15 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 18

"Anger is an emotional state that varies in intensity from mild irritation to intense fury and rage, according to Charles Spielberger, PhD, a psychologist who specializes in the study of anger. Like other emotions, it is accompanied by physiological and biological changes; when you get angry, your heart rate and blood pressure go up, as do the levels of your energy hormones, adrenaline, and noradrenaline."

"Anger is a completely normal, usually healthy, human emotion. But when it gets out of control and turns destructive, it can lead to problems. Problems at work, in your personal relationships, and in the overall quality of your life. And it can make you feel as though you're at the mercy of an unpredictable and powerful emotion. This brochure is meant to help you understand and control anger."

*****


இப்போது வாசுதேவன் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தார்.

'உங்களால பதில் சொல்ல முடியல இல்ல? இதுமாதிரிதான் சார் இருக்கு நீங்க கேட்ட கேள்வியும்.'

வாசுதேவன் சங்கடத்துடன் அவனை பார்த்தார். 'அதுக்கில்ல சார். ஏற்கனவே அஞ்சாறு வருசத்துக்கு முன்னால அவரோட ஃபர்ஸ்ட் வய்ஃப இவன்தான் மர்டர் பண்ணான்னு சொல்லி ஒரு கேஸ புக் பண்ணி விசாரனைன்னு பண்ணாங்க. ஆனால் கோர்ட்ல சரியா ப்ரூஃப் பண்லைன்னு முடிவாயிருச்சி... அதான் இதுலயும்.....'

கோபாலின் மீது போடப்பட்டிருந்த வழக்கைப் பற்றிய முழு விவரங்கள் இவரிடமிருந்து கிடைக்க வாய்ப்புள்ளதோ என்று நினைத்தான் ராஜசேகர். கேட்டுத்தான் பார்ப்போமே என்ற முடிவுடன் அவரை பார்த்தான். 'அப்படியொரு கேஸ் அவர் மேல இருந்ததே இப்போ நீங்க சொல்லித்தான் சார் தெரியும். எதுக்கு அவர் மேல போலீசுக்கு சந்தேகம் வந்துதுன்னு நா தெரிஞ்சிக்கலாமா?'

'சொல்றேன்.' என்ற வாசுதேவன் எழுந்து சென்று கைகளை அலம்பிவிட்டு வரும் வழியில் இரண்டு கோப்பைகளில் தேநீர் வாங்கிக்கொண்டு வந்து ராஜசேகரிடம் ஒரு கோப்பையை கொடுத்துவிட்டு அமர்ந்தார். 'எனக்கும் சீனிவாசனுக்கும் ஏறக்குறைய இருபது வருசமா பழக்கம் சார். அவர் கன்ஸ்ட்ரக்‌ஷன் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணதுலருந்தே நாந்தான் கணக்கு வழக்கெல்லாம் பாத்துக்கறேன்.  அவங்க பிசினஸ் மட்டுமில்லாம பர்சனல் டாக்ஸ் விஷயமும் என் பொறுப்புலதான். எனக்கு தெரியாம எந்த ஃபைனான்ஷியல் டிரான்சாக்‌ஷனும் நடந்ததில்ல. ஆனா கோபால் தலையெடுத்ததுக்கப்புறம் ஃபைனல் பாலன்ஸ் ஷீட் போடறத தவிர என்னெ எதுலையும் கன்சல்ட் பண்ணமாட்டான்.'

'என்ன காரணம் சார்?'

'எங்க தன்னோட இர்ரெகுலர் டீலிங்ஸ் எல்லாம் வெளியில தெரிஞ்சிருமோன்னுதான். வேறென்ன?'

'அப்படீன்னா?'

வாசுதேவன் பதிலளிக்காமல் அடுத்த மேசையில் வந்து அமர்ந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு தணிந்த குரலில் பேசினார். 'அவனுக்கும் அந்த மாதவி பொண்ணுக்கும் இடையில தேவையில்லாத டீலிங்ஸ் எல்லாம் இருக்குது சார். அத நா ஒருதரம் பார்த்துட்டு எதுக்கு கோபால் இந்த பொண்ணுக்கு மாசா மாசம் இவ்வளவு பெரிய அமவுன்ட குடுக்கறீங்கன்னு கேட்டேன். அதுலருந்து என்னெ கம்ப்ளீட்டா கட் பண்ணிட்டான். இதப்பத்தி அப்பாக்கிட்ட சொன்னான்னு ஒரு மாதிரி இழுத்தான். அவன் மொகத்துல அப்படியொரு கொலவெறி.... நா பயந்துபோயி நீயாச்சி ஒன் பிசினஸாச்சின்னு ஒதுங்கிட்டேன்...'

