"the basic idea of using the services of qualified law person is to get a lawyer for ourselves whose work is to fight for us and to achieve success in the courtroom. To enable him to perform his duties the client should also confide in him and tell him the truth. Hiding material facts from him will only harm the client. It is also the duty of the defense lawyer to create an atmosphere of openness in his dealings with his client."
"A criminal defense lawyer will first start off his services by having a conversation with the accused party. From such communication they will try to investigate on various points and will come to know the exact details of the event." (Law Journal: March, 2008 Issue)
*******
சொல்லுங்க...' என்றார் கோபால்.
'நீங்க பெய்ல இருக்கற வரைக்கும் எந்த காரணத்துக்காகவும் ஒங்க ஆஃபீஸ் ஸ்டாஃப் கிட்ட செல்ஃபோன்ல பேசாம இருந்தா நல்லது.'
கோபல் சட்டென்று எழும்பி வந்த கோபத்தை மறைத்துக்கொண்டு, 'எதுக்கு சார்?' என்றான்.
'விஷயமாத்தான் சொல்றேன்.... இந்த கேஸ்ல ஒங்க ஆஃபீஸ் ஸ்டாஃபையும் கூட போலீஸ் விட்னசா சேக்கறதுக்கு சான்ஸ் இருக்கு. அதனால நீங்க சாதாரணமா அவங்கக் கூட பேசறத சாட்சியங்களை கலைக்கறதுக்கு ட்ரை பண்றதா போலீஸ்தரப்புல கோர்ட்ல புகார் சொல்றதுக்கு சான்ஸ் இருக்கு.... ஒருதரம் பெய்ல் கேன்சலாயிருச்சின்னா அப்புறம் கேஸ் முடியறவரைக்கும் கஸ்டடியில இருக்க வேண்டியதாயிரும்....'
'என்ன சார் அக்கிரமமா இருக்கு? நா இன்னொசன்ட் சார். அத நீங்களாவது நம்புறீங்களா இல்லையா? எனக்கு தெரிஞ்சாவணும். சொல்லுங்க... நீங்க நம்பறீங்களா இல்லையா?' கோபால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவது தெரிந்தது. அவருடைய கைகள் அவரையுமறியாமல் நடுங்குவதை கண்ட ராஜசேகர் கோபத்தில் இவர் தன்னை இழந்துவிடுவது வழக்கம் என்று அவருடைய அலுவலர்கள் கூறியதாக வசந்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர்ந்தான்.
'சார்... முதல்ல இந்த கோபத்தை கட்டுப்படுத்துங்க.... இந்த மாதிரி கோர்ட்ல ஒங்களுக்கு எதிரா சாட்சியம் சொல்றப்போ கோபப்பட்டீங்கன்னா எல்லாம் கெட்டுரும்..... ரிலாக்ஸ்... நீங்க அந்த கொலைய செய்யலைன்னு நா நம்பறது இப்ப முக்கியம் இல்ல... கோர்ட் நம்பணும்... அதனால நா இப்ப கேக்கற கேள்விங்களுக்கு பதில் சொல்ல ஒங்களுக்கு புடிக்காட்டாலும் இல்ல இதெல்லாம் தேவையில்லாத கேள்விங்கன்னு தோனினாலும் பொறுமையா, நிதானத்த இழக்காம பதில் சொல்லுங்க... எல்லாமே ஒங்கள நிரபராதின்னு ப்ரூஃப் பண்றதுக்கு நா எடுத்துக்கற முயற்ச்சிங்கறத மறந்துராதீங்க....'
கோபால் சலிப்புடன் தலையை அசைத்தார். 'சரி கேளுங்க.'
ராஜசேகர் தன் கைப்பெட்டியில் இருந்து ஒரு சிறிய ஒலிப்பதிவு கருவியை எடுத்து அவர்கள் இருவர் நடுவிலும் வைத்து ஆன் செய்தான்.
'சார் இந்த டிஸ்கஷன ரிக்கார்ட் பண்ணப் போறேன்....ஏன்னா இத அப்படியே டாக்குமென்ட் பண்றதுக்கு அவசியப்படும்...ஒங்களுக்கு ஏதாச்சும் அப்ஜக்ஷன் இருக்கா?'
