ARTICLE 20(3) OF THE CONSTITUTION OF INDIA AND THE RIGHT TO SILENCE
"The accused in India are afforded certain rights, the most basic of which are found in the Indian Constitution. The general theory behind these rights is that the government has enormous resources available to it for the prosecution of individuals, and individuals therefore are entitled to some protection from misuse of those powers by the government."
"The right to silence has various facets. One is that the burden is on the State or rather the prosecution to prove that the accused is guilty. Another is that an accused is presumed to be innocent till he is proved to be guilty. A third is the right of the accused against self incrimination, namely, the right to be silent and that he cannot be compelled to incriminate himself."
*******
முன்கதை
"The accused in India are afforded certain rights, the most basic of which are found in the Indian Constitution. The general theory behind these rights is that the government has enormous resources available to it for the prosecution of individuals, and individuals therefore are entitled to some protection from misuse of those powers by the government."
"The right to silence has various facets. One is that the burden is on the State or rather the prosecution to prove that the accused is guilty. Another is that an accused is presumed to be innocent till he is proved to be guilty. A third is the right of the accused against self incrimination, namely, the right to be silent and that he cannot be compelled to incriminate himself."
*******
முன்கதை
'சொல்லுங்கோ' என்றார் மகாதேவன்.
'எந்த காரணத்துக்காகவும் கோபால சாட்சி கூண்டுல ஏத்திறாதீங்கோ.' என்ற ராகவாச்சாரி அழைப்பு மணி ஓசை கேட்டு வந்து நின்ற அவருடைய ஊழியரிடம், 'ரமேஷ் இருந்தா வரச்சொல்லுய்யா.' என்றார். 'ரமேஷ் என் ஒரே சன். அவந்தான் இப்போ என் கேஸ்ங்களையெல்லாம் பாத்துக்கறான்...'
அடுத்த சில நொடிகளில் அறைக்குள் நுழைந்த ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞனிடம் 'மீட் அட்வகேட் ராஜசேகர்' என்றவாறு மகாதேவன் அவனுக்கு அறிமுகப்படுத்த, 'இவரை நாம் கோர்ட்டில் பார்த்திருக்கிறோமே' என்று நினைத்தான் ராஜசேகர்.
'I think I've seen you in Magistrate Courts.' என்றவாறே ரமேஷ் ராஜசேகரின் கைகளைப் பற்றி குலுக்கினான். 'நீங்களும் என்னெ பாத்துருப்பீங்கன்னு நினைக்கேன், சரிதானே?'
'ஆமா... பாத்துருக்கேன்....' என்றான் ராஜசேகர் புன்னகையுடன்.
பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், 'எதுக்குப்பா கூப்ட்டேள்?' என்றான் ரமேஷ்.
ராகவாச்சாரி சற்று சிரமப்பட்டு நிமிர்ந்து அமர்ந்தார். அவருக்கு உதவ முயன்ற மகாதேவனை, 'என்ன இன்வேலிடாக்கிறாதே....' என்று தடுத்துவிட்டு தன் மகனைப் பார்த்தார். 'பில்டர் கோபாலோட கேஸ் கட்டு இவங்களுக்கு வேணுமாம்.... அதான் மறுபடியும் கேஸ்ல மாட்டிண்டுட்டானே.... அன்னைக்கி டிவியில கூட காமிச்சானடா... நாங்கூட சொன்னேனே?'
துவக்கத்தில் இவர் யாரைப் பற்றி கூறுகிறார் என்று பிடிபடாதவன்போல் தன் தந்தையை பார்த்த ரமேஷ் சட்டென்று பிரகாசமடைந்தான். 'ஓ1 அவரா?'
'அவரேதான்.... அந்த கேஸ்ல எப்படியோ தப்பிச்சிண்டுட்டான்.... இப்போ மறுபடியும் மாடிக்கிட்டான்போலருக்கு..... அவனுக்கு எமனே அவன் கோவந்தான்..... என்ன செய்ய சொல்றே..? பிறவிக்குணம்.... சரி.. இவர அழைச்சிண்டுபோயி அந்த கட்ட எடுத்து குடு....' என்ற ராகவாச்சாரி ராஜசேகர் மற்றும் மகாதேவனைப் பார்த்து, 'இனி இவன்கிட்டவே பேசிக்குங்கோ... நா சித்தே கிடக்கறேன்...' என்றவாறு மீண்டும் படுக்கையில் விழ அவர்கள் மூவரும் அறையை விட்டு வெளியேறி ரமேஷைத் தொடர்ந்து முன்வாசலுக்கு இடப்புறம் இருந்த விசாலமான அலுவலக அறைக்குள் நுழைந்தனர்.
