20 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 63

இத்தனை நாள் இல்லாம என்ன திடீர்னு... இவர் என்ன கேக்கப் போறார்னு தெரியலையே.. ஏதாவது வேலை விஷயமா இருக்குமா.. இல்ல வேறேதாச்சுமா.. கடவுளே இனியொரு பிரச்சினைய சந்திக்கற மனநிலை எனக்கிப்போ இல்லைப்பா.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றேன்..

பிஷப் ஹவுஸ் வரவேற்பரை மிகவும் எளிமையாக இருந்தது. சுமார் 50 குருக்கள் ஒரே நேரத்தில் தங்க தனித்தனி அறைகளைக் கொண்ட இல்லத்தின் வரவேற்பரையைப் போலில்லாமல் சுமார் பத்து விருந்தினர்கள் மட்டுமே அமர்ந்து அளவளாவ ஏதுவாக இருந்தது..

இருக்கைகளும் மிகச் சாதாரணமான மர இருக்கைகள். பிரம்பால் பின்னப்பட்ட இருக்கை மற்றும் சாய்மான பகுதி.. இருபது இருபத்தைந்து வருடத்திற்கு முன் வார்னிஷ் செய்யப்பட்டது போன்ற தோற்றம்..

நானும் அவரும் எதிரும் புதிருமாக அமர்ந்தோம்.

என் மனைவி கூறியதுபோல் அவரும் தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர்.. பத்தாவது முடித்தவுடன் தஞ்சை குருமடத்தில் சேர்ந்து சரித்திரத்தில் முதுகலைப் பட்டம், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல், பிறகு ரோமையில் தியாலஜியில் பி.எச்.டி என மிகவும் படித்தவர். நான் அவரை சந்தித்த சமயத்தில் ஒரு கத்தோலிக்க கிறீஸ்துவ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.

பேசுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். கோவில்களில் அவர் ஆற்றும் உரை உணர்ச்சிபூர்வமானதாக இருக்கும். அத்துடன் நான் அங்கு இருந்த இரண்டாண்டுகளில் ரோட்டரி, லயன், ரோட்டராக்ட் கூட்டங்களிலும், வலம்புரி ஜான் மற்றும் பல இலக்கியவாதிகளின் தலைமையில் நடந்த இலக்கிய கூட்டங்களிலும் அவர் கலந்துக் கொண்டு பேசியதைக் கேட்டிருக்கிறேன்..

‘சொல்லுங்க ஃபாதர். ஏதாவது விசேஷம் இருக்கா? இல்லன்னா வீட்டுக்கு ஃபோன் பண்ணியிருக்க மாட்டீங்கன்னு தெரியும். அதனாலதான் இன்னைக்கி நான் கொஞ்சம் அவசரமான வேலையா போய்கிட்டிருந்தாலும் உங்கள பார்க்க வந்திருக்கேன்.’ என்றேன்.

அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, ‘உங்களுக்கு அவசரம்னா நாளைக்கு சொல்றேன்.. நீங்க கிளம்புங்க..’ என்று எழுந்து நின்றார்.

நானும் எழுந்து நின்றேன். அவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்று ‘வேற ஒன்னுமில்லை ஃபாதர். எங்க கிளை திறப்பு விழா டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டேன். திறக்கறதுக்கு யாரை கூப்பிடறதுங்கறதுல லாஸ்ட் மினிட்ல ஒரு கன்ஃப்யூஷன். இன்னைக்குள்ள முடிவு பண்ணி எங்க HOவுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்.. அதான்..’ என்று இழுத்தேன்.

அவருடைய முகம் சட்டென்று பிரகாசமானது. ‘ஜோசப் நானும் அதப்பத்திதான் நானும் உங்க கிட்ட பேசணும்னு கூப்டேன்’ என்றார்.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘என்ன ஃபாதர் சொல்றீங்க?’

