08 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் 11

What is Fate?

"A difficult issue concerning fate is the question of why bad things happen to people. Because there is no definitive answer for this quandary, people don't dwell on the issue.

The greater dilemma is people being resigned to a certain fate.We are never prisoner of our own fate. Some things are beyond our power to control. We call it fate to escapte from such things." By Todd Strandberg.

இதுவரை:  (இந்த சுட்டியில் இதுவரை வந்த பத்து பதிவுகளும் பிடிஎஃப் வடிவில் உள்ளன. தரவிறக்கமும் செய்ய முடியும். )

காஞ்சிபுரம் சென்னையிலிருந்து 75 கி.மீ.தான் என்றாலும் வழிநெடுக இருந்த வாகன நெரிசலால் ராஜசேகர் அந்த தூரத்தை கடக்க அன்று  இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக எடுத்தது. 

தன்னிச்சையாக வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த அவனுடைய எண்ணங்கள் முழுவதும் கடந்த இரண்டாண்டுகளில் நடந்தவைகளையே சுற்றி, சுற்றி வந்தது. அதிலும் கடந்த ஒரு மாத காலமாக நடந்தவைகளின் தாக்கம் பெரிதாகவே இருந்ததை அவனால் உணர முடிந்தது. 

மாதவியுடனான தன்னுடைய  தகாத உறவை முறித்துக்கொள்வதுதான் நல்லது என அவன் முடிவெடுத்திருந்த நேரத்தில் அவளுடன் ஏற்பட்ட அந்த விவாதம், அதன் இறுதியில் அவன் முற்றிலும் எதிர்பாராமல் நடந்த அவளுடைய மரணம், அதை மறைக்க அவளுடைய மரணத்தில் சம்மந்தப்படாத ஒருவரை குற்றவாளியாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம்...

இதை தலைவிதி என்பதா... அப்படியானால் இது யாருடைய தலைவிதி என்னுடையதா அல்லது கோபாலுடையதா?

அன்று மாலை அவன் மாதவியின் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றதற்குப்பிறகு கோபால் தொலைபேசியில் அழைத்தபோது 

அவள் எடுத்து பேசியிருக்கிறாள் என்பதை அறிந்தபோது அவளுடைய மரணத்திற்கு தான் பொறுப்பில்லை என்று அவன்  அடைந்த நிம்மதி... உண்மையில் தொலைபேசியில் அவள் பேசவில்லை என்று கோபால் சொன்னதிலிருந்து மீண்டும் பறிபோனதாகவே உணர்ந்தான்..  

ஒருவேளை கோபாலுக்கும் இந்த மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையோ? அது உண்மையானால் இதிலிருந்து நாம் முழுவதுமாக விடுபட்டுவிட முடியாதோ?

இப்படி தாறுமாறாக அலைபாய்ந்த எண்ணங்களின் மத்தியிலும் எந்த விபத்திலும் சிக்காமல் அவன் சென்னை வந்து சேர்ந்ததுதான் விசித்திரம்! மனிதனுடைய மூளையில் இடம், வலம் என்று இருபாகங்கள் உள்ளனவாம். வலப் பக்கத்தின் ஆதிக்கத்தால் சிந்தனைகள் பல திசைகளில் ஓடினாலும் செய்கின்ற அலுவலில் இருந்து கவனம் சிதறிப்போகாமல் இருப்பதை உறுதி செய்வது இடப் பக்க மூளையாம்! எப்போதோ படித்தது! அதில் இருந்த உண்மையை அவன் பாதுகாப்பாக தன் குடியிருப்பை வந்தடைந்தபோதுதான் முழுவதுமாக உணர்ந்தான் ராஜசேகர். 

தன்னுடைய குடியிருப்பு வளாகத்தினுள் நுழைந்து தனக்கென குறிக்கப்பட்டிருந்த இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கவும் அவனுடைய தொலைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது. 

அவனுடைய மனைவி கோகிலா!

'என்ன கோகி... இப்பத்தான் காம்பவுன்ட்ல நுழைஞ்சேன்....'

'நீங்க வர்றத பாத்துத்தான் கூப்ட்டேன்... அப்படியே சீனிவாசன் சார பாத்துட்டு வந்துருங்க... சாயந்தரத்திலருந்து ரெண்டு தரம் வந்துட்டுப்போய்ட்டார்.... நீங்க டிரைவிங்ல இருப்பீங்கன்னுதான் ஃபோன் பண்ணலைன்னு சொன்னார்....'

'சரி....' 

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் கைப்பெட்டியுடன் சீனிவாசனின் குடியிருப்பை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். 

அடுத்த நொடியே கதவைத் திறந்த சீனிவாசன், 'வாங்க சார்....' என்று சுருக்கமாக கூறிவிட்டு தன்னுடைய வரவேற்பறைக்கு திரும்பியதைக் கவனித்த ராஜசேகர் தான் கோபாலிடம் நடத்தியிருந்த விசாரணையைப் பற்றி தன் தந்தையிடம் கூறியிருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தவாறு அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து அவரையே பார்த்தான். 

'என்ன சார்... என்னமோ டல்லாருக்கறா மாதிரி இருக்கு? என்ன விஷயம்? கோபால் ஏதாச்சும் சொன்னாரா?'

சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்த சீனிவாசன், 'ஆமா சார் கூப்ட்டான்....'

சீனிவாசன் தயக்கத்துடன் அவனை பார்த்தார்.

'எதுவானாலும் தயங்காம சொல்லுங்க...'

'சார்... நீங்க கோபால்கிட்ட கேட்ட கேள்விங்கள்ல சிலது அவனுக்கு அவ்வளவா புடிக்கல போலருக்கு..... சாரே என்னெ சந்தேகக் கண்ணோட பாக்கறப்போ இவர நம்பி எப்படின்னு கேட்டான்... அதான் நீங்க வந்ததும் என்ன நடந்துச்சின்னு கேக்கலாம்னு.....'

ராஜசேகர் பதிலளிக்காமல் தன் கைப்பெட்டியைத் திறந்து கோபாலுடனான தன்னுடைய உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவு கருவியை எடுத்து தன்னுடைய இருக்கைக்கு முன் இருந்த குறுமேசையில் வைத்தான். அதற்கு அருகிலேயே வசந்த் தயாரித்து அளித்திருந்த அறிக்கையையும் வைத்தான். 

'சார்.... இதுல நா ஒங்க சன்னோட பேசின கான்வர்சேஷன் அப்படியே ரெக்கார்ட் ஆயிருக்கு.... அப்புறம் இந்த ஃபைல்ல ஒங்க சன்ன பத்தி என்னோட அசிஸ்டென்ட் இன்வெஸ்ட்டிகேட் பண்ணி குடுத்த ஒரு ரிப்போர்ட் இருக்கு. நா 
சாதாரணமா எந்த கேஸ எடுத்தாலும் என்னுடைய க்ளையன்ட பத்தி ஒரு சின்ன இன்வெஸ்ட்டிகேஷன நடத்துறது 

வழக்கம். எனக்கு என்னுடைய க்ளையன்ட பத்தி தெரியாத எந்த விஷயமும் ட்ரையல் நடக்கறப்போ ப்ராசிக்யூஷன் சைட்லருந்து வந்துறக்கூடாதுங்கறதுக்காக இந்த இன்வெஸ்ட்டிகேஷன செய்வேன்.... அப்புறம் அத பேஸ் (base) பண்ணி க்ளையன்ட்டுங்கக் கிட்ட சில கேள்விங்கள கேப்பேன்... அதுலருந்து அவங்க எந்த அளவுக்கு என்னெ நம்பி உண்மைய சொல்றாங்கன்னு தெரிஞ்சிப்பேன்... டாக்டர் கிட்டயும் வக்கீல்கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்வாங்க... இந்த ரெண்டையும் படிச்சிட்டு ஒங்க சன் எந்த அளவுக்கு என்னெ நம்பறார்னு நீங்களே டிசைட் பண்ணிக்கிருங்க... இதுக்கப்புறம் ஒங்களுக்கும் வேற எந்த அட்வகேட்டையாவது வச்சி இந்த கேஸ நடத்தணும்னு தோனிச்சின்னா சொல்லுங்க... நா விலகிக்கிறேன்... நா ஒங்கள காலையில மீட் பண்றேன். குட்நைட்.' 

அவருடைய பதிலுக்கு காத்திராமல் அவன் எழுந்து கைப்பெட்டியுடன் வெளியேறினான். 

இதை சற்றும் எதிர்பாராத சீனிவாசன் அவன் எழுந்து செல்வதைக் கூட கவனியாமல் தன் முன் இருந்தவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு ராஜசேகர் விட்டுச்சென்ற அறிக்கையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

*********

அடுத்த நாள் காலையில் அவன் வழக்கம்போல் தன்னுடைய நடைபயிற்சியை முடித்துக்கொண்டு குடியிருப்பை அடைந்தப்போது சீனிவாசன் தன்னுடைய குடியிருப்பின் பால்கனியிலிருந்து தன்னை அழைப்பதைக் கவனித்தான்.

