தூத்துக்குடி நகரத்தின் நடுவில் ஓடும் ரயில் பாதை நகரத்தை மட்டுமல்ல அதில் வாழ்பவர்களையும் இரு பகுதிகளாக பிரித்திருந்தது என்றால் மிகையாகாது.
ரயில் பாதைக்கு இடமும் வலமும் வசிப்பவர்களுடைய தொழிலில் மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கைத் தரத்திலும் பெருத்த வித்தியாசத்தைக் காணமுடிந்தது.
ரயில் பாதைக்கு வலதுபுறம் (தெற்கு என்றும் கூறலாம்) வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், படித்து அலுவலகங்களில் அதிகாரிகளாக இருப்பவர்கள் என்றால் இடதுபுறத்தில் பெரும்பாலோனோர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருப்போரக இருந்தனர் எனலாம்.
இதை ஆரம்பத்தில் நான் உணரவில்லை. ஆனால் ஒரு நிலம் வாங்கி வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் உதித்தபோது எந்த இடத்தில் கட்டுவது என்று தீர்மானிக்க ஒரு வாரம் காலம் தூத்துக்குடி நகரையே சல்லடை போட்டு சலித்தபோதுதான் தெரிந்தது இந்த நிதர்சனம்.
இதன் தொடர்பாக, ஒரு வாடிக்கையாளரை சந்தித்ததைப் பற்றி கூறவேண்டும்.
கடந்த சில பதிவுகளுக்கு முன்பு ship chandling ஐ பற்றி எழுதியிருந்தேன். அதாவது தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து செல்லும் கப்பலில் பணிபுரிபவர்களுக்கு அடுத்த துறைமுகத்தை அடையும் வரை தேவையான பொருட்களை வழங்கும் தொழில்.
அத்தகைய நிறுவனங்கள் ஒன்றின் உரிமையாளராகவிருந்த பெண்மனி ஒருவர் என்னுடைய வங்கியில் கடன் பெற்றிருந்தார். சிறியதும் இல்லாமல் பெரியதும் இல்லாமல் ஒரு நடுத்தர நிறுவனம்.
உரிமையாள பெண்மனியின் கணவர் பம்பாயில் ஒரு பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் மரைன் பொறியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருடைய நிறுவனத்தைச் சார்ந்த ஓரிரு கப்பல்களும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து செல்வதுண்டு. ஆகவே ரம்பகாலத்தில் அக்கப்பல்களுக்கு மட்டும் பொருட்களை வழங்க தன்னுடைய மனைவியின் பேரில் சிறிய அளவில் துவங்கப்பட்ட முதலாளி நிறுவனம் (Propreitorship concern) நாளடைவில் ஒரு நடுத்தர நிறுவனமாக சுமார் ஐந்து நிறுவனங்களின் கப்பல்களுக்கு பொருட்களை விற்கும் அளவுக்கு உயர்ந்திருந்தது.
அவரை நான் முதலில் சந்தித்தபோது (நான் கிளையில் சேர்ந்த முதல் வாரத்தில்) தன்னை இன்னார் அறிமுகப்படுத்திக்கொண்டார். நடுத்தர வயதுதான் என்றாலும் மிகவும் இளமையாகத் தோன்றினார். பட்டதாரி - தூத்துக்குடியில் பிரபலாமாகவிருந்த கன்னியர்களால் நடப்பட்டு வந்த பெண்கள் கல்லூரியில் படித்தவர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டார். ரசனையுடன் உடுத்துவார். லிப்ஸ்ட்டிக்குடன் தூத்துக்குடியில் நடமாடும் மிகச் சில பெண்களுள் இவரும் ஒருவர்.
அவருடைய பெயருக்கு பின்னால் ஃபெர்னாண்டஸ் (Fernandez) என்றிருக்கவே நான் ஃபெர்னாண்டோவுக்கும் இப்பெயருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன்.
அவர் பெருமையுடன் ஒரு புன்னகை புரிந்தார் (அழகாகத்தான் இருந்தது அந்த புன்னகை!). ‘சார் இந்த ஃபெர்னாண்டோங்கறவங்கல்லாம் ரயில் பாதைக்கு தெக்கால இருக்கறவங்க.. மீன்காரங்க. படிப்பு, நாகரீகம்லாம் இருக்காது (காட்டுப்பசங்க என்றுதான் அவர் கூறினார்). நாங்கல்லாம் இந்த பக்கம் (அதாவது என் வங்கி கிளை இருந்த பக்கம்). எங்கள எல்லாம் அவங்க மேசை சாப்பாட்டுக்காரங்கன்னுதான் சொல்வாங்க. அதாவது பரம்பரை பரம்பரையாவே டைனிங் டேபிள்ல ஒக்காந்து சாப்பட்டவங்க நாங்க.. கொஞ்சம் வசதியாவே வாழ்ந்துட்டவங்க.. நாங்க எல்லாருமே பரவ சமுதாயம்தான்னாலும் அவங்களையும் எங்களையும் சமமா எடை போடக்கூடாதுசார்.. அவங்களுக்கும் இடையில சம்மந்தம் (திருமண உறவு) கூட வச்சிக்கமாட்டோம்..’ என்றார் பெருமையுடன்..
