சாதாரணமாக, ஒரு நிறுவனத்தில் எத்தனையோ பேர் பணிபுரிந்தாலும் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மத்தியில் ஒருசிலர் மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் பிரபலமாக இருப்பதுண்டு. அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலர் தங்களுடைய திறமையால் தங்களுடைய உயர் அதிகாரிகளை மட்டுமல்லாமல் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களையும் கவர்ந்திருப்பர். சிலர் தங்களுடைய பதவியின் காரணமாக (உதாரணம்: வங்கி முதல்வர் மற்றும் உயர் பதவியை வகிப்பவர்கள். தொழிற்சங்க தலைவர்களும் இதில் அடக்கம்) பிரபலமாயிருப்பர்.
வேறு சிலர் தங்களுடைய தனித்திறமைகளினால் அல்லது சேவை மனப்பான்மையால் பணியாளர் மத்தியில் பிரபலமடைவதுண்டு. என்னுடைய நிறுவனத்திலும் அப்படி சிலபேர் இருந்தனர்.
குறிப்பாக எங்களுடைய சென்னை கிளைகளில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த ஒருவர் ஏறத்தாழ வங்கி முழுவதும் பிரபலமாக இருந்தார். அவர் கடை நிலை அதிகாரியாக பதவி உயர்வைத் துறந்து பல ஆண்டுகள் சென்னையிலேயே பணியாற்றியவர் என்பதால் அவர் ஒரு நடமாடும் தகவல் மையமாக இருந்தார் எனலாம்.
குறிப்பாக மாற்றலாகி வருபவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுப்பது, அவர்களுடைய பிள்ளைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் இடம் பிடித்து கொடுப்பது. அவருக்கு தெரியாத பள்ளி, கல்லூரியே சென்னையிலில்லை என்னும் அளவுக்கு பில்டப் கொடுப்பார். அவருடைய பல முயற்சிகள் தோல்வியில் முடிந்திருந்தாலும் வெற்றியளிக்கும் முயற்சிகளை வைத்தே வேறு மாநிலங்களிலிருந்து மாற்றலாகி வருபவர்கள் சென்னை வந்து சேருவதற்கு முன்பே அவரைத்தான் முதலில் தொடர்பு கொள்வார்கள்.
அவரைப் போலவே வேறொருவர் இருந்தார். முன்னவர் பள்ளி கல்லூரிகளில் இடம் பிடித்தால் இவர் சென்னையிலுள்ள மருத்துவ மனைகளில் குறிப்பாக இதய அறுவை சிகிச்சைக்கு வேண்டி வருபவர்களுக்கு எந்த மருத்துவமனையில் எந்த மாதிரியான சிகிச்சை கிடைக்கும், எந்த மருத்துவமனை எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றது என்பதுபோன்ற விவரங்களையெல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பார். அதுபோலவே ரத்த வங்கிகளின் விவரமும் இவரிடம் இருக்கும். அவருடைய சேவை எங்களுடைய வங்கியில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்லாமல் சென்னையிலிருந்த அத்தனை வங்கி ஊழியர்களுக்கும் கிடைக்கும். அவருடைய சேவையை முன்னிட்டு என்னுடைய வட்டார மேலாளரும் அவரை தேவைப்பட்டால் அலுவலக நேரத்திலும் கூட வெளியில் சென்றுவர அனுமதிப்பார். அவருடைய சேவையை பாராட்டி சென்னை மத்திய ரோட்டரி சங்கமும் அவரை கவுரவித்திருக்கிறது!
என்னுடைய சிப்பந்தியும் ஒருவகையில் பிரபலமானவர்தான். அவருடைய 'வெளி வேலை' திறமை அவர் பணியாற்றிய என்னுடைய கிளை மட்டுமல்லாமல் சென்னையிலிருந்த எங்களுடைய அனைத்து கிளையிலும் பரவியிருந்தது. இதற்கு என்னுடைய முந்தைய மேலாளரும் ஒருவகையில் காரணமாயிருந்தால் என்றால் மிகையாகாது.
சாதாரணமாக சென்னையில் இயங்கிவரும் கிளைகளுடைய மேலாளர்கள் அனைவரும் மாதம் ஒருமுறை எங்களுடைய வட்டார அலுவலகத்தில் கூடுவதுண்டு. முந்தைய மாதத்தில் அவர்கள் சாதித்தவை, சாதிக்காமல் கோட்டை விட்டவை என அனைத்தையும் அலசி ஆராய்ந்து சாதித்தவர்களுக்கு பாராட்டும் கோட்டை விட்டவர்களுக்கு தேவைப்பட்டால் எச்சரிக்கையும் அளிக்கப்படும். மற்றவர்களை விடவும் ஏதாவது ஒரு கிளை மேலாளர் அதிகம் சாதித்திருந்தால் அவரால் மட்டும் எப்படி அதை சாதிக்க முடிந்ததென மற்றவர்களுக்கு விளக்குவது வழக்கம். என்னுடைய முந்தைய மேலாளர் அப்போது சென்னையில் மட்டுமல்லாமல் என்னுடைய வட்டாரத்திலேயே அதிக சாதனை புரிந்தவர் என பெயரெடுத்திருந்ததாலும் என்னுடைய வட்டார மேலாளருடைய மதிப்பைப் பெற்றிருந்தவர் என்பதாலும் அவருடைய சாதனைகளைப் பற்றி எடுத்துரைப்பது ஒரு மாதாந்தர நிகழ்வாக இருந்திருக்கிறது.
அவருடைய வாடிக்கையாளர்கள் எல்லோருமே வங்கிக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ஆகவே அவர்களுடைய பூர்வீகத்தைப் பற்றி அலசி ஆராய தனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் என என்னுடைய சிப்பந்தியை அறிமுகப்படுத்தியிருப்பார் போலிருக்கிறது. அன்றிலிருந்து அவர் என்னுடைய கிளைக்கு மட்டுமல்லாமல் சென்னையில் இயங்கி வந்த அனைத்து கிளைகளுக்கும் 'தகவல் சேமிப்பு திலக'மாக திகழ்ந்திருக்கிறார்!
அதுதான் அவர் பிரபலமாகியிருந்ததன் ரகசியம். அத்துடன் அவர் சென்னைக் கிளைகளில் பணியாற்றிய அனைத்து சிப்பந்திகளையும் விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர். ஆகவே அவர் ஒரு செல்ஃ மேட் தலைவராகவும் திகழ்ந்திருக்கிறார். சாதாரணமாக இந்த வெளி வேலைகளுக்கு சிப்பந்திகளுக்கு தனியாக டி.ஏ கிடைப்பது வழக்கம். ஆட்டோவில் போகிறேன் என்று அதற்கு வேண்டிய டீ.ஏவை பெற்றுக்கொண்டு பஸ்சிலோ வாடகை சைக்கிளிலோ சென்று வந்தால் தினசரி எப்படியும் ரூ.20லிருந்து ரூ.25 வரை கிடைக்கும். என்னுடைய சிப்பந்தியே எல்லா கிளைகளுடைய வெளிவேலகளையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருந்ததால் மற்ற கிளை சிப்பந்திகளுக்கு மேல் வருமானம் எதுவும் இல்லாமல் இவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்தாலும் தலைவரை எப்படி தட்டிக் கேட்பதென தெரியாமல் தவித்து போயிருந்தனர்.
என்னுடைய தலைமைக் குமாஸ்தா வங்கியின் பெரும்பான்மை தொழிற்சங்கத்தின் தலைவர் என்றால் என்னுடைய சிப்பந்தி மற்றொரு தொழிற்சங்கத்தின் சென்னை 'ரெப்பாக' இருந்தார். அதுவும் சிப்பந்திகளின் பிரதிநிதியாக! பிறகு கேட்க வேண்டுமா? ஒவ்வொரு கிளையும் சரிவர இயங்குவதற்கு மேலாளருக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானவர்கள் சிப்பந்திகள்தான் என்பதுதான் நமக்கெல்லோருக்கும் தெரியுமே.. வங்கிகளென்ன அரசு இலாக்காக்களிலும் அப்படித்தானே... சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கமாட்டார்ங்கற பழமொழியே அரசு அலுவலக சிப்பந்திகளை வைத்துத்தான் வந்தது என்றாலும் மிகையாகாதே!
என்னுடைய சிப்பந்திக்கு வேறொரு சில்லறை வேலையும் இருந்தது. சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலிருந்து வருபவர்கள் 'குடிமகன்களாக' இருப்பது நமக்கு தெரிந்ததுதானே! அவர்களுள் சிலருக்கு தினமும் வேண்டும். இல்லையென்றால் உறக்கம் வராது. தினமும் வேண்டுமென்றால் கட்டுபடியாகாதே. அதற்கும் நம்மவரிடம் ஒருவழி இருந்தது. அதுதான் 'மிலிட்டரி கோட்டா.' கிடைக்குமிடம்? சென்னை ஆவடி இராணுவ கேண்டீன்தான். நம்மவருக்குத்தான் சென்னையில் பழக்கமில்லாத ஆட்களே இல்லையே.. அவர்கள் மூலமாக கேண்டீனிலிருந்து மொத்தமாக டெலிவரி எடுத்து சில்லறையாக டெலிவரி கொடுப்பார். இதன் மூலம் கிடைக்கும் மேல் வருமானத்துடன் நடக்கும் இரவு பார்ட்டிகளில் கொஞ்சம் ஊற்றிக்கொள்ளவும் கிடைக்கும்.
நான் கிளைக்கு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே என்னுடைய சிப்பந்தி அடிக்கடி வெளியில் செல்வதும் பல மணி நேரங்கள் கழித்து திரும்பி வருவதையும் கவனித்த நான் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து என்ன விஷயம்? அவர் எங்க போறார்? என்று விசாரித்தபோதுதான் மேலே எழுதியுள்ள அனைத்தும் தெரியவந்தது.
அவரை அத்தனை எளிதாக கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்திருந்தேன். ஏனெனில் அவர் மற்ற கிளை மேலாளர்களிடத்தில் மட்டுமல்லாமல் என்னுடைய வட்டார அலுவலகத்திலும் பிரபலமடைந்திருந்தார். என்னுடைய வட்டார மேலாருடைய சொந்த தேவைகளுக்கும் அவரை பயன்படுத்தி வந்தார் என்பதும் தெரியவந்தது. 'இவர் நம்ம ஜோனல் மேனேஜரோட பேர யூஸ் பண்ணியே எங்கள மிரட்டுவார் சார். சில நாட்கள்ல காலையில வெளியில எறங்குனார்னா அடுத்த நாள்தான் வருவார். எங்க போயிருந்தீங்கன்னு கேட்டா வேணும்னா ஜோனல் மேனேஜர கூப்ட்டு கேட்டுக்குங்க சார்னு மிரட்டுவார்.' என்றார் என்னுடைய உதவி மேலாளர்.
என்னுடைய தலைமைக் குமாஸ்தா கொடுத்து வந்த பிரச்சினையை தீர்க்க உதவியவரே ஒரு தனி பிரச்சினையாக மாறிவருவதை உணர்ந்தும் என்ன செய்வதென தெரியாமல் சில மாதங்கள் தடுமாறியதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு ஒரு தீர்வு வந்தது!
ஆனால் அந்த தீர்வு!
நான் முற்றிலும் எதிர்பாராத தீர்வாக அமைந்துபோனது!
தொடரும்..
ஸோ, இந்தப் பிரசினையும் அதிகத்,தலைவலி கொடுக்காம தீர்ந்துடிச்சு?
பதிலளிநீக்குவாங்க ஜி!
பதிலளிநீக்குஇந்தப் பிரசினையும் அதிகத்,தலைவலி கொடுக்காம தீர்ந்துடிச்சு? //
எந்த பிரச்சினையாருந்தாலும் அதுக்கும் ஒரு தீர்வு இருக்கத்தானே செய்யும். ஆனால் இத்தகைய தீர்வு தேவைதானா என்ற அளவுக்கு இருந்தது. நாளை படித்துவிட்டு சொல்லுங்கள்.
அவரையும் ஏதோ செய்து, வேலைய விட்டோ, ஊரைவிட்டோ ஓட செஞ்சாச்சா....
பதிலளிநீக்குஉங்க கிட்ட ஒழுங்கா வேலை செய்யலேன்னா, எப்படியோ சமாளிச்சி, அவங்கள ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போலிருக்கே...
வாங்க கிருஷ்ணா,
பதிலளிநீக்குஅவரையும் ஏதோ செய்து, வேலைய விட்டோ, ஊரைவிட்டோ ஓட செஞ்சாச்சா....
உங்க கிட்ட ஒழுங்கா வேலை செய்யலேன்னா, எப்படியோ சமாளிச்சி, அவங்கள ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போலிருக்கே... //
சேச்சே.. அப்படியெல்லாம் நான் நடந்துகிட்டதே இல்லை.
எனக்கு கீழே பணியாற்றுபவர்களைப் பற்றி மேலிடத்தில் புகார் கூறி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர என்றுமே முயன்றதில்லை..
ஆனால் அதற்காக நடந்தவைகளை மறைத்து மற்றவர்களுடைய தவறுகளுக்கு என்னை பொறுப்பாக்கிக் கொள்ளவும் நான் தயாரல்ல. முடிந்தவரை சரிசெய்ய முயன்றுவிட்டு முடியாத பட்சத்தில் மட்டுமே உளளவற்றை உள்ளபடி, அதாவது எவ்வித மிகைபடுத்தலும் இல்லாமல் மேலிடத்திற்கு தெரிவிப்பது வழக்கம். அது சில சமயங்களில் சிலருக்கு தண்டனையாக முடிந்திருக்கலாம்.
ஆனால் இந்த பிரச்சினைக்கு ஏற்பட்ட தீர்வு யாரும் எதிர்பாராத தீர்வு.
நாளைய பதிவைப் படித்துவிட்டு சொல்லுங்கள்..
என்ன அவரு ஆப்பீசுக்குத் தண்ணியப் போட்டுட்டு வந்துட்டாரா! அது ராசாபாசமாயிருக்குமே! என்னாச்சோ! சரி. அடுத்த பதிவுல படிச்சிக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குஎன்ன அவரு ஆப்பீசுக்குத் தண்ணியப் போட்டுட்டு வந்துட்டாரா!//
என்னுடைய அனுபவத்தில் அத்தகைய சம்பவமும் நடந்துள்ளது. ஆனால் அது மும்பையில்.. அதைக் குறித்து சமயம் வரும்போது கூறுகிறேன்.
பதவி உயர்வுடன் பணியிட மாற்றமா?
பதிலளிநீக்குஅல்லது வேலை நீக்கமா?
பதவி உயர்வுடன் பணியிட மாற்றமா?
பதிலளிநீக்குஅல்லது வேலை நீக்கமா? //
டென்ஷன்.. டென்ஷன்.. தெரிஞ்சிக்கலன்னா தலையே வெடிச்சிரும் போலருக்கு..
வேற வழியில்லை.. காத்திருக்க வேண்டியதுதான்..
காத்திருக்கோம். அதான் தெரிஞ்சுருச்சே, வேற வழி இல்லைன்னு:-)
பதிலளிநீக்குAaha THODARUM potuttatiyah potuttatiyah...
பதிலளிநீக்குwaiting for ur next post saarval
Aanipidunganum
வாங்க துளசி,
பதிலளிநீக்குஅதான் தெரிஞ்சுருச்சே, வேற வழி இல்லைன்னு//
:-(
வாங்க ஆணி,
பதிலளிநீக்குAaha THODARUM potuttatiyah potuttatiyah...//
போட்டுட்டேன்.. போட்டுட்டேன்.