17 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 20

"Many of us go through life worrying over things beyond our control, a self-inflicted torture and are not even consciously aware they are worrying. This type of excessive worry can cause so much stress, hinder our quality of life, and manifest itself in physical symptoms if it goes unnoticed."

"The thoughts that we allow to occupy our minds can be detrimental to our well-being, produce too much cortisol in our bodies (which leads to belly fat), and negative thoughts can lead to depression." Wayne Dyer: Author of several thought management books.

*****


'செஞ்ச கொலைய மறைக்கறதுக்கு கோபால் இப்படியொரு ப்ளான் பண்ணியிருக்கலாம் இல்லையா?' என்றான் ராஜசேகர்.

'புரியல...'

'கோபால் எத்தன மணிக்கி டாக்குமென்ட வாங்கிக்கிட்டு போனார்?'

'சாயந்தரம் ஆறே கால் ஆறரை இருக்கும்னு சொன்னதா ஞாபகம்.'

'அதாவது மாதவி வீட்டுக்கு முதல் தடவை போய்ட்டு வந்ததுக்கப்புறம்.'

'ஆமா'

'போலீஸ் சைடோட ஆர்க்யூமென்ட் படி கோபால் அப்பவே மாதவிய கொன்னுட்டார். அதனால, அந்த வீட்ட எழுதிக் குடுக்கற ப்ளான் எல்லாம் ஒரு கண் துடைப்புன்னு போலீஸ் சொல்றதுக்கு சான்ஸ் இருக்கு. அதாவது மாதவி கேட்டத செஞ்சி குடுக்கறதுக்கு கோபால் தயாரா இருக்கறப்போ அவர் எதுக்கு அவள கொல்லணும்னு நாம ஆர்க்யூ பண்லாம் இல்ல? அதனாலதான் இப்படியொரு செட்டப்னு போலீஸ் சொல்லும்னு சொல்ல வரேன்.'

'நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம்... ஆனா ஒன்னு ஒதைக்குதே?'

'எது?'

'மாதவிய அடிச்சி போட்டுட்டு போயிருந்தார்னா மறுபடியும் எதுக்கு அங்க போவணும்? இருக்காளா செத்துட்டாளான்னு பாக்கவா?'

'இந்த எடம்தான் ஒதைக்குது... அத்தோட எதுக்கு கோபால் அங்க மறுபடியும் போனத நம்மகிட்டவே மறைக்கறார்ங்கறதும் புரிய மாட்டேங்குது...' என்ற ராஜசேகர், 'சரி.... இப்போதைக்கி இத பத்தி பேசி டைம வேஸ்ட் பண்ண வேணாம்... நாளைக்கி மகாதேவன பாத்துட்டு யோசிப்போம்... என்ன?'

'சரி பாஸ்.. அப்போ நா கெளம்பட்டுமா?' என்றவாறு வசந்த் எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.

'டேய் இரு' என்று அவனை தடுத்து நிறுத்திய ராஜசேகர் ஏற்கனவே அவன் பெயருக்கு எழுதி வைத்திருந்த காசோலையை நீட்டினான்.

'செக்கா பாஸ்? தாங்க' என்று மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசந்த், 'வேற ஏதாச்சும் இருக்கா?' என்றான்.

'ஆமா வசந்த். மாதவியோட வீட்டுப் போன் விஷயத்த கேக்க சொன்னேனே, மறந்துட்டியா?'

'அத அடுத்த நாளே கேட்டுட்டேன்... உங்கக்கிட்ட சொல்லத்தான் மறந்துட்டேன்.'

'இப்ப சொல்லு.... உண்மையிலேயே ஃபால்ட்தானா?'

'ஆமா பாஸ்... நாலஞ்சி நாளாவே ஃபால்ட்டாத்தான் இருந்துருக்கு.... 12ம்தேதி, அதாவது மர்டரான அன்னைக்கி சாயந்தரம்தான் சரி பண்ணியிருக்காங்க.'

'BSNL லைன்மேன் போயிதான் சரி பண்ணாங்களாமா?'

'ஆமா பாஸ்... ஆனா அந்த ஏரியா லைன்மேன என்னால மீட் பண்ண முடியல... ஆனா போர்ட்லருந்து டெஸ்ட்டிங் கால் சரியா அஞ்சரை மணிக்கி போயிருக்குன்னு நம்ம ஆள் சொன்னான்.'

'யார் ரெஸ்பான்ட் பண்ணான்னு தெரிஞ்சிதா?'

'அதெப்படி பாஸ்...? எக்ஸ்சேஞ்சில இதுக்குன்னே பத்து லைன் இருக்காம். ஒரு நாளைக்கி எத்தனை கால் போவும்...? அதெல்லாம் நோட் பண்ணி வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டான்...'

'சரி வுடு.... இது வரைக்கும் தெரிஞ்சிதே.... எதுக்கும் அந்த லைன் மேன புடிக்கப் பார்...'

'எதுக்கு பாஸ்?'

'இல்லடா.... அந்த டைம்ல கோபால் அங்க இருந்தாரான்னு தெரிஞ்சிக்கத்தான்.'

'அதான் நாலே முக்கால்லருந்து ஆறு மணி வரைக்கும் அந்த பார்க்கிங் லாட்ல அவரோட வண்டி நின்னுக்கிட்டிருந்ததுக்கு சாட்சி இருக்கே... அப்புறம் என்ன?'

'அதெப்படிறா சொல்ல முடியும்?  மேக்சிமம் கால் மணி நேரத்துக்கு மேல  நா அந்த வீட்ல நா இருக்கல சார்னு கோபால் அடிச்சி சொல்றப்போ.... அத்தோட கார் அங்க பார்க் பண்ணிட்டு வேற எங்கயாச்சும் போயிருக்க சான்ஸ் இருக்கே... அப்படியே இல்லன்னாலும் இந்த ஆங்கிள்லதான்டா நாம கிராஸ் எக்ஸாமினேஷன்ல அந்த பையன மடக்க முடியும்?'

'மடக்கிற வேண்டியதுதான? அப்புறம் என்ன?'

'டேய் யோசிக்காம பேசாத... நா அப்படி மடக்கினேன்னு வையி.... ப்ராசிக்யூஷன்ல அந்த லைன் மேன புடிச்சிக்கிட்டு வந்துட்டா.... அவன் நா அஞ்சரை மணிக்கி அவர அங்க பாத்தேன்னு சொன்னான்னு வையி, நம்ம ஆர்க்யுமென்ட் வேஸ்ட்டாயிரும்.... அதனால நாமளே அவனெ புடிச்சி விசாரிச்சி வச்சிக்கறது நல்லது, என்ன சொல்றே?'

'புரியுது பாஸ்.... இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துல கூட நீங்க ரொம்பத்தான் கேர்ஃபுல்லா இருக்கீங்க... இந்த அளவுக்கு ப்ராசிக்யூஷன்ல மெனக்கெடுவாங்களாங்கறது சந்தேகம்தான்...'

'டேய், அப்படி சொல்லாத.'

'பின்னெ என்ன பாஸ்? அவங்களுக்கு தினத்துக்கும் எத்தனையோ கேஸ்ங்க...அதுல இது ஒன்னு....'

'இருக்கலாம்டா. ஆனா நமக்கு...? இதான் முதல் மர்டர் கேஸ்... அத மறந்துறாத... நாம கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தாலும் இதுவே கடைசியாவும் ஆயிரும்....'

வசந்த் சிரித்தான்.'ஓக்கே பாஸ்... அவனெ தேடிப் பிடிச்சி கேட்டுடறேன்.. போறுமா?'

'ரொம்ப லேட் பண்ணிறாத... அதுக்குள்ள பிராசிக்யூஷன் ஆளுங்க புடிச்சி கோபால அங்க பாத்தேன்னு சாட்சி சொல்றான்னு மிரட்டி வச்சிட்டாங்கன்னா நம்மக்கிட்டயும் அதையே சொன்னாலும் சொல்வான்...'

வசந்த் மீண்டும் சிரித்தான்... 'அந்த பி.பி. செஞ்சாலும் செய்வார்....' 

' சரி அத வுடு... எனக்கு இன்னொரு விஷயம் தெரியணும்.'

'இன்னொரு விஷயமா? என்ன பாஸ், மறுபடியும் முருங்கை மரம் ஏறணுமா?'

ராஜசேகர் சிரித்தான். 'இல்லடா... இதுதான் கடைசி... அதையும் தெரிஞ்சிக்கிட்டு வந்துட்டன்னா இந்த கேஸ் விஷயமா நம்ம இன்வெஸ்ட்டிகேஷன முடிச்சிக்கலாம்னு நினைக்கேன்.'

'சரி சொல்லுங்க.'

'நா நேத்தைக்கி சீனிவாசன பாக்க போயிருந்தப்போ அங்க அவரோட ஃப்ரென்ட் ஒருத்தர மீட் பண்ணேன். அவர்தான் அவங்க ஆடிட்டராம்... நாங்க குடியிருக்கற அப்பார்ட்மென்ட்லதான் அவரும் குடியிருக்கார்.'

'சரி..'

'அவர் கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ ஒரு விஷயம் சொன்னார்.'

'என்ன விஷயம்?'

'சொல்றேன்... கோபால் அவங்க கம்பெனியோட ப்ராஜக்ட அட்வர்ட்டைஸ் பண்றதுக்கு மாதவி மாதிரி ரெண்டு மூனு டிவி ஆர்ட்டிஸ்ட்டுங்கள எங்கேஜ் பண்ணியிருந்தாராம்....'

'அப்படியா? ஆள் படா கில்லாடிதான் போலருக்கு....'

'அப்படீன்னா, ரைட்டிங்ல ஏதாச்சும் இருக்குதான்னு விசாரிக்கணும். இருந்திச்சின்னா ஒவ்வொரு அக்ரிமென்டோட காப்பியும் நமக்கு வேணும்....'

'அது எதுக்கு பாஸ்?'

'சொல்றேன்.... உன் ரிப்போர்ட்ல மாதவிக்கு மாசா மாசம் கோபாலோட பர்சனல் அக்கவுன்ட்லருந்து ஒரு சிக்னிஃபிக்கன்ட் அமவுன்ட் போயிருக்குன்னு சொல்லியிருக்குல்ல?'

'ஆமா...' என்று பதிலளித்த வசந்த் சட்டென்று 'நீங்க சொல்ல வர்றது புரிஞ்சிருச்சி பாஸ்....' என்றான் உரக்க. 'அந்த பேமென்ட் இதுக்காகத்தான்னு ப்ரூஃப் செஞ்சிறலாம்... அதானே பாஸ்?'

'அதுவும் ஒரு காரணம். இன்னொன்னு,  அந்த பொண்ணுங்கள போலீஸ் புடிக்கறதுக்கு முன்னால நாம புடிச்சி கோபால பத்தி போலீஸ் கிட்ட தப்பா எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி வைக்கலாம் இல்ல..? அதுக்குத்தான்.. நீ நாளை காலைல முதல் வேலையா ராமராஜன புடிச்சி எத்தன அக்ரிமென்ட் இருக்கோ அத்தனையையும் வாங்கிரு....'

'டன் பாஸ்.. அவ்வளவுதானா இல்ல....'

'இருக்கு... நீ அவர மீட் பண்றப்போ இந்த விஷயமா போலீஸ் ஏதும் விசாரிச்சாங்களான்னும் கேட்டுரு.. நா கேள்விபட்டது சரின்னா  அந்த எஸ்.ஐ.தன்ராஜ் அவ்வளவு லேசுபட்ட ஆள் இல்ல.. கோபால் ஆஃபீஸ்லருந்து சீஸ் (seize)பண்ண டாக்குமென்ட்ஸ்லருந்து இந்த விஷயத்த நிச்சயம் மோப்பம் புடிச்சிருப்பார்.'

'ஓக்கே பாஸ்... அப்போ நாளைக்கி ராமராஜன பாத்துட்டு ஒங்களுக்கு ஃபோன் பண்றேன்... பை' என்றவாறு வாசலை நோக்கி நகர்ந்த வசந்தை தொடர்ந்து ராஜசேகரும் அலுவலகத்தை பூட்டிக்கொண்டு கிளம்பினான்.

**********

ராஜசேகர் அடுத்த நாள் காலை வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னதாக கிளம்பவே, 'என்னங்க இன்னைக்கி சீக்கிரமா கிளம்புறீங்க?' என்றாள் கோகிலா. 

'போறப்பவே கேட்டுட்டியா?' 

'இல்லைங்க... ப்ரேக்ஃபாஸ்டே இன்னும் ரெடியாவல.... அதான் கேட்டேன்.'

'.ப்ரேக்ஃபாஸ்ட்லாம் வேணாம்...  இன்னைக்கி கோர்ட்டுக்கு போற வழியில ஒருத்தர வந்து பாக்கறேன்னு சொல்லியிருந்தேன்...' என்றவாறு தன்னுடைய கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தவனை அவனுடைய மனைவியின் குரல் மீண்டும் தடுத்தது. 'சீனிவாசன் சார் டிஸ்சார்ஜ் ஆயி வந்துட்டார் தெரியுமா?'

ராஜசேகர் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தான். 'அப்படியா? எப்போ?'

'நேத்து சாயந்தரம்...'

'நீ பாத்தியா? எப்படி இருக்கார்?'

'பால்கணியிலருந்துதான் பார்த்தேன்... அவரேதான் வாசுதேவன் சார் கார்லருந்து இறங்கி போனார். ஒன்னும் வித்தியாசம் தெரியல...'

'சரி... நா போறப்போ பாத்துட்டு போறேன்.' என்றவாறு வெளியேறிய ராஜசேகர் படியிறங்கி சீனிவாசனின் அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருந்தான்.

அடுத்த சில நொடிகளில் கதவைத் திறந்த நடுத்தர வயது பெண்ணைப் பார்த்து குழம்பினான். இதற்கு முன் அவரை அங்கு பார்த்ததில்லை. ஆகவே தயக்கத்துடன், 'மிஸ்டர் சீனிவாசன்....' என்று இழுத்தான்.

'பூஜை ரூம்ல இருக்கான்... நீங்க யாருன்னு சொல்ல?'

'ராஜசேகர்னு சொல்லுங்க.... மாடியிலதான் குடியிருக்கேன்.'

'அப்படியா? நா அவரோட சிஸ்டர்... அடையார்ல இருக்கேன்... அண்ணா ஒடம்புக்கு முடியாம தனியா இருக்கானேன்னுட்டு வந்துருக்கேன்.... ஒருவாரம்... அதுக்குள்ள மருமக டிஸ்சார்ஜ் ஆயி வந்துருவா.... உக்காருங்க.. அவன் கிட்ட சொல்றேன்.'

அந்த பெண் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ராஜசேகர் ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து காத்திருந்தான். 

பூஜை அறையில் மணி அடிப்பது கேட்டது.... ஊதுபத்தி மணம் ஹால் எங்கும்..... ஜன்னல்கள் அனைத்தும் அடைத்திருக்கவே புகை வெளியில் செல்ல வழியில்லாமல்... புகை அவனுக்கு அலர்ஜி என்பதால் கைக்குட்டையை எடுத்து மூக்கை மூடியவாறு அமர்ந்திருந்தான்.....

'வாங்க சார்...' என்றவாறு ஹாலுக்குள் நுழைந்த சீனிவாசன் அவன் படும் அவஸ்தையை கண்டதும், 'மங்களம் டைனிங் ஹால் ஜன்னல தொறந்துவிடேன்..... புகை மண்டிக்கிட்டு நிக்குது பார்...' என்றார்.

'பரவால்லை சார்... எனக்கு ஸ்மோக்னா கொஞ்சம் அலர்ஜி..' என்றான் ராஜசேகர்.

'எனக்குந்தான் சார்.... என்ன பண்றது? இந்த பில்டிங்க டிசைன் பண்ணப்பவே சொன்னேன்... ஜன்னல குறைச்சிறாதீங்க க்ராஸ் வென்டிலேஷன் இருக்காது சார்னு... எஞ்சினீயர் கேட்டாத்தான? Space managementனு சொல்லிட்டு.... இப்ப பாருங்க புகை மூச்ச முட்டுது....'

அவர் வந்து சோபாவில் அமரும் வரை காத்திருந்த ராஜசேகர், 'இப்ப எப்படி இருக்கீங்க சார்?' என்றான். நான்கு நாட்களிலேயே அவர் உடல் இளைத்து முகம் சோர்ந்திருந்ததை கவனித்தான்.'சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன்.'

'ஐ ஆம் ஆல்ரைட் சார்..... அன்னைக்கி நா கொஞ்சம் ஜாஸ்தியாவே எமோஷனல் ஆய்ட்டேன்.... அதுவும் கோபால மறுபடியும் அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு கேட்டதும்..... நல்லவேளையா அப்பத்தான் வாசு வந்து ஹல்லோன்னான்.... நா மூச்சு விட முடியாம கஷ்டப்படறத பாத்துட்டு உடனே ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணிட்டான்.... நவ் ஐம் ஆல் ரைட்... ஐ.சி.யூவுல யாரோடயும் பேசாம ஒரு மூனு நாள் இருந்தது மனச மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வர்றதுக்கு யூஸ் ஆச்சி... அத்தோட ஹாஸ்பிட்டல் சீஃப் எனக்கு தெரிஞ்சவர்ங்கறதால நா கேக்காமயே அவரோட ஃப்ரென்ட் சைக்யாட்ரிஸ்ட் ஒருத்தர அனுப்பி எங்கிட்ட பேசவைச்சார்.... He was very helpful....நம்ம கன்ட்ரோல்ல இல்லாத எந்த விஷயத்த பத்தியும் நாம வொர்றி பண்றதுல எந்த பிரயோசனமும் இல்லேன்னு சொன்னார்.... உண்மைதான்.... சொல்றது ரொம்ப ஈசி ஆனா அத ப்ராக்டிக்கலா செய்யிறதுதான் ரொம்ப கஷ்டம்னு சொன்னேன்.... சிரிச்சார்.... ஆனா அவர் போனதுக்கப்புறம் யோசிச்சி பார்த்தேன்... அவர் சொல்றதுல இருக்கற நியாயம் புரிஞ்சிது....  நடக்கணும்னு இருக்கறது நடக்கத்தான் செய்யும்னு இப்போ புரியுது... அது தெரிஞ்சதுக்கப்புறம் மனசு லேசான மாதிரி ஒரு ஃபீலிங்...'

அவருடைய குரலில் இருந்தது நிம்மதியா, விரக்தியா என்பது புரியாமல் அமர்ந்திருந்தான் ராஜசேகர். அதற்கு மேல் அமர்ந்திருந்தால் மகாதேவனை சந்தித்துவிட்டு நீதிமன்றத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்தவன் எழுந்து நின்றான். 'இன்னைக்கி சீக்கிரம் கோர்ட்ல இருக்கணும் சார்... ஈவ்னிங் வர்றப்போ மீட் பண்றேன்..'

சீனிவாசன் புன்னகையுடன் எழுந்து வழியனுப்பினார். 'சரி சார்... இனி எதை பத்தியும் கவலைப்படப் போறதில்லை.... எல்லாம் பகவான் விட்ட வழி... ஏதாச்சும் கேக்கணும்னா கூப்டறேன்.... யூ கேரி ஆன்..'

நேற்று மகாதேவனிடம் பேசியதை சீனிவாசன் கேட்காததிலிருந்தே அந்த  விஷயம் இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான். ஆகவே அவரை இன்று சந்திக்கவிருந்ததைப் பற்றியும் கூற வேண்டாம் என்ற முடிவுடன், 'டேக் கேர் சார்..' என்றவாறு விடைபெற்றுக்கொண்டு படியிறங்கி வாகனத்தை அடைந்தான்.

வழியெங்கும் இருந்த டிராஃபிக் நெரிசலில் நீந்தி மாம்பலத்தை அடையும் வரை அவனுடைய கவனம் முழுவதும் வாகனத்தை செலுத்துவதிலேயே இருந்தது. சென்னையின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்றான மாம்பலம் குறுகிய சாலைகளுக்கு பெயர்போனது என்றாலும் மகாதேவனுடைய வீடு அமைந்திருந்த சாலை சற்று விசாலமானதாகவே இருந்தது. 

சாலையிலிருந்து வாசல்வரை சுமார் முப்பதடிக்கு முப்பது என்ற அளவில் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த ஒரு குட்டி புல்தரையுடன் கூடிய அந்த பங்களா அறுபதுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இப்போதுள்ள கட்டடங்களைப் போலல்லாமல் அழகான வடிவமைப்புடன் கட்டப்பட்டிருந்ததுடன் பொருத்தமான வர்ணங்களை தாங்கி பார்க்கவே மிக ரம்மியமாக இருந்தது. 

பூட்டப்படாமலிருந்த இரும்பு கேட்டை திறந்து புல்தரையை ஒட்டியிருந்த மண் பாதையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாசலை நெருங்கிய ராஜசேகரை அவனுடைய வருகைக்கு காத்திருந்தவரைப் போன்று வாசற்கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தார் மகாதேவன் 'வாங்க சார்' என்றவாறு.

வாசலை அடுத்து அமைந்திருந்த விசாலமான  வரவேற்பறையில் கிடந்த சோபாவைக் காட்டி, 'சித்த ஒக்காருங்கோ.. வந்துர்றேன்.' என்றவாறு வீட்டுக்குள் நுழைய சோபாவில் அமர்ந்த ராஜசேகர் அமர்ந்து ஹாலை சுற்றி பார்வையை அலையவிட்டான். சுவரெங்கும் மகாதேவனின் பெற்றோர், உறவினருடைய புகைப்படங்கள். பெரிய குடும்பம் போலிருக்கிறது என்று நினைத்தான். 

'என்ன சார் வீட்ட கண்டுபுடிக்கிறதே பிரம்மபயத்தனமா இருந்துருக்குமே?' என்று தன்னுடைய ஜோக்கை தானே ரசித்து சிரித்தவாறு வந்து அமர்ந்த மகாதேவனைப் பார்த்து அன்று நீதிமன்ற வளாகத்தில் தன்னை எகத்தாளமாக பார்த்தவரா இவர் என்று வியந்தான்.

'இல்ல சார்.... மேற்கு மாம்பலம்தான் கொஞ்சம் நெருக்கடியான இடம்னு நினைக்கேன்... இந்த சைடுல ரோடுங்கக் கூட நல்லா ப்ராடா இருக்கு....' 

'கரெக்ட்... இந்த ஏரியா கூட கசகசன்னுதான் இருந்து... நம்ம ரோட்டுல ரெண்டு மூன் பில்டர்ஸ் பழைய வீடுங்கள எல்லாம் அப்படியே வாங்கி இடிச்சி அப்பார்ட்மென்ட்ஸா கன்வர்ட் பண்ணிட்டாங்க... அதான் பாக்கறதுக்கு டெவலப்ட் ஏரியா மாதிரி இருக்கு....'

'அப்படியா சார்...'

'சரி... அது இருக்கட்டும்... கோபால ரீ-அரெஸ்ட் பண்ற அளவுக்கு அப்படி என்ன செஞ்சிட்டான்?'

'அவர மர்டர் ஸ்பாட்டுல பாத்ததா சொன்ன லேடிக்கு இவர் ஃபோன் பண்ணி மிரட்டுனதா போலீஸ் சொல்றாங்க சார்.'

மகாதேவன் சிரித்தார். 'கடவுளே, கடவுளே, நீங்க அவன் கிட்ட யாருக்கு ஃபோன் பண்ணாதன்னு வார்ன் பண்ணலையா?'

'சொன்னேன் சார்... சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ற வரைக்கும் ஒங்க அப்பாவ தவிர வேற யார் கூடயும் பேசாதீங்கன்னு சொல்லியும் கேக்காம....'

'சொல்லியுமா அப்படி செஞ்சான்? அவனுக்கு வயசாச்சே தவிர புத்தி இல்ல சார்... கொஞ்ச நாளாவே அதுவும் அந்த பொண்ணோட பழக்கம் வச்சதுலருந்தே ஆளே மாறிப்போய்ட்டான்... யார் சொன்னாலும் கேக்கறதில்ல.'

ராஜசேகர் இதற்கு எப்படி பதிலளிப்பது என தெரியாமல் மவுனமாய் அமர்ந்திருந்தான். தான் கேட்க வந்ததை கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றால் போதும் என்றிருந்தது அவனுக்கு. ஆனால் நாமாக எப்படி ஆரம்பிப்பது என்பது தெரியாமல் அமர்ந்திருந்தான். 

மகாதேவன் அவனுடைய எண்ணத்தை அறிந்துக்கொண்டவர்போல், 'இப்போ ஒங்களுக்கு கோபால் அன்னைக்கி எங்கிட்ட போன்ல என்ன சொன்னான்னு தெரியணும், அதானே சார்?' என்றார்.

தொடரும்

9 கருத்துகள்:

  1. பெயரில்லா2:52 PM

    வணக்கம்
    கதையின் ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. /மகாலிங்கம் அவனுடைய எண்ணத்தை /..... மகாலிங்கம்...? கவனமாகப் படிக்கிறேன் இல்லையா.? அட ...போதுமப்பா சாமி. சஸ்பென்ஸ்... தாங்கவில்லை....! பிஎஸெனெல் லைன் மேன் தொடர்பு சரியா என்று கேட்டபோது அந்தக் காலை ராஜசேகர் அட்டெண்ட் செய்தாரோ..?..

    பதிலளிநீக்கு
  3. //கோபால் அன்னைக்கி எங்கிட்ட போன்ல என்ன சொன்னான்னு தெரியணும், அதானே சார்?'//

    வழக்கறிஞர் ராஜ்சேகர் மட்டுமல்ல நாங்களும் தெரிந்துகொள்ளத்தான் காத்திருக்கிறோம்!

    ஸஸ்பென்சை சீக்கிரம் உடையுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. பரபரப்பாக உள்ளது, சீக்கிரம் உடைங்க சார்..

    பதிலளிநீக்கு
  5. 2008rupan said...
    வணக்கம்
    கதையின் ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள//

    இந்த கதையின் துவக்கத்தை இப்போதுதான் படித்தீர்களா? நன்றி.

    பதிலளிநீக்கு
  6. G.M Balasubramaniam said...
    /மகாலிங்கம் அவனுடைய எண்ணத்தை /..... மகாலிங்கம்...? கவனமாகப் படிக்கிறேன் இல்லையா.? //
    சூப்பர். மகா என்று தொடங்கினாலே லிங்கம் என்றுதான் வருகிறது. இப்படி பல இடங்களில் தவறு செய்திருந்தேன். எல்லாவற்றையும் சரி செய்துவிட்டதாக நினைத்துத்தான் பதிவு செய்தேன். ஆனாலும் ஒரு இடத்தில் அப்படியே இருந்துவிட்டது போலிருக்கிறது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி சார். சரிசெய்துவிடுகிறேன்.

    அட ...போதுமப்பா சாமி. சஸ்பென்ஸ்... தாங்கவில்லை....!//

    இதே உடைச்சிட்டேன்.

    பிஎஸெனெல் லைன் மேன் தொடர்பு சரியா என்று கேட்டபோது அந்தக் காலை ராஜசேகர் அட்டெண்ட் செய்தாரோ..?..//

    அவர் ஆறு மணிக்கி மேலதான அந்த வீட்டுக்குள்ள போனார்?

    பதிலளிநீக்கு
  7. வே.நடனசபாபதி said...
    //கோபால் அன்னைக்கி எங்கிட்ட போன்ல என்ன சொன்னான்னு தெரியணும், அதானே சார்?'//

    வழக்கறிஞர் ராஜ்சேகர் மட்டுமல்ல நாங்களும் தெரிந்துகொள்ளத்தான் காத்திருக்கிறோம்!

    ஸஸ்பென்சை சீக்கிரம் உடையுங்கள்!//

    இன்னைக்கி தன்னால உடைஞ்சிரும்...

    உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  8. வேடந்தாங்கல் - கருண் said...
    பரபரப்பாக உள்ளது, சீக்கிரம் உடைங்க சார்..//

    இன்னைக்கி உடைஞ்சிரும் கருண். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. எந்த இடத்திலாவது சஸ்பென்ஸ் உடைந்திருக்கும் என்று தேடினால் மிக கவனமாக அல்லவா எங்கும் பரபரப்பை தவற விடாமல் நகர்த்தியிருக்கிங்க.

    பதிலளிநீக்கு