நான் உண்மையிலேயே அரண்டு போய் அவரையே பார்த்தேன்...
உக்கிரமமான கோபத்துடன் என்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தவாறு நின்றார் பிள்ளை. நான் என்ன சொல்லி அவரை சமாதானப்படுத்துவது என்று யோசித்தவாறு என் இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன். திடீரென்று என் அறைக்கு வெளியே நின்றிருந்த அவருடைய பணியாள் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து அவருடைய காதில் ஏதோ சொல்ல இன்னும் அதீத கோபத்துடன் என்னை பார்த்தார் பிள்ளை. ‘என்ன சார், போலீச வரச்சொல்லி பூச்சாண்டி காட்டுறீங்களா?’ என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் என் அறைக் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த (திறப்பு விழா அன்று வந்திருந்த) கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிள்ளையையும் என்னையும் மாறி, மாறி பார்த்தார்.
எனக்கு குழப்பம் அதிகரித்தது. இவர் எங்கே இந்த நேரத்தில்? ஒருவேளை என் உதவி மேலாளர் பிள்ளையின் குரலை கேட்டுவிட்டு அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடாமல் இருக்க இவரை வரச் சொல்லியிருப்பாரோ?
'என்ன சார், எனி ப்ராப்ளம்? என்ற ஆய்வாளரைப் பார்த்து புன்னகையுடன் ‘ஒன்னுமில்லை சார்.’ என்றேன். பிள்ளையை பார்த்து, ‘இவர்தான் முதல்வரை திறப்புவிழாவுக்கு அழைக்க உதவியவர். பெரிய டிரான்ஸ்போர்ட் ஓனர்.’ என்று அறிமுகப்படுத்தினேன். ஆய்வாளர் புன்னகையுடன் அவரை நோக்கி கைநீட்ட நிமிட நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பிய பிள்ளை புன்னகையுடன் அவருடைய கையைப் பிடித்து குலுக்கினார்.
ஆய்வாளர், ‘சார் ஒரு முக்கியமான விஷயமா உங்கள பார்க்க வந்தேன். இப்ப பேசலாமா?’ என்றவாறு இருக்கையில் அமர்ந்தார். நான் பிள்ளையை பார்க்க, அவர் என்ன நினைத்தாரோ, ‘நான் வரேன் சார். சேட்டு கிட்ட நீங்க சொன்னத சொல்லிட்டு ஊருக்கு கிளம்பறேன். ரெண்டு வாரம் கழிச்சி திரும்பிவந்து உங்களை பார்க்கறேன்.’ என்றுவிட்டு ‘வச்சிக்கறேன்டா உன்னை’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்.
இனியும் ஒரு சோதனை வேதனையாய் முடியாமல் போனதை நினைத்து நிம்மதியடைந்தாலும் என் முன்னே அமர்ந்திருந்த காவல்துறை ஆய்வாளர் வழியாய் புதுசாய் ஏதாவது பிரச்சினை வரப்போகிறதோ என்ற சந்தேகத்துடன் அவரைப் பார்த்தேன்.
‘பெரிசா ஒன்னுமில்லை சார். எங்க காவல்துறை இலாக்காவில கணவனையிழந்த கைம்பெண்கள் சங்கம் ஒன்னு இருக்கு. வர்ற சனிக்கிழமை அந்த சங்கத்தோட ஆண்டு விழா நடக்குது.’
‘அப்படியா சார்?’ என்றேன், இதை சொல்றதுக்காகவா என்னைத் தேடிக்கிட்டு வந்திருக்கீங்க? என்று வெளிப்படையாக கேட்கமுடியாமல். சங்கத்துக்குன்னு ஏதாவது நன்கொடை கேட்க வந்திருப்பாரோ?
‘சார் ஒவ்வொரு வருஷமும் சுமார் ஐம்பது பெண்களுக்கு தையல் இயந்திரம் கொடுப்பது வழக்கம். இந்த வருஷம், உங்க பேங்க்லருந்து DRI லோன் சொல்வாங்களே அந்த Schemeல ஒரு இருபத்தஞ்சி பேருக்கு தையல் மிஷின் வாங்க லோன் கொடுக்கணும், முடியுமான்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன். உங்க பக்கத்து பில்டிங்லருக்கற இன்னொரு பாங்கலருந்து இருபத்தஞ்சு பேருக்கு லோன் குடுக்கறேன்னு ஒத்துக்கிட்டிருக்காங்க.’
‘இவ்வளவுதானா? நல்ல நேரத்துல வந்து என்னை பெரிய ஆபத்துலருந்து காப்பாத்தினீங்க சார்.’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவரை பார்த்து புன்னகை செய்தேன். ‘கண்டிப்பா செய்திரலாம் சார். நீங்க நாளைக்கு யார், யாருக்கு லோன் கொடுக்கணும்னு லிஸ்ட் ஒன்னு குடுத்திருங்க. நான் ஒரே நாள்ல பேப்பர்ஸ் எல்லாம் தயார் பண்ணிட்டு சொல்றேன். வெள்ளிக்கிழமை அவங்கள வரச்சொன்னீங்கனா ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் கம்ப்ளீட் பண்ணிரலாம். சனிக்கிழமை நானே வந்திருந்து லோன் தொகையை செக்கா கொடுத்திடறேன். என்ன சொல்றீங்க?’ என்றேன்.
‘அப்படியே செஞ்சிரலாம் சார்.’ என்று எழுந்தவர். ‘நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க சார்’ என்று இழுத்தார்.
புதுசா ஏதாவது பிரச்சினையா? என்று நினைத்தவாறு அவரைப் பார்த்தேன்.
‘ஒன்னுமில்ல சார். நான் வரும்போது உங்க அறையிலருந்த ஆளு உங்களுக்கு ஏதாவது பிரச்சினை கொடுத்தான்னா என் கிட்ட சொல்லுங்க சார். நான் பாத்துக்கறேன்.’
இவருக்கு எப்படி தெரிஞ்சது? ‘அதெல்லாம் ஒன்னுமில்லையே சார். ஏன் கேக்கறீங்க?’
அவர் புன்னகைத்தார். ‘சார் நாங்க போலீஸ்காரங்க. ஒரு ஆளைப் பார்த்தா அந்த ஆளு எப்படிப்பட்டவன்னு உடனே எங்களால எடை போடமுடியும். அதனால சொல்றேன். அதுமட்டுமில்லை. அவன் கூட வந்த ஆளு நான் வாசல்ல நுழையறத பார்த்ததுமே உங்க ரூம்ல நுழைஞ்சி அந்தாளு காதுல ஏதோ சொன்னத நான் பார்த்தேன். ஏதோ பிரச்சினைன்னு உடனே எனக்கு தெரிஞ்சி போச்சி. அதான் அவரு உள்ள இருக்கும்போதே கதவை திறந்துக்கொண்டு உள்ள வந்தேன். நான் வந்தவுடனே அவன் முகத்தையும் பார்த்தேன். சொல்லுங்க. ஏதாவது பிரச்சினையா சார்?’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சொல்லிவிடலாமா என்று ஒரு நொடி நினைத்தேன். ஆனால் அடுத்த நொடி அதன் பின் விளைவுகளை எண்ணிப் பார்த்தேன். ஒன்றும் சொல்லாமல் வெறுமனே புன்னகைத்தேன்.
‘சரி சார். நீங்க சொல்ல விரும்பலைன்னு நினைக்கிறேன். பரவாயில்லை. ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க, நான் பார்த்துக்கறேன். வரேன், சார்.’
இருக்கையிலிருந்து எழுந்து அவருடன் வீதிவரை சென்று வழியனுப்ப சென்றவன் பிள்ளையின் வண்டி அங்கே நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். என் பார்வை சென்ற திசையில் பார்த்த ஆய்வாளர் அவருடைய ஜீப்பில் ஏறாமல் என்னை திரும்பிப் பார்த்தார். ‘என்ன சார். அந்த அம்பாசிடர் கார்தான் அந்தாளு வந்த வண்டியா?’
ஆமாம் என்று தலையசைத்தவாறு அந்த வாகனத்தை பார்த்தேன். ஓட்டுனரின் அருகில் அமர்ந்திருந்த பிள்ளையின் பணியாளர் எங்களைப் பார்த்துவிட்டு திரும்பி பின் இருக்கையில் அமர்ந்தவரிடம் ஏதோ சொல்ல வாகனம் உடனே புறப்பட்டு சென்றது. அந்த நொடி நேரத்தில் அந்த வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணை குறித்துக்கொண்ட ஜீப் டிரைவர் ஆய்வாளரிடம் கூறினார்.
சரியான போலீஸ் மென்டாலிட்டி என்று நினைத்த நான் ஆய்வாளரைப் பார்த்து புன்னகையுடன், ‘டோன்ட் ஒர்றி சார். அவர் எந்த தகராறும் பண்ண மாட்டார். நீங்க போங்க. உங்க உதவி வேணும்னா கண்டிப்பா உங்கள கூப்பிடறேன்.’ என்றேன்.
‘கண்டிப்பா கூப்பிடுங்க சார். எனக்கென்னவோ அந்த ஆள் பிரச்சினை பண்ற ஆளுன்னுதான் தோனுது. ஜாக்கிரதையா இருங்க.’ என்றவாறே ஜீப்பில் ஏறி புறப்பட்டார்.
வண்டி சென்று மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்ற நான் என்னையுமறியாமல் பிள்ளை திரும்பி வந்துவிடுவாரோ என்று அவருடைய வாகனம் சென்ற திசையை பார்த்தேன்.
சில நொடிகள்வரை அங்கேயே நின்றிருந்த நான் திரும்பி அலுவலக படிகளில் ஏறவும் ஒரு வாகனம் சர்ரென்று வந்து என் பின்னே நிற்கவும் சரியாக இருந்தது..
தொடரும்.
வாங்க ராஜ், வாங்க.
பதிலளிநீக்குசெக்யூரிட்டியா? அப்படீன்னா? அந்த காலத்துல இதெல்லாம் ஏது சார். இப்பத்தான் மூலைக்கு மூலை செக்யூரிட்டி ஏஜென்ட்ஸ் இருக்காங்க. அப்பல்லாம் நம்ம புத்திசாலித்தனம்தான் நம்ம செக்யூரிட்டி.
//ஒரு வாகனம் சர்ரென்று வந்து என் பின்னே நிற்கவும் சரியாக இருந்தது//
பதிலளிநீக்குஅடடா, இப்பத்தான் பிரச்சனை வெளியப்போச்சுன்னு பாத்தா.. இப்படி ஒரு இடத்துல தொடரும் வச்சுட்டீங்களே.. :(
அப்புறம் ராஜ், அதென்ன ஆட்டோவா சார்? புரியலையே.
பதிலளிநீக்குஎன்ன? 'ஆட்டோ தெரியாதா?'
பதிலளிநீக்குஎன்ன வலைப்பதிவாளர் நீங்க?
போங்க போய் மொதல்லே இந்த மாதிரி அடையாளங்களையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வாங்க:-)))
இப்பத்தான் எனக்கும் தோணுது,'திடுக் திடுக்ன்னு தொடரும் போடறதுக்கும் ஒரு ஆட்டோ ஏற்பாடு செஞ்சுரலாமா?:-))))))
//இப்பத்தான் எனக்கும் தோணுது,'திடுக் திடுக்ன்னு தொடரும் போடறதுக்கும் ஒரு ஆட்டோ ஏற்பாடு செஞ்சுரலாமா?:-))))))//
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா
ஜோசப் சார்,
வங்கிப் பின்ன்ணி-ல இப்படி ஒரு திகில் கதையா? சீக்கிரம் தொடருங்க.
ஜோசப் சார், அந்த ராம்கி பேச்சை கேட்டு சின்ன சின்ன பதிவு, திடுக், திடுக் என்று தொடரும் போட்டு வெறுப்பேத்தாதீங்க :-(
பதிலளிநீக்குவாங்க ராமனாதன்,
பதிலளிநீக்குபிரச்சினையில்லாத வாழ்க்கையில்லிங்கற மாதிரிதான்,என்னோட Professionம். நேத்தைக்கி டி.வில ஒரு நியூஸ் ஸ்டேட் பாங்க் மேலாளர் ஒருத்தர CBI அரெஸ்ட பண்ணிட்டாங்களாம். என்னவாம்? ஒரு புரோக்கர் கிட்டருந்து 50,000 லஞ்சம் வாங்குனாராம். கையும் களவுமா பிடிச்சிட்டாங்களாம். மாட்டாதவங்க எத்தன பேர் இருப்பாங்க? இந்த வேலையே இந்த மாதிரி ரிஸ்க் நிறைஞ்ச வேலைதான்.
ஓ, அதுவா ராஜ்? இன்னமும் கூட என்னால இப்படியெல்லாம் நினைக்க முடியல பாருங்க!
பதிலளிநீக்குஅதனால தானோ என்னவோ நிறைய தேவையில்லாத பிரச்சினைகள்லல்லாம் மாட்டிக்கிட்டு முழிச்சேன்.
பாருங்க துளசி கடல் கடந்து போயும் நம்ம நாட்டு நிலவரத்தை தெரிஞ்சி வச்சிருக்கீங்க. நான் ஒரு ட்யூப்லைட்டுங்க. எதையும் ஒன்னுக்கு ரெண்டு தடவை சொன்னாத்தான் புரியும்.
பதிலளிநீக்குஉஷாவுக்கு குடுத்த பதிலை படிங்க. விஷயம் புரியும்.
வாங்க ஜோ, நட்சத்திர வாரம் முடிஞ்சி ஃப்ரீயா இருக்கீங்களா? சூப்பரா போச்சி ஜோ உங்க *வாரம். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇராமனாதனுக்கு குடுத்த பதிலைப் படிச்சா புரியும் இந்த வேலை எத்தனை த்ரில்லிங்கான அதே சமயம் ஆபத்தான வேலைன்னு.
வாங்க ரா.உஷா முதல் தடவையா வரும்போதே திட்டிறீங்களே.
பதிலளிநீக்குபாவம்ங்க ரஜினி ராம்கி. சின்னதா ஒரு ஐடியா குடுக்கப் போய் அவருக்கு திட்டா?
இப்பல்லாம் எனக்கே இப்படி எழுதினாத்தான் த்ரில்லிங்கா இருக்கா மாதிரி தோணுது.. கொஞ்சம் பொறுத்துக்குங்க..
உங்கள எங்க சார் திட்டினேன்? விளக்குமாற்றை சேர்ல ஒக்கார வெச்சி படங்காட்டின ஆள இல்லே திட்டீனேன் :-)
பதிலளிநீக்குதிட்டலையா அப்ப சரி.
பதிலளிநீக்குவிளக்கத்துக்கு நன்றி. ஹி, ஹி.
mr. joseph...shoot the next issue...fast!!!!!!!
பதிலளிநீக்குYES DHARUMI SIR!!
பதிலளிநீக்குநாளைக்கே போட்டுடறேன் சார் :-))
ஜோசப், இதுவரை இந்த தொடரில் பின்னூட்டம் இடவில்லையே தவிர தொடர்ச்சியாக படித்து வருகிறேன். விறுவிறுப்பாக செல்கிறது தொடர்... தினம் இரு பதிவாக போடலாமே நீங்க..
பதிலளிநீக்குவாங்க முகமூடி,
பதிலளிநீக்குபோடலாம்தான். டைம்தான் பிரச்சினையே. இனிமே ரெண்டு பதிவில போடறத ஒரு பதிவில போட முயற்சிக்கிறேன்.
இல்லன்னா சில பேர் என் தலையில ரெண்டு போடலாமான்னு இருக்காங்க.
ஜோசப் சார். இதென்ன சி.ஐ.டி சங்கர் படம் பாக்குறாப்புல இருக்கு....யப்பா இந்த பணம் பொழங்குற எடத்துல பிரச்சனைகள் இருக்கும் போல.
பதிலளிநீக்குஆமாம் ராகவன். அதுவும் பொதுமக்களோட பணம்?
பதிலளிநீக்குரோட்டுல போறவனுக்கெல்லாம் கடன் குடுக்கணும்னு ஆரம்பிச்சா அப்புறம் நம்ம கதி அதோகதிதான்.
எல்லோருக்கும் கடன் கொடுத்தா வாடிக்கையாளர்கள் பார்வையில அவர் நல்லவர். இல்லன்னா சில சமயத்துல கொலை மிரட்டல் கூட வரும்.