17 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 60

என்ன ஆச்சரியம்!

என் கண்களையே நம்ப முடியவில்லை!!

நான் நுழைந்த அறைக்கும் வெளியே இருந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை..

முழு வீச்சில் ஓடிக்கொண்டிருந்த குளிர்சாதனம், அரையடி ஆழத்தில் கால்கள் புதைய விரிக்கப் பட்டிருந்த கம்பளம், கவர்ச்சியான ஆடை தரித்த சுவர்கள், வெள்ளை வெளேர் நிறத்தில் தெர்மோகூல் பொய்க் கூரை, சுவரில், இறக்குமதி செய்யப் பட்ட நேர்த்தியான ஓவியங்கள், சென்னையிலும் நான் கண்டிராத வேலைப்பாடுகள் நிறைந்த Curtains.. அறையின் மையப் பகுதியில் அரை வட்ட வடிவில் தேக்காலான பளபளக்கும் மேசை.. அதன் மேல் நேர்த்தியான பளிங்கில் செய்யப் பட்ட யேசுபிரான் தொங்கிய சிலுவை..

பேச்சற்று போய் நின்றுக் கொண்டிருந்தேன்..

இந்த வேஷம் எதற்காக? யாருக்காக?

நான் உள்ளே சென்றதும் வேறொரு உள்ளறையில் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தில்  வந்தமர்ந்தார் என்னை வரவேற்றவர்.

‘உங்க பேரு சார்?’ என்றார். அவர் குரலில் சற்று முன் இருந்த எரிச்சல் மாறியிருந்தது. இத்தனை நேரம் சேட்டிடம்தான் பேசிக்கொண்டிருந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது.

நான் என்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன்.

அதில் என் பெயர், பதவி, நான் தெற்குத் தெருவில் பார்த்திருந்த விலாசம், தொலைப் பேசி எண் மட்டுமே இருந்தன.  ஆனால் அவர் ஏதோ புத்தகத்தைப் படிப்பதுபோல் அதையே ஒரு ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தார். என்னிடம் என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்க்கிறாரோ என்று நினைத்தேன்.

அவராக பேசட்டும் என்று நானும் காத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து என்னுடைய வங்கியைப் பற்றி விசாரித்தார். நான் எப்போதும் இது போன்ற படித்த, விவரம் தெரிந்த வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லும்போது  என்னுடைய வங்கியினுடைய பங்குதாரர்களுக்கென தயாரிக்கப் படும் நிதியறிக்கையையும் கொண்டு செல்வது வழக்கம். அதன் ஒரு நகலை அவரிடம் கொடுத்தேன்.

புரிந்ததோ இல்லையோ அதையும் அவர் ஆழமாய் அடுத்த ஐந்து நிமிடம் வாசிக்கத் துவங்கினார். பிறகு சட்டென்று, ‘உங்க பேங்குல ஷேர் வாங்க முடியுமா சார்?’ என்றார்.

எனக்கோ சட்டென்று ஒன்றும் விளங்காமல் அவரையே பார்த்தேன். சாதாரணமாக கூட்டுறவு வங்கிகளில்  கடன் பெற விழைவோர் எல்லோரையும் வங்கியில் அங்கத்தினராக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஒரு வேளை அதைத்தான் இவர் இப்படி கேட்கிறாரோ என்று நினைத்தேன்.

‘எதுக்கு கேக்கறீங்க சார்?’ என்றேன்..

‘இல்ல.. எங்கிட்ட கொஞ்சம் இன்வெஸ்ட்டிபிள் ஃபண்ட்ஸ் இருக்கு. அதுக்குத்தான்.. ஏறக்குறைய நம்ம ஊர்ல இருக்கற எல்லா தனியார் பாங்க்லயும் எனக்கு ஷேர் இருக்கு.. இருபதுலருந்து சில சமயத்துல நாப்பது பர்சண்ட் வரைக்கும் டிவிடண்ட் கிடைக்கறதுனால அதுலதான் என் முதலீட்டுக்கு நல்ல ரிடர்ன் கிடைக்கும்..’ என்றவரையே பார்த்தேன்.

இவர்கிட்ட அந்த அளவுக்கு பணம் இருக்கா? இத்தனை விடுதிகளையும், ஆசிரமங்களையும், பள்ளிகளையும் நடத்துவதற்கே எவ்வளவு தொகை வேண்டியிருக்கும்? என்று நினைத்தேன்.