'சார்... நா ஆஃபீஸ் போற வழியில வரேன்... இன்னைக்கி ட்ரையலுக்கு வர்ற கேஸ் கட்டுங்கள படிக்கணும்.. அதான்..' 

என்றான். 

'சரி சார்... நா வெய்ட் பண்றேன். கண்டிப்பா வந்துருங்க.' என்றவாறு அவர் தன்னுடைய குடியிருப்புக்கு திரும்ப ராஜசேகர்  லிஃப்டை நோக்கி விரைந்தான். 

அடுத்த ஒரு மணி நேரம் அன்றைய தினம் விசாரனைக்கு வரவிருந்த வழக்கு கட்டுகளை படித்து முடித்து அன்று செய்ய வேண்டியதை குறித்துக்கொண்டான். பிறகு குளித்து, காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பினான்.

'லஞ்ச் ரெடி பண்ணிருக்கேன்...கொண்டு போறீங்களா?' என்ற மனைவியிடம் 'இல்ல வேணாம்... இன்னைக்கி அடுத்தடுத்து ரெண்டு கேஸ் இருக்கு.... வெளியில சாப்ட்டுக்கறேன்.' என்று விடையளித்துவிட்டு படிகளில் இறங்கி சீனிவாசனின் குடியிருப்பை அடைந்தான். கதவுகள் திறந்தே இருக்க சீனிவாசன் சோபாவில் அமர்ந்திருந்தது தெரிந்தது. 

ராஜசேகர் அவருடைய அழைப்பை எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்து அவருக்கெதிர்ல் அமர்ந்தான். 

சீனிவாசனின் முகம் இருண்டு இருந்ததைக் கவனித்த ராஜசேகர் அவராக பேசட்டும் என்று காத்திருந்தான்.  அடுத்த சில நொடிகள் அந்த அறையை ஒரு கணத்த மவுனம் சூழ்ந்துக்கொண்டது.

'இத்தன வருசத்துக்கப்புறம் என் பையன பத்தி நானே நெறைய விஷயங்கள தெரிஞ்சிக்க வச்சீட்டீங்க சார்.... அதுக்கு ரொம்ப தாங்ஸ்...' அவருடைய குரலில் தெரிந்த விரக்தி அவனை என்னவோ செய்தது. வசந்தின் அறிக்கையை அவரிடம் கொடுத்திருக்க வேண்டாமோ என்று நினைத்தான். ஒரு தந்தை தன்னுடைய நம்பிக்கையாக இருக்கும் மகனைப் பற்றி அறிந்திருக்க தேவையில்லாத பல விஷயங்கள் அவனுடைய புலன்விசாரனை அறிக்கையில் இருந்தன.

கண்களில் ததும்பி நின்ற கண்ணீருடன் அவனை பார்த்தார் சீனிவாசன். அந்த பார்வையை சந்திக்க முடியாமல் ராஜசேகர் தலையைக் குணிந்துக்கொண்டான்.

'சாரி சார்... அந்த ரிப்போர்ட்ட ஒங்கக் கிட்ட குடுத்திருக்கக் கூடாதுன்னு இப்ப நினைக்கறேன்....ஐ ஆம் ரியலி சாரி....'

'இல்ல சார்... நீங்க செஞ்சது தப்பில்லை.... இத்தன நாளா இவ்வளவு முட்டாளா இருந்துருக்கேனேன்னு நினைச்சித்தான் கவலைப்படறேன்.... என் ரெண்டு மருமகள்களும் என்கிட்ட அவனெ பத்தி சொன்னப்பல்லாம் நா நம்பல. ஆனா அவங்களப் பத்தி என் பையன் சொன்னதையெல்லாம் நம்புனேன்..... அதான் நா செஞ்ச பெரிய தப்பு.... அவன் சின்ன வயசுலருந்தே சின்ன வயசுக்கெல்லாம் கோவப்படுவான்... கையில கிடைச்சதையெல்லாம் தூக்கி எறிஞ்சி அட்டகாசம் 
பண்ணுவான்.... வயசாய்ட்டா எல்லாம் சரியாயிரும்னு நினைச்சேன்... சின்ன வயசுலயே அம்மாவ பறிகுடுத்துட்டு நிக்கற பையனாச்சேன்னு நினைச்சி நா குடுத்த அளவுக்கு மீறுன சுதந்திரம்தான் அவனெ இப்படியொரு முரடனா மாத்தியிருக்கு... இந்த ரிப்போர்ட்ட படிச்சிட்டு ஒங்க டேப்பையும் கேட்டதுக்கப்புறம்... இந்த கொலைய அவன் செஞ்சானோ இல்லையோ.... ஆனா இந்த கேஸ்ல அவனுக்கு எதிரா தீர்ப்பு வந்தாலும் அது அவனுக்கு ஒரு பாடமாத்தான் இருக்கும்னு தோனுது.. Let him suffer this fate.......'

