பிபி வேணுவின் முகம் கோபத்தால் சிவக்க எழுந்து நின்றார். 'I submit that this witness be declared as hostile witness and to disregard all her statements.' என்றார் ஆவேசத்துடன்.
'Objection' என்றான் ராஜசேகர் எழுந்து.
எதற்கு என்பதுபோல் ராஜசேகரைப் பார்த்தார் நீதிபதி.
'அரசு தரப்பு வழக்கறிஞர் இவரை தொடர்ந்து விசாரிக்க மறுக்குப் பட்சத்தில் என்னை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.'
அவன் கூறியதை ஒரு சில விநாடிகள் சிந்தித்த நீதிபதி 'permission granted.' என்றார்.
இதை எதிர்பாராத பிபி வேணு. 'I can't permit this your honour.' என்றார் கோபத்துடன்.
'You can only object... I will decide whether or not to permit.' என்று அவரைப் பார்த்து பதிலளித்த நீதிபதி ராஜசேகரைப் பார்த்தார், நீங்கள் விசாரிக்கலாம் என்பதுபோல்.
நீதிபதியிடமிருந்து குட்டுப்பட்ட பிபி தன் இருக்கையில் அமர்ந்து தலை குணிந்து அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளை தன் பார்வையால் துளைத்தார்.
இதை கவனித்தும் கவனியாதவன்போல் சாட்சிக் கூண்டில் அமர்ந்திருந்த ரேணுகாவை அணுகிய ராஜசேகர். 'நீங்க அன்னைக்கி அந்த இடத்துல ஏழு மணிக்கி என் கட்சிக்காரர் கோபால பாக்கலைங்கறது நிஜமா?' என்றான்.
'ஆமா சார்.'
'அப்படியிருக்கறப்போ மிஸ்டர் கோபால் ஃபோன்ல கூப்ட்டு மிரட்டுனார்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் குடுத்தீங்களே, அது எதுக்கு?'
அவனுடைய கேள்வியை எதிர்பாராத ரேணுகா எப்படி பதிலளிப்பது என தெரியாமல் அமர்ந்திருக்க, 'சொல்லுங்க..... எதுக்கு அப்படி செஞ்சி அவரோட ஜாமீன கேன்சல் பண்ண வச்சீங்க?' என்றான் சற்று உரக்க.
' அன்னைக்கி கோபால் ஃபோன் பண்ணி நா ஏழு மணிக்கி அங்க வரவேயில்லையேம்மா என் மேல இருக்கற விரோதத்த மனசுல வச்சிக்கிட்டு எதுக்கும்மா இப்படி ஒரு பொய்ய சொன்னீங்கன்னு சாதாரணமாத்தான் கேட்டார். நா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு நின்னேன். அந்த சமயத்துல எங்க வீட்டுல இருந்த முருகேசந்தான் ரிசீவர புடுங்கி கால டிஸ்கனெக்ட் பண்ணிட்டு உடனே போலீஸுக்கு ஃபோன போட்டு கோபால் என்னெ கூப்ட்டு மிரட்டுனார்னு சொல்லுங்கன்னு த்ரெட்டன் பண்ணான். அதான் வேற வழியில்லாம.........'
மீண்டும் நீதிமன்ற அறையில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அட! இவ்வளவு நடந்துருக்கா என்று மலைத்துப் போய் அமர்ந்திருந்தார் மகாதேவன். தேவையில்லாம நாம கூட அவன் மேல சந்தேகப்பட்டோமே.
அதுவரை தலை குணிந்தவாறு அமர்ந்திருந்த கோபால் நிமிர்ந்து கூண்டில் நின்றிருந்த ரேணுகாவைப் பார்த்தார். அவரையுமறியாமல் ரேணுகாவிற்காக பரிதாபப்பட்டார்..... இந்த பொம்பள மேல கோவப்பட்டு எந்த பிரயோசனமும் இல்லை.... கொலை செஞ்சிருவேன்னு மிரட்டறப்போ நாமளா இருந்தாலும் இப்படித்தான் செஞசிருப்போமோ என்னவோ!
ராஜசேகர் நீதிபதியைப் பார்த்தான். 'In that case I would like to request that my client be released on bail your honour.'
'You may file a fresh bail petition for consideration.' என்றார் நீதிபதி.
ராஜசேகர் வசந்தை பார்க்க அவன் உடனே தயாராக வைத்திருந்த ஜாமீன் மனுவை அவனிடம் நீட்டினான். ராஜசேகர் அதை நீதிபதியின் இருக்கைக்கு கீழ் அமர்ந்திருந்த நீதிமன்ற அலுவலரிடம் சமர்ப்பித்தான். அவர் அதில் நீதிமன்ற ரப்பர் ஸ்டாம்பை அழுத்தி எழுந்து நீதிபதியிடம் நீட்டினார்.
அதை மேலோட்டமாக வாசித்துப் பார்த்த நீதிபதி அதை தன் முன்னால் வைத்துவிட்டு, 'You have any more questions to the witness?' என்றார்.
'நோ யுவர் ஆனர்.' என்ற ராஜசேகர் தன் இருக்கைக்கு திரும்பினான்.
அறையின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த மகாதேவன் இந்தாள் பயங்கரமான ஆளாருப்பார் போலருக்கு என்று தனக்குள் வியந்தார். இப்படியொரு சிச்சுவேஷன் இன்னைக்கி வரும்னு இவருக்கு எப்படி தெரிஞ்சிது? பெய்ல் பெட்டிஷன உடனே எடுத்து நீட்றார்? கோபால் வெளியில வந்துட்டா சீனி உண்மையிலேயே சந்தோஷப்படுவான்.
நீதிபதி பிபி வேணுவை பார்த்தார். 'We have time upto lunch. You want to re-examine this witness?'
'இல்லை யுவர் ஆனர்.' என்று பதிலளித்துவிட்டு நீதிபதியின் உத்தரவை அடுத்து சாட்சிக் கூண்டிலிருந்து இறங்கிச் செல்லும் ரேணுகாவை முறைத்தவாறு 'என்னுடைய அடுத்த சாட்சியாக PW2 குமார் என்பவரை அழைக்கிறேன்.' என்றார் விறைப்புடன்.
நீதிமன்ற சிப்பந்தி குமாரின் பெயரை உரக்க அழைக்க அதுவரை அடுத்த அறையில் வைக்கப்பட்டிருந்த குமார் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து தலை குணிந்தவாறே சாட்சிக் கூண்டில் ஏறி நின்று நீதிபதியைப் பார்த்து கும்பிட்டான்.
'நீங்கதான் மெட்ரொப்போலீட்டன் மஜிஸ்டிரேட் முன்னால வாக்குமூலம் குடுத்த விட்னஸா?' என்று நீதிபதி கேட்க இதை எதிர்பாராத வேணு அதிர்ச்சியுடன் குமாரையும் நீதிபதியையும் மாறி மாறி பார்த்தார். 'I am unable to understand your query your honour!' என்றார்.
ராஜசேகர் வசந்தை திரும்பி பார்க்க அவன் 'சொந்த செலவுல சூன்யம் வச்சா மாதிரி முழிக்கறத பாருங்க.....' என்று கிசுகிசுத்தான். 'டேய் சும்மா இரு... ஜோக்கடிக்க இதுவா நேரம்.' என்று பதிலுக்கு கிசுகிசுத்தான் ராஜசேகர்.
'என்ன சார் ஸ்டேட்மென்ட் குடுத்தான்?' என்றார் கோபால். ராஜசேகர் பதிலளிக்காமல் கைகளை பற்றி அழுத்திவிட்டு அவரைப் பார்த்து பேசாம கவனிங்க என்று சாடை காட்டினான்.
'This witness had a few days back, surrendered to the 12th Metropolitan Judicial Magistrate and made a sworn statement..... It was received by me only yesterday....'
'Can I peruse it your honour?' என்றார் வேணு.
'NO...' என்றார் நீதிபதி. 'You can proceed with your examination.. I will decide whether or not to give credence to his sworn statement after that.'
நீதிபதி இப்படித்தான் முடிவெடுப்பார் என்று ராஜசேகர் எதிர்பார்த்திருந்ததால் சலனமில்லாமல் அமர்ந்திருந்தான். நடுவர் முன்பு அளித்திருந்த வாக்குமூலத்தை மீண்டும் அப்படியே சாட்சிக் கூண்டிலிருந்து குமார் சொன்னால் மட்டுமே அவனுடைய முந்தைய வாக்குமூலம் எவருடைய தூண்டுதலும் இல்லாமல் அளிக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்ளப்படும் என்பது அவனுடைய அனுபவத்தில் தெரிந்திருந்தது.
நீதிபதியின் கையிலுள்ள வாக்குமூலத்தில் என்ன இருக்கக் கூடும் என்று எண்ணியவாறே சாட்சிக் கூண்டில் நின்றிருந்த குமாரை அணுகி, 'உங்க பேர், விலாசம் எல்லாத்தையும் சொல்லுங்க.' என்று தன் விசாரணையை ஆரம்பித்தார் பிபி.
குமார் குரல் நடுங்க வேணுவின் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு அவருடைய அடுத்த கேள்விக்கு காத்திருந்தான். போலீசாரின் பாதுகாப்பில் இருந்தபோது குளித்து, சவரம் செய்து உடை மாற்றியிருந்ததால் சற்று தெம்புடன் காணப்பட்டதை வசந்தும் ராஜசேகரும் கவனித்தனர்.
'என்ன வேல பாக்கறீங்க?'
'கார்ப்பரேஷன் பார்க்கிங்லய்யா.'
'எங்க?'
குமார் அவன் வேலை பார்த்த விலாசத்தை தெரிவித்தான்.
'அந்த எடத்துல எவ்வளவு நாளா வேல பாக்கறீங்க?'
'ரெண்டு வருசமா.'
வேணு வியப்புடன் அவனைப் பார்த்தார். 'அதே எடத்துலயா?'
'ஆமாய்யா.... அந்த எடத்த கான்ட்ராக்ட் எடுத்தவர் எங்க மாமாதான்யா..... அதனாலதான்.....'
'சரி.... அதோ ஒக்காந்துருக்கறாரே....... அவர ஒங்களுக்கு தெரியுமா?' என்றவாறு வேணு கோபாலை சுட்டிக்காட்டினார். இதை அப்ஜெக்ட் செய்தால் என்ன என்று நினைத்த ராஜசேகர் பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்தான்.
'நல்லா தெரியுங்க.'
'எப்படின்னு சொல்றீங்களா?'
'சொல்றேங்க.... இவர் அந்த பார்க்கிங்லதான் கார பார்க் பண்ணுவாரு.... சுமாரா போன ரெண்டு வருசம் .'
'டெய்லி வருவாரா?'
'இல்லைங்கய்யா..... அப்பப்போ வருவாரு...'
'எவ்வளவு நாளைக்கு ஒருதரம்... சுமாரா சொல்லுங்க போதும்.'
'வாரத்துக்கு ஒருதரம் இல்லன்னா ரெண்டு தரம் வருவாருங்க.'
'கடைசியா என்னைக்கி அவர அங்க பாத்தீங்க.....?'
குமார் சொன்னான்.
'அதாவது போலீஸ் உங்கக்கிட்ட விசாரணை பண்ணதுக்கு முந்தின நாள். அப்படித்தான?'
He is leading the witness என்று அப்ஜெக்ட் செய்யலாமா என்று நினைத்துவிட்டு பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்தான் ராஜசேகர். வேணு தன்னை உசுப்பேத்தவே கேள்விகளை இப்படி தொடுக்கிறார் என்பது அவனுக்கு தெரிந்தது. நாம் அந்த வலையில் விழுந்து அதனால் ஏற்கனவே அச்சத்துடன் சாட்சி கூண்டில் நிற்கும் குமாரை கலங்கட்டிக்க வேண்டாம் என்று நினைத்தான்.
'ஆமாங்கய்யா.'
'போலீஸ் உங்கக்கிட்ட வந்து என்ன கேட்டாங்க?'
'கோபால்ங்கறவரு நேத்து சாயந்தரம் இங்க வந்து வண்டிய பார்க்க பண்ணாரான்னு கேட்டாங்க..... நா ஆமான்னு சொன்னேன். அப்புறம் எத்தன மணிக்கி வந்தார் எத்தன மணிக்கி போனார்னு கேட்டாங்க. சொன்னேன். அப்புறம் இதே மாதிரி கோர்ட்ல வந்து சொல்வியான்னு கேட்டாங்க. சொல்வேன் சார்னு சொன்னேன்.. சரின்னுட்டு போய்ட்டாங்க.'
அவனுடைய விளக்கமான பதிலில் திருப்தியடைந்தவர்போல் தோன்றிய வேணு, 'அவர் அன்னைக்கி வண்டிய பார்க் பண்ணிட்டு எங்க போனார்னு பாத்தீங்களா?'
'எங்க பார்க்கிங் இடத்துலருந்து நேர் எதுத்தாப்பல இருந்த அக்கா வீட்டுக்குத்தான்யா போவார். நிறையே நேரம் பாத்துருக்கேன்... அன்னைக்கிம் அங்கதான் போயிருக்கணும்... ஆனா அன்னைக்கி நா அத பாக்கல.'
'அக்காவா? உங்க கூட பொறந்தவங்களா?'
'இல்லீங்க. ஆனா அது மாதிரிதான். அவங்க பேர் மாதவிங்க... ரொம்ப நல்ல மாதிரி.... நா அந்த ஏரியாவுல வேலைக்கி வந்த அதே டைம்லதான் அவங்களும் அங்க குடிவந்தாங்க. அதுலருந்தே அவங்கள எனக்கு தெரியும்.'
'சரி.. அவங்கள பத்தி சொன்னது போதும். மிஸ்டர் கோபால் திரும்பி வந்து கார எடுத்தப்போ என்ன நடந்துது?'
'அவர் திரும்பி வந்தப்போ சாயந்தரம் ஆறு மணி இருக்கும்யா..... நாலே முக்கால் மணி போல வந்தவர்ங்கறதால ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிரிச்சி.... எக்ஸ்ட்ரா அஞ்சி ரூபா தாங்கன்னேன்.... எதுக்குய்யான்னு எரிஞ்சி விழுந்தார்.....'
'சரி அப்புறம் என்ன நடந்துச்சி.....?'
'அவர் எப்பவுமே அப்படித்தான்.... காசு குடுக்கறதுன்னால புடிக்காது..'
அவனுடைய பதிலில் திருப்தியடையாத வேணு, 'நா அத கேக்கலை.... அவர் நீங்க சொன்ன அந்த வீட்லருந்து வந்தத பாத்திங்களான்னு கேட்டேன்.'
'இல்லீங்க. ஆனா இவர் காசு குடுக்க தகராறு பண்ணதும் நா திரும்பி அந்தக்கா வீட்ட பாத்தேன். அந்த அக்கா வாசல்ல நின்னுக்கிட்டிருந்தாங்க.....அவங்க சிரிச்சிக்கிட்டே அவர் போவட்டும் நா அந்த காச தரேன்னுட்டு சைகை காட்னாங்க.... அதுக்கப்புறம் சாரே பர்ஸ தொறந்து காச எடுத்துக் குடுத்துட்டு போய்ட்டாருங்க.........'
'அப்புறம்?'
'சார் போனதும் நா என் வேலைய பாக்க போய்ட்டேங்க.'
'அன்னைக்கி மிஸ்டர் கோபால் மறுபடியும் அங்க வந்தாரா?'
சிறிது நேரம் யோசித்த குமார் நீதிபதியை பார்த்து, ''இல்லீங்க. அவர அதுக்கப்புறம் இன்னைக்கித்தான் பாக்கறேன் எஜமான்.' என்றான்.
வேணு அதிர்ச்சியுடன் திரும்பி ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். இருய்யா ஒன்னெ வச்சிக்கறேன் என்பதுபோல் இருந்தது அந்த பார்வை. அவருடைய பார்வையின் தீவிரத்தை உணர்ந்த பெருமாள் தலையை குணிந்துக்கொள்ள வேணு திரும்பி தன் இருக்கையை அடைந்து முன்பு போலவே குமார் போலீசுக்கு அளித்த வாக்குமூலத்தின் நகலை தயாராக எடுத்து வைத்திருந்த உதவியாளரின் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு குமாரை நெருங்கி அவன் ஆய்வாளர் பெருமாள் முன்பு ஸ்டேஷனில் வைத்து கூறியதை வாசித்தார்.
'இத நீங்க சொன்னதுதான?' என்றார் கோபத்துடன்.
'அது இன்ஸ்பெக்டர் மிரட்டி எழுதி வாங்கினதுய்யா.' என்று நடுங்கும் குரலில் பதிலளித்த குமார் நீதிபதியை பார்த்தான். 'ஐயா அன்னைக்கி நடந்தது முழுசையும் சொல்லட்டுங்களாய்யா?'
ஒரு சில விநாடிகள் பதிலளிக்காமல் சாட்சி கூண்டில் நின்ற குமாரையே பார்த்தவாறு அமர்ந்திருந்த நீதிபதி, 'சரி சொல்லு.' என்றார். 'ஆனா உண்மையத்தான் சொல்லணும்.....'
'சரிங்கைய்யா' என்று பதிலளித்த குமார் தொடர்ந்தான். 'அன்னைக்கி சாயந்தரம் கோபால் சார் அங்கருந்து போனதும் ஒரு அரை மணி நேரம் போல இருக்கும் ராமராஜன் சார்.......'
'யார்யா அந்த ராமராஜன்?' என்று எரிந்து விழுந்தார் வேணு. 'எதுக்கு இந்த கேஸுக்கு சம்மந்தமில்லாத பேரையெல்லாம் இங்க வந்து சொல்ற? இப்படி சொல்லணும்னு யாராச்சும் ஒன்னெ மிரட்டுனாங்களா?'
தொடரும்..
பிபி யை கற்பனை செய்துகொண்டு அவர் முகம் போகும் போக்கை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கிறேன். தொடர் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபி.பி. உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல், தான் நினைத்ததை உண்மையாக்க விரும்புகிறார். சிலசமயங்களில் அது முடியலாம். எப்போதும் முடியாது. ஆனால் அது தவறு செய்யாதவர்களை எப்படி பாதிக்கும் என்று கொஞ்சமாவது சிந்தித்தால், இந்த அளவுக்கு கோர்ட்டில் அவமானப்பட வேண்டியதில்லை. உண்மையில் கோர்ட் விவாதங்கள் இவ்வளவு விறுவிறுப்பாக இருக்குமா?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
பிபி யை கற்பனை செய்துகொண்டு அவர் முகம் போகும் போக்கை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கிறேன். தொடர் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
7 PM
பதிலளிநீக்குPackirisamy N said...
பி.பி. உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல், தான் நினைத்ததை உண்மையாக்க விரும்புகிறார். சிலசமயங்களில் அது முடியலாம். எப்போதும் முடியாது. ஆனால் அது தவறு செய்யாதவர்களை எப்படி பாதிக்கும் என்று கொஞ்சமாவது சிந்தித்தால், இந்த அளவுக்கு கோர்ட்டில் அவமானப்பட வேண்டியதில்லை.//
சரியாக சொன்னீர்கள். நம்மில் பலரும் இப்படித்தான் சில சமயங்களில் அவமனானப்படுகிறோம்.
உண்மையில் கோர்ட் விவாதங்கள் இவ்வளவு விறுவிறுப்பாக இருக்குமா?//
க்ரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களைப் பொருத்துத்தான் கூறமுடியும். பிரபல வழக்கறிஞர்கள் பலரும் அத்தனை எளிதில் வழக்கை முடிக்க விடமாட்டார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அரசு தரப்பு வழக்கறிஞரும் திறமையுடையவராக இருந்தால் விவாதம் சூடாகத்தான் இருக்கும்.
வணக்கம் சகோதரரே..
பதிலளிநீக்குநீதிமன்றக் காட்சிகளை அப்படியே கண்முன்னே கொண்டு வந்தது உண்மையில் வியப்பாக இருக்கிறது. நீங்கள் காவல்துறையைச் சேர்ந்தவரா என்று பலரும் கேட்டது போய் நீதித்துறையைச் சேர்ந்தவரா என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்றெ தோன்றுகிறது எனக்கு அருமை சகோதரரே.தொடருங்கள்..
அ. பாண்டியன் said...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே..
நீதிமன்றக் காட்சிகளை அப்படியே கண்முன்னே கொண்டு வந்தது உண்மையில் வியப்பாக இருக்கிறது. நீங்கள் காவல்துறையைச் சேர்ந்தவரா என்று பலரும் கேட்டது போய் நீதித்துறையைச் சேர்ந்தவரா என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்றெ தோன்றுகிறது எனக்கு அருமை சகோதரரே.தொடருங்கள்..//
மிக்க நன்றி சகோதரரே!
அந்த பெண் சொல்வது உண்மையாகும் பச்சத்தில் எனக்கும் அந்த பெண்ணை நினைத்தால் பரிதாபமாகத்ததான் இருக்கிறது.
பதிலளிநீக்குSasi Kala said...
பதிலளிநீக்குஅந்த பெண் சொல்வது உண்மையாகும் பச்சத்தில் எனக்கும் அந்த பெண்ணை நினைத்தால் பரிதாபமாகத்ததான் இருக்கிறது.//
இந்த மாதிரி அப்பாவி பெண்களுக்கு பொய் சொல்ல தெரியாதுங்க...