'ஆமா... இப்போதைக்கி அத வெளியில சொல்றது கூட வேஸ்ட்......' என்றார் தன்ராஜ்.
'தாங்ஸ் சார்....' என்றான் ராஜசேகர். 'முருகேசன் இதுவரைக்கும் எதையும் ஒத்துக்கலையா?'
'இல்லைங்க... சரியான கல்லுளிமங்கனா இருக்கான்.... இதுவரைக்கும் இப்படியொரு ஆள நா பாத்ததில்லை.... நாளைக்கு கோர்ட்ல ஆஜர் பண்ணிட்டு ஒரு வாரம் கஸ்டடி கேக்கலாம்னு இருக்கோம்..... பாக்கலாம்... டைம் இருக்கில்ல?'
'சரிங்க... மறுபடியும் நீங்க குடுத்த இன்ஃபோவுக்கு தாங்ஸ்.' என்ற ராஜசேகர், 'நா ஒன்னு கேக்கட்டுமா சார்?' என்றான் தயக்கத்துடன்.
'சொல்லுங்க..'
'உங்களுக்கு என்கிட்ட இந்த இன்ஃபோவ எப்படி குடுக்கணும்னு......'
தன்ராஜ் சிரித்தார். 'எஸ்.பி பண்ண வேலைன்னும் சொல்லலாம்..... பிபிய பாக்க போன எஸ்.ஐ.யும் என் பேட்ச்மேட்தான்.... பிபி அவர ரொம்ப இன்டீசன்டா நடத்துனாராம்.... அவர் வந்து சொன்னத கேட்டதும் எஸ்.பி கடுப்பாய்ட்டார்... அந்த ஆள இனியும் இப்படியே விட்டா நாம இந்த டிப்பார்ட்மென்ட்ல இருக்கறதுல அர்த்தமே இல்லைய்யான்னு சத்தம் போட்டுட்டு இன்னும் ஆஃபனவர்ல அந்த விட்னஸ் யாரு, என்னான்னு கண்டுபிடிச்சி என் டேபிளுக்கு கொண்டு வாங்கன்னார்.....இந்த மாதிரி பிரிசனர்ஸ் யாராச்சும் விட்னஸ் குடுத்துருந்தா அவங்க பேர வச்சே இதுக்கு முன்னால எந்த கேஸ்ல அவங்க சம்மந்தப்பட்டிருக்காங்கன்னு ட்ரேஸ் பண்றதுக்கு எங்க ஆஃபீஸ்ல ஒரு சாஃப்ட்வேர் இருக்கு. அது கிடைச்சதும் முதல் வேலையா இத ராஜசேகர கூப்ட்டு சொல்லுங்க..... அவர்தான் பிபிக்கி ஏத்த ஆள்னார்...அது மட்டுமில்லாம இந்த கொலைக்கும் கோபாலுக்கும் சம்மந்தம் இருக்க சான்ஸே இல்லைங்கறது தெரிஞ்சதுக்கப்புறமும் அவரோட இருக்கற முன்விரோதம் காரணமா பிபி பண்ற அடாவடிய எங்களாலயே தாங்கிக்க முடியல சார். நானே உங்கள கூப்டலாம்னு இருந்தப்போதான் உங்க ஃபோன் வந்துது..... இத நீங்க எப்படி யூஸ் பண்றீங்களோ அதப்பொறுத்துத்தான் இந்த கேஸ் போவும் போலருக்கு... ஆல்தி பெஸ்ட்... இது நமக்குள்ளவே இருக்கட்டும்.'
'ரொம்ப தாங்ஸ்ங்க.....' என்றான் ராஜசேகர்.
'வெல்கம். அந்த ஜட்ஜ்மென்ட்ஸ் கிடைக்கலன்னா கூப்டுங்க... Don't worry about the time. நடுராத்திரியானாலும் பரவால்லை.... பை' என்றவாறு இணைப்பு துண்டிக்கப்பட ராஜசேகர் தன்னுடைய லேப்டாப்பை திறந்து இணையத்திற்குள் நுழைந்தான்.