அவர் புன்னகையுடன் ‘உக்காருங்க. சொல்றேன்.’ என்று தொடர்ந்தார். ‘ரெண்டு வாரத்துக்கு முன்னால நம்ம பேராயரும் (பிஷப்) நானும் பேசிக்கிட்டிருந்தோம். அப்போ ----- பேங்க் மானேஜர் வந்திருந்தார். அவர்தான் பேராயர்கிட்ட உங்க பேங்க் இங்க ப்ரான்ச் திறக்கப் போற விஷயத்தை சொன்னார். நானும் ஆமாம் ண்டவரே (பிஷப்பை குருக்களும், என்னைப் போன்றோரும் இப்படி அழைப்பது சம்பிரதாயம்) எனக்கும் அந்த மானேஜரைத் தெரியும். அவரும் என் பங்குலதான் இருக்கார்னு சொன்னேன். நான் அத்தோட இந்த விஷயத்தை மறந்திட்டேன். நேத்தைக்கி நம்ம ஸ்கூல் ரோட்டராக்ட் கூட்டத்துக்கு இந்த ஹ¤ண்டி பிசினஸ் பண்ணுவாரே சேட் ஒருத்தர், அவரும் வந்திருந்தார். அவர்தான் ஸ்பான்ஸர் பண்ற ரோட்டரி க்ளப்புல ரோட்டராக்ட் கமிட்டி சேர்மன். அவர்தான் நீங்க உங்க ப்ராஞ்ச திறக்கறதுக்கு ஒரு VIP ஐ தேடிக்கிட்டிருக்கீங்கன்னும், டெப்பாசிட்டுக்காக ஊர் முழுசும் அலைஞ்சி கஷ்டப்படுறீங்கன்னும் என்கிட்ட சொன்னார். அட! அவர் நம்ம கிட்ட இதப்பத்தி ஒன்னுமே சொல்லலையேன்னு நினைச்சேன். என்ன ஜோசப் சாமியார்ங்களுக்கு இதப்பத்தி என்ன தெரியும்னு விட்டுட்டீங்களா?’ என்றார்.

நான் என்ன சொல்வதென தெரியாமல் ஒரு அசட்டு புன்னகையுடன் அவரை பார்த்தேன். ஆமாம் என்று எப்படி சொல்வது? இவங்களுக்கு யாரை தெரியும்?

‘அப்படியெல்லாம் இல்ல ஃபாதர்.’ என்றேன் பட்டும் படாமலும்..

அவர் என்னை கூர்ந்து பார்த்தார். ‘உங்களுக்கு இஷ்டமில்லேன்னா வேணாம். நான் சொல்றது யோசிச்சி பாருங்க. தஞ்சாவூர்லருக்கற பேங்குகள்ல யாருக்கு அதிக டெப்பாசிட் இருக்குன்னு நினைக்கறீங்க?’

உண்மையிலேயே எனக்கு தெரிந்திருக்கவில்லை. ‘தெரியலை ஃபாதர். யாருக்கு?’

அவர் சிரித்தார். ‘நம்ம பேராயருக்குத்தான். வேற யாருக்கு?’

என்னால் நம்ப முடியவில்லை. ‘எப்படி சொல்றீங்க?’

அவர் வியப்புடன் என்னைப் பார்த்தார். ‘வேளாங்கன்னிய மறந்துட்டீங்களா? அந்த குக்கிராமத்துல எதுக்கு இத்தனை பேங்குங்கன்னு நினைக்கறீங்க? என்ன ஜோசப், ஒரு கத்தோலிக்கர் மேனேஜரா வந்திருக்காரேன்னு நாங்க எல்லோரும் பேசி சந்தோஷப் பட்டுக்கிட்டிருக்கோம். நீங்க என்னடான்னா.. இந்த அடிப்படை விஷயத்தையே மறந்துட்டீங்களே. இப்பருக்கற உங்க பங்கு சாமியார் கூட நேத்தைக்கி உங்கள பத்தி சொல்லி வருத்தப் பட்டார்.. நாங்கூட அவருக்கு ஒரு இடம் இருக்குன்னு சொன்னேன். அப்புறம் மனுஷன் வந்து பாக்கவேயில்ல ஃபாதர்னு சொன்னார். என்ன ஜோசப், உண்மையா?’

சரியாப் போச்சு. நாம இவ்வளவு பாப்புலர் ஆயிட்டமா? அவர் சொல்லித்தான் எனக்கு புரிஞ்சது. அவர் சொன்னாப்பல நான் ஏறக்குறைய தஞ்சையிலிருந்த எல்லா வங்கி மேலாளர்களையும் சந்தித்துவிட்டேன். அதில் யாருமே கிறீஸ்துவர்கள் இல்லை..