அடுத்த அரை மணி நேரம் ராஜசேகர் ரமேஷின் அறையிலேயே அமர்ந்து சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்களை அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தான்.
'எனக்கும் அந்த கேஸ் நல்லா ஞாபகம் இருக்கு மிஸ்டர் ராஜசேகர். ஆக்சுவலா கேஸ் ரொம்ப வீக்காருக்குன்னு அப்பா எடுத்துக்க மாட்டேன்னுதான் சொன்னார். ஆனா அவரோட அப்பா, அவரோட பேர் மிஸ்டர் சீனிவாசன்னு நினைக்கேன், ரொம்பவும் இன்சிஸ்ட் பண்ணதால ஒத்துக்கிட்டார். அந்த கேஸ்லருந்து மிஸ்டர் கோபால் தப்பிச்சதுக்கு அப்பாவோட ஸ்ட்ரேட்டஜியும் ஒரு காரணம்தான்னாலும் போலீஸ் செஞ்ச இன்வெஸ்ட்டிகேஷன்ல இருந்த ஓட்டைங்களும் ஒரு காரணம். அத்தோட கவர்ன்மென்ட் சைட்ல அப்பியரான லாயர் - அவருக்கு பி.பியா அதான் முதல் கேஸ்னு நினைக்கேன் - மிஸ்டர் வேணுவோட ஓவர் கான்ஃபிடன்சும் ஒரு காரணம்....'
'எதுக்கு அப்படி சொல்றீங்க?' என்றான் ராஜசேகர்.
'அக்யூஸ்ட் எப்படியும் தனக்கு ஆதரவா சாட்சி சொல்றதுக்கு வருவார்.. அப்போ க்ராஸ்ல மடக்கிறலாம்னுட்டு அசால்டா இருந்துட்டார் போலருக்கு.... அப்பா கடைசி வரைக்கும் மிஸ்டர் கோபால சாட்சி சொல்ல கூப்டவே இல்லை... எங்க சைட்லருந்து பெருசா யாரையும் விட்னசா கூப்டல.... பிராசிக்யூஷன் விட்னஸ க்ராஸ் பண்ணதோட சரி... அதுலயே கேஸ் விழுந்துருச்சி.... ஆனா கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலங்கற கதையா பி.பி. பிராசிக்யூசன் சாட்சிங்கள வச்சியே மிஸ்டர் கோபால உசுப்பேத்தி பாத்தாரு.... அவர் நினைச்சா மாதிரி கோபால் கடுப்பானதென்னவோ உண்மைதான்... என்ன சார் இவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே போறான் நாம எதுக்கு சார் பேசாம இருக்கணும்னார்... ஆனா அப்பா மசியவே இல்லை.... அவன் வேணுக்கும்னு செஞ்சி உன்னெ கூண்டுல ஏத்தணும்னு பாக்கறான்... நீ பேசாம இரு... நா பாத்துக்கறேன்னு அடக்கிட்டார்.... கடைசியில அதான் நடந்துது... பிராசிக்யூஷன் கேஸ் சரியா ப்ரூஃப் பண்லைன்னு சொல்லி கேஸ டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க....' என்று விவரித்த ரமேஷ், 'அவர விட்னஸ் ஸ்டாண்டுல ஏத்திறாதீங்கன்னு அப்பா சொல்லியிருப்பாரே?' என்றான் ராஜசேகரைப் பார்த்து.
'ஆமா சார்... சொன்னார்.'
'அப்பாவோட ஸ்ட்ரேட்டஜியே அதுதான்..... எந்த கேஸ்லயும் அப்பா க்ளையன்ட எவிடன்சுக்கு கூப்டவே மாட்டார். அவருக்கு எதிரா ஆஜரான எல்லா கவர்ன்மென்ட் லாயருக்கும் அப்பாவோட இந்த அப்ரோச் தெரியும். ஆனா மிஸ்டர் வேணு புதுசு.... அத்தோட முதல் முதலா பி.பியா ஆஜராவற ஈகோ.... சரியா ப்ரிப்பேர் பண்ணாம வந்து... கடைசியில கோர்ட்டோட அட்வேர்ஸ் (adverse) கமென்ட் வாங்குனதுதான் மிச்சம்.... அப்பீல்ல பாத்துக்கறேன்னு சவால் விட்டுட்டு போனார்..... ஆனா என்ன காரணமோ தெரியல கவர்ன்மென்ட் சைட்லருந்து அதுக்கப்புறம் அப்பீல் பண்ணவே இல்லைன்னு நினைக்கேன்..... சரிதானே மகாதேவன் சார்?'
'ஆமா ரமேஷ்.... அந்த பொண்ணோட பேரன்ட்ஸ் வேணாம்னுட்டான்னு சீனிதான் சொன்னான்.'
'அப்படீங்களா?' என்றவாறு மகாதேவனைப் பார்த்த ரமேஷ் 'உங்களுக்குத்தான் அந்த கேசோட ஃபுல் டீட்டேய்ல்ஸ் தெரியுமே சார்?' என்றான்.
'ஆமா ரமேஷ்.. இருந்தாலும் எதுவுமே from horse's mouthனு சொல்வாளே அதுமாதிரி வந்தாத்தான நல்லது? அதான் இங்க கூட்டியாந்தேன்...' என்று பதிலளித்த மகாதேவன் ராஜசேகரைப் பார்த்தார். 'என்ன சார்... எல்லாத்தையும் படிச்சேளா.... கையோட வேணும்னாலும் எடுத்துக்கோங்க.... இந்த கேஸ் முடிஞ்சதும் திருப்பித்தந்தா போறும்..... என்ன ரமேஷ்?'
ரமேஷ் சிரித்தான். 'அதான் நீங்களே சொல்லீட்டீங்களே.....' என்ற ரமேஷ் ராஜசேகரைப் பார்த்தான்.'These papers have no use to me anymore Mr.Rajasekar... you can keep the bundle if you want'
'அதுக்கு தேவையிருக்காது சார்... எனக்கு வேண்டியத நோட் பண்ணிக்கிட்டேன்.....என் குமாஸ்தாவ நம்ப முடியாது... எங்கயாச்சும் வச்சிட்டு மறந்துருவான்.... அதனால இது இங்கயே இருக்கட்டும்... தேவைப்பட்டா நானே வந்து பாத்துக்கறேன்... ' என்றவாறே ராஜசேகர் தன் இருக்கையில் இருந்து எழுந்தான். 'Thanks for your offer anyway.'
ரமேஷும் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ராஜசேகரின் கரங்களை பற்றி குலுக்கி விடையளித்தான். 'ஓக்கே... அப்புறம் மீட் பண்லாம்.'
மகாதேவனும் எழுந்து ராஜசேகருக்கு விடையளித்தார். 'நீங்க கெளம்புங்கோ சார்... நா சித்த நேரம் இருந்து சார்கிட்ட பேச்சிட்டு வந்துடறேன்.'
********
அரசு வழக்கறிஞர்களின் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தன் வாகனத்தை நிறுத்திய உதவி ஆய்வாளர் தன்ராஜ் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் என்ற போர்டு தொங்கிய அறை வாசலில் அமர்ந்திருந்த சிப்பந்தியிடம் தன் பெயரை அறிவித்துவிட்டு காத்திருந்தார்.
அடுத்த சில நொடிகளில் அறைக்குள் இருந்து திரும்பிய சிப்பந்தி, 'சார் வரச்சொல்றார் சார்..' என்று அறிவிக்க தன்ராஜ் தன் தொப்பியை கழற்றி கையில் பிடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்.
அறைக்குள் ஏற்கனவே அரசு வழக்கறிஞர்கள் சிலர் அவருடன் உரையாடிக்கொண்டிருக்கவே தயங்கி நின்றவரைக் கவனித்த பி.பி.வேணு, 'ஒரு நிமிஷம் மிஸ்டர் தன்ராஜ்.... அங்க உக்காருங்க... இவங்கள டிஸ்போஸ் பண்ணிட்டு வர்றேன்..' என்றவாறு தன் முன்னால் அமர்ந்திருந்தவர்களிடம், 'மினிஸ்டருக்கு வேண்டிய ஆளுங்கன்னு நீங்க பாக்க வேணாம். நா வேணும்னா மினிஸ்டர்கிட்ட பேசிக்கறேன்... நீங்க நா சொன்ன மாதிரியே கேஸ நடத்துங்க.... அப்புறம் வேற ஏதாச்சும் கேக்கணும்னா கூப்டுங்க..' என்று கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தார்.
ஆமா... மினிஸ்டர் இருக்கற தைரியத்துலதானய்யா இதே பதவியில அஞ்சி வருசம் கழிச்சி மறுபடியும் வந்து ஒட்டிக்கிட்ட என்று தனக்குள் நினைத்த தன்ராஜ்... இந்தாள்கிட்டல்லாம் வந்து நிக்க வேண்டியிருக்கு என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டார்.
'என்ன சார்... ஏதாச்சும் சொன்னீங்களா?' என்ற பி.பி.யின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்த தன்ராஜ் தான் ஒருவேளை தன்னுடைய மனதில் ஓடிய எண்ணங்களை உரக்க கூறிவிட்டோமோ என்று திகிலடைந்தார். ஆனாலும் சுதாரித்துக்கொன்டு, 'நானா, இல்லையே சார்!' என்றார்.
'அப்பன்னா சரி.... வாங்க' என்றவாறு வேணு தன் மேசை மீதிருந்த - முந்தைய தினம் தன்ராஜ் அனுப்பியிருந்த - உறையை எடுத்து திறந்து அதிலுள்ளவற்றை எடுத்து தன் முன் விரித்தார். 'மேக்சிமம் ஆஃபனவர்... அதுக்கு மேல ஆவாது.'
தன் விதியை நொந்துக்கொண்டே இருக்கையில் இருந்து எழுந்த தன்ராஜ் அரசு வழக்கறிஞரின் மேசைக்கு முன்பிருந்த இருக்கைகளுள் ஒன்றில் அமர்ந்து அவராக பேசட்டும் என்று காத்திருந்தார்.
உறையிலிருந்து எடுத்தவற்றில் தன்ராஜ் தயாரித்திருந்த குற்றப்பத்திரிக்கையை மட்டும் கையில் எடுத்துக்கொண்ட வேணு அதை மீண்டும் வாசிப்பதுபோல் பாவனை செய்தது தன்ராஜுக்கு கோபத்தை வரவழைத்தது. பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
'ரெண்டு மூனு பாய்ண்ட்ஸ் மட்டும் க்ளாரிட்டி இல்லாம இருக்குங்க... அத கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டீங்கன்னா இத அப்ரூவல் செஞ்சிருவேன்.....' என்றவாறு தன்ராஜை ஓரக்கண்ணால் பார்த்தார் வேணு...
ஒங்க அப்ரூவல் யாருக்கு வேணுங்க என்று தனக்குள் கூறிக்கொண்ட தன்ராஜ் 'சொல்லுங்க சார்....' என்றார் சுருக்கமாக.
'நீங்க லிஸ்ட் பண்ணியிருக்கற சார்ஜஸ்ல.... First Charge: எதுக்கு IPC செக்ஷன் 300க்கு பதிலா 299ன்னு போட்டுருக்கீங்க?
'இது ஒரு pre-planned murderனு என்னால டிசைட் பண்ண முடியல.. அதனாலதான்.'
வேணு பதிலளிக்காமல் ஒரு சில நொடிகள் மவுனமாக அமர்ந்திருந்தார். பிறகு தன் இருக்கையிலிருந்து எழுந்து அறையின் குறுக்கே நடக்க ஆரம்பித்தார். 'எனக்கு இதுதான் சவுகரியமா இருக்கு.... உங்களுக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லையே?'
'இல்ல.'
'அப்ப சரி.... என் மனசுல பட்டத சொல்றேன். நா சொல்றதுல எதுலாச்சும் ஒங்களுக்கு அப்ஜெக்ஷன் இருந்தா தாராளமா சொல்லுங்க...'
சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு மவுனமாக அமர்ந்திருந்தார் தன்ராஜ்.
'நீங்க ப்ரிப்பேர் பண்ண சார்ஜ் ஷீட் மட்டுமில்லாம நீங்க இதுவரைக்கும் செஞ்ச இன்வெஸ்ட்டிகேஷனோட டயரி என்ட்ரீஸ், விட்னசுங்கக் கிட்டருந்து வாங்குன ஸ்டேட்மென்ட்ஸ், பி.எம் ரிப்போர்ட், எல்லாத்தையும் வச்சி சொல்றேன்... இது ஒரு ப்ரீப் ப்ளான்ட் மர்டர்தான்....' என்றவர் சினிமாத்தனமாக நிறுத்திவிட்டு தலை குணிந்து அமர்ந்திருந்த தன்ராஜைப் பார்த்தார். ''என்ன சொல்றீங்க?'
அவர் நின்ற தோரணை சிரிப்பை வரவழைத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, 'எப்படி சொல்றீங்க?' என்றார் தன்ராஜ் விருப்பமில்லாமல். நா என்னத்த சொன்னாலும் நீர் ஏத்துக்கப் போறதில்லைங்கறது உண்மை. பின்னெ எதுக்குய்யா இந்த டிராமா எல்லாம் அப்படீன்னு வாய்விட்டு சொல்லவா முடியும்? எல்லாம் என் தலையெழுத்து என்று நினைத்தார்....
'சொல்றேன்... நீங்க எதிரியோட கார் டேஷ் போர்ட்லருந்து எடுத்த அந்த ப்ராப்பர்ட்டீ டாக்குமென்ட்... அது அந்த பொண்ணு தங்கியிருந்த வீட்டோட டாக்குமென்ட்தான?'
'ஆமா சார்..'
'அது ஏன் அங்க வந்துது?'
'அத அன்னைக்கி சாயந்தரம் எங்கிட்டருந்து வாங்கிக்கிட்டு போனார்னு அவரோட பி.ஏ. மிஸ்டர் ராமராஜன் சொன்னதா அவரோட ஸ்டேட்மென்ட்ல இருக்குதே சார்.'
'யெஸ்... அத கவனிக்காம இல்லை.... இருந்தாலும் அது உங்க வாய்லருந்து வரட்டுமேன்னுதான் கேட்டேன்.'
பொங்கி வந்த எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டார் தன்ராஜ். கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைங்கறத கதை.... தெரியலைன்னாலாம் தெரிஞ்சா மாதிரி எப்படிய்யா நடிக்க முடியுது?
'மேல கேளுங்க.. கோபாலுக்கும் அந்த பொண்ணுக்கும் ரெண்டு வருசத்துக்கும் மேல தொடர்பு இருக்கறது அவரோட பேங்க் ஸ்டேட்மென்ட்லருந்து மாசாமாசம் ரெகுலரா ஒரு சிக்னிஃபிக்கன்ட் அமவுன்ட் அந்த பொண்ணுக்கு போயிருக்கறதுலருந்து தெரியுது.... ஆனா அது அந்த பொண்ணுக்கு போறலை.... இந்த வீட்டை என் பேருக்கு எழுதிக் குடுத்தாத்தான் ஆச்சின்னு அடம் புடிச்சிருக்கா. ஆனா அதுக்கு எதிரி ஒத்துக்கிட்டிருக்க மாட்டார்.. ஆனா அந்த பொண்ணு வுடாம நச்சரிச்சிருக்கும்.... எதிரி கடுப்பாயிருப்பார்.... இவள போட்டுத்தள்றத தவிர வேற வழியில்லன்னு டிசைட் பண்ணியிருப்பார்..... அவர் எடத்துல அவரில்ல நானாருந்தாலும் அப்படித்தான் டிசைட் பண்ணியிருப்பேன்... என்ன சொல்றீங்க?'
என்னெ கேட்டா என்று நினைத்தார் தன்ராஜ்.
தொடரும்..
What is the duty of a public prosecutor? Do they have the rights to dictate the police department? Fortunately, I never had chances to deal with these departments. Dhanraj, Dharmaraj name misspelled at places. Interesting episode.Thanks.
பதிலளிநீக்குPackirisamy N said...
பதிலளிநீக்குWhat is the duty of a public prosecutor? Do they have the rights to dictate the police department? //
Country's Apex court has cautioned Govt. pleaders not to interfere in finalising the charge sheet preparation which is the exclusive right of the investigating officer. But even the manual prepared by the police dept. advises its officers to consult with the PPs before submitting the charge sheet to the Courts as they think it would help proper interpretation of CRPC.
Dhanraj, Dharmaraj name misspelled at places. //
This is why a 3rd party editor is required as I am unable to find the mistakes despite repeated readings before posting in the blog. I could locate two such mistakes in this post and rectify it... Thanks for bringing it to my notice.
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி said...
பதிலளிநீக்குதொடர்கிறேன்.//
நன்றி சார். பழைசையெல்லாம் படிச்சிட்டீங்க போலருக்கு :) அதுக்கும் ஒரு நன்றி.
PP நினைத்தால் நிரபராதியைக் கூட குற்றவாளி ஆக்கிவிடலாம் போலிருக்கிறதே! இது இந்த நாட்டின் சாபக்கேடு தான்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
PP நினைத்தால் நிரபராதியைக் கூட குற்றவாளி ஆக்கிவிடலாம் போலிருக்கிறதே! இது இந்த நாட்டின் சாபக்கேடு தான்.//
அதனாலதானே வக்கீலையும் போலீசையும் பகைத்துக்கொள்ளக் கூடாதுன்னு சொல்கிறார்கள்?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
இது கதை என்றே நினைக்கவிலலை நான் எங்காவது உண்மையில் நடந்ததை நீங்க எழுதுறிஙகளோ என்று நினைக்க வைக்கிறது. தங்கள் எழுத்து நடை ஒவ்வொரு சம்பவமும் எப்படி நிகழ வேண்டும் என்பதை கச்சிதமா சொல்றிங்க...
பதிலளிநீக்குஒருவர் திரட்டிக் கொடுக்கும் விஷயங்களை வைத்து இன்னொருவர் வாதாட வேண்டும் என்று இருக்கும்போது, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும்போது புரிதல்மிகவும் அவசியம்தானே. இதில் நீ பெரிசா நான் பெரிசா என்று நினைக்கலாமா. .?
பதிலளிநீக்குSasi Kala said...
பதிலளிநீக்குஇது கதை என்றே நினைக்கவிலலை நான் எங்காவது உண்மையில் நடந்ததை நீங்க எழுதுறிஙகளோ என்று நினைக்க வைக்கிறது. தங்கள் எழுத்து நடை ஒவ்வொரு சம்பவமும் எப்படி நிகழ வேண்டும் என்பதை கச்சிதமா சொல்றிங்க...//
உங்களுடைய உற்சாகப்படுத்தும் கருத்துக்கு மிக்க நன்றிங்க சசிகலா.
Sasi Kala said...
பதிலளிநீக்குஇது கதை என்றே நினைக்கவிலலை நான் எங்காவது உண்மையில் நடந்ததை நீங்க எழுதுறிஙகளோ என்று நினைக்க வைக்கிறது. தங்கள் எழுத்து நடை ஒவ்வொரு சம்பவமும் எப்படி நிகழ வேண்டும் என்பதை கச்சிதமா சொல்றிங்க...//
உங்களுடைய உற்சாகப்படுத்தும் கருத்துக்கு மிக்க நன்றிங்க சசிகலா.
பதிலளிநீக்குG.M Balasubramaniam said...
ஒருவர் திரட்டிக் கொடுக்கும் விஷயங்களை வைத்து இன்னொருவர் வாதாட வேண்டும் என்று இருக்கும்போது, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும்போது புரிதல்மிகவும் அவசியம்தானே. இதில் நீ பெரிசா நான் பெரிசா என்று நினைக்கலாமா. .?//
கரெக்டா சொன்னீங்க.... ஆனால் ஈகோ புடிச்சி அலையறவங்களுக்கு அதெல்லாம் தெரியவே தெரியாது..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.