'அப்படியா? என்னால நம்பவே முடியல சார். அவ்வளவு கோபக்காரரா கோபால்?' கோபாலின் கோபத்தை நேரிலேயே பார்த்திருந்தாலும் அதைப் பற்றி தெரியாததுபோல் கேட்டான் ராஜசேகர். 

'ஆமா சார். பார்த்தா சாதுவாட்டந்தான் இருப்பான். ஆனா கோவம் வந்தா பயங்கரமா ரியாக்ட் பண்ணுவான்.... இவ்வளவு ஏன், அவனோட செக்கன்ட் வய்ஃப் இதே ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்காங்களே தெரியுமா உங்களுக்கு?'

அதுவும் ராஜசேகருக்கு தெரிந்துதான் இருந்தது. 'அப்படியா சார்?' என்றான். 'ஏன்.. அவங்களுக்கு என்ன ஒடம்புக்கு?'

'அதுக்கும் இவந்தான் சார் காரணம். அந்த பொண்ணெ இவன் பண்ணாத டார்ச்சரே இல்ல. சீனிவாசன் கிட்ட வந்து சொல்லி அழுததே நானே நேர்ல பாத்துருக்கேன். ஆனா சீனிவாசன் மட்டும் நம்பவே மாட்டான். மருமகளையே குத்தம் சொல்வான். நா ஏதாச்சும் சொல்லப் போக அவங்க ஃபேமிலி மேட்டர்ல நா தலையிடறா மாதிரி எங்க அவர் நினைச்சிருவாரோன்னு பேசாம இருந்துருவேன்... ரெண்டு வாரத்துக்கு முன்னால சண்டை பெரிசாயி... என்ன பண்ணானோ தெரியல அந்த பொண்ணு மயக்கம் போட்டு வுழுந்துருச்சி.... யார் கிட்டயும் சொல்லாம இங்க கொண்டு வந்து சேர்த்துட்டான். நாலஞ்சி நாள் கழிச்சித்தான் சொன்னானாம். என்னடான்னு அவர் கேட்டதுக்கு. அவளுக்கு ப்ரஷர் ஜாஸ்தியாயி ஹிஸ்டீரியா மாதிரி வந்துருச்சி. அதுக்குத்தான் ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துருக்கேன்னு சொல்லிட்டானாம்.'

'அப்படித்தான் எங்கிட்டயும் கோபால் சொன்னார்' என்ற வார்த்தைகள் ராஜசேகரின் நுனிநாக்கு வரை வந்தது. அதை அடக்கிக்கொண்டு 'இப்ப எப்படி இருக்காங்க சார்' என்றான்.

'அத ஏன் கேக்கறீங்க? இங்க வந்ததுக்கப்புறம் செக் பண்ணதுல அந்த பொண்ணு உடம்பு முழுசும் பெல்ட்டால அடிச்ச தழும்புங்க இருக்கறத பார்த்துட்டு டாக்டர்ஸ் ஸ்டன்னாயிட்டாங்களாம். சீஃப் டாக்டர் சீனிவாசனுக்கு ரொம்ப தெரிஞ்சவர்ங்கறதால அத வெளியில சொல்லாம ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க. இன்னைக்கித்தான் போய் பார்த்தேன். She appears to be fine... but emotionally she is still recovering... வீட்டுக்கு போறீங்களான்னு கேட்டா வேணாம் டாக்டர்.. இன்னும் கொஞ்ச நாள் இருக்கேனேன்னு சொல்லுதாம்.. இது போறாதுன்னு இப்போ சீனிவாசனும் இதே ஹாஸ்பிட்டல்ல... ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொன்னாலும்..... இவ்வளவு வசதி இருந்தும்... கோபால் ஒருத்தனால இந்த ஃபேமிலி இந்த பாடு படவேண்டியிருக்கு... எல்லாம் தலையெழுத்துன்னு சொல்லாம வேற என்ன சொல்றது?'

'கோபால் அரெஸ்ட் விஷயம் அவங்க வய்ஃபுக்கு தெரியுமா சார்?'

'தெரியாதுன்னுதான் நினைக்கறேன். தெரிஞ்சிருந்தா வீட்டுக்கு போகமாட்டேன்னு அந்த பொண்ணு சொல்லியிருக்காது.'

