திரும்பிப் பார்க்கிறேன் 58
மல்லி என்ற அந்த பெண் கொண்டு வந்து பண்ணையாரிடம் கொடுத்த கணக்குப் புத்தகம் அதரப் பழையதாயிருந்தது. மேல் அட்டை முழுவதும் கிழிந்து, பக்கங்களின் மூலைகள் எல்லாம் மடிக்கப்பட்ட நிலையில் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
இதிலிருந்து என்னத்தைப் பார்த்து என்னுடைய வங்கியில் இவரால் சேமிப்பாய் வைக்க முடியும் என்ற நினைப்பில் என்னையுமறியாமல் ஒரு கேலிப் புன்னகை என் உதடுகளில் தவழ்ந்தது.
அதை ஓரக் கண்ணால் கண்ட மல்லியின் முகம் சட்டென்று கோபத்தில் சிவந்ததைப் பார்த்தேன். என் தவறு உடனே எனக்குப் புரிய அடுத்த நொடியே முகபாவத்தை மாற்றிக் கொண்டு அவரைப் பார்த்தேன்.
புத்திசாலிப் பெண். என் தவறை நான் புரிந்து கொண்டேன் என்பதை உணர்ந்ததும் அவரும் சகஜ நிலைக்கு மாறினார்.
இதை ஒன்றும் கவனியாத பண்ணையார் கணக்குப் புத்தகத்தில் ஆழ்ந்துப் போயிருந்தார். ஒரு சில நிமிடங்கள் வரை பொறுமையாய் நின்றுக் கொண்டிருந்த அந்த பெண், ‘சித்தப்பா நான் போட்டுமா?’ என்றார்.
கணக்குப் புத்தகத்தில் கண் எடுக்காமலேயே, ‘சித்த இரு மல்லி.’ என்றார்.
நான் ‘இவர் என்னத்ததான் அந்த புத்தகத்துல பார்த்துக் கிட்டிருக்கார்னு’ யோசனையுடன் அந்த பெண்ணைப் பார்த்தேன்.
அவர் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பதுபோல் தன் இளைய தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தூரத்தில் தோப்பின் கோடியில் தொழிலாளர்கள் உரையாடிக் கொண்டிருந்த ஒலி மெள்ள ஒரு பின்னணி இசை போல் கேட்டது. மற்றபடி ஆள் அரவமில்லாத ஒரே மயான அமைதி..
இன்னும் சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சிறு புன்னகையுடன் என்னையும் அந்த பெண்ணையும் மாறி மாறி பார்த்துவிட்டு, ‘மல்லி, சார் வந்த நேரம் நல்ல நேரம்னு நினைக்கிறேன். உன் கல்யாணத்துக்குன்னு சேர்த்து வச்சிருந்தோமே அது இன்னும் ஒரு வருஷத்துக்காவது தேவைப் படாதில்லேம்மா.. நீ டிகிரி முடிச்சிட்டுதானே பண்ணிக்க போறேன்னு சொன்னே.. அந்த ----- முழுசும் உன் பேர்லயே சாரோட பேங்குல ஒரு வருஷத்துக்கு போட்டுரலாம்னு நினைக்கிறேன். என்ன சார்?’ என்றார்.
அவர் சொன்ன தொகையைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அது நான் சற்றும் எதிர்பார்க்காத தொகை!
எனக்கு என்ன சொல்வதென தெரியாமல் ஒரு சில விநாடிகள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘என்ன சார், செய்திரலாமில்லே. நீங்க உங்க பிராஞ்ச துவக்கறதுக்கு நாள் குறிச்சிட்டு சொல்லுங்க. திறப்பு விழா அன்றைக்கே மல்லியோட வந்திருந்து டெப்பாசிட் செஞ்சிடறேன்.’
வங்கியின் திறப்பு விழா அன்று எவ்வளவு சேமிப்பை வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்ட வேண்டுமென்று ஒரு தொகையை என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து நிர்ணயிப்பது வழக்கம்.
