24 செப்டம்பர் 2005

இந்த தடுமாற்றம் தேவைதானா?

இந்த தடுமாற்றம் தேவைதானா?
ஒரு நகரத்தின் பெயரில் என்ன இருக்கிறதென்று இந்த அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்?
Madras என்பதை சென்னை என்றும், Bombay என்பதை மும்பை என்றும், Trivandrum என்பதை திருவனந்தப்புரம் என்றும் மாற்றி தமிழ, ஹிந்தி, மலையாளம் அறியாத மக்களின் நாக்கை சுளுக்க வைத்தார்கள் (பெரும்பாலும் அயல் நாட்டவரை).
இதெல்லாம் போதாதென்று இப்போது பல்கலைக் கழகங்களையும் பெயர் மாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
Madras University என்பதை சென்னைப் பல்கழகம் என மதறாஸ் மாநகரம் சென்னை மாநகரமானதிலிருந்தே மக்கள் தாங்களாகவே மாற்றிக்கொண்டார்கள். ஆனால் பல்கலைக்கழக அலுவலக வாயிலில் உள்ள பெயர்ப்பலகை இப்போதும் மதறாஸ் யூனிவர்சிட்டி என்றுதான் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன் இதை வெகு முக்கிய விஷயமாக கருத்தில் கொண்டு ஆராய்ச்சி செய்து சென்னை பல்கழகத்தின் பெயரை மீண்டும் மதறாஸ் பல்கலைக்கழகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யும் நோக்கத்துடன் எதிர்க்கட்சிகளுடைய பெரும் எதிர்ப்புகளிடையில் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது!
எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு என்றும் மதிப்புத் தராத தமிழக அரசு (ஜெயலலிதா என கொள்க) திடீரென்று அடுத்த நாளே நிறைவேற்றப்பட்ட மசோதாவை வாபஸ் பெற்றுக்கொண்டது!
தமிழகத்தில் உள்ள எத்தனையோ முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க நேரமில்லாத அரசுக்கு சென்னைப் பல்கழகத்தின் பெயர் மாற்றம்தான் தலைப்போகக்கூடிய விஷயமாகிவிட்டது!
என்னத்தைச் சொல்ல! அரசியல்வாதிகளைப் புரிந்துக்கொள்ள நம்முடைய சிறிய மூளைக்கு திறனில்லை!
வாழ்க இந்திய அரசியல்!
அன்புடன்,டி.பி.ஆர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக