முன்கதை
அடுத்த நாள் காலை ராஜசேகர் எழுந்ததும் 'இன்று அட்வகேட் மகாதேவனை அழைக்க வேண்டும்' என்று தன்னுடைய குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு வழக்கம் போல நடந்துவிட்டு வரலாம் என்று வீட்டிலிருந்து புறப்பட்டான்.
அடுத்த நாள் காலை ராஜசேகர் எழுந்ததும் 'இன்று அட்வகேட் மகாதேவனை அழைக்க வேண்டும்' என்று தன்னுடைய குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு வழக்கம் போல நடந்துவிட்டு வரலாம் என்று வீட்டிலிருந்து புறப்பட்டான்.
சாதாரணமாக காலையில் அவன் வாக்கிங் செல்லும்போது எதைப்பற்றியும் யோசிக்காமல் மூச்சை உள்ளிழுந்து வெளியிடுவதிலேயே கவனத்தைச் செலுத்துவான். ஆனால் அன்று அவ்வாறு செய்ய முடியாமல் முந்தைய தினம் கோபாலை மாதவி வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டி மணியுடன் அவன் தொலைபேசியில் பேசியவற்றைப் பற்றிய சிந்தனை அவனை ஆட்கொண்டது.
மணி சொல்றத வச்சி பார்த்தா கோபால் அன்னைக்கி சாயந்தரம் ஆறே முக்கால் மணியிலருந்து ஏழு மணி வரைக்கும் மாதவி வீட்டுக்குள்ள இருந்துருக்கார். ஆனால் அவர் அந்த வீட்டுக்கு வெளியில் இருந்த அழைப்பு மணியை அடித்துக்கொண்டிருந்ததை பார்த்ததாகத்தான் அடுத்த வீட்டு பெண் சாட்சியம் கூறியிருக்கிறார். இது எப்படி சாத்தியமாகும்?
இந்த கேள்வியை மனதில் அசைபோட்டுக்கொண்டே நடந்தவனுக்கு சட்டென்று அந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதைப் போல் இருந்தது. மாதவியின் வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்த கோபால் அடுத்த வீட்டில் வசிக்கும் பெண் வருவதை கவனித்திருக்க வேண்டும். அவளிடமிருந்து தப்பிக்க கதவுக்கருகில் இருந்த காலிங்பெல்லை அடிப்பதுபோல் நடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் நினைத்ததற்கு நேர் மாறாக அந்த பெண் அவரைக் கண்டதும் கோபத்தில் ஏதாவது கூறியிருக்க வேண்டும். கோபாலும் கோபத்தில் திருப்பி ஏதாவது சொல்லியிருக்க வேண்டும்.
இல்லை.... அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை.... ஏற்கனவே கோபாலை அந்த வீட்டிற்கு வந்து செல்வதை அந்த பெண் பலமுறை பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே அந்த நேரத்தில் அவரை அங்கு பார்த்ததற்காகவே அந்த பெண் கோபம் அடைந்திருக்க வாய்ப்பில்லை. இது கோபாலுடைய சூட்சுமமாக இருக்கத்தான் வாய்ப்புள்ளது. மூடியிருந்த கதவுக்கு முன்னால் தன்னை கண்டதற்கு ஒரு வலுவான சாட்சியத்தை உருவாக்கும் நோக்கத்துடன் கோபாலே அந்த பெண்ணை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்திருக்க வேண்டும்...
இந்த இரண்டு கோணத்திலும் தன்னுடைய சிந்தனையை தொடர்ந்தான். இறுதியில் அவன் இரண்டாவதாக நினைத்ததுதான் சரியானதாக இருக்கும் என்ற தீர்மானத்துடன் நடையை முடித்துக்கொண்டு திரும்பினான்.
அவனுடைய குடியிருப்பின் வளாகத்திற்குள் நுழைந்ததும் எதிரில் சீனிவாசன் அவருடைய பால்கணியிலிருந்து தன்னை நோக்கி சைகை காட்டுவதை கவனித்தான். 'என்ன சார்?' என்றான்.
'ஒரு நிமிஷம் வந்துட்டு போக முடியுமா சார்?' என்றார் சீனிவாசன்.