நல்லவேளையாக இணைப்பின் வேகம் அவன் நினைத்ததை விட அதிகமாக இருக்க தன்ராஜ் அளித்திருந்த வழக்குகளில் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பின் நகல்களை டெக்ஸ்ட் கோப்பாக மிக எளிதாக தரவிறக்கம் செய்ய முடிந்தது. அதை முழுவதுமாக வாசித்து முடித்ததும் அவனுடைய உதடுகள் புன்னகையால் விரிந்தன. வசந்தை அழைத்தால் என்ன என்று மணியை பார்த்தான். நள்ளிரவை நெருங்கியிருந்தது. பிறகு வேண்டாம் என்று தீர்மானித்து இணையத்திலிருந்து வெளியேறி லேப்டாப்பை சார்ஜரில் போட்டுவிட்டு படுக்கையில் விழுந்தான்..... ஆனால் உறக்கம் லேசில் வராமல் புரண்டுக்கொண்டே இருந்தான்.
************
ராஜசேகருடன் பேசி முடித்ததும் தன்ராஜ் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைந்து எஸ்.பி அறையை நோக்கி நடந்தார். அறை காலியாக இருந்தது.
அங்கிருந்து திரும்பி முருகேசன் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தார். அந்த அறையை ஒட்டியிருந்த அறையில் ஷங்கர் அமர்ந்து தன்னுடைய கணினியில் மூழ்கியிருந்தது தெரிந்தது. அவரும் தன்ராஜும் ஒரே நேரத்தில் இலாக்காவில் சேர்ந்தவர்கள். பயிற்சியின் போதே இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருந்தது. தன்ராஜுக்கு ஃபீல்டில் பணியாற்ற வேண்டும் என்று எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதற்கு நேர் மாறாக அலுவலக சூழலில் பணியாற்றுவதில் ஷங்கருக்கு ஆர்வம் இருந்ததால் முதலில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் இணைந்து சில வருடங்கள் கழித்து அங்கிருந்து சென்னை சைபர் க்ரைம் செல்லில் பணியாற்றிவிட்டு இப்போது கடந்த இரண்டாண்டுகளாக எஸ்.பி. சந்தானம் அலுவலகத்தில்....... விசாரணை கைதிகளைப் பற்றிய விவரங்களை இணையதளத்தில் தேடி கண்டுபிடிப்பதில் சூரன் என்று பெயரெடுத்தவர்.
'என்ன ஷங்கர்..... மறுபடியும் என்ன ஆராய்ச்சி?' என்றவாறு அவரை நெருங்கினார் தன்ராஜ். ' முருகேசன் இன்டரகேஷன ஆரம்பிச்சிரலாமா?'
கணினியில் ஆழ்ந்திருந்த தன் பார்வையை விலக்கி தன் அருகில் நின்ற தன்ராஜை நிமிர்ந்து பார்த்தார் ஷங்கர். 'இங்க பாரு.' என்று கணினி திரையைக் காட்ட 'திரையின் தலைப்பில் handwriting & signature comparison tool என்று எழுதியிருந்ததை தன்ராஜ் கவனித்தார். திரை மேலிருந்து கீழாக இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் ராமராஜனின் தற்கொலை கடித நகலும் அடுத்த பகுதியில் கோபாலின் அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்ட கோப்பில் இருந்த ஒரு கடிதத்தின் நகலும் இருந்தது. இரண்டு நகல்களிலும் பல இடங்களில் ஷங்கர் வளையங்களை இட்டு வைத்திருந்தார்.
'இந்த சூயிசைட் லெட்டர எழுதுனது இவந்தான்..... ரொம்ப க்ளவரா எழுதியிருக்கான்.... ஆனா அவனுக்கே தெரியாம நா ரவுன்ட் போட்டு வச்சிருக்குற எடத்துலல்லாம் எப்பவும் எழுதற ஸ்டைல்லயே எழுதியிருக்கான்.' என்ற ஷங்கர் வளையத்திற்குள் இருந்த 'மாதவி' என்ற பெயரிலிருந்த முதல் எழுத்தான 'மா'.... சற்றுத் தள்ளி 'செய்தது' என்ற எழுத்திலிருந்த 'ய்' மற்றும் 'த' ஆகிய எழுத்துக்களை சுட்டிக்காட்டினார்...... இந்த எழுத்துங்க மத்த எழுத்துங்கள மாதிரி இல்லாம லெஃப்டடிக்குத்து பார்.....'
தன்ராஜுக்கும் அப்படித்தான் தெரிந்தது. எழுத்துக்களை இடமிருந்து வலமாக சாய்த்து எழுதும் பழக்கம் பலரிடமும் இருப்பதை அவர் கவனித்திருக்கிறார். எழுத்துக்களை நேராக எழுதுவதற்கு மணிக்கட்டை மிகவும் நேராக வைத்திருக்க வேண்டும். அது பலருக்கும் சாத்தியப்படுவதில்லை.... மேலும் நீண்ட நேரம் இதே பாணியில் எழுதும்போது மணிக்கட்டில் வலி ஏற்படும்.... பள்ளிப் பருவத்திலிருந்தே அதை பழகியவர்களுக்கு சிரமம் இருக்காது. மற்றவர்கள் மணிக்கட்டு வலியிலிருந்து தப்பிக்க இப்படி இடப்பக்கம் சாய்த்து எழுதுவார்கள்.. அதுவே நாளடைவில் பழகிப்போய்விடுவதால் அதிலிருந்து மீளவே முடியாது. முருகேசனும் இத்தகைய பழக்கம் உள்ளவன்தான் என்பது இடப்பக்கத்தில் இருந்த நகல் காட்டியது. ஆனால் அதை மறைத்து எழுத முயற்சித்தாலும் பழக்க தோஷத்தில் சில இடங்களில் எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதியிருந்ததை வலப்பக்கத்தில் இருந்த ராமராஜனின் தற்கொலைக் கடிதம் காட்டியது. ஆனாலும் இதை கோர்ட்டில் நிரூபிக்க கையெழுத்து நிபுணரின் சாட்சியம் தேவைப்படும். நம்முடைய விசாரனையில் முருகேசனை மடக்க வேண்டுமானல் இது உதவும்.
'என்ன சைலன்டாய்ட்ட?' என்ற ஷங்கரின் குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீண்ட தன்ராஜ். 'ஆமா ஷங்கர்.' என்றார்.'இதுலருந்து இன்டரகேஷன ஸ்டார்ட் பண்லாம் வா..'
'ரைட்' என்றவாறு எழுந்த ஷங்கர் கணினி திரையில் தென்பட்ட இரண்டு நகல்களையும் ப்ரின்ட் செய்ய கமான்ட் கொடுத்துவிட்டு அருகில் இருந்த ப்ரின்டரில் அவை வந்ததும் எடுத்து தன்ராஜிடம் கொடுத்தான்.
'அதுக்கு முன்னால நம்ம இத எப்படி அப்ரோச் பண்றதுன்னு டிசைட் பண்ணிக்கலாமா?' என்றார் தன்ராஜ்.
'என்ன பெரிய ஸ்ட்ரேட்டஜி?' என்று சிரித்தார் ஷங்கர். 'தடிய கீழருந்து மேல ஏத்துனா கக்கிட்டு போறான்.'
'நோ, நோ' என்று உடனடியாக மறுத்தார் தன்ராஜ். 'அந்த மாதிரி தேர்ட் டிகிரி மெத்தேட்லல்லாம் எனக்கு நம்பிக்கையில்ல.'
ஷங்கர் வியப்புடன் பார்த்தார். 'என்ன சொல்றே நீ. ஆறு வருஷமா ஃபீல்டுல இருந்த நீயா சொல்ற?'
தன்ராஜ் சிரித்தார். 'ஆமா... நானேதான்....'
'அப்புறம் எப்படிய்யா ஒன்னெ கன்ஃபெஷன் வாங்கறதுல எக்ஸ்பர்ட்டுன்னு சொல்றாங்க?'
'அதத்தான் ஸ்ட்ரேட்டஜின்னு சொல்றேன்.... சொல்லவா?'
'சரி சொல்லு... என்னதான் சொல்றேன்னு பாக்கலாம்.'
'மணி இப்போ பதினொன்னாவப் போவுது. ... இப்போ ஸ்டார்ட் பண்ணா அவனா ஒத்துக்கற வரைக்கும் இது போய்க்கிட்டே இருக்கும்.... இடையிடையில நாம ரெஸ்ட் எடுத்துக்கலாம்..... ஆனா அவனுக்கு? விடிய விடிய ராமாயணம்தான்.'
'அப்படீன்னா நீ கொஞ்ச நேரம் நா கொஞ்ச நேரம்னு சொல்றியா?'
'ஆமா... முதல் ரெண்டு மணி நேரம் ரெண்டு பேரும் சேர்ந்து கேக்கலாம்.... நா சாஃப்டா நீ கொஞ்சம் ரஃபா! அடுத்த ரெண்டு மணி நேரம் நம்மள்ல யாராச்சு ஒருத்தர் கேக்கறப்போ... இன்னொருத்தர் ரெஸ்ட் எடுத்துக்கலாம்.... இப்படி மாறி மாறி..... என்ன சொல்ற?'
ஒரு சில நொடிகள் பதிலளிக்காமல் யோசித்த ஷங்கர், 'சரிய்யா.... ஆனா ஒரு கண்டிஷன்.'
'என்ன?'
'நா என் ஸ்டைல்ல இன்டரகேட் பண்ணிக்கறேன்... நீ ஒன் ஸ்டைல்ல போ....'
இம்முறை தன்ராஜ் பதிலளிக்காமல் யோசித்தார். 'ஆனா அடாவடியா எதையாச்சும் பண்ணிறாத! அடிக்கறா மாதிரி மிரட்டு.... ஆனா அடிக்காத!'
'என்ன சொல்ற? அதெப்படி?'
'அதான் டெக்னிக்... அடிச்சிருவாங்கற பயத்த உண்டாக்கணும்.... ஆனா அடிக்கக் கூடாது. ஒரு அடி விழுந்து அத அவன் தாங்கிக்கிட்டான்னா அப்புறம் எத்தன அடி விழுந்தாலும் உரைக்காது....'
'என்னமோ சொல்ற? பாப்போம்.... இவன் உன் டெக்னிக்குக்கெல்லாம் சரிவர மாட்டான்...'
'ட்ரை பண்ணித்தான் பாப்பமே?'
'இதே டெக்னிக்லதான் அந்த கோபால்கிட்டயும் இன்டரகேட் பண்ணியா? ஒன்னும் பலிக்கலையே?' என்றார் ஷங்கர் புன்னகையுடன்.
'அப்படியில்ல.....கோபால் சொசைட்டியில கொஞ்சம் பெரிய புள்ளி. தமிழ்நாடு பில்டர் அசோசியேஷனோட ஃபார்மர் செக்கரட்டரியாம்... அவர அரெஸ்ட் பண்ண நியூஸ் டிவியில வந்ததுமே சென்னையில இருக்கற நிறைய பெரிய ஆளுங்கக்கிட்டருந்து SHOக்கு ஃபோன் மேல ஃபோன்... கோபால் அப்படிப்பட்ட ஆள் இல்லைன்னு..... மர்டர் ஸ்பாட்ட விசிட் பண்ணதுக்கப்புறம் எனக்கும் அப்படித்தான் தோனிச்சி..... அவர் மட்டும் இல்லாம இன்னொரு ஆளும் இதுல சம்மந்தப்பட்டிருக்கணுங்கற சந்தேகம் வந்துது... அதான் இதுக்கும் எனக்கும் சம்மதம் இல்லேன்னு அவர் திருப்பி திருப்பி சொன்னப்போ நானும் அத ஒருமாதிரியா ஏத்துக்கிட்டேன்.... நா நெனச்ச மாதிரிதான இப்ப கேஸ் திரும்பியிருக்கு?'
'அதுவும் சரிதான். சில சமயங்கள்ல நம்ம இன்ட்யூஷன் (intuition) சொல்ற மாதிரியே நிஜமாவும் நடக்கும்னு சொல்வாங்க.... கோபால் விஷயத்துல நடந்ததபாத்தா நீ சொல்றதும் சரிதான்னு படுது..... சரி வா.... நீ சொல்றா மாதிரியே செஞ்சி பாக்கலாம்.'
'நீ முதல்ல உள்ள போ...நா இந்த ரூம்லருக்கற டேப்ப ஆன் பண்ணிட்டு வரேன்....' என்ற தன்ராஜ் தான் ஏற்கனவே மேசை மீது எடுத்து வைத்திருந்த டேப் ரிக்கார்டரை ஆன் செய்துவிட்டு முருகேசன் இருந்த அறையை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
தொட்ரும்..
எழுதும் பழக்கத்தைப் பற்றி இதுவரை யோசித்ததில்லை.யோசிக்கவைத்தமைக்குநன்றி!
பதிலளிநீக்குஎப்படி ஆய்வாளர்கள் விசாரிக்கப்போகிறார்கள்? முருகேசன் என்ன சொல்லப் போகிறான்? என்றறிய காத்திருக்கிறேன்.
முருகேசன் கொலை பண்ணலைன்னுதான் நினைக்கிறேன். பாக்கலாம்
பதிலளிநீக்குமுருகேசனின் பதிலுக்கு அல்லது அவனது நிலைக்கு காத்திருந்து தான் விடை காண வேண்டும். திருப்பங்கள், கதையோட்டம் மிக அருமை. நன்றி சகோதரரே. தொடர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
எழுதும் பழக்கத்தைப் பற்றி இதுவரை யோசித்ததில்லை.யோசிக்கவைத்தமைக்குநன்றி! //
நான் எழுதியது வெகு குறைவே.... இதை ஆராய்ந்தபோது பல சுவையான தகவல் கிடைத்துள்ளன. சமயம் கிடைக்கும்போது அதை தனி பதிவாக இடுகிறேன்.
எப்படி ஆய்வாளர்கள் விசாரிக்கப்போகிறார்கள்? முருகேசன் என்ன சொல்லப் போகிறான்? என்றறிய காத்திருக்கிறேன்.//
நன்றி சார்.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
முருகேசன் கொலை பண்ணலைன்னுதான் நினைக்கிறேன். பாக்கலாம்//
நான் என்ன சொல்றது? இன்னும் ஒரு வாரம்தான்... 75வது பதிவோடு முடிந்துவிடும்.
பதிலளிநீக்கு6:39 PM
அ. பாண்டியன் said...
முருகேசனின் பதிலுக்கு அல்லது அவனது நிலைக்கு காத்திருந்து தான் விடை காண வேண்டும். திருப்பங்கள், கதையோட்டம் மிக அருமை. நன்றி சகோதரரே. தொடர வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரரே.
பாவம் இரண்டு பேரிடம் ஒருவர் மாட்டி இருக்கிறார் என்ன ஆகப்போகிறதோஅறியும் ஆவலுடன்.
பதிலளிநீக்கு