நீங்க ரெண்டு நாள் கழிச்சி ஃபோன் பண்ணுங்க. அதுக்குள்ள ஏதாச்சும் வந்தா நான் இந்த கார்ட்லருக்கற நம்பருக்கு ஃபோன் பண்றேன்.’ என்றார்.
அவர் கூறியதுபோலவே அடுத்த இரண்டு நாட்களில் தஞ்சாவூர் பாலஸ் சாலையில் ஒரு இடம் இருப்பதாகவும் அதன் உரிமையாளர் ஒரு கத்தோலிக்க கிறீஸ்துவர் என்றும் தொலைப்பேசியில் கூறினார். நான் அவருக்கு நன்றி கூறிவிட்டு உடனே சென்று பார்ப்பதாக கூறினேன்.
பாதிரியார் கூறிய அரண்மனை சாலையில் ஏற்கனவே இரண்டு மூன்று இடங்களைப் பார்த்திருக்கிறேன். அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் எல்லாமே மிகவும் பழையதாக இருந்ததால் அவற்றை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இருப்பினும் பாதிரியாருக்கு நன்றி கூறிவிட்டு அவர் கொடுத்த விலாசத்தில் போய் பார்ப்பதாய் கூறினேன்.
இதற்கிடையில், அதாவது நான் பாதிரியாரைப் பார்த்துவிட்டு வந்ததற்கு அடுத்த நாள், என்னுடைய சென்னை மத்திய கிளை வாடிக்கையாளர் ஒருவர் என்னுடைய தஞ்சை தொலைப்பேசியின் எண்ணுக்கு தொலைப் பேசி செய்தார். அவர் ராஜஸ்தானைச் சார்ந்தவர்.
சென்னையில் பெருந் தொழிலதிபர்களுக்கு கடன் பத்திரங்களின் மேல் (Hundies) வட்டிக்கு பணம் கொடுப்பது அவருடைய முக்கிய தொழில். அதில்லாமல் சென்னை ரட்டன் பஜாரில் ஒரு பெரிய ஜவுளிக் கடையும் இருந்தது.
துவக்க விசாரணைகளுக்குப் பிறகு, ‘ஜோசப் சார், நம்ம தோஸ்த்து ஒருத்தர் தஞ்சாவூர்ல நம்ம பிஜினஸ் பண்ற அதே லைன்ல இருக்கார் சார். அவரு ரொம்ப நாளா தஞ்சாவூர்ல இருக்கார். ரோட்டரி க்ளப்ல வேற பெரிய ஆளா இருக்கறதுனால ஒங்க பிஜினஸ்ஸ¤க்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுவார். நானும் அவராண்ட ஒங்கல பத்தி சொல்லியிருக்கேன். இதான் அவர் டெலிபோன் நம்பர். போன் பண்ணிட்டு போயி பாருங்க.’ என்று கூறினார். (அவருடைய தமிழில் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கும். கண்டுக்காதீங்க.)
நான் ‘சரி, சார்.’ என்று கூறிவிட்டு அவர் கொடுத்த தொலைப்பேசி எண்ணை உடனே சுழற்றினேன்.
எதிர் முனையில் எடுத்தவர் இலக்கணப் பிழையில்லாத சுத்த தஞ்சைத் தமிழில் பேசவே தவறான எண்ணுக்கு அழைத்துவிட்டோமோ என்று ஒரு நொடி தயங்கினேன். பிறகு தயக்கத்துடன் என் சென்னை நண்பர் கூறியதன்பேரில் கூப்பிடுகிறேன் என்றேன்.
எதிர் மு¨னையில் தஞ்சை பாணியில் ஒரு உரத்த சிரிப்பு. ‘வணக்கம் ஜோசப் சார். நம்ம தோஸ்த்தோட தோஸ்த்து நீங்க. உங்களப் பத்தி அவர் நிறைய சொல்லியிருக்கார் சார். ஃபோன்ல பேச வேணாம். நம்ம ஆஃபீசுக்கு ஒரு பதினோரு மணிக்கு வந்திருங்க. டீடெய்லா பேசலாம்.’ என்று அவருடைய விலாசத்தைக் கூறினார்.