அவர் கூறியதில் உண்மையிருந்ததோ இல்லையோ.. ஆனால் ரயில் பாதைக்கு வடக்கே இருந்த திரேஸ்புரம், பூபாலராயபுரம், மட்டக்கடை, இஞ்ஞாசியார்புரம் போன்ற இடங்கள் பலவற்றிலும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டவர்களே வசித்துவந்ததைப் பார்க்க முடிந்தது. அவர்கள் குடியிருந்த காலனிகள் பெரும்பாலும் சுத்தமில்லாமல் தெருவெங்கும் உலரவைக்கப்பட்ட மீன்கள் என குப்பை கூளமாக காட்சியளித்ததுடன் பிரம்மாண்டமான வீடுகள் (வீடுகளைவிட காம்பவுண்ட் சுவர்கள்தான் பிரம்மாண்டமாக இருந்தன) இருந்தும் வீட்டுக்கு வெளியே சாலையின் இருமருங்கிலும் அமர்ந்துக்கொண்டு வாயடித்துக்கொண்டிந்த பெண்கள், அரட்டையடித்துக்கொண்டிருந்த இளவட்டங்கள், மது மயக்கத்தில் விழுந்துக்கிடந்த குடும்பத் தலைவர்கள்...
இந்த பகுதிகளில் காலி இடம் இல்லாவிட்டாலும் இன்றோ நாளையோ விழுந்துவிடுவேன் என்பதுபோல் நின்ற பல வீடுகளைப் பார்த்தேன். ‘இதுகள்ல ஏதாச்சும் ஒன்ன வாங்கி இடிச்சிட்டு கட்டலாம்னு எங்கப்பா சொல்றாய்ங்க.. ஆனா இந்த சுத்துவட்டாரத்துல டீசெண்டான ஆளுங்க வந்து இருப்பாங்களாங்கறதுதான் சந்தேகமா இருக்கு.’ என்று நான் நினைத்ததையே என் மனைவி கூறினார்..
ரயில் பாதைக்கு தெற்கு பகுதியில் விக்டோரியா சாலை, மணல் தெரு, சின்னக் கோவில், பெரிய கோவில்களைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் இச்சமூகத்தைச் சார்ந்தவர்கள் வசித்தாலும் அவர்களிடத்தில் நாகரீகம், படிப்பு, சுத்தம் இருந்ததைக் கண்கூடாக காணமுடிந்தது. அவர்களுள் பெரும்பாலோனோர் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தந்தி மற்றும் தபால் அலுவலகம், ஆகியவற்றில் உயர் பதவி வகிப்பவர்களாக அல்லது கடல் சார்ந்த வாணிபம் செய்பவர்களாக, சிறு தொழில் வைத்திருப்பவர்களாக சற்று செல்வம் மிக்கவர்களாக.. இருந்தனர்.
தூத்துக்குடியின் மத்தியப் பகுதி என்பது தூத்துக்குடி பேருந்து நிலையத்துடன் (இப்போது அதை பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கிறார்கள்) முடிந்துவிடுகிறது. அதை எல்லையாக வைத்து வரையறுக்கப்பட்ட தூத்துக்குடி நகரத்தை பழைய நகரம் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு பெரும்பாலான வீடுகளும், வர்த்தக கட்டிடங்களும் சுமார் ஐம்பதாண்டு பழமையாகவிருந்தன. (சமீபகாலமாக என்னுடைய கிளை அமைந்திருக்கும் க்ரேட் காட்டன் சாலையிலிருந்த பல பழைய கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு புத்தம் புது வடிவங்களில் வர்த்தக வளாகங்களாக மாறிவருகின்றன.) மேலும் காலி இடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஆகவே இந்த பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
தூத்துக்குடி பேருந்து நிலையத்தைக் கடந்து தூத்துக்குடி நகரம் அப்போதுதான் வளரத்துவங்கியிருந்தது.. சிதம்பரநகர், மில்லர்புரம் என்ற பகுதிகள் சென்னையிலிருப்பதைப் போல பொலிவான வீடுகளுடன் காணப்பட்டன.
சிதம்பர நகருக்கு தெற்கே பிரையண்ட் நகர், முனுசாமி புரம், கட்டபொம்மன் நகர் என்ற பகுதிகளில் காலி இடங்கள் நிறைய தென்பட்டன..
அவற்றுள் ஒன்றான பிரையண்ட் நகரில்தான் நான் மேலே குறிப்பிட்ட பெண்மனியின் கணவர் புதிதாக இரண்டு மாடி கட்டிடம் ஒன்றைக் கட்டிக்கொண்டிருப்பதாகவும் அப்பகுதியில் ஓரிரண்டு காலி மனைகள் இருப்பதாகவும் வேண்டுமென்றால் விசாரிப்பதாகவும் என்னிடம் ஒருமுறை கூறியிருந்தது நினைவுக்கு வரவே இடத்துக்காக ஒரு வாரத்திற்கும் மேலாக அலைந்து சோர்ந்துபோய் அவருடைய உதவியை நாடினேன்..
என்னுடைய அதிர்ஷ்டம் அவர் கட்டிக்கொண்டிருந்த இடத்திற்கு நேரெதிரில் சுமார் 2200 ச.அடி உள்ள வீட்டு மனை விற்பனைக்கு வந்திருந்தது..
அவருடைய உதவியுடன் அதை சல்லிசாக (மலிவாக) பிடித்து போட்டேன்..
ஒரு வழியாக வீட்டு மனை கிடைத்தது.. இனி என்ன, வீடு கட்ட வேண்டியதுதான்..
சொல்வதற்கு சுலபமாகத்தான் இருந்தது.. ஆனால் அதை துவக்கிவிட்டு நான் பட்ட பாடு..
முதல் முறையாக எனக்கும் என் மாமனார் வீட்டுக்கும் மனஸ்தாபம் வந்ததும் இந்த நிலத்தால்தான்.
தொடரும்..
புது வீடு கட்ட அச்சாரம் போட்டாச்சுல்லே.
பதிலளிநீக்குவாழ்த்து(க்)கள்.
இதே மாதிரி இன்னும் சில இடங்களில் பார்த்திருக்கேன், ரயில்பாதை ஊரையே ரெண்டா ஆக்கிடறதை.
ம்ம்ம்ம்ம்ம்...ஊரப் பத்திப் புட்டுப் புட்டு வெச்சிட்டீங்க.....நீங்க சொல்றதும் உண்மைதான்.
பதிலளிநீக்குநீங்க சொல்ற காலகட்டத்துலதான் சிதம்பரநகரு, பிரையண் நகர் எல்லாம் நல்லா வந்தது...பாலிடெக்னிக் தாண்டி முனாம் மைல்ல கூட வீடுக வரத் தொடங்குச்சுன்னு சொல்லலாம்.
வாங்க துளசி,
பதிலளிநீக்குஇதே மாதிரி இன்னும் சில இடங்களில் பார்த்திருக்கேன், ரயில்பாதை ஊரையே ரெண்டா ஆக்கிடறதை//
சேலமும் ஒரு வகையில் அப்படித்தான்.
ஏன் அயர்லாந்தில் டர்பன் நகரத்தில் ரயில் பாதைக்கு ஒரு புறம் கத்தோலிக்கரும் மறுபறத்தில் ப்ரொட்டஸ்டண்ட்டுகளும் இருந்துக்கொண்டு அந்த பக்கத்துலருக்கறவங்க இந்த பக்கத்துக்கு வரக்கூடாதுன்னு ஒரு ரூலே இருந்துதாம். ஒரே கடவுளை வணங்கி வந்தவர்களுக்கிடையில்தான் எத்தனை குரோதம்? அதுவும் நாகரீகத்தில் வளர்ந்த நாட்டில்?
பாலிடெக்னிக் தாண்டி முனாம் மைல்ல கூட வீடுக வரத் தொடங்குச்சுன்னு சொல்லலாம்//
பதிலளிநீக்குஆமாம் ராகவன். கடந்த வருடம் சென்றிருந்தபோது மூனாம் மைல் வரை தூ..டி வளர்ந்து போகிற போக்கில் பாளையங்கோட்டை வரை சென்றுவிடும் என்று தோன்றியது..
அதே போல வடக்கே தாளமுத்து நகர் வரையும் வீடுகள், அதுவும் கப்பல்காரன் வீடுகள் என்பார்களே அதுபோன்ற கான்க்ரீட் மாளிகைகள்.. வளர்ச்சியைப் பார்க்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது!
அடுத்து வீட்டைக் கட்டிப் பாரா ? சரியான காலத்தில் தான் முடிவெடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஉயிரின ஜீன் மேம்பாடுபோல வசதிபடைத்தவர்கள் ஒருபக்கம் போக, அவர்கள் வாழும் சூழல் மேலும் அத்தகையோரை இழுக்க, இதனால் நிலம் விலை உயர்ந்து ஏழைகள் அப்பக்கம் போகமுடியாமல், இப்பிரிவு இயற்கையாக நிகழ்கிறது.
உயிரின ஜீன் மேம்பாடுபோல வசதிபடைத்தவர்கள் ஒருபக்கம் போக, அவர்கள் வாழும் சூழல் மேலும் அத்தகையோரை இழுக்க, இதனால் நிலம் விலை உயர்ந்து ஏழைகள் அப்பக்கம் போகமுடியாமல், இப்பிரிவு இயற்கையாக நிகழ்கிறது. //
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் மணியன்..
அதுதான் உண்மை.
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குபெண்கள் தான் சொந்த வீட்டுக்கு அடி போடுகிறார்கள். //
அவங்க எதுக்குத்தான் அடி போடலே.. ஈசியா சொல்லிட்டு இருந்துருவாங்க.. அத நடத்தி முடிக்கறதுல ஏதாச்சும் உதவி பண்ணுவாங்க? ஊஹூம்..
மாமனார் கூட தகறாரா?? இது பாங்க் வேலைய விட சிக்கலாயிருக்கும் போலயே //
பின்னே.. ஆஃபீஸ் தகராறு சாயந்திரம் அஞ்சு மணியோட முடிஞ்சிரும்.. இது அப்படியா.. மாசக் கணக்குல புகைஞ்சிக்கிட்டே இல்லே இருக்கும்?
மாமனார் வீட்டோட தகராறு சுமுகமாகத்தான் முடிஞ்சிருக்கும். இல்லேன்னா இப்பதிவு தைரியமாகப் போட்டிருப்பீர்களா? ஹி ஹி ஹி.
பதிலளிநீக்குஅன்புஇடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு சார்,
பதிலளிநீக்குஇல்லேன்னா இப்பதிவு தைரியமாகப் போட்டிருப்பீர்களா? ஹி ஹி ஹி.//
அதானே.. அறுபதுவருட அனுபவமாச்சே :-)
சாரி டோண்டு சார்,
பதிலளிநீக்குஅறுபதாம் கல்யாணம்னா உங்க வயசுதான் அறுபது இல்லையா?
கல்யாணம் முடிஞ்சி எத்தனாவது வருஷம் சார்..? முப்பத்தஞ்சி?
மனத்தளவில் எங்கள் கல்யாணம் முடிந்து 53 வருடம் ஆகின்றது.
பதிலளிநீக்குஅன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா
பதிலளிநீக்குவணக்கம், அருமையாக இருக்கின்றது தொடர், தங்களின் வலைப்பதிவை தவறாது படித்து தவறாது பின்னூட்டமிடாமலே செல்லும் வாசகர்களுள் நானும் ஒருவன், சோம்பேறித்தனம்தான் காரணம், மன்னிக்கவும், சமயம் கிடைக்கும்போது இன்னும் பின்னூட்டங்களிடுகின்றேன்,இன்னும் எழுதுங்கள்,
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:)
அப்போ 53 நாட் அவுட்..
பதிலளிநீக்குபிரமிப்பாக இருக்கிறது சார்.. வாழ்த்துக்கள்..
அந்த அனுபவம் பேசும்போது தப்பா இருக்குமா?
நீங்கள் நினைத்தது போலவே சில மாதங்களில் சுமுகமாக முடிந்தது.. ஆனால் ஒரே ஊரில் இருந்துக்கொண்டு இரண்டு மாதங்கள் பேச்சு வார்த்தை இல்லாமல்.. எத்தனை மனவருத்தம் இருந்தது.. இப்போது நினைத்தாலும் நாமா அப்படி நடந்துக்கொண்டோம் என்று நினைத்து வெட்கமடைகிறேன்.
ஜோசப் சார்...உங்க பதிவைப் பாத்ததும் எனக்கும் நான் வீடு கட்டியதைப் பத்தி ஒரு பதிவு போடனும்னு தோணுது....வீடுன்னா ஃபிளாட்....நேரம் கெடைச்சா உக்காந்து எழுதனும்.
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குநான் வீடு கட்டியதைப் பத்தி ஒரு பதிவு போடனும்னு தோணுது....//
சரியான முடிவு ராகவன். நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நாலு பேருக்கு உதவுமே..
நல்லா விரிவா எழுதுங்க..