அன்றைக்கு அவனுக்கு எந்த கேசும் இல்லை. ஆகவே அவர் அழைத்ததுமே தன் குடியிருப்பிற்கும் கூட செல்லாமல் படியேறி முதல் தளத்திலிருந்த சீனிவாசனின் குடியிருப்பை அடைந்தான். வாசற்கதவு திறந்தே இருந்தது. சீனிவாசன் அவனை எதிர்பார்த்து சோபாவில் அமர்ந்திருந்ததைக் கண்டான். வாக்கிங் ஷூவை அவிழ்த்து வாசலில் வைத்துவிட்டு சாக்ஸுடன் அவருடைய வரவேற்பறைக்குள் நுழைந்து அவருக்கருகில் அமர்ந்தான். 'சொல்லுங்க சார்.. ஏதாவது அர்ஜன்டா?'
'இல்ல சார்... நேத்தைக்கி என் மருமகக் கிட்ட பேசினீங்களா... அவ என்ன சொன்னான்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்....'
ராஜசேகருக்கு நளினியிடம் தான் பேசியதை முழுவதுமாக அவரிடம் கூற விருப்பம் இல்லை. அவர் மருத்துவமனையில் இருந்து வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 'அவங்கக் கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் அங்க போனேன் சார்...'
'என்ன விஷயம்?'
'கோபாலுக்கு எதிரா சாட்சியம் சொல்லணும்னு போலீஸ் வந்து கேட்டா ஹெல்த் சரியில்லை... அதனால வர முடியாதுன்னு சொல்லிருங்கன்னு......'
சீனிவாசன் ஒரு சில நொடிகள் பதில் பேசாமல் அமர்ந்திருந்தார். பிறகு அவனை திரும்பி பார்த்த பார்வையில் வேதனை தெரிந்தது. 'அந்த பொண்ணு நினைச்சா பெண் கொடுமைன்னு சொல்லி தனியா ஒரு கம்ப்ளைன்டே குடுத்திருக்க முடியும் சார்... ஆனா அப்படி செய்யலை.... அப்படியிருக்கறப்போ கண்டிப்பா கோபாலுக்கு அகெய்ன்ட்ஸ்டா விட்னஸ் ஸ்டாண்டுல ஏறமாட்டா சார்.... நா சொல்றது சரிதானே?'
'என்னெ அவருக்கு சாதகமா விட்னஸ் குடுக்க கூப்டாதீங்க சார்னும் உங்க மருமக கேட்டா என்று இவர் கிட்ட சொல்லலாமா' என்று நினைத்தவன் பிறகு வேண்டாம் என்று தீர்மானித்தான். 'ஆமா சார்...' என்றான் சுருக்கமாக.
'ரொம்ப நல்ல பொண்ணு சார்... அவளுக்கு இப்ப இருக்கற நிலமையில என்னெ விட்டா சொந்தம்னு சொல்லிக்கறதுக்கு யாரும் இல்ல.... கூட பொறந்த அண்ணன் ஒருத்தன் இருக்கான்னுதான் பேரு..... வய்ஃப் பேச்ச கேட்டுக்கிட்டு இப்படியொரு தங்கை இருக்கறதையே மறந்துட்டான் போலருக்கு..... ஆஸ்பத்திரிக்குக் கூட இதுவரைக்கு வந்து பாக்கலை.... ரெண்டு தரம் ஃபோன் போட்டு சொன்னேன்.. அப்புறம் விட்டுட்டேன்.....' என்ற சீனிவாசன் சற்று நேரம் மவுனமாகிப் போனார்..... பிறகு, 'உங்க சன் கிட்டருந்து டைவர்ஸ் வாங்க டிசைட் பண்ணிட்டேன் மாமான்னு என் கிட்ட சொன்னப்போ.... நீ எங்கம்மா போவேன்னு கேட்டேன்..... அதுக்குக் கூட பதில் சொல்ல தெரியல பாவம்.... அந்த அளவுக்கு வெகுளி....'