அதில் ஒரு பெரும் பங்கு பண்ணையாளரிடமிருந்தே திரட்டிவிட முடியும் என்பதை உணர்ந்தேன். சந்தோஷத்துடன், ‘சரி சார்.’ என்றதோடு நிறுத்தியிருக்கலாம். ‘நான் இதை கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை சார்.’ என்றதும் மல்லி என்னைத் திரும்பி பார்த்த பார்வையில் மீண்டும் கோபம்.
‘எதுக்கு அப்படி சொல்றீங்க?’ என்றார்.
பண்ணையார் குறுக்கிட்டு, ‘சரி விடும்மா.. சார் என்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே என்னைப் பத்தி என்ன நினைச்சார்ங்கறத நா புரிஞ்சிக்கேட்டேன்ல.. என்னடா பஞ்சப் பனாதி மாதிரி இருக்கிறானே.. இவன் கிட்டருந்து என்னத்த திரட்ட முடியும்னு நீங்க என்ன பார்த்த முதல் பார்வையே சொல்லிருச்சி சார்.’
நான் அதிர்ச்சியில் என்ன பேசுவதென்று தெரியாமல் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தேன். என்னுடைய முட்டாள்தனத்தால் ஒரு அரிய வாடிக்கையாளரை இழந்து விட்டேனோ என்று நினைத்தேன். 'அப்படியெல்லாம் இல்லை சார்' என்று உண்மைக்கு புறம்பாக பேசி என்னுடைய நிலையை இனியும் தாழ்த்திக் கொள்ள விரும்பாமல் வெறுமனே அமர்ந்திருந்தேன்.
என் மனதில் ஓடிய குற்ற உணர்வு என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். அந்த பெண்ணின் முகம் கோபத்தை விட்டு மீண்டும் சாந்தமானது. ‘சித்தப்பா அவரை மட்டும் குறை சொல்லி பிரயோசனமில்லேன்னு நினைக்கிறேன். நீங்களும் அப்படித்தானே சித்தப்பா இருக்கீங்க? நம்ம வீடும் அந்த நிலையிலதானே இருக்கு? என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்குறீங்க. பாங்க்ல சேத்து வச்சி என்ன சித்தப்பா பிரயோசனம்? கொஞ்சம் எடுத்து வீட்டுக்காச்சும் செலவு பண்ணுங்களேன்னு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்.’ என்றார்.
அட, இவர் என் அடி மடியிலயே கை வைத்துவிட்டாரே என்று நினைத்தேன். பண்ணையாரும் இவரோட பேச்சைக் கேட்டு என் கிளையில் போடுவதாயிருந்த தொகையை வீட்டு வேலைக்கு உபயோகித்து விடுவாரோ என்று ஒரு நிமிடம் திகைத்துப் போனேன்.
ஆனால் நல்ல வேளை, பண்ணையார் சம்மதிக்கவில்லை. ‘சரிம்மா, நீ சொன்னா மாதிரி செஞ்சிரலாம். நீ நாளைக்கு டவுணுக்கு போயி நம்ம ஆடிட்டர் சாரைப் பார்த்துட்டு அவரையே ஒரு எஞ்சினீயர கூட்டிக்கிட்டு வரச் சொல்லு. ஆனா பேங்க்ல இருக்கற தொகையில தொகையில கை வைக்க வேணாம். அது உன் கல்யாணத்துக்கு. வீட்டு வேலைக்கு ஒருத்தருக்கு போன தை மாசம் கைமாத்தா நம்ம செட்டியார் கிட்ட கொடுத்து வச்ச பணம் வருமில்லே.. அதுல செஞ்சிரலாம்.’ என்றதும் நான் நிம்மதியடைந்தேன்.
