Supreme Court observations in Criminal Appeal No. 811 of 1997 State Vs.Anil Sharma.
"We find force in the submission of the CBI that custodial interrogation is qualitatively more elicitation orientated than questioning a suspect.. An effective interrogation of suspected person is of tremendous advantage in disinterring many useful informations and also materials which would have been concealed. Success in such interrogation would elude if the suspected person knows that he is well protected and insulated during the time he is interrogated. Very often interrogation in such a condition would reduce to a mere ritual. The argument that the custodial interrogation is fraught with the danger of the person being subjected to third degree methods need not be countenanced, for, such an argument can be advanced by all accused in all criminal cases. The Court has to presume that responsible Police Officers would conduct themselves in a responsible manner and that those entrusted with the task of disinterring offences would not conduct themselves as offenders."
****
`மேலும், எதிரி கோபாலை நிலையத்திலிருந்த அனைத்து கான்ஸ்டபிள்களும் தெரிந்து வைத்திருந்ததையும் அவரிடம் மிகவும் மரியாதையாக நடந்துக்கொண்டதையும் கவனித்த தன்ராஜுக்கு அவருடைய பணமும் செல்வாக்கும் ஆய்வாளர் வரையிலும் கூட பாய்ந்திருக்க வாய்ப்புண்டு என்று தோன்றியது. ஆகவேதான் தன்னுடைய கேள்விக்கு வேண்டுமென்றே பதிலளிக்காமல் முரண்டு பிடித்த கோபாலை ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று என்று நினைத்தபோது எதுக்குடா சென்னைக்கி மாற்றலாகி வந்தோம் என்று நினைத்து தன்னைத்தானே நொந்துக்கொண்டார். சின்ன ஊர்ல இருந்துருந்தா நாமளே ராஜா நாமளே மந்திரின்னு இருந்திருக்கலாம்.... இங்க எத்தன தலைக்கு சலாம் போட வேண்டியிருக்கு... கொடுமை....
அதே சிந்தனையில் நொந்துப்போய் அமர்ந்திருந்த எஸ்.ஐ. தன்ராஜ் சில நிமிடங்களுக்குப் பிறகு வழக்கு விசாரனையில் சாட்சிகளிடமிருந்து அதுவரை பெற்றிருந்த வாக்குமூலங்கள் ஃபைல் செய்திருந்த கோப்பை எடுத்து புரட்டினார்.
முதல் சாட்சி மாதவியின் வீட்டு பணிப்பெண். அவள்தான் சம்பவம் நடந்த தினத்திற்கு அடுத்த நாள் காலை மாதவி கதவை திறக்காமல் இருக்கவே அடுத்த வீட்டில் குடியிருந்தவர்கள் மூலம் போலீசுக்கு புகார் செய்தாள்.
இரண்டாவது சம்பவ தினத்தன்று மாலை ஏழு மணிக்கு அக்யூஸ்டை மாதவியின் வீட்டு வாசலில் பார்த்ததாக தங்களிடம் தெரிவித்த பெண். அவர் தன் கணவருடன் அடுத்த வீட்டில் குடியிருப்பவர்.
மூன்றாவது சம்பவம் நடந்த அன்று அக்யூஸ்ட் தன் வாகனத்தை பார்க் செய்திருந்த மாநகராட்சி பார்க்கிங் லாட் பணியாள்.
அவற்றைத் தொடர்ந்து கோபாலின் அலுவலகத்தில் பணியாற்றிய அவருடைய காரியதரிசி ராம்ராஜ், மேனேஜர் ஏகாம்பரம், ஆகிய அவருடைய அலுவலக பணியாட்களுடைய வாக்குமூலங்கள்.
இதில் இரண்டு மற்றும் மூன்றாவது சாட்சிகள் கோபாலை சம்பவ இட்டத்தில் பார்த்ததாக கூறியிருந்தாலும் அவர்கள் குறிப்பிட்ட சமயத்தில் (Time) இருந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்பதும் இன்னும் குழப்பமாகவே இருந்தது.
இந்த இருவரில் யார் கூறுவதற்கு உண்மை? ஒருவேளை இருவர் கூறுவதும் உண்மையானால் ஆறு மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட எதிரி மீண்டும் ஏழு மணிக்கு அங்கு சென்றிருக்கக் கூடுமா? அப்படி அவர் அங்கு சென்றிருக்கும் பட்சத்தில் தன்னுடைய வாகனத்தில் சென்றிருந்தால் அதை ஏன் பார்க்கிங் லாட் பணியாள் குறிப்பிடவில்லை? ஒருவேளை கோபால் தன்னுடைய வாகனத்தை எப்போதும் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல் வேறு எங்காவது நிறுத்தியிருப்பாரோ? அல்லது வேறு ஏதாவது வாகனத்தில் சென்றிருப்பாரோ? ஆட்டோ, டாக்சி....?
இந்த கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் குற்றவாளியை பார்த்ததாக வாக்குமூலம் அளித்திருந்த இவர்கள் இருவரையுமே மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தன்னுடைய நாட்குறிப்பு கையேட்டில் குறித்துக்கொண்டார்.
அப்படி அவர் அங்கு மீண்டும் சென்றிருந்தால் எதற்காக சென்றார் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முன்பு இவ்விரு சமயங்களுக்கும் இடையில் அவர் எங்கெல்லாம் சென்றிருந்தார் என்பதையும் விசாரிக்க வேண்டும். ஆனால் கோபாலை மீண்டும் காவல்துறையினர் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மஜிஸ்டிரேட் அனுமதிக்க வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்தார். இதில் இன்னுமொரு சவுகரியம் இருப்பதையும் அவர் உணராமல் இல்லை. சமுதாயத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் என்று கூறி காவல்துறை விசாரணையில் சரியாக பதிலளிக்காமல் ஏய்ப்பவர்கள் நீதிமன்றத்தில் நடுவர் முன்னிலையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வேறு வழியில்லாமல் பதிலளிப்பதை அவர் பல வழக்குகளில் கண்டிருக்கிறார். இந்த வழக்கிலும் அதே நடைமுறையைத்தான் நாமும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கும் பி.பி. நீதிமன்றத்தில் எந்த அளவுக்கு எதிரியை மடக்குவார் என்பது தெரியவில்லையே. மாநில சட்ட அமைச்சரின் உறவினர் என்பதைத் தவிர அவருக்கு இந்த போஸ்ட்டுக்கு தேவையான எந்த தகுதியும் இருக்கறதா எனக்கு தெரியலீங்க என்று அவருடைய காவல்துறை சகா ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது.
அடுத்து கோபாலின் பெர்சனல் செக்கரட்டரி ராமராஜன் அளித்திருந்த வாக்குமூலத்தை எடுத்து பார்த்தார்.
எதிரி கோபாலை கைது செய்த கையோடு அவருடைய திநகர் அலுவலகத்தை search warrantடுடன் அடைந்தபோது அவர்களை எதிர்கொண்டது இந்த ராமராஜன்தான். தன்ராஜ் அலுவலகத்தை முழுவதுமாக சோதனையிட்டு முடித்து சீஸ் (seize) செய்த ஆவணங்களை பட்டியலிட்டு முடித்தவுடன் அவர் செய்த வேலை அலுவலக பணியாளர்களை விசாரித்ததுதான்.
பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு கோபால் நடத்திவந்த ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் விவகாரங்களை தெரிந்துக்கொண்ட பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ராமராஜனைக் கேட்டார்.
'அவரோட பர்சனல் விஷயங்களையெல்லாம் including financial matters அவரே பார்த்துப்பார் சார். அதனால அதப்பத்தியெல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாது.'
'நீங்க இந்த கம்பெனியில எவ்வளவு வருசமா இருக்கீங்க?'
'ஏழு வருசமாவுது சார்.. ஆனா சாருக்கு செக்ரட்டரியா ரெண்டு வருசமாத்தான்.'
'அவருக்கும் மர்டர் ஆன மாதவிக்கும் இருந்த தொடர்பு பத்தி ஏதாவது தெரியுமா?'
'தெரியாது சார்'
'சரி, சம்பவம் நடந்த நாளுக்கு வரேன். அதாவது நேத்தைக்கி முன் தினம். அவர் எத்தன மணிக்கி ஆஃபீசுக்கு வந்தார், எத்தன மணிக்கி கெளம்புனார்?'
'சார் சாதாரணமா பதினோரு மணிக்கி வருவார் சார். சாயந்தரம் எட்டு மணி வரைக்கும் இருப்பார். ஆனா முந்தா நேத்து ஒரு நாலு மணியானப்போ சைட் விசிட் போறேன்னு கிளம்பிட்டார்.'
'அந்த சைட் எங்கருக்கு?'
'மைலாப்பூர் பக்கத்துல சார். MRC Nagar. இப்ப அங்க மட்டுந்தான் வேலை நடந்துக்கிட்டிருக்கு.'
'அப்படியா?'
அவருக்குப் பிறகு அலுவலக மேலாளரை விசாரித்தார். அவரிடமிருந்து அவர் எதிர்பார்த்த அளவு விவரம் ஏதும் கிடைக்கவில்லை. அவர் வேலைக்கு சேர்ந்தே ஒரு வருடம்தான் ஆகியிருந்தது.
'ராமராஜன மறுபடியும் கூப்ட்டு விசாரிச்சிக்கணும்.' என்று தனக்குள் கூறிக்கொண்டு அதையும் குறித்துக்கொண்டார். அத்தோட கோபாலோட மொபைல் கால் ஹிஸ்டரியையும் பாக்கணும் என்று நினைத்த தன்ராஜ் சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய மேசை மீதிருந்த இன்டர்காமை எடுத்து காவல் நிலைய ஆப்பரேட்டரை அழைத்தார்.
'CCBக்கு கனெக்ட் பண்ணுங்க. அர்ஜன்ட்'
அடுத்த சில நொடிகளில் இணைப்பு கிடைத்ததும், 'எஸ்.ஐ. சேகர் இருக்காரா? கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் கேட்டுருந்தேன்.' என்றார்.
'இருக்கார் சார் குடுக்கறேன், ஒரு நிமிஷம்'
'சரி' என்றவாறு காத்திருந்தவர் மறுமுனையில் சேகரின் குரல் கேட்டதும், 'சேகர், மிஸ்டர் கோபாலோட மொபைல் கால் டீட்டெய்ல்ஸ் கேட்டுருந்தேனே... என்னாச்சி?'. என்றார்.
'அதெ நேத்தே கொரியர்ல அனுப்பிச்சிட்டேனே சார்... நீங்க ஹார்ட் காப்பி (hard copy) கேக்கலன்னா மெயில்லயே அனுப்பியிருப்பேன்..'
'என்னது, நேத்தே அனுப்பிச்சிட்டீங்களா? கெடைக்கலையே...' என்றவாறு தன்னுடைய மேசையில் குவிந்து கிடந்த கோப்புகளை அகற்றி தேடினார்... 'சரி சேகர்... இங்க கேக்கறேன்... கிடைக்கலன்னா கூப்டறேன்.'
தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் ஒருமுறை மேசை மீதிருந்த கோப்புகள், காகிதங்கள், படிவங்கள் என அனைத்தையும் புரட்டி பார்த்துவிட்டு மேசை இழுப்புகளையும் திறந்து பார்த்தார். கிடைக்கவில்லை.
உடனே அழைப்பு மணியை அழுத்தினார். அடுத்த நொடியே வந்து நின்ற காவலரை எரிச்சலுடன் பார்த்தார். 'யோவ், நேத்து மத்தியானம் சிசிபிலருந்து எனக்கு ஏதாச்சும் கவர் வந்துதா?'
'ஆமா சார்... ஆனா நீங்க சீட்ல இல்லாததால மேல் டிராயர்லதான் வச்சேன்.'
'எப்படிய்யா?' என்று எரிந்து விழுந்தார் தன்ராஜ், 'நாந்தான் டிராயரையெல்லாம் பூட்டிக்கிட்டு போயிருந்தேனே? அதுல எப்படி போட்டே?'
அவருடைய கோபத்தை பொருட்படுத்தாமல், 'சார்... டிராயருக்கு மேல தெரிஞ்ச ஓட்டை வழியா கவர தள்ளி விட்டேன் நல்லா பாருங்க' என்றவாறு அங்கிருந்து நகரத் துவங்கினார்.
காவலர் பதிலளித்த விதம் தன்ராஜை மேலும் எரிச்சலடையச் செய்தது. அந்த காவலர் தன்னை விட பதினைந்து வயது மூத்தவர் என்பதால் அவரிடம் கோபப்படுவதில் பயனில்லை என்பதை உணர்ந்தவர் 'எங்க போறீங்க, இங்க வாங்க.' என்றார் சற்று சுருதி இறங்கி.
வாசல் வரை சென்றவர் திரும்பி வந்தார். 'சொல்லுங்க.'
'இந்த மேல் டிராயர கழட்டுங்க. ஒருவேளை நீங்க தள்ளுன வேகத்துல டிராயருக்கு பின்னால இருக்கற இடைவெளி வழியா விழுந்துருச்சான்னு பாக்கலாம்.'
அவர் நினைத்தபடியேதான் நடந்திருந்தது. மேசையின் அனைத்து இழுப்புகளையும் வெளியில் எடுத்தபிறகுதான் பின்புறம் கிடந்த உறையையும் எடுக்க முடிந்தது.
முகத்தில் அசடு வழிய நின்ற காவலரைப் பார்த்தார். 'சரி போங்க. இனி இப்படி ஏதாச்சும் வந்தா மேசை மேலயே வச்சிட்டு போங்க... புரியுதா?'
'சரி சார்.' என்றவாறு காவலர் அங்கிருந்து அகல அவசர, அவசரமாக உறையை பிரித்து பட்டியலிடப்பட்டிருந்த விவரங்களை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு மாதவி கொலையுண்ட தினத்தில் கோபாலின் கைப்பேசியிலிருந்து வெளியில் சென்ற கால்களின் விவரங்களை படித்தார்.
அன்று மாலை ஆறு மணியிலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஐந்து கால்கள் சென்றிருந்தன.
18.15: கண்ஷ்யாம், பெரியமேடு சென்னை 3
18.20: அட்வகேட் மகாலிங்கம் மாம்பலம்
18.25: ஒரு லேன்ட் லைன் தொலைபேசி எண்
முதல் மற்றும் நான்காவது அழைப்பு கோபாலின் திநகர் அலுவலக மேலாளர் என்பது தன்ராஜுக்கு தெரியும்.
இரண்டாவது திரு. கண்ஷ்யாம் ஒருவேளை கோபாலின் ஃபைனான்சியராக இருக்கலாம். அவர் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
கடைசி தொலைபேசி எண் கொலையுண்ட மாதவியின் வீட்டு தொலைபேசி என்பதும் அவருடைய விசாரனையில் தெரிந்திருந்தது.
மீதமிருந்தது அட்வகேட் மகாலிங்கம்
தன்ராஜ் தன் கைப்பேசியை எடுத்து ராமராஜனை அழைத்தார்.
எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'மிஸ்டர் ராமராஜன் நா தன்ராஜ் பேசறேன்.' என்றார்.
அவருடைய பெயர் நினைவுக்கு வராமல் ராமராஜன் தடுமாறுவதை உணர்ந்து, 'எஸ்.ஐ. தன்ராஜ்' என்றார் மீண்டும்.
'ஓ... சாரி சார்... அவசரத்துல சட்டுன்னு நினைவுக்கு வரலை.... சொல்லுங்க சார்...'
'மிஸ்டர் கோபாலோட மொபைல்லருந்து கொலை நடந்த அன்னைக்கி சாயந்தரம் அட்வகேட் மகாலிங்கம்னு ஒருத்தருக்கு கால் போயிருக்கு..... அவர் யாருன்னு ஒங்களுக்கு தெரியுமான்னு தெரிஞ்சிக்கத்தான் கூப்ட்டேன்.'
'அவர் எங்க கம்பெனி லாயர் சார்.... எங்க கம்பெனி சிவில் கேஸ்லாம் அவர்தான் பாத்துப்பார். கோபால் சாரோட ஃபேமிலி லாயரும் அவர்தான்...'
'ஓ...'
'வேற ஏதாச்சும் தெரியணுமா சார்?'
'ஆமா. அப்புறம் இன்னொரு விஷயம்.'
'சொல்லுங்க சார்.'
'அன்னைக்கி மிஸ்டர் கோபால் ஆஃபீஸ்லருந்து எத்தனை மணிக்கி கிளம்புனதா சொன்னீங்க?'
'நாலு நாலரை இருக்கும் சார்....'
'அதுக்கப்புறம் மறுபடியும் ஆஃபீசுக்கு வரவே இல்லையா?'
தொடரும்..
பதிலளிநீக்குராஜசேகர் செய்ததையே தன்ராஜும் செய்கிறார். போலீஸ் கஸ்டடியில் விசாரிப்பதற்கும் ஜுடீஷியல் கஸ்டடியில் விசாரிப்பதற்கும் என்ன வித்தியாசம்? சினிமாவில் காட்டுவதுபோல் போலீஸ் நினைப்பதை குற்றஞ் சாட்டப்பட்டவர் சொல்லாவிட்டால் சொல்ல வைப்பதா.?I MEAN THIRD DEGREE TREATMENT.
//மாநில சட்ட அமைச்சரின் உறவினர் என்பதைத் தவிர அவருக்கு இந்த போஸ்ட்டுக்கு தேவையான எந்த தகுதியும் இருக்கறதா எனக்கு தெரியலீங்க.// மிகச் சரியான கூற்று!
பதிலளிநீக்குஆய்வாளர் தன்ராஜ் எப்படி சிக்கலை அவிழ்க்க /உண்டாக்கப் போகிறார் என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சின்னச்சின்ன விஷயங்களில் கூடக் கவனம் செலுத்தி எழுதுகிறீர்கள்
பதிலளிநீக்கு.M Balasubramaniam said...
பதிலளிநீக்குராஜசேகர் செய்ததையே தன்ராஜும் செய்கிறார். //
ராஜசேகர் செய்வதையே தன்ராஜும் செய்தாலும் இரண்டிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதுமட்டுமல்ல அவர்களுக்கு கிடைக்கும் பதில்களிலும் வித்தியாசம் இருக்கும். ஒன்றில் ஒத்துழையாமையும் மற்றொன்றில் ஒத்துழைப்பும் தெரியும்.
காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது மக்களின் கடமை என்கிறது சட்டம். ஆனால் நம்மில் எவருமே அவர்களுடைய விசாரணையை முறையை விரும்புவதில்லை. ஆகவேதான் நாம் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
போலீஸ் கஸ்டடியில் விசாரிப்பதற்கும் ஜுடீஷியல் கஸ்டடியில் விசாரிப்பதற்கும் என்ன வித்தியாசம்//
போலீஸ் கஸ்டடியில் விசாரணை செய்பவர்கள் எந்த முறையை வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ஏனெனில் அது அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் நடக்கும் செயல். ஜூடிஷியல் கஸ்டடியிலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளது. பெயருக்குத்தான் அது ஜுடிஷியல் கஸ்டடி. அங்கும் ஆட்சி செய்பவர்கள் காவலர்கள்தானே. ஆனாலும் மூன்றாந்தர முயற்சிகளை சிறையில் பயன்படுத்த விசாரணை அதிகாரிகள் சற்று தயங்க வாய்ப்புள்ளது.
சினிமாவில் காட்டுவதுபோல் போலீஸ் நினைப்பதை குற்றஞ் சாட்டப்பட்டவர் சொல்லாவிட்டால் சொல்ல வைப்பதா.?I MEAN THIRD DEGREE TREATMENT.//
அப்படித்தான். தலைகீழாக தொங்கவிடுவது போன்ற பல கொடூர செயல்களைத்தான் third degree methods என்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் காட்டுமிராண்டித்தனம். குற்றவாளியே குற்றத்தை ஒத்துக்கொண்டால் தேவையான ஆதாரங்களையும் சாட்சிகளையும் தேடிப்பிடிக்க தேவையில்லையே? அளவுக்கதிகமான குற்றங்களும் அவற்றை விரைவில் கண்டுபிடிக்க போதுமான ஆட்களும் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்கு//மாநில சட்ட அமைச்சரின் உறவினர் என்பதைத் தவிர அவருக்கு இந்த போஸ்ட்டுக்கு தேவையான எந்த தகுதியும் இருக்கறதா எனக்கு தெரியலீங்க.// மிகச் சரியான கூற்று!
ஆய்வாளர் தன்ராஜ் எப்படி சிக்கலை அவிழ்க்க /உண்டாக்கப் போகிறார் என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
குட்டன் said...
பதிலளிநீக்குசின்னச்சின்ன விஷயங்களில் கூடக் கவனம் செலுத்தி எழுதுகிறீர்கள்//
நன்றி குட்டன் ஜி!
காட்சிக்கு காட்சி தத்துருவமா எழுதுறிங்க.. ஆச்சரியமா இருக்கு நீங்க வங்கி மேனேஜர் என்று சொன்னிங்க பின்பு எப்படி இப்படி எழுத முடிகிறது..
பதிலளிநீக்குKala said...
பதிலளிநீக்குகாட்சிக்கு காட்சி தத்துருவமா எழுதுறிங்க.. ஆச்சரியமா இருக்கு நீங்க வங்கி மேனேஜர் என்று சொன்னிங்க பின்பு எப்படி இப்படி எழுத முடிகிறது..//
எல்லா வங்கி மேனேஜர்களுக்குமே சட்டம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும். சின்ன ஊர்ல கிளை மேனேஜரா இருந்த சமயத்துல எங்க வங்கி வக்கீல்களோட நெருங்கி பழகுனதால அவங்களோட செயல்பாடுகளும் கொஞ்சம் தெரியும்... அதான் இப்ப கைகுடுக்குதுன்னு நினைக்கேன். நன்றி.
பதில் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
பதிலளிநீக்கு