'இல்ல சார்...'
'சரி... முதல் கேள்வி. ஒங்களுக்கு அந்த மாதவிய எவ்வளவு நாளா தெரியும்?'
'அந்த பொண்ணு தங்கியிருக்கறது என்னோட வீடுதான் சார்... அது எங்கப்பா கம்பெனிய பாத்துக்கிட்டிருந்தப்போ ப்ரொமோட் பண்ண ப்ராஜக்ட்ல ஒன்னு.... ரோ ஹவுஸ் டைப். மாதவி தங்கியிருக்கறது அந்த rowல கடைசி வீடுங்கறதால விலை போகலை... சரி நாமளே இருப்போம்னு அங்க கொஞ்ச நாள் ஃபேமிலியோட இருந்தேன். ரெண்டு வருசம். அதுக்கப்புறம் வாடகைக்கு விட்டுட்டேன்....'
'அப்படியா? இவங்கதான் முதல் டெனன்டா?'
'ஆமா சார்... இந்தம்மா ஹிண்டு பேப்பர்ல நாங்க குடுத்த அட்வர்ட்டைஸ்மென்ட் பாத்துட்டு அப்ரோச் பண்ணாங்க. ஆனா அவங்க ஒரு சினி எக்ஸ்ட்ரான்னு தெரியாது... தெரிஞ்சிருந்தா குடுத்துருக்க மாட்டேன். அதனால வந்த வினைதான் இது..'
'சரி சார்... ஒங்க ரெண்டு பேருக்கும் வெறும் ஹவுஸ் ஓனர் டெனன்ட்ங்கற ரிலேசன்ஷிப் மட்டுந்தானா... இல்ல வேற ஏதாச்சும்.....'
கோபால் எரிச்சலுடன் பதிலளித்தார். 'வேற என்ன சார் உறவு இருக்க முடியும்? நிச்சயமா வேற எந்த உறவும் இல்லை.'
'சார் இந்த எடத்துல ஒன்னு சொல்லிக்கறேன்.... நீங்க ரெண்டு நாள் போலீஸ் கஸ்டடியில இருந்தப்போ அவங்க கேட்ட கேள்விங்களுக்கு என்ன வேணும்னாலும் சொல்லியிருக்கலாம். ஏன்னா அத உங்களுக்கு எதிரா அவங்க யூஸ் பண்ணிக்குவாங்கன்னு நீங்க நினைச்சி அப்படி செஞ்சிருக்கலாம்... ஆனா இது போலீஸ் பண்ற விசாரணை இல்ல... அதனால தயசு செஞ்சி உங்க மனசுல இருக்கறத அப்படியே சொல்லுங்க. அது என்னெ தவிர வேற யாருக்கும் தெரியாது...'
'உண்மையத்தான் சார் சொல்றேன்... உங்களுக்கு ஒரு பதில் போலீசுக்கு ஒரு பதில்னுல்லாம் இல்ல.'
அப்போதும் சந்தேகம் தீராமல் ராஜசேகர் அவரையே பார்த்தான். பிறகு தொடர்ந்தான்: 'சம்பவம் நடந்த அன்றைக்கி நீங்க அந்த வீட்டுக்கு போயிருந்தீங்களா?'
'ஆமா சார். மாசம் ஒருதரம் போவேன். ரெண்ட் கலெக்ட் பண்றதுக்கு'
'ஓ! சரி... எல்லா மாசமும் நீங்களே போய் வாங்குவீங்களா?'
'ஆம சார்... நா வீட்லருந்து ஆஃபீஸ் போற வழியிலதான் அந்த வீடு இருக்கு.... அதனால ஒரு அஞ்சி நிமிஷம் நின்னு பேசிட்டு வாங்கிட்டு போயிருவேன்... அப்படித்தான் அன்னைக்கும் போனேன்.'
'ஆனா தேதி இருபதுக்கு மேல இருக்குமே....'
'ஆமா சார்.... அப்படி கரெக்ட்டா தேதியெல்லாம் பாக்கறதில்லை... எப்ப சவுகரியப்படுமோ அப்ப போவேன்...'
'அங்க போறப்பல்லாம் கார்லதான் போவீங்களா...இல்ல...'
கோபாலின் முகத்தில் கோபம் தோன்றி மறைந்தது... 'எதுல போனா என்ன சார்? போவேன், அவ்வளவுதான்.'
'நா கேக்கறதுல அர்த்தம் இருக்கு கோபால் சார்... அன்னைக்கி சம்பவ இடத்துல உங்கள பாத்ததா சொன்ன முதல் சாட்சி அந்த வீட்டுக்கு எதிர்ல இருக்கற பார்க்கிங் லாட் பையந்தான். இதே மாதிரியான கேள்விய கவர்ன்மென்ட் வக்கீலும் குறுக்கு விசாரனையில கேக்க சான்ஸ் இருக்கு... அதனால இதுவும் ஒரு குறுக்கு விசாரனைன்னு நினைச்சிக்கிட்டு பதில் சொல்லுங்க... கார்லதான் போவீங்களா?'
'மேக்சிமம் அப்படித்தான் சார்...'
'இப்பவும் நீங்க முழுசா என் கேள்விக்கு பதில் சொல்லலை... மேக்சிமம்னா... கார்ல இல்லாம வேற ஏதாவது மெத்தேட்லயும் போயிருக்கீங்களா, ஆட்டோவுல, டாக்சியில... இப்படி...'
'எப்பவாச்சும் கார் சர்வீஸ்ல இருந்தா ஆட்டோவுல போயிருக்கேன்....'
'சரி... நீங்க கார்ல போறப்போ எப்பவுமே அந்த வீட்டுக்கு எதிர்ல இருக்கற கார்ப்பரேஷன் பே பார்க்கிங்லதான் கார பார்க் பண்ணுவீங்களா?'
'அங்க வேற எங்க சார் பார்க்கிங் இருக்கு....? ஒரு வருசத்துக்கு முன்னால சும்மா கிடந்த இடம் சார் அது. இந்த மேயர் வந்ததுக்கப்புறந்தான் எல்லா இடத்தையும் பே பார்க்கிங்னு ஆக்கிட்டாங்க. வேற எங்கயாவது விட்டுட்டுப் போனா டோ (tow) பண்ணி எடுத்துக்கிட்டு போயிடறான்ங்க...'
தானும் அந்த தொல்லையை அனுபவித்தவன்தானே என்ற நினைப்பில் புன்னகைத்தான் ராஜசேகர். கொஞ்ச தூரம் நடக்கறதுக்கு சோம்பல் பட்டிருந்தால் தானும் கையும் களவுமாக பிடிபட்டிருக்க வேண்டியவன்தானே என்ற எண்ணமும் அவன் மனதில் ஓடியது.
'நீங்க சொல்றதும் சரிதான். மெட்றாஸ்ல இங்க எங்க பார்த்தாலும் பே பார்க்கிங்தானே? எல்லாம் கார்ப்பரேஷனுக்கு வருமானும் கூட்டறதுக்குத்தான் வேறெதுக்கு.... சரி சார்... சம்பவம் நடந்த அன்னைக்கி கார்லதான் போனீங்களா?'
'ஆமா சார்... அந்த பே பார்க்கிங்லதான் வண்டிய விட்டுட்டு போயிருந்தேன்..'
'அதுக்குத்தான் இந்த கேள்வியே... நீங்க சொன்னபடி பார்த்தா... வாடகைய வாங்கிட்டு வர்றதுக்கு மேக்சிமம் அஞ்சி நிமிஷம் ஆயிருக்குமா?'
கோபால் பதில் அளிக்காமல் சிறிது நேரம் மவுனமாக தரையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அவர் வீட்டுக்கு எதிரில் இருந்த பார்க்கில் லாட் சிப்பந்தி வசந்திடம் கூறியது ராஜசேகருக்கு நினைவுக்கு வந்தது...
'இல்ல சார்... அன்னைக்கி வேற ஒரு விஷயம் பேச வேண்டியிருந்தது. அதனால கூட ஒரு பத்து நிமிஷம் ஆயிருக்கும்...'
