"The role of a defense counsel: The initial client interview is an essential part of the attorney-client relationship, as it affords the defense lawyer an opportunity to get to know the defendant and begin to understand the basic facts of the case. This information is vital to the development of a successful defense strategy and should be obtained as quickly as practicable. Developing a good defense extends beyond just understanding client's version of the events. While it is important to know the client's "story," it is also important to test that story against what others say. For example, if the client denies that he assaulted another, the defense lawyer should ascertain from others whether he is known to be a violent person. "(Source: Wiki)
*****
'நீங்களே யோசிச்சி பாருங்க. இப்ப சம்மர். ஆறு மணிக்கும் ஏழு மணிக்கும் வித்தியாசம் தெரியும். அதனால ஆறு மணிய ஏழு மணின்னு அந்த லேடி தப்பா நினைச்சிக்க வாய்ப்பே இல்லை. அந்த லேடி வேணும்னே டைம மாத்தி சொல்றதுக்கு சரியான ஒரு காரணத்த நாம முன் வைக்கலைன்னா அவங்க எவிடன்ஸ் நம்மளுக்கு ரொம்ப டேமேஜிங்கா வர்றதுக்கு சான்ஸ் இருக்கு...' என்றான் ராஜசேகர்.
'சார்....நா சொல்றத நம்புங்க....அந்த லேடி கன்ஃப்யூஷன்ல இத சொல்லல. வேணும்னேதான் சொல்லுது. எனக்கும் அந்த லேடிக்கும் நாலஞ்சி வருசமாவே தகராறுதான். அப்பாவுக்கும் இது நல்லா தெரியும். அதுக்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அந்த லேடிதான் கடைசியா வீட்ட புக் பண்ணவங்க. அப்போ கன்ஸ்ட்ர்கஷன் வொர்க் ஃபிஃப்டி பர்சன்ட்டுக்கு மேல முடிஞ்சாச்சி. அதனால மத்தவங்கள விட சதுரடிக்கு ஏறக்குறைய தர்ட்டி பர்சன்ட் ஜாஸ்தி க்வோட் பண்ண வேண்டியதா போச்சி... அப்போ அது அந்த அம்மாவுக்கு தெரியல. அப்புறம் குடிவந்த பிறகு மத்த வீட்டுக்காரங்க சொன்னத வச்சி என்னெ ஏமாத்திட்டீங்கன்னு தகராறு பண்ண ஆரம்பிச்சிது. ஆனா நா அதுக்கு ஒத்துக்கலை. ஒங்களுக்கு புடிக்கலன்னா நா குடுத்த ரேட்டுக்கே திருப்பி வாங்கிக்கறேன்னு சொல்லிட்டேன். ஆனா அதுக்கும் அந்தம்மா ரெடியாயில்ல. அதுலருந்து நா அங்க குடியிருக்கறப்பவே சின்ன, சின்ன விஷயத்துக்கெல்லாம் தகராறு பண்ணும். அந்த லேடிக்காகவே நா அங்கருந்து ஷிஃப்ட் பண்ண வேண்டியதா போச்சி... என் மேல இருக்கற வெறுப்புனால மாதவிக்கிட்டயும் எப்பவும் தகராறு பண்ணும். வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே மாதவி வீட்டுக்கு வர்றவங்க போறவங்களையெல்லாம் திட்டும்....'
அப்படியா? நா ஒரு நாள் கூட அந்த லேடிய அவங்க வீட்டுக்கு வெளிய பாத்ததும் இல்ல... அவங்க திட்டுனத கேட்டதும் இல்லையே என்று நினைத்த ராஜசேகர் தன் எதிரில் அமர்ந்திருந்தவர் சொல்லும் பொய்களுக்கு அளவே இல்லையோ என்று நினைத்தான். அவனுடைய பார்வையின் பொருளை அவரும் உணர்ந்திருப்பார் என்பது அவருடைய பேச்சு காட்டியது.
