Balasubramaniam said...
பதிலளிநீக்குஒவ்வொரு பதிவிலும் ஒரு புது விஷயம். தொடர்கிறேன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
நீங்க கேஸ் இல்லாத வக்கீல்னுதான் எனக்கு தெரியுமே...
பதிலளிநீக்குநகைச்சுவையாகவும் நடு நடுவே கதை நகர்கிறது.
பாவி மனுசன் வீட்டையும் எழுதி கொடுத்து திருமணம் வேறு செய்வதாக இருந்தானா ?
Sasi Kala said...
பதிலளிநீக்குநீங்க கேஸ் இல்லாத வக்கீல்னுதான் எனக்கு தெரியுமே...
நகைச்சுவையாகவும் நடு நடுவே கதை நகர்கிறது.
பாவி மனுசன் வீட்டையும் எழுதி கொடுத்து திருமணம் வேறு செய்வதாக இருந்தானா ?//
ஆமாங்க... என்ன ஆளு பாருங்க.... பாவி மனுசன்னு சொல்றதுல தப்பே இல்லை..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.