அவருடைய பதிலுக்கு எதிர்முனையிலிருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே தயக்கத்துடன் 'சார்...' என்றார்.
'அந்த பாடிய முதல்ல ஹேன்டில் பண்ணது நீங்களா இல்ல ட்ரிப்ளிக்கேன் ஸ்டேஷன் எஸ்.ஐ.யா?' என்றார் எஸ்.பி. சந்தானம்.
'அவர்தான் சார்..... அவர் ஃபோன் பண்ணதுக்கப்புறந்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சிது.... எதுக்கு சார்?'
'சொல்றேன்..... அவரோட பேர் என்ன?'
'பாலசுந்தரம் சார்.....'
'சரி.... ஒங்களுக்கு எவ்வளவு நேரம் கழிச்சி இன்ஃபோ வந்துது?'
எதுக்கு இந்த மனுஷன் லாயர் மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்கிறார் என்று நினைத்தார் பெருமாள். ஒருவேளை அந்த லெட்டர் விஷயம் இவருக்கும் தெரிந்திருக்குமோ...... அந்த பாலா போட்டு குடுத்துருப்பானோ.......? நல்லவேளை அந்த லெட்டர பிபி சொன்னா மாதிரி கிழிச்சி போடலை....... எஸ்பியா கேக்கறதுக்கு முன்னால நாமளே சொல்லிறலாமா? ஆனா இத ஏன்யா நேத்தே சொல்லலன்னு கேட்டா? மறந்துட்டேன்னு சொன்னா நம்புவாரா? என்னடா இது புது சோதனை?
'என்ன பெருமாள்.... என்ன யோசனை?'
'இல்ல சார்.....'
'அப்ப சொல்லுங்க... அந்த பாடிக்கும் நீங்க ஹேன்டில் பண்ற கேசுக்கும் இருக்கற கனெக்ஷன் அவங்களுக்கு எப்படி தெரிஞ்சிது?'
ராமராஜனின் பர்சில் திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு மேன்ஷனின் விலாசம் இருந்ததால் அவர்கள் அந்த மேன்ஷனுக்கு சென்று விசாரித்ததாகவும் அவர்கள் சொன்ன தகவலின் பேரில் ராமராஜன் மாதவி வழக்கில் கைதாகியிருந்த கோபாலின் காரியதரிசி என்று தெரிந்து ஒருவேளை அந்த வழக்கில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று நினைத்து தன்னை அழைத்து தகவல் தெரிவித்தததையும் சுருக்கமாக கூறி முடித்தார் பெருமாள்.
'ஓ, அப்படிங்களா? அந்த எஸ்.ஐ. வேற ஏதாச்சும் சொன்னாருங்களா?'
'இல்லீங்களே சார்?'
ஒரு சில நொடிகள் பதிலளிக்காமல் இருந்த எஸ்.பி. 'எதுக்கு இந்த கேள்விங்களையெல்லாம் உங்கக்கிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன்னு நிஜமாவே உங்களுக்கு விளங்கலையா இல்ல விளங்காதமாதிரி நடிக்கிறீங்களா மிஸ்டர் பெருமாள்?' என்றார் சற்று காட்டமாக.
இப்போதாவது சொல்லிவிடலாமா என்று யோசித்தார் பெருமாள். இவர் வேறு எதையாவது மனதில் நினைத்துக்கொண்டிருக்க நாமாக அந்த லெட்ட விஷயத்தை போட்டு உடைத்து நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொள்வோமோ? 'உண்மையிலேயே விளங்கலையே சார்?'
'I see..' என்ற எஸ்.பி. 'இப்படியெல்லாம் நீங்களா செய்ய மாட்டீங்கன்னு தெரியும்...... அந்த பிபி குடுத்த தைரியமா?'
நிச்சயம் இது அந்த லெட்டர் விஷயம்தான்... சொல்லிவிடுவோம்..... 'சார் நீங்க அந்த பாடியிலருந்து எடுத்த சூயிசைட் நோட் பத்தி கேக்கறீங்கன்னு நினைக்கிறேன்.'
'அது புரியறதுக்கு இவ்வளவு நேரம் ஆச்சா?' என்று எரிந்து விழுந்தார் எஸ்.பி.....'Are you trying to conceal it from me?'
எஸ்.பி கோபத்தில் ஆங்கிலத்தில் பொறிய.... வெகு சுமாரான ஆங்கில அறிவு கொண்டிருந்த பெருமாள் எப்படி பதிலளிப்பது என தெரியாமல் தடுமாறினார். இருந்தாலும் புரிந்ததை வைத்து சமாளித்தார். 'சார் அத நான் என் ரிப்போர்ட் சப்மிட் பண்றப்போ மென்ஷன் பண்லாம்னு........'
'வேணாங்க..... உங்க சீனியாரிட்டிக்கு இது நல்லால்ல...... உங்களோட ட்யூட்டி மொதல்ல டிப்பார்ட்மென்ட்டுக்கு.... அப்புறம்தான் மத்தவங்களுக்கு..... எதுக்கு அந்த பிபிய பாத்து இப்படி பயந்து சாவறீங்க? அவர் மினிஸ்டரோட ஆள்னா அவர் போடற தாளத்துக்கெல்லாம் ஆடணுமாங்க? சொல்லுங்க!'
இது அந்த தன்ராஜ் பய வேலையாத்தான் இருக்கும்...... இந்த கேஸ் மட்டும் சாதகமா முடியட்டும்.... வச்சிக்கறேன். பிபி சொன்னா மாதிரி மினிஸ்டர் வழியாத்தான் இவனுங்களுக்கு........
'என்ன மிஸ்டர் பெருமாள், பதிலையே காணம்?'
'வெரி சாரி சார்... அந்த லெட்டர் என் கஸ்டடியிலதான் இருக்கு..... நா வேணும்னா உங்க ஆஃபீசுக்கு குடுத்தனுப்பிடறேன் சார்......'
'நோ, நோ, அதெல்லாம் தேவையில்லை.... இத செப்பரேட் FIRஆவே ரெஜிஸ்தர் பண்ணுங்க.... அடுத்த ஹியரிங்கோட மாதவி கேஸ் முடிஞ்சிரும்...... அந்த ராமராஜனோட கனெக்டட்டான முருகேசன்னு ஒருத்தன கொஞ்ச நேரத்துக்கு முன்னால அரெஸ்ட் பண்ணோம்..... அவந்தான் அந்த பொண்ணையும் இந்த ராமராஜனையும் மர்டர் பண்ணதா சாட்சியமும் கிடைச்சிருக்கு..... So...அந்த கேஸ்ல இப்ப கஸ்டடியில இருக்கற கோபால் மேல இருக்கற கேஸ அடுத்த ஹியரிங்ல வித்ட்றா பண்ணச் சொல்லி பிபிக்கிட்ட சொல்றதுக்கு நம்ம ஆஃபீஸ்லருந்து அனுப்பப் போறேன்... அதுக்கப்புறம் தன்ராஜ் உங்க ஸ்டேஷனுக்கே திரும்பி வந்து இந்த கேஸ டீல் பண்ணிக்குவார்.....'
அட! இவ்வளவு விஷயம் நடந்துருக்கா என்று நினைத்த பெருமாள் அப்படியானால் ராமராஜன் எழுதி வைத்திருந்த லெட்டர் பொய்யா? இது பிபிக்கு தெரியுமான்னு தெரியலையே என்று நினைத்த 'சரி சார்....' என்றார் பணிவுடன்.... 'அப்படியே செஞ்சிடறேன் சார்.'
'இன்னொரு விஷயம்.'
'சொல்லுங்க சார்.'
'அந்த லெட்டர் விஷயம் பிபிக்கி தெரியுமா?'
அவருடைய குரலில் ஒலித்த எச்சரிக்கை பெருமாளை பயமுறுத்தியது. உண்மையை சொல்லிவிடு என்றது அவருடைய உள்மனது. 'தெரியும் சார்.... நாந்தான்......'
எவ்வித பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட என்ன செய்வதென தெரியாமல் அமர்ந்திருந்தார் பெருமாள்.
******
'சார், எஸ்.பி ஆஃபீஸ்லருந்து ஷங்கர்னு எஸ்.ஐ உங்கள பாக்க வந்துருக்கார்.' என்று தன் முன் வந்து நின்ற தன்னுடைய பணியாளரை எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தார் பிபி வேணு.
'எஸ்.பின்னா பேர் இல்லையா?'
'சந்தானம் சார் ஆஃபீசாம் சார்....'
'அத கேட்டாத்தான் சொல்வீங்களோ?' என்றார் வேணு எரிச்சலுடன். 'எதுக்காம், கேட்டியா?'
'இல்லீங்கய்யா..... கேட்டுட்டு வரட்டுங்களா?'
'உங்கிட்ட எத்தன தடவைய்யா சொல்றது? யார் வந்தாலும் எதுக்குன்னு கேக்கணும்னு? சரி, சரி.... வரச்சொல்லு....' வெளியில் காத்திருப்பவருக்கு கேட்க வேண்டுமென்றே இரைந்தார் வேணு.
பணியாள் வெளியில் சென்று அடுத்த சில நொடிகளில் உள்ளே நுழைந்த எஸ்.ஐ. ஷங்கர், 'குட் ஈவ்னிங் சார்... நா எஸ்.பி ஆஃபீஸ்லருந்து வரேன்.' என்றவாறு தான் கொண்டு வந்திருந்த உறையை அவரிடம் நீட்டினார்.
சற்று முன்பு கோபத்துடன் பணியாளனை சாடிய பிபி ஒரு பொய்யான புன்னகையுடன் ஷங்கரை வரவேற்று, 'உக்காருங்க.' என்றவாறு அவர் நீட்டிய உரையிலிருந்த கடிதத்தை எடுத்து வாசித்தார்.
அடுத்த கணமே அவருடைய முகம் கோபத்தால் சிவந்ததை பார்த்து ரசித்தவாறு அமர்ந்திருந்த ஷங்கர்.. 'நாளைக்கே அடுத்த ஹியரிங் வர்றதாலதான் இந்த லெட்டரே நானே கொண்டு வந்தேன். இதப்பத்தி முன்கூட்டியே ஒங்க ஆஃபீசுக்கு இன்ஃபர்மேஷன் குடுக்க முடியாம போயிருச்சி சார், ஸாரி .' என்றார்.
அவர் பேசியதை கவனியாதவர் போல் தன் கையில் இருந்த கடிதத்தை மேசை மீது எறிந்த வேணு..... 'உங்க எஸ்.பிக்கிட்ட போயி சொல்லுங்க.... I am not for withdrawalனு...' என்றார் எகத்தாளமாக. 'நாளைக்கு முடிஞ்சா அவரையே கோர்ட்டுக்கு வந்து வேடிக்கை பாக்க சொல்லுங்க.....'
அவர் சொல்வது விளங்காமல், 'சார்?' என்றார் ஷங்கர். என்னாச்சி இந்தாளுக்கு? எஸ்.பியவே கோர்ட்டுக்கு வரச் சொல்றார்? அவ்வளவு பெரிய கேசா இது?
'பின்னே என்னங்க....? இப்பத்தான் கஸ்டடியில இருக்கற அக்யூஸ்டே நாந்தான்யா அந்த பொண்ணெ போட்டு தள்னேன்னு ஒரு செல்மேட்டுக்கிட்ட சவடால் அடிச்சதா எனக்கு இன்ஃபர்மேஷன் வந்துருக்கு..... உங்க எஸ்.பி என்னடான்னா எவனையோ ஒருத்தன அரெஸ்ட் பண்ணிட்டு அவன் நாந்தான் இத பண்ணேன்னு ஒத்துக்கிட்டான்னு புதுசா ஒரு கதை விடறாரு? நீங்க புடிச்ச சாட்சிங்களை விட்டா வேற சாட்சியே கிடைக்காதுன்னு நினைச்சிட்டாரா? நாளைக்கி கோர்ட்ல வந்து பாக்க சொல்லுங்க...... அந்த கோபால் கன்விக்ட் ஆகப் போறது நிச்சயம்.....' என்றவாறு எழுந்து நின்ற பிபி 'நீங்க போய்ட்டு வாங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு.' என்றார் வாசலை காட்டி.
அவர் நின்றிருந்த கோலம் ஷங்கருக்கு சிரிப்பை வரவழைத்தது. இருப்பினும் சலனமில்லா முகத்துடன் எழுந்து மறுபேச்சில்லாமல் வெளியேறினார். வாகனத்தை நெருங்கும் வரையில் பொறுத்திருந்து வாகனத்தை அடைந்ததும் வாய்விட்டு சிரித்தார். சரியான கேணையனா இருப்பான் போலருக்கே.... அவருடைய சிரிப்புச் சத்தம் சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்த ஒரு சில காவலர்களை ஈர்க்க அவர்கள் தன்னை வியப்புடன் பார்ப்பதை கவனித்தார். பிறகு வாகனத்தை கிளப்பி அலுவலகம் திரும்பி தன்ராஜிடம் தகவலை அளித்தார். 'அவர் நம்ம எஸ்.பிய ரொம்ப கேவலமா பேசிட்டார் தன்ராஜ். யாரோ அக்யூஸ்டோட செல்மேட்டாம். அவர் கிட்ட நாந்தான் அந்த பொண்ண போட்டுத்தள்னேன்னு அக்யூஸ்ட் சவடால் அடிச்சதா இவருக்கு இன்ஃபோ வந்துருக்காம். .அவன் யாருன்னு விசாரிச்சீங்கன்னா எல்லாம் தெரிஞ்சிரும்..... நாம கேட்டா பிரிசன் ஹெட் கிட்டருந்து எந்த இன்ஃபோவும் வராது.... எஸ்.பி சார் நினைச்சா முடியும்...'
************
எஸ்.பியிடமிருந்து குட்டுபட்ட வேதனையில் துவண்டுப் போயிருந்த ஆய்வாளர் பெருமாளின் செல்ஃபோன் அடித்ததும் அவரே மறுபடியும் கூப்டறாரா என்ன என்று திரையைப் பார்த்தார்.
இந்த ஆள் எதுக்கு இப்ப கூப்டறார்? இவர் கிட்டருந்து வேற டோஸ் வாங்கணுமா?
'என்னங்க ஃபோன எடுத்துட்டு பேசாம இருக்கீங்க?' எதிர்முனையிலிருந்து வந்த பிபி வேணுவின் குரலில் இருந்த எரிச்சல் பெருமாள் வயிற்றில் புளியை கரைத்தது.
'இல்ல சார்.... சொல்லுங்க...'
'அந்த மாதவி கேஸ்ல ஃபர்தரா ஏதாச்சும் இன்வெஸ்ட்டிக்கேஷன் பண்றீங்களா என்ன?'
'இல்லையே சார்?'
'அப்போ ஒங்களுக்கு விஷயமே தெரியாது போலருக்கு.... அந்த கேஸ நீங்கதான டீல் பண்றீங்க?'
ஓ! இவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமோ என்று நினைத்த பெருமாள் அந்த வழக்கின் விசாரணை எஸ்.பி. அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட விஷயத்தையும் அதில் முருகேசன் என்ற நபர் கைதான விஷயத்தையும் சுருக்கமாக கூறினார். 'கேஸ் டைரி முதக்கொண்டு எஸ்.பி ஆஃபீசுக்கு போயிருச்சி சார்...'
'ஓ! அதான் மேட்டரா? சரி.... அந்த முருகேசன் யாரு.... அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் என்ன ரிலேசன்ஷிப்..... இது ஏதாவது ஒங்களுக்கு தெரியுமா?'
'இல்லையே சார்? அப்படியொரு பேர் விசாரணையில வரவே இல்லையே? அவன் அரெஸ்டான விஷயமே கொஞ்ச நேரத்துக்கு எஸ்.பி சார் சொல்லித்தான் எனக்கே தெரியும்.... இந்த கேஸ்ல அக்யூஸ்ட் கோபாலோட பிஏ ராமராஜனோட கனெக்டடான ஆள்னும் சொன்னார்... மேக்கொண்டு விவரம் எதுவும் எனக்கு தெரியாது சார்.' என்ற பெருமாள், 'எதுக்கு சார் கேக்கறீங்க?' என்றார் தயக்கத்துடன்.
'எதுக்கா? நல்லா கேட்டீங்க. அந்த முருகேசன்தான் அந்த பொண்ண கொன்னாங்கறதுக்கு ஏதோ எவிடன்ஸ் கிடைச்சிருக்காம். அதனால இப்ப ட்ரையலருக்கற கேஸ நாளைக்கி ஹியரிங் வர்றப்போ வித்ட்றா பண்ணணுமாம்.
எஸ்.பி. ஆஃபீஸ்லருந்து இப்பத்தான் லெட்டர குடுத்துட்டு போறாங்க. அதான் ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கூப்ட்டேன்....'
'அப்படீன்னா ராமராஜன் பாடியிலருந்து நாம எடுத்த லெட்டர்ல மாதவிய நாந்தான் கொன்னேன்னு எழுதி இருந்தது?' என்றார் பெருமாள் என்றார் வேண்டுமென்றே. சற்று முன் எஸ்.பி தன்னிடம் தெரிவித்ததாக காட்டிக்கொள்ளாமல்.
'அதத்தான் நானும் கேக்கறேன்....' என்றார் வேணு எரிச்சலுடன். 'அந்த லெட்டர கிழிச்சி போட்டுட்டீங்களா வச்சிருக்கீங்களா?'
'எதுக்கு சார் கேக்கறீங்க?'
'என் கேள்விக்கு எதிர் கேள்வி கேக்காம பதில சொல்லுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு.'
அவர் அந்த கேள்வியை கேட்ட விதம் பெருமாளை கோபமடையச் செய்தது. மினிஸ்டர் இருக்கர்ங்கற தைரியத்துல எப்படி பேசறான் பார் என்று எரிச்சலடைந்தார். 'என் கிட்டதான் இருக்கு சார்... நல்லவேளையா நீங்க சொன்னா மாதிரி கிழிச்சி போடலை....'
'எதுக்கு அப்படி சொல்றீங்க?'
தொடரும்...
தொடர் முடியப் போகிறமாதிரி இருந்தது. இப்போது பிபி சொல்வதைப் பார்த்தால் கேசை சீக்கிரம் முடிக்க விடமாட்டார் போலிருக்கிறதே?
பதிலளிநீக்குPeople are interested to satisfy their ego than doing their job correctly. What you have written portrays the true society. Waiting for the next episode. Thanks.
பதிலளிநீக்குமழை விட்டும் தூவானம் விடவில்லை போல் இருக்கிறதே.!
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குதொடர் முடியப் போகிறமாதிரி இருந்தது. இப்போது பிபி சொல்வதைப் பார்த்தால் கேசை சீக்கிரம் முடிக்க விடமாட்டார் போலிருக்கிறதே? //
பிபி மாதிரி குணம் உள்ளவர்கள் செய்யக்கூடியதைத்தான் இவரும் செய்கிறார். தான் என்கிற அகம்பாவம் உள்ளவர்கள் இப்படித்தான் நடந்துக்கொள்வார்கள்.
உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குதொடர் முடியப் போகிறமாதிரி இருந்தது. இப்போது பிபி சொல்வதைப் பார்த்தால் கேசை சீக்கிரம் முடிக்க விடமாட்டார் போலிருக்கிறதே? //
பிபி மாதிரி குணம் உள்ளவர்கள் செய்யக்கூடியதைத்தான் இவரும் செய்கிறார். தான் என்கிற அகம்பாவம் உள்ளவர்கள் இப்படித்தான் நடந்துக்கொள்வார்கள்.
உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்குPackirisamy N said...
People are interested to satisfy their ego than doing their job correctly. What you have written portrays the true society. //
This is the main problem with guys like the PP. Their ego is too big to accept the reality.
Thanks for your visit and the comment.
பதிலளிநீக்குG.M Balasubramaniam said...
மழை விட்டும் தூவானம் விடவில்லை போல் இருக்கிறதே.!//
சரியாக சொல்லிவீட்டீர்கள். இது வெறும் தூவானம்தான்... மழையல்ல.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நானும் இந்த நேரம் கதை முடிந்திருக்கும் என்றே வந்தேன். இது என்ன இப்படி வேறு பாதையில் செல்கிறது..
பதிலளிநீக்கு