'நா சொல்றது ஒங்களுக்கு நம்ப முடியாமத்தான் சார் இருக்கும்... ஆனா அதுதான் உண்மை.'
இனியும் அதைப்பற்றி அவரிடம் கேட்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த ராஜசேகர் தன் விசாரனையின் போக்கை மாற்றினான்.
'சரி சார்... ஒங்க மேல அவங்களுக்கு இருந்த முன்விரோதம்தான் அவங்கள ஒங்களுக்கு எதிரா சாட்சி சொல்லவச்சிருக்குங்கறா மாதிரி ஆர்க்யூ பண்ணி மடக்கிரலாம்னு நினைக்கேன்...'
'ரைட் சார்... அதத்தான் நானும் சொல்ல வந்தேன்.'
'சரி... அது இருக்கட்டும்...' என்றவாறு தன் கைப்பெட்டியில் இருந்த அவருடைய செல்ஃபோன் கால்கள் இருந்த பட்டியலை ஒருமுறை பார்த்துவிட்டு தொடர்ந்தான்.
'சம்பவம் நடந்த அன்னைக்கி அங்கருந்து வந்ததுக்கப்புறம் மாதவிக்கி ஃபோன் செஞ்சீங்களா?'
'இல்ல சார்... எதுக்கு கேக்கறீங்க?'
இந்த பொய்யை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ராஜசேகர் தன் வசம் இருந்த அவருடைய செல்ஃபோன் பட்டியலை அவரிடம் காட்டினான். 'சார் இந்த லிஸ்ட்லருக்கற கால் டீட்டெய்ல்ஸ் பிரகாரம் நீங்க மாதவிக்கு அன்னைக்கி சாயந்தர 6.25க்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க... எதுக்குன்னு நா தெரிஞ்சிக்கலாமா? பர்சனல் மேட்டர்னு சொல்லி மழுப்பாம பதில் சொல்லுங்க.'
அவனிடமிருந்த பட்டியலை கோபத்துடன் வெடுக்கென்று பறித்த கோபால், 'சார்.. இது எப்படி உங்களுக்கு கிடைச்சிது?' என்று இரைந்தார். 'நீங்களே போலீஸ் மாதிரி என்னெ இன்வெஸ்ட்டிகேட் பண்றீங்களா?'
ராஜசேகர் பதறாமல் அவரைப் பார்த்தான். இந்த ஆளுக்கு கோவம் வர்றதுக்கு ஒரு சின்ன பொறி போறும் போலருக்கே.
'சார் ஒரு மர்டர் கேஸ்ல டிஃபென்ட் பண்றது அவ்வளவு ஈசி இல்லை. போலீஸ் என்னல்லாம் இன்வெஸ்ட்டிகேட் பண்ணுவாங்களோ அதெல்லாம் நாங்களும் பண்ணுவோம். அப்பத்தான் கேஸ் நடக்கறப்போ எங்க கட்சிக்காரங்களப் பத்தி எங்களுக்கு தெரியாத எந்த விஷயமும் வெளியில வராது... அதுக்கு கட்சிக்காரங்கள நம்பலைன்னு அர்த்தமில்ல.... இப்ப நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.'
அவனுடைய விளக்கத்திற்குப் பிறகும் திருப்தியடையாதவரைப் போல் அவர் அமர்ந்திருக்க அவராக பதிலளிக்கட்டும் என்று ராஜசேகர் காத்திருந்தான்.
அடுத்து சில நிமிடங்கள் ஒரு தர்மசங்கடமான மவுனம் அந்த அறையை நிறைத்தது.
பிறகு, 'ஆமா சார்.... நா கூப்ட்டது உண்மைதான்.'
'அவங்க ஒங்க கால அட்டென்ட் பண்ணாங்களா?'
கோபால் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார். 'ஃபோன் ரொம்ப நேரம் அடிச்சிக்கிட்டே இருந்துது... ஒருவேளை உள் ரூம்ல எங்கயாச்சும் இருப்பான்னு நினைச்சிக்கிட்டு டிஸ்கனெக்ட் பண்ணாம காத்துக்கிட்டு இருந்தேன்... கொஞ்ச நேரம் கழிச்சி ரிசீவர எடுக்கற சத்தம் கேட்டுது... ஆனா யாரும் பேசலை.... ரெண்டு, மூனு நிமிஷன் வெய்ட் பண்ணி பாத்துட்டு டிஸ்கனெக்ட் பண்ணிட்டேன்....'
அப்படியா என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் ராஜசேகர். மாதவி ஏன் ஃபோன எடுக்கலை? நாம தள்ளிவிட்டதுல எடுக்க முடியாத அளவுக்கு அடிபட்டுருக்குமோ? இது என்னடா புது குழப்பம்? அவளோட கொலைக்கு நாம காரணம் இல்லைன்னு நினைச்சது தப்புத்தானோ?
இருப்பினும் தன்னுடைய குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்தான்.
'அதுக்கப்புறம் மறுபடியும் ட்ரை பண்ணவே இல்லையா, இல்ல வேற ஏதாச்சும் ஃபோன்லருந்து கூப்ட்டீங்களா?'
கோபால் எரிச்சலுடன் பார்த்தார். 'எங்கிட்ட வேற ஃபோன் எதுவும் இல்ல சார்...?'
'சரி சார்... இன்னொரு விஷயம்..'
'சொல்லுங்க.' என்று பதில் வந்தாலும் இதே ரீதியில் விசாரணை செல்வது அவருக்கு பிடிக்கவில்லை என்பதை அவருடைய குரல் தெளிவாக உணர்த்தியது.
ஆனால் ராஜசேகர் அதை கண்டுக்கொள்ளாததுபோல் தன்னுடைய கையிலிருந்த பட்டியலை படித்தவாறு அமர்ந்திருந்தான். 'மர்டர் ஆன 12ம் தேதிக்கு நாலு நாளைக்கு முன்னாலருந்து, அதாவது எட்டாம் தேதியிலருந்து நீங்களும் மாதவியும் பேசிக்கவே இல்லையா? இதுல ஒரு ஃபோன் காலும் இல்லையே?
'அந்த நாலு நாளும் அவங்க ஃபோன் அவுட் ஆஃப் ஆர்டர் சார்... நான் எங்க ஆஃபீஸ் ஃபோன்லருந்து கம்ப்ளெய்ன்ட் ரிஜிஸ்டர் பண்ணியும் யாரும் போய் அட்டென்ட் பண்ணவே இல்லை....'
'அப்புறம் எப்படி தன்னாலயே சரியாச்சி?'
'அது எங்க சரியாச்சி? நாலு நாள் கழிச்சி எங்க ஆள் ஒருத்தன அனுப்பி அந்த ஏரியா BSNL லைன் மேன இழுத்துக்கிட்டு வரச்சொல்லி செஞ்சி முடிச்சேன்...'
'அதாவது 12ம் தேதி?'
'ஆமா சார்...'
'BSNL லைன் மேன் அங்க போனப்ப நீங்க அங்க இருந்தீங்களா?'
கோபால் எரிச்சலுடன் அவனைப் பார்த்தார். 'சார் போலீசே மேல் போலருக்கே... எதுக்கு சார் இந்த மாதிரி சாதாரண விஷயங்களையெல்லாம் துருவி துருவி கேக்கறீங்க... I don't like it.. I am sorry.'
இதே போக்கில் எத்தனை முறை கேட்டாலும் அவரிடமிருந்து உண்மை வரப்போவதில்லை என்று நினைத்த ராஜசேகர் தன் கேள்வியின் போக்கை மாற்றினான்.
'சரி சார். அது இருக்கட்டும். ஒங்க ஃபாதர் கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ ஒங்க மனைவி ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காங்கன்னு சொன்னார். அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.'
கோபால் சிறிது நேரம் யோசித்தார்.
இதற்காவது உண்மையை சொல்லுய்யா என்று மனதுக்குள் கூறிக்கொண்டான் ராஜசேகர்.
'அவர் 'அவ ஒரு ஹிஸ்டீரியா கேஸ் சார்.' என்றதும் ச்சை என்று மனதுக்குள் நினைத்தான். இந்தாளு பொய் சொல்றதுல மன்னன் போலருக்கு...
'ஏன் அப்படி சொல்றீங்க?'
'பின்னே என்ன சார், மனுஷன் நாளெல்லாம் இங்க அங்க ஓடி எவனெவனையோ பார்த்து கைல கால்ல உழுந்து தொழில் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தா வந்தவுடனேயே எவளெ பாக்க போய்ட்டு வந்தேன்னு டெய்லி சண்டைக்கு வர்ற பொம்பளைய வேற என்னன்னு சொல்றது சார்?'
'எல்லார் வீட்லயும் நடக்கறது தான சார்? அதுக்கு போயி ஹிஸ்டீரியான்னு சொல்றது.....'
'ஒங்களுக்கு தெரியாது சார். ஒரு நா ரெண்டு நாள்னா பரவால்லை..... வருசம் முழுசும்னா..... who can tolerate?'
'சரி அதுக்காக ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுவாங்களா?'
'ஆமா சார்... கோபப்பட்டு, கோபப்பட்டு பிரஷர் ஜாஸ்தியாயிருச்சின்னு டாக்டர் சொல்றார். இப்ப இல்ல சார்... ஒரு வருசமாவே இப்படித்தான்... ஏற்கனவே ஹைப்பர்டென்ஷன் இருக்குன்னு டாக்டர் டயக்னைஸ் பண்ணி டாப்லெட்ஸ் குடுத்துருக்கார். நாளுக்கு ரெண்டு டாப்லெட்ஸ்... கரெக்டா மாசத்துக்கு அறுபதுன்னு ஒன்னாம் தேதியான்னா வாங்கி குடுத்துருவேன்... மாசக் கடைசியில பாத்தா இருபது, முப்பதுன்னு மீதி இருக்கும். அதாவது பாதி நாளைக்கி மாத்திரையே சாப்டுருக்க மாட்டா.... ஏன்னு கேட்டா அத சாப்ட்டா எந்த உணர்ச்சியுமே இல்லாம மசமசன்னு இருக்குதாம். இதெல்லாம் ஒரு பதிலா சார்...? கோபம் குறைஞ்சிட்டா எங்கிட்ட சண்டை போட முடியாதுல்லே...? அதான் மெய்ன் ரீசன்.... ப்ரஷர் ஜாஸ்தியாயி மயக்கம் போட்டு கீழ விழுந்து அடிபட்டு ஹாஸ்ப்பிட்டல்ல கொண்டு சேக்க வேண்டியதாயிருச்சி...'
ராஜசேகர் அறிக்கையில் வசந்த் கோடிட்டி காண்பித்திருந்த வரிகளை நினைவு கூர்ந்தான். 'சொந்த பொண்டாட்டின்னு கூட பாக்காம பெல்டால அடிச்சிருக்கான் பாஸ் அந்த ஆளு....'
அவரிடம் தான் கேட்பதற்காக எழுதி வந்திருந்த கேள்விகளின் பட்டியலைப் பார்த்தான். ஆனால் அவர் இதுவரை அவன் கேட்ட கேள்விகள் எதற்குமே உண்மையான பதிலை கூறவில்லை என்பதை உணர்ந்ததால் இனியும் கேள்விகள் கேட்பதில் பயனில்லை என்று தோன்றியது. தன் கையிலிருந்த குறிப்பேடை மூடி கைப்பெட்டியில் வைத்துவிட்டு குறுமேசையில் வைத்திருந்த ஒலிபதிவு கருவியையும் அணைத்தான்.
'சரிங்க, இப்போதைக்கி இது போறும்னு நினைக்கறேன். இப்ப புறப்பட்டாத்தான் இருட்டறதுக்குள்ள போய் சேர முடியும்.' என்றவாறு எழுந்து நின்றான்.
'சரி சார்...' என்றவாறு எழுந்த கோபால் தன்னுடைய கைப்பேசியை எடுத்து பார்ப்பதை ராஜசேகர் கவனித்தான்.
'சார் மறுபடியும் சொல்றதுக்கு மன்னிச்சிக்குங்க.....'
'சொல்லுங்க.' என்ற கோபாலின் பார்வை தன்னுடைய கைப்பேசியிலேயே லயித்திருந்தது.
'போலீஸ் சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ணி முடிச்சி கேஸ் கோர்ட்டுக்கு வர்ற வரைக்கும் இந்த ஃபோன்லருந்து என்னையும் ஒங்க அப்பாவையும் தவிர யாரையும் கான்டாக்ட் பண்ணாம இருக்கறது நல்லதுன்னு நினைக்கறேன்.'
கோபால் எரிச்சலுடன் அவனைப் பார்த்தார். 'ஏன் அப்படி சொல்றீங்க? நா ஒரு பிசினஸ்மேன்ங்க... ஃபோன்லதான் முக்காவாசி பிசினஸ் விஷயம் நடக்குது தெரியுங்களா?'
'இருக்கலாங்க... ஆனா நீங்க ஒங்களுக்கே தெரியாம இந்த கேஸ் சம்மந்தப்பட்டவங்கள கூப்ட போயி நீங்க விட்னஸ கலைக்கறதா ஏதாச்சும் புகார் போலீசுக்கு போயிருச்சின்னா.....'
அவனை மேலே தொடரவிடாமல் இடைமறித்தார் கோபால். 'அப்படியெல்லாம் ஆவாதுங்க... நீங்க கவலைப்படாம போங்க... அப்பாவோட பேசத்தான் ட்ரை பண்றேன்.'
அவருடைய குரலில் தொனித்த ஆணவத்தை உணர்ந்த ராஜசேகர், 'சரி' என்று சுருக்கமாக கூறிவிட்டு கிளம்பினான்.
தொடரும்..
நல்லா வேகமாத்தான் போகுது. பாலுக்கு பூனை காவலோன்னு நினச்சேன்....... பார்ப்போம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதருமி said...
நல்லா வேகமாத்தான் போகுது. பாலுக்கு பூனை காவலோன்னு நினச்சேன்....... பார்ப்போம்.//
இப்படியே வேகமா போனா நல்லாத்தான் இருக்கும்.. ஹூம்.... ட்ரை பண்றேன்.
வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளை படிக்கும்போது வாசகரே கேட்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. மிக அருமையாக உரையாடலை எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!நீங்கள் சட்டம் படித்திருந்தால் ஒரு திறமையான குற்றவியல் வழக்கறிஞராக இருந்திருப்பீர்கள்.ஆனால் வங்கித்துறை ஒரு திறமையான வங்கியாளரை இழந்திருக்கும்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குராஜசேகர் இந்த கோபாலை மாட்டிவிட எல்லா முயற்சியும் செய்வார் போல.
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குவழக்கறிஞர் கேட்கும் கேள்விகளை படிக்கும்போது வாசகரே கேட்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. //
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குராஜசேகர் இந்த கோபாலை மாட்டிவிட எல்லா முயற்சியும் செய்வார் போல.//
அப்பத்தானே நம்ம தப்பிக்க முடியும்னு நினைச்சிருப்பார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
போலீஸே தேவல போல..ஹஹ பாவம் மனுசன் 2 பக்கமும் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்.
பதிலளிநீக்கு