IPC.Sec.191. Giving false evidence Whoever, being legally bound by an oath or by an express provision of law to state the truth, or being bound by law to make a declaration upon any subject, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence.
Sec.193. Punishment for false evidence: Whoever intentionally gives false evidence in any stage of a judicial proceeding, or fabricates false evidence for the purpose of being used in any stage of a judicial proceeding, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine, and whoever intentionally gives or fabricates false evidence in any other case, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.
*****
''அந்த கேஸ்லயும் நீங்க சாட்சி சொன்னதுக்கப்புறம்தான் கேஸ் கன்விக்ஷன்ல முடிஞ்சிது... இதுல இன்னொரு ஆச்சரியம் அதுலயும் வேணு சார்தான் கவர்மென்ட் லாயர்.....' என்ற ராஜசேகர், 'நா சொல்றது சரிதானே?' என்றான் தனபாலைப் பார்த்து.
தனபால் பதிலளிக்காமல் வேணு அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்த்தான்.
வேணு இதை ஆட்சேபிப்பார் என்று எதிர்பார்த்த ராஜசேகர் அதற்கு இடம் அளிக்காமல் மேலே தொடர்ந்தான். 'இன்னும் முடியல.... இன்னொரு கேஸ்லயும் நீங்க இதே மாதிரி என் கூட ப்ரிசன்ல இருந்த கைதி சொன்னார்னு வந்து சாட்சி சொல்லியிருக்கீங்க...... அதாவது சரியா பதினெட்டு மாசத்துக்கு முன்னால.....ராயபுரத்துல ரவுடிகளுக்கிடையில நடந்த கேங் வார்ல..... இதே வேணு சார் ஆஜரான கேஸ்ல.... அதாவது ஞாபகம் இருக்கா?'
தனபால் பதிலளிக்காமல் நின்றிருக்க ராஜசேகர் தொடர்ந்தான்' ஆனா ஒங்க துரதிர்ஷ்டம் அந்த கேஸ்ல ஆஜரான டிஃபன்ஸ் லாயர் அந்த கைதி ஒங்கக்கிட்ட பேசிக்கிட்டிருந்ததா நீங்க சொன்ன டேட்டுல ட்ரீட்மென்ட்டுக்காக G.H.க்கு போயிருந்தார்ங்கற ரொம்ப க்ளியராவே ப்ரூஃப் பண்ண..... கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்ல தெரியும்கறா மாதிரி மாட்டிக்கிட்டீங்க! ஞாபகத்துக்கு வருதா?'
'இந்த கேஸ் ஞாபகத்துல இருக்கு சார்... அன்னைக்கி நாந்தான் டேட்ட தப்பா சொல்லிட்டேன்..... ஆனா அந்தாள் எங்கிட்ட சொன்னது உண்மைதாங்க.'
ராஜசேகர் சிரித்தான். 'அதெப்படிங்க உங்கள தேடிப் புடிச்சி ஒவ்வொரு கைதியா வாக்குமூலம் குடுக்கறாங்க? அதுவும் வேணு சார் அப்பியராவற கேஸா பாத்து? அந்த கேஸ்ல நீதிபதி இனிமே இந்த மாதிரி வேணும்னே பொய் சாட்சி சொல்ல வந்தா அதுக்குன்னு ஒங்க மேல தனியா கேஸ் போட வேண்டி வரும்னு வார்ன் பண்ணி அனுப்புனாரா?'
'ஆமாங்க.' என்று தனபால்.
'ஆனாலும் மறுபடியும் வந்து நிக்கறீங்க! இத நீங்களா விரும்பி செய்யலேங்கறது தெரியுது. நா சொல்றது சரிதானே?'