‘அவர் காண்பிச்ச இடம் பிராஞ்ச் திறக்க ஏதுவா இல்ல ஃபாதர். நான் அவர பார்த்து விஷயத்த சொல்லியிருக்கலாம்.. விட்டுட்டேன். இப்ப அங்க போயி அவர பார்த்துட்டுதான் வரேன். சொல்லுங்க.. இப்ப நான் என்ன செய்யணும்?’

அவர் ‘என்னடா இவன்? இதுக்கு மேல எப்படி வெளிப்படையா சொல்றது?’ என்பதுபோல் பார்த்தார்.

நான் புரிந்தும் புரியாமலும், ‘இந்த மாதிரி விழாக்களுக்கெல்லாம் ஆண்டவரை எப்படி கூப்டறதுன்னு தெரியாமத்தான் விட்டுட்டேன் ஃபாதர்.. இப்ப வேணும்னாலும் போய் அஃபிஷியலா கூப்பிடுறேன்.’ என்றேன்.

அவர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. ‘அதான் நானும் சொல்றேன். அதுல உங்களுக்கு நிறைய பெனிஃபிட் இருக்கும் ஜோசப். இப்ப எங்களுக்கு வருகிற பெருவாரியான டொனேஷன் தொகை, நாங்க நடத்திக்கிட்டிருக்கற ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள், விடுதிகள், எல்லாத்துக்கும் அலாட் கற பணத்தையெல்லாம் பேங்க்லதான வைப்பு நிதியாத்தான் வச்சிருக்கோம். அதுல ஒரு பங்கு உங்களுக்கு கிடைச்சாலே போதும். அவர விழாவுக்கு கூப்டா உங்களுக்குதான் நல்லது. அதுவுமில்லாம நம்ம மதத்த சேர்ந்த ஒரு மேனேஜர்கூட இல்லையேன்னு அவர் அடிக்கடி வருத்தப் படுவார். உங்க பேரைக் கேட்டதும் அவர் எவ்வளவு சந்தோஷப் பட்டார்னு எனக்குத்தான் தெரியும். நீங்க தைரியமா அவர கூப்டுங்க. கண்டிப்பா வருவார். ஆனா இன்னைக்கி வேணாம். நீங்க இங்க வந்தத நம்ம Procurator ஃபாதர் பார்த்துட்டார். இப்ப போனீங்கன்னா நாந்தான் இதுக்கு பின்னாலன்னு தெரிஞ்சிரும். நீங்க ஒன்னு பண்ணுங்க.. உங்களுக்கு மேலருக்கற அதிகாரி ஒருத்தர முதல்ல நம்ம ண்டவர ஃபோன்ல கூப்டு ஒரு மரியாதைக்கு பேச சொல்லுங்க.. நீங்க நாளைக்கு நேர்ல வந்து கூப்டுவீங்கன்னு சொல்ல சொல்லுங்க.. என்ன?’ என்றார். பிறகு பேராயரின் பெர்சனல் தொலைப்பேசி எண்ணை கொடுத்தார்.

சே.. இது எனக்கு தோனலையே. ஸ்டுப்பிட். என்று என்னையே திட்டிக் கொண்டு அவரைப் பார்த்து அசடு வழிந்தேன். ‘ரொம்ப தாங்க்ஸ் ஃபாதர். நான் என்னுடைய வட்டார மேலாளரையே நாளைக்கு வரச்சொல்றேன். கோயம்புத்தூர்தான ஃபாதர். கண்டிப்பா வருவார்.’

அவர் எழுந்து நின்றார். ‘அது உங்க இஷ்டம் ஜோசப். னாலும் முதல்ல இன்னைக்கி ஃபோன்ல கூப்டு நாளைக்கு ண்டவர் ஃப்ரியான்னு கேட்டுக்க சொல்லுங்க. அப்புறம் ஜோசப். இத்தோட முடிஞ்சி போயிருச்சின்னு வராம இருந்துராதீங்க..  You should know that we have huge multi purpose social service organisation. உங்கள மாதிரி அதிகாரிங்களுடைய உதவிய நாங்க ரொம்பவும் எதிர்பார்க்கிறோம் ஜோசப். அதுவும் நான் உங்க கிட்ட இந்த ஐடியாவ குடுத்ததுக்கு காரணம். We have seen that Bank Managers are only interested in getting deposits, not for distributing subsidised loans to the needy. அரசாங்கம் நிறைய மானியம் குடுக்க முன் வந்தாலும் உங்கள மாதிரி மேனேஜர்ங்க அத யூஸ் பண்ணிக்க முன்வருவதில்லை.. நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.’

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் மவுனமாக நின்றேன். ‘ஓகே ஃபாதர். ஐ வில் டூ மை பெஸ்ட். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.’ என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றேன்.

நேரே அருகிலிருந்த தஞ்சை மத்திய தந்தி அலுவலகத்திற்குச் சென்று என் வட்டார மேலாளரையழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு ஏக சந்தோஷம். ‘நாம இத முதல்லயே யோசிச்சிருக்கலாம். நான் ஒன்னு பண்றேன். இப்பவே நம்ம ஜி.எம் கிட்ட சொல்றேன். அவர் மறுப்பு சொல்லலேன்னா உடனே ஃபோன் பண்ணி பிஷப் கிட்ட கேட்டுட்டு அவர் சரின்னா இன்னைக்கி ராத்திரியே புறப்பட்டு வரேன். நாளைக்கு ரெண்டு பேருமா போயி இன்வைட் பண்ணலாம். நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி வீட்டுக்கு போங்க.. நான் இன்னும் ஒரு மணி நேரத்துல உங்கள கூப்டுவேன்.’ என்றார்.

அப்படா.. ஒரு வழியா இந்த தலைவலி சரியாயிருச்சி என்ற நிம்மதியில் வேறெங்கும் செல்லாமல் வீட்டுக்குச் சென்றேன்..


படிப்பினை: ஒரு வாசல் அடைக்கப்பட்டால் வேறொரு விசாலமான வாசல் திறக்கப்படும் என்பது பெரியவர்கள் சொன்ன வார்த்தை. அது உண்மைதான். நாம் எதிர்பார்த்திருந்த ஒரு காரியம் தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் இருக்க வேண்டும். நிச்சயம் வேறொரு வழி பிறக்கும்.

இனி வரும் இடுகைகளில் தேவைப் படும் இடங்களில் இதுபோன்ற படிப்பினைகள் இடப்படும். இதொன்றும் வேத வாக்கல்ல, யாரும் அப்படியே எடுத்துக் கொள்வதற்கு.. என் மனதில் பட்டதை எழுதுகிறேன். அவ்வளவுதான்.




20 கருத்துகள்:

  1. ஒரு வாசல் அடைக்கப்பட்டால் வேறொரு விசாலமான வாசல் திறக்கப்படும் என்பது பெரியவர்கள் சொன்ன வார்த்தை.அது உண்மைதான்.நாம் எதிர்பார்த்திருந்த ஒரு காரியம் தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் இருக்க வேண்டும்.நிச்சயம் வேறொரு வழி பிறக்கும்.


    சத்தியமான வார்த்தைகள் சார்.
    தொடர்ந்து கலக்கீட்டு வாரீங்க.

    பதிலளிநீக்கு
  2. வாங்க சுதர்சன் கோபால்,

    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நாம ஏதோ நினைச்சு என்னமோ செய்யறோம் ஆனா பலரும் அதைப்பத்தி பலவிதமா தான் எடுத்துக்கிறாங்க.//

    வாங்க ராஜ்,

    நீங்க சொல்றது ரொம்ப சரி..

    பெரும்பாலான அபிப்பிராய பேதங்களும், விவாதங்களும், மனக்கசப்புகளும் இதனாலதான் வருது..

    பதிலளிநீக்கு
  4. நானும் வாழ்க்கையில் கொஞ்சம் பட்டிருக்கேன். ஏன் இந்த முருகன் இப்பிடிக் கஷ்டப் படுத்துறான்னு தோணீருக்கு. திட்டியிருக்கேன். ஆனா அத்தனையையும் பேசாமக் கேட்டுக் கிட்டு காலண்டர்ல சிரிச்சிக்கிட்டே இருந்தான்.

