Observation by the Judge in Abhinanadan Jha vs. Dinesh Mishra(AIR 1968 SC 117) "Investigation and prosecution are two different facets in the administration of criminal justice. The role of Public Prosecutor is inside the court, whereas investigation is outside the court. Normally the role of Public Prosecutor commences after investigating agency presents the case in the court on culmination of investigation. Its exception is that Public Prosecutor may have to deal with bail applications moved by the parties concerned at any stage. Involving the Public Prosecutor in investigation is unjudicious as well as pernicious in law. At any rate no investigating agency can be compelled to seek opinion of a Public Prosecutor under the orders of court."
"We have already pointed out that the investigation, under the CRPC, takes in several aspects, and stages, ending ultimately with the formation of an opinion by the police as to whether, on the material covered and collected a case is made out to place the accused before the Magistrate for trial, and the submission of either a charge- sheet, or a final report is dependent on the nature of the opinion, so formed. The formation of the said opinion, by the police, as pointed out earlier, is the final step in the investigation, and that final step is to be taken only by the police and by no other authority."
******
'வந்தார் சார்.' என்று பதிலளித்தார் ராமராஜன். 'ஒரு ஆறே கால் இருக்கும. திரும்பி வந்தார். ஆனா அஞ்சி நிமிசத்துல கிளம்பிட்டார்.'
'அப்போ அங்கருந்துதான் லாயருக்கு ஃபோன் பண்ணிருக்கார், சரிதானே?'
'இருக்கலாம் சார்... ஷ்யுவரா சொல்ல முடியல.'
'ஏன் கேக்கறேன்னா, அந்த கால் சாயந்தரம் 6.20க்கு அவர் ஃபோன்லருந்து போயிருக்கு.'
'அப்படியா சார்? அப்பன்னா நீங்க சொல்றது சரிதான் சார். கேபின்லருந்து செஞ்சிருப்பார்.'
'அவரோட கேபின் பக்கத்துலதான ஒங்க சீட் இருக்கு? அங்கருந்து பேசறது நிச்சயமா வெளியில கேட்டுருக்கணுமே?'
'இல்ல சார்... கேக்காது. நீங்க கேபினுக்குள்ள போயி பார்த்திருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும். சவுன்ட்ப்ரூஃப் கேபின் சார்...'
'ஓ!' ஒருவேளை ராமராஜன் வேண்டுமென்றே தன்னிடமிருந்து மறைக்கிறாரோ என்ற சந்தேகம் தன்ராஜுக்கு எழுந்தது. கோபாலின் அலுவலக அறையை ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்று குறித்துக்கொண்டார்.
இணைப்பைத் துண்டித்துவிட்டு அவர் அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தவர் சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் மேசை மீது கிடந்த கோபாலின் செல்ஃபோன் பட்டியலை மீண்டும் எடுத்து பார்த்தார்.
பட்டியலின் இறுதியில் காணப்பட்ட மாதவியின் லேன்ட் லைன் எண் அவரை சிந்திக்க வைத்தது. இந்த ஃபோன் நம்பர் டயல்ட் லிஸ்ட்ல எப்படி வந்துது? கால (call) யாராச்சும் அட்டென்ட் பண்ணாம இந்த லிஸ்ட்ல வர்றதுக்கு சான்ஸ்
இல்லையே.... அப்படீன்னா அன்னைக்கி சாயந்தரம் 6.28 வரைக்கும் மாதவி உயிரோடதான் இருந்துருக்காங்களா?
மீண்டும் ஏதோ உள்ளுணர்வு தூண்ட மேசை மீதிருந்த ஆவணங்களை துழாவி மாதவியின் வீட்டில் எடுத்த க்ரைம் சீன் புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்தார்.
தொலைபேசியிலிருந்து ரிசீவர் தொங்கிக்கொண்டிருந்தது!