'அவங்க ரெண்டு பேரும் தனியாவா குடியிருந்தாங்க?'

'ஆமா சார்... அப்பா கூட இருந்தா எங்க தன்னோட எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீசுங்கள கண்டுபுடிச்சிருவாரோன்னு கோபால் நினைச்சிருப்பான்.'

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது ராஜசேகருக்கு புரிந்தது... இருப்பினும், 'அப்படீன்னா?' என்றான் ஒரு போலியான வியப்புடன். 

வாசுதேவன் சிரித்தார். 'அதான் சார்... அந்த மாதவி மாதிரி பொண்ணுங்களோட இவனுக்கு இருந்த ரிலேசன்ஷிப்...'

'என்ன சார் சொல்றீங்க? அந்த லேடி மட்டுமில்லாம வேற பொண்ணுங்களோடயும்......'

'இருக்க சான்ஸ் இருக்குன்னு சொல்றேன்.... இவன் இப்படி சுத்திக்கிட்டிருக்கறது தெரிஞ்சிதான் சீனிவாசன் ஃபர்ஸ்ட் வய்ஃப் செத்து ஒரு வருசம் முடியறதுக்குள்ளேயே மறுபடியும் மேரேஜ் பண்ணி வச்சார்... சொந்தத்துல யாரும் இவனுக்கு பொண் குடுக்க தயாராயில்ல..... அப்புறம் பேப்பர்ல ஆட் குடுத்து அதுல வந்த பொண்ணுங்கள்ல ஒருத்திய கட்டி வச்சார்.
வந்த பொண்ணு ஸ்ட்ரிக்டா இருந்து இவனெ திருத்தும்னு சீனிவாசன் நினைச்சிருப்பார் போல... ஆனா வந்தது பரம சாது. வெளியுலகமே தெரியாம வளர்ந்த பொண்ணு போலருக்கு. அதுக்கு பேரண்ட்ஸ் வேற இல்ல.. ஒரேயொரு அண்ணா மட்டுந்தான். அவங்களும் இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதோட எங்க பொறுப்பு தீர்ந்துதுங்கறா மாதிரி ஒதுங்கிட்டாங்க... கல்யாணம் ஆயி ஒரு அஞ்சாறு மாசம் ஒழுங்காருந்தான். அப்புறம் பழைய குருடி கதவ திறடிங்கறா மாதிரி... எக்கசக்க பணம். ஒரே பையன். சீனிவாசன் பிசினஸ் பண்ணது போறும்னு ஒதுங்கிக்கிட்டதும் அவனுக்கு வசதியா போயிருச்சி.... தட்டிக்கேட்ட என்னையும் ஒதுக்குனதுக்கப்புறம் அவனெ கேக்க ஆளே இல்ல.... கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிக்கி ஆட்ஸ் (Ads) பண்ணணும் சொல்லிட்டு மாதவி மாதிரி டிவி சீரியல்ல நடிக்கற ரெண்டு மூனு பொண்ணுங்களோட அக்ரிமென்ட் போடறது... ஆட்ஸ் எடுகறானோ இல்லையோ அதுங்கள தன்னோட சபலத்துக்கு யூஸ் பண்ணிக்குவான்.... மாசா மாசம் அக்ரிமென்ட் போட்டபடி ஒரு அமவுன்ட செட்டில் பண்ணிருவான்.... ஒருவேளை அவன் குடுக்கற அமவுன்ட் போறாதுன்னு இந்த பொண்ணு தகராறு பண்ணியிருக்குமோ என்னவோ... இவனுக்குத்தான் கோவம் வந்தா என்ன பண்ணுவான்னே தெரியாதே...'

ராஜசேகருக்கு முதல் மனைவி கொலையை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள ஆசை... ஆனால் அதைப் பற்றி குறிப்பாக கேட்டால் வாசுதேவன் தவறாக எடுத்துக்கொள்வாரோ என்று நினைத்தான். 

அவனுடைய பார்வையின் பொருளை உணர்ந்தவர்போல் வாசுதேவன் கேட்டார். 'என்ன சார் எதையோ கேக்க வந்து தயங்கறா மாதிரி தெரியுது? சும்மா கேளுங்க...'

'இல்ல... கோபால் ஃபர்ஸ்ட் வய்ஃப் இறந்ததுக்கு கோபால் மேல....'

'ஏன் சந்தேகம் வந்துச்சின்னு கேக்கறீஙளா?'

ராஜசேகர் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான்.