தனபால் பதிலளிக்காமல் நின்றிருக்க இதையாவது ஆட்சேபிக்கலாமா என்று யோசித்தார் வேணு. ராஜசேகர் ஒவ்வொரு முறையும் தன்னுடைய பெயரை குறிப்பிட்டபோதெல்லாம் ஆட்சேபிக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் அப்போதெல்லாம் நீதிபதியின் இறுகிய முகமும் அவர் அவ்வப்போது தன்னைப் பார்த்த பார்வையில் இருந்த தீவிரமும் அவரை தடுத்து நிறுத்தின. ராஜசேகரை கத்துக்குட்டின்னு நினைச்சது தப்பு போலருக்கே என்று நினைத்தார். அத்தோட நாம எந்த அட்வான்ஸ் இன்ஃபர்மேஷனும் இல்லாம ப்ரொட்யூஸ் பண்ண விட்னஸ பத்தி இவனுக்கு எப்படி இவ்வளவு விவரம் தெரிஞ்சிதுங்கறதும் மிஸ்டரியா இருக்கு. யார் வழியாவோ இந்த இன்ஃபர்மேஷன் இவனுக்கு கிடைச்சிருக்கு என்று நினைப்புடன் ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். ஊஹும்.. இவன் வழியா போறதுக்கு சான்ஸ் இல்ல. இதை அப்படியே சற்று நேரம் மனதுக்குள் அசை போட்டதும் சட்டென்று அவருக்கு பொறி தட்டியதுபோல் இருந்தது. ஆமா, அவன் வழியாத்தான் போயிருக்கணும்...... ஆனா எப்படி? அவனெ அன்னைக்கி கோர்ட்ல வச்சி இவன் அந்த மாதிரி வறுத்தெடுத்தான? பெருமாள் சொன்னப்பவே இந்த ஐடியாவ ட்ராப் பண்ணியிருக்கலாம்.... நமக்கு நாமளே சூன்யம் வச்சிக்கிட்டா மாதிரி ஆயிரும் போல..... இந்த ஜட்ஜ் நம்மள பாக்கற பார்வையிலருந்தே இந்த கேஸ் க்ளோஸ்தான் என்று தெரியுதே..... பேசாம நாமளே வித்ட்றா பண்ணிறலாமா?
தொடர்ந்து பேசிய ராஜசேகரின் குரல் வேணுவை தன்னுடைய நினைவுகளிலிருந்து மீட்டது. கூர்ந்து கவனிக்கலானார்.
'யுவர் ஆனர், ஏற்கனவே ஒருமுறை எச்சரிக்கப்பட்டும் யாருடைய தூண்டுதலாலோ அல்லது அளித்த தைரியத்தாலோ இந்த சாட்சி மீண்டும் ஒருமுறை பொய் சாட்சியம் அளிக்க துணிந்திருக்கிறார். சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருக்கும் என்னுடைய கட்சிக்காரர் ஏற்கனவே ஒரு கொலைக்குற்றத்தில் ஆயுள் தண்டனை அடைந்திருக்கும் இத்தகைய ஒருவரிடம் சரிசமமாக பழகியிருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் பழகிய இரு தினங்களுக்குள் செய்யாத ஒரு கொலையை செய்ததாக என் கட்சிக்காரர் இவரிடம் ஜம்பம் அடித்துக்கொண்டார் என்று இவர் கூறுவது உண்மைக்கு புறம்பானதுமட்டுமல்ல நடைமுறைக்கும் ஒவ்வாத செயல். இந்த இடத்தில் இத்தகைய extra-judicial confession அதாவது நீதிமன்றத்திற்கு வெளியில் ஒருவர் அளித்ததாக கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவைதானா என்பதைக் குறித்து உச்ச நீதிமன்றம் சில தீர்ப்புகளில் கூறியுள்ளவற்றை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
முதலாவதாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு RAJA RAM (2003) என்பவருக்கு , எதிரான கொலை வழக்கு ஒன்றில் the Honourable Apex Court has ( reported in 8 SCC - 180 (supra))observed as under:-
"Extra Judicial confession will have to be proved like any other fact. The value of the evidence as to confession, like any other evidence, depends upon the veracity of the witness to whom it has been made. The value of the evidence as to the confession depends on the reliability of the witness who gives the evidence."
இரண்டாவது வழக்கு SK.YUSUF Vs. STATE OF WEST BENGAL (2011) & reported in 3 SCC (Cri.)
620, as regards Extra Judicial Confession, at special page 627, para 28, the Honourable Supreme Court has observed as under:-
"The Court while dealing with a circumstance of extra-judicial confession must keep in mind that it is a very weak type of evidence and requires appreciation with great caution."
