30 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 33

முன்கதை

வேறுவழியில்லை... இனியும் பேசாமல் இருந்தால் அது தன்னுடைய கரியரையே (career)பாதிக்கும் என்று உணர்ந்த தன்ராஜ், 'அன்னைக்கி நா அவுட் சைட் ட்யூட்டியில இருந்தேன் சார்.... சைதாப்பேட்டை கோர்ட்ல ஒரு கேஸ்ல விட்னஸ் குடுக்க வேண்டியிருந்தது....  ஸ்டேஷன் ஹெட்டும் கமிஷனர் ஆஃபீஸ் வரை போயிருந்தார்....'

'என்ன சார் சொல்றீங்க? சரி நீங்களும் இல்லை SHOவும் இல்லை... லா அன்ட் ஆர்டர் எஸ்.ஐ இருந்துருப்பார் இல்ல?'

'அன்னைக்கின்னு பாத்து லஸ் கார்னர்ல ஒரு டெமோ இருந்தது சார்... அங்க போய்ட்டார்.'

'அப்ப மர்டர் ஸ்பாட்டுக்கு யார்தான் போனா?'

'அந்த சமயத்துல ஸ்டேஷன்ல இருந்த எஸ்.எஸ்.ஐ ஒருத்தர்தான் எனக்கு ஃபோன் பண்ணார் சார்.. நா அங்க போயி என்னல்லாம் செய்யணும்னு ஃபோன்லயே சொன்னேன்... அவர் சரின்னு சொல்லிட்டு போனார்....'

அவர் சொல்ல சொல்ல கோபத்தின் உச்சிக்கே சென்ற பி.பி. 'How can this happen?' என்று உச்ச ஸ்தாயியில் கத்தினார். 'இந்த மாதிரி இர்ரெஸ்பான்சிபிளா நீங்க இருந்துட்டு கடைசியில கவர்ன்மென்ட் அட்வகேட் கேஸ சரியா ஆர்க்யூ பண்ணலைன்னு எங்க தலையில தூக்கி போட்ருங்க.....'

தவறு தன்மீதுதான் என்பதை உணர்ந்த தன்ராஜ் மறுபேச்சு பேசாமல் அமர்ந்திருந்தார். 

'சரி அதுபோவட்டும்..... நீங்க அந்த ஸ்பாட்டுக்கு போனீங்களா இல்லையா? அதச் சொல்லுங்க.'

'போனேன் சார்.....'

'எப்போ?'

'கோர்ட்லருந்து அங்க போயி சேர்ந்தப்போ மதியானம் மூனு மணி இருக்கும்...'

'அதாவது அப்ராக்சிமேட்டா ட்வென்டி அவர்ஸ் கழிச்சி.... சரி... வீட்ட முழுசா சேர்ச் பண்ணீங்களா?'

'ஆமா சார்..... அங்கருந்து என்னல்லாம் சீஸ் (seize) பண்ண முடியுமோ அதையெல்லாம் சீஸ் பண்ணிக்கிட்டு வந்து ஃபாரன்சிக் ஸ்டடிக்கு அனுப்பிச்சி வச்சேன்....'

'நா கேக்கறது அது இல்ல.... எதிரி கையிலயோ இல்ல டிரஸ்லயோ ப்ளட் ஸ்டெய்ன் பட்டிருந்தா அந்த ஸ்டெயினோட அவர் வெளியில வர்றதுக்கு சான்ஸ் இல்ல.... வீட்டுலயே துடச்சிட்டோ இல்ல கழுவிட்டோதான் வந்துருப்பார்.... அதுக்கு அவர் பாத்ரூமயோ இல்ல வாஷ்பேசினையோ நிச்சயம் யூஸ் பண்ணியிருப்பார்.... அந்த ஆங்கிள்ல சேர்ச் பண்ணீங்களான்னு கேக்கேன்... did you do that?'

ச்சை.... இதுவும் ஒரு லாப்ஸ் (lapse)தான்... எதுக்கு இந்த ஆங்கிள்ல நம்ம திங்கிங் போகலை என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டார். நாம கேள்விப்பட்டதுபோல இந்த பி.பி. அவ்வளவு முட்டாள் இல்ல போலருக்கே... இப்ப நாமதான் முட்டாள் மாதிரி நிக்கிறோம்.... 

'என்ன சார்... did you do it or not?'

'இல்ல சார்.... நா டெட் பாடிய பாக்கலேங்கறதால என்னால அந்த ஆங்கிள்ல திங்க் பண்ண முடியலை...'

'இதெல்லாம் ஒரு எக்ஸ்க்யூஸா? நீங்க போனப்போ மர்டர் ஸ்பாட்டுக்கு முதல்ல போன ஆளுங்க அங்க இல்லையா? அவங்கள கேக்க வேண்டியதுதான?'

மர்டர் ஸ்பாட்டுக்கு அவர் செல்வதற்கு முன்பே அங்கு சென்றிருந்த பிசியும் எஸ்.எஸ்.ஐயும் வீட்டை பூட்டிவிட்டு  காவல்நிலையத்திற்கு திரும்பிவிட்ட விஷயத்தை இவரிடம் சொன்னால் என்னாவது என்று நினைத்த தன்ராஜ், 'நாங்களும் பாடிய முழுசா பாக்கலை சார்னு சொல்லிட்டாங்க....'

இப்படியும் ஒரு காவல்நிலையமா என்பதுபோல் அவரையே பார்த்தவாறு நின்றிருந்த பி.பி. பதில் பேசாமல் தன் இருக்கையில் வந்து அமர்ந்து தன் மேசை மீது கிடந்த குற்றப்பத்திரிக்கையை மீண்டும் கையில் எடுத்தார்....

'சரி.. முடிஞ்சி போன விஷயத்த பத்தி பேசி என்ன ஆவப் போவுது? அடுத்த சார்ஜ பாக்கலாம்...'

'அடுத்ததா பி.எம் ரிப்போர்ட்ல மர்டருக்கு முன்னால உடலுறவு இருந்திருக்கலாம்னு இருந்துது சார்....'

'ரைட்... அதனால it is a rapeனு சொல்லியிருக்கீங்க... குட்.... அது எப்படி நடந்துச்சோ நமக்கு கவலையில்லை.... நம்மள பொருத்த வரைக்கும் அது ஒரு ரேப்தான்... Let the defense refute it..... என்ன சொல்றீங்க?'

'ஆமா சார்... அந்த ஆங்கிள்லதான் நானும் செக்‌ஷன் 375ன்னு க்வோட் பண்ணியிருக்கேன்....'

'அவ்வளவுதான் போலருக்கு?'

அவர் சொல்வது விளங்காததுபோல் பி.பி.யை பார்த்தார் தன்ராஜ்....

'என்ன சார் சொல்றீங்க? புரியல.'

பி.பி. சிரித்தார். 'சார்ஜ் ஷீட்னா ஒன்னு ரெண்டு சார்ஜஸ் இருந்தா போறாதுங்க.... நமக்கு வேண்டியது எதிரி கண்டிப்பா தண்டிக்கப்படணும்.... ஒரு சார்ஜ்ல இல்லன்னா இன்னொன்னுல.... அதனால மேக்சிமம் எவ்வளவு சார்ஜஸ் லெவல் பண்ண முடியுமோ அவ்வளவையும் செஞ்சிறணும்....'

எப்படி பதிலளிப்பது என தெரியாமல் தன்ராஜ் அமர்ந்திருக்க வேணு மீண்டும் தன் இருக்கையில் இருந்து எழுந்து அறையின் குறுக்கே நடக்கத் துவங்கினார்.

'சொல்றேன்.... இந்த லிஸ்ட்ல ட்ரெஸ்பாஸ்சிங் (trespassing) அப்புறம் கன்சீலிங் எவிடென்சஸ்னு (concealing evidences), சாட்சிகளை கலைத்தல்ங்கற (threatening witnesses) சார்ஜசையும் சேத்துருங்க.'

'கன்சீலிங் எவிடென்ஸ சேத்துக்கலாம் அதே மாதிரி எதிரி சாட்சியத்தை கலைக்க ட்ரை பண்ணதும் உண்மைதான்.... ஆனா ட்ரெஸ்பாஸ்சிங்னு எப்படி.... அவர்தான சார் அந்த வீட்டோட ஹவுஸ் ஓனர்?'

'ஓனர்னா...? வீட்ட வாடகைக்கு விட்டாச்சின்னா வீட்ல இருக்கறவங்களோட பெர்மிஷன் இல்லாம உள்ள பூந்தா அதுக்கு பேரு ட்ரெஸ்பாஸ் சார்....'

'இருக்கலாம் சார்... ஆனா அந்த லேடியோட பர்மிஷன் இல்லேன்னு அஸ்யூம் பண்ண முடியுமா?'

'இதுக்கு பதில் நா கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னதுலயே இருக்கு. அதாவது எதிரிக்கும் அந்த பொண்ணுக்கும் இடையில நாலஞ்சி நாளா பேச்சு வார்த்தையே இல்லை... அதனால நாம அங்க போனாலும் அந்த பொண்ணு உள்ள விடறதுக்கு சான்ஸ் இல்லேன்னு எதிரிக்கு தெரியும். அவர்தான் அந்த வீட்டோட ஓனர்ங்கறதால அவர்கிட்ட ஒரு செட் சாவி நிச்சயமா இருந்துருக்கும். அத யூஸ் பண்ணித்தான் அன்னைக்கி அந்த வீட்டுக்குள்ள ரெண்டு தரம் நுழைஞ்சிருக்கார்னு நா ஆர்க்யூ பண்ணப் போறேன்...'

என்னைய்யா சொல்றீரு? அவர் அந்த வீட்டுக்குள்ள ஒருதரம் போனதுக்கே சரியான விட்னஸ் இல்ல.... முதல் விட்னஸ் பார்க்கிங் ஏரியாவுல எதிரியோட கார் சாயந்தரம் நாலே முக்கால் மணியிலருந்து ஆறு மணி வரைக்கும் நின்னுக்கிட்டிருந்ததுன்னு மட்டும்தான் சொல்வான்... ரெண்டாவது விட்னஸ் சாயந்தரம் ஏழு மணிக்கி அந்த வீட்டு முன்னால நின்னத பார்த்தேன்னு மட்டுந்தான் சொல்ல போறாங்க.... ஆறு மணிக்கி பாத்த ஆள் ஏழு மணிக்கி பாக்கல. ஏழு மணிக்கி பாத்த ஆள் ஆறு மணிக்கி பாக்கல... போறாததுக்கு ரெண்டு பேருமே எதிரிய வீட்டுக்குள்ள போனதையோ இல்ல வீட்டுக்குள்ளருந்து வெளியில வந்ததையோ பாக்கல... இந்த லட்சணத்துல இவர் எப்படி அவர் ரெண்டு தரம் வீட்டுக்குள்ள போயிருக்கார்னு ப்ரூஃப் பண்ணுவார்? போறாதுக்கு ரெண்டு என்ட்றியும் வீட்ல இருந்தவங்களோட அனுமதியில்லாம செய்யபட்ட ட்ரெஸ்பாஸ்னு ப்ரூஃப் பண்ணணும்! நடக்கற காரியமா? எல்லாம் இவரோட விஷ்ஃபுல் திங்கிங்னுதான் சொல்லணும்...

'என்ன சார் சத்தத்தையே காணம்? நீங்க புடிச்சிருக்கற ரெண்டு சாட்சியுமே எதிரி வீட்டுக்குள்ளருந்து வந்தத பாக்கலேன்னுதான யோசிக்கறீங்க?'

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்த தன்ராஜ் 'அவங்க ரெண்டு பேரையுமே அத பாத்ததா சொல்ல வையிங்க சார்....' என்று பி.பி அசால்ட்டாக கூறிவிட்டு சிரிக்க  என்னது சொல்ல வைக்கிறதா? என்று அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தார்...

சில நொடிகள் கழித்து, 'என்னது, சாட்சிகளை சொல்ல வைக்கிறதா? That's not possible.' என்றார் தன்ராஜ் தீர்மானமாக.

பி.பியின் பார்வையில் கோபம் தெறித்தது. 'Impossibleனா? உங்களால முடியாதுன்னு சொல்றீங்களா?' 

'ஆமா சார்... என்னோட சர்வீஸ்ல இதுவரைக்கும் இந்த மாதிரியான காரியம்லாம் செஞ்சதில்லை.... இனியும் செய்யிறதா இல்லை... I am sorry.'

'நீங்க டிப்பார்ட்மென்ட்ல சேர்ந்து எத்தன வருசம் ஆச்சி?'

'அது எதுக்கு சார் இப்ப?'

'சும்மா சொல்லுங்க.'

'இந்த அக்டோபர் வந்தா ஏழு வருசம்.'

'இது வரைக்கும் எத்தன கேஸ் பாத்துருப்பீங்க?'

'பத்துக்கு மேல இருக்கும்.'

'அதுல எத்தன கன்விக்ட் ஆயிருக்கு?'

'என்ன சார் கேள்வி இது? சென்ட் பர்சன்ட்.. அதுவும் நியாயமான முறையில.....'

பி.பி. சிரித்தார். 'ஒங்களோட காட்ஃபாதர் எஸ்.பி. சந்தானமும் இதைத்தான் சொன்னார். அதனாலதான் அவர சிட்டிக்கி கொண்டு வந்தேன்னு....'

இதுல சிரிக்கிறதுக்கு என்னய்யா இருக்கு? இந்த ஆள் சரியான லூசாருப்பார் போலருக்கே என்று தனக்குள் நினைத்தார் தன்ராஜ். ஒரு நேரம் ரொம்பவும் புத்திசாலித்தனமா பேசறார் அடுத்த நிமிஷமே சுத்த இடியட்டாட்டம்.... ஸ்ப்லிட் பர்சனலாட்டியா (split personality) இருக்குமோ?

'சரி... அதுல எத்தனை கன்ஃபெஷன் கேஸ்?'

'எல்லாமே தான்...'

பி.பி இம்முறை உரக்க சிரித்தார். 'அதானே உங்க வேலையே? மாட்டறவன ஏமாத்தி இல்லன்னா மிரட்டி கன்ஃபெஸ் பண்ண வச்சி கன்விக்‌ஷன் வாங்கறது ஒன்னும் பெரிய விஷயமில்லீங்க.... அக்யூஸ்டோட எந்த கோவாப்பரேஷனும் இல்லாம நாமளா எவிடன்சையும் விட்னசையும் தேடிப்பிடிச்சி கேஸ ப்ரூஃப் பண்ணணும்.... அதுலதான் இருக்கு சாமர்த்தியம்.... அப்படி எதுவும் செஞ்சிருக்கீங்களான்னுதான் கேட்டேன்..... இருக்கா?'

சட்டென்று எழுந்த கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்ட தன்ராஜ் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார். 

'அதனாலதான் இந்த கேஸ எப்படி அப்ரோச் பண்ணா கன்விக்‌ஷன் வாங்க முடியும்கறது தெரியாம இப்படியொரு தொத்தல் சார்ஜ் ஷீட்டோட வந்து நிக்கீங்க.... எடுத்துக்கிட்டு போயி நா சொன்ன கரெக்‌ஷனையெல்லாம் செஞ்சி கொண்டாங்க... Only then I will go to Court...'

என்ன திமிர் இந்த ஆளுக்கு? நா என்ன இவர் வெச்ச ஆளா? இதுக்குத்தான் இந்த மாதிரி ஆளுங்கக் கிட்டல்லாம் சார்ஜ் ஷீட்ட குடுக்கக் கூடாதுங்கறது... இந்த ஆள மாதிரிதான்  எல்லா கவர்ன்மென்ட் லாயர்களும் இருப்பாங்க போலருக்கு. அதனாலதான் ஒரு கேஸ இன்வெஸ்ட்டிகேட் பண்ணி அத கோர்ட்டுக்கு கொண்டு போலாமா வேணாமான்னு தீர்மானிக்க வேண்டியது போலீஸ்தான்னு சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருக்கு போல. பொய்சாட்சி சொன்னா சிறைன்னு சொல்ற சட்டத்த வச்சி பொழப்பு நடத்தற இந்த மாதிரி ஆளுங்களே அந்த சட்டத்தையே யூஸ் பண்ணி  சாட்சிகள மிரட்டி பொய்யா சாட்சியம் சொல்ல வைக்கிறது எந்த விதத்தில் நியாயம்? இந்தாள் வேணும்னா இந்த மாதிரி பொழைப்பு நடத்தறதுல எந்த தப்பும் இல்லேன்னு நினைச்சிக்கட்டும்... நம்மால முடியாது.... இன்னைக்கே சந்தானம் சார பாத்து சொல்லிற வேண்டியதுதான்.

'என்ன சார் முறைக்கறீங்க? எடுத்துக்கிட்டு போங்க.....' 

இனியும் அவர் முன்னால் நின்று பேச்சை வளர்க்க விருப்பமில்லாமல் பி.பி.யின் மேசை மீதிருந்த அனைத்து ஆவணங்களையும் அள்ளி எடுத்து உறையில் இட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார் தன்ராஜ்.

*****

மகாதேவனை சந்தித்துவிட்டு திரும்பிய ராஜசேகர் அன்றைய தினம் வழக்குகள் ஏதும் இல்லையென்பதால் தன்னுடைய அலுவலகம் திரும்பி அதுவரை மாதவியின் கொலை வழக்கில் தான் சேகரித்து வந்திருந்த தகவல்களையும் ஆவணங்களையும் ஆராயத் துவங்கினான்.

நல்லவேளையாக அவனுடைய குமாஸ்தா நாகுவை இன்று அலுவலகம் வரவேண்டாம் என்று கூறியிருந்தது  அவனுடைய அலுவலகத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் அவற்றை ஆய்வு செய்ய முடிந்தது.

இன்னும் எப்படியும் ஓரிரண்டு தினங்களில் காவல்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துவிடுவார்கள் என்று நினைத்தான். அதற்குள் இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தேவையான யூகங்களை வகுத்துவிட வேண்டும் என்ற முடிவுடன் அதுவரை சேகரித்திருந்த ஆவணங்களை தேதிவாரியாக வரிசைப்படுத்தி பட்டியலிட்டான்.

முதலில் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது மாதவியின் வீடு மற்றும் கோபாலின் வீடு/அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அடங்கிய பட்டியல்கள். 

அதில் காவல்துறை முக்கியமாக கருதக்கூடியவற்றை மட்டும் தன்னுடைய குறிப்பேட்டில் பட்டியலிட்டான்.

1. மாதவியின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உடைந்த கோப்பை துண்டுகள். இதை ஒரு முக்கியமாக எக்சிபிட்டாக பிராசிக்யூஷன் சமர்ப்பிக்கக் கூடும். கோபாலுக்கும் மாதவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் கோபமடைந்த இருவரில் ஒருவர் இதை மற்றவர் மீது இதை தூக்கி எறிந்ததால்தான் அது உடைந்து கிடந்திருக்கிறது என்பது அவர்களுடைய வாதமாக இருக்கும்.

2.மாதவியின் ரத்தக்கறை படிந்த நைட்டி. ஒருவேளை கோபாலுக்கும் இந்த மோதலில் காயம் ஏற்பட்டு அவருடைய ரத்தம் அந்த ஆடையால் கறையாக படிந்திருந்தால் ஒரு நல்ல எவிடென்சாக அமைந்திருக்கும்... ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை போலிருக்கிறது. 

இவ்விரண்டு பொருட்களைத் தவிர மாதவியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எதுவும் இந்த வழக்கில் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று கருதிய ராஜசேகர் அடுத்ததாக கோபாலின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலை ஆராய்ந்தான்.

தொடரும்...



29 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 32


'ஒரு ப்ரீ-ப்ளான்ட் மர்டருக்கு ஒரு சரியான மோட்டிவ் வேணும்...' என்று தொடர்ந்தார் பிபி வேணு. 'அது இதுதான். அந்த வீடு... அவ உயிரோட இருந்தா அந்த வீட்ட எழுதிக் குடுத்தாத்தான் ஆச்சி, இல்லன்னா நீங்க இங்க வந்து போற விஷயத்த எல்லாத்துக்கிட்டயும் சொல்லி மானத்த வாங்கிருவேன்னு மிரட்டிக்கிட்டேத்தான் இருப்பான்னு எதிரி நினைச்சிருப்பார்.... இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா.... சொசைட்டில ஒரு பெரிய பில்டர்னு நடமாடிக்கிட்டிருக்கறவருக்கு எப்படி இருக்கும்...? அதான்.... ப்ளான் பண்ணி மர்டர் பண்ணிட்டார்.... என்ன சொல்றீங்க?' 

எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டு ஒவ்வொரு கேள்விக்கும் என் ஒப்பீனியன கேட்டா நா என்ன சார் பண்றதுன்னு கேட்க நினைத்தார் தன்ராஜ்... ஆனால் கேட்கவில்லை....

வேணு தொடர்ந்தார்.

'இதுல இன்னொரு விஷயத்தையும் கவனிச்சேன்.... எதிரியோட மொபைல் ஃபோன் கால் டீட்டெய்ல்ஸ்.... மத்தவங்க மாதிரி இல்லாம நீங்க புத்திசாலித்தனமா ஒரு வருஷத்தோட கால் டீட்டெய்ல்ஸ் எடுத்துருக்கீங்க.... அதனால அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருந்த ரிலேசன்ஷிப் எவ்வளவு டீப்புன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சிது.... You have done a good job....I appreciate that....'

'தாங்ஸ் சார்...' என்று விருப்பமில்லாவிட்டாலும் சொல்லி வைத்தார் தன்ராஜ்.

'வெல்கம்....' என்று கெத்தாக ஒப்புக்கொண்டு தொடர்ந்தார் வேணு... 'போன ஒரு மாசமாவே அவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஆல்மோஸ்ட் டெய்லி பேச்சு நடந்துருக்கு.... அதுவும் மணிக்கணக்கா.... நா சொல்றேன்... அவங்க சாதாரணமா பேசிக்கலை.... இந்த வீட்டு விஷயமா பெரிய சண்டையே போட்டுருக்காங்க..... அதான் ஒவ்வொரு காலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல போயிருக்கு.....' என்றவர் தன்னுடைய மேசையை நெருங்கி அதில் கிடந்த கோபாலில் செல்ஃபோன் கால் லிஸ்ட அடங்கிய பட்டியலை எடுத்தார். 'ஆனா, மர்டர் ஆன 12ம்தேதியிலருந்து நாலு நாள் முன்னாலருந்து அதாவது 8ம் தேதியிலருந்து ஒரு கால் கூட அந்த பொண்ணோட நம்பருக்கு போகலை.... அத கவனிச்சீங்களா?'

'ஆமா சார்....' 

'ஏன்? நா சொல்றேன்... அவங்க ரெண்டு பேருக்கும் இடையில பேச்சுவார்த்தை இல்லை.... அதுக்கு முந்தின நாள் அதாவது ஏழாம் தேதி நடுராத்திரியிலருந்து ஏறக்குறையை ஒன்னரை மணி நேரம் ரெண்டு பேரும் பேசியிருக்காங்க.... இடையில இடையில கால் கட்டாயிருக்கு....  ஒன்னு இவர் கட் பண்ணியிருக்கணும் இல்லன்னா அந்த பொண்ணு... அதான் அடுத்தடுத்து நாலஞ்சி ஃபோன்.... அதுக்கப்புறம் நாலு நாளைக்கி ஒரு காலும் இல்லை..... சண்டை முத்தி ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கறதுக்குக் கூட விருப்பம் இல்லாம இருந்துருக்காங்க....  எதிரி பல தடவ ஃபோன் செஞ்சிருப்பார்.... அந்த பொண்ணு எடுத்துருக்காது... நாலஞ்சி நாள்.... அதுக்கு மேல தாங்க முடியல. அவ்வளவு திமிரா உனக்குன்னு நினைச்சிருப்பார். இவள போட்டுத்தள்ளிட்டுத்தான் மறுவேலைன்னு நினைச்சிருப்பார். இருந்தாலும் இன்னொருதரம் நேர்ல போயி பேசி பாக்கலாம்னு 12ம் தேதி சாயந்தரம்  அந்த வீட்டுக்கு போயிருக்கார்.... பேசி பாப்போம்... ஒத்துக்கிட்டா சரி... இல்லையா போட்டு தள்ளிருவோம்னு நினைச்சிருப்பார். கத்தியில குத்துனாலோ இல்ல ஏதாச்சும் ஆயுதத்தாலோ அடிச்சாலோ நாம மாட்டிக்கிருவோம்னு நினைச்சிருப்பார்... இதுல இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும்.... அவரோட ஃபர்ஸ்ட் வய்ஃபும் இதே மாதிரி பாத்ரூம்ல பின்னந்தலையில அடிபட்டு கேப்பார் இல்லாமத்தான் இறந்துக் கிடந்தாங்க.... ஏறக்குறைய மாதவி மாதிரியே.... அப்போ பாத்ரூம்ல வழுக்கி விழுந்து சுவத்துல இடிச்சி செத்தாங்கன்னு சொல்லி தப்பிச்சிக்கிட்டார். இங்கயும் அதே மாதிரி பின்னந்தலையில அடி.... பக்கத்துல கிடந்த சோபா கைப்பிடி மேல ரத்தக் கறை... வேணும்னே புடிச்சி தள்ளி கொன்னுட்டார்... ரெண்டு மர்ட்லருயும் இருக்கற ஒத்துமைய பாத்தா இது ஒரு ப்ரீ-ப்ளான்ட் மர்டர்னு மட்டுமில்ல ரெண்டுக்கும் கோபால்தான் காரணம்னு கூட ஈசியா ப்ரூஃப் பண்ணிறமுடியும்.... அன்னைக்கி எங்கிட்டருந்து தப்பிச்சவன் அவனாவே வந்து மறுபடியும் மாட்டிக்கிட்டான்....'

ஓ! இதான் விஷயமா? என்று நினைப்புடன்  வெறி பிடித்தவர்போல் தன் முன் நின்றவரைப் பார்த்தார் தன்ராஜ். அன்னைக்கி அவர் கிட்ட தோத்துப் போனோமேங்கற வெறிதானா இந்த கேஸ்ல இவ்வளவு இன்ட்ரஸ்ட் காமிக்க காரணம்? 

'என்ன தன்ராஜ் பாக்கறீங்க? நா சொல்றது புரியுதா இல்லையா?' 

அவருடைய குரலில் இருந்த உக்கிரமம் தன்ராஜை அதிரிச்சியடைய வைத்தது. How can he think rationally when he is so angry? இந்த தேவையற்ற கோபம் நிதானமாக சிந்திக்க வைக்காதே.. என்ன செய்வது, இவரை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் அவர் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தது வேணுவை மேலும் கொதிப்படையச் செய்தது.

'Why are you silent mister? say something!' வேணுவின் இரைச்சலைக் கேட்டு அறைக்குள் நுழைந்த அவருடைய சிப்பந்தி 'கூப்ட்டீங்களா சார்?' என்று கேட்க, 'யோவ் வெளிய போய்யா... ஒன்னெ யார் உள்ள வரச்சொன்னது?' என்று வேணு மேலும் இரைய சிப்பந்தி கலவரத்துடன் தன்ராஜை பார்த்துவிட்டு அடுத்த நொடியே அறையை விட்டு ஓடினான்.

'I agree with you Sir.... I'll make the correction.' என்றார் தன்ராஜ நிலைமையை சமாளிக்க... 'IPC section 300னு மாத்திடறேன்.' 

'இருங்க... இதுல இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும்..'

இன்னும் முடியலையா? 'என்ன சார்?'

'பி.எம். ரிப்போர்ட்ல சொல்றா மாதிரி மூனு வூன்ட்ஸ்... ரெண்டு பின்னந்ததலையில... ஆஃபனவர் கேப்புல... அப்புறம் நெத்தியில... எதுக்காக... எப்படின்னு யோசிச்சீங்களா? ட்ரையல்ல கேள்வி வருமே?'

அதையும் நீங்களே சொல்லிருங்களேன்... என்னெ எதுக்கு கேட்டுக்கிட்டு... என்று தனக்குள் சொல்லிக்கொண்ட தன்ராஜ் தன் எதிரில் நின்ற வேணுவை பார்த்தார். இவர் இருக்கற மூடுல ராத்திரி வரைக்கும் சொன்னதையே சொல்லிக்கிட்டிருப்பாரோ.....  நாம நினைச்சாலும் இன்னைக்கி இவர ஸ்டாப் பண்ண முடியாது... 'ஆமா சார்.' என்றார் வேறு வழி தெரியாமல்..