என்ன பதில் சொல்வது என தெரியாமல் மவுனமாக அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ராஜசேகர்.

'இவர் என்ன சொல்ல வறார்னே தெரியலையே.. Let him suffer this fateன்னு சொன்னா? கோபால டிஃபென்ட் பண்ண வேண்டாம்னு சொல்றாரா? ' என்று தனக்குள் எண்ணியவாறு அமர்ந்திருந்தான் ராஜசேகர்.

'சார், நா ஒரு க்ரிமினல் லாயர். என் கிட்ட வர்ற கட்சிக்காரங்க குத்தம் செஞ்சிருக்காங்களா இல்லையான்னுல்லாம் நா கவலைப்படறதில்ல. அப்படியே செஞ்சிருந்தாலும் சட்ட ரீதியா மட்டுந்தான் அத அப்ரோச் பண்ணுவேனே தவிர அதுல இருக்கற நியாய, அநியாயங்களையெல்லாம் கன்சிடர் பண்றதில்ல. நா மட்டுமில்ல எல்லா க்ரிமினல் அட்வகேட்சும் அப்படித்தான். அதுதான் எங்க தொழில் தர்மமும் கூட. So, அந்த பேசிஸ்லதான் இந்த கேசையும் நா அப்ரோச் பண்ணுவேன். என்னுடைய முயற்சியையும் மீறி சில கேஸ்கள்ல நா தோத்துருக்கேன். அதுல சிலதுல அப்பீல் பண்ணி ஜெயிச்சிருக்கேன்... சிலது ஹை கோர்ட் வரைக்கும் போய் கூட லூஸ் பண்ணியிருக்கேன். இந்த கேஸ பொருத்த வரைக்கும் போலீஸ் சைட்லருந்து பார்த்தா ரெண்டு ஐ விட்னஸ்தான் ஸ்ட்ராங்கா இருக்காங்க. அதுல அந்த லேடி  விட்னச கூட ஒரு ப்ரஜுடிஸ்டு (prejudiced) விட்னஸ்னு ப்ரூஃப் பண்ற அளவுக்கு நம்மக் கிட்ட எவிடன்ஸ் இருக்கு. கோபால் சொல்றத வச்சி பார்த்தா அவங்க ரெண்டு பேருக்கு இடையில சில வருசங்களாவே டிஸ்ப்யூட் இருந்துருக்கு...அதனால அந்த சாட்சி மட்டுமே கோபால கன்விக்ட் பண்ண போறாது.'

அவன் பேசி முடிக்கும்வரை காத்திருந்த சீனிவாசன் அவன் கூறியதில் தனக்கு ஒப்புதல் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார். 'இல்ல சார். அந்த லேடிய பத்தி கோபால் சொன்னது முழுசும் சரியில்லை. அவங்க அங்க குடி வந்த புதுசுல தகராறு பண்ணிக்கிட்டிருந்தது உண்மைதான். அதுக்கும்  காரணம் கோபால்தான். அவங்களோட க்ரீவன்ஸ சரியா புரிஞ்சிக்கிட்டு சால்வ் பண்றது விட்டுட்டு அவங்களை ஒரு எதிரியா நினைச்சிக்கிட்டிருந்ததுதான் இவன் செஞ்ச தப்பு. அதுக்கப்புறம் நான் இன்டர்ஃபியர் பண்ணி அவங்கள சமாதானபடுத்திட்டேன். அதுக்கப்புறம் இவன் அங்க குடியிருக்கறவரைக்கும் அவங்க பெரிசா தகராறு எதுவும் செய்யலை. ஆனா இவன் அங்க குடிவச்ச பொண்ணாலதான் எல்லா பிரச்சினையுமே.. அவ ஒரு சினிமா எக்ஸ்ட்ரான்னும் அவள பாக்கறதுக்கு கண்ட நேரத்துலயும் ஆளுங்க வராங்க சார்னு அவங்க எனக்கு ஃபோன் பண்ணி சொன்னவுடனே அப்படிப்பட்ட பொண்ண எதுக்குடா குடிவச்சேன்னு இவனெ கேட்டேன். அதுக்கு பிறகுதான் இவன் போயி அவங்கள த்ரெட்டன் பண்ணிருக்கான். ஆனா அத மனசுல வச்சிக்கிட்டு நடக்காத ஒன்னெ போலீசுக்கு சொல்லி இவனெ மாட்டிவிடற அளவுக்கு அந்த குடும்பம் மோசமான குடும்பம்னு எனக்கு தோனலை சார்.... அந்த லேடியோட ஹஸ்பென்ட் ஒரு பெரிய கம்பெனியில எம்.டியா இருந்து ரிட்டையர் ஆனவர்.
ரொம்ப டீசன்ட் ஃபேமிலி.. அவங்க ஏழு மணிக்கி இவனெ அங்க பார்த்தேன்னு சொன்னா அது நிச்சயமா நடந்துருக்கும்.... கோபால் சொல்ற பல பொய்ங்கள்ல ஒன்னுதான் இதுவும்னு நா நினைக்கறேன்.... There is something behind this.... முடிஞ்சா கோபால்  எதுக்காக - அதாவது அந்த லேடி சொல்ற டைம்ல - அங்க போயிருந்தான்னு இன்வெஸ்ட்டிகேட் பண்ணுங்க... அதுக்கு முன்னால ஒரு விஷயம்... இருங்க வரேன்.' 