'ஃபுல் டீட்டெய்ல்ஸ் தெரியாது சார்... ஆனா அந்த பொண்ணு பாத்ரூம்ல குளிக்கறப்போ வழுக்கி விழுந்து பின்னந்தலையில அடிபட்டு செத்து கிடந்ததா கேள்வி.'

'அப்போ வீட்ல யாரும் இல்லையா? வேலைக்காரங்க யாரும்....'

'வேலைக்காரங்க அந்த சமயத்துல இல்ல போலருக்கு... ஆனா கோபால் முதல் மாடியிலதான் இருந்துருக்கான்... சத்தம் ஒன்னும் கேக்கலன்னுட்டானாம்... அந்த பொண்ணு எப்ப அடிபட்டு விழுந்ததுன்னே தெரியாது, நா லஞ்சுக்கு கீழ வந்தப்போ அத காணாம தோடுனப்போ பாத்ரூம் கதவு வழியா ரத்தத்தப் பார்த்துட்டு பூட்டியிருந்த கதவ ஒடச்சி பார்த்தேன்னு சொல்லிட்டான்.... அத போலீஸ் நம்பாம கேஸ் ஃபைல் பண்ணாங்க... ஆனா பிராசிக்யூஷன் சரியா ப்ரூஃப் பண்ணலைன்னு இவனெ அக்விட் பண்ணிட்டாங்க... அதே மாதிரிதான் இந்த பொண்ணும் செத்துருக்கு... அதனாலதான் இதுலருந்தும் அவன் தப்பிச்சிருவானான்னு ஒங்கள கேட்டேன்.'

துவக்கத்தில் இந்த வழக்கிலிருந்து தான் தப்பித்துக்கொள்வது அத்தனை சுலபமல்ல என்று எண்ணியிருந்த ராஜசேகர் அது ஒரு பெரிய விஷயமே அல்ல என்று எண்ணி உள்ளூர நிம்மதியடைந்தான். ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கோபாலை ஆதரித்து பேசினான். 'இப்ப எதுவும் டிஃபனட்டா சொல்ல முடியாது சார். அவர் கொலையே செஞ்சிருந்தாலும் அவர எப்படியாச்சும் டிஃபன்ட் பண்ண வேண்டியதுதான் என் வேலை... நா மட்டுமில்ல வேற எந்த க்ரிமினல் லாயராருந்தாலும் அதத்தான் செய்வாங்க...' என்றவன் இதுவரை பேசியது போதும் என்பதுபோல் எழுந்து நின்றான். அதற்கு மேலும் பேச்சை தொடர்ந்தால் தன்னையுமறியாமல் உள்ளத்தில் இருப்பதை வெளியில் காட்டிவிடுவோமோ என்ற பயமும் அவனுள் இருந்தது. 'அப்போ கிளம்பலாமா சார்?'

வாசுதேவனும் எழுந்து நின்றார். 'நீங்க கெளம்புங்க சார்... நா சீஃப் டாக்டர் ரவுன்ட்ஸ் முடிச்சி வர்ற வரைக்கும் இருந்து பார்த்துட்டு வந்துடறேன்...'

இருவரும் உணவகத்திலிருந்து வெளியே வந்தனர். ராஜசேகர் தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்தான்.

*******

அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் ராஜசேகருக்கு வழக்குகள் தொடர்ந்து இருந்ததால் மாதவியின் கொலை வழக்கைப் பற்றி சிந்திக்க முடியாமல் போனது.

மூன்றாவது நாள் மாலை ஆறு மணி!

தன்னுடைய குமாஸ்தா புறப்பட்டுச் சென்றதும் அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு எழுந்தான். 

அவனுடைய செல்ஃபோன் சிணுங்கியது. 

வசந்த்!

'பாஸ் ஃப்ரீயா இருக்கீங்களா?'

'ஆமா எங்கருந்து பேசறே?'

'ஒங்கள பாக்கத்தான் வந்துக்கிட்டிருக்கேன். அதான் நீங்க இருக்கீங்களான்னு செக் பண்ணலாம்னு....'

'இப்ப எங்க இருக்கே?'

'இன்னும் அஞ்சி நிமிஷத்துல அங்க இருப்பேன் பாஸ். இருப்பீங்களா?'

'நா சொல்லியிருந்த விஷயத்த விசாரிச்சிட்டியா?'

'அது விஷயமாத்தான் பாஸ்... வந்து சொல்றனே?'