இப்போது சாட்சி கூண்டில் நிற்கும் இவர் ஏற்கனவே ஒருமுறை பொய் சாட்சியம் அளித்ததற்காக நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளவர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே இவருடைய சாட்சியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதுடன் இவர் மீது பொய்சாட்சி சொன்ன குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் 191 மற்றும் 193வது பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.' என்ற ராஜசேகர் நீதிபதியை பார்த்து பேசினான்: 'யுவர் ஆனர். நீங்கள் என்னை வழக்கின் துவக்கத்தில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டபோது இல்லை என்று நான் கூறினேன். அதற்கு பதிலாக இப்போது ஒரு சில நிமிடங்கள் பேச அனுமதி கோருகிறேன்.'
ராஜசேகர் அரை மணி நேரத்தில் தன்னுடைய குறுக்கு விசாரணையை முடித்துவிடுவான் என்று எதிர்பார்த்திருந்த நீதிபதி சற்று எரிச்சலைடந்ததுபோல் தோன்றினாலும் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவாறே, 'Make it short.' என்றார்.
'அரசு தரப்பில் சாட்சியம் அளித்த PW1 மற்றும் PW2 ஆகியவர்கள் அளித்த சாட்சியத்திலிருந்தே என்னுடைய கட்சிக்காரர் இந்த குற்றத்தை செய்யவில்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்துவிட்டது. அவர்களை நான் குறுக்கு விசாரணை செய்யாமலே அவர்களாகவே அரசுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். ஏனெனில் அதுதான் உண்மை. அவர்களை தங்களுடைய விருப்பத்திற்கேற்ப உண்மையை மறைத்துக் கூற சிலர் அவர்களை நிர்பந்தித்ததும் அவர்களுடைய மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். அதிகாரத்திலுள்ள சிலருடைய சட்டத்திற்கு புறம்பான மிரட்டுதல்களுக்கு ஆளாவதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன்தான் சட்டத்தை அனுசரித்து செல்லும் குடிமக்கள் பலரும் எந்த குற்றவாளிக்கும் எதிராக சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை. அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க வந்த முதல் இரு சாட்சிகளையும் உண்மைக்கு புறம்பாக சாட்சியம் அளிக்க நிர்பந்தித்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், கண்டிக்கப்பட வேண்டும். அவர்களுடைய சாட்சியம் தங்களுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை எவ்வாறோ உணர்ந்த அரசுதரப்பு ஒரு அப்பாவி சிறைக்கைதியை ஆசை வார்த்தை காட்டியோ அல்லது மிரட்டியோ நடக்காத ஒன்றை நடந்ததாக பொய் சாட்சியம் அளிக்க வைத்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர்களுடைய நோக்கம் முறியடிக்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் இனி வரப்போகும் அரசுதரப்பு சாட்சிகள் பிரேதப்பரிசோதனை, கைரேகை மற்றும் ஃபாரன்சிக் இலாக்காவைச் சார்ந்தவர்களே. அவர்கள் அளிக்கவிருக்கும் சாட்சியம் கொலை நடந்தது என்பதை மட்டுமே நிரூபிக்க முடியுமே தவிர அதை செய்தவர்கள் யார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் போவதில்லை. கொலை நடந்தது உண்மைதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த கொலையை செய்தவர் என் கட்சிக்காரர் அல்ல என்பதுதான் என்னுடைய வாதம். இந்த வழக்கில் அரசு இனி முன்வைக்கவிருக்கும் சாட்சிகளின் விசாரணையை அனுமதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்று தாழ்மையுடன் கோர்ட்டார் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஆகவே இந்த வழக்கை இனியும் தாமதியாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.' என்று முடித்துவிட்டு தன்னுடைய இருக்கையை அடைந்து அமர்ந்தான் ராஜசேகர்.
ராஜசேகரின் நீண்ட அதே சமயம் திறமையான வாதத்தில் மூழ்கிப் போய் பிரமிப்புடன் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் நீதிபதி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை அறியும் ஆவலுடன் அவரையே பார்த்தனர். ராஜசேகர் வாதத்தை முடித்துக்கொண்டு தன் இருக்கையில் சென்று அமரும் வரை ஒன்றும் கூறாமல் தன் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதி சட்டென்று எழுந்து அறையிலிருந்து வெளியேற அந்த வழக்கை தொடர்ந்து அன்று விசாரிக்கவிருந்த வழக்குகளில் ஆஜராக காத்திருந்த வழக்கறிஞர்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பார்வையாளர்கள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது.