    நான் கெட்டதுன்னு நெனச்சது அத்தனையும் பின்னால எனக்கு நல்லதா முடிஞ்சது. நல்லதுன்னு நெனச்சு நடக்காமப் போச்சேன்னு வருத்தப்பட்டதேல்லாம் நடந்திருந்தா கெட்டதுன்னு கொஞ்ச நாள் கழிச்சி தெரிஞ்சது.

    ஆண்டவன் நமக்கு நல்லது மட்டுமே செய்வான். டாக்டர் ஊசி போடும் போது வலிக்கத்தான் செய்யுது. ஆனா அது குணப்படுத்தும் மருந்துதானே.

    பதிலளிநீக்கு
  5. ஜோசப் சார்,
    கடைசில சொன்னீங்களே ஒரு தத்துவம்..அப்படியே உண்மை
    //நான் கெட்டதுன்னு நெனச்சது அத்தனையும் பின்னால எனக்கு நல்லதா முடிஞ்சது. //
    ராகவன்,
    நானும் பல முறை இதை உணர்ந்திருக்கேன் .இறைவன் நாம் நினைக்குறத விட மேலான ஓன்றை தருவதற்கே ,சில நேரம் நாம் கேட்பதை தருவதில்லை போலும்.

    பதிலளிநீக்கு
  6. ஜோசஃப் சார்,
    ஒரு வாரமாக வெளியூர் சென்றிருந்ததால் உடனுக்குடன் பின்னூட்டம் இடமுடியவில்லை. இப்போது ஒரே மூச்சில் படித்தபோதுதான் நீங்கள் நட்சத்திர வாரத்தில் அதிகம் பேர் பின்னூட்டம் இடவில்லையே என வருந்தியது கண்டேன். அங்கு எல்லோரும் கூறியது போல பின்னூட்டங்களின் எண்ணிக்கை உங்கள் பிரபலத்தின் அளவீடு அல்ல. உங்கள் இடுகைகளின் தாக்கத்தினால் வாயடைத்திருக்கும் போது பின்னூட்டம் எழுத முடியுமா? தட்டிகொடுக்கவேண்டிய நிலையிலிருந்து (கை)தட்டுக்கள் வாங்கி கொண்டிருக்கிற நிலையில் உங்கள் வருத்தம் ஆச்சரியம் அளித்தது.

    உங்கள் எழுத்துப்பணி சிறகடித்து பறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. i wonder how a banker who is always mooving with numbers can contribute such a literary piece!
    Father has rightly observed the lethargic attitude of a few managers towards subsidised loans.
    well! keep it up

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஜோ,

    கடைசில சொன்னீங்களே ஒரு தத்துவம்..//

    தத்துவம்னா தத்துவம்தான்.. ஆனா அது என் வாழ்க்கையில பல இடங்கள்ல அனுபவிச்சது..

    அத நீங்களும் அனுபவிச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  9. வாங்க மணியன்,

    உங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  10. வாங்க சிவஞான்ம்ஜி,

    Father has rightly observed the lethargic attitude of a few managers towards subsidised loans.//

    இது நான் பல ஊர்களிலும் பணியாற்றியபோது திருப்பித் திருப்பி கேட்ட புகார்கள்தான். அதில் உண்மையும் இருக்கிறது.. பெரும்பாலான மேலாளர்கள் அரசியல்வாதிகளைக் கண்டுதான் அஞ்சுவார்கள். இதுபோன்ற பொதுத்தொண்டு நிறுவனங்களி அலட்சியப்படுத்தி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க புலிக்குட்டி!

    But the god opens many doors before closing a door..//

    நூத்துல ஒரு வார்த்தைங்க..

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராகவன்,

    ஆண்டவன் நமக்கு நல்லது மட்டுமே செய்வான். டாக்டர் ஊசி போடும் போது வலிக்கத்தான் செய்யுது. ஆனா அது குணப்படுத்தும் மருந்துதானே.//


    அடடா, என்ன அழகாக சொல்லிட்டீங்க. அதான் ராகவன் உங்க ஸ்பெஷாலிட்டி..

