திரும்பிப் பார்க்கிறேன் - 56
வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததுதான் தாமதம், என் மனைவி படு டென்ஷனுடன், ‘என்னங்க எங்க போனீங்க. உங்க ஹெட் ஆஃபீஸ்லருந்து ஃபோன் வந்துது.. உங்கள உடனே புறப்பட்டு வரச் சொல்றாங்க. ஏதோ சீரியசாம். உங்க ஜோனல் ஆஃபீஸ்லருந்தும் ஃபோன் வந்துது.. நீங்க வந்ததும் கூப்ட சொன்னாங்க. என்ன பண்ணீங்க? அவரு ரொம்ப கோபமா பேசினார்.. நீங்க சாப்டுட்டு போயி இன்னைக்கி ராத்திரி பஸ்சுக்கே புக் பண்ணிட்டு வாங்க.. அதுக்கு முன்னால கோயம்புத்தூருக்கு ஃபோன் பண்ணுங்க..’ என்று படபடத்தார்.
இதை நான் முற்றிலும் எதிர்பார்க்காததால் ஒரு நிமிடம் என்ன செய்வதென தெரியாமல் குழம்பிப் போனேன்..
என்னவாயிருக்கும்?
என் மனைவியின் முன் என்னுடைய வட்டார மேலாளருடன் பேச விரும்பவில்லை..
வேலை விஷயம் வீடுவரை வருவதை முற்றிலும் விரும்பாதவன் நான். கோபத்தில் அவர் ஏதாவது சொல்ல நானும் ஏதாவது சொல்லிவிட்டால் என் மனைவிக்கு அனாவசிய கவலையாகிவிடும். ஆகவே என்னுடைய பதற்றத்தைக் மறைத்துக் கொண்டு, ‘சரி.. நீ சாப்பாடு எடுத்துவை.. சாப்டுட்டு போய் டிக்கட் புக் பண்ணிட்டு வர வழியில நான் கோயம்புத்தூருக்கு ஃபோன் பண்ணிக்கறேன். இங்கருந்து பேசினா சரி வராது.. பாப்பா வேற தூங்கற நேரம்.. போ.. எடுத்துவை..’ என்றேன் என் மனைவியிடம்.
நான் சொல்லாமல் விட்டதை புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு விபரம் இல்லாதவர் அல்ல என் மனைவி. என் அலுவலக விஷயத்தை வீட்டில் டிஸ்கஸ் செய்வது எனக்கு பிடிக்காதென்பதும் அவருக்கு தெரியும். இன்றுவரை அப்படித்தான்.
ஆகவே அவர் உணவு பரிமாற நான் மெளனமாய் உண்டு முடித்து என் வாகனத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் டவுணை நோக்கி பயணம் செய்தேன்.
நேரே திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு சென்று அன்று இரவு கோவை செல்ல இருக்கையை முன் பதிவு செய்துவிட்டு அருகிலிருந்த தபால் அலுவலகத்தில் சென்று என் வட்டார மேலாளரை தொலைபேசியில் அழைத்தேன்.
எடுத்தவுடனே அவர் கேட்ட கேள்வி இதுதான். ‘டிபீஆர். நீங்க எதுக்கு என்கிட்ட பொய் சொன்னீங்க?’
எனக்கு புரிந்தும் புரியாததுபோலிருந்தது.. பொய்யா, நானா, என்று ஒரு நொடி யோசித்தேன். சட்டென்று நினைவுக்கு வந்தது..
இருப்பினும் ‘என்ன சொல்றீங்க சார்?’ என்றேன், ஒருவேளை இவர் வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி கேட்கப் போக நான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்ல வேண்டாமே என்ற நினைப்பில்.
‘என்ன டிபிஆர், ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறீங்க? நீங்க அன்னைக்கி ஃபோன்ல என்ன சொன்னீங்க? இடம் கொஞ்சம் சிறுசாயிருக்கும் மத்தபடி பிராஞ்ச் திறக்கறதுக்கு ஏத்த இடம்தான்னு சொன்னீங்களா இல்லையா?’
‘ஓ! அதுவா.. அப்போ நான் நினைச்சது சரிதான்.’ என்று நினைத்துக் கொண்டு பதில் பொய் சொல்ல தயாரானேன்.
‘சார்.. இப்பவும் சொல்றேன். இடம்தான் கொஞ்சம் சின்னது.. மத்தபடி நீங்க வந்து பார்த்த அதே கட்டிடம்தான்..’
அவர் நம்பவில்லை என்று அவருடைய குரலிலேயே தெரிந்தது.. ‘என்ன டிபிஆர், நீங்க ஒன்னு சொல்றீங்க.. நம்ம பிரமைசஸ் டிபார்ட்மெண்ட் எஞ்சினீயர் வேறொன்னு சொல்றாரு.. அவர் போய் H.O.ல நெகட்டிவா சொல்லி பெரிய பிரச்சினையே பண்ணிட்டாரு.. ஒன்னு, நீங்க உடனே அவர கூப்பிட்டு விபரத்தை தெளிவா சொல்லி கன்வின்ஸ் பண்ணுங்க. இல்லையா, புறப்பட்டு H.O போங்க. விஷயம் சேர்மன் கிட்ட போறதுக்குள்ள சுமுகமா முடிச்சிருங்க.. இல்லன்னா பெரிய பிரச்சினையா போயிரும்.. சொல்லிட்டேன். அப்புறம் எம்மேல வருத்தப் படாதீங்க..’ என்று நான் பதில் பேசுவதற்கு முன் வைத்துவிட்டார்.
தொலைப் பேசியை வைத்துவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு அங்கே இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து பிரமைசஸ் இலாக்கா பொறியாளரிடம் என்ன சொல்வதென யோசித்து கையிலிருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். (இத்தகைய ஒரு பாக்கெட் குறிப்பேட்டை எப்போதும் கையில் வைத்திருப்பேன். இன்றும் அப்படித்தான். நினைவுக்கு வரும் ஒவ்வொரு காரியங்களையும் மறந்துவிடாமலிருக்க..)
பிறகு எழுந்து சென்று அவரைக் கூப்பிட்டேன். அவர் இணைப்பில் வந்ததும் பொறுமையாக அவருக்கு விளங்கும் விதத்தில் கோபப்படாமல் விளக்கினேன். இறுதியில்.. ‘சார்.. நீங்க பார்த்த இடம் ஷாப்புக்கு பின்னால இருக்குன்னுதானே நீங்க நெகட்டிவா ஃபீல் பண்றீங்க? அது சும்மா ஒரு ஆறேழு மாசத்துக்குத்தான் சார்.. தயவுசெய்து அத பெரிசு படுத்தாதீங்க.. இந்த பில்டிங் நம்ம ஜோனல் மேனேஜர் பார்த்ததுதான். அவர் வரும்போது இப்பருக்கற கடை ரெண்டு மாசத்துல காலியாயிரும்னு நினைச்சோம். இப்ப அது இன்னும் ஒரு ரெண்டு மூனு மாசம் தள்ளிப் போகப் போகுது.. அவ்வளவுதான் சார்.. நீங்க உங்க ரிப்போர்ட்ல இதப்பத்தி பெரிசா காமிக்காம இருந்தா போறும். ஏதாச்சும் பின்னால பிரச்சினை வந்தா பொறுப்பு என்னோடது..’ என்றேன்.
அவர் என்ன நினைத்தாரோ.. ‘சரி டிபிஆர். நீங்க எதுக்கும் நம்ம ஆப்பரேஷன்ஸ் ஜி.எம் கிட்ட பேசிருங்க.. ஏன்னா நான் என்னோட டிராஃப்ட் ரிப்போர்ட்ட ஏற்கனவே அவருக்கு காண்பிச்சி டிஸ்கஸ் பண்ணிட்டேன்.. இப்போ மாத்தி எழுதறதுக்கு எனக்கொன்னும் ஆட்சேபனையில்லே.. இருந்தாலும் நீங்க அவர்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு எங்கிட்ட சொல்லுங்க.. நான் நெகட்டிவ் கமெண்ட்சையெல்லாம் எடுத்துட்டு இன்னைக்கே கொடுத்துடறேன்.’ என்று பின்வாங்கினார்.
நான் ஒன்றும் பதிலளிக்காமல் இணைப்பைத் துண்டித்தேன். மனசுக்குள் அவரை, ‘இடியட்.. சுத்த அதிகப் பிரசங்கியா இருப்பான் போலருக்குதே.’ என்று திட்டினேன்.
இதுதான் இந்த டெக்னிக்கல் அதிகாரிகளின் பிரச்சினை.. இவர்களால் வங்கிக்கு ஒரு அஞ்சு பைசா லாபம் சம்பாதித்து கொடுக்க துப்பிருக்காது. இப்படி எதையாவது சொல்லி குட்டையைக் குழப்புவது இவர்களுக்கு கைவந்த கலை.. ‘இந்த பட்டிக்காட்டு ஊர்ல வந்து குப்பைய கொட்றது எவ்வளவு கஷ்டம்னு இவனுகளுக்கு எங்க தெரிய போவுது.. முட்டாப் பய..’ என்று அவரை மனதுக்குள் திட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இதற்காக வேலை மெனக்கெட்டு போக பத்து மணி நேரம் வர பத்து மணி நேரம் செலவழித்து பஸ்சில் போய்வர வேண்டுமா என்று யோசித்தேன். ஜி.எம்முக்கும் ஃபோன் பண்ணிப் பார்த்தா என்ன.. அவர் ஏதாவது முரண்டு பிடித்தால் போய் வரலாம் என்ற யோசனையுடன் என்னுடைய குறிப்பேட்டில் குறித்ததை மீண்டும் ஒருமுறை எனக்குள்ளேயே ரிகர்சல் பார்த்தேன்.
சரி, வருவது வரட்டும் என்று அவரை தொலைப்பேசியில் அழைத்தேன். என் அதிர்ஷ்டம்.. என் தொலைப்பேசி அழைப்பு அவருடைய அறையை சென்றடைந்த நேரம் ஜி.எம் வேறொரு தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க எனக்கு முதல் முத்லில் அக்கவுண்டண்டாக இருந்து இப்பொது H.R. Head ஆக இருந்தவர் எடுத்தார். அவர்தான் என்னை வடநாட்டுக்கு ஏற்படவிருந்த மாற்றத்திலிருந்து காப்பாற்றி தஞ்சைக்கு வரவைத்த புண்ணியவான்.
அவர், ‘என்ன டிபிஆர். ஏதாச்சும் பிரச்சினையா.. என்ன சொல்லுங்க.. நான் சார் ஃப்ரீயானதும் சொல்றேன்.’ என்றார்.
நான் சுருக்கமாக என்னுடைய தற்போதைய பிரச்சினையை கூறினேன். அவர் அவருடைய சர்வீசில் மூன்று நான்கு கிளைகளை கொடுமுடி, கரூர் போன்ற சிறிய சிறிய இடங்களில் திறந்திருப்பதால் அவருக்கு என்னுடைய கஷ்டம் தெளிவாக புரிந்தது.
‘இதான் பிரச்சினையா? இதுக்கு எதுக்கு ஜிஎம் வரை வரணும். உங்க வட்டார மேலாளரே போதுமே என்றார்.’
நான் என்னுடைய வட்டார மேலாளரிடம் இன்று பேசிய விவரத்தையும் சுருக்கமாக கூறினேன். பிறகு பொறியாளர் என்னிடம் கூறியதையும் கூறினேன்.
அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘சரி டிபிஆர். நான் ஜி.எம். ஃப்ரீயானதும் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன். நீங்க ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் கழிச்சி கூப்டுங்க.. இங்க கூப்பிட வேண்டாம். என் பர்சனல் லைன்ல கூப்பிடுங்க.. இங்க வேற ஒரு சீரியஸ் பிரச்சினை இருக்கறதுனால சாரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.’ என்று இணைப்பை துண்டிக்க.. நான் வேறு வழியின்றி அடுத்திருந்த பேருந்து நிலையம் சென்று ஒரு செய்தித்தாளை வாங்கிக்கொண்டு வந்து பதினைந்து நிமிஷம் காத்திருந்தேன்.
என்னுடைய தலைமையலுவலகத்தில் இதைவிட பெரிய பிரச்சினை வந்தது எனக்கு சாதகமாக வேலை செய்தது என்றுதான் நினைக்கிறேன். பதினைந்து நிமிடம் கழித்து நான் கூப்பிட்டதும் அவர்.. ‘நான் எஞ்சினீயர்கிட்டயும் பிரமைசஸ் டிபார்ட்மெண்ட் ஹெட் கிட்டயும் பேசிட்டேன் டிபிஆர். அவரும் எஞ்சினீயர என்ன கேக்காம ஏன்யா ஜி.எம் கிட்ட போனேன்னு டோஸ் விட்டுட்டு க்ளியர் ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டார். நீங்க மேல ஆக வேண்டியத பாருங்க.’ என்று கூறிவிட்டு நான் நன்றி என்று சொல்வதற்கு முன் இணைப்பைத் துண்டித்தார்.
நான் உடனே திருப்தியடையாமல் என்னுடைய பிரமைசஸ் இலாக்கா தலைவரையழைத்தேன். அவரும் நான் கேட்டதை உறுதிப்படுத்தி Furnishing செய்யும் நிறுவனத்தை அடுத்த இரு வாரங்களுக்குள் அனுப்புவதாக உறுதியளித்தார். இன்னும் என் வேலை முடியவில்லை. நான் குறிப்பிட்ட பொறியாளர் நிச்சயம் வருத்தத்தில் இருப்பார். ஆகவே அவரையும் அழைத்து சமாதானப் படுத்தி அவருடைய அறிக்கையை தாமதியாமல் கொடுக்கும்படி வேண்டுகோள் வைத்தேன். சுருக்கமாக கூறவேண்டுமென்றால் நன்றாக அவருக்கு ஐஸ் வைத்தேன். அவர் குளிர்ந்து போய் அன்று மாலையே அவருடைய அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு என்னை அன்று இரவு எட்டு மணிக்கு வீட்டு தொலைப் பேசியில் அழைத்து தகவல் தெரிவித்தார்!!
இதைத்தான் Human psychology என்கிறோம். நான் மட்டும் என் காரியம் முடிந்துவிட்டதென்று நினைத்து பொறியாளரை அழைக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவருடைய அறிக்கையை குறை கூறினேன் என்று நினைத்துக்கொண்டே இருந்திருப்பார். அதனால் அவருடைய மாற்று அறிக்கையை சமர்ப்பிப்பதையும் தாமதப்படுத்தியிருப்பார்.
நான் அவரை அழைத்து இதில் அவருடைய முக்கியமான பங்கையும் அவருடைய மாற்று அறிக்கையின் அவசியத்தையும் எடுத்துரைத்து அவருடைய பதவி எத்தனை முக்கியமானது என்றவுடன் அவர் அப்படியே குளிர்ந்து போய்விட்டார். போறாததற்கு இனிமே இந்த மாதிரி விஷயத்துல ஜாக்கிரதையா பார்த்து செய்ங்க டிபிஆர். உங்க நல்லதுக்குதான் சொல்றேன் என்ற அறிவுரையைம் எனக்கு கொடுத்தார். நானும் ‘ஆமா சார். நீங்க சொல்றது ரொம்ப சரி.. உங்க அளவுக்கு அனுபவம் எனக்கில்லையே’ என்றதும் அவருக்கு வந்த சந்தோஷத்தைப் பார்க்கவேண்டுமே.. ‘சேச்சே ரொம்ப புகழாதீங்க.’ என்ற கமெண்ட் வேறு..
பலன்? என்னுடைய இருபது மணிநேர பேருந்து பயணம் தேவைப்படவில்லை.. அத்துடன் வேறெந்த பிரச்சினையுமில்லாமல் அடுத்த வாரத்திலேயே Furnsihing sanction என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து தபாலில் வந்து சேர்ந்தது!
அப்பாடா. இன்னைக்கி பதிவை சஸ்பென்ஸ் ஒன்னுமில்லாம சந்தோஷமா முடிச்சிட்டேன்!!
தொடரும்..
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் முடிச்சிரமாட்டேன், பயப்படாதீங்க.
வாங்க சத்தீஷ்,
பதிலளிநீக்குThis seems to be a
generalised statement.//
I agree. Don't take it seriously.
சஸ்பென்ஸ் இல்லாம முடிச்சிட்டேன்னு சொல்றதுலதான் சஸ்பென்ஸ் இருக்கும் போல இருக்கே.......அடடா! எப்படியோ பிரச்சனை தீந்தா சரி. இன்னும் அந்த எடத்துக்குப் போகலையே...அதுக்குள்ள முடியாது. இன்னும் சிந்துபாத்து லைலாவப் பாத்து...லைலாவக் கொரங்கு மனிதன் தூக்கிக்கிட்டுப் போயி......இது ஓடும் இன்னும் ரொம்ப நாளைக்கி :-)
பதிலளிநீக்குநல்லவேளை. பொழுது விடிஞ்சாத் தைப் பொங்கல் பண்டிகை. என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு ராத்திரியெல்லாம் கவலைப்படவைக்காம இந்தப் பகுதி நல்லா முடிஞ்சது.
பதிலளிநீக்குவழக்கம்போல முதல் 'சூரியன்' எனக்குத்தான்!
அனைவருக்கும் இனிமையான பொங்கல் வாழ்த்துக்கள்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குலைலாவப் பாத்து...லைலாவக் தூக்கிக்கிட்டுப் போயி......//
எந்த லைலா ராகவன்? இந்த கண்ட நாள் முதல் லைலாவாருந்தா பரவால்லை..
வாங்க துளசி,
பதிலளிநீக்குநல்லவேளை. பொழுது விடிஞ்சாத் தைப் பொங்கல் பண்டிகை. என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு ராத்திரியெல்லாம் கவலைப்படவைக்காம இந்தப் பகுதி நல்லா முடிஞ்சது.//
ஹை! இதுல இப்படி ஒரு பின்னணி இருக்கா.. சரி, சரி.
பொங்கலோ பொங்கல்.. ஜமாய்ங்க.
//இதுதான் இந்த டெக்னிக்கல் அதிகாரிகளின் பிரச்சினை.. இவர்களால் வங்கிக்கு ஒரு அஞ்சு பைசா லாபம் சம்பாதித்து கொடுக்க துப்பிருக்காது. இப்படி எதையாவது சொல்லி குட்டையைக் குழப்புவது இவர்களுக்கு கைவந்த கலை..//
பதிலளிநீக்குNOW YOU ARE ALSO A TECHNICAL MAN..
வாங்க முத்து,
பதிலளிநீக்குஅடடா, ஒரு சின்ன Statement..
I am taking it back..
எங்க சேர்மன்கூட அடிக்கடி ஜோசஃப் நீங்களும் புரியாத பாஷையில பேசி குழப்பாதீங்க.. என்பார்..
ஆக டெக்னிக்கல் ஆஃபீசர் குழப்பவாதிங்கன்னு சொல்றதுல தப்பில்ல.. நீங்க சொன்னா மாதிரி நானும் டெக்னிக்கல் ஆஃபீசராயிட்டேன் போலருக்கு..
Hello TBR
பதிலளிநீக்குWish you a very happy Pongal festival.
Murali