21 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 24

"During interrogation, the witness will be questioned orally by the police. It is the duty of the witness to faithfully answer the questions put by the police officer."

"The Law only requires you to be truthful when you are being questioned by Police, either as an accused or as a witness. However, you need not volunteer information unless it is asked for. Answering questions put by the Police to the best of your ability is what is required by law. Not volunteering information is not considered as concealment of facts." Law Journal July 2008 issue: "How to face Police interrogation"  

******


'அதெல்லாம் இல்ல சார்.... போன ஒரு வாரமா நம்ம ஆஃபீஸ்க்கு வெளியில போலீஸ் மஃப்ட்டியில நிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்... ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம ஆஃபீசுக்கு வந்து போன கஸ்டமர் ஒருத்தர ஃபாலோ பண்ணி எதுக்கு வந்தீங்க கோபாலோட ஒங்களுக்கு என்ன கனெக்‌ஷன்னுல்லாம் கேட்டாங்களாம்.... வீட்டுக்கு போனதும் அவர் ஃபோன் பண்ணி சொன்னப்பறம்தான் போலீஸ் எங்கள வாட்ச் பண்றதே தெரிய வந்துது... அதான் இந்த நேரத்துல நீங்க வந்து போறது.....'

ராமராஜனை தொலைபேசியில் அழைத்தது நல்லதுதான் என்று நினைத்தான் ராஜசேகர், 'நீங்க சொல்றது சரிதான்.... ஆனா எனக்கு சில முக்கியமான விஷயங்கள் தெரியணும்... அதோட போலீஸ் ஒங்க ஆஃபீஸ் அப்புறம் கோபாலோட flatலருந்து சீஸ் பண்ண திங்ஸோட லிஸ்ட் காப்பிங்களும் வேணும்....'

'எங்கிட்ட இருக்கு சார்... நீங்க ஒன்னு பண்ணுங்க.... பனகல் பார்க்ல வெய்ட் பண்ணுங்க... இன்னும் பதினைஞ்சி நிமிஷத்துல நா அங்க இருப்பேன்....'

ராமராஜன் கூறிய ஐடியா அவனுக்கும் பிடித்திருந்தது. 'சரிங்க நா வெய்ட் பண்றேன்.... கேட்டுக்கு பக்கத்துலயே நிக்கவா?'

'வேணாம் சார் நீங்க உள்ள போயி வாசல் தெரியறாமாதிரி ஒக்காந்துக்குங்க... நா பாத்து வந்துருவேன்....'

'அப்ப சரி....' இணைப்பை துண்டித்துவிட்டு காரை கிளப்பினான். அவன் சென்றுக்கொண்டிருந்த பாதை ஒருவழிப் பாதை என்பதால் அப்படியே பயணித்து அடுத்த சிக்னலில் திரும்பி பத்து நிமிடங்களில் வாகனங்களின் போக்கிலேயே சென்று பனகல் பார்க்கை அடைந்தான். ஆனால் நோ பார்க்கிங் போர்டு இங்கிருந்து இடமும் வலமும் ஐம்பதடிக்குள் பார்க் செய்யலாகாது என்று பயமுறுத்தியது. அதுவும் ஒருவழிப்பாதை. மீண்டும் சுற்றினான். மேலும் பத்து நிமிடங்கள் கரைந்தன. ஒருவழியாக சென்னை மாநகர கார்ப்பரேஷன் நடத்திவந்த பே அன்ட் பார்க் இடத்தை அடைந்து மேலும் இரண்டு நிமிடங்கள் காத்திருந்து வாகனத்தை பார்க் செய்துவிட்டு கால்நடையாக பார்க் வாசலை அடைந்தான். மணியைப் பார்த்தான். அவன் ராமராஜனுக்கு ஃபோன் செய்த நேரத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்கள் கழிந்திருந்தன. ஆனால் ராமராஜனைக் காணவில்லை.... 'பதினைஞ்சி நிமிஷத்துல வந்துருவேன்னு சொன்னாரே?' என்று நினைத்தவாறு பார்க்குக்குள் நுழைந்து நுழைவாயிலில் இருந்து இருபதடி தூரத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் வாசலைப் பார்த்தவாறு அமர்ந்தான்.

ஐந்து, பத்து என்று நிமிடங்கள் கரைந்தன. ராமராஜனைக் காணோம்.... மறுபடியும் செல்ஃபோனில் அழைத்தால் என்ன என்று நினைத்தவாறு வாசலைப் பார்த்துக்கொண்டே செல்ஃபோனை எடுத்தான்..... ராமராஜன் பார்க்குக்குள் நுழைவது தெரிந்தது. எழுந்து வாசலை நோக்கி நடந்தான். ஆனால் ராமராஜன் அவனைப் பார்த்துவிட்டு வராதீங்க என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு வலப்புறம் திரும்பி நடந்தார். ராஜசேகருக்கு புரிந்தது. ராமராஜன் அங்கிருந்து நகர்ந்ததும் உடனே அவரை பின்தொடராமல் பூங்கா வாசலையே பார்த்தவாறு ஒரு சில நிமிடங்கள் நின்றிருந்தான். ராமராஜன் சற்று தொலைவில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கையிலிருந்த தினத்தாளை பிரித்து வாசிப்பதை கண்டான். அவசரப்படாமல் நிதானமாக நடந்து அவரருகில் அமர்ந்தான்.

 'என்ன ராமராஜன், ஒங்கள யாராச்சும் ஃபாலோ பண்ணி வந்தாங்களா என்ன?' 

ராமராஜன் அவனை திரும்பி பார்க்காமல் பேப்பரில் இருந்து கண்களை எடுக்காமல் பதிலளித்தார். 'அப்படித்தான் நினைக்கறேன் சார்.... அதான் ஆஃபீஸ்லருந்து இங்க நேரா வராம சுத்திக்கிட்டு வந்தேன்...'

'யாரு, போலீசா?' 

'ஆமா சார்... நா ஆஃபீஸ்லருந்து வெளிய வந்து பக்கத்துலருக்கற ஆட்டோ ஸ்டான்டுல ஆட்டோ புடிச்சத பாத்துக்கிட்டிருந்த பி.சி. ஒருத்தர் ஒடனே செல்ஃபோன்ல யாருக்கோ தகவல் குடுத்தா மாதிரி இருந்துது.... அடுத்த நிமிஷமே எங்க ரோட்டு முனையிலருந்து - அவரும் பிசி மாதிரிதான் இருந்தார் - பைக்க ஸ்டார்ட் பண்ணி கிளம்புனா மாதிரி இருந்துது.....'

ராஜசேகர் சிரித்தான். 'எல்லாமே மாதிரிதானே.... ஒருவேளை அது தற்செயலா நடந்ததா கூட இருக்கலாம்....'

ராமராஜன் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார். 'இல்ல சார்.... நம்ம ஆஃபீஸ் பக்கத்துலருக்கற ஆட்டோ ஸ்டான்டுலருக்கற எல்லாரையும் போட்டு போலீஸ் குடை குடைன்னு குடைஞ்சிருக்காங்க....அப்புறம் எங்க ஆஃபீசுக்கு வந்து போனவங்களையும் ஃபாலோ பண்ணிப் போயி அவங்க யாரு, எங்க இருக்காங்கன்னுல்லாம் நோட் பண்ணியிருக்காங்க சார்....'

ராஜசேகர் அதற்கு மேலும் அவரை பேசவிட்டால் தான் வந்த காரியம் நடக்காது என்று நினைத்து பேச்சின் போக்கை மாற்றினான். ' சரிங்க... எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுதான்... நா கேட்ட லிஸ்ட்ட கொண்டு வந்துருக்கீங்களா?'

'இதோ... சாரோட ஆஃபீஸ், வீடு மட்டுமில்லாம சீனிவாசன் சாரோட ஃப்ளாட்டுலயும் சேர்ச் பண்ணியிருக்காங்க.... ஆனா பெருசா ஒன்னும் கிடைக்கல போலருக்கு.... அவரோட பர்சனல் திங்ஸ் சிலத மட்டும் எடுத்துக்கிட்டு போயிருக்காங்க...'

ராமராஜன் நீட்டிய உறையிலிருந்து நான்கு பட்டியல்களின் நகலை எடுத்த ராஜசேகர் அதில் மாதவியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலும் இருப்பதைப் பார்த்தான்.

'இது எப்படி உங்கக்கிட்ட?'

'அந்த வீடும் கோபால் சார் பேர்லதான் இருக்கு. அதனால போலீஸ் அங்க சேர்ச்சுக்கு போனப்போ என்னையும் இருக்க சொன்னாங்க... கடைசியில சீஸ் பண்ண திங்ஸோட லிஸ்ட்ல என் கையெழுத்தையும் வாங்கிக்கிட்டு ஒரு காப்பிய குடுத்தாங்க...'

'இப்ப அந்த வீடு யார் கஸ்டடியில இருக்கு?' ஏற்கனவே அந்த வீட்டின் முன்னால் சீல் வைக்கப்பட்டிருந்த பூட்டைக் கண்டிருந்தும் வேண்டுமென்றே கேட்டான்.

'போலீஸ்கிட்டதான் சார்.... டோர்ல வேறொரூ பாட்லாக்கை ஃபிக்ஸ் பண்ணி லாக் பண்ணி சீல் வச்சிருக்காங்க.... கேஸ் ட்ரையலுக்கு வந்ததும் அத நீங்கதான் ரிலீஸ் பண்ணி வாங்கணும் போலருக்கு சார்.'

'கரெக்ட்... எனக்கும் அந்த வீட்ட ஒருதடவ பாக்கணும்னு இருக்கு...'

'சரி சார்...'

கையிலிருந்த  பட்டியல்களை மேலோட்டமாக படித்தான். கோபால் குடியிருந்த flatல் இருந்து எடுத்த பட்டியலில் ஒரு சென்ட் பாட்டிலும் இருந்ததைக் கண்டான். 'சென்ட் பாட்டில கூடவா எடுத்துக்கிட்டு போனாங்க?'

'ஆமா சார்... அந்த லேடி மர்டர் ஆன எடத்துல பயங்கரமான சென்ட் வாசனை இருந்துச்சாம்... ஒருவேளை அது கோபாலோட சென்டாருக்குமோன்னு அவங்களுக்கு எண்ணம்.... லிஸ்ட்ல அவரோட இன்னர் கார்மென்ட்சும் இருக்கு பாருங்க.... forensic testக்கு அனுப்புவாங்களாருக்கும்.....'

ராஜசேகர் நடத்தும் முதல் கொலை வழக்கு அது என்பதால் காவல்துறையினரின் அணுகுமுறை அவனுக்கு வியப்பை அளித்தது. 

'வேற என்னமோ கேக்கணும்னு சொன்னீங்களே சார்.' 

ராமராஜனின் கேள்வி அவனை நினைவுகளிலிருந்து மீட்டது. கைப்பெட்டியை திறந்து குறிப்பேட்டை எடுத்து அவனிடம் கேட்பதற்கென்று குறித்து வைத்திருந்த கேள்விகளை ஒருமுறை பார்த்தான்.

'அன்னைக்கி கோபால் சாயந்தரம் ஆறு மணிக்கி  ஒரு ஆட்டோவுல ஏறிப்போனத பார்த்ததா வசந்த் கிட்ட சொன்னீங்க இல்லையா?'

'ஆமா சார்..'

'அந்த ஆட்டோக்காரர் கிட்ட நா பேசணும்.... அவர் யாருன்னு தெரியுமா?'

'நல்லாவே தெரியும் சார்... அவர் மட்டுமில்லாம அந்த ஸ்டாண்டுலருக்கற எல்லா ஆட்டோ காரங்களும் எங்க கம்பெனிக்கி ரெகுலரா ஓட்றவங்கதான்.... ஆனா இதுல ஒரு சிக்கல் இருக்கு...'

'சிக்கலா? அப்படீன்னா?'

'போன ரெண்டு வாரமா போலீஸ் பண்ண டார்ச்சர்ல அந்த ஸ்டான்டுல ரெகுலரா நிக்கிற ஒரு ஆட்டோவும் இப்ப அங்க வர்றதில்ல.... அந்தாள தேடித்தான் புடிக்கணும்...'

'ஒங்க கம்பெனிக்கி ரெகுலரா ஓட்றவங்கன்னா அவங்க செல்ஃபோன் நம்பர் உங்கக்கிட்ட இருக்கும்ல?'

'இருக்கு சார்.... ஆனா சொல்லிவச்சாப்ல எல்லாருமே ஆஃப் பண்ணி வச்சிருக்கானுங்க.... எங்க போலீஸ் விசாரனைக்கு கூப்ட்ருவாங்களோன்னு பயம்...'

'அப்படியா...' என்று ஒரு சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்த ராஜசேகர், 'அன்னைக்கி கோபால் போன ஆட்டோக்காரரோட நம்பர மட்டும் எங்கிட்டு குடுங்க.... நானே ட்ரை பண்ணி பேசிக்கிறேன்.... ராத்திரி பத்து மணிக்கி மேல பண்ணா ஒருவேளை எடுத்தாலும் எடுக்க சான்ஸ் இருக்கு....'

'அதுவும் நல்ல ஐடியாதான் சார்....' என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை எடுத்து தேடிப்பிடித்து வாசிக்க ஒவ்வொரு எண்ணாக ராஜசேகர் குறித்துக்கொண்டான். 'நானும் ட்ரை பண்ணி நீங்க கூப்டுவீங்கன்னு சொல்றேன் சார்... இல்லன்னா பயந்துக்கிட்டு எடுக்க மாட்டான்.'

'குட்... நீங்க சொல்றதும் சரிதான்...'

'வேற ஏதாச்சும் தெரியணுமா சார்?'

ராஜசேகர் மீண்டும் தன் குறிப்பேட்டை பார்த்தான். 'ஆமா இன்னும் ரெண்டு மூனு கேள்வி... பரவால்லையா?'

'பரவால்லை சார் கேளுங்க...'

'இந்த லிஸ்ட்ல கோபாலோட கார்லருந்து எடுத்த திங்ஸோட லிஸ்ட்ட காணமே.... கார அவங்க சேர்ச் பண்ணலையா?'

'பண்ணாங்க சார்.... ஆனா அன்னைக்கி சாயந்தரம் சார் எடுத்துக்கிட்டு போன மாதவி இருந்த வீட்டோட பத்திரம் மட்டுந்தான் டாஷ் போர்ட்ல இருந்துது. அப்புறம் காரோட RC book, Insuranceஎனு யூஷுவலா இருக்கற டாக்குமென்ட்ஸ் மட்டுந்தான். வீட்டு பத்திரம் ஒரிஜினல்ங்கறதால நா கெஞ்சி கூத்தாடி வாங்கி வச்சிக்கிட்டு அத்தோட ஜெராக்ஸ் காப்பிய குடுத்தேன். அந்த எஸ்.ஐ. கரார் பேர்வழின்னாலும் கொஞ்சம் ரீசனபிளா நடந்துக்கிட்டார் சார்....'

மற்ற காவல்துறை அதிகாரிகள் போலல்லாமல் எஸ்.ஐ தன்ராஜ் நாகரீகத்துடன் நடந்துக்கொள்பவர் என்று ஏற்கனவே அவன் அறிந்து வைத்திருந்ததை நினைத்துப் பார்த்தான். 

'அன்னைக்கி மாதவி வீட்டுக்கு எதுல போனார்னு போலீஸ் கேட்டாங்களா?'

'இல்ல சார்... மாதவி குடியிருந்த வீட்டோட டாக்குமென்ட எங்கிட்டருந்து வாங்கிக்கிட்டு போனாருன்னு ஏற்கனவே எஸ்.ஐ. கிட்ட சொல்லியிருந்தேன்.... அது கார் டேஷ்போர்ட்ல இருந்ததால அவர் கார்லதான் போயிருக்கணும்னு நினைச்சிருப்பார்னு நினைக்கறேன்... அதுவும் நல்லதுக்குத்தான் நானும் ஒன்னும் சொல்லிக்கலை...'

ராஜசேகர் சிரித்தான். 'நல்லதுக்குத்தான்... ஆனா வேணும்னே போலீஸ்கிட்டருந்து உண்மைய மறைச்சீங்கன்னு உங்க மேலயே கேஸ் போடலாம் தெரியும்ல?'

'அதெப்படி சார்? அவர் எதுல போனார்னு கேட்டு நா கார்லதான் போனார்னு சொல்லியிருந்தா நீங்க சொல்றா மாதிரி வேணும்னே உண்மைய மறைச்சேன்னு சொல்லலாம்....  அவங்க கேக்காத கேள்விக்கி நா எப்படி சார் பதில் சொல்றது?'

ராமராஜனின் சாமர்தியமான பதிலும் அதை அவர் சொன்ன விதமும் ராஜசேகரை மிகவும் கவர்ந்தது. 

'நீங்க சொல்றதும் சரிதான். அப்புறம் இன்னொரு விஷயம்'

'சொல்லுங்க சார்.'

'சம்பவம் நடந்த அன்னைக்கி டாக்குமென்ட எடுத்துக்கிட்டு ஆட்டோவுல போனார்னு சொன்னீங்க.'

'ஆமா சார்'

'அப்புறம் எப்படி அது கார் டேஷ்போர்ட்லருந்து போலீஸ் எடுத்தாங்கன்னு சொல்றீங்க?'

தொடரும்...




14 கருத்துகள்:

  1. //அவங்க கேக்காத கேள்விக்கி நா எப்படி சார் பதில் சொல்றது?//
    ராமராஜன் கில்லாடியாக இருப்பார் போல.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. //Not volunteering information is not considered as concealment of facts//

    But, if one witnesses a crime, is he not obliged to inform the police? Won’t it amount to an offence, if he doesn’t? So far I thought, it one’s duty to inform the police. I thought Rajesekar is guilty of involuntary manslaughter. Looks like there will be some more twists. Waiting for the next episode.

    பதிலளிநீக்கு
  3. எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் கதை நகர்கிறது

    பதிலளிநீக்கு
  4. வே.நடனசபாபதி said...
    //அவங்க கேக்காத கேள்விக்கி நா எப்படி சார் பதில் சொல்றது?//
    ராமராஜன் கில்லாடியாக இருப்பார் போல.
    தொடர்கிறேன். //

    நம்மில் பலரும் அவரைப்போல்தான் நடந்துக்கொண்டிருப்போம். ஏனெனில் எப்போதும் தேவையில்லாததை போலீசில் சொல்லாமல் இருப்பது நல்லதுதான். இல்லாவிட்டால் அதை வைத்தே மேலும் குடைந்து குடைந்து கேள்வி கேட்பார்களே? அந்த அச்சம்தான்.

    பதிலளிநீக்கு
  5. Packirisamy N said...

    But, if one witnesses a crime, is he not obliged to inform the police? Won’t it amount to an offence, if he doesn’t? So far I thought, it one’s duty to inform the police. I thought Rajesekar is guilty of involuntary manslaughter. Looks like there will be some more twists. Waiting for the next episode.//

    The crime of killing a human being without malice aforethought, or otherwise in circumstances not amounting to murder is known as manslaughter. Here one person, he has not witnessed the crime. He doesn't know whether his boss actually went to the crime spot. In that case why should he volunteer this information? More over if the police assumes that he might have gone by his car, even if I were in that situation I'd not have voluntered that info fearing more and more questions from the police. Even in US law guides it is said that one need to answer questions from police only to the question posed to him and not offer anything more.

    Thanks for your visit and comments.

    பதிலளிநீக்கு
  6. ராமராஜனின் சாமர்தியமான பதிலும் அதை அவர் சொன்ன விதமும் ராஜசேகரை மிகவும் கவர்ந்தது. வேகத்தில் கதை நகர்கிறது

    பதிலளிநீக்கு
  7. @ GMB and கவியாழி,

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இது எப்போ ஒரு நூலாக வெளிவரும் ?

    பதிலளிநீக்கு
  9. தருமி said...
    இது எப்போ ஒரு நூலாக வெளிவரும் ?//

    வரவே வராதுங்க. ஒரு தடவை ஒரு பப்ளிஷர் கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை பட்டது போறாதா? பத்து பர்சன்ட் ராயல்ட்டிக்காக..... எதுக்கு தேவையில்லாத டென்ஷன்!

    இது ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான். இதை வச்சி காசு பாக்கற ஐடியா எல்லாம் இனி வரவே வராது.

    இருந்தாலும் கேட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  10. //காசு பாக்கற ஐடியா எல்லாம் இனி வரவே வராது.//

    காசு பாக்கற ஐடியா மட்டும் இதில் இல்லை. இப்படியே தொடர்ந்து எழுத முடிந்தால் ....

    மர்மக் கதை மன்னன் டிபிஆர்ஜோ ...!

    பதிலளிநீக்கு
  11. தருமி said...
    //காசு பாக்கற ஐடியா எல்லாம் இனி வரவே வராது.//

    காசு பாக்கற ஐடியா மட்டும் இதில் இல்லை. இப்படியே தொடர்ந்து எழுத முடிந்தால் ....

    மர்மக் கதை மன்னன் டிபிஆர்ஜோ ...!//

    நீங்க சொன்னா மக்கள் சொன்னா மாதிரி! மக்கள் சொன்னா மகேசன் சொன்னா மாதிரிதானே? இதுவே போறும் :)

    பதிலளிநீக்கு
  12. உஷாரான மனுசன் தான் போல ராமராஜன் வியப்பாக இருக்குங்க உங்க ஒவ்வொரு பகுதி படிக்கவும். இப்படியும் தொடர்ந்து விறுவிறுப்பு குறையாம எழுத முடியுமா என்று.

    பதிலளிநீக்கு

  13. Sasi Kala said...
    உஷாரான மனுசன் தான் போல ராமராஜன் வியப்பாக இருக்குங்க உங்க ஒவ்வொரு பகுதி படிக்கவும். இப்படியும் தொடர்ந்து விறுவிறுப்பு குறையாம எழுத முடியுமா என்று.//

    உங்க கருத்துக்கு மிக்க நன்றிங்க... இப்படியே விறுவிறுப்போட போயி முடிச்சிறணுங்கற ஆசைதான்.. பார்ப்போம்!!

    பதிலளிநீக்கு