அவன் ஏதாவது பத்திரத்தை ஜோடிச்சி குடுக்கக்கூட தயங்கமாட்டான். பார்த்து செய்ங்க.’ என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் கணக்குப்பிள்ளை.
நான் அவர் சொன்னதை நம்ப முடியாமல் அவரையே ஒரு நிமிடம் பார்த்தேன். ‘ஏன் இவருக்கும் இவருடைய முதலாளிக்கும் இடையில் மனத்தாங்கல் ஏதாவது இருந்து அதை மனதில் வைத்துக்கொண்டு இவர் உண்மைக்கு புறம்பாக பேசக்கூடாது?’ என்று என் உள்ளத்தில் ஓடிய சிந்தனை என் முகத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும்.
சட்டென்று அவர் முகம் மாறியது. ஒன்றும் பேசாமல் கெஸ்ட் ஹவுசை நோக்கி நடக்க ஆரம்பித்தார். நான் நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டிருந்தேன். சிறிது தூரம் நடந்துவிட்டு நின்று திரும்பிப் பார்த்த அவர் நான் அவரை பின்தொடராமல் நிற்பதைக் கண்டு திரும்பி வந்தார். ‘என்ன தம்பி கெஸ்ட் ஹவுசைப் பார்க்க வேண்டாமா?’ என்றார்.
‘நான் மனுசுல என்ன நினைக்கறேன்னு உங்களுக்கு தெரியுதா?’ என்றேன்.
அவர் சோகத்துடன் புன்னகை செய்தார். ‘தெரியாம என்ன தம்பி? இந்த வயசானவன் ஒரு வேளை பொய் சொல்றானோன்னு தோனியிருக்கும். சரிதானே?’
நான் ஆமாம் என்று தலையசைத்தேன்.
மீண்டும் அதே சோக புன்னகை. ‘நீங்க நினைக்கறதுலே தப்பே இல்லைய்யா. ஏன்னா என் முதலாளியோட தோற்றத்த பார்த்துட்டு இருபது வருஷ அனுபவமுள்ள மானேசருங்களே அவன் கிட்ட ஏமாந்திருக்கறப்ப நீங்க நினைக்கறதுல தப்பே இல்லைய்யா. நீங்க மட்டும் எனக்கு சொந்தமா இல்லாம போயிருந்தீங்கன்னா நானும் வாய மூடிக்கிட்டு சும்மா இருந்திருப்பேன். என் முதலாளிக்கிட்ட நீங்களும் ஏமாந்திருப்பீங்க. ஆனா ஒன்னுய்யா. அவன் இதுவரைக்கும் அரசாங்க பேங்குகள்லதான் விளையாடி இருக்கான். அவங்க ஏமாந்த தொகை அவங்க பேங்கோட சைஸ்க்கு ஒன்னும் பெரிசில்லை. ஆனா உங்க பேங்க் அப்படியில்லைன்னு நினைக்கிறேன். உங்களுக்கும் இதுதான் முதல் ப்ராஞ்ச்சின்னு நம்ம மானேசர் கூட இன்னைக்கித்தான் சொன்னார். அதான்யா என்னை விசனப்படுத்துது.’ பொறியாளர் பின்வாசல் வழியாக எங்களை நோக்கி வருவது தெரிந்தது. ‘நான் சொல்றத சொல்லிட்டேன் தம்பி. அப்புறம் உங்க இஷ்டம். பாய் வரான். உங்க முகம் களையிழந்து இருக்கறாப்பல தெரியுது தம்பி. அவன் பாக்கவேணாம். இவனும் ஒரு ஃப்ராடு பய தான். சாக்கிரதை, வாய உட்டுராதீங்க. நான் முன்னால போரேன்.’
அவர்களை வழியனுப்பிவிட்டு என் அலுவலகத்துக்கு திரும்பும் வழியெல்லாம் இப்போது என்ன செய்யப் போகிறேன் என்பதை பாதையில் கவனம் செலுத்தாமல் யோசித்துக்கொண்டே சென்றேன். இருந்தாலும் எந்த விபத்திலும் சிக்கிக்கொள்ளாமல் பத்து கிலோமீட்டருக்கும் அதிகமிருந்த தூரத்தை எப்படி விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் கடந்து அலுவலகத்தை அடைந்தேன் என்று இப்போது நினைத்தாலும் வியப்பாயிருக்கிறது. அன்று அவ்வளவு குழப்பத்திலிருந்தேன்.
அலுவலகம் அடைந்ததும் சேர்மனிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை தயார் செய்துக்கொண்டு அவருடைய செயலாளரை அழைத்தேன். நல்ல வேளை, ‘சார் ஏதோ அர்ஜெண்ட் மீட்டிங்னு அஞ்சு மணிக்கே போய்ட்டார்.’ என்று செயலாளர் கூற இப்போதைக்கு தொல்லை விட்டது என்று நினைத்தேன்.