'இனி என்ன நடக்கும் சார்....' என்றவாறு ராஜசேகரை பார்த்தார் கோபால். 'இன்னைக்கி பெய்லாவது கிடைக்கிமா? அது கிடைச்சா கூட போதும்னு இருக்கு சார்.'
ராஜசேகருக்கும் நீதிபதியின் செயல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சேம்பருக்கு போயிருப்பாரோ என்ற நினைப்புடன் தன் அருகில் அமரிந்திருந்த வசந்தைப் பார்த்தான். 'பாஸ் அங்க பாருங்க!' என்று அவன் கண்களால் சாடை செய்ய அவன் காட்டிய திசையில் பார்த்தான். நீதிபதியின் அந்தரக ஊழியன் வேணுவை நோக்கி சென்று ஏதோ கூறிவிட்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டான். 'சார்... ஒங்கள ஐயா சேம்பருக்கு வரச் சொல்றாங்க.'
ராஜசேகர் உடனே எழுந்து அவன் பின்னால் சென்றான்.
கோபால் மற்றும் வசந்தைப் போலவே பார்வையாளர் மத்தியில் அமர்ந்திருந்த மகாதேவனும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அமர்ந்திருந்தார். ஜட்ஜ் ரெண்டு பேரையும் சேம்பருக்கு கூப்டறார்னா இன்னைக்கே இந்த முடிஞ்சிரும்னு தோனுது.... பேசாம வாபஸ் வாங்கிருங்கன்னு பிபி கிட்ட சொல்லப் போறாரோ என்னவோ..... இந்த கேஸ இதுக்கு மேலயும் கன்டினியூ பண்றது வேஸ்ட் ஆஃப் டைம்னு நமக்கே தோன்றப்போ ஜட்ஜுக்கு தோனாதா என்ன? அவர் இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும் போதே ராஜசேகர் அறைக்குள் நுழைவதை கவனித்தார். அவருக்குப் பின்னால் அறைக்குள் நுழைந்த வேணுவின் நடையிலிருந்தே தான் சற்று முன் நினைத்தது சரிதான் என்று அவருக்கு தெரிந்தது. உடனே எழுந்து அறையை விட்டு வெளியேறி வராந்தாவில் நின்றார். சீனிக்கி நல்ல நியூஸ் சொல்ற முதல் ஆள் நாமளா இருப்போம் என்ற எண்ணத்துடன் செல்ஃபோனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு நீதிமன்ற அறையின் வாசலில் நின்று காத்திருந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்து தன் முன்னால் இருந்த குறிப்புகளை ஒரு சில நொடிகள் பார்த்துவிட்டு பிபி வேணுவைப் பார்த்தார்.
அவர் மெள்ள எழுந்து, 'The State would like to withdraw the case for lack of evidence.' என்று சுருக்கமாக கூறிவிட்டு அமர உடனே பார்வையாளர்கள் மத்தியில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது. இதை எதிர்பார்த்திருந்த நீதிபதி அது அடங்கும் வரை ஒரு சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார்.
பிறகு வழக்கு எண் மற்றும் வழக்கு விவரங்களை கூறி ஒரே வரியில் 'Dismissed as prayed.' என்று அறிவித்துவிட்டு தன் இருக்கைக்கு கீழ் அமர்ந்திருந்த அலுவலரிடம், 'அடுத்த கேஸ் கூப்டுங்க......' என்றார்.
*********
நீதிமன்ற அறையையொட்டி இருந்த வராந்தாவில் நின்றிருந்த ராஜசேகரை அன்று வரவிருந்த தங்களுடைய வழக்கில் ஆஜராக வந்து காத்திருந்த வழக்கறிஞர்கள் சிலரும் அறையிலிருந்து வெளியேறி அவனுடைய கரத்தைப் பற்றி, 'கலக்கிட்டீங்க ராஜசேகர்.' என்றனர்.
'சூப்பர் பாஸ்... நீங்க அஸ்யூம் பண்ணா மாதிரியே நடந்திரிச்சி.' என்றான் வசந்த் புன்னகையுடன்.
நீதிபதியின் அறிவிப்பு வந்ததுமே சீனிவாசனை அழைத்த மகாதேவன் விஷயத்தை தெரிவித்துவிட்டு ராஜசேகரை அணுகினார். 'கங்கிராட்ஸ் மிஸ்டர் ராஜசேகர்.....' என்றார்.