'I will explain.... இது யூகம்தான்... ஆனா இதுதான் நடந்துருக்கணும்.... எதிரி சாயந்தரம் நாலு, நாலரை மணிக்கி போயிருக்கார்..... பார்க்கிங் லாட் பையனோட ஸ்டேட்மென்ட் படி ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த வீட்டுக்குள்ள இருந்துட்டு வந்துருக்கார். ஆரம்பத்துல பேசி பாத்துருப்பார். வீட்ட மட்டும் கேக்காத... வேற எதுவானாலும் கேளுன்னு சொல்லியிருப்பார்.... அந்த பொண்ணு மசிஞ்சிருக்காது.... வாக்குவாதம் வந்துருக்கும்... எதிரிக்குத்தான் கோபத்த கன்ட்ரோல் பண்ண தெரியாதே.... ஃபர்ஸ்ட் வய்ஃப பண்ணா மாதிரி தலைய புடிச்சி சோஃபா ஹேண்டில் மேல வச்சி இடிச்சிருப்பார்.... அந்த பொண்ணு swoon ஆயிருக்கும்.... செத்துத் தொலைன்னு அப்படியே போட்டுட்டு வீட்ட பூட்டிக்கிட்டு கிளம்பியிருப்பார்.... அதுக்கப்புறம்.... அவ செத்தாளா இல்லையான்னு  தெரிஞ்சிக்கறதுக்காக ஆஃபனவர் கழிச்சி மறுபடியும் ஃபோன்ல கூப்ட்டு பாத்துருக்கார்.... மயங்கிக் கிடந்த அந்த பொண்ணு மயக்கம் தெளியற சமயத்துல இந்த ஃபோன் போயிருக்கும்.... தட்டித் தடுமாறி எழுந்து ஃபோன எடுத்து பேச ட்ரை பண்ணியிருக்கும்... ரிசீவர எடுக்க முடிஞ்சிருக்கு... ஆனா பேச முடியல.... she must have felt drowsy.....அவளையுமறியாம கையிலருந்த ரிசீவர் கைநழுவி கீழ விழுது..... அத்தோட அந்த பொண்ணும் மறுபடியும் மயங்கி விழுது... எங்க? பக்கத்துலருக்கற டீப்பாய் மேல.... கிளாஸ் டாப் டீப்பாய்.... edges must have been very sharp.....நெத்தியல டீப்பா ஒரு கட்..... அதுலருந்து ப்ளட் லாஸ் ஆவுது..... எதிரி மாதவி ஃபோன எடுப்பான்னு எதிர்பார்க்கல.... அவ உயிர் பொழைச்சிட்டா எங்க நம்மள காட்டிக் குடுத்துருவாளோங்கற பயம்... மறுபடியும் அவ வீட்டுக்கு போறார்.... தன் கையிலருக்கற சாவிய யூஸ் பண்ணி திறந்து உள்ள போயி ஏற்கனவே மயக்கமா இருக்கற மாதவியோட தலைய மறுபடியும் புடிச்சி பலமா அதே சோஃபா ஹேன்டில்ல இடிக்கிறார்.... அவ அதுக்கு மேல உயிர் பிழைக்க சான்ஸ் இல்லேங்கறத கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு கதவ சாத்திக்கிட்டு வந்துடறார்.... This is what must have happened..... என்ன சொல்றீங்க?'

வேணுவின் யூகத்தில் பல ஓட்டைகள் இருந்தாலும் அதை மறுத்துப் பேசும் மனநிலையில் தன்ராஜ் இல்லை. எப்படியிருந்தாலும் நீதிமன்றத்தில் வாதாடி குற்றத்தை நிரூபிக்கப் போவது அவர்தானே என்று நினைத்தார். இவரை மறுத்துப் பேசி தன்னுடை நேரத்தை வீணடிக்க விரும்பாத அவர், 'நீங்க சொல்றது சரிதான்னு நினைக்கறேன் சார்.' என்று சொல்லி வைத்தார்.

'Yes... It must be... It must be..'

'வேற ஏதாவது.....' என்று மீண்டும் தயக்கத்துடன் சொன்ன தன்ராஜை வேணு வெறித்துப் பார்க்க.... இன்னும் முடியல போலருக்கே என்று கலங்கினார். 

'என்ன மிஸ்டர் தன்ராஜ்... வேற ஏதாச்சும் அர்ஜன்ட் ஒர்க் இருக்கா....?' என்றார் எரிச்சலுடன்.... 

'இல்லையே சார், ஏன் கேக்கறீங்க?'

'எதுக்கா? பின்னே என்ன சார்....? இது உங்க கேஸ், நீங்கதான் இன்வெஸ்ட்டிகேட் பண்ணீங்க.... ஆனா நீங்க சொல்ல வேண்டியதையெல்லாம் நா சொல்லிக்கிட்டிருக்கேன்.... நீங்க என்னடான்னா நா சொல்றதே விதியேன்னு கேட்டுக்கிட்டிருக்கா மாதிரி ரியாக்‌ஷன் குடுக்கீங்க?'

இதென்னடா வம்பா போச்சி என்று நினைத்தார் தன்ராஜ். 'சாரி சார்.... I didn't want to interrupt you.. அதனாலதான்...'

'It's OK....' என்று அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வேணு தொடர்ந்தார். 'இதுல இன்னொரு விஷயம் தெளிவில்லாம இருக்கு. கவனிச்சீங்களா?'

'என்ன சார்?'

'எதிரி ரெண்டாவது தடவ அந்த லேடியோட தலைய புடிச்சி இடிச்சப்போ பின்னந்தலையில ரொம்ப டீப்பான காயம் ஏற்பட்டிருக்கு.....அதுவுமில்லாம அந்த டைம்ல அந்த பொண்ணோட நெத்தியில பட்டிருந்த காயத்துலருந்து பளட்டும் போய்க்கிட்டிருந்துருக்கு..... அதனால எதிரி மேல ரத்தம் நிச்சயமா பட்டுருக்க சான்ஸ் இருக்கு, என்ன சொல்றீங்க?'

இத்தனை நேரம் இடைவிடாமல் பேசியதில் இந்த கேள்விதான் சரியான கேள்வி என்று நினைத்தார் தன்ராஜ். இது ஏன் நமக்கு தோன்றவில்லை? ஆனால் கொலையுண்டவரின் பின்னந்தலையில் இரண்டு காயங்கள் இருந்தன என்றும் இரண்டாவது காயம்தான் அவர் உயிரிழக்க முக்கிய காரணம் என்பதும் பி.எம் செய்த மருத்துவர் கூறியபிறகுதானே தெரிய வந்தது? அது மட்டுமல்லாமல் மர்டர் ஸ்பாட்டுக்கு அவர் சென்றடைந்தபோது கொலை நடந்த நேரத்திலிருந்து ஏறக்குறைய இருபது மணி நேரம் ஆகியிருந்ததே? அன்று மட்டும் மாதவியின் பணிப்பெண் தொலைபேசியில் அழைத்தபோது அவர் காவல்நிலையத்தில் இருந்திருந்தால் உடல் அங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு அவராலும் காயங்களை பார்த்திருக்க முடியும், ரத்தக்கறை ஏதேனும் இருந்தாலும் அதையும் கவனித்திருக்க முடியும். 

'என்ன சார் சைலன்டாய்ட்டீங்க? அவர பாத்ததா சொன்ன லேடிக்கிட்ட இந்த விஷயத்த பத்தி கேட்டீங்களா? இல்ல அவர் அங்க போன கார்ல ஏதாச்சும் ப்ளட் ஸ்டெய்ன பாத்தீங்களா? அப்படியிருந்தா ஏன் உங்களோட எந்த ரிப்போர்ட்லயும் அதப்பத்தி ஒன்னையும் காணம்?'

வேணுவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தன்னால் ஒரு பதிலையும் சொல்ல முடியவில்லையே என்று அங்கலாய்த்துப் போனார் தன்ராஜ். சம்பவ தினத்தன்று காவல்நிலையத்தில் இரண்டு துணை ஆய்வாளர்களும் காவல் நிலைய ஆய்வாளரும் இல்லை என்றும் ஆகவே மர்டர் ஸ்பாட்டுக்கு அப்போது நிலையத்தில் இருந்த ஒரு எஸ்.எஸ்.ஐ மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மட்டுமே முதலில் சென்றனர் என்பதையும் இவரிடம் தெரிவித்தால் எப்படி ரியாக்ட் செய்வார் என்று தெரியவில்லையே என்கிற அச்சமும் அவரை மேலும் மவுனமாக இருக்க வைத்தது.

'நீங்க சைலன்டா இருக்கறத பாத்தா நீங்க அந்த ஸ்பாட்டுக்கே போகலைன்னு தோனுது.... சரியா சார்?'

தொடரும்..



28 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 31

ARTICLE 20(3) OF THE CONSTITUTION OF INDIA AND THE RIGHT TO SILENCE

"The accused in India are afforded certain rights, the most basic of which are found in the Indian Constitution. The general theory behind these rights is that the government has enormous resources available to it for the prosecution of individuals, and individuals therefore are entitled to some protection from misuse of those powers by the government."

"The right to silence has various facets. One is that the burden is on the State or rather the prosecution to prove that the accused is guilty. Another is that an accused is presumed to be innocent till he is proved to be guilty. A third is the right of the accused against self incrimination, namely, the right to be silent and that he cannot be compelled to incriminate himself."

*******
முன்கதை 

'சொல்லுங்கோ' என்றார் மகாதேவன்.