'சரி வா... வெய்ட் பண்றேன்.'

அலுவலக கதவுகளை திறந்து லைட், ஃபேன் ஸ்விட்சுகளை ஆன் செய்து விட்டு தன் இருக்கையில் அமர்ந்து 

காத்திருந்தான். 

தொடரும்...

13 கருத்துகள்:


  1. கதையைக் கொண்டு செல்லும் விதம் வாசகர்களுக்கு கோபால் மேல் சந்தேகம் ஊர்ஜிதமாககவேண்டும் என்பதுபோல் இருக்கிறது. அவ்வப்போது ஏதாவது புது மேட்டரைக் கூறி ஆர்வம் குறையாமல் எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பரபரப்ப்பு குறையாமல் போய்க்கிட்டிருக்கு. ஒரே நாளில் ரெண்டு பதிவு. உங்க வேகமும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  3. வழக்கின் சிக்கல் இன்னும் அதிமாகும் போல் தெரிகிறது. ‘வசந்த்’தின் வருகைக்கு வழக்கறிஞர் ராஜசேகர் காத்திருப்பதுபோல், நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. As in the story, to all the parents, their kids are perfect all the time. In other terms, true love cannot see fault at all. I have seen this happening in true life. This has positive and negative impacts in life. Waiting the see how the how the mystery unfolds.

    பதிலளிநீக்கு
  5. T.N.MURALIDHARAN said...
    பரபரப்ப்பு குறையாமல் போய்க்கிட்டிருக்கு. ஒரே நாளில் ரெண்டு பதிவு. உங்க வேகமும் சூப்பர்//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  6. வேடந்தாங்கல் - கருண் said...
    தொடருங்கள்...//

    சரிங்க... நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வே.நடனசபாபதி said...
    வழக்கின் சிக்கல் இன்னும் அதிமாகும் போல் தெரிகிறது. ‘வசந்த்’தின் வருகைக்கு வழக்கறிஞர் ராஜசேகர் காத்திருப்பதுபோல், நானும் காத்திருக்கிறேன்.//

    கடைசி வரைக்கும் இது ஒரு பெரிய சிக்கலாத்தான் இருக்கும்போல.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  8. Packirisamy N said...
    As in the story, to all the parents, their kids are perfect all the time. In other terms, true love cannot see fault at all. I have seen this happening in true life. This has positive and negative impacts in life. //

    I agree. Children at most of the houses get spoiled mainly because of such an attitude from the parents, especially the mother.

    Thanks for your valuable observsation.

    பதிலளிநீக்கு
  9. நான் எழுதிய கமெண்ட் என்னாயிற்று. ? காக்கா ஊச்...? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கோபால் மேல் பல குற்றச்சாட்டுகளை ஏன் அந்த நபர் இப்படி சொல்கிறார் உண்மையிலேயே அந்த மனிதன் அப்படித்தான படிப்பவர்களை இப்படியும் அப்படியும் யோசிக்க முடியாமல் கதையை நகர்த்ததி செல்லும் விதம் சிறப்புங்க.
    2 பொண்டாட்டி இருந்து அந்த மனுசனுக்கு ஏன் புத்தி இப்படி போகுது ?

    பதிலளிநீக்கு
  11. Balasubramaniam said...
    நான் எழுதிய கமெண்ட் என்னாயிற்று. ? காக்கா ஊச்...? தொடர்கிறேன்.//

    ஐயோ... அதென்ன கமென்ட் சார்? நா பாக்கலையே, Spamம்ல கூட இல்லையே.... இருந்தாலும் சாரிங்க.

    தொடரும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  12. 9:18 PM
    Sasi Kala said...
    கோபால் மேல் பல குற்றச்சாட்டுகளை ஏன் அந்த நபர் இப்படி சொல்கிறார் உண்மையிலேயே அந்த மனிதன் அப்படித்தான படிப்பவர்களை இப்படியும் அப்படியும் யோசிக்க முடியாமல் கதையை நகர்த்ததி செல்லும் விதம் சிறப்புங்க.
    2 பொண்டாட்டி இருந்தும் அந்த மனுசனுக்கு ஏன் புத்தி இப்படி போகுது ?//

    இந்த புத்தியாலதான் ஒருத்தி கூட கூட அவரால ஒழுங்கா குடும்பம் நடத்த முடியல. இந்த மாதிரி சபல புத்தியுள்ள ஆண்கள் ஏன் பெண்கள் கூட நிறைய பேர் இருக்காங்க....வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு