25 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 66

அன்றைய கூட்டத்தில் கலந்துக் கொண்ட நான் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் உணவு விருந்திலும் கலந்துக் கொண்டு பிற்பகலில் வீடு திரும்பியபோது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது..

வீடு வந்து சேர்ந்ததுமே பிரச்சினைக்குரிய எந்த விஷயத்தையும் பேசக்கூடாது என்ற என்னுடைய முந்தைய எச்சரிக்கையை அடுத்து மிகவும் கவனமாக இருப்பது என் மனைவியின் வழக்கம்.

அன்றும் அப்படித்தான். நான் உடை மாற்றி, குளித்து முடிக்கும் வரை என்னிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்த என் மனைவி, என்னிடம் காப்பியை கொடுத்துவிட்டு என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்திருந்த ஒரு கனத்த உறையை கொடுத்தார்.

அது எப்போதும் வரும் உறைதான். வாரத்திற்கொரு முறை வருவது வழக்கம். சரி.. பிறகு திறந்துக் கொள்ளலாம் என்று நினைத்து அருகிலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு தரையிலமர்ந்து பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த என் மகளை எடுத்து வைத்துக் கொண்டு சிறிது நேரம் விளையாடினேன்..

அலுவலக வேலைகளுக்கிடையில் என் மகளுடன் கொஞ்சி விளையாடி எத்தனையோ மாதங்களாகி விட்டன. அவளுக்கு இரண்டு வயது முடிந்திருந்தது. படு சுட்டி.. படு வாயாடி. மழலையின் சுவடே இல்லாமல் வார்த்தைகள் படார், படார் என்று வந்து விழும்.

‘என்னம்மா இது இந்த போடு போடுது? என் பேத்திங்க எங்க வீட்டுக்கார பார்த்தா பேசவே பேசாது.. அது மட்டுமில்லீங்க, எந்த குழந்தையும் அவர பாத்ததுமே ஓன்னு அழும் இல்லன்னா கிட்டவே வராது.. உங்க பொண்ணு என்னடான்னா.. அவர படாத பாடு படுத்துது.. அவர மாதிரியே கால வளைச்சி, வளைச்சி நடந்து காட்டுது.. உங்கள பாத்தா அப்படி தெரியலையே, இவ யார மாதிரி வந்திருக்கா?’ என்று என்னுடைய வீட்டு உரிமையாளரின் மனைவி என் மகளைப் பற்றி புகார் கூறுவார்கள்..

பதிலுக்கு என் மனைவி.. ‘வேற யார மாதிரி? எல்லா அவ அப்பாதான். அவங்க இப்பவும் அப்படித்தானே இருக்காக? எல்லார் கிட்டயும் சண்டை போட்டுக்கிட்டுதான நாங்க இங்க வந்து எல்லாருமிருந்து யாருமில்லாதமாதிரி முளிச்சிக்கிட்டி நிக்கோம்’ என்று என் காலை சந்தர்ப்பம் பார்த்து வாரிவிட்டார்...

‘சரி.. சரி போறும் சார்.. என்னமோ இன்ப அதிர்ச்சின்னு சொல்லிட்டு சஸ்பென்ச இப்படி இழுக்கறீங்களே.’ என்று நீங்கள் முனகுவது கேட்கிறது..

விஷயத்துக்கு வருவோம்..

என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்திருந்த உறையை திறந்தேன்.

அதில்தான் இருந்தது விஷயம்.

நான் தஞ்சையில் காலடி வைத்த இரண்டாவது வாரமே என்னை அடுத்த நிலைக்கு பதவி உயர்வுக்கான நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள்.

அப்போதுதான் புதிய சேர்மனின் வெறுப்புக்காளாகி மாற்றலாகி வந்திருந்ததால் போவதா வேண்டாமா என்று வெகு நேரம் லோசித்து சரி போய்தான் பார்ப்போமே  என்று சென்றேன்.

என்னுடைய அதிர்ஷ்டம், முந்தைய சேர்மனைப் போலல்லாமல் புதியவர் நேர்காணல் வேலையை இரண்டு பொது மேலாளர்களிடத்திலும் ஒப்படைத்திருந்தார்..

ஆக, என்னுடைய நேர்காணல் எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் கழிந்திருந்தது. இருப்பினும் நேர்காணலுக்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்பட்டிருந்ததால் எனக்கெங்கே கிடைக்கப் போகிறதென்று அந்த விஷயத்தை நான் மறந்தே போய்விட்டேன்..

என்னுடைய தலைமையலுவலக உறையிலிருந்து நான் முதலில் எடுத்த கடிதமே என்னுடைய பதவி உயர்வு நியமன உத்தரவுதான்.

Grade II விலிருந்து Grade III என்ற நிலைக்கு. இன்றைய சூழலில் சொல்ல வேண்டுமென்றால், மேலாளர் பதவியிலிருந்து சீனியர் மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டேன்..

நான் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு பதவி உயர்வு என்பதால் அதைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது..

நான் இன்று காலையில் என்னுடைய வட்டார மேலாளரை அழைத்தபோது கூட மனுஷன் இதைப் பற்றி மூச்சே விடவில்லையே என்ற நினைப்பும் வந்தது.. ஏன் எதற்கு என்றெல்லாம் யோசித்து என்னுடைய சந்தோஷத்தை இழக்க நான் விரும்பவில்லை..

சரி நேரில் பார்க்கும்போது கேட்டுக் கொள்ளலாம் என்று அதைத் தள்ளி வைத்துவிட்டு என் மனைவியை அழைத்தேன்.. ‘ட்ரெஸ் பண்ணிக்கிட்டு புறப்படு.. கோயிலுக்கு போய்ட்டு அப்படியே டவுண்ல சாப்டு வரலாம்.’ என்றேன்.

என்னைப் பார்த்த என் மனைவியின் முகத்தில் எந்தவித ரியாக்ஷனும் இல்லை.. ‘என்ன இன்னைக்கி புதுசா?’ என்பது போல் ஒரு பார்வை.

நான் ஒன்றும் கூறாமல் என் நியமன உத்தரவை நீட்டினேன்.

‘உங்க ஆஃபீஸ் விஷயத்துல தலையிடாதேன்னு நீங்கதான சொன்னீங்க? இப்ப எதுக்கு எங்கிட்ட குடுத்து படீங்கறீங்க?’ என்ற என் மனைவியைப் பார்த்து சிரித்தேன்.

இதாங்க இந்த பொம்பளைங்களோட.. எப்பனாச்சும் ஏதாச்சும் மூட்ல ஒன்னும் சொல்லிட்டோம்னா அத அப்படியே ஞாபகத்துல வச்சிருந்து சமயம் பார்த்து அவுத்து விடுவாங்க..

நான் உடனே எழுந்து சென்று உத்தரவை அவர் கையில் திணித்து ‘படிச்சி பார். அப்புறமும் உனக்கு பிடிக்கலைன்னா நாம எங்கயும் போவேணாம். நான் போய் குளிச்சிட்டு வரேன்..’ என்று கொடியில் ஆடிய துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி நடந்தேன்..

என் பின்னால் என் மனைவியுன் சந்தோஷக் குரல். ‘ஏங்க.. நீங்கதான் இண்டர்வியூவுக்கு போய்ட்டு வந்தப்போ உங்களுக்கு எங்க கிடைக்க போவுதின்னீங்க? அப்புறம் எப்படி? இந்த ப்ரமோஷன் சேர்மன் கிட்ட சண்டை போட்டதுக்காகவா?’

‘ஏய், என்ன நக்கலா?’ என்று நினைத்துக்கொண்டு திரும்பி அவளைப் பார்த்து சிரித்தேன். ‘ஒருவேளை அவருக்கே என்ன பார்த்து பயம் வந்துருச்சோ என்னவோ.. எப்படியோ கிடைச்சிருச்சில்ல.. என்ன வெளிய போலாமா?’

‘பின்னே.. இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கிறதே அபூர்வம். மெட்றாஸ்லருந்தப்பவாவது சனிக்கிழைமையான வெளிய கூட்டிக்கிட்டு போவீங்க. இங்க வந்ததுலருந்துதான் எடம் புடிக்கேன் ஏவல் புடிக்கேன்னு எங்கள மறந்தே போயிட்டீங்களே.. (இது தூத்துக்குடி பாஷை. கண்டுக்காதீங்க) ஏதோ பெரிய மனசு பண்ணி சேர்மன் போனா போட்டும் ப்ரமோட் பண்ணியிருக்கார். அத கொண்டாடாம எப்படி? இதோ அஞ்சு நிமிஷத்துல ரெடி.. எல்லாம் எம் பொண்ணு பிறந்த ராசி..’ என்று மூச்சு விடாமல் பேசியவர் இதுதான் நேரம் என்ற நினைப்புடன், ‘ஏங்க வெளிய போறப்போ போஸ்ட் ஆஃபீஸ்லருந்து எங்கம்மாவுக்கு ஃபோன் போடலாங்க..’ என்றார்.

‘ஏன் எங்க வீட்டுக்கு சொல்ல வேண்டாமா?’

‘அதுக்கு என் பர்மிஷன் வேணுமாக்கும்? சரி நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.. நான் பாப்பாவ ரெடி பண்றேன்.’

ஆக, இந்த எதிர்பாராத சந்தோஷத்தை முதலில் பக்கத்திலிருந்த சர்ச்சுக்கு சென்று விட்டு டவுணுக்குள் சென்றோம். சரி வந்ததுதான் வந்தோம் ஒரு சினிமா பார்த்தாலென்ன என்று தோன்றவே.. பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் பார்த்துவிட்டு, ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு வீடு திரும்பினோம்..

வீட்டுக்குள் நுழைவதற்கென்றே காத்திருந்தது போல் தொலைப் பேசி அடித்தது..

வரவேற்பறை விளக்குகளைப் போட்டுவிட்டு போய் எடுப்பதற்குள் அமைதியாகிப் போன தொலைப் பேசியையே பார்த்துக்கொண்டு நின்றேன்..

யாராயிருக்கும்?

தொடரும் போட்டுரலாமா...?

சீ, வேணாம். அப்புறம் துளசி புறப்படற நேரத்துல டென்ஷனாயிட்டடங்கன்னா?

சரி, மறுபடியும் அடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

அடுத்த வினாடியே அடித்தது..

என்னுடைய வட்டார மேலாளர்!

இவர் எங்க இந்த நேரத்துல? மனுஷன் துக்க செய்திய சொல்றதுக்கேனே அலைவாரே என்ற நினைப்புடன்.. ‘ஹலோ சார். என்ன சார் இந்த நேரத்துல?’ என்றேன்..

பதிலுக்கு எதிர்முனையிலிருந்து உரத்த சிரிப்புக் குரல். ‘அப்பாடா’ என்றிருந்தது.. பிரச்சினை இல்லை..

‘டிபிஆர். காலையில நீங்க கூப்டப்போ உங்கள கன்க்ராட் பண்ண மறந்துட்டேன்.. சாயந்திரத்துலருந்து ரொம்ப நேரமா ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். எங்க செலப்ரேட் பண்ண போய்ட்டீங்களா?’ என்றார்.

‘ஆமா சார். சாரி சார்.’ என்றேன்.

‘சாரியா, எதுக்கு?’

‘நீங்க கூப்ட நேரத்துல இல்லாததுக்கு.’

‘ஓ அதுவா? இட் ஈஸ் ஓகே. அப்புறம் டிபிஆர். ஒரு விஷயம். நம்ம ஜி.எம் அநேகமா ஓப்பனிங் டேட்டுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே வர்றதா இருக்கார்னு நினைக்கிறேன்.நான் ரெகுலரா தங்குற ஓட்டல்லயே எனக்கும் அவருக்கும் புக் பண்ணிருங்க. அப்புறம் இன்னொரு விஷயம். உங்களுக்கு வேண்டிய ஸ்டாஃப் எல்லாம் போஸ்ட் பண்ணியாச்சி. திருச்சியிலருந்து ஒரு ஆஃபீசர கூட தற்காலிகமா உங்க ப்ராஞ்சுக்கு மாத்திருக்கேன். உங்க இன்விடேஷன் ரெடியானதும் எனக்கு கொஞ்சம் அனுப்புங்க. உள்ளூர் வி.ஐ.பிங்களுக்கு ஜி.எம் வந்ததும் குடுத்துக்கலாம். மத்தத நாளைக்கு சொல்றேன். ரூம்ஸ் புக் பண்ணிட்டு என்ன கூப்டுங்க. குட் நைட்..’

நல்ல வேளை, கடைசியில எதையாவது சொல்லி என் சந்தோஷத்தை கெடுத்துவிடுவாரோ என்று பயந்தேன். அப்படி இல்லாமல் விட்டாரே அதுவே பெரிய சந்தோஷம்தான் என்று நினைத்தவாறு படுக்கைக்கு சென்றேன்..

நாளைய பிரச்சினை நாளைக்கு ...

தொடரும்






19 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சார் உங்க ப்ரொமோஷனுக்கு.

    நல்ல வேளை துளசியக்கா பிரயாணப்படறாங்க.இல்லையின்னா தொடரும்னு போட்டு எங்க பீபியை இல்ல எகிற வச்சிருப்பீங்க.

    குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அப்பாடா....
    இப்பத்தான் நிம்மதியா இருக்கு:-)

    உங்க பதவி உயர்வுக்கு வாழ்த்து(க்)கள்.
    சொல்றதுக்குக் கொஞ்சம் (!) பிந்திப்போச்சு. சும்மா ஒரு 23/24 வருசம்தான். பரவாயில்லை.

    பொம்பளைங்க சைக்காலஜி இப்பத்தான் தெரிஞ்சதுங்களா?

    படிப்பினைன்னு சொல்லி இதையே போட்டுறவேண்டியதுதானே?:-)

    சரி. கிளம்பறேன். இன்னும் 17 மணிநேரம்தான் இருக்கு!

    பதிலளிநீக்கு
  3. எடம் புடிக்கேன்ன்னு வந்த எடத்துல என்னவோ ஒரு சந்தோஷம் உள்ளுக்குள்ள வந்தது. பக்கத்துலயே தூத்துக்குடி பாஷைன்னு சொல்லீட்டீங்க. அடுத்து தூத்துக்குடிப் பக்கம் ஒரு டிரிப்பு போடனும்.

    வாழ்த்துகள் சார்.

    அந்த 7 நாட்களா? சார்...இது நடந்து ரொம்ப வருஷம் இருக்கும் போல.....

    பதிலளிநீக்கு
  4. the prootion, the happiness that brought to our family, the way we celebrate that, all will remain as sweet memories. When u were writing that, I feel u must have reliven that moments. when your family reads this, they too will relive those moment.

    பதிலளிநீக்கு
  5. அப்பாடா! கடந்த ரெண்டு பாகமும் சந்தோஷமாவே முடிஞ்சுது.

    பதிலளிநீக்கு
  6. Joseph sir ,

    congrats on u r promotion. i couldnt wait till tomorrow morning to read the surprise TG u didn't disappoint me.. good that all went well..

    //நாளைய பிரச்சினை நாளைக்கு ...//

    wat's the big deal on tomorrow ?

    பதிலளிநீக்கு
  7. வாங்க சுதர்சன்,

    உங்க வாழ்த்துக்கு நன்றி.

    துளசி டென்ஷனாயிரக் கூடாதுல்ல. அப்புறம் கோபாலும் டென்ஷனாயிட்டா? அதுக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ராஜ்,

    காலம் மாறலாம் ஆனால் சில விஷயங்கள் மாறுவதே இல்லை ;)

    ரொம்ப சரி:-()

    பதிலளிநீக்கு
  9. சாரி சுதர்சன்,

    உங்க குடியரசு வாழ்த்த திருப்பி சொல்லணும்லே..

    என் உளமார்ந்த குடியரசு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க துளசி,

    படிப்பினைன்னு சொல்லி இதையே போட்டுறவேண்டியதுதானே?:-)//

    போட்ருக்கலாம் தான். மறந்துட்டேன்..

    இதனால் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... துளசி பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதுதான் இன்றைய பதிவின் படிப்பினை..

    பதிலளிநீக்கு
  11. துளசி,,

    மறந்துட்டேன்.. உங்க வாழ்த்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராகவன்,

    அந்த 7 நாட்களா? சார்...இது நடந்து ரொம்ப வருஷம் இருக்கும் போல..... //

    அடடா, இப்பத்தான் தெரிஞ்சிதா.. இது நடந்தது 83ல.. அப்படி பார்த்தா இன்னும் இருபது வருஷ அனுபவத்த எழுதறதுக்கு இன்னும் எத்தன பதிவுகள் வேணும்! நினைச்சி பாக்கவே பயமாயிருக்கு..

    83ல சீனியர் மானேஜரான எனக்கு அடுத்த லெவல் சீஃப் மேனேஜரா ஆவறதுக்கு ஒரு பத்து வருஷம் அடுத்ததா AGM ஆவறதுக்கு இன்னொரு எட்டு வருஷம் ஆயிருச்சி.. AGM ஆகி ஏழு வருஷமாச்சி.. மேல போக போக பிரமீட் மாதிரி வாய்ப்புகளும் குறைஞ்சிக்கிட்டே போகுது.. என்ன பண்றது?

    உங்க வாழ்த்துக்கு நன்றி ராகவன்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க கிருஷ்ணா..

    What you said is absolutely correct. Thanks.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ஜோ,

    உங்களுக்கு சந்தோஷம்னா எனக்கும்தான்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க கார்த்திக்,

    அதான் சொன்னேனே.. நாளைக்கு பிரச்சினை நாளைக்கு..

    பதிலளிநீக்கு
  16. Congrats! ( I travelled in a timeship to reach you in 1983 !!)

    பதிலளிநீக்கு
  17. வாங்க மணியன்,

    Thank you for your greeting.

    பதிலளிநீக்கு
  18. // நாளைக்கு ப்ரச்சினை நாளைக்கு // என்னா சார் இது, சொம்மா நம்ம ரஜினி கணக்கா பஞ்ச் டயலாக் வுடுறீங்ங்ங்கக.......

    ****

    குடியரசு தின நல்வாழ்த்துகள் !!!!

    ****

    சூரியன் இன்று மலரவில்லையே ???

    பதிலளிநீக்கு
  19. வாங்க சோ.பையன்,

    ரஜினி கணக்கா பஞ்ச் டயலாக் வுடுறீங்ங்ங்கக.......//

    அப்படியா? ரஜினி மட்டுமா உடுறாரு? விஜய், அஜித், வி.காந்த்.. இன்னும் யார் யாரோ விடுறப்ப நாம உட்டா என்னாங்க? எல்லாம் பழக்க தோஷம்தான்!

    உங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..

    சூரியன் மலரலையா? உங்க பின்னூட்டத்த பார்த்தாப்பல இருக்கே..

    காலையிலேயே மலர்ந்திருச்சிங்க.. பாருங்க..

    பதிலளிநீக்கு