சீனிவாசன் எழுந்து வரவேற்பறையின் இடது புறம் அமைந்திருந்த அறைக்குள் நுழைந்து அடுத்த சில நொடிகளில் எதையோ எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் நீட்டினார். 'இத நேத்தே ஒங்கக்கிட்ட குடுத்துறணும்னு நினைச்சேன்... சந்தர்ப்பம் கிடைக்கலை.'

தொடரும்..

10 கருத்துகள்:

  1. Sometimes I feel sorry for the character, Rajasekar. When we see an obviously handicapped person we feel sorry, but not for a mentally handicapped. But, I believe, everyone has to answer for their deeds at some stage. Suspense keeps building up. Waiting for the next episode.

    பதிலளிநீக்கு
  2. //Suspense keeps building up. Waiting for the next episode. //

    அதே ...!

    பதிலளிநீக்கு
  3. Packirisamy N said...

    When we see an obviously handicapped person we feel sorry, but not for a mentally handicapped.//

    You are right. Especially if it is self inflicted misery no would feel sorry.

    Thanks for the visit and your comment.

    பதிலளிநீக்கு
  4. தருமி said...
    //Suspense keeps building up. Waiting for the next episode. //

    அதே ...!//

    க்ரைம் சப்ஜெக்ட்னாலே சஸ்பென்ஸ் வேணுமே :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  5. ராஜ சேகருக்குத் தான் தாக்கியதில்தான் மாதவி மரணம் அடைந்தாள் என்று நிச்சயமாகத் தெரியுமா. ?இவர் கோபால் தவிர வேறு யாராவது இருக்க வாய்ப்பைத் தேடுகிறேன். பிடிபடவில்லை. நன்றாகப் போகிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. G.M Balasubramaniam said...

    ராஜ சேகருக்குத் தான் தாக்கியதில்தான் மாதவி மரணம் அடைந்தாள் என்று நிச்சயமாகத் தெரியுமா. ?இவர் கோபால் தவிர வேறு யாராவது இருக்க வாய்ப்பைத் தேடுகிறேன். பிடிபடவில்லை.//

    எனக்குமே பிடிபடவில்லைங்க... கதை தன் போக்குல போய்க்கிட்டிருக்கு.... பார்ப்போம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  7. உண்மையான கொலையாளி யாராக இருக்கக்கூடும் என்ற யூகம் பதிவுக்கு பதிவு மாறிக்கொண்டேயிருக்கிறது. அந்த அளவுக்கு கதையை விறுவிறுப்பாக நகர்த்திக்கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. வே.நடனசபாபதி said...
    உண்மையான கொலையாளி யாராக இருக்கக்கூடும் என்ற யூகம் பதிவுக்கு பதிவு மாறிக்கொண்டேயிருக்கிறது. அந்த அளவுக்கு கதையை விறுவிறுப்பாக நகர்த்திக்கொண்டு இருக்கிறீர்கள்.//

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  9. தந்தை மகனுக்கு இடையேயான உறவில் விரிசல் சற்று வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. Sasi Kala said...
    தந்தை மகனுக்கு இடையேயான உறவில் விரிசல் சற்று வருத்தமாக இருக்கிறது.//

    ஆமாங்க... ஆனா இது எல்லார் வீட்லயும் நடக்கறதுதானே...

    பதிலளிநீக்கு