இருப்பினும் சேட்டை நான் மட்டும் தனியே கையாள முடியாது என்று நினைத்தேன். என் வட்டார மேலாளரையும் நம்பிப் பயனில்லை. ஏற்கனவே அவருக்கு என்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதை இன்று காலையில் நான் தொடர்பு கொண்ட என்னுடைய முதல் அக்கவுண்டன்ட் கூறியிருந்தார்.
அவரும் ஒரு மணி நேரம் கழித்து கூப்பிடுகிறேன் என்றாரே இதுவரை கூப்பிடவில்லையே. சரி, நாமே மீண்டும் அவரை அழைத்தால் என்ன என்று நினைத்து நேரத்தை பார்த்தேன். மாலை 6.00 மணி. அலுவலகத்தில்தான் இருப்பார். கூப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பத்திற்குப் பிறகு சரி கூப்பிடுவோம், உதவி செய்தால் சந்தோஷம், இல்லையெனில் வருத்தப்படக்கூடாது என்று எனக்கு நானே கூறிக்கொண்டு அவருடைய எண்ணை சுழற்றினேன். நல்ல வேளை அவரே எடுத்தார்.
என் குரலைக் கேட்டதும் ‘சொல்லுங்க டிபிஆர்.’ என்றார்.
‘சார், உங்கள தொந்தரவு செய்யறேன்னு நினைக்காதீங்க.’ என்று ரம்பித்தேன் தயக்கத்துடன்.
அவர் சிரித்தார். ‘ கோ அஹெட். காலைல சொன்ன சமாச்சாரம்தானே?’ என்றார்.
சரி. நல்ல மூடில்தான் இருக்கிறார் என்ற நினைப்பில் ‘ஆமாம் சார். ஏதாவது யோசிச்சீங்களா?’ என்று கேட்டேன்.
சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, ‘டிபிஆர். நீங்க இதப்பத்தி எங்கிட்ட சொன்னதோட நிறுத்திக்கிட்டீங்கன்னா நல்லதுன்னு நினைக்கிறேன். நான் இங்க விசாரிச்ச வரைக்கும் நம்ம சேர்மன் மேல எல்லாருக்கும் நல்ல அபிப்பிராயம் இருக்கு. இதுவரைக்கும் அவருடைய பழைய பேங்குலருந்து அவர் கொண்டுவந்த எல்லா ப்ரொப்போசலும் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்றாங்க. நம்ம க்ரெடிட் டிபார்ட்மென்டிலும் அப்படித்தான் ஃபீல் பண்றாங்க. அதனால நீங்க ஒன்னும் அதிகமா கவலைப்படாம அந்த ப்ரொப்போசல்ல மெரிட் இருந்தா ரெக்கமண்ட் பண்ணி அனுப்புங்க. அப்புறம் உங்க ரீஜியனல் மானேஜர் இருக்காருல்ல? அவரும் ரெக்கமண்ட் பண்ணாத்தானே லோன் சாங்ஷன் ஆகும்? அதனால டோண்ட் ஒர்ரி. எல்லாம் நல்லா முடியும். அப்படி ஏதும் ப்ர்ஷர் வந்தா என்னை கூப்பிடுங்க. என்னால முடிஞ்சத செய்றேன். ஒகே.’ என்றவர் என்னை மேலே பேசவிடாமல் இணைப்பை துண்டித்துவிட்டார்.
ஆக, இவரும் எனக்கு உதவப் போவதில்லை என்பது தெளிவானது. அதனால்தான் ஒரு மணி நேரத்தில் கூப்பிடுகிறேன் என்றவர் கூப்பிடாமலேயே இருந்திருக்கிறார். அவரை குறை சொல்லி பயனில்லை. அவர் துருவி துருவி விசாரித்தால் ஒருவேளை விஷயம் சேர்மன் வரை எட்டிவிட்டால் பிறகு அவருடைய நிலைமையே வில்லங்கமாகிவிடும் என்று நினைத்தேன்.
இதுவரை நடந்தவற்றை மீண்டும் மனசுக்குள் அலசிப்பார்த்தேன். அவர் கடன் கேட்டிருப்பது இருபது லட்சம். முதலாவதாக எதற்காக இந்த தொகையை உபயோகப்படுத்த உத்தேசித்திருக்கிறார் என்று அவர் கடன் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்க வேண்டியிருக்கும். இரண்டு கப்பல்களை சார்ட்டரிங் செய்ய பூம்புகார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படவேண்டிய தொகை என்று அவர் கூறினால் அதை வங்கியே நேரடியாக அந்நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்தால் அவர் அத்தொகையை கணக்குப் பிள்ளை கூறியதுபோன்று வேறெந்த வங்கியிலும் பெற்றுள்ள கடனை அடைக்க உபயோகிக்க முடியாதல்லவா? இது ஒன்று.
இரண்டாவது, அவர் சொத்து விஷயமாக போலிப் பத்திரம் ஏதாவது தயாரித்தாலும் அசையா சொத்துக்களை அடமானமாக பெறும் சமயங்களில் அதன் தாய் பத்திரத்திலிருந்து இறுதியாக பதிவு செய்யப்பட்ட பத்திரம் வரை அடகுவைப்பவர் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அத்துடன் அப்பத்திரங்கள் எல்லாம் வங்கியால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுள் ஒருவரால் பரிசோதிக்கப்படுவதுடன் அச்சொத்து பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் முந்தைய பதிமூன்று வருட காலத்திற்கான வில்லங்க சான்றிதழும் எடுக்கப்படவேண்டும் என்பது வங்கியின் நியதி. ஆக இதிலும் அவர் தப்பிக்க முடியாது.
மூன்றாவது இத்தனை விலைமதிப்புள்ள சொத்து வங்கியால் நியமிக்கப்பட்ட சார்ட்டர்ட் கட்டட பொறியாளர் ஒருவரால் தனியாக மதிப்பீடு செய்யப்படவேண்டும். அப்படி செய்யப்படும் சமயத்தில் அவர் சொத்தை சுற்றிலும் உள்ள சொத்தின் உரிமையாளர்களை நேரில் சந்தித்து இச்சொத்தின் உரிமையாளரைப் பற்றிய தகவலை அறிந்து தன்னுடைய மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடவேண்டும் என்ற நியதியும் உண்டு.
நான்காவது இவையெல்லாவற்றையும் கடந்து கடன் விண்ணப்பத்தை வங்கி கிளை மேலாளரான நான் பரிந்துரைத்தாலும் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட கடன் விண்ணப்பங்களை என்னுடைய வட்டார மேலாளரும் பரிந்துரைக்க வேண்டும். அதற்கு முன்பாக அவரும் அடகு வைக்கப்படும் சொத்தை பார்வையிட்டு அவருடைய மதிப்பீட்டையும் தனியாக அளிக்க வேண்டும் என்பது ஒரு நியதி.
ஏனென்றால் கடன் விண்ணப்பதாரர் வழக்கறிஞர், மதீப்பீட்டாளர் ஏன் சார்பதிவாளர் என யாராவது ஒருத்தரை ஏமாற்றினாலும் மற்றவர் கண்டுபிடித்துவிட முடியும். அல்லது இவர்கள் எல்லோரையும் பணம் கொடுத்தோ, மிரட்டியோ சரிகட்டினாலும் வங்கியின் ஒரு வட்டார மேலாளரை அவ்வளவு எளிதாக மசிய வைத்துவிட முடியாதல்லவா?
ஒரு கடனை வழங்குவதில் இத்தனை நியதிகள் இருந்தும் சில சமயங்களில் கடன் பெறுவோர் இத்தகைய போலி சொத்துக்களை அடகு வைத்து ஏமாற்றிவிடுவதும் உண்டு. ஒரு வங்கியில் அரசாங்கத்துக்கு சொந்தமான ஒரு விளையாட்டு திடலையே ஒருவர் தன் சொத்து என்று அடகு வைத்து ஏமாற்றியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அத்தகைய எத்தர்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை.
ஆக, மேற்கூறிய எல்லா நியதிகளையும் ஒரு குறிப்பேட்டில் சுருக்கமாக எழுதி ஒவ்வொன்றையும் ஸ்கோர் ஆஃப் செய்து இதில் எதிலாவது ஒன்றில் நம் வின்னப்பதாரர் நிச்சயம் சிக்கிக்கொள்வார் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
ஆனால் அடுத்த நாள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அடகு வைக்கப்படும் சொத்து சம்பந்தப்பட்ட எல்லா பத்திரங்களின் சர்ட்டிஃபைட் நகல்களையும் சமர்ப்பித்தபோதுதான் நம்முடைய ஆள் கணக்குப்பிள்ளை எச்சரித்தது போல் எத்தனிலும் எத்தன் என்று எனக்கு விளங்கியது.
தொடரும்
காதலிக்க நேரமில்ல நாகேஷ், பாலையாட்ட கதை சொன்னமாதிரி சொல்லிட்டுப்போறீங்களே! அடுத்த பகுதி எப்ப? எப்ப? எப்ப? :)
பதிலளிநீக்குஉங்களின் பதிவுகளைச் சேர்த்து வைத்துப் படித்துத்தான் எனக்குப் பழக்கம். என்ன ஒண்ணு, பின்னூட்டம் இடாமலேயே படிக்கிற ஆள். :P
பல அருமையான பதிவுகளை எழுதிருக்கீங்க.
-மதி
சார் எல்லா வங்கி அனுபல பதிவுகளையும் சேர்த்து ஒரு புத்தகம் வெளியிட்டீர்கள் என்றால் இளைய தலைமுறை வங்கி அதிகாரிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.இதை சீரியஸாக சிந்திக்கவும்.
பதிலளிநீக்குஇன்டர்நெட்டிலே கூட பி.டி.எஃப் பார்மெட்டில் வெளியிடலாம் சார்.
நன்றி புதுவை.
பதிலளிநீக்குஇந்த தொடர் வழியாக உங்களைப் போன்ற பல புது நண்பர்களை நான் பெற்றிருப்பதே எனக்கு கிடைத்த பெரிய வெகுமதி.
தொடர்ந்து படியுங்கள்.
வாங்க மதி, நன்றி.
பதிலளிநீக்குஇனிமேல் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் உங்கள் கருத்துக்களை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
வாங்க முத்து, நன்றி.
பதிலளிநீக்குநீங்க சொல்ற ஐடியா நல்லாத்தான் இருக்கு. யோசிக்கறேன்.எல்லாப் பதிவையும் போட்டா யாராச்சும் அடிக்க வந்துருவான். செலக்ட் பண்ணித்தான் போடணும். பாக்கலாம்.
உங்க ஆலோசனைக்கு நன்றி.
வாங்க ராஜ்.
பதிலளிநீக்குஎத்தன்ங்க கிட்டருந்து என்னத்த கத்துக்கலாம்னு பாக்கறீங்க? இவன மாதிரி இருக்கக்கூடாதுன்னு வேணா கத்துக்கலாம். இல்லன்னா இவன மாட்டிக்கக்கூடாதுன்னும் கத்துக்கலாம். அது கத்துக்கறவங்கள பொறுத்து இருக்கு. சரிதானே ராஜ்!
வாங்க சத்தீஷ்,
பதிலளிநீக்குIs it so interesting to draw the attention of a publisher?
Anyway, thanks for your observation.
'எத்தனுக்கு எத்தனா இருக்கானே' இதை பாலைய்யா ஸ்டைலில் படிக்கவும்.
பதிலளிநீக்குநீங்க அப்பப்ப கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும், வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் சொன்னீங்கல்லே?
சதீஷ் ஒரு காப்பி வாங்கிட்டாருன்னா ரெண்டாவது காப்பி எனக்கு புக் பண்ணிருங்க:-)))
கொஞ்சம் உங்கள் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பாருங்கள். i used the email u gave in your blogger profile.
பதிலளிநீக்குif u have problems accessing that a/c, could u pls write to me at
mathygrps at gmail dot com.
nandri!
-Mathy
It's not a "mugashthuthi"..//
பதிலளிநீக்குSorry I did not mean it that way. I was plesantly surprised. that is all.
Thanks for your encouraging comments. I'll strive to make my future postings also interesting to you all.
வாங்க துளசி, நன்றி.
பதிலளிநீக்குநானும் இப்பல்லாம் நீங்க சொன்னா மாதிரி நகைச்சுவை நடிகர்களுடைய பாணியிலதான் சிந்திக்கிறேன். நான் நானாவறதுக்கு இன்னும் கொஞ்ச நாளாகும்னு நினைக்கிறேன். ஹி, ஹி!!
அப்புறம், இது புக்கா போடறதுக்குன்னு யாராவது ஏமாந்து போய் வந்தா பின்னூட்டம் போடற எல்லாருக்கும் புத்தகம் இனாமா குடுக்கறேன்.:-))
புக்-குக்கு இப்பவே சொல்லி வச்சுடுறேன் ஜோசப் சார்.
பதிலளிநீக்குவாங்க ஜோ.
பதிலளிநீக்குஉங்க இலவச! பிரதி புக் பண்ணியாச்சி.
வாங்க, வாங்க, எல்லாரும் வாங்க,
இன்றைக்கி என்னோட பதிவில பின்னூட்டம் போடறவங்க எல்லாருக்கும் புக் இனாம்! இனாம்!!
இந்த Offer இன்னைக்கி மட்டும்தான்.
Hello Joseph Sir
பதிலளிநீக்குYou have a very good writing style. I would not be surprised if Kizhakku pathipakam takes note of this site.
all the best.
Murali
நன்றி முரளி.
பதிலளிநீக்கு