திரும்பிப் பார்க்கிறேன் 59
பண்ணையாரை சந்தித்துவிட்டு வந்த பிறகும் அவரைப் பற்றியே பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன் என்று எழுதியிருந்தேன்.
ஆமாம், என் அலுவலக வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் அற்புதமான மனிதர் அவர். அவரைப் பற்றி அவ்வப்போது எழுதுகிறேன். ஏனெனில் நான் தஞ்சையிலிருந்து இரண்டு வருட காலத்தில் அவரை நான் பலமுறை குடும்பத்தோடு சென்று சந்தித்திருக்கிறேன். அவரைப் பற்றி பிறகு மீண்டும் பேசலாம்.
அவரைப் போலவே அடுத்த இரண்டு வாரங்களில் பலரையும் சந்தித்தேன். அவர்களில் ஒருவரைப் பற்றி இன்றைய பதிவில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இவர் தஞ்சையில் டவுணிலேயே இருந்தார். அவரை எனக்கு அறிமுகப் படுத்தியவர் நான் முன்னே கூறிய சேட். இருவரும் தஞ்சை ரோட்டரி க்ளப் உறுப்பினர்கள். அந்த வகையில்தான் சேட்டுக்கு அவர் பழக்கமாயிருந்தார்.
என்னை அவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் சேட் அவரைப் பற்றி கூறியதன் சுருக்கம்: ‘சார், இவர் நம்ம டவுண்ல இருக்கறதே நமக்கெல்லாம் பெருமைன்னு நினைக்கணும். அந்த அளவுக்கு நல்லவர். அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து ஒரு என்.ஜி.ஓ. (அரசு சாரா சேவை ஸ்தாபனம்) நடத்துறாங்க. சுத்தியிருக்கற கிராமத்துல சுமார் அஞ்சி துவக்க பள்ளிக்கூடங்க, ஒரு அனாதை சிறுவர் விடுதி, அப்புறம் ரெண்டு சின்ன கிராமங்களை இவராவே தத்து எடுத்துக்கிட்டிருக்கார். அங்க இருக்கற வாலிப பசங்களுக்கு வேலை குடுக்கறது, வீட்டு பெண்களுக்கு கைவேலை சொல்லித் தர்றது, வயாசனவங்களுக்கு முதியோர் கல்வி கூடங்கள் நடத்தறதுன்னு நிறைய செய்யறாரு.. இவர நம்ம ரோட்டரி க்ளப்பிலயே ரெண்டு தரம் பாராட்டி விழா நடத்திருக்கோம்..’
இப்படிப் பட்ட ஒருவர் வாடிக்கையாளராக கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். இருந்தாலும் அவர் எந்த வகையில் என்னுடைய சேமிப்பு திரட்டும் முயற்சிக்கு உதவி செய்ய முடியும் என்று தோன்றவே சேட்டிடம், ‘சார் அவரால கனிசமான சேமிப்பு தொகையை எங்க பேங்க்ல போட முடியுமா? ஏன்னா அவருக்கு இந்த சேவைகளுக்கே அதிக அளவில பணம் வேண்டியிருக்குமே.’ என்றேன்.
அதற்கு அவர், ‘அவருக்கு ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலிருந்து இதுக்காக லட்ச கணக்குல வருது சார். அதையெல்லாம் இப்ப ஸ்டேட் பாங்க்லதான் போட்டு வச்சிருக்கார். அதுல ஒரு பகுதியை உங்க பேங்கல போட சொல்லுங்க. அதுவே போதும் உங்க HO ஃபிக்ஸ் பண்ண டார்கெட்ட அச்சீவ் பண்ண’ என்றார்.
அத்துடன், ‘நான் உங்க கூட வரணும்னு கூட இல்லை சார். நான் போன தடவை ரோட்டரி க்ளப் மீட்டிங்ல பார்த்து உங்கள பத்தி சொன்னேன். சரி வரச் சொல்லுங்க. என்னால முடிஞ்சத செய்யறேன்னு சொல்லிட்டார். நான் நீங்க வர்றீங்கன்னு ஃபோன் பன்ணி சொல்லிடறேன். நீங்க போய் பாருங்க.’ என்றார். சரி, போய்தான் பார்ப்போமே என்று சேட்டிடம் இருந்து அவருடைய விலாசத்தைப் பெற்றுக் கொண்டு சென்றேன்.
அவருடைய விலாசத்தைத் தேடி பிடிப்பது எனக்கு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. அவரை அந்த பகுதியிலிருந்த எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ‘யார் சார், அந்த ஸ்கூலெல்லாம் நடத்தராறே அவரா?’ என்று நான் வழி கேட்டவர்களெல்லோரும் மரியாதையுடன் வழி காட்டவே நான் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அவருடைய வீட்டையடைந்து என் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டைப் பார்த்தேன்.
தஞ்சைக்கே உரித்தான ஸ்டைலில் இருந்து. நுழை வலின் இரு பக்கங்களிலும் நீண்ட திண்ணைகள்.. சுமார் ஆறு மரத்தூண்கள் இரு திண்ணைகளுக்கும் மேலிருந்த ஓட்டுக் கூரையை தாங்கியிருந்தன.. சேட்டுடைய வீட்டிலிருந்தது போலவே இரு திண்ணைகளிலும் வெட்டிவேர் தட்டிகள். உத்தரத்தில் சுருட்டி கட்டப்பட்டு இருந்தன. திண்ணையின் அடிச்சுவர்கள் காரைப் பெயர்ந்து வெள்ளையடித்தே பல ஆண்டுகாலம் ஆகியிருந்ததைக் காட்டின. சுவர்களும் அப்படித்தான். கூரையும் பல இடங்களில் ஓடுகள் உடைந்து பல ஆண்டுகள் பராமரிக்கப்படாத நிலையில் இருந்தன.
வாசலையடுத்த வராந்தாவில் மரத்தாலான நீண்ட பெஞ்சுகள், இரு பக்கங்களிலும்.. மூலையில் தரையில் பரப்பியிருந்த மண் குவியலின் மேல் ஒரு மண்பானை. மூடியிருந்த அலுமினிய தட்டின் மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினிய குவளை. கூரையிலிருந்த தொங்கிய முந்தைய நூற்றாண்டில் தயாரிக்கப் பட்ட மின் விசிறி!
வராந்தாவை அடுத்து ஒரு பெரிய வானம் பார்த்த முற்றம். முற்றத்தைச் சுற்றிலும் ஓடை போன்ற வராந்தா. வராந்தாவையொட்டி மூன்று திசைகளிலும் அறைகள். பழைய மரக்கதவுகளால் மூடப்பட்டிருந்தன.. எல்லாவற்றிலும் பழைய ஹைதர் காலத்து பூட்டுகள் தொங்கின.
வராண்டாவின் நான்காவது திசையில் சுமார் பத்தடி உயர சுவர்.. வீட்டின் வயதைப் பார்க்கும்போது அந்த சுவர் சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
நான் உள்ளே நுழைந்து வீட்டைச் சுற்றி பார்க்கும் வரை.. யார், எவர் என்று கேட்கக் கூட ஆளில்லை.. வராந்தாவில் எதிரெதிர் சுவர் முழுக்க புகைப்படங்கள்.
ஒவ்வொன்றாக நிதானமாகப் பார்த்தேன். எல்லா படங்களுமே இவருடைய பாலர் பள்ளிகள், சமூக சேவை கூடங்கள், அனாதை சிறுவர் இல்லம், இரவு பள்ளிகள், அவற்றில் தங்கி, படிக்கும் சிறுவர்கள், முதியோர்கள், ஏழைப் பெண்கள் அமர்ந்து கைத்தொழில் பயிலும் காட்சிகள், அவர்களுடைய உணவுக் கூடங்கள், தம்பதியர் இருவரும் ஏறத்தாழ எல்லா புகைப் படங்களிலும் புகைப்படக்காரரைப் பார்த்து புன்னகையுடன்...
அவ்விருவருடன் வெளிநாடுகளிலிருந்து வந்த பார்வையாளர்களும் காணப்பட்டனர்.. பிறகு ரோட்டரி க்ளப், லயன்ஸ் க்ளப்.. மற்றும் தஞ்சை வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் நடத்தப் பட்ட பாராட்டு விழா.. தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் தம்பதியருக்கு பொன்னாடை போர்த்தி, விருது வழங்கும் விழா.. இப்படி பலதரப்பட்ட புகைப் படங்கள்..
நான் மலைத்துப் போனேன். தஞ்சை போன்ற ஊரில் இத்தனை தர்ம சிந்தனை படைத்தவர்களா..
அது சரி.. இவரைப் பற்றி நான் இதுவரை சந்தித்த ஒருவருமே.. நாயக்கரை சேர்து கூறவே இல்லையே.. என்று நினைத்தேன்.
சரி, நாம் வந்த வேலையைப் பார்ப்போம் என்ற நினைப்பில் வராந்தாவிலிருந்து முற்றத்திற்கு செல்ல இருந்த வாசல் கதவை லேசாக தட்டியவாறு, ‘சார்’ என்று அழைத்தேன்.
சிறிது நேரம் யாரும் வரவில்லை. மீண்டும் தட்டலாம் என்று முயன்ற போது வீட்டினுள் இருந்து யாரோ கதவைத் திறந்துக் கொண்டு வருவது கேட்கவே நான் வராந்தாவிலிருந்து முற்றத்தில் இறங்கி நின்றேன்.
‘யாரது’ என்ற ஒரு அதட்டலான ண் குரல்.
இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்வது என்று யோசித்தேன்?
இது போன்றுதான் பல வீடுகளிலும் கதவிற்கு அந்த பக்கதிலிருந்து ‘யாரது’ என்று கேட்பார்கள். அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர்களென்றால் நாம் 'இன்னார்' என்று கூறலாம். அல்லது பால்காரர், பேப்பர் பையன், அல்லது பிசினஸ் ரெப்.. என்று.. ஆனால் இதில் யாருமில்லாவிட்டால்..?
அப்படித்தான் தோன்றியது எனக்கும் அன்று. நான் என்னவென்று சொல்வதென தெரியாமல் சிறிது நேரம் யோசித்தேன்.
அதற்குள் நான் புகைப்படங்களில் பார்த்தவரே வந்தார். என்னை அவர் பார்த்த பார்வையே சரியில்லை. ‘யார்றா இவன், வேளைக் கெட்ட வேளையில்’ என்பது போல். ‘யார் சார் வேணும்? இங்க ஆஃபீஸ் அஞ்சு மணியோட க்ளோஸ்னு வெளிய பார்த்தா தெரியல? நீங்க பாட்டுக்கு வீட்டுக்குள்ள வந்து நிக்கறீங்க? வெளியதான் காலிங் பெல் இருக்கில்ல?’ என்று படபடவென பொரிந்தார்.
நான் புகைப்படங்களில் பார்த்து கற்பித்து வைத்திருந்த மனிதருக்கும் இவருக்கும் எந்தவித சம்பந்தமுமில்லையே என்று ஒரு நொடி நினைத்தேன். இருந்தாலும் என்னுடைய அலுவலில் இது போன்ற வரவேற்புகள் ஒன்றும் புதிதல்லவே என்ற நினைப்பில் அவருடைய அநாகரீக வரவேற்பை பொருட்படுத்தாமல் நான் சேட்டின் நண்பன் என்பதை கூறிவிட்டு என்னுடை வங்கி விஷயமாக பார்க்க வந்தேன் என்று கூறினேன்.
அப்படியும் அவருடைய எரிச்சல் நிறைந்த பார்வை மாறவில்லை. தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ.. ‘சரி, சரி. வாங்க.. ஒரு அஞ்சு நிமிஷம் தரேன். அதுக்குள்ள நீங்க வந்த விஷயத்த சொன்னா போறும். எனக்கு முக்கியமா வேற வேலையிருக்கு.’ என்றார்.
நான் யோசித்தேன். அஞ்சே நிமிஷத்தில் கூற நான் ஒன்றும் பொருட்களை விற்க வந்த ஏஜண்ட் இல்லையே.. ஆகவே.. ‘சார் நீங்க பிசியா இருந்தா நான் வேற ஒரு நாள் வரேனே..’ என்றேன்.
அவர் எரிச்சலுடன், ‘அதான் வந்துட்டீங்களே சார். வர்றதுக்கு முன்னால சொல்லிட்டு வந்திருக்கணும்.. அத விட்டுட்டு.. சரி சரி, நேரத்த வீணாக்காம வாங்க..’ என்று கூறிவிட்டு என்னுடைய பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டார்.
நான் என்ன செய்வதென தெரியாமல் ஒரு நிமிடம் நின்றேன். பிறகு என் காலனிகளை கழட்டிவிட்டு உள்ளே அவர் சென்ற வாசல் வழியாக உள்ளே நுழைந்தேன்..
என்ன ஆச்சரியம்!
என் கண்களையே நம்ப முடியவில்லை!!
தொடரும்..
நம்ப முடியாத அளவுக்கு என்ன நடந்தது?
பதிலளிநீக்குநான் கொஞ்சம் யோசிக்கிறேன்....
அந்த அறை அனைத்து வசதிகளோடும் இருந்தது. ஏசி என்ன...குஷன் நாற்காலி என்ன....கலர் கலர் அதென்ன..இதென்ன....இப்பிடியும் போகலாம்.
அந்த அறைக்குள்ளே அவரைப் போலவே இன்னொருவர். அவர்தான் தேடி வந்தவர். வாசலில் சிடுசிடுவென வரவேற்றவர் தம்பி. அண்ணன் முகத்தில் அமைதியும் புன்னகையும் தவழ்ந்தது. இப்பிடியும் போகலாம்.
இன்னும் எப்பிடியெல்லாமோ போகலாம். ஆனா என்ன நடந்ததுன்னு நீங்க அடுத்த பதிவுல சொன்னாத்தான் தெரியும்.
//வாசலையடுத்த வராந்தாவில் மரத்தாலான நீண்ட பெஞ்சுகள், இரு பக்கங்களிலும்.. மூலையில் தரையில் பரப்பியிருந்த மண் குவியலின் மேல் ஒரு மண்பானை. மூடியிருந்த அலுமினிய தட்டின் மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினிய குவளை. கூரையிலிருந்த தொங்கிய முந்தைய நூற்றாண்டில் தயாரிக்கப் பட்ட மின் விசிறி! //
பதிலளிநீக்குஎப்படி சார் இவ்வளவு துல்லியமா ஞாபகம் வச்சுக்க முடியும் ?அப்பமே எழுதி வச்சுருந்தீங்களா?
//என் கண்களையே நம்ப முடியவில்லை!!//
இன்னா சார்! வாத்தியார் டபுள் ஆக்ட் குடுக்குற மாதிரி ,இவரை மாதிரி வேற ஒருத்தர் இருந்தாரா?
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஉங்களுக்கு ஜோசியம் வேற தெரியுமா?
நல்ல வேளை நாளைய பதிவையும் எழுதி முடிச்சிட்டேன்..
இல்லன்னா..
இருந்தாலும் நீங்க பயங்கரமான ஆளு ராகவன்.
வாங்க ஜோ,
பதிலளிநீக்குநாம சந்திக்கற எல்லா ஆளுங்கள பத்தியும் ஞாபகம் வச்சீருக்க முடியாது தான்.
ஆனா எனக்கு எப்பவுமே அப்சர்வேஷன் (பவர்னு சொல்லமுடியாது..) ஜாஸ்தி. அதோட நான் சந்திச்ச இவர்.. நான் இப்ப எழுதின வர்னணைகளி வச்சிதான் எப்படி பட்டவர்னு காட்ட முடியும். அதனாலதான் அவரைப் பத்தி எழுதும்போதே அன்று நான் பார்த்த அத்தனை பொருட்களும் என் கண் முன்னே வந்தன.
அதுமட்டுமில்லாம நீங்களும் உங்க வாழ்க்கையில சந்திச்ச முக்கியமான விஷயங்கள பத்தி யோசிச்சி பாருங்க.. உங்களையுமறியாம இது போன்ற சின்ன சின்ன விஷயங்களும் கண் முன்னே வரும்.. அதான் மனித மூளையின் ஒரு அதிசயம்..
// வாங்க ராகவன், //
பதிலளிநீக்குவந்துட்டேஏஏஏஏஏஏஏஏன்.
// உங்களுக்கு ஜோசியம் வேற தெரியுமா? //
ஜோசப் சார்....எனக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை கெடையாது சார்.......அதுனாலே அதத் தெரிஞ்சக்கலை சார். எங்க அருணகிரி சொல்லீருக்காரு.
// நல்ல வேளை நாளைய பதிவையும் எழுதி முடிச்சிட்டேன்..
இல்லன்னா.. //
இல்லைன்னா...என்னாயிருக்கும்...சார்....நாளைக்கு வரைக்கும் காத்திருந்தா தெரிஞ்சிட்டுப் போகுது.
// இருந்தாலும் நீங்க பயங்கரமான ஆளு ராகவன். //
என்னங்க இது...நேத்துதான் வீடுதேடி வந்து பொண்ணு தருவாங்கன்னு சொன்னீங்க. இன்னைக்கு பயங்கரமா இருக்கேன்னு சொல்றீங்க. :-))))))
ஐயையோ,
பதிலளிநீக்குராகவன் சாதாரணமா நான் பேசினாத்தான் புரியலைம்பாங்க. இப்ப எழுதறதும் புரிய மாட்டேங்குது போலருக்கே..
நீங்க பயங்கரமான ஆளுங்கறதுக்கும் நீங்க பயங்கரமா இருக்கீங்கறதுக்கும் வித்தியாசம் இருக்கே..
யாராச்சும் சொல்லுங்க..
ராகவன் உங்களப் போயி பயங்கரமா இருக்கீங்கன்னு சொன்னா என் கண்ணுலதான் கோளாறு..
சரி என் பதிவைப் பத்தியும் தினமலர்ல போட்டாங்க.. ஆனா ஃபோட்டோவ போட்டாங்களா.நான் புதுவருட வாழ்த்த சொல்லி போட்ட கைல புறாவோட இருக்கற அழகான பொண்ணோட ஃபோட்டோவ போட்டு சமாளிச்சிட்டான். ஆனா உங்க விஷயத்துல.. அட பையன் பார்க்கறதுக்கு சூப்பரா இருக்காரேன்னு நினைச்சி உங்க ஃபோட்டோவையும் சேர்த்து போட்டு அமர்க்களப்படுத்தலையா?
என்னங்க துளசி, நா சொல்றது சரிதானே..
ராகவன் இப்படியே போட்டு, போட்டு எனக்கு வர பின்னூட்டங்களோட நம்பராவது கூடட்டும்.
பதிலளிநீக்குராகவனைப் பத்தி நீங்க சொன்னது 100% சரி.
பதிலளிநீக்குஎன் 'மாணவனாச்சே':-)
உள்ளே என்னதான் ஆச்சு?
தினமும் இப்படித் தலையைப் பிச்சுக்கணுமா?:-))))))
வாங்க துளசி,
பதிலளிநீக்குஅப்படியாவது ரெண்டு மூனு பின்னூட்டங்கள் வரட்டுமேங்கற நல்ல(?) எண்ணத்துலதான்..
அதான் பொங்கலுக்கு முந்தன நாள் எந்த சம்சயமும் இல்லாம க்ளீனா முடிச்சேனே..
// ராகவன் சாதாரணமா நான் பேசினாத்தான் புரியலைம்பாங்க. இப்ப எழுதறதும் புரிய மாட்டேங்குது போலருக்கே..
பதிலளிநீக்குநீங்க பயங்கரமான ஆளுங்கறதுக்கும் நீங்க பயங்கரமா இருக்கீங்கறதுக்கும் வித்தியாசம் இருக்கே..
யாராச்சும் சொல்லுங்க..//
ஜோசப் சார். யாரும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும். சும்மா ஒங்கள கிண்டுனாதானே கூட ரெண்டு பின்னூட்டம் விழும். அதான்.
// என்னங்க துளசி, நா சொல்றது சரிதானே.. //
அதத்தான் டீச்சர் சொல்லீட்டாங்களே. இன்னும் உஷாதான் சொல்லனும். என்னையும் டீச்சரையும் பாத்து ஏன் பயந்து ஓடுனாங்கன்னு.