'எந்த காரணத்துக்காகவும் கோபால சாட்சி கூண்டுல ஏத்திறாதீங்கோ.' என்ற ராகவாச்சாரி அழைப்பு மணி ஓசை கேட்டு வந்து நின்ற அவருடைய ஊழியரிடம், 'ரமேஷ் இருந்தா வரச்சொல்லுய்யா.' என்றார். 'ரமேஷ் என் ஒரே சன். அவந்தான் இப்போ என் கேஸ்ங்களையெல்லாம் பாத்துக்கறான்...'

அடுத்த சில நொடிகளில் அறைக்குள் நுழைந்த ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞனிடம் 'மீட் அட்வகேட் ராஜசேகர்' என்றவாறு மகாதேவன் அவனுக்கு அறிமுகப்படுத்த, 'இவரை நாம் கோர்ட்டில் பார்த்திருக்கிறோமே' என்று நினைத்தான் ராஜசேகர். 

'I think I've seen you in Magistrate Courts.' என்றவாறே ரமேஷ் ராஜசேகரின் கைகளைப் பற்றி குலுக்கினான். 'நீங்களும் என்னெ பாத்துருப்பீங்கன்னு நினைக்கேன், சரிதானே?'

'ஆமா... பாத்துருக்கேன்....' என்றான் ராஜசேகர் புன்னகையுடன்.

பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், 'எதுக்குப்பா கூப்ட்டேள்?' என்றான் ரமேஷ்.

ராகவாச்சாரி சற்று சிரமப்பட்டு நிமிர்ந்து அமர்ந்தார். அவருக்கு உதவ முயன்ற மகாதேவனை, 'என்ன இன்வேலிடாக்கிறாதே....' என்று தடுத்துவிட்டு தன் மகனைப் பார்த்தார். 'பில்டர் கோபாலோட கேஸ் கட்டு இவங்களுக்கு வேணுமாம்.... அதான் மறுபடியும் கேஸ்ல மாட்டிண்டுட்டானே.... அன்னைக்கி டிவியில கூட காமிச்சானடா... நாங்கூட சொன்னேனே?'

துவக்கத்தில் இவர் யாரைப் பற்றி கூறுகிறார் என்று பிடிபடாதவன்போல் தன் தந்தையை பார்த்த ரமேஷ் சட்டென்று பிரகாசமடைந்தான். 'ஓ1 அவரா?' 

'அவரேதான்.... அந்த கேஸ்ல எப்படியோ தப்பிச்சிண்டுட்டான்.... இப்போ மறுபடியும் மாடிக்கிட்டான்போலருக்கு..... அவனுக்கு எமனே அவன் கோவந்தான்..... என்ன செய்ய சொல்றே..? பிறவிக்குணம்.... சரி.. இவர அழைச்சிண்டுபோயி அந்த கட்ட எடுத்து குடு....' என்ற ராகவாச்சாரி ராஜசேகர் மற்றும் மகாதேவனைப் பார்த்து, 'இனி இவன்கிட்டவே பேசிக்குங்கோ... நா சித்தே கிடக்கறேன்...' என்றவாறு மீண்டும் படுக்கையில் விழ அவர்கள் மூவரும் அறையை விட்டு வெளியேறி ரமேஷைத் தொடர்ந்து முன்வாசலுக்கு இடப்புறம் இருந்த விசாலமான அலுவலக அறைக்குள் நுழைந்தனர்.

அடுத்த அரை மணி நேரம் ராஜசேகர் ரமேஷின் அறையிலேயே அமர்ந்து சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்களை அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தான். 

'எனக்கும் அந்த கேஸ் நல்லா ஞாபகம் இருக்கு மிஸ்டர் ராஜசேகர். ஆக்சுவலா கேஸ் ரொம்ப வீக்காருக்குன்னு அப்பா எடுத்துக்க மாட்டேன்னுதான் சொன்னார். ஆனா அவரோட அப்பா, அவரோட பேர் மிஸ்டர் சீனிவாசன்னு நினைக்கேன், ரொம்பவும் இன்சிஸ்ட் பண்ணதால ஒத்துக்கிட்டார். அந்த கேஸ்லருந்து மிஸ்டர் கோபால் தப்பிச்சதுக்கு அப்பாவோட ஸ்ட்ரேட்டஜியும் ஒரு காரணம்தான்னாலும் போலீஸ் செஞ்ச இன்வெஸ்ட்டிகேஷன்ல இருந்த ஓட்டைங்களும் ஒரு காரணம். அத்தோட கவர்ன்மென்ட் சைட்ல அப்பியரான லாயர் - அவருக்கு பி.பியா அதான் முதல் கேஸ்னு நினைக்கேன் - மிஸ்டர் வேணுவோட ஓவர் கான்ஃபிடன்சும் ஒரு காரணம்....'

'எதுக்கு அப்படி சொல்றீங்க?' என்றான் ராஜசேகர்.

'அக்யூஸ்ட் எப்படியும் தனக்கு ஆதரவா சாட்சி சொல்றதுக்கு வருவார்.. அப்போ க்ராஸ்ல மடக்கிறலாம்னுட்டு அசால்டா இருந்துட்டார் போலருக்கு.... அப்பா கடைசி வரைக்கும் மிஸ்டர் கோபால சாட்சி சொல்ல கூப்டவே இல்லை... எங்க சைட்லருந்து பெருசா யாரையும் விட்னசா கூப்டல.... பிராசிக்யூஷன் விட்னஸ க்ராஸ் பண்ணதோட சரி... அதுலயே கேஸ் விழுந்துருச்சி.... ஆனா கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலங்கற கதையா பி.பி. பிராசிக்யூசன் சாட்சிங்கள வச்சியே மிஸ்டர் கோபால உசுப்பேத்தி பாத்தாரு.... அவர் நினைச்சா மாதிரி கோபால் கடுப்பானதென்னவோ உண்மைதான்... என்ன சார் இவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே போறான் நாம எதுக்கு சார் பேசாம இருக்கணும்னார்... ஆனா அப்பா மசியவே இல்லை.... அவன் வேணுக்கும்னு செஞ்சி உன்னெ கூண்டுல ஏத்தணும்னு பாக்கறான்... நீ பேசாம இரு... நா பாத்துக்கறேன்னு அடக்கிட்டார்.... கடைசியில அதான் நடந்துது... பிராசிக்யூஷன் கேஸ் சரியா ப்ரூஃப் பண்லைன்னு சொல்லி கேஸ டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க....' என்று விவரித்த ரமேஷ், 'அவர விட்னஸ் ஸ்டாண்டுல ஏத்திறாதீங்கன்னு அப்பா சொல்லியிருப்பாரே?' என்றான் ராஜசேகரைப் பார்த்து.

'ஆமா சார்... சொன்னார்.'

'அப்பாவோட ஸ்ட்ரேட்டஜியே அதுதான்..... எந்த கேஸ்லயும் அப்பா க்ளையன்ட எவிடன்சுக்கு கூப்டவே மாட்டார். அவருக்கு எதிரா ஆஜரான எல்லா கவர்ன்மென்ட் லாயருக்கும் அப்பாவோட இந்த அப்ரோச் தெரியும். ஆனா மிஸ்டர் வேணு புதுசு.... அத்தோட முதல் முதலா பி.பியா ஆஜராவற ஈகோ.... சரியா ப்ரிப்பேர் பண்ணாம வந்து... கடைசியில கோர்ட்டோட அட்வேர்ஸ் (adverse) கமென்ட் வாங்குனதுதான் மிச்சம்.... அப்பீல்ல பாத்துக்கறேன்னு சவால் விட்டுட்டு போனார்..... ஆனா என்ன காரணமோ தெரியல கவர்ன்மென்ட் சைட்லருந்து அதுக்கப்புறம் அப்பீல் பண்ணவே இல்லைன்னு நினைக்கேன்..... சரிதானே மகாதேவன் சார்?'

'ஆமா ரமேஷ்.... அந்த பொண்ணோட பேரன்ட்ஸ் வேணாம்னுட்டான்னு சீனிதான் சொன்னான்.'

'அப்படீங்களா?' என்றவாறு மகாதேவனைப் பார்த்த ரமேஷ் 'உங்களுக்குத்தான் அந்த கேசோட ஃபுல் டீட்டேய்ல்ஸ் தெரியுமே சார்?' என்றான்.

'ஆமா ரமேஷ்.. இருந்தாலும் எதுவுமே from horse's mouthனு சொல்வாளே அதுமாதிரி வந்தாத்தான நல்லது? அதான் இங்க கூட்டியாந்தேன்...' என்று பதிலளித்த மகாதேவன் ராஜசேகரைப் பார்த்தார். 'என்ன சார்... எல்லாத்தையும் படிச்சேளா.... கையோட வேணும்னாலும் எடுத்துக்கோங்க.... இந்த கேஸ் முடிஞ்சதும் திருப்பித்தந்தா போறும்..... என்ன ரமேஷ்?'

ரமேஷ் சிரித்தான். 'அதான் நீங்களே சொல்லீட்டீங்களே.....' என்ற ரமேஷ் ராஜசேகரைப் பார்த்தான்.'These papers have no use to me anymore Mr.Rajasekar... you can keep the bundle if you want' 

'அதுக்கு தேவையிருக்காது சார்... எனக்கு வேண்டியத நோட் பண்ணிக்கிட்டேன்.....என் குமாஸ்தாவ நம்ப முடியாது... எங்கயாச்சும் வச்சிட்டு மறந்துருவான்.... அதனால இது இங்கயே இருக்கட்டும்... தேவைப்பட்டா நானே வந்து பாத்துக்கறேன்... ' என்றவாறே ராஜசேகர் தன் இருக்கையில் இருந்து எழுந்தான். 'Thanks for your offer anyway.'

ரமேஷும் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ராஜசேகரின் கரங்களை பற்றி குலுக்கி விடையளித்தான். 'ஓக்கே... அப்புறம் மீட் பண்லாம்.'

மகாதேவனும் எழுந்து ராஜசேகருக்கு விடையளித்தார். 'நீங்க கெளம்புங்கோ சார்... நா சித்த நேரம் இருந்து சார்கிட்ட பேச்சிட்டு வந்துடறேன்.'

********

அரசு வழக்கறிஞர்களின் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தன் வாகனத்தை நிறுத்திய உதவி ஆய்வாளர் தன்ராஜ் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் என்ற போர்டு தொங்கிய அறை வாசலில் அமர்ந்திருந்த சிப்பந்தியிடம் தன் பெயரை அறிவித்துவிட்டு காத்திருந்தார். 

அடுத்த சில நொடிகளில் அறைக்குள் இருந்து திரும்பிய சிப்பந்தி, 'சார் வரச்சொல்றார் சார்..' என்று அறிவிக்க தன்ராஜ் தன் தொப்பியை கழற்றி கையில் பிடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்.

அறைக்குள் ஏற்கனவே  அரசு வழக்கறிஞர்கள் சிலர் அவருடன் உரையாடிக்கொண்டிருக்கவே தயங்கி நின்றவரைக் கவனித்த பி.பி.வேணு, 'ஒரு நிமிஷம் மிஸ்டர் தன்ராஜ்.... அங்க உக்காருங்க... இவங்கள டிஸ்போஸ் பண்ணிட்டு வர்றேன்..' என்றவாறு தன் முன்னால் அமர்ந்திருந்தவர்களிடம், 'மினிஸ்டருக்கு வேண்டிய ஆளுங்கன்னு நீங்க பாக்க வேணாம். நா வேணும்னா மினிஸ்டர்கிட்ட பேசிக்கறேன்... நீங்க நா சொன்ன மாதிரியே கேஸ நடத்துங்க.... அப்புறம் வேற ஏதாச்சும் கேக்கணும்னா கூப்டுங்க..' என்று கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தார். 

ஆமா... மினிஸ்டர் இருக்கற தைரியத்துலதானய்யா இதே பதவியில அஞ்சி வருசம் கழிச்சி மறுபடியும் வந்து ஒட்டிக்கிட்ட என்று தனக்குள் நினைத்த தன்ராஜ்... இந்தாள்கிட்டல்லாம் வந்து நிக்க வேண்டியிருக்கு என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டார்.

'என்ன சார்... ஏதாச்சும் சொன்னீங்களா?' என்ற பி.பி.யின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்த தன்ராஜ் தான் ஒருவேளை தன்னுடைய மனதில் ஓடிய எண்ணங்களை உரக்க கூறிவிட்டோமோ என்று திகிலடைந்தார். ஆனாலும் சுதாரித்துக்கொன்டு, 'நானா, இல்லையே சார்!' என்றார்.

'அப்பன்னா சரி.... வாங்க' என்றவாறு வேணு தன் மேசை மீதிருந்த - முந்தைய தினம் தன்ராஜ் அனுப்பியிருந்த - உறையை எடுத்து திறந்து அதிலுள்ளவற்றை எடுத்து தன் முன் விரித்தார். 'மேக்சிமம் ஆஃபனவர்... அதுக்கு மேல ஆவாது.'

தன் விதியை நொந்துக்கொண்டே இருக்கையில் இருந்து எழுந்த தன்ராஜ் அரசு வழக்கறிஞரின் மேசைக்கு முன்பிருந்த இருக்கைகளுள் ஒன்றில் அமர்ந்து அவராக பேசட்டும் என்று காத்திருந்தார்.

உறையிலிருந்து எடுத்தவற்றில் தன்ராஜ் தயாரித்திருந்த குற்றப்பத்திரிக்கையை மட்டும் கையில் எடுத்துக்கொண்ட வேணு அதை மீண்டும் வாசிப்பதுபோல் பாவனை செய்தது தன்ராஜுக்கு கோபத்தை வரவழைத்தது. பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். 

'ரெண்டு மூனு பாய்ண்ட்ஸ் மட்டும் க்ளாரிட்டி இல்லாம இருக்குங்க... அத கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டீங்கன்னா இத அப்ரூவல் செஞ்சிருவேன்.....' என்றவாறு தன்ராஜை ஓரக்கண்ணால் பார்த்தார் வேணு...

ஒங்க அப்ரூவல் யாருக்கு வேணுங்க என்று தனக்குள் கூறிக்கொண்ட தன்ராஜ் 'சொல்லுங்க சார்....' என்றார் சுருக்கமாக.

'நீங்க லிஸ்ட் பண்ணியிருக்கற சார்ஜஸ்ல.... First Charge: எதுக்கு  IPC செக்‌ஷன் 300க்கு பதிலா 299ன்னு போட்டுருக்கீங்க?

'இது ஒரு pre-planned murderனு என்னால டிசைட் பண்ண முடியல.. அதனாலதான்.'  

வேணு பதிலளிக்காமல் ஒரு சில நொடிகள் மவுனமாக அமர்ந்திருந்தார். பிறகு தன் இருக்கையிலிருந்து எழுந்து அறையின் குறுக்கே நடக்க ஆரம்பித்தார். 'எனக்கு இதுதான் சவுகரியமா இருக்கு.... உங்களுக்கு ஒன்னும் அப்ஜெக்‌ஷன் இல்லையே?'

'இல்ல.' 

'அப்ப சரி.... என் மனசுல பட்டத சொல்றேன். நா சொல்றதுல எதுலாச்சும் ஒங்களுக்கு அப்ஜெக்‌ஷன் இருந்தா தாராளமா சொல்லுங்க...'

சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு மவுனமாக அமர்ந்திருந்தார் தன்ராஜ்.

'நீங்க ப்ரிப்பேர் பண்ண சார்ஜ் ஷீட் மட்டுமில்லாம நீங்க இதுவரைக்கும் செஞ்ச இன்வெஸ்ட்டிகேஷனோட டயரி என்ட்ரீஸ், விட்னசுங்கக் கிட்டருந்து வாங்குன ஸ்டேட்மென்ட்ஸ், பி.எம் ரிப்போர்ட், எல்லாத்தையும் வச்சி சொல்றேன்... இது ஒரு ப்ரீப் ப்ளான்ட் மர்டர்தான்....' என்றவர் சினிமாத்தனமாக நிறுத்திவிட்டு தலை குணிந்து அமர்ந்திருந்த தன்ராஜைப் பார்த்தார். ''என்ன சொல்றீங்க?'

அவர் நின்ற தோரணை சிரிப்பை வரவழைத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, 'எப்படி சொல்றீங்க?' என்றார் தன்ராஜ் விருப்பமில்லாமல். நா என்னத்த சொன்னாலும் நீர் ஏத்துக்கப் போறதில்லைங்கறது உண்மை. பின்னெ எதுக்குய்யா இந்த டிராமா எல்லாம் அப்படீன்னு வாய்விட்டு சொல்லவா முடியும்? எல்லாம் என் தலையெழுத்து என்று நினைத்தார்....

'சொல்றேன்... நீங்க எதிரியோட கார் டேஷ் போர்ட்லருந்து எடுத்த அந்த ப்ராப்பர்ட்டீ டாக்குமென்ட்... அது அந்த பொண்ணு தங்கியிருந்த வீட்டோட டாக்குமென்ட்தான?'

'ஆமா சார்..'

'அது ஏன் அங்க வந்துது?'

'அத அன்னைக்கி சாயந்தரம் எங்கிட்டருந்து வாங்கிக்கிட்டு போனார்னு அவரோட பி.ஏ. மிஸ்டர் ராமராஜன் சொன்னதா அவரோட ஸ்டேட்மென்ட்ல இருக்குதே சார்.'

'யெஸ்... அத கவனிக்காம இல்லை.... இருந்தாலும் அது உங்க வாய்லருந்து வரட்டுமேன்னுதான் கேட்டேன்.'

பொங்கி வந்த எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டார் தன்ராஜ். கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைங்கறத கதை.... தெரியலைன்னாலாம் தெரிஞ்சா மாதிரி எப்படிய்யா நடிக்க முடியுது?

'மேல கேளுங்க.. கோபாலுக்கும் அந்த பொண்ணுக்கும் ரெண்டு வருசத்துக்கும் மேல தொடர்பு இருக்கறது அவரோட பேங்க் ஸ்டேட்மென்ட்லருந்து மாசாமாசம் ரெகுலரா ஒரு சிக்னிஃபிக்கன்ட் அமவுன்ட் அந்த பொண்ணுக்கு போயிருக்கறதுலருந்து தெரியுது.... ஆனா அது அந்த பொண்ணுக்கு போறலை.... இந்த வீட்டை என் பேருக்கு எழுதிக் குடுத்தாத்தான் ஆச்சின்னு அடம் புடிச்சிருக்கா. ஆனா அதுக்கு எதிரி ஒத்துக்கிட்டிருக்க மாட்டார்.. ஆனா அந்த பொண்ணு வுடாம நச்சரிச்சிருக்கும்.... எதிரி கடுப்பாயிருப்பார்.... இவள போட்டுத்தள்றத தவிர வேற வழியில்லன்னு டிசைட் பண்ணியிருப்பார்..... அவர் எடத்துல அவரில்ல நானாருந்தாலும் அப்படித்தான் டிசைட் பண்ணியிருப்பேன்... என்ன சொல்றீங்க?'

என்னெ கேட்டா என்று நினைத்தார் தன்ராஜ்.  

தொடரும்..