That means, கோபால் கூப்ட்டப்போ ஏற்கனவே அடிபட்டு ரத்த வெள்ளத்துல கிடந்த மாதவி அத ஆன்சர் பண்றதுக்கு ட்ரை பண்ணியிருக்கா... ரிசீவர எடுக்க முடிஞ்சிருக்கு....ஆனா பேசினாளான்னு தெரியல.. கோபால கேட்டாத்தான் தெரியும். ஃபோட்டோவ எடுத்தவன் மட்டும் அடுத்த நாளே தந்துருந்தா... இடியட். சாவகாசமா ஒரு வாரம் கழிச்சி அனுப்பறான்.... கோபால ப்ரிசன்ல போயி மீட் பண்ணா என்ன என்று நினைத்த தன்ராஜ் அடுத்த நொடியே அது வேண்டாம் என்று தீர்மானித்தார். ட்ரையல்ல பாத்துக்கலாம்.. பி.பிக்கும் வேலை குடுக்கணுமே?
புகைப்படங்களை அவை இருந்த உறைக்குள் மீண்டும் வைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என தீர்மானிப்பதற்குள் அவருடைய மேசையிலிருந்த தொலைபேசி அலறியது.
'மிஸ்டர் தன்ராஜ், நா பி.பி. பேசறேன்.' என்ற குரலைக் கேட்டதும் 'இந்த ஆள் வேற' என்று தனக்குள் முனகியவாறு, 'சொல்லுங்க.' என்றார் சுருக்கமாக.
'அவர எங்க ரிமான்ட் பண்ணியிருக்காங்க?'
'யார சார்?' என்றார் தன்ராஜ் வேண்டுமென்றே.
'என்ன சார் யாரன்னு கேக்கறீங்க? நீங்க பெய்ல உட்டவற நா மறுபடியும் புடிச்சி குடுத்துருக்கேன். எங்கிட்டயே யாரன்னு கேக்கறீங்க?'
'புழல் பிரிசனுக்குத்தான் சார்....'
'சரி...மேக்கொண்டு என்ன செய்யறதா உத்தேசம்? எதுக்குச் சொல்றன்னா இனியும் டிலே பண்ணாம சார்ஜ்ஷீட் ரெடி பண்ணி கேஸ ட்ரையலுக்கு கொண்டு வந்துரணும்... அவன் மறுபடியும் பெய்லுக்கு ட்ரை பண்றதுக்குள்ள இது முடிஞ்சிரணும்... என்ன சொல்றீங்க?'
'செஞ்சிரலாம் சார்.'
'என்ன சார் ஏதோ டவுட்டா சொல்றீங்க? அதான் அவர ஸ்பாட்டுல பாத்ததா ஸ்ட்ராங்கா ஐ விட்னஸ் ரெண்டு பேர் இருக்காங்களே? இதுக்கு மேல என்னத்த இன்வெஸ்ட்டிகேட் பண்ண போறீங்க? அந்த ரெண்டு பேரோட வாக்குமூலமே போறும்சார்.... சார்ஜ்ஷீட்ட டிராஃப்ட் பண்ணி எங்கிட்ட அனுப்புங்க... நா ஒருதரம் பாத்ததுட்டு சொல்றேன்? என்ன, சரியா?'
தன்ராஜுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார். அரசு தலைமை வழக்கறிஞரின் செல்வாக்கு தமிழக சட்ட அமைச்சர்வரை பாயும் என்பது அவருக்கு தெரியும். இருந்தாலும் காவல்துறையினருக்கு சட்டம் அளித்திருந்த உரிமையை அவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை. காவல்துறையினருடைய குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அதை பார்க்க வேண்டும் என்று கேட்க எந்த அரசு வழக்கறிஞருக்கும் உரிமை இல்லை என்பதை ஏற்கனவே பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளன என்பதை அவர் தெளிவாக அறிந்தே இருந்தார். ஆகவே எக்காரணம் கொண்டு தன்னுடைய புலன் விசாரனையிலோ அல்லது குற்றப்பத்திரிக்கை தயாரிப்பதிலோ இதுவரை எந்த அரசு வழக்கறிஞரையும் தலையிட அவர் அனுமதித்ததே இல்லை.
'என்னங்க சத்தத்தையே காணோம்?'
'சாரி சார். நீங்க சொல்றா மாதிரி அவசரகதியில விசாரனைய முடிச்சி குற்றப்பத்திரிக்கை ப்ரிப்பேர் பண்ண முடியாது. I need at least another one week. அதுக்குள்ள சார்ஜ்ஷீட் கோர்ட்ல ஃபைல் பண்ணிருவேன். பண்ணிட்டு சொல்றேன்.'