'சுமார் எத்தன மணிக்கி அங்கருந்து கிளம்பினீங்க? சுமாரா சொன்னா போறும்.'
'அஞ்சி, அஞ்சறை மணி இருக்கும்னு நினைக்கறேன்.'
சம்பவ தினத்தன்று கோபால் மாதவியின் வீட்டு வாசலில் இருந்து இறங்கியதை ராஜசேகர் சாலையின் எதிர்புறத்திலிருந்து பார்த்தபோது மாலை மணி 6.00!
'ஆனா ஒங்கள அங்க சாயந்திரம் ஏழு மணிக்கு பாத்ததா ஒரு லேடி சாட்சியம் சொன்னதா கேள்விப்பட்டேனே? அப்போ மறுபடியும் அவங்க வீட்டுக்கு போயிருந்தீங்களா?'
'அந்த லேடி வேற யாரும் இல்ல சார்... பக்கத்து வீட்டு ஓனர்தான்... அவங்களுக்கும் எனக்கும் பெர்சனலா ஒரு சின்ன ப்ராப்ளம். அத மனசுல வச்சிக்கிட்டு நா அங்க போறப்பல்லாம் எதையாச்சும் சொல்லி வம்பு பண்ணும். மாதவி கூடவும் எப்பவும் சண்டைதான்... அவ வீட்டுக்கு ஜாஸ்தி கெஸ்ட்டுங்க வராங்க... பெரிய நியூசென்ஸ்... நீங்களா காலி பண்ணலன்னா போலீசுக்கு போவேன், கோர்ட்டுக்கு போவேன்னு எப்ப பார்த்தாலும் ரப்ச்சர்தான்.... அதான் வேணும்னு டைம மாத்தி சொல்லி.... இந்த கேசு மட்டும் முடியட்டும்... அவள......' கோபத்தை அடக்க முடியாமல் தான் அமர்ந்திருந்த கட்டிலின் படுக்கை விரிப்பை அவர் கசக்கி......
தன் இருக்கையில் இருந்து எழுந்த ராஜசேகர் அவர் தோள்மீது கை வைத்து அழுத்தினான். 'ரிலாக்ஸ் மிஸ்டர் கோபால்.....ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப். This is not the time to become emotional.... அப்புறம் ரேஷனலா (rationale) திங்க் பண்ண முடியாது...அப்புறம் இன்னொன்னு. ஒங்களுக்கு எதிரா சாட்சியம் சொல்ல வர்றவங்கள எல்லாம் பழி தீர்க்கணும்னு பார்த்தா அது நடக்காத விஷயம்... அது ஒங்களுக்கு பாதகமா முடியறதுக்குத்தான் சான்ஸ் இருக்கு.. மறந்துறாதீங்க.'
கோபால் சமாதானமடைந்து எழுந்து ஃப்ரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை எடுத்து பருகிவிட்டு அமர்ந்தார். 'என் மனசுல நிச்சயமா அந்த எண்ணம் இல்ல சார்.. சும்மா ஒரு பேச்சுக்கு....'
ராஜசேகர் தொடர்ந்தான்.
'அப்போ அந்த லேடியோட டைமிங்ல தப்பு இருக்குன்னு சொல்றீங்க?'
'ஆமா சார்... அதுமட்டுமில்ல சார். நா அந்த வீட்லருந்து வந்தப்போ மாதவி உயிரோடதான் இருந்தாங்க... அதுதான் நிஜம்...'
அதுதான் எனக்கும் தெரியுமே என்று தனக்குள் கூறிக்கொண்டான் ராஜசேகர்.
'சரி சார்....நா உங்கள நம்பறேன்... ஆனா அவங்க உங்கள வழியனுப்ப கேட்டு வரைக்கும் வந்தாங்களா? நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுங்க... எதுக்கு கேக்கறேன்னா அப்படி வந்திருந்தா அவங்கள வீட்டுக்கு எதிர்ல இல்ல பக்கத்துல இருக்கறவங்க யாராச்சும் பார்த்திருக்கறதுக்கு சான்ஸ் இருக்கே... அப்படி யாராச்சும் ஒரு விட்னஸ் கிடைச்சா இந்த கேசையே ஒன்னுமில்லாம ஒடச்சிரலாம்...'