அவர் அருகில் நின்றிருந்தும் அவரை கவனியாதவன் போல் நின்றிருந்த கோபால் அவர் அங்கிருந்து அகன்றதும் ராஜசேகரை கட்டித் தழுவிக்கொண்டார். அவருடைய கண்கள் இரண்டும் கண்ணீரால் நிறைந்திருந்ததைக் கவனித்த ராஜசேகர், 'சார் எமோஷனல் ஆகாதீங்க. முதல்ல ஒங்க ஃபாதர கூப்ட்டு சொல்லுங்க.' என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை அவரிடம் அளித்தான். அவர் அதைப் பெற்றுக்கொண்டு சற்று தள்ளிச் சென்று தன் தந்தைக்கு டயல் செய்தார்.
கோபாலுடன் காவலுக்கு வந்திருந்த இரு காவலர்களும் அங்கேயே நின்றுக்கொண்டிருந்ததைக் கவனித்த வசந்த் அவர்களை நெருங்கினான்.
அவர்களுள் ஒருவர், 'சார்.... அவர நாங்க மறுபடியும் ப்ரிசனுக்கு கூட்டிக்கிட்டு போய் ஒப்படைக்கணும் சார்... கோர்ட்லருந்து ஆர்டர் வந்தப்புறந்தான் அவர் வெளியில.......' என்றார்.
வசந்த் இடைமறித்து, 'தெரியுங்க.... இருங்க அவர் ஃபோன் பண்ணி முடிக்கட்டும்.' என்றவாறு ராஜசேகரை நெருங்கி காவலர் தெரிவித்ததை அவனிடம் கூறினான்.
'ஆமாடா....ஆர்டர் இங்கருந்து போறதுக்கு சாயந்தரம் ஆயிரும்..... நா கோபால்கிட்ட பேசறேன்.' என்ற ராஜசேகர் கோபாலை நெருங்கி விஷயத்தை கூறினான்.
அவர் உடனே 'சரி சார்... காலையில ரிலீஸ் பண்ணாக் கூட போதும்.' என்றவாறு செல்ஃபோனை அவனிடம் நீட்டினார்.
ராஜசேகர் அதை பெற்றுக்கொள்ளாமல், 'ஒங்க வய்ஃபுக்கும் ஃபோன் பண்ணி சொல்லுங்களேன்.... அவங்களுக்கும் ஆறுதலாருக்கும்.' என்றான் 'போலீஸ் வற்புறுத்தியும் உங்களுக்கு எதிரா விட்னெஸ் குடுக்க வர மாட்டேன்னு அவங்க சொன்னது உங்களுக்கு தெரியாது....'
ராஜசேகரின் பரிந்துரைக்கு பதிலேதும் கூறாமல் நின்றிருந்த கோபால் சில விநாடிகளுக்குப் பிறகு, 'இன்னும் ஹாஸ்ப்பிடல்லதான் இருக்காளா சார்?' என்றார்.
'அப்படித்தான்னு நினைக்கேன்....'
சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு மீண்டும் சற்று தள்ளி நின்று அவர் ஃபோன் செய்ய, 'எப்படி பாஸ் கரெக்டான டைமிங்ல இப்படில்லாம் செய்யணும்னு ஒங்களுக்கு மட்டும் தோனுது.' என்றான் வசந்த் வியப்புடன்.
'டேய்... இன்டைரக்டா வாராத..... வா காருக்கு போலாம்.... அவர் பேசிட்டு வரட்டும்....' என்றவாறு அங்கிருந்து நகர்ந்து தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்தான்.
வசந்த் கோபாலுக்காக காத்திருந்த காவலர்களை நெருங்கி, 'வாங்க..... ஒங்க வேனுக்கு போலாம். அவர் பேசிட்டு வரட்டும்.'என்று அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ராஜசேகரின் வாகனத்தை அடைவதற்கென்றே காத்திருந்தவன்போல், 'சேம்பர்ல என்ன பாஸ் நடந்துது?' என்றான் வசந்த்.
சற்று தொலைவில் தலைகுணிந்தவாறு நடந்துச் சென்றுக்கொண்டிருந்த பிபி வேணுவைப் பார்த்தவாறே பதிலளித்தான் ராஜசேகர், 'நீங்களா கேஸ வித்ட்றா பண்ணிறுங்க. இல்லன்னா நானெ டிஸ்மிஸ் பண்ண வேண்டி வரும். அதோட உங்களுக்கு அகெய்ன்ஸ்டா ஸ்ட்ராங்கான ஸ்ட்ரிக்சர்ஸும் (strictures) பாஸ் பண்ணுவேன்னார். வேணு பதில் பேசாம கொஞ்ச நேரம் ஒக்காந்திருந்துட்டு 'I will withdraw'னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டார். அவர அப்போ பாக்க பாவமாத்தான் இருந்துது....'
'நீங்க வேற பாஸ்' என்று சிரித்தான் வசந்த், 'அவரா வச்சிக்கிட்ட சூன்யம்தான? அனுபவிக்கட்டும்.'
நிறைவு
இத்தொடரின் முடிவுரை (Epilog) நாளை...
'Dismissed as prayed.'
பதிலளிநீக்கு'கங்கிராட்ஸ் மிஸ்டர் ராஜசேகர்.....'
விறுவிறுப்பான சற்றும் தொய்வில்லாத அருமையான கதை..பாராட்டுக்கள்..!
மிக அருமையாக, சுவாரஸ்யமாக தொடரை நகர்த்தி எல்லோரையும் பிரமிக்க வைத்து பதிவை நிறைவு செய்துள்ளீர்கள். வழக்கறிஞர் ராஜசேகரின் வாதங்கள் உங்கள் வாதங்கள் என்பதால், இந்த தொடர் இன்னும் நீடித்திருந்தாலும் நாங்கள் இரசித்திருப்போம். பிடியுங்கள் மனம் நிறைந்த பாராட்டையும், வாழ்த்துக்களையும்!
பதிலளிநீக்குதாங்கள் தந்துள்ள எடுத்துக்காட்டுகளை சேகரிக்க எவ்வளவு மெனக்கெட்டிருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது. திறமை மிக்க வழக்கறிஞராக இருக்க வேண்டிய நீங்கள் வங்கித்துறைக்கு வந்துவிட்டதால் நீதித் துறை நல்ல வழக்கறிஞரை இழதுவிட்டது என நினைக்கிறேன். திரும்பவும் வாழ்த்துகள்!
இன்றிரவு மதுரை செல்வதால் வெள்ளியன்று வந்து தான் நீங்கள் தர இருக்கின்ற முடிவுரையை படிக்கமுடியும். நிச்சயம் படிப்பேன். இரசிப்பேன்.
padiththen;rasiththen;
பதிலளிநீக்குpaaraattu koorath thudiththen!
பதிலளிநீக்கு1 – 3 of 3
இராஜராஜேஸ்வரி said...
'Dismissed as prayed.'
'கங்கிராட்ஸ் மிஸ்டர் ராஜசேகர்.....'
விறுவிறுப்பான சற்றும் தொய்வில்லாத அருமையான கதை..பாராட்டுக்கள்..!//
மிக்க நன்றிங்க.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
மிக அருமையாக, சுவாரஸ்யமாக தொடரை நகர்த்தி எல்லோரையும் பிரமிக்க வைத்து பதிவை நிறைவு செய்துள்ளீர்கள். வழக்கறிஞர் ராஜசேகரின் வாதங்கள் உங்கள் வாதங்கள் என்பதால், இந்த தொடர் இன்னும் நீடித்திருந்தாலும் நாங்கள் இரசித்திருப்போம். பிடியுங்கள் மனம் நிறைந்த பாராட்டையும், வாழ்த்துக்களையும்!
தாங்கள் தந்துள்ள எடுத்துக்காட்டுகளை சேகரிக்க எவ்வளவு மெனக்கெட்டிருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது. திறமை மிக்க வழக்கறிஞராக இருக்க வேண்டிய நீங்கள் வங்கித்துறைக்கு வந்துவிட்டதால் நீதித் துறை நல்ல வழக்கறிஞரை இழதுவிட்டது என நினைக்கிறேன். திரும்பவும் வாழ்த்துகள்!