அதற்கு மேலும் அங்கிருந்து பேச்சை வளர்த்து அவரை மனநோகச் செய்ய விரும்பாத ராஜசேகர் எழுந்து நின்றான். 'சாரி சார்... இன்னைக்கி அர்ஜன்டா வேற ஒரு கேஸ் இருக்கு......'
சீனிவாசனும் எழுந்து நின்றார். 'ஓக்கே சார்....' என்றவாறு அவனுடன் வாசல் வரை வந்தவர். 'சார் மகாதேவன் கூப்ட்ருந்தான்.... உங்கக்கிட்ட கோபாலுக்கு முன்னால ஆஜரான வக்கீல பாக்கலாம்னு சஜ்ஜஸ்ட் பண்ணானாம்... ஆனா நீங்க அத கண்டுக்கவே இல்லைன்னு சொன்னான்.... உண்மையா சார்?' என்றார் தயக்கத்துடன்.
ராஜசேகர் நின்று அவரை திரும்பிப் பார்த்தான். 'அப்படியெல்லாம் இல்ல சார்.... இன்னைக்கி காலையில எழுந்ததுமே அவர கூப்டணும்னு நான் நோட் பண்ணி வச்சிருக்கேன்.... இன்னைக்கி இல்லன்னா நாளைக்கி கட்டாயம் போயி பாக்கறேன்.... எனக்கும் யூஸ்ஃபுல்லா இருக்குமே...'
'தாங்ஸ் சார்..... ஆரம்பத்துல கோபாலுக்கு இது வேணும்னு நினைச்சாலும்... எனக்கும் அவனெ விட்டா வேற ஆள் இல்லையே சார்.... நளினியோட ஃப்யூச்சர நினைச்சாலும் கவலையா இருக்கு..... இதுக்கப்புறம் கோபால் திருந்திருவான்னு எனக்கு நம்பிக்கையிருக்கு.... அதனாலதான் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துறாதம்மான்னு அவகிட்ட சொல்லி வச்சிருக்கேன்.... அப்புறம் பகவான் விட்ட வழி...'
'இந்த கேஸ் முடியறதுக்குள்ள அவர் கிட்டருந்து டைவர்ஸ் வாங்கிருவேன் சார்...' என்று தீர்க்கமாய் தன்னிடம் நளினி தெரிவித்ததை நினைவுகூர்ந்தான் ராஜசேகர். ஆனால் இதை எப்படி இவரிடம் சொல்வது....? வேணாம். ஒருவேளை கேஸ் முடியறதுக்குள்ள நளினி தன் டிசிசனை மாத்திக்கிட்டாலும் மாத்திக்கலாம்... எதுக்கு நம்ம வீணா அவ சொன்னத சொல்லி இவர் மனச நோகடிக்கணும்?
'சரி சார்... நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்காதீங்க.... கோபால இந்த கேஸ்லருந்து விடுவிக்கறதுக்கு என்னால முடிஞ்சத நா கண்டிப்பா செய்வேன் சார்.... கவலைப்படாதீங்க..' என்ற ஆறுதலான வார்த்தைகளோடு அவரிடமிருந்து விடைபெற்றான். 'நா அந்த லாயர மீட் பண்ணிட்டு வந்து ஃபீட்பேக் தர்றேன்.'
'சரி சார்.... அது போறும்.'
********
'சார்.... நீங்க வந்ததும் ஐயா வரச்சொன்னார்.'
காவல்நிலையத்திற்குள் நுழைந்ததுமே வாசலுக்கருகில் அமர்ந்த ரைட்டர் கூறியதைக் கேட்ட எஸ்.ஐ. தன்ராஜ் பதில் ஒன்றும் கூறாமல் தன் இருக்கையை நெருங்கி அமர ரைட்டர் தன் வலப்பக்கம் அமர்ந்திருந்த ஏட்டையாவை பார்த்தான். 'என்னாச்சிங்க இவருக்கு? ஏன் கேக்காத மாதிரி போறார்?' என்று கிசுகிசுத்தான்.
'சொல்லிட்டேல்ல... உன் வேலைய பாரு.... அவருக்கு எப்ப போவணும்னு தோனுதோ போய்க்கட்டும்... மறுபடியும் அவர் டேபிள் வரைக்கும் போயி நிக்காத..' என்றார் ஏட்டு. 'அவங்க ரெண்டு பேருக்கும் இடையிலதான் கொஞ்ச நாளாவே டேர்ம்ஸ் சரியில்லையே?'
என்னவோ ஏட்டய்யா.... இருக்கறது நாலு பேரு....'
அடுத்த நொடியே ஆய்வாளர் அறையிலிருந்து அழைப்பு மணி கிர்ர்ர்ர்ர் என்று அலற 'உடமாட்டார் போலருக்கே என்றவாறு ஏட்டு எழுந்து அவருடைய அறைக்குள் நுழைந்து விரைப்புடன் சல்யூட் அடித்துவிட்டு நின்றார்.
'யோவ் க்ரைம் எஸ்.ஐ. வந்ததும் என்னெ வந்து பாக்கணும்னு சொல்ல சொன்னேனே சொல்லிட்டீங்களா?'
'ரைட்டர் சார் வந்ததுமே சொல்லிட்டார் சார்... நா வேணும்னா போய் இன்னொரு தபா சொல்லவா சார்?'
ஆய்வாளர் எரிச்சலுடன் ஏட்டை நிமிர்ந்து பார்த்தார். 'வேணாம், வேணாம்... அவர் வர்றப்போ வரட்டும்... நீ போயி வேலைய பாரு.'
'சரிங்கைய்யா..' என்றவாறு ஏட்டு அவருடைய அறையிலிருந்து வெளியில் வரவும் எஸ்.ஐ தன்ராஜ் அங்கு வரவும் சரியாக இருந்தது. 'சார்... ஐயா...' என்று தயக்கத்துடன் அவர் முகத்தைப் பார்த்த ஏட்டு அங்கு எள்ளும் கொள்ளும் வெடிப்பதைப் பார்த்ததும் நமக்கேன் வம்பு என்று வாயை மூடிக்கொண்டார்.
'இப்ப பாரு வேடிக்கைய....' என்று கிசுகிசுத்த ரைட்டர பார்த்து முறைத்தவாறு தன் இருக்கையில் அமர்ந்த ஏட்டு, 'யோவ் கொழுப்பா...? அவங்க காதுல மட்டும் விழுந்திச்சி... நீ தொலைஞ்சே.... மூடிக்கிட்டு வேலைய பார்...' என்றவாறு தன் இருக்கையில் அமர்ந்து தன் அலுவலை பார்க்கலானார்.
ஆய்வாளர் அறைக்குள் நுழைந்த தர்மராஜ், 'சார் கூப்ட்டீங்களா?'
அவர் அறைக்குள் நுழைந்ததை கவனித்தும் கவனியாததுபோல் தன் முன் விரித்து வைத்திருந்த மாதவி வழக்கின் குற்றப்பத்திரிக்கையை படித்துக்கொண்டிருந்த ஆய்வாளர் அப்போதுதான் அவர் வந்ததை உணர்ந்தவர்போல் போலியான ஒரு புன்னகையுடன் தன் முன் இருந்த இரு இருக்கைகளில் ஒன்றை காண்பித்தார். 'உக்காருங்க.'
தன்ராஜ் அமர்ந்து அவராக பேசட்டும் என்று காத்திருந்தார். ஏறக்குறைய முப்பத்தைந்து வருட பணிக்காலத்திற்குப் பிறகு இன்னும் ஓய்வு பெற ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர் பெருமாள். ஆனால் எஸ்.ஐ. தன்ராஜ் நேரடியாக எஸ்.ஐஆக பணியில் சேர்ந்தவர். ஆகவே பெருமாளை தன்னுடைய உயர் அதிகாரியாக ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர். அதற்கு நேர் எதிராக ஸ்ட்ரெய்ட்டா எஸ்.ஐ. ஆயிட்டா நீ என்ன பெரிய கொம்பா.... எக்ஸ்பீரியன்ஸ் என்ன இருக்கு என்ற மனநிலையில் அவரை ஒரு விரோதியாக பாவிப்பவர் பெருமாள். ஒருவருக்கு inferiority complex மற்றவருக்கு superiority complex....ஒருவிதத்தில் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான்....