'என்னது, ஃபைல் பண்ணிட்டு சொல்றீங்களா? அதாவது அதுக்கு முன்னால ஒங்கக்கிட்ட காமிக்க முடியாதுன்னு ல்றீங்க, அப்படித்தானே?' எதிர் முனையில் இருந்து உச்ச ஸ்தாயியில் குரல் வர ஒலிவாங்கியை சற்று எட்டிப் பிடித்தபடி முகத்தை சுளித்தார் தன்ராஜ். இருப்பினும் தானும் கோபப்பட்டு அவரை பகைத்துக்கொள்வதில் பயனில்லை என்பதை உணர்ந்தார். 'சார் ஒங்களுக்கு தெரியாதத ஒன்னும் நா சொல்ல விரும்பல... Please give me some time.'
எதிர்முனையில் பி.பி. விடுவதாயில்லை. 'எதுக்குங்க? அதான் ஐ விட்னஸ் க்ளியரா இருக்கே? இதுக்கு மேல என்ன இன்வெஸ்ட்டிகேட் பண்ணப் போறீங்க? நா வேணும்னா ஒங்க எஸ்.பி. கிட்ட பேசவா?'
இதென்னடா தொந்தரவா போச்சு என்று நினைத்தார் தன்ராஜ். 'அதுக்கு தேவை இருக்காது சார்... நா ரெடி பண்ணிட்டு கூப்டறேன்.'
அதற்கு மேலும் தொடர விரும்பாமல் இணைப்பை துண்டித்துவிட்டு சிறிது நேரம் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார். இந்த கேசுக்குன்னு ஒரு வக்கீல இவரே நாமினேட் பண்ணிட்டு அப்புறம் எதுக்கு தலையிடணும்? அப்படியென்ன ஸ்பெஷாலிட்டி இந்த கேஸ்ல? ஒருவேளை மாதவன கேட்டுப்பாத்தா தெரியுமோ? இந்த அளவுக்கு பி.பி. தலையிடறதுக்கு நிச்சயம் ஸ்ட்ராங்கா ஏதாச்சும் ஒரு ரீசன் இருக்கணும். அது என்னவா இருக்கும்? அத முதல்ல கண்டு புடிக்கணும். அதுக்கு முன்னால இந்த கேஸ்ல இனியும் என்னல்லாம் செய்யணும்னு பாத்துருவோம்.
அடுத்த சில மணித்துளிகள் மாதவியின் கொலை வழக்கு விசாரனையில் வழக்கிற்கு சாதக, பாதகங்களை பட்டியலிட்டார்.
சாதகங்கள்:
1. சம்பவ தினத்தன்று எதிரியை சம்பவ இடத்தில் பார்த்ததற்கான இரண்டு நேரடி சாட்சிகள்.
2.மாதவியின் வீட்டுப் பணிப்பெண்ணின் சாட்சியம்.
3.கொலை நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட குற்றவாளியின் கைரேகை பதிவுகள்.
4. மாதவிக்கும் குற்றவாளிக்கும் இடையில் நடைபெற்றிருக்கக் கூடிய வாக்குவாதத்தின் சாட்சியமாக கைப்பற்றப்பட்ட
உடைந்த காப்பி கோப்பையின் துண்டுகள்.
5.குற்றவாளிக்கும் மாதவிக்கும் இடையில் நீண்ட நாளாக இருந்த அந்தரங்க தொடர்பை நிரூபிக்க தேவையான
தடயங்கள்.
6.குற்றவாளி கோபத்தில் தன்னையே இழந்துவிடுபவர் என்ற அவருடைய ஊழியரின் வாக்குமூலம்.
7. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குற்றவாளியின் மனைவியின் உடலில் இருந்த மர்ம காயங்களைப் பற்றிய
மருத்துவ அறிக்கை.
பாதகங்கள்.
1. கொலயை நேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை.
2. குற்றவாளியை சம்பவ இடத்தில் பார்த்த இரு சாட்சியங்களுக்கும் இடையில் இருந்த கால வித்தியாசம்.