இன்றிரவு மதுரை செல்வதால் வெள்ளியன்று வந்து தான் நீங்கள் தர இருக்கின்ற முடிவுரையை படிக்கமுடியும். நிச்சயம் படிப்பேன். இரசிப்பேன். //
கடந்த எழுபத்தைந்து நாட்களாக ஒரு நாள் கூட தவறாமல் படித்து உடனுக்குடன் கருத்தும் இட்டு என்னை ஊக்குவித்ததற்கு மிகவும் நன்றி சார்.
உங்களுடைய ஒவ்வொரு கருத்துரையும் என்னை எந்த அளவுக்கு இந்த தொடரை கொண்டு செல்ல உதவியது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
மீண்டும் நன்றி.
siva gnanamji(#18100882083107547329) said...
பதிலளிநீக்குpadiththen;rasiththen;
paaraattu koorath thudiththen!//
அட! நீங்களும் இத படிச்சிக்கிட்டு இருந்தீங்களா?
மிக்க நன்றி... எவ்வளவு நாளாச்சி ஒங்க குரல கேட்டு.....
siva gnanamji(#18100882083107547329) said...
பதிலளிநீக்குpadiththen;rasiththen;
paaraattu koorath thudiththen!//
அட! நீங்களும் இத படிச்சிக்கிட்டு இருந்தீங்களா?
மிக்க நன்றி... எவ்வளவு நாளாச்சி ஒங்க குரல கேட்டு.....
அப்பா! ஒரு நாவல் எழுத எவ்வளவு விஷயங்களை சேகரித்திருகிரீர்கள். கோபால் தப்பி விட்டார். உண்மையில் கொலை செய்தது யார். நாளை சொல்வீர்களோ.?
பதிலளிநீக்குத்ரில் கதையாசிரியரான உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பரிசாக தருகிறோம். எந்த இடத்திலும் கதை இப்படி இருந்திருக்கலாம் அல்லது போர் அடிக்கிறது என்றில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றதோடு மட்டுமில்லாமல் அடுத்து அடுத்து என்று ஆர்வத்தையும் ஏற்படுத்திய தங்களின் உத்தியை பாராட்டியே ஆக வேண்டும்ி. கதைக்காக என்ன என்ன தகவல்களை தாங்கள் திரட்டியிருக்க வேண்டும். இந்த கதையை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றும் கூறி விட்டு மேலும் இது போன்ற த்ரில் நாவல்கள் எழுத வாழ்த்த வயதின்றி வணங்கி விடைபெறுகிறேன்.
பதிலளிநீக்குமுரளிதரன் -மூங்கில் காற்று said...
பதிலளிநீக்குஅப்பா! ஒரு நாவல் எழுத எவ்வளவு விஷயங்களை சேகரித்திருகிரீர்கள்.//
இதற்கே ஒரு மாதம் தேவைப்பட்டது. ஆனால் கூகுள் இல்லையென்றால் இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. மேலும் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் நகல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை தேடிப்பிடிப்பதற்குத்தான் நேரம் வேண்டும். அது என்னிடம் அளவுக்கு அதிகமாகவே உள்ளதால்தான் இது சாத்தியமாயிற்று. சர்வீஸில் இருந்துக்கொண்டு இதை செய்வது கடினம்.
கோபால் தப்பி விட்டார். உண்மையில் கொலை செய்தது யார்? நாளை சொல்வீர்களோ?//
ஆமாம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Sasi Kala said...
பதிலளிநீக்குத்ரில் கதையாசிரியரான உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பரிசாக தருகிறோம். எந்த இடத்திலும் கதை இப்படி இருந்திருக்கலாம் அல்லது போர் அடிக்கிறது என்றில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றதோடு மட்டுமில்லாமல் அடுத்து அடுத்து என்று ஆர்வத்தையும் ஏற்படுத்திய தங்களின் உத்தியை பாராட்டியே ஆக வேண்டும்ி. கதைக்காக என்ன என்ன தகவல்களை தாங்கள் திரட்டியிருக்க வேண்டும். //
ஒரு முழுமையான க்ரைம் நாவலை எழுத சற்று சிரமப்படத்தான் வேண்டும். ஏனோ தானோ வென்று எழுதிவிட்டுச் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இதை வெறும் கற்பனைக் கதையாக எண்ணாமல் உண்மையிலேயே நடந்த சம்பவம் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். ஆகவேதான் இதற்காக என்னவெல்லாம் தேவையோ அவற்றை பொறுமையுடன் தேடிப்பிடித்தேன்.