‘எனக்கு இதப் பத்தி அவ்வளவு விவரம் தெரியாது சார். அதுக்குன்னு தனியா ஒரு டிபார்ட்மெண்ட் ஹெட் ஆஃபீஸ்ல இருக்கு.. அதுவுமில்லாம எங்க பேங்கோட பங்குகள் மார்கெட்ல கோட் பண்றதில்லை.. கேட்டுட்டு சொல்றேன்.. ஆனா நான் இப்ப வந்தது..’ என்று இழுத்தேன்.

அவர் அலட்சியமாக சிரித்துவிட்டு.. ‘that I will have to discuss with my committee members.’ என்றார்..

பிறகு.. குரலை சற்றே இறக்கி.. ‘உங்க பேங்க்ல forex வசதிகள் இருக்கா? என்றார்

இதுல என்ன ரகசியம்? ‘இருக்கு சார். கொச்சிலருக்கற டிபார்ட்மெண்ட் வழியா  கலெக்ட் பண்ணிரலாம்.’

யாருமில்லாத அறையிலிருந்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவரை வியப்புடன் பார்த்தேன்.

‘எங்கிட்ட கொஞ்சம் ஃபாரின் இன்ஸ்ருமெண்ட்ஸ் இருக்கு. அத மாத்தி தரமுடிஞ்சா என் பேர்ல ஒரு சேவிங்க்ஸ் அக்கவுண்ட் தொடங்கறேன்.’

அதனாலென்ன? அதுக்குத்தானே வந்திருக்கேன்? ‘செய்யலாம் சார். இப்பவே வேணும்னா கொடுங்க.. இன்னும் ரெண்டு வாரத்துல எங்க கிளையை திறக்கறதா உத்தேசம். இன்ஸ்ட்ருமெண்ட்ஸ கொச்சிக்கு அனுப்பினா எப்படியும் ரெண்டு வாரம் கழிச்சிதான் ப்ரொசீட்ஸ் கலெக்டாயி வரும். அது வர்றதுக்கும் எங்க கிளை திறக்கறதுக்கும் சரியா இருக்கும்.’

அவர் உடனே தன் மேசை இழுப்பைத் திறந்து அதிலிருந்து ஒரு கெட்டியான உறையை மேசை மேல் கவிழ்த்தார். அதிலிருந்து விழுந்த ஒரு கத்தையான கட்டிலிருந்து சுமார் இருபது காசோலை மற்றும் டிராஃப்டுகளை எடுத்து என்னிடம் நீட்டினார்.

நான மளமளவென்று தொகையைப் பார்த்தேன். சட்டென்று என் மனதில் ஏற்பட்ட சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு அவற்றின் தியதிகளைப் பார்த்தேன். ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன் வெளிநாடுகளிலிருந்த வந்தவை..

பிறகு அவைகள் யாருடைய பெயரில் வழங்கப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தேன்.. எல்லாமே இதுவரை நான் கேட்டிராத டிரஸ்டுகளின் பெயரில் இருந்தன. ஒருவேளை, இவை இவர் நடத்துகின்ற சேவை ஸ்தாபனங்களாக இருக்கலாம்.

என் முகத்தில் தோன்றிய குழப்பங்களைப் படித்தவர் போல், ‘சார் இதெல்லாம் நான் நடத்தற ட்ரஸ்டுங்க பேர்ல வந்திருக்கு. இந்த கணக்கு ------ பாங்கல இருக்கு.. அந்த மேனேஜருக்கும் எனக்கும் கொஞ்ச நாளா டேர்ம்ஸ் சரியில்ல.. என் கணக்குலருக்கற லட்சங்கள பார்த்துட்டு என் கிட்ட கடன் கேட்டு தொல்லைப் பண்றார்.. அதான் இந்த செக்கெல்லாத்தையும் உங்க பேங்க்ல போட்டுடறேன்.. கலெக்ட் பண்ணி என் பேர்ல போடணும்..’ என்றார்.