'உங்க சார்ஜ் ஷீட்ட படிச்சி பாத்ததுல ஒன்னு ரெண்டு பாய்ன்ட்ஸ் விட்டுப்போயிருக்கா மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்.....' என்றவாறு தன்னைப் பார்த்த ஆய்வாளரை எவ்வித சலனமுமில்லாமல் பார்த்தார் தன்ராஜ்.
அவரிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்த பெருமாள் அவர் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்க எல்லாம் திமிர்... என்னன்னு கேட்டா என்ன குறைஞ்சா போயிருவே என்று மனதில் நினைத்தவாறு தொடர்ந்தார்.... 'இருந்தாலும் இப்ப நாம அதப்பத்தி டிஸ்கஸ் பண்ண வேணாம்.... பிபியும் பாத்துறட்டும். அவர் என்ன சொல்றார்னு பாக்கலாம்... என்ன சொல்றீங்க?'
'சரி சார்.' என்றார் தன்ராஜ் சுருக்கமாக.
அடுத்த சில நொடிகளில் தன்ராஜ் தயாரித்திருந்த குற்றப்பத்திரிக்கையில் கையெழுத்திட்டு தன் ஆய்வாளர் பெயர் முத்திரைய பதித்த பெருமாள், 'இங்க நீங்களும் கையெழுத்த போட்ருங்க.' என்றவாறு அதை தன்ராஜிடம் திருப்பி காட்டினார். 'இத ப்ரிப்பேர் பண்ணது நீங்கதானே.... அதான்...'
பதில் ஏதும் பேசாமல் அதை தன்னிடம் இழுத்த தன்ராஜ் பரபரவென்று கையெழுத்திட்டு திருப்பி அளித்தார். பிறகு தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றார், 'வேற ஒன்னும் இல்லையே சார்.... நா போலாமா?'
பெருமாள் வியப்புடன் அவரை பார்த்தார். 'அப்போ நீங்க இந்த ஃபைல் கூட போகலையா?'
தொடரும்...
//ஒருவருக்கு inferiority complex மற்றவருக்கு superiority complex....ஒருவிதத்தில் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான்....//
பதிலளிநீக்குசரியான மதிப்பீடு. இன்றைக்கும் பல அலுவலகங்களில் இதனால் தான் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
துணை ஆய்வாளர் தன்ராஜ் குற்றவியல் அரசு வழக்குரைஞரைப் போய் பார்க்கமாட்டார் என எண்ணுகிறேன். ஆய்வாளர் பெருமாள் போவாரா?
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
// அவரிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்த பெருமாள் அவர் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்க எல்லாம் திமிர்... என்னன்னு கேட்டா என்ன குறைஞ்சா போயிருவே என்று மனதில் நினைத்தவாறு தொடர்ந்தார்//
பதிலளிநீக்குMost of our life (when we are awake) we spend in the work place. If one is not happy at his workplace, means he lived major portion of his life dwelling in sadness.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
//ஒருவருக்கு inferiority complex மற்றவருக்கு superiority complex....ஒருவிதத்தில் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான்....//
சரியான மதிப்பீடு. இன்றைக்கும் பல அலுவலகங்களில் இதனால் தான் பணிகள் பாதிக்கப்படுகின்றன.//
மிகச் சரியாக சொன்னீர்கள். இந்த நோய்க்கு தனியார் துறை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குதொடர்கிறேன்.//
நன்றி.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குதொடர்கிறேன்.//
நன்றி.
Packirisamy N said...
பதிலளிநீக்கு// அவரிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்த பெருமாள் அவர் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்க எல்லாம் திமிர்... என்னன்னு கேட்டா என்ன குறைஞ்சா போயிருவே என்று மனதில் நினைத்தவாறு தொடர்ந்தார்//
Most of our life (when we are awake) we spend in the work place. If one is not happy at his workplace, means he lived major portion of his life dwelling in sadness. //
Not only that if we are not happy at the office it will affect our family as well.
Thanks for your comment.
இவரே போட்டுகிட்ட முடிச்சில் இருந்து தப்பிக்கத்தானே அந்த முடிச்சில் போய் விழுந்தார்...நல்ல சமாதானம் தான்.
பதிலளிநீக்கு