இவரைப்போல் இன்னும் ஒரு நான்கு பேரைப் பார்த்தால் போதும், எனக்கு நிர்ணயிக்கப் பட்ட தொகை கிடைத்துவிடும். என்னுடையே சேர்மனே கிளைத் திறப்பு விழாவுக்கு வருவதால் நான் எனக்கு நிர்ணயிக்கப் பட்ட தொகைக்கும் கூடுதலாக திரட்டுவதன் மூலம் என் பேரில் அவர் வைத்திருந்த தவறான எண்ணத்தைப் போக்க முடியுமே என்றுதான் நான் அந்த இரண்டு வார காலத்தில் நாயாய் பேயாய் என் வாகனத்தை எடுத்துக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அலைந்தேன்.
நான் பண்ணையாரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். என்னை முகப்பு வாசல் வரை கொண்டு விட்டவர், ‘உங்கள நான் சாருன்னு கூப்பிடாம தம்பின்னு கூப்பிடட்டுமா’ என்றார்.
அவருடைய குரலில் இருந்த ஏதோ ஒன்று சட்டென்று என் மனதைத் தொட அவரைப் பார்த்தேன். ‘என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க.. தாராளமா கூப்பிடலாம்.’ என்றேன்.
பண்ணையார் முகப்பு வீட்டு வாசலில் நின்றுக் கொண்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மகளைப் பார்த்தார். பிறகு என்னிடம், ‘தம்பி எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. உங்கள பார்த்ததும் அப்படி கூப்பிடணும்னு தோனுனதால கேட்டேன். அதோ பாக்கறீங்களே, என்ன சித்தப்பா, சித்தப்பான்னு பாசத்தோட கூப்பிடுதே அந்த பொண்ணு, அது எனக்கு எந்த சொந்தமுமில்லை தம்பி.. என் வயல்ல ரொம்ப நாளா வேல செஞ்சி கொஞ்ச வருஷத்துக்கு முன்னால செத்துப் போனவருடைய பொண்ணு.. அதுக்கும் சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லே.. எனக்கு சொந்தம்னு சொல்லிக்க எல்லோருமிருந்தும்..’ மேலே தொடர முடியாமல் குரலில் நடுங்கி தடுமாற்றத்துடன், கண்கள் இரண்டிலும் கண்ணீர் துளிர்த்து நின்றவரைப் பார்த்தவுடன் எனக்கு என்ன சொல்வதென தெரியாமல் அவருடைய தோளில் கை வைத்து அழுத்தினேன்..
‘சார்..’ என்றேன்.
அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு என்னை ஒரு மெல்லிய புன்னகையுடன் பார்த்தார். கண்களை மேல் துண்டால் துடைத்துக் கொண்டு, ‘ தம்பி நீங்க இன்னொரு முறை வரணும். உங்க கிட்ட நான் என்னத்த பாக்கறேன்னு சொல்ல தெரியலை.. ஆனா ஏதோ ரொம்ப நாள் பழகுனா மாதிரி ஒரு உணர்வு எனக்குள்ள.. உங்க கிட்ட நிறைய பேசணும்னு தோனுது..’ என்றார்.
என்னையுமறியாமல் அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். ‘கண்டிப்பா ஐயா.. உங்கள கூப்டுட்டு வரேன்.’ என்றவாறு விடை பெற்றேன்.
அவருடைய வீட்டிலிருந்து தஞ்சாவூர் டவுண் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரமிருந்தது. தஞ்சாவூர் திருச்சி சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்துக் கொண்டேயிருக்கும். சாலையும் இரண்டு பேருந்துகள் செல்லும் அளவேயிருந்ததால் என்னைப் போன்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டியிருக்கும்.
நான் வழி நெடுக சற்று முன் சந்தித்தவரைப் பற்றியே நினைத்துக் கொண்டு எந்த வித விபத்திலும் சிக்கிக் கொள்ளாமல் ஊர் வந்து சேர்ந்த அதிசயத்தை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
நான் எதிலும் எளிதில் உணர்ச்சிவசப் படுபவன். எனக்கு விடையளிக்கும் நேரத்தில் அவர் கூறியவை என் மனதில் ஆழப் பதிந்து விட்டன. தனக்கு எந்தவித உறவுமில்லாத, தன்னிடம் வேலை பார்த்த ஒரு கீழ் சாதி பெண்ணுக்கு தன் மகளைப் போன்ற ஒரு அந்தஸ்த்தைக் கொடுத்து...
நாயக்கர் என்னை அவரிடம் அழைத்துச் சென்றபோது அவரைப் பற்றிக் கூறியதை இப்போது நினைத்துப் பார்த்தேன். ‘சார், அவரு சாதியில ஒரு பார்ப்பனர். சாதி, சாதின்னு நாங்கல்லாம் அடிச்சிட்டிருக்கற இந்த காலத்துல இவரு எதப் பத்தியும் கவலைப் படாம தனக்குக் கீழ வேல செய்யற எல்லாரையும் குடும்பத்துல ஒருத்தரா நடத்துவார்னு கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால அவருக்கு சொந்தம்னு சொல்லிக்கிட்டு மூனு தங்கைங்க இருந்தும் யாருமில்லாத அனாதையாட்டமா அந்த பண்ணை வீட்லயே இருந்திட்டாரு..’
‘சொந்தம்னு சொல்லிக்க எல்லோருமிருந்தும்.....’ என்ற பண்ணையார் கூறியது என் நினைவுக்கு மீண்டும் வந்தது..
தொடரும்..
Ever wonder, why it rains still in this earth, its because of people like him. Thanks for introducing us some nice humans.
பதிலளிநீக்குI couldn't control my tears..What a great man?
பதிலளிநீக்குநல்லவங்க உத்தமருங்கன்னு.....கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனா இன்னாரப் போல இருப்பாருன்னு சொல்றதுக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுலதான் தெரியும். அதுல இவரையும் சேத்துக்கனும் போல.
பதிலளிநீக்குகிருஷ்ணா சொன்னது போல நல்லவங்களாலதான் இந்த உலகம் நிக்குது. கலகக்காரங்களும் நம்மளப் போன்ற சாதாரணவங்களும் இருக்குறது இவங்க புண்ணியத்துலதான்.
ஒரு கதை சொல்லுவாங்க. நாலு பேர் ஒரு மண்டபத்துல இருந்தாங்களாம். மண்டபம் கிடுகிடுன்னு ஆடுச்சாம். அப்ப ஒருத்தன் சொன்னானாம்...யாரோ ஒருத்தரு கெட்டவரு. அவரு வெளிய போனா மண்டபம் நின்னிருமுன்னு. சொல்லீட்டு அவன் ஒருத்தன் வெளிய போனான். ஆனாலும் மண்டபம் ஆடிட்டே இருந்துச்சாம். இப்படியே ஒவ்வொருத்தனா வெளிய போனாங்களாம். கடைசீல ஒருத்தன் வெளிய வந்தானாம். ஒடனே மண்டபம் படால்னு கீழ விழுந்ததாம். ஒடனே மொதல்ல வெளிய வந்தவன் சொன்னானாம்...கடைசீல வெளிய வந்தவந்தான் நல்லவன். ஏன்னா...அவனுக்காகத்தான் மண்டபம் விழாம ஆடீட்டே இருந்ததுன்னு. அதுமாதிரிதான் இங்கயும். இந்த மாதிரி ஆளுங்களாலத்தான் நம்ம இன்னும் பொழைச்சிக்கிட்டு இருக்கோம்.
வாங்க கிருஷ்ணா,
பதிலளிநீக்குநீங்க சொல்றது ரொம்பவும் சரி. இந்த மாதிரி ஆளுங்க இருக்கறதுனாலதான் இந்த உலகமே சுத்திக்கிட்டிருக்கு.
நன்றி.
வாங்க ஜோ,
பதிலளிநீக்குஎன்னாலயும் அவரை சந்திச்சிட்டு ரொம்ப நாளைக்கு மறக்கவே முடியல. அவரும் நானும் சேர்ந்து பல மாலைப் பொழுதுகளை கழித்திருக்கிறோம்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஎன்ன அருமையான நிகழ்ச்சிய சொல்லியிருக்கீங்க ராகவன்.
பைபிள்லயும் இப்படி ஒரு நிகழ்வு விவரிக்கப் பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்துல என் பைபிள்னு ஒரு பதிவ தனியா பதிய தயாரிச்சிக்கிட்டிருக்கேன்.
தினம் ஒரு பைபிள் கதைன்னு வரும்.
அருமையான மனிதராய் இருக்கிறாரே அந்த பண்ணையார்.
பதிலளிநீக்குஇன்னொரு தொடரா, கலக்குங்க.
பண்ணையாரிடம் இவ்வளவு பண்பு உள்ளது பழகிப்பார்த்தால் தான் தெரியும், சில கேடு கெட்டதுகள் அவர்களைப்பற்றி தவரான கருத்தைச் சொல்லி பண்ணையார் என்றாலே படு பாவி என்ற மாயை உண்டு பண்ணிவிட்டனர். ஒரு சிலர் இருக்கலாம் அதற்கு எல்லாருமே அப்படித்தான்என கூறு தவறு.
பதிலளிநீக்குபூண்டி வண்டையார், உக்கடை தேவர், கபிஸ்தளம் மூப்பனார், தாப்பா ரொட்டியார். என்றெல்லாம் பேசியவர்கள் இன்று அத்தனை பண்ணையார்களின் மொத்த சொத்தைவிட பல மடங்கு சொத்துடையவர்களாகிவிட்டனர்.
ஏரோட்டும் மக்ளெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டாம் தேவையா திருவாரூர் தியாகராஜனே? என்று தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்க பெருமானையும் பீரங்கியால் பிள்பபோம் என்றனர்.
வேண்டாம் சார் அரசியலாகிவிடும் போதும் இந்த அளவு.
வரலாறு நல்ல இருந்தது மீதம் எப்போ?
உருவத்தைப் பார்த்து ஒருத்தரை மதிப்பிட முடியாதுன்றது எவ்வளவு உண்மை பார்த்தீங்களா?
பதிலளிநீக்குஎத்தனையோ பேர் இப்படித்தான் சமூகத்துலே புரட்சின்னு மத்தவங்க விளம்பரப் படுத்தறதையெல்லாம்,
ஒரு ஈ காக்காக்குத் தெரியாம செஞ்சுக்கிட்டு இருக்காங்கல்லே?
நல்ல மனிதர். இப்ப எப்படி இருக்கார்னு சொல்லுங்களேன்.
வாங்க சுதர்சன்,
பதிலளிநீக்குநன்றி.. இன்னொரு தொடரா..
ஓ! பைபிள் கதைகளா?
வாரத்துல மூனு நாள் போடலாம்னு பாக்கறேன்.
வாங்க என்னார்,
பதிலளிநீக்குநான் பார்த்த பண்ணையார்கள், மிராசுதார்களில் சிலர் மட்டும்தான் நாம் தமிழ் சினிமாவில் பார்த்ததைப் போன்ற வில்லன்கள்.
மற்ற எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் நல்லவர்கள்தான்.
வில்லன்கள் எந்த சாதி, மதத்தில்தான் இல்லை..
வாங்க துளசி,
பதிலளிநீக்குஅவர் இறந்து சுமார் பத்து வருடங்களாகின்றன.
அவரை நான் சந்திக்கும் போதே அறுபதுக்கு மேல்..
அவர் இறந்த பிறகு.. அவருடைய சொத்துக்காக உயிருடன் இருந்த சமயத்தில் ஒதுங்கியிருந்தவர்கள் மொய்த்துக் கொண்டனர் என்று கேள்விப் பட்டேன்.