சாதாரணமாக தனி நபர் ஒருவர் பெயரில் வழங்கப்பட்டிருந்த காசோலைகளையே அவரல்லாமல் வேறொரு தனி நபர் பெயரில் வரவு வைக்க நாங்கள் தயங்குவதுண்டு. இதில் ஒரு ஸ்தாபனத்தின் பெயரில் இருப்பதை எப்படி... என்று யோசித்தேன். அதுவுமல்லாமல் அன்னிய செலவாணியிலிருந்த காசோலைகள் என்றால் இன்னும் சங்கடம். என்றாவது ஒரு நாள் மத்திய அரசாங்கத்திலிருந்து ஏதாவது விளக்கம் கேட்டு வந்தால் அவ்வளவுதான். இப்போதிருந்ததைப் போன்று ரிசர்வ் வங்கியின் விதிகள் அப்போது அத்தனை எளிதாக இல்லை..

நான் யோசிப்பதைப் பார்த்த அவர் எரிச்சலுடன்.. ‘என்ன சார் நீங்களா டெப்பாசிட் மொபிலைஸ் பண்ண வந்திட்டு இந்த சின்ன தொகைக்கு இவ்வளவு யோசிக்கறீங்க?’ என்றார்.

நான் தயக்கத்துடன்.. ‘மன்னிச்சிருங்க சார்.. இந்திய தொகையிலிருந்தாலே ஒரு ட்ரஸ்ட் பேர்லருக்கற இன்ஸ்ட்ருமெண்ட ஒரு தனி நபர் பேர்ல கலெக்ட் பண்ண மாட்டோம். இது அன்னிய செலவாணி வேற.. பின்னால ஏதாச்சும்.. சாரி சார்.. இது சரி வராது.. உங்களால இந்திய பணத்துல ஏதாச்சும் தர முடிஞ்சா தாங்க.. இல்லன்னா ஓகே..’ என்று எழுந்து நின்றேன்..

அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் தோன்றி மறைந்த அதிர்ச்சியிலிர்ந்தே தெரிந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு.. ‘ஓகே.. மிஸ்டர் ஜோசப்.. இப்போதைக்கு என்னால ஹெல்ப் பண்ண முடியலை.. அப்புறமா நிச்சயம் செய்யறேன்.’ என்றார்.. ஆனால் அவர் முகத்தில் ஏமாற்றம் வெளிச்சமாக தெரிந்தது..

‘சார்.. ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே..’ என்றேன்.

‘என்ன சார், சொல்லுங்க?’

நான் அறை சுவர்களிலிருந்த புகைப் படங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘ உங்க ஸ்தாபனம் நடத்தற விடுதிகளப் பற்றி என்னுடைய வங்கி தலைமையலுவலகத்துக்கு எழுதலாம்னு இருக்கேன். ஏன்னா எங்க வங்கியிலயும் ஒரு ச்சாரிட்டி இலாக்கா இருக்கு.. நீங்க செய்யற இந்த மகத்தான சேவைக்கு எங்களால முடிஞ்சத நன்கொடையா வாங்கி தரேன். கிளைத் திறப்பு விழாவுக்கு வர்ற எங்க சேர்மன் கையாலயே எல்லார் முன்னாலயும் கொடுக்கலாமில்லையா? அதனால அந்த விடுதி, ஆஸ்ரமங்கள், பள்ளிகளைப் பத்திய ஒரு சிறு குறிப்பும், விலாசங்களும், புகைப்படங்களும் கொடுத்தா நான் இன்னைக்கே எங்க சேர்மனுக்கு அனுப்பறேன்.’ என்றேன்.

அவர் உடனே தன் மேசை மேலிருந்து  25 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். ‘இதுல நீங்க கேட்ட எல்லாம் இருக்கு சார்.. உங்க சேர்மனை வேணும்னாலும் கூட்டிக்கிட்டு போய் காட்டலாம். என்னைக்கு ஒரு வாரத்துக்கு முன்னால சொல்லிட்டீங்கன்னா நான் ஏற்பாடு பண்றேன்.’

நான் ஒரு சிறு புன்னகையுடன், ‘ரொம்ப தாங்ஸ் சார்.’ என்று கிளம்பினேன்..

வீட்டைவிட்டு வெளியேறும்போது.. ‘நீங்க இப்படியே போயிரலாம் சார். இந்த பக்கம் ஒரு வழி இருக்கு..’ என்று வீட்டின் பின் வாசலை காண்பித்தார்.

நான் , ‘இல்ல சார்.. என் ஸ்கூட்டர இந்த பக்கம்தான் பார்க் பண்ணியிருக்கேன்.’ என்றேன்.

அதற்கு அவர், ‘இது அதுக்கு அடுத்த ரோடுதான் சார். ஒரு அஞ்சு செகண்ட் நடைதான். முன் வாசல் க்ளோஸ் பண்ணியிருப்பாங்க. அதனாலதான் சொல்றேன்.’ என சரி என்று அவர் முன்னால் செல்ல நான் அவரை தொடர்ந்தேன்.  

அவர் எதற்காக அப்படி செய்தாரோ, ஆனால் அது அவரைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள உதவியாக இருந்தது. பின் வாசலையொட்டி இருந்த காரேஜில் அப்போது மிகவும் அரிதாயிருந்த பணக்காரத்தனமான பளபளக்கும் இம்பாலா கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது...!

தொடரும்..





13 கருத்துகள்:

  1. என்னங்க ஜோசஃப்,

    வெளிநாட்டுலே இருந்து வர்ற காசையெல்லாம் சில ஆசிரமங்கள் முழுங்கிடுதுன்னு
    பரவலா செய்திகள் வந்துக்கிட்டு இருக்கே. அதுவும் அப்படிப்பட்ட ஒண்ணோ?

    என்னவோ, தருமத்துக்குன்னு மக்கள் அனுப்பற காசை எடுக்கறவங்களுக்கு மனசாட்சியே
    இருக்காதா?(-:

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி,

    பண்ணையார் மாதிரி மனிதர்கள் இருக்கின்ற அதே உலகில் இப்படிப்பட்ட ஆட்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!

    பூமி எல்லோரையும் தாங்கிக் கொள்ள வேண்டியதால் இருப்பதால்தானோ என்னவோ சில வேளைகளில் குலுங்கி தன் அதிருப்தியைத் தெரிவிக்கிறதென நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராஜ்,

    சேவை செய்தாரா இல்லை பேருக்கு கொஞ்சத்தை கொடுத்துட்டு மீதியை தனக்கும் வேண்டப்பட்டவங்களுக்கும் ஒதுக்கிக்கிட்டாரா? //


    அதுமட்டுமில்லீங்க.. நாளைக்கு பதிவை படிங்க.. எப்படி பட்டவர்னு புரியும்.

    பதிலளிநீக்கு
  4. துளசி, ராஜ், நீங்க ரெண்டு பேரும் நம்ம கோ.ராகவன் நேத்தைக்கி போட்ட பின்னூட்டத்த படிங்க.. அவர் எப்படி கரெக்டா predict பண்ணியிருந்தார்னு தெரியும்..

    படே ஆளு அவரு..

    பதிலளிநீக்கு
  5. அடங்கொப்பந்தன்னானே.....இது மாதிரி எக்கச்சக்கமா நடக்குது போல...பள்ளிக்கூடம் நடத்துறேன்..அனாத விடுதி நடத்துறேன்னு காச வாங்கிச் சொந்த அக்கவுண்டுல போடுறானே...அந்த அக்கவுண்டுல பாவக் கணக்கும் ஏறுதுன்னு வெளங்கலையா! சரி. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். இவ்வளவுதான் வள்ளுவரே சொல்லீருக்காரு. நம்ம எந்த மூலைக்கு.

    பதிலளிநீக்கு
  6. // துளசி, ராஜ், நீங்க ரெண்டு பேரும் நம்ம கோ.ராகவன் நேத்தைக்கி போட்ட பின்னூட்டத்த படிங்க.. அவர் எப்படி கரெக்டா predict பண்ணியிருந்தார்னு தெரியும்..

    படே ஆளு அவரு.. //

    அடடா! இவ்வளவு பெருமையாச் சொல்றீங்க. நீங்க எழுதுன எழுத்தோட தொடர்ச்சியத்தான நான் சொன்னேன். ஒரு சூத்திரத்தைக் குடுத்து கூட்டிக்கழிச்சி என்ன வருமுன்னு சொல்றதுதானே. இந்த வாட்டி சரியாச் சொல்லீட்டேன். ஒரு சில வாட்டி தப்பாவும் சொல்லீருக்கேன் சார். :-)

    பதிலளிநீக்கு
  7. வாங்க ராகவன்,

    ஒரு சூத்திரத்தைக் குடுத்து கூட்டிக்கழிச்சி என்ன வருமுன்னு சொல்றதுதானே. //

    இருந்தாலும், அது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே.. சூப்பரா இருந்தது..

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் வருக ராகவன்,

    பாருங்க இதுக்கும் பொருத்தமா ஒரு குறளை சொல்லி..

    நீங்க குறளோவியம்னு கூட ஒரு பதிவ போடலாம்.

    அந்த குறளுக்கு ஒரு சின்ன விளக்கம் தாங்களேன்.

    பதிலளிநீக்கு
  9. நான் டோண்டு ராகவன் என்ன நினைச்சேன்னா, உள்ளே அவருடைய அண்ணா இருந்திருப்பார், இருவருக்கும் உருவ ஒற்றுமை உண்டு என்ற ரேஞ்சில்தான்.

    கோ. ராகவன் சபாஷ்.


    இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  10. // மீண்டும் வருக ராகவன்,//

    ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் வருக சொன்னா...சன் டீவீல வர்ர மாதிரி மீண்டும் மீண்டும் வருகன்னு சொல்ல வேண்டியதுதான். :-)))

    // பாருங்க இதுக்கும் பொருத்தமா ஒரு குறளை சொல்லி..

    நீங்க குறளோவியம்னு கூட ஒரு பதிவ போடலாம்.//

    குறளோவியமா......அது வேற ஒருத்தர் வெச்ச பேராச்சே...குறளும் வாழ்க்கை நிரலும்-னு போடலாம்.ஒவ்வொரு குறளுக்கும் விளக்கம் சொல்லலாம். நேரம் வேணுமே. குமரன் மாதிரி ஏழு குதிரை வண்டி ஓட்டுற மாதிரியா இருக்கு நம்ம நெலமை. இப்பக் கந்தர் அநுபூதிய வேறத் தொடங்கனும். அதுவே வாரத்துக்கு ஒன்னுன்னு ஒரு வருஷம் போகும். அதுக்கப்புறம் பாக்க வேண்டியதுதான்.

    // அந்த குறளுக்கு ஒரு சின்ன விளக்கம் தாங்களேன். //

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - தீய எண்ணங்கள் நிறைந்த நெஞ்சம் உடையவனுடைய வளமான வாழ்வும்
    செவ்வியான் கேடும் - நல்லவனுக்கு நேரும் துன்பமும்
    நினைக்கப் படும் - நினைத்து நினைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    இது மிகவும் குறுகிய விளக்கம். இதைய இன்னும் கொஞ்சம் விரிச்சிச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  11. // நான் டோண்டு ராகவன் என்ன நினைச்சேன்னா, உள்ளே அவருடைய அண்ணா இருந்திருப்பார், இருவருக்கும் உருவ ஒற்றுமை உண்டு என்ற ரேஞ்சில்தான். //

    அதுதான் என்னுடைய ரெண்டாவது கணிப்பு. முதல் கணிப்பு ஜோசப் சார் சொன்னது போல. அது தவறாக இருந்தால் ரெண்டாவது கணிப்புன்னு இதச் சொன்னேன்.

    // கோ. ராகவன் சபாஷ். //

    நன்றி டோண்டு. பாருங்க.....நம்ம பேரு ஒரே மாதிரி இருந்தாலும் இதுவரைக்கும் பேர்க்குழப்பமுன்னு பெருசா வந்ததில்லை. வீடணன் பதிவுல மட்டுந்தான் ஜெயராமன் தப்பா நெனச்சுட்டார். மத்தபடி எந்தக் குழப்பமும் இல்லாம போயிக்கிட்டு இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. வாங்க புலிக்குட்டி (கடிப்பீங்களா?)

    என்ன என்னென்னலாமோ சொல்றீங்க? இதப் போயி யாரு சீரியலா எடுக்கப் போறா?

    எடுக்கும்போது பார்த்துக்கலாம்.. என் பேரே பெரிசா கொட்டையெழுத்துல போட்டா கூட போறும்.. காசு ஒன்னும் வேணாம்..

    பதிலளிநீக்கு
  13. டோண்டு சார்,

    உங்க பின்னூட்டம் ஜூனியர் ராகவனுக்குத்தானே!

    அவரே பதில் போட்டுட்டாரே..

    கோ.ராகவன்..

    நீங்க 'போ' ராகவன் அவர் 'டோ' ராகவன். அதான் வித்தியாசம்..

    பதிலளிநீக்கு