நீயோ ஒரு சாட்சிதானடா என்ற தன்னுடைய உள்மனதை சிரமப்பட்டு அடக்கினான்.
'தெரியலையே சார்.... அன்னைக்கி அந்த வீட்லருந்து நேரா ஒரு பார்ட்டிய பாக்க போக வேண்டியிருந்தது. அதையே திங்க் பண்ணிக்கிட்டு ரோட க்ராஸ் பண்ணதால மாதவி வீட்டு வாசல்ல நிக்கறாங்களான்னு பாக்க தோனலை... அதுவுமில்லாம இப்படியெல்லாம் நடக்கும்னு யார் சார் நினைச்சா?'
'சரி... அங்கருந்து நீங்க பாக்கப் போன பார்ட்டிய பாக்க முடிஞ்சிதா?'
'இல்ல சார்... நா சொன்ன டைமுக்கு வரலைன்னு கோச்சிக்கிட்டு போய்ட்டார்.'
'எதுக்கு கேக்கறேன்னா அவர மீட் பண்ணியிருந்தா... அவர வச்சே டைம கன்ஃபர்ம் பண்ணியிருக்கலாம்.'
'இல்ல சார்... எல்லாம் என் துரதிர்ஷ்டம்.... ஈசியா கிடைச்சிருக்க வேண்டியி அலிபி அது...'
'கரெக்ட்... அதப்பத்தி இப்ப வருத்தப்பட்டு பிரயோசனம் இல்ல....'
சிறிது நேரம் யோசித்த கோபால் சட்டென்று நிமிர்ந்து ராஜசேகரை பார்த்தார். 'சார்... அந்த பொண்ணு எத்தன மணிக்கி இறந்ததா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது?'
'அது போலீஸ் சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணாத்தான் நம்ம கையில கிடைக்கும். ஆனா ராத்திரி எட்டு மணிக்கி மேல இருக்குமாம்... '
'அப்ப எப்படி சார் அத நா செஞ்சிருக்க முடியும்? நா அப்ப எங்க இருந்தேன்னு ப்ரூஃப் பண்றது ஈசி சார்...'
ராஜசேகர் சிரித்தான். 'அது தேவையிருக்காது சார். பின்னந்தலையில பட்ட அடியால நிறைய ரத்தம் லாஸ் ஆயிருக்குது. உடனே யாராவது ஹெல்ப்புக்கு போயிருந்தா அவங்கள காப்பாத்தியிருக்கலாமாம். ஆனா வந்து போனவன் கதவ இழுத்து சாத்திட்டு போய்ட்டதால ஆட்டமாட்டிக் லாக் லாக்காயிருக்கு. வெளியிலருந்து யாராலயும் தொறக்க முடியாதுல்லே...? ரத்தப் போக்கு நிக்காம போய்கிட்டேயிருந்ததால கொஞ்ச நேரத்துல அவங்க unconcsious ஆயிருக்கலாமாம். அதுலருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலதான் உயிர் போயிருக்க வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொல்றாராம். அந்த கணக்குலதான் இஞ்சுரி ஆறுலருந்து ஏழு மணிக்குள்ள நடக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க. உங்கள அங்க ஏழு மணிக்கி பாத்ததா அந்த லேடி சொன்னதாலத்தான் சந்தேகம் ஒங்க மேல வந்துருக்கு. அதனாலதான் கேக்கறேன், நீங்க மறுபடியும் எந்த காரணத்துக்காவது அந்த வீட்டுப்பக்கம் ஏழு மணி வாக்குல போனீங்களா? காரணம் எதுவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். சொல்லுங்க.'
'இல்ல சார்... அந்த டைம்ல அங்க நா போகல. அந்த பார்க்கிங் லாட்லருந்தவனையே கேட்டு பாக்கட்டுமே.... அந்த லேடி டைம மாத்தி சொல்லுதுன்னு நினைக்கறேன்.'
தொடரும்..
கோபப்பட்டீங்கன்னா எல்லாம் கெட்டுரும்...//யாராலே இருக்க முடியும்?
பதிலளிநீக்கு‘’கோபால் பதில் அளிக்காமல் சிறிது நேரம் மவுனமாக தரையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.’’
பதிலளிநீக்குஅவர் எதையோ மறைக்கிறார் என எண்ணுகிறேன். அது வழக்கறிஞருக்கு சாதகமாக இருக்குமா எனத்தெரியவில்லை. ஆவலுடன் தொடர்கிறேன்.
முந்தைய பகுதிகளின் இணைப்பை கொடுங்கள் தவற விட்டவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.
பதிலளிநீக்குகவியாழி கண்ணதாசன் said...
பதிலளிநீக்குகோபப்பட்டீங்கன்னா எல்லாம் கெட்டுரும்...//யாராலே இருக்க முடியும்?//
காரியம் பெருசா வீரியம் பெருசாங்கறா மாதிரி சில சமயங்கள்ல இதையெல்லாம் பொறுத்தக்கத்தான் வேணும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்கு‘’கோபால் பதில் அளிக்காமல் சிறிது நேரம் மவுனமாக தரையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.’’
அவர் எதையோ மறைக்கிறார் என எண்ணுகிறேன். அது வழக்கறிஞருக்கு சாதகமாக இருக்குமா எனத்தெரியவில்லை.//
அப்படீன்னு வக்கீல் நினைக்கிறார். ஆனா உண்மை என்னன்னு போக, போகத்தான் தெரியும், யாருக்கு சாதகமாக அமையும்னு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
T.N.MURALIDHARAN said...
பதிலளிநீக்குமுந்தைய பகுதிகளின் இணைப்பை கொடுங்கள் தவற விட்டவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.//
பதிவின் துவக்கத்துல 'இதுவரை' ன்னு ஒரு சுட்டி குடுத்திருக்கேனே... அதுல இதுவரைக்கும் வெளியான கதைய முழுசா பிடிஎஃப் ஃபார்மேட்ல குடுத்துருக்கேன். டவுன்லோட் செஞ்சிக்கூட படிச்சிக்கலாம்.. சுட்டி வேலை செய்யிதான்னு பாருங்க. எனக்கு வேலை செய்யிது...
கேள்விகள் இப்பவே இப்படி!கோர்ட்டுக்குப் போன பின்!சூப்பர்
பதிலளிநீக்குசென்னை பித்தன் said...
பதிலளிநீக்குகேள்விகள் இப்பவே இப்படி!கோர்ட்டுக்குப் போன பின்!சூப்பர்//
கோர்ட்ல கோபால் சாட்சி கூண்டுல ஏறினாத்தான இப்படியெல்லாம் அரசு வக்கீல் கேட்டு டார்ச்சர் பண்ண முடியும்? கோபால் என்ன பண்ணுவார்னு தெரியலையே?
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்குஇவர் டிஸ்கஸ் பண்ரதை ரெகார்ட் செய்வது சாட்சியமாக முடியுமா.?
.M Balasubramaniam said...
பதிலளிநீக்குஇவர் டிஸ்கஸ் பண்ரதை ரெகார்ட் செய்வது சாட்சியமாக முடியுமா.?//
அமெரிக்காவிலுள்ள போன்ற நாடுகளிலுள்ள பிரபல க்ரிமினல் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுடன் நடக்கும் உரையாடல் அனைத்தையும் ரிக்கார்ட் செய்வார்களாம். ஏனெனில் வழக்கின் இறுதியில் வரும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் தங்களுடைய வழக்கறிஞர்கள் மீதே நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளதாம். இது நம்முடைய நாட்டில் நடைமுறையிலுள்ளதா என்று தெரியவில்லை.
இவர் டிஸ்கஸ் பண்ரதை ரெகார்ட் செய்வது சாட்சியமாக முடியுமா.?//
பதிலளிநீக்குநிச்சயம் முடியாது.
மணிக்கு மணி சிஐடி வேலை நடக்குது .. யாரா இருக்கும்.
பதிலளிநீக்கு