நான் சரியென்று சம்மதித்து விட்டு அவருடைய விலாசத்தைத் தேடிப் பிடித்து சென்றேன். அதுவும் தெற்கு மத்திய சாலையில்தான் இருந்தது. நான் அதற்கு முன் பார்த்துப் பழகிப்போன அதே பழைய காலத்து வீடு. கீழ்த்தளம், முதல் தளம் என்று இரண்டு தளங்களைக் கொண்டிருந்தது.
நுழை வாசலுக்கு இருபுறமும் நான்கு பிரம்மாண்ட மரத்தூண்கள் கூரை¨யை தாங்கிக்கொண்டிருந்தன. அதையொட்டி இருபுறமும் நீள் வடிவத்தில் திண்ணைகள். இரண்டிலும் தரை முழுவதும் அமர்வதற்கு, வெள்ளை வெளேர் துணியால் மூடப்பட்ட மெல்லிய மெத்தைகள். வசதியாக சாய்ந்துக்கொள்ள சுவரையொட்டி சதுர வடிவத்திலான சிறு, சிறு, தலையணகள். சாலையிலிருந்து வரும் தூசு படிந்து மெத்தகைள் அழுக்காகாமல் இருக்க திண்ணையின் முன்புறம் வெட்டி வேரால் பின்னப்பட்ட திரைகள், தண்ணீரால் நனைக்கப்பட்டு வெய்யிலுக்கு இதமாகவும் இருந்தன. இயற்கையான குளிர்பதன ஏற்பாடு.
முன்கதவில் ஒலியெழுப்ப அழகிய வேலைப்பாடுகளுடனான ஒரு வளையம். நான் சரியாக பதினோரு மணிக்கு வீட்டை அடைந்து ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு இறங்கவும் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் கதவைத்திறந்துக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
வெள்ளை வெளேர் வடக்கத்தி சேட்மார்கள் சீருடை ஜிப்பா. இடது கையில் தங்க பட்டையுடன் கூடிய விலையுயர்ந்த கைக்கடிகாரம்.லை¨யில் சிறிய நேரு குப்பாய். வெற்றிலை சாற்றை மென்றுக் கொண்டு வாயெல்லாம் சிரிப்பாக என்னை நோக்கி கையை நீட்டியவாறே படிகளில் இறங்கி வந்தார். (தஞ்சையில் இதுபோன்ற பல வீடுகளும் சாலைகளில் இருந்து குறைந்த பட்சம் மூன்றடியாவது உயர்ந்திருந்தன. திண்ணை அமைக்க வசதியாக இருக்கும் என்பதால் இருக்கலாம்.ஆகவே வீட்டுக்கு ஏறிச்செல்ல மூன்று படிகள் எல்லா வீட்டிலும் இருந்தன. மூன்று படிகள் மட்டுமே வைப்பது வாஸ்த்து சாஸ்திரமாகவும் இருக்கலாம்!)
‘ஜோசப் சார்தான்னு நினைக்கிறேன்.’ என்றவாறு என் கைகளை அவராகவே இழுத்துப் பிடித்து குலுக்கியவாறே உரக்க சிரித்தார்.
நான் சாதாரணமாகவே சங்கோஜி. யாருடனும் சட்டென்று பேசிவிடமாட்டேன்.ஆனால் அவருடைய (இவரையும் சேட்டென்றே அழைக்கலாம்) Infectious சிரிப்பு என் உதடுகளிலும் சிரிப்பை வரவைத்தது. 'ஆமாம் சார். அதெப்படி சார் கரெக்டா நாந்தான்னு கண்டுபிடிச்சீங்க?’ என்றேன் ஆச்சரியத்துடன்.
அதற்கும் அவர் உரக்க சிரித்தார். ‘சார் நம்ம தோஸ்த்து இருக்கானே அவன் சினிமாகாரங்களுக்குத்தான் ஃபைனான்ஸ் பண்றான்னு உங்களுக்கு தெரியுமே. அவங்களோட சேர்ந்து இவனுக்கும் கற்பனை வளம் ஜாஸ்தி. இப்ப பாருங்களேன். உங்க உயரம், நிறம், ஏன் ஹேர்ஸ்டைல், கண்ணாடின்னு ஒன்னு விடாம அப்படியே உங்கள என் கண் முன்னால கொண்டு வந்துட்டான். அத்தோட நீங்க எப்பவுமே டைம்ல கரெக்டா இருப்பீங்க. பத்து மணின்னு சொன்னா டாண்னு வந்தி நிப்பீங்கன்னு சொன்னார். எனக்கு என் தோஸ்த்தப் பத்தி நல்லா தெரியும் சார்.ஆளுங்கள பாத்தவுடனே இவர் இப்படிப் பட்டவர்னு கரெக்டா சொல்றதுல அவனுக்கு திறமை ரொம்ப அதிகம். இருந்தாலும் ஒரு டெஸ்ட் பண்ணி பாத்துருவோமேன்னுட்டு கரெக்டா பதினோரு மணிக்கு வெளியே வந்தேன். அவர் சொன்னா மாதிரியே நீங்களும் வந்து நிக்கறீங்க.’ எப்படி என் கணிப்பு என்பதுபோல் பெருமையுடன் என்னைப் பார்த்துவிட்டு உரக்க சிரித்தவாறே என் வலது கையை உரிமையுடன் பற்றிக்கொண்டு படியேறி உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார்.
சாலையிலிருந்து பார்ப்பதற்கு அதரப்பழையாதாய் தெரிந்த இந்த வீடா என்று பிரமிக்கும் வகையில் இருந்தது வீட்டின் பிரதான ஹாலும் அதனைச் சுற்றியிருந்த அறைகளும். பிரமித்துப் போய் பார்த்தேன். இவருடைய நண்பரின் சென்னை அலுவலகத்தைப் போலவே இருந்தது.
என் முகத்தில் தெரிந்த பிரமிப்பைப் ஒரு விஷமப் புன்னகையுடன் ரசித்தவாறு என்னைப் பார்த்த சேட்டை பார்த்தேன். உரத்த சிரிப்புடன், ‘என்ன ஜோசப் பிரமிச்சிப் போய் நிக்கறீங்க? நம்ம தோஸ்த்தோட ஆஃபீச டிசைன் பண்ண அதே எஞ்சினீயர்தான் நம்ம ஆஃபீசையும் டிசைன் பண்ணி கூடவே மதறாசிலிருந்து ஆளுங்களையும் கூட்டிக்கிட்டு வந்து இங்கேயே கேம்ப் பண்ணி முடிச்சி கொடுத்தார். தஞ்சாவூர்லயே நம்ம லக்ஷ்மி சீவல் ஆஃபீசை விட்டா நம்ம ஆஃபீசை பீட் பண்ண வேற ஆஃபீசே கிடையாது சார். நம்ம ஆஃபீசை பார்த்துட்டு நம்ம லக்ஷ்மி சீவல் முதலாளியும் இவரை வச்சே டிசைன்ல கொஞ்சம் இப்படி அப்படி மாத்தி செஞ்சார். அவரு ஒலகம் முழுசும் சுத்துனவர். அவரே முதல்ல நம்ம ஆஃபீச பாத்ததும் உங்கள மாதிரியே பிரமிச்சிப் போயிட்டார்.’ என தன் பிரதாபங்களை அவிழ்த்து விட்டார்.
நானும் சென்னையில் பணிபுரிந்த காலத்தில் பல பெரிய தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் வீட்டிற்கு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறேன். ஆகவே அவர் கூறியது சற்றே தற்பெருமையென்று முதலில் தோன்றினாலும் அவர் கூறியதில் இருந்த உண்மையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அத்தனை அழகாக இருந்தது அவருடைய அலுவலகம். இக்கால கணினியை மட்டும் பொறுத்திவிட்டால் போதும். இப்போதுள்ள நிலம¨க்கு ஏற்ப வந்துவிடும் என்று இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
‘சார் தஞ்சாவூர்லருக்கற எல்லா பெரிய முதலாளிங்களுக்கும் நாந்தான் ஃபைனான்ஸ். அதே ஹ¤ண்டி பிசினஸ்தான். எங்கப்பா முதல்ல திருச்சிக்குத்தான் நம்ம ஊர்லருந்து பிழைக்கறதுக்கு வந்தார். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சியிலதான். நாங்க அண்ணன் தம்பிங்க அஞ்சிபேர் சார். எல்லாரும் இதே பிசினஸ்தான். ஒருத்தருக்கொருத்தர் போட்டியா இருக்க வேணாமேன்னுட்டு நான் இந்த ஊருக்கு வந்துட்டேன். முப்பத்தஞ்சி வருஷமாவுது. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டே பசங்க. திருச்சியில என் தம்பி வீட்ல தங்கியிருந்து காலேஜ் படிக்கறான். பொண்ணு கல்யாணத்துக்கு ரெடியா நிக்குது. அருளானந்தர்லதான் இருக்குது நம்ம வீடு. அதுவும் இந்த எஞ்சினீயர்தான் டிசைன் பண்ணி அருமையா கட்டுக் குடுத்தார். ஒரு நாள் கூட்டிக்கிட்டு போறேன். அதையும் பார்த்துட்டு சொல்லுங்க.’ பார்த்த ஒரு நிமிடத்திலேயே ஃபுல் ஸ்டாப், கமா என்றில்லாமல் மூச்சு விடாமல் பேசியவரைப் பிரமிப்புடன் பார்த்தேன்.
என் பார்வையைப் புரிந்துக்கொண்டு மீண்டும் உரக்க சிரித்தார். ‘என்னடா இவன் மூச்சு விடாமல் பேசறானேன்னு பாக்கறீங்களா? அதான்சார் நம்ம தொழிலுக்கு முதல்.. பணக் கஷ்டத்தோட நம்ம கிட்ட ஃபைனான்சுக்கு வர்ற முதலாளிங்கள முதல்ல பேசிப் பேசியே நல்ல மூடுக்கு கொண்டுவந்துருவேன். அப்புறம் நாம நீட்ற பத்திரத்துல கண்ண மூடிக்கிட்டு கையெழுத்த போட்டுட்டு பணத்த வாங்கிக்கிட்டு போயிருவாங்க. நிதானமாயிருந்தா ‘என்னா சேட், வட்டி இவ்வளவு போடுறீங்க, கொஞ்சம் குறைக்கப் படாதா’ அப்படீம்பாங்க.’
அடப்பாவிகளா என்று தோன்றியது எனக்கு? அவர் கூறியது உண்மைதான். இதுபோன்ற கடன் பத்திரங்களின் மேல் கடன் வழங்குபவர்கள் இருபதிலிருந்து முப்பத சதிவிகிதம் வரை வட்டி வசூலிப்பார்கள். வங்கிகளைப் போன்று கடன் தொகை எத்தனை ஆயிரங்களானாலும், சில சமயங்களில் லட்சத்திற்கு மேலேயும் இருக்கும், கடன் பத்திரங்களைத் தவிர வேறெந்த சொத்து ஈடும் இவர்கள் கேட்க மாட்டார்கள். கடனும் தேவைப் படும் சமயத்தில் கிடைத்துவிடுவதால் பெரும் வியாபாரம் மற்றும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது ஏற்படும் குறுகியகால பணமுடைக்கு இவரிடம்தான் தஞ்சம் புகுவார்கள். அந்நேரத்தில் வட்டி விகிதம் எல்லாம் அவர்கள் கண்களுக்கு தெரியாது. அது போன்ற விஷயங்களிலிருந்து அவர்களுடைய திசை திருப்பவே இந்த அதிகப்படியான, சாமர்த்தியமான பேச்சு..
சரி விஷயத்துக்கு வருவோம்.
பேச்சுக்கிடையில் நான் தஞ்சை வந்து மூன்று மாதங்களாகியும் இன்னும் வங்கிக்கு இடம் கிடைக்காத அவல நிலையை சொன்னேன். நாயக்கரைப் பத்தியும் கூறினேன். அவர் ஒன்றும் பதில் பேசாமல் சிறிது நேரம் என்னையே பார்த்தார். அவருடைய பார்வையில் கேலி கலந்திருந்ததுபோல் தோன்றியது.
‘யார் சார் அந்த ரைஸ் புரோக்கரா?’ என்ற அவர் கேள்வியில் இருந்த கேலி எனக்கு நன்றாய் புரிந்தது.
'ஆமாம் சார்.’
அவர் உரக்க சிரித்தார். ‘சார் அவனெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு அவன் பின்னால சுத்துனீங்களா? உங்க ரேஞ்ச் என்ன அவன் தொழில் என்ன சார்? அவனும் எங்க ரோட்டரி க்ளப்லாதான் இருக்கான். எல்லாம் நம்ம லக்ஷ்மி சீவல் செட்டியார் வேலை.. நம்மள மாதிரி பெரிய மனுசங்க க்ளப்ல போயி நாயக்கர் மாதிரியான தேர்ட் ரேட் புரோக்கர்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு.. அந்தாளு பேசறத சில நேரத்துல கேட்டா அப்படியே களுத்த பிடிச்சி வெளிய தள்ளிரலாமான்னு தோணும். என்ன பண்றது? செட்டியார் இந்த ஊர்ல நம்பர் ஒன் பிசினஸ் மேன். அவர பகைச்சிக்க முடியாதே.. அதான் பொறுத்துக்கிட்டு போவேண்டியிருக்கு..’ என்றவர் அடுத்த நொடியே சகஜ நிலைக்கு வந்து, ‘சார்.. இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது... நம்ம கஸ்டமர் ஒருத்தருக்கு ஒரு இடம் இருக்கு.. இதே ரோட்லத்தான். இப்பவே போய் பாக்கலாமா சார்?’ என்றார்.
‘போலாம் சார். நான் ரெடி.’ என்றேன்.
அவர் உடனே தன் அருகிலிருந்த ஒரு சிறு புத்தகத்தைப் புரட்டி அவருடைய நண்பருக்கு தொலைப்பேசினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ‘மன்னிச்சிக்குங்க சார். அவர் நாளைக்கு காலைலதான் மெட்றாஸ்லருந்து வராராம். நீங்க நாளைக்கு இதே நேரத்துக்கு வந்துருங்க, பேசி முடிச்சிரலாம்.’ என்றார்.
நானும் சரி என்று விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.
அடுத்த நாள் புறப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய வட்டடர மேலாளரிடமிருந்து தொலைப்பேசி வந்தது ‘நீங்க தஞ்சாவூர் வந்து மூனு மாசம் ஆகியும் இன்னும் இடம் பிடிக்க முடியலேன்னு நம்ம ஹெட் ஆஃபீஸ்ல ஒரு மாதிரியா பேசிக்காறாங்க டிபிஆர். இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள நீங்க இடம் பிடிக்கலேன்னா.. ஒருவேளை உங்கள அங்க இருந்தும் மாத்தினாலும் மாத்திருவாங்க. சொல்லிட்டேன்.’ என்ற மிரட்டலுடன் இணைப்பைத் துண்டித்தபோது பதினைந்து நிமிடம் வீணாகியிருந்தது.
காலை நேரத்தில் தஞ்சை செல்லும் சாலையில் போக்கு வரத்து நெரிசல் சற்றே அதிகமாக இருப்பது வழக்கம். சாதாரணமாக இருபது நிமிடம் எடுக்கும் பயண தூரம் காலை அலுவலக நேரத்தில் முப்பது, முப்பத்தைந்து நிமிடம் வரை எடுக்கும். மணியைப் பார்த்தேன். இன்னும் அரை மணி நேரத்தில் சேட் அலுவலகத்திற்கு சென்றடைந்து என்னுடைய பங்க்சுவாலிட்டியை காப்பாற்றிக்கொள்ளாவிட்டால் என் பேர் ரிப்பேராகிவிடும் என்ற எண்ணத்துடன் வண்டியை வழக்கத்திற்கும் விட வேகமாய் செலுத்தினேன்.
ஆனால் நான் சென்றடைந்தது சேட் அலுவலகத்திற்கல்ல. தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு!
தொடரும்.
அவசரமாப் போய் எதாவது ஆக்ஸிடெண்டுலே மாட்டிக்கிட்டீங்களா?
பதிலளிநீக்குஅப்புறம் என்னாச்சு?
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தஞ்சாவூரு போயிருந்தேன். வெள்ளமெல்லாம் வர்ரதுக்கு முன்னாடி. நீங்க சொல்ற அரண்மனை ரோடு, கவர்மெண்ட் ஆஸ்பித்திரி எல்லாம் கண்ணுல நெனவுக்கு வருது.
பதிலளிநீக்குதஞ்சாவூருல வாங்குன பித்தளை யாழிதான் வீட்டு வாசக் கதவுல நல்லா உக்காந்திருக்கு இப்ப. பூம்புகார்ல வாங்குனது.
அது சரி. நீங்க ஏன் ஆஸ்பித்திரிக்குப் போனீங்க? அந்த நாயக்கருக்கும் செட்டியாருக்கும் என்ன ஆச்சு?
// தெற்கு மத்திய சாலையில்தான் //
பதிலளிநீக்குஒரு சின்ன திருத்தம். தெற்கு ராஜ வீதி இல்லேன்னா தெற்கு வீதி. மத்தியில மத்திய இருந்தா படிக்கறதுக்கு என்னவோ போல இருக்கு.
//செட்டியார் இந்த ஊர்ல நம்பர் ஒன் பிசினஸ் மேன். அவர பகைச்சிக்க முடியாதே//
அதானே.. பாங்க் தொறக்க வந்துட்டு சுப்ரமண்யம் செட்டியார் பத்தி சொல்லாட்டா எப்படி? அவரோட ஸ்கூல்ல தான் படிச்சேன். அவர் இறந்ததுக்கப்புறம் ஒரே குழப்படி குழாயடிதான்.
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குஇன்னைக்கி முழுசும் மீட்டிங் சார். ஹவர்ஸ் ஆர் வேஸ்ட்டட் மினிட்ஸ் ஆர் நோட்டட்னு கேள்விப்பட்டிருக்கீங்கள்லெ அதே போல்தான். காலைல ஒன்பது மனியிலருந்து ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் மீட்டிங். மினிட்ஸ் எழுதுனப்போ ரெண்டு மூனு பேஜ்தான். என்ன பண்றது?
புது பிரச்சினை என்ன? வண்டியில வேகமா போனா என்ன நடக்கும்? அதான் நடந்தது.
ஆமாங்க துளசி,
பதிலளிநீக்குசென்னையில போற ஸ்பீடுல தஞ்சாவூர்ல போனா? ஆக்சிடெண்ட்தான். நாளைக்கு விரிவா எழுதறேன்.
வாங்க ராகவன்.
பதிலளிநீக்குசெட்டியாருக்கும், நாயக்கருக்கும் ஒன்னும் ஆகலை. ஆனது எனக்குதான். வேகமா போனேன்ல நேரா போயி வேறொரு வண்டியில முட்டி.. ஏன் கேக்கறீங்க?
வாங்க ராமனாதன்,
பதிலளிநீக்குமத்தியில மத்திய இருந்தா படிக்கறதுக்கு என்னவோ போல இருக்கு.//
தப்புதாங்க. லிட்டரல் மொழிபெயர்ப்பு எப்பவுமே தகராற்லதான் முடியும். தெற்கு வீதிதான் கரெக்ட்.
இனிமே அப்படியே எழுதறேன்.
சுப்பிரமணியம் செட்டியார் எனக்கு நல்ல பரிச்சயமானவர். ரொம்ப எளிமையானவர். எனக்கு என்னோட பிசினஸ் டெவலப் பண்றதுக்கு அவர் ரொம்ப உதவியாயிருந்தார். அவர் இறந்தத கேட்டப்போ ரொம்ப விசனமாயிருந்திச்சி.