சாதகங்களை விட பாதகங்கள் குறைவாக இருப்பினும் ஒரு கைதேர்ந்த குற்றவியல் வழக்கறிஞரால் இதை குற்றவாளிக்கு சாதகமாக பயன்படுத்திவிட முடியும் என்பதை தன்ராஜ் உணர்ந்திருந்தார்.
குற்றவாளியின் வழக்கறிஞர் ராஜசேகருக்கு அவருடைய சக வழக்கறிஞர்கள் மத்தியில் அத்தனை பெயர் இல்லையென்றாலும் இந்த வழக்கைப் பொருத்தவரை அவர் எப்படி அணுகப்போகிறார் என்பதும் ஒரு புதிராகவே அவருக்கு தென்பட்டது.
மாறாக ஒரு பிரபல வழக்கறிஞர் சம்மந்தப்பட்டிருந்தால் அவர் அதற்கு முன்பு வாதாடிய வழக்குகளில் அவருடைய அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பதை படித்து தெரிந்துக்கொள்ள வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் இதுவரை பணமோசடி, ஆசிட் வீச்சு, மோட்டார் வாகன விபத்து போன்ற சில்லறை வழக்குகளில் மட்டுமே ஆஜராகியிருந்த ஒருவர் ஒரு முழு கொலை வழக்கில் எத்தகைய அணுகுமுறையை கையாள்வார் என்பதை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை என்பதையும் ஒரு முக்கிய பாதகமாகவே தன்ராஜ் உணர்ந்தார்.
ஆகவே இந்த வழக்கு விசாரனையை இன்னும் வேறு சில கோணங்களில் செலுத்துவதுதான் நல்லது என்று தீர்மானித்தார்.
'சார்... ஒங்கள இன்ஸ்பெக்டர் ஐயா கூப்டறார்.' என்ற குரல் கேட்டு தன் நினைவுகளிலிருந்து மீண்ட தன்ராஜ் தனக்கு முன் நின்ற காவலரைப் பார்த்தார்.
'யாரு?'
'நம்ம இன்ஸ்பெக்டர் ஐயா சார்... ஏதோ அர்ஜன்டா பேசணுமாம்.'
'ஒழுங்கா வேலை செய்ய விடமாட்டாங்களே?' என்று முனகியவாறு தன் மேசை மீது பரப்பி வைத்திருந்த அனைத்தையும் அப்படியே தன்னுடைய மேசை இழுப்பினுள் தள்ளி பூட்டிக்கொண்டு எழுந்து சென்று அந்த காவல்நிலைய ஆய்வாளர் அறைக்குள் நுழைந்தார்.
அவருடைய அறைக்குள் நுழைந்து விரைப்புடன் சல்யூட் அடித்துவிட்டு நின்ற அவரை 'முதல்ல ஒக்காருங்க. ஒங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்..' என்று ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவருடைய மேசைக்கு முன்பு இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தார்.
'சொல்லுங்க சார்.'
'இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?'
என்னமோ தெரியாத மாதிரி கேக்கறீங்க என்று மனதுக்குள் பொறுமிய தன்ராஜ், 'அந்த மாதவி கேஸ் விஷயமாத்தான் கோர்ட் வரைக்கும் போய்ட்டு இப்பத்தான் சார் வந்தேன்.... மறுபடியும் பதினைஞ்சி நாள் ஜூடிஷியல் கஸ்டடி.. அதுக்குள்ள இன்வெஸ்ட்டிகேஷன முடிச்சி ஃபார்ம் 89 (Charge Sheet) ஃபைல் பண்ணிரணும்... அதுக்குத்தான் இதுவரைக்கும் என்னல்லாம் செஞ்சிருக்கோம்னு ஒரு இன்வென்டரி எடுத்துக்கிட்டிருந்தேன்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துருச்சின்னா ஒரு மேஜர் ஒர்க் முடிஞ்சா மாதிரி இருக்கும்னு நினைக்கறேன்...' என்றார். 'ஏன் சார், வேற ஏதாவது கேஸ பாக்கணுமா?'
'சேச்சே அதெல்லாம் இல்ல.... இந்த கேஸ நம்ம எஸ்.பியும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கார்னு தெரியுமில்ல? அதுக்காகத்தான் கேட்டேன்'
இதுக்கா கூப்ட்டீங்க... இதத்தான் இன்டர்காம்லயே கேட்டுருக்கலாமே என்று நினைத்த தன்ராஜ், 'வேற ஏதாச்சும் இருக்கா சார்?' என்றவாறு இருக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார்.
'இருங்க இன்னொரு விஷயமும் இருக்கு.' என்றவாறு புன்னகைத்த ஆய்வாளரை சலனமில்லாமல் பார்த்தார் தன்ராஜ்.
'சொல்லுங்க சார்.'
'இல்ல.... சார்ஜ் ஷீட் டிராஃப்ட் பண்ணி முடிச்சிட்டீங்கன்னா அத பாத்துரலாமேன்னுதான்...'
ஆய்வாளரின் இந்த கேள்விக்குப் பின்னால் சற்று முன் தன்னுடன் உரையாடிய அரசு தலைமை வழக்கறிஞர் இருந்ததை உணர்ந்தார் தன்ராஜ். 'இல்ல சார்... போஸ்ட் மார்ட்டம் இல்லாம எப்படி சார்? ஃபாரன்சிக்லருந்தும் ரிப்போர்ட்ஸ் வரவேண்டியிருக்கு. அத்தோட இதுவரைக்கும் பண்ண இன்வெஸ்ட்டிகேஷன்ல ரெண்டு மூனு பாய்ன்ட்ஸ்ல க்ளாரிட்டி (clarity) இல்லாத மாதிரி இருக்கு... அத இன்னும் ரெண்டு மூனு நாளைக்குள்ள முடிச்சிட்டு.. செஞ்சிரலாம்னு ஐடியா. ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட் முடிஞ்சதும் ஒங்கக்கிட்ட காமிக்கிறேன் சார்... '
'அதுவும் கரெக்ட்தான்... அப்படியே செஞ்சிருங்க... நா எஸ்.பி கிட்ட சொல்லிக்கறேன்...' அதற்கு மேலும் கேட்பதற்கு ஒன்றும் இல்லாததால் ஆய்வாளர் நீங்கள் போகலாம் என்பதுபோல் தலையை அசைக்க தன்ராஜ் எழுந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியில் வந்தார்.
தொடரும்..
சார்.... பெயரே உள்ளே வர தூண்டியது, முழுக்க படித்த பின் அடுத்த பகுதிகளை எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன் !! நன்றி !
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்குஅரசு வழக்கறிஞர் முதல் மாவட்ட கண்காணிப்பாளர் வரை முதல் தகவல் அறிக்கையைப் பார்க்கத் துடிக்கிறார்கள் என்றால் வேறு யாரோ ஒருவர் இந்த கொலையில்சம்பந்தப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். அவரைக் காப்பாற்ற வேண்டி சீக்கிரம் கேசை முடிக்கப் பார்க்கிறார்கள் என்பது என் அனுமானம். காத்திருக்கிறேன் எனது யூகம் சரியா என அறிய.
பதிலளிநீக்குஅருமை ... தொடரட்டும்
பதிலளிநீக்குHi TBR,
பதிலளிநீக்குIt is thrilling and fantastic. Keep writing daily.
Muthu
ஒரே மூச்சில் அனைத்து விட்டுப் போன பகுதிகளையும் படித்து முடித்தேன். பரபரப்பாக கோடனு சென்றிருக்கிறீர்கள். நடைமுறைகளை தெளிவாக விளக்கும்பதி அமைந்திருக்கிறது உரையாடல்கள். இவ்வளவு Informative கதையை படித்ததாக நினைவில் இல்லை.
பதிலளிநீக்குநான் கேட்க விரும்பும் கேள்வி. மாதவியின் போனில் இருந்து Incoming Outgoing கால்களை போலீஸ் ஏன் விசாரிக்கவில்லை. அல்லது இதற்கான விளக்கம் கதையில் எங்கேனும் உள்ளதா? நான் கவனிக்கத் தவறி விட்டேனா? அப்படி விசாரித்திருந்தால் ராஜசேகரும் மாட்டி இருப்பாரே!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
// நா வேணும்னா ஒங்க எஸ்.பி. கிட்ட பேசவா?//
பதிலளிநீக்குI am lucky enough, not to work in such situations. I won’t stand for a day with my attitude. But, I believe this type of conversation could happen in to-days world.
பதிலளிநீக்குSuresh Kumar said...
சார்.... பெயரே உள்ளே வர தூண்டியது, முழுக்க படித்த பின் அடுத்த பகுதிகளை எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன் //
நன்றிங்க... தொடர்ந்து படிங்க.
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குஅரசு வழக்கறிஞர் முதல் மாவட்ட கண்காணிப்பாளர் வரை முதல் தகவல் அறிக்கையைப் பார்க்கத் துடிக்கிறார்கள் என்றால் வேறு யாரோ ஒருவர் இந்த கொலையில்சம்பந்தப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். அவரைக் காப்பாற்ற வேண்டி சீக்கிரம் கேசை முடிக்கப் பார்க்கிறார்கள் என்பது என் அனுமானம். காத்திருக்கிறேன் எனது யூகம் சரியா என அறிய.//
காத்திருங்க, உங்க யூகம் சரியான்னு பாத்துறலாம்:))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
என் ராஜபாட்டை - ராஜா said...
பதிலளிநீக்குஅருமை ... தொடரட்டும்//
நன்றிங்க.. தொடர்ந்து படிங்க.
Muthu said...
பதிலளிநீக்குHi TBR,
It is thrilling and fantastic. Keep writing daily.//
As I've already completed wrting about 90% of the story it will not be difficult for me to keep posting daily... Thanks for your comment.
T.N.MURALIDHARAN said...
ஒரே மூச்சில் அனைத்து விட்டுப் போன பகுதிகளையும் படித்து முடித்தேன். பரபரப்பாக கோடனு சென்றிருக்கிறீர்கள். நடைமுறைகளை தெளிவாக விளக்கும்பதி அமைந்திருக்கிறது உரையாடல்கள். இவ்வளவு Informative கதையை படித்ததாக நினைவில் இல்லை.
நான் கேட்க விரும்பும் கேள்வி. மாதவியின் போனில் இருந்து Incoming Outgoing கால்களை போலீஸ் ஏன் விசாரிக்கவில்லை. அல்லது இதற்கான விளக்கம் கதையில் எங்கேனும் உள்ளதா? நான் கவனிக்கத் தவறி விட்டேனா? அப்படி விசாரித்திருந்தால் ராஜசேகரும் மாட்டி இருப்பாரே!//
சரியான கேள்வி. ஆனால் இதற்கு பதில் முந்தைய பதிவுகளில் உள்ளது. பார்க்க: 8ம் மற்றும் 10வது பகுதிகள். கோப்பை டவுன்லோட் செய்திருந்தால் 48-49 மற்றும் 64ம் பக்கங்கள்.
ஆனால் இதை இந்த கோணத்தில் பார்க்காமல் காவல்துறை வேறொரு கோணத்தில் பார்த்தது என்பதை இனி வரும் பகுதிகளில் அவ்வப்போது கூறியுள்ளேன்.
உங்களுடைய ஆர்வத்திற்கும் கேள்விக்கும் நன்றிங்க. தொடர்ந்து படிங்க...
Packirisamy N said...
பதிலளிநீக்கு// நா வேணும்னா ஒங்க எஸ்.பி. கிட்ட பேசவா?//
I am lucky enough, not to work in such situations. I won’t stand for a day with my attitude. But, I believe this type of conversation could happen in to-days world.//
I am also like that, especially when I was young and at the junior management level. But as I grew old and reached higher levels in my career I had to bow to pressures and compromise. It happens to all of us I believe, at least to most of us. There may be exceptions.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குதொடர்கிறேன்.//
நன்றி சார்.
Krish said...
பதிலளிநீக்குNice//
நன்றி க்ரிஷ்... தொடர்ந்து படிங்க..
யார் யாரைத் தான் சந்தேகப்படுவது காவல் துறையில் யாராவது இருக்குமோ ?
பதிலளிநீக்குSasi Kala said...
பதிலளிநீக்குயார் யாரைத் தான் சந்தேகப்படுவது காவல் துறையில் யாராவது இருக்குமோ ?//
இருக்கும்.. யார் கண்டா?