"The Additional Commissioner of Police (Traffic), Hyderabad; is of the considered view that the traffic conditions could get far better than the existing ones if involvement from the government bodies like GHMC, CPDCL, RTA and Water bodies is encouraging."
Ego hassles were impeding coordination, the HTP chief spelled out, while talking about the challenges faced by the force. “We organise regular meetings to ensure better coordination to discuss hurdles for streamlining the traffic on the ground. But the ego problems are too much,” said CV Anand at a workshop on road safety."
"Lack of coordination among government agencies, arising partly out of indolence, hierarchical issues, political interference or ego hassles, had stalled projects and jeopardised the functioning of the governmental machinery, he conceded."
*****
சரியான கல்லுளிமங்கன் என்று அவரை சபித்தவாறு தொலைபேசியை எடுத்த ஆய்வாளர் பெருமாள் பி.பி.யின் செல்ஃபோன் எண்களை சுழற்றி எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'சார்...இன்னும் ரெண்டு, மூனு நாள்ல முடிச்சிட்டு சொல்றேங்கறான்.... இதுக்கு மேல ப்ரஷர் குடுத்தா நல்லாருக்காதுன்னுட்டு நானும் சரின்னுட்டேன்....'என்றார்.
'சரி சார்.... நா கேட்டதா தெரிய வேணாம்.'
'இல்ல சார்... நா பாத்துக்கறேன்... எப்படியிருந்தாலும் என்கிட்டத்தான கையெழுத்துக்கு வரணும்? நா பாத்துக்கறேன்...'
'அதுபோறும் சார்... வச்சிடறேன்.'
தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு அறைக்கு வெளியில் நின்றிருந்த தன்னுடைய காவலரை அழைக்க மேசைமீதிருந்த அழைப்பு மணியை அழுத்தினார்.
'யெஸ் சார்.' என்று வந்து நின்ற காவலரிடம், 'யோவ் அந்த சினிமா எக்ஸ்ட்ரா கேஸ்ல எஸ்.ஐ. தன்ராஜ் டீம்ல இருந்த எஸ்.எஸ்.ஐ இருக்காரான்னு பாரு... இருந்தா வரச் சொல்லு.' என்றார்.
******
ராஜசேகர் மாதவனை வழியனுப்பிவிட்டு வசந்தை ஆஜராகச் சொன்ன வழக்குகள் நடந்துக்கொண்டிருந்த நீதிமன்ற அறையை நோக்கி நடந்தான். ஆனால் அவன் அங்கு சென்று சேர்வதற்குள் வசந்த் அன்று விசாரனைக்கு வந்திருந்த இரண்டு வழக்குகளிலும் வசந்த் வாய்தா பெற்றுவிட்டிருந்தான்.
'பொடிமட்டை முடியாதுன்னுதான் முரண்டு பண்ணுச்சி... எப்படியோ தாஜா பண்ணி வாங்கிட்டேன்... ஆனா இதுக்கு மேல முடியாதுன்னு நினைக்கறேன்....அடுத்த தடவ நீங்கதான் பாஸ் பாத்துக்கணும்....'
'சரி...' என்று புன்னகையுடன் சம்மதித்த ராஜசேகர், 'உன் கூட கொஞ்சம் பேசணுமே வசந்த்... நம்ம ரெகுலர் ரெஸ்டரண்டுக்கே போலாமா? இன்னும் லஞ்ச் கூட சாப்பிடலை.. நீ எப்படி?'
வசந்த் சிரித்தான். 'அதெல்லாம் ஆச்சி பாஸ்... நம்மாலல்லாம் பசியோட இருக்க முடியாது.'
'அது பரவால்லை... எனக்கு கம்பெனி குடு...'
இருவரும் புறப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்கு மிக அருகிலிருந்த ஒரு உணவகத்தினில் நுழைந்தனர். முன்மாலை நேரம் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. அவர்கள் வழக்கமாக அமரும் மேசையும் காலியாகவே இருந்தது. இருவரும் அங்கு அமர்ந்து அடுத்த நொடியே வந்து நின்ற சர்வரிடம் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.
'சொல்லுங்க பாஸ்.. என்ன விஷயம்?'
'அதுக்கு முன்னால ஒன்னு சொல்லணும்.... கோபால மறுபடியும் அரெஸ்ட் பண்ண விஷயம் கேட்டுட்டு சீனிவாசனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சாம்....'
'ஐயையோ அப்புறம்? இப்ப எப்படி இருக்காராம்?'
'இப்ப பரவால்லையாம். ஹார்ட் நல்லாத்தான் இருக்காம். ப்ரஷர்தான் ஜாஸ்தியாயிருச்சி போலருக்கு... ஒடனே கொண்டு வரலைன்னா பாரலைஸ் ஆயிருக்குமாம்.... நல்லவேளை அந்த நேரம் பார்த்து நம்ம பக்கத்து ஃப்ளாட்டு ஆடிட்டர் அவர பாக்கறதுக்கு போயிருக்கார்...'
'கோபாலுக்கு இந்த விஷயம் தெரியுமா பாஸ்?'
ராஜசேகர் இல்லை என்று தலையை அசைத்தான்.
'அப்போ சரி. அது இருக்கட்டும், நீங்க எதையோ பேசணும்னு சொன்னீங்களே, அத சொல்லுங்க.'
'இன்னைக்கி காலையில சீனிவாசன் சார் கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ கோபால மாதவி வீட்டு முன்னால வச்சி அன்னைக்கி சாயந்தரம் ஏழு மணிக்கி பாத்ததா அந்த பக்கத்துவீட்டு லேடி சொல்றது பொய்யின்னு கோபால் சொல்றாரேன்னு கேட்டேன்.'
'அவர் என்ன சொல்றார்?'
'அந்த லேடி பொய் சொல்றதுக்கு சான்ஸ் இல்ல, நீங்க அத கொஞ்சம் மறுபடியும் இன்வெஸ்ட்டிகேட் பண்ணுங்கன்னு சொன்னார்.'
வசந்த் வியப்புடன் அவனைப் பார்த்தான். 'மறுபடியுமா? அப்படீன்னா நாம மொதல்ல பண்ண இன்வெஸ்ட்டிகேஷன பத்தி அவருக்கு தெரிஞ்சிருச்சா?'
ராஜசேகர் முந்தையை தினம் கோபாலை சந்தித்ததிலிருந்து அன்று மாலை சீனிவாசனை சந்தித்தது வரை நடந்தவைகளை சுருக்கமாக கூறினான். 'அந்த சூழ்நிலையில எனக்கு வேற வழி தெரியல வசந்த். எனக்கு கோபால் சொல்றது மேல நம்பிக்கையில்லேன்னு அவர் நினைசிறக்கூடாதுல்ல? அதான் உன் ரிப்போர்ட்டையும் கோபால் கூட பேசினப்போ எடுத்த டேப்பையும் குடுக்க வேண்டியதா போச்சி..'
சர்வர் தங்களுடைய மேசையை நெருங்குவதைக் கண்ட ராஜசேகர் மேலே தொடராமல் அவன் உணவு தட்டுக்களை வைத்துவிட்டு செல்லும் வரை காத்திருந்தான்.
'ஒருவேளை அந்த ரிப்போர்ட்ட பார்த்ததால கூட அவருக்கு ப்ரஷர் ஏறியிருக்குமோ?' என்றான் வசந்த் சர்வர் அகன்றதும்.
'இருக்கலாம்... அத்தோட கோபால ரீஅரெஸ்ட் பண்ணதும் சேர்ந்து... பாவம் மனுஷன், வயசான காலத்துல.....'
'விடுங்க பாஸ்... அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? அதான் பொழைச்சிக்கிட்டாரே?'
'உண்மைதான்... இப்போதைக்கி அவர் out of dangerனு நினைக்கறேன்.'
'இப்ப என்ன, கோபால் எதுக்கு மறுபடியும் அங்க போனார்னு தெரியணும்? அவ்வளவுதானே...?'
'அத்தோட இன்னும் ரெண்டு மூனு விஷயம் இருக்கு வசந்த்.'
'சொல்லுங்க.'
'அந்த கார்ப்பரேஷன் பார்க்கிங் லாட் ஆள் சொன்னபடி கோபால் ஆறு மணிக்கி அங்கருந்து போயிருக்கார். அந்த பக்கத்து வீட்டு லேடி ஏழு மணிக்கி வீட்டு வாசல்ல பாத்துருக்காங்க. இந்த ரெண்டுக்கும் நடுவுல வேற யாராச்சும் மாதவி வீட்டுக்கு வந்து போக சான்ஸ் இருக்குல்ல?'
'கரெக்ட் பாஸ்... போலீஸ் மாதிரி நாமளும் ஒன் ட்ராக் மைன்ட்ல போகாம கோபால தவிர இதுல வேற யாருக்காவது தொடர்பு இருக்கான்னு பாத்துடறது நல்லதுதான். ஆனா, இதுல ஒரு பெரிய சிக்கல் என்னான்னா மாதவி கையில ஒரு செல்ஃபோன் கூட இல்லாததுதான்... இந்த காலத்துல செல்ஃபோன் இல்லாம... எப்படி பாஸ்? உண்மையிலேயே அந்த லேடிகிட்ட செல்ஃபோன் இல்லையா? இல்ல கோபால் அத கபளீகரம் பண்ணிட்டாரா?'
மாதவியிடம் துவக்க முதலே செல்ஃபோன் இல்லையென்பது ராஜசேகருக்கு தெரியும். ஏனெனில் மாதவி மழைக்குக் கூட பள்ளி பக்கம் ஒதுங்காதவள். 'எனக்கு இதெல்லாம் சரிபட்டு வரலைங்க.' என்று அவளே தன்னிடம் பலமுறை கூறியதை நினைவுகூர்ந்தான். ஆனால் அதுவே தனக்கு ஒரு பெரிய பாதுகாப்பாக அமைந்துவிட்டிருந்ததையும் உணர்ந்தான். அவளுக்கு செல்ஃபோன் மட்டும் இருந்திருந்தால் அன்று மாலை அவனை அவள் அழைத்தது இந்நேரம் போலீசுக்கு தெரிந்திருக்குமே.
'என்ன பாஸ் ஏதோ டீப்பா திங்க் பண்றாப்பல இருக்கு?'
ராஜசேகர் தன் நினைவுகளிலிருந்து மீண்டு அவனைப் பார்த்தான். 'என்ன கேட்டே?'
வசந்த் உரக்க சிரித்தான். 'என்ன பாஸ் ஏதாச்சும் ஃப்ளாஷ்பேக்கா?'
ராஜசேகர் அசடு வழிந்தான். 'ச்சேச்சே அதெல்லாம் ஒன்னும் இல்லை... நீ என்ன சொல்ல வந்தே?'
'இல்ல மாதவிக்கிட்ட உண்மையிலேயே செல்ஃபோன் இல்லையா? இல்ல இந்த மனுஷன் எடுத்து எங்கயாச்சும் ஒளிச்சி வச்சிருப்பாரான்னு கேட்டேன்.'
'அதுக்கு சான்ஸ் இல்ல வசந்த். நீதான் அவங்க சர்வன்ட் கிட்ட பேசினே இல்ல? அந்த பொம்பளயும் இல்லேன்னுதான சொன்னதா ஒன் ரிப்போர்ட்ல சொல்லியிருக்கே?'
'ஒருவேளை அவளுக்கு எதுக்கு தெரியணும்னு நினைச்சிருக்கலாமில்ல? இந்த மாதிரி பிசினஸ் பண்றவங்க ரொம்ப சீக்ரட்டிவாத்தான் எல்லாத்தையும் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க பாஸ்.'
'பிசினஸா, என்ன பிசினஸ்...' என்றான் ராஜசேகர் குழப்பத்துடன்.
வசந்த் மீண்டும் சிரித்தான். 'என்ன பாஸ் தெரியாத மாதிரி கேக்கறீங்க? அந்த லேடிக்கி நிறைய பெரிய எடத்து கஸ்டமர்ஸ் இருக்காங்க போலருக்குன்னும் கூட ரிப்போர்ட்ல சொல்லியிருக்கேனே?'
'ஓ, அதுவா?'
'அதுவேத்தான்... அப்படியே மாதவிக்கிட்ட செல்ஃபோன் இருந்திருந்தாலும் அவங்களோட கஸ்டமர்ஸ் யாரும் அதுல தங்களோட நம்பர் இருக்கக் கூடாதுங்கறதுல கேர்ஃபுல்லா இருந்திருப்பாங்க, என்ன சொல்றீங்க?'
இவன் என்ன நம்ம உள்மனசுல நினைக்கறதையே சொல்றான்? ஒருவேளை இவனுக்கும் நம்ம விஷயம்...... என்று தனக்குள் பதறிய ராஜசேகர் பேச்சை மாற்றினான். மேலும் தான் சம்பவம் நடந்த அன்று அங்கு இருந்ததை வேறு யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
'அத விடு வசந்த். இப்ப நமக்கு அது முக்கியமில்ல... உன்னால முடிஞ்சவரைக்கும் அன்னைக்கி ஆறுலருந்து ஏழு மணிக்குள்ள கோபால தவிர வேற யாராச்சும் அங்க வந்து போனாங்களான்னு விசாரி... அது போதும்.'
'சரி பாஸ்.. வேற ஏதாச்சும் இருக்கா?'
'ஆமா... இதுதான் ரொம்ப முக்கியம். இன்னைக்கி கோர்ட்ல மாதவன் கிட்டயும் பேசிக்கிட்டிருந்தேன். இந்த கேஸ்ல இப்பருக்கற பி.பி. மிஸ்டர் வேணு ரொம்ப இன்ட்ரஸ்ட்டடா இருக்கா மாதிரி தெரியுதுன்னு சொன்னார். கேஸ் செஷன்ஸ் கோர்ட்ல வர்றப்ப அவரே ஆர்க்யூ பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்லேங்கறா மாதிரி சொன்னார். பி.பிக்கென்ன இதுல அவ்வளவு இன்ட்ரஸ்ட்டுன்னு தெரியணும்...'
'ஓ, அதுவா பாஸ்... அது வேற ஒன்னும் இல்ல. கோபால் மேல வேறொரு மர்டர் கேஸ் இருந்துதுன்னு சொல்லியிருக்கேன் இல்ல? அதுல இப்ப இருக்கற பி.பி யாருக்கற வேணு சார்தான் ப்ராசிக்யூஷன் லாயர். அதான் பிபியா அவருக்கு முதல் கேசோ என்னவோ? முதல் கேஸே புட்டுக்குச்சி... அந்த கடுப்பாருக்கும்.'
வசந்தின் விசாரனை அறிக்கையில் இந்த வழக்கைப் பற்றி லேசாகத்தான் கோடிட்டு காட்டியிருந்தான். அதை அப்போது ஒரு பெரிய விஷயமாக ராஜசேகர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது அதுவே தனக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான். ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன் முன் அமர்ந்திருந்த வசந்தை பார்த்தான்.
'என்ன பாஸ் அப்படி பாக்கறீங்க?' என்றான் வசந்த் புன்னகையுடன். 'எப்படிறா இவன் மனசுல நினைக்கறதையெல்லாம் கண்டுபிடிச்சிடறான்னுதானே.... அதெல்லாம் தானா வர்றது பாஸ்..'
ராஜசேகர் புன்னகையுடன் ஒத்துக்கொண்டான். ஆனால் உன்னால மட்டும் என் மனசுலருக்கறத உண்மையிலேயே கண்டுபுடிக்க முடிஞ்சா என்ன செய்வியோ தெரியலையே என்று தனக்குள் நினைத்துக்கொண்டான்.
வசந்த் விளையாட்டாக காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சிரித்தான். 'சரி பாஸ்... இன்னும் எதையாவது கண்டுபுடிக்கணுமா?'
'இப்பத்தைக்கி இது போறும்.'
வசந்த் மேசையின் குறுக்கே குணிந்து விரலை சுண்டி காட்டினான். 'பாஸ்... போன தடவ குடுத்த ரிப்போர்ட்டுக்கே மால் இன்னும் வரலையே..'
ராஜசேகர் புன்னகையுடன் சீனிவாசன் அன்று காலை அவனிடம் கொடுத்த காசோலையை எடுத்து காட்டினான். 'இத என்கேஷ் பண்ணதும் முதல் பேமென்ட் ஒனக்குத்தான். இப்ப சொன்னதுக்கும் சேர்த்து.'
வசந்த் புன்னகையுடன் எழுந்து நின்றான். 'அப்ப சரி பாஸ்... இப்பவே ஆரம்பிச்சிடறேன்....'
ராஜசேகரும் எழுந்து சர்வர் கொண்டு வந்த பில்லை செட்டில் செய்துவிட்டு அவனுடன் உணவகத்தை விட்டு வெளியில் வந்தான்.
இருவரும் ராஜசேகரின் வாகனத்தை அடைந்து அதில் ஏறி அமர்ந்தனர். ராஜசேகர் வாகனத்தை கிளப்பியவாறு வசந்தை திரும்பி பார்த்தான். 'அப்புறம் இன்னொரு விஷயம் வசந்த்.'
'சொல்லுங்க.'
'கோபாலோட அந்த பழைய மர்டர் கேஸ்.... அத பத்தி இன்னும் கொஞ்சம் டீட்டெய்லா தெரிஞ்சா பரவால்லைன்னு நினைக்கறேன்... அதுக்கு ஏதாச்சும் சான்ஸ் இருக்கா?'
வசந்த் உதட்டை பிதுக்கினான். 'இல்ல பாஸ்... போலீஸ் டிப்பார்ட்மென்ட பத்தித்தான் தெரியுமே... அந்த கேஸ டீல் பண்ண தவுசன்ட் லைட் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற ரெக்கார்ட் ரூம் சைஸ் நம்ம வீட்டு டாய்லெட் சைஸ் கூட இருக்காது. அங்க மட்டுமில்ல பாஸ், சிட்டியிலருக்கற எல்லா ஸ்டேஷன்லயும் ரெக்கார்ட் ரூம் பத்துக்கு பத்து சைஸ்லதான் இருக்கும். Unsolved கேஸ் ஃபைல் வைக்கறதுக்கே அங்க இடமிருக்காது. இதுல முடிஞ்ச கேஸ்ங்களோட ஃபைல்ஸ் எங்க இருக்கப் போவுது? அதையெல்லாம் எஸ்.பி. ஆஃபீஸ்லயோ இல்ல கமிஷனர் ஆஃபீஸ்லயோ இருக்கற ஸ்டோர் ரூம்க்கு அனுப்பிருவாங்களாம்... அங்கல்லாம் நமக்கு ஆள் தெரியாது பாஸ்...'
'சரி அத அப்புறம் கூட பாத்துக்கலாம்... நா சொன்ன மத்த விஷயத்த மறந்துறாத.'
'இல்ல பாஸ்... மேக்சிமம் இன்னும் ரெண்டு நாள்ல உங்கள கூப்டறேன்.'
'அதுபோறும்.... நா இப்படியே சீனிவாசன பாத்துட்டு போறேன்... '
'எந்த ஆஸ்ப்பிட்டல் பாஸ்?'
'அதான்டா... கோபாலோட வய்ஃப வச்சிருக்காங்களே, அடையார்ல... மலர்னு...'
'ஓ அங்கதானா? சரி நீங்க போங்க.' என்றவாறு வசந்த் நீதிமன்ற வளாகத்தினுள் நுழைய ராஜசேகர் அடையார் செல்லும் பாதையில் விரைந்தான்.
தொடரும்..
உங்களின் இடைவிடாத முயற்சியும் ஆர்வமும் என்னை வியக்க வைக்கின்றது. தொடர்ந்து படித்து வருகின்றேன்.
பதிலளிநீக்கு// 'அத விடு வசந்த். இப்ப நமக்கு அது முக்கியமில்ல... உன்னால முடிஞ்சவரைக்கும் அன்னைக்கி ஆறுலருந்து ஏழு மணிக்குள்ள கோபால தவிர வேற யாராச்சும் அங்க வந்து போனாங்களான்னு விசாரி... அது போதும்.' //
பதிலளிநீக்குவழக்கறிஞர் இராஜசேகர் தானே போய் வலையில் வீழ்கிறார் போலும். காத்திருக்கிறேன் வசந்த்தின் அறிக்கைக்கு!
முன்கதையைப் படித்தேன்;பிரமிப்பு அடங்கவில்லை!உங்கள் உழைப்புத் தெரிகிறது!
பதிலளிநீக்குவிறுவிறுப்பாக செல்கிறது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநான் கேட்ட கேள்விக்கு இந்தப் பகுதியிலும் விடை இருப்பதை தெரிந்து கொண்டேன். நன்றி
பதிலளிநீக்குவசந்த், ராஜசேகர் இருவரும் game விளையாடுகிறார்களோஎன்று தோன்றுகிறது , கோலத்துக்குள்ளும் தடுக்குக்குள்ளும் போய்......! தொடர்கிறேன்.
வணக்கம்
பதிலளிநீக்குகதை அருமையாக உள்ளது தொடருகிறேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஜோதிஜி திருப்பூர் said...
பதிலளிநீக்குஉங்களின் இடைவிடாத முயற்சியும் ஆர்வமும் என்னை வியக்க வைக்கின்றது. தொடர்ந்து படித்து வருகின்றேன்//
கதை எழுதுவது என்னுடைய பொழுதுபோக்கு.. ஆனால் தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து எழுத முடிவதில்லை. இந்த கதையை எழுதி முடிக்க ஆறு மாதங்கள் எடுத்தன. பொழுதுபோக்காக எழுத ஆரம்பித்தது இப்போது ஒரு passion ஆக மாறி வருவதை உணர முடிகிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிஜி!
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குவழக்கறிஞர் இராஜசேகர் தானே போய் வலையில் வீழ்கிறார் போலும். காத்திருக்கிறேன் வசந்த்தின் அறிக்கைக்கு!//
எல்லாம் ஒரு அசட்டு தைரியம்தான். தன்னை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்கிற எண்ணம். ஆனாலும் அதை துவக்கத்திலேயே உறுதிப்படுத்திக்கொள்வது நல்லதல்லவா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்குT.N.MURALIDHARAN said...
விறுவிறுப்பாக செல்கிறது. தொடர்கிறேன்.
நான் கேட்ட கேள்விக்கு இந்தப் பகுதியிலும் விடை இருப்பதை தெரிந்து கொண்டேன். நன்றி//
இதே விறுவிறுப்புட கொண்டு சென்று முடித்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல். பார்ப்போம்.
உங்க கருத்துக்கு மிக்க நன்றிங்க.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குவசந்த், ராஜசேகர் இருவரும் game விளையாடுகிறார்களோஎன்று தோன்றுகிறது , கோலத்துக்குள்ளும் தடுக்குக்குள்ளும் போய்......! தொடர்கிறேன்.//
அப்படி ஒரு சொல் இருக்குல்ல? நீ தடுக்குள்ள பாய்ஞ்சா நா கோலத்துக்குள்ளவே பாய்வேன்னு? பாக்கலாம் யார் யாரவிட புத்திசாலின்னு.
வருகைக்கும் தொடர்ந்து அளித்து வரும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.
வசந்த் ராஜசேகரை இறுதியில் குற்றவாளியாக கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கோ ?
பதிலளிநீக்குவிறுவிறுப்பாக கதையை கொண்டு செல்லும் உங்களுக்கு தான் மகத்தான பாராட்டு மழையும் வாழ்த்துக்குவியலும் காத்திருக்கின்றன.
Sasi Kala said...
பதிலளிநீக்குவசந்த் ராஜசேகரை இறுதியில் குற்றவாளியாக கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கோ ?//
அது ராஜசேகர் எப்படி நடந்துக்கிட்டிருக்கார்ங்கறத பொருத்திருக்கு.
விறுவிறுப்பாக கதையை கொண்டு செல்லும் உங்களுக்கு தான் மகத்தான பாராட்டு மழையும் வாழ்த்துக்குவியலும் காத்திருக்கின்றன.//
நன்றிங்க.