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. Sir, One famous but forgotten saying is there: HE knows what is good for u. By not giving u something at that time, HE only does favor to u. Often, what YOU HAVE NOT GOT is really only BAD for u. Your managemnet serial is going on well, attracting huge reader deosits. what else a banker(writer) needs than depositers (readers)

    பதிலளிநீக்கு
  14. வாங்க கிருஷ்ணா,

    what else a banker(writer) needs than depositers (readers) //

    நச்சுன்னு சொல்லிட்டீங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க ஜோசப், கருமமே கண்ணாயிருந்தால் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெறலாம்...

    லோன் கொடுப்பதில் தற்போது தனியார் வங்கிகள் கொஞ்சம் முனைப்புடன் இருக்கின்றன..

    தினமும் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பாவது வருகிறது (பர்சனல் லோன் கொடுக்கவோ / ஹோம் லோன் / கிரெடிட் கார்டு கொடுக்கவோ)

    பதிலளிநீக்கு
  16. வாங்க சோ. பையன்,

    லோன் கொடுப்பதில் தற்போது தனியார் வங்கிகள் கொஞ்சம் முனைப்புடன் இருக்கின்றன..//

    உண்மைதான். ஆனால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். ஜாக்கிரதை!!

    பதிலளிநீக்கு
  17. டிபிஆர் ஜோ,

    அதுக்குத்தான் 'சரணாகதி'ன்னு சாமிகிட்டே சொல்லிடுவேன். எனக்கு எது நல்லதோஅதைச் செய்.
    கஷ்டம் தரணுமுன்னு நினைச்சாலும் அது உன் இஷ்டம். நீயே பார்த்துக்கோ'ன்னு இருந்துருவேன்.

    பதிலளிநீக்கு
  18. "நான் என்ன சொல்வதென தெரியாமல் ஒரு அசட்டு புன்னகையுடன் அவரை பார்த்தேன். ஆமாம் என்று எப்படி சொல்வது? இவங்களுக்கு யாரை தெரியும்?

    ‘அப்படியெல்லாம் இல்ல ஃபாதர்.’ என்றேன் பட்டும் படாமலும்."

    - உண்மையிலும் உண்மை சார். இவனுக்கெல்லாம் எங்க தெரிஞ்சிருக்கப் போகுதுனு இளக்காரமாக நினைக்கும் பலர் உண்மையில் நம்மை விட ஞானம் மிகுந்தவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். இச்சமயத்தில் என்னுடைய நண்பன் கூறியதை நினைவு படுத்தி பார்க்கிறேன். உன்னைப் போல் ஒருவனும் கிடையாது, அதே சமயம் உன்னைச் சுற்றி இருப்பவனை போலவும் யாரும் கிடையாது. உனக்கு அடுத்தவன் என்ன மரியாதை தர வேண்டும் என நீ எண்ணுகிறாயோ, அதே மரியாதையை அடுத்தவனுக்கு நீ தர மறக்காதே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படிப்பினை தங்கள் இப்பதிவிலிருந்து. எனக்கு இது.

    பதிலளிநீக்கு
  19. வாங்க துளசி,

    எப்படி உங்க பின்னூட்டத்த மிஸ் பண்ணேன்னு தெரியலை..

    எனக்கு எது நல்லதோஅதைச் செய்.
    கஷ்டம் தரணுமுன்னு நினைச்சாலும் அது உன் இஷ்டம். நீயே பார்த்துக்கோ'ன்னு இருந்துருவேன். //

    நீங்கன்னு இல்லை.. நாம எல்லாருமே அப்படித்தான் இருக்கணும்.. என்னை நானே பாத்துக்கறேன் சாமி உங்கள் கூப்டா மட்டும் வந்தா போறும்னா நமக்கு தேவைப்படுற நேரத்துல சாமி அவரை என்னைக்கிம் நாடி நிக்கற பக்தர்கிட்ட போயிருவார்.. நாம காத்துக்கிட்டே நிக்க வேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
  20. வாங்க கைப்புள்ள,

    இவனுக்கெல்லாம் எங்க தெரிஞ்சிருக்கப் போகுதுனு இளக்காரமாக நினைக்கும் பலர் உண்மையில் நம்மை விட ஞானம் மிகுந்தவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.//

    நானும் அப்படி நினைத்ததால் தானே அப்படி இருந்திருக்கிறேன். அதுவும் ஒரு ஆணவ போக்குதான்னு பிறகாலத்தான புரிஞ்சது..

    பதிலளிநீக்கு