இந்த கதையை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றும் கூறி விட்டு மேலும் இது போன்ற த்ரில் நாவல்கள் எழுத வாழ்த்த வயதின்றி வணங்கி விடைபெறுகிறேன்.//
மிக்க நன்றிம்மா... உங்களைப் போன்ற நண்பர்கள் அளித்த உற்சாகம்தான் இதை தொடர்ந்து எழுத உதவியது.
மிகவும் அருமையான நாவலை இலவசமாகக் கொடுத்ததற்கு எனது நன்றிகள். குறைந்தபட்சமாக தாங்கள் இரண்டு ஆண்டுகளாவது இதற்காக முயற்சிகள் எடுத்திருக்கவேண்டுமென்று நம்புகிறேன். சாதாரணமாக கதையில் எப்படி தீய வேலைகளை செய்வது என்று விளக்கமாக எழுதியிருப்பார்கள். தாங்கள் எப்படி விசாரணைகள் செய்யலாம் என்று விவரமாக சொல்லியிருந்தீர்கள். வழக்கு மன்ற விசாரணைகளை இவ்வளவு சுவாரஸ்யமாக சுஜாதா நாடகத்தில் படித்ததாக ஞாபகம். தாங்கள் அது தொடர்பான தகவல்களையும் அளித்திருந்தது மிகவும் புதுமையாக இருந்தது. ஒரு வார இதழில் பிரசுரமாகியிருந்தால் அதிகமான ரசிகர்களைப் பெற்றிருப்பீர்கள். வாழ்த்துக்கள் . மீண்டும் எனது நன்றிகள்.
பதிலளிநீக்குஇணையத்தில் படித்தவர்கள் அனைவரும் ஒரு நன்றியாவது சொல்லவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
PM
பதிலளிநீக்குPackirisamy N said...
மிகவும் அருமையான நாவலை இலவசமாகக் கொடுத்ததற்கு எனது நன்றிகள். குறைந்தபட்சமாக தாங்கள் இரண்டு ஆண்டுகளாவது இதற்காக முயற்சிகள் எடுத்திருக்கவேண்டுமென்று நம்புகிறேன். சாதாரணமாக கதையில் எப்படி தீய வேலைகளை செய்வது என்று விளக்கமாக எழுதியிருப்பார்கள். தாங்கள் எப்படி விசாரணைகள் செய்யலாம் என்று விவரமாக சொல்லியிருந்தீர்கள். வழக்கு மன்ற விசாரணைகளை இவ்வளவு சுவாரஸ்யமாக சுஜாதா நாடகத்தில் படித்ததாக ஞாபகம். தாங்கள் அது தொடர்பான தகவல்களையும் அளித்திருந்தது மிகவும் புதுமையாக இருந்தது. ஒரு வார இதழில் பிரசுரமாகியிருந்தால் அதிகமான ரசிகர்களைப் பெற்றிருப்பீர்கள். வாழ்த்துக்கள் . மீண்டும் எனது நன்றிகள்//
உங்களைப் போன்ற சில நண்பர்கள் தினமும் அளித்துவந்த உற்சாகமான கருத்துரைகள்தான் என்னை தொடர்ந்து எழுத தூண்டியது. அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
இணையத்தில் படித்தவர்கள் அனைவரும் ஒரு நன்றியாவது சொல்லவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.//
ஆனால் இதை இந்த தொடரை தொடர்ந்து படித்த மற்றவர்களிடமிருந்தும் எதிர்பார்ப்பது சற்று அதிகம் என்று நினைக்கிறேன். இந்த தொடர் தமிழ்மண ரேட்டிங்கில் 301வது இடத்திலிருந்து 52வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது என்றால் இத்தகைய வாசகர்கள்தான் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதற்காகவாவது அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
அடுத்த பதிவைப் பார்த்து விட்டு மீதியைச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஇப்போதைக்கு, தம்பிக்கு அண்ணனின் - முதுகில் ஒரு தட்டு.
பதிலளிநீக்குதருமி said...
அடுத்த பதிவைப் பார்த்து விட்டு மீதியைச் சொல்கிறேன்.
இப்போதைக்கு, தம்பிக்கு அண்ணனின் - முதுகில் ஒரு தட்டு.//
மிக்க நன்றி அண்ணா:/)