27 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 30


முன்கதை

கோப்பு 1

கோப்பு 2
அவர் சொல்ல வந்தது புரிந்தும் வேண்டுமென்றே 'எங்க சார்?' என்றார் தன்ராஜ். வழக்கப்படி குற்றப்பத்திரிக்கையை தயாரித்ததும் அதை தயாரித்தவரே சம்மந்தப்பட்ட வழக்கை நடத்தவிருக்கும் அரசு வழக்கறிஞரிடம் கொண்டு சென்று விவரிப்பதுண்டு. அந்த வழக்கம் தன்ராஜுக்கு தெரிந்தும் இம்முறை அதை செய்ய அவர் விரும்பவில்லை. 

'என்ன சார் புதுசா கேக்கறீங்க? நேத்து சாயந்தரமே பி.பி. ரெண்டு தடவை கூப்ட்டுட்டார்.... நாந்தான் நீங்க வேற ஒரு கேஸ் இன்வெஸ்ட்டிகேஷனுக்கு போயிருக்கீங்க... நாளைக்கி காலைல அவர் உங்கள வந்து பாப்பார்னு சொல்லியிருக்கேன்....'

அப்போதும் தன்ராஜ் விருப்பமில்லாமல் நிற்பதை கவனித்த பெருமாள், 'தன்ராஜ், ஒரு நிமிஷம் ஒக்காருங்க.' என்றார்.

அவர் அமர்ந்ததும் ஆய்வாளர் தொடர்ந்தார். 'இங்க பாருங்க தன்ராஜ்.... இந்த கேஸ் ட்ரையலுக்கு வர்றப்போ செஷன்ஸ் கோர்ட்ல பிபிதான் ஆஜராவார்... அதனாலதான் அவர் இதுல நடுவுல வறார்னு நா நினைக்கேன். அவருக்கும் அக்யூஸ்டுக்கும் முன்விரோதம் ஏதோ இருக்குங்கறதும் தெரியுது. ஆனா அதப்பத்தி நமக்கு கவலையில்லை.... நமக்கு இந்த ஃபைல க்ளோஸ் பண்ணனும்.... அக்யூஸ்ட் கன்விக்டானா அத விசாரிச்ச உங்களுக்கும்தான நல்லது?'

'அதுலதான் சார் டவுட்டே.... அக்யூஸ்ட கன்விக்ட் பண்றதுக்கு போதுமான ஆதாரம் இருக்கான்னே தெரியலையே.... இருக்கற ரெண்டு மெயின் விட்னசுமே சம்பவத்த நேர்ல பாக்காதவங்க சார்... எல்லாமே வெறும் circumstantialஆவே இருக்கே..... அந்த டிஃபென்ஸ் லாயர் எப்படியோ தெரியல.... ஆனா விவரம் தெரிஞ்ச ஒரு லாயரால ட்ரையல் ஸ்டேஜிலயே போதுமான ஆதாரம் இல்லேன்னு டிஸ்மிஸ் பண்ண வச்சிரலாம்.... அத சொன்னா பிபிக்கி கோவம் வருது.... அத எங்கிட்ட வுட்ருங்கன்னு சொல்றார்...'

'அப்புறம் என்னங்க...? அவர்கிட்ட வுட்ருங்க....'

'அதெப்படி சார்...?' என்றார் தன்ராஜ் கோபத்துடன். 'கேஸ ஜெயிச்சா என்னாலதான்னு சொல்லிக்குவார்.... இல்லன்னா இன்வெஸ்டிகேட் பண்ணவரு சரியா பண்ணலைன்னு நம்ம மேலயே திருப்பி விட்ருவார்.... அப்ப எனக்கு கெட்ட பேர்தான சார்?'

பெருமாள் வியப்புடன் தன்ராஜை பார்த்தார். சர்வீஸ்ல சேந்து முழுசா அஞ்சி வருசம் கூட ஆவலை..... காக்கா ஒக்காந்து பனம் பழம் விழுந்த கணக்கா ஊர்ல ஏதோ ஒன்னு ரெண்டு கேஸ்ல கன்விக்‌ஷன் வாங்கிட்டு எஸ்.பி. ரெக்கமன்டேஷன்ல சிட்டிக்கி வந்துட்டான்.... இப்ப என்னடான்னா பேர் கெட்டுருமாம்....  இவன் வயசுல நாம சார்ஜ்ஷீட்ட கூட பாத்ததில்ல.... ஹூம்... எல்லாம் நேரம்...

'சரிங்க... இப்ப என்ன பண்ணலாம்கறீங்க? ஃபைல ஏட்டுக்கிட்ட குடுத்தனுப்பிறவா, சொல்லுங்க.'

'அனுப்பிறுங்க சார். அவர் கூப்டா பாத்துக்கலாம்..'

பெருமாள் உடனே பதிலளிக்காமல் ஒரு சில நொடிகள் தன் முன்னால் தலை குனிந்து அமர்ந்திருந்த தன்ராஜையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். பிறகு, 'சரி... அப்புறம் உங்க இஷ்டம்..' என்றவாறு தன் மேசை மீதிருந்த அழைப்பு மணியை அழுத்த தன்ராஜ் எழுந்து அறையை விட்டு வெளியேறினார்.

அடுத்த அரை மணிக்குள் மாதவியின் கொலை வழக்கைப் பற்றிய கோப்பு பப்ளிக் ப்ராசிக்யூட்டர் வேணுவின் மேசையை அடைந்தது.

*****

ராஜசேகர் சீனிவாசனை சந்தித்துவிட்டு தன்னுடைய குடியிருப்புக்கு திரும்பியதுமே தன் செல்ஃபோனை எடுத்து மகாதேவனை அழைத்தான். எதிர்முனையில் இருந்து பிசி டோன் கிடைக்கவே இணைப்பைத் துண்டித்துவிட்டு குளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்பட தயாரானான். 

'லஞ்ச் கொண்டு போறீங்களா?' என்று சமையலறையிலிருந்து அசரீரியாக வந்த மனைவியின் குரலுக்கு, 'வேணாம்' என்று பதிலளித்தான். 

செல்ஃபோன் அடித்தது. எடுத்து திரையை பார்த்தான். மகாதேவன். அவர் எதிர்முனையிலிருந்து பேசுவதற்கு முன்பே, 'காலையில கூப்ட்டேன் சார்... பிசியா இருந்தது... அதான் ஆஃபீசுக்கு கிளம்பறப்போ கூப்டுக்கலாம்னு இருந்தேன்.' என்றான்.

'நீங்க கூப்ட்டப்போ சீனிகிட்ட பேசிக்கிட்டு இருந்துருப்பேன் போலருக்கு.....'

'அப்படியா சார்?' 

'சொல்லுங்க... இன்னைக்கி ராகவாச்சாரிய போயி பாத்துட்டு வந்துறலாமா?'

ராஜசேகர் குழம்பினான், 'ராகவாச்சாரியா?' என்றான்.

மகாதேவன் சிரித்தார். 'அவர்தான் சார் கோபால் கேஸ்ல முன்னால ஆஜரானவர்....'

'ஓ! சரி சார்... இப்ப நேரா உங்க வீட்டுக்கு வரட்டுமா?'

'வேணாம் சார்..... அவர் வீடு அடையார்லதான் இருக்கு. நா அட்ரெஸ் சொல்றேன்... உங்களுக்கு அங்கருந்து பத்து பதினைஞ்சி நிமிஷ ட்ரைவ்தான் இருக்கும்... இங்க வந்தீங்கன்னா தேவையில்லாத அலைச்சல்... நா நேரா அங்க வந்துடறேன்.. அங்க வச்சி மீட் பண்லாம்.... என்ன சொல்றீங்க?'

'சரி சார்.' என்றவாறு அவர் கூறிய விலாசத்தைக் குறித்துக்கொண்டு இணைப்பை துண்டித்தான்...

********

ஆய்வாளர் பெருமாள் மேசை மீதிருந்த தொலைபேசி அவசரமாக அடிக்க எடுத்து, 'Inspector பெருமாள்' என்றார். 

'என்ன சார் எப்பவும் இல்லாம புதுசா ஃபைல் மட்டும் வந்துருக்கு? இன்வெஸ்ட்டிகேஷன் ஆஃபீசர் வரமாட்டாராமா?' எதிர்முனையிலிருந்து வந்த பி.பி.யின் குரலில் ஏளனம் தொனித்ததை உணர்ந்த பெருமாள் உரக்க சிரித்தார். தன்ராஜ் ஸ்டேஷனில் இல்லை என்பது அவருக்கு தெரியும். 'என்ன சார் பண்றது? நா சொல்லி பாத்தேன்.... நீங்க அனுப்புங்க... அவர் ஏதாச்சும் சொன்னா பாத்துக்கலாம்னுட்டான்... எதுக்கும் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லிறலாம்னு நாலஞ்சி தரம் ட்ரை பண்ணேன்.... உங்க சைட்ல அடிச்சிக்கிட்டே இருந்தது....'

'அப்போ நாந்தான் வெத்திலை பாக்கு வச்சி கூப்டணும் போலருக்கு!'

'ஆள் இங்க இல்ல சார்.... ஏதோ இன்வெஸ்ட்டிகேஷனாம்... போயிருக்கார்.... என்ன கேஸ்னு கூட எங்கிட்ட சொல்ல தோனலை... என்ன பண்ண சொல்றீங்க? டைரக்டா வந்த ஆளுங்களாச்சே... நம்மள மாதிரி ஆளுங்க ஒன்னும் சொல்ல முடியல சார்....' 

எதிர்முனையில் பி.பி. உரக்க சிரிப்பது கேட்டது. எல்லாம் தலையெழுத்து என்று நினைத்தார் பெருமாள். 

'சரி பரவால்லை..... நானே அந்த ஆள் செல்லுல கூப்டறேன்... என்ன பண்றது காரியம் ஆவணுமே.... அந்தாள் செல்ஃபோன் நம்பர சொல்லுங்க.'

பெருமாள் அவசரமாக தன் செல்ஃபோனை எடுத்து தன்ராஜின் செல்ஃபோன் எண்ணை தேடிப்பிடித்து கூறிவிட்டு, 'நா சொன்னது எதுவும் அவனுக்கு தெரிய வேணாம் சார்.' என்றார்.

அதற்கும் பிபியிடமிருந்து சிரிப்பே பதிலாக வந்தது. 'என்ன சார் அவ்வளவு பயமா?'

'சேச்சே.. பயமெல்லாம் இல்ல சார்.... ரிட்டையர் ஆவற டைம்ல நமக்கு கீழ வேலை செய்யறவங்களோட எதுக்கு வீணா விரோதம்னுதான்.... இன்னும் ஒரு வருசம்.... போறப்போ மனசமாதானமா போயிறணும் சார்...'

'அதுவும் சரிதான்.... நா அவன் கிட்ட டீல் பண்ணிக்கறேன்... நீங்க இத மறந்துருங்க....'

'சரி சார்...' என்று பதிலளித்த பெருமாள் எதிர்முனையில் இணைப்பு துண்டிக்கப்படும்வரை காத்திருந்து தொலைபேசியை ஒரு நீண்ட பெருமூச்சுடன் அதன் இருக்கையில் வைத்தார்.....

********

ராஜசேகர் சென்னை அடையாரில் இருந்த அட்வகேட் ராகவாச்சாரி வீட்டைத் தேடிப்பிடித்துக்கொண்டு சென்றடைந்தபோது மகாதேவனின் கார் வாசலில் நிற்பதைப் பார்த்தான். எப்படி இவர் இவ்வளவு சீக்கிரம்? ஒருவேளை நாம கூப்ட்டப்பவே கார்ல போய்கிட்டிருந்திருப்பாரோ? இருக்கும்... நாம வர்றதுக்குள்ளவே நம்மளப்பத்தி அவர்கிட்ட பேச வேண்டியத பேசி முடிச்சிறலாம்னு நினைச்சிருப்பார்....சரி, வந்தது வந்தாச்சி.... ஏடாகூடமா எதையும் பேசாம அவங்க சொல்றத மட்டும் கேட்டுக்குவோம். அத யூஸ் பண்றதும் பண்ணாததும் நம்ம விருப்பம்தானே...? 

சென்னையின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று அடையார். சென்னை மாநகர் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு பிரபலமடையும் முன்பே விண்ணை முட்டும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது இங்குதான்.  ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிதாக எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் குறுகலான சாலைகளும் அதன் இருமருங்கிலும் பார்க் செய்யப்பட்டிருந்த நாற்சக்கர வாகனங்களும் காலை நேரத்திலேயே மிகுந்த பரபரப்புடன் இருந்ததை கவனித்த ராஜசேகர் தன்னுடைய வாகனத்தை மகாதேவனின் வாகனத்திற்கு பின்புறம் இருந்த குறுகிய இடத்தில் லாவகமாக நிறுத்திவிட்டு இறங்கி வீட்டை அண்ணாந்து பார்த்தான். 

பல அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்திருந்த அந்த சாலையில் இருந்த ஒருசில பழைய பாணி தனி வீடுகளில் ராகவாச்சாரியின் வீடு ஒரு தனிச்சிறப்புடன் விளங்கியதைக் கவனித்தான். எப்படியும் ஐம்பது வருடங்களாவது ஆகியிருக்கும் போலருக்கு என்ற நினைப்புடன் வாசலை நெருங்கி பழைய பாணி பர்மா தேக் வாசற்கதவில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய அழகான வெண்கல மணியின் வாயில் ஆடிக்கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தான். வீட்டினுள் எங்கோ மணிச்சத்தம் ஒலிப்பது கேட்டது. 

அடுத்த ஒரு சில நிமிடங்களில் வாசற்கதவைத் திறந்தவாறு வந்த மகாதேவன் வாங்க சார் என்று அழைக்க ராஜசேகர் அவர் பின்னால் வீட்டினுள் நுழைந்தான். 

வாசலில் நுழைந்தவுடனேயே கற்பூர வாசனை மூக்கைத் துளைத்தது. அப்போதுதான் பூஜை முடிந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். அவனுக்கு முன்னால் சென்ற மகாதேவன் வானம் பார்த்த முற்றத்தை சுற்றிக்கொண்டு மறுப்பக்கம் அமைந்திருந்த படுக்கையறை போன்றதொரு ஒரு அறைக்குள் நுழைய அவரை தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்ற தயக்கத்துடன் ராஜசேகர் அங்கேயே நின்றான்.

'பரவால்லை வாங்க சார்.' என்ற மகாதேவனின் குரல் அறைக்குள் இருந்து வர வேறுவழியில்லாமல் அறைக்குள் நுழைந்தான். 

அறைக்குள் நடுநாயகமாக கிடந்த மிகப்பெரிய மரக்கட்டிலின் தலைமாட்டில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்த சுமார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்கவரைப் பார்த்தான். 

'ரெண்டு வருசம் ஆச்சி.... ரைட் சைட் கம்ப்ளீட்டா பாரலைஸ்ட்.... ஆரம்பத்துல பேச்சும் போயிருந்துது....இப்போ பரவால்லை.... பாடி வீக்காயிருச்சே தவிர மைன்ட் இன்னும் பயங்கர அலர்ட்....' என்றவாறு ராகவாச்சாரியின் உடல் நிலை பற்றி அறிக்கையிட்ட மகாதேவன், 'என்ன சார்.... நா சொல்றது சரிதானே?' என்றார் படுக்கையில் இருந்தவரிடம்.

ராகவாச்சாரி புன்னகையுடன், 'வாங்க ராஜசேகர்... வந்து பக்கத்துல ஒக்காருங்கோ.' என்று தன் கட்டிலின் அருகில் கிடந்த இருக்கைகளுள் ஒன்றைக் காட்டினார். 'இவன் இப்படித்தான் எதையாச்சும் சொல்லின்டே இருப்பான்....'

ராஜசேகர் தயக்கத்துடன் அவரை அணுகி அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து தன் கைப்பெட்டியை அருகில் தரையில் வைத்துவிட்டு தன் எதிரில் இருந்தவரையே பார்த்தான்.  'சாரி டு டிஸ்டர்ப் யூ சார்..' என்றான் தயக்கத்துடன்.

ராகவாச்சாரி உரக்க சிரித்தார். 'Don't be sorry. நீங்க வந்ததுல எனக்கு ஒரு டிஸ்டர்பன்சும் இல்லை..... மகாதேவன் காலையில ஃபோன்ல சொன்னதும் உடனே சரின்னுட்டேன்... என்ன வேணும்னாலும் கேளுங்கோ... எனக்கும் டைம் போவணுமே... என்ன சொல்ற மகா?' 

மகாதேவனும் சிரித்தார். வேறு வழியின்றி ராஜசேகரும் சிரித்து வைத்தான். 

'நம்ம கோபாலோட பழைய கேஸ் கட்ட கொஞ்சம் கொடுத்தேள்னா ராஜசேகர் வாசிச்சி பாத்துட்டு தந்துருவார்...' என்றார் மகாதேவன்.

'அதுக்கென்ன குடுக்கச் சொல்றேன்.... ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லிக்கறேன்.' என்றவாறு தன் தலைமாட்டில் இருந்த அழைப்பு மணி பொத்தானை அமுக்கினார். 

தொடரும்...

26 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 29

முன்கதை

அடுத்த நாள் காலை ராஜசேகர் எழுந்ததும் 'இன்று அட்வகேட் மகாதேவனை அழைக்க வேண்டும்' என்று தன்னுடைய குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு வழக்கம் போல நடந்துவிட்டு வரலாம் என்று வீட்டிலிருந்து புறப்பட்டான்.

சாதாரணமாக காலையில் அவன் வாக்கிங் செல்லும்போது எதைப்பற்றியும் யோசிக்காமல் மூச்சை உள்ளிழுந்து வெளியிடுவதிலேயே கவனத்தைச் செலுத்துவான். ஆனால் அன்று அவ்வாறு செய்ய முடியாமல் முந்தைய தினம் கோபாலை மாதவி வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டி மணியுடன் அவன் தொலைபேசியில் பேசியவற்றைப் பற்றிய சிந்தனை அவனை ஆட்கொண்டது.

மணி சொல்றத வச்சி பார்த்தா கோபால் அன்னைக்கி சாயந்தரம் ஆறே முக்கால் மணியிலருந்து ஏழு மணி வரைக்கும் மாதவி வீட்டுக்குள்ள இருந்துருக்கார். ஆனால் அவர் அந்த வீட்டுக்கு வெளியில் இருந்த அழைப்பு மணியை அடித்துக்கொண்டிருந்ததை பார்த்ததாகத்தான் அடுத்த வீட்டு பெண் சாட்சியம் கூறியிருக்கிறார். இது எப்படி சாத்தியமாகும்? 

இந்த கேள்வியை மனதில் அசைபோட்டுக்கொண்டே நடந்தவனுக்கு சட்டென்று அந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதைப் போல் இருந்தது. மாதவியின் வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்த கோபால் அடுத்த வீட்டில் வசிக்கும் பெண் வருவதை கவனித்திருக்க வேண்டும். அவளிடமிருந்து தப்பிக்க கதவுக்கருகில் இருந்த காலிங்பெல்லை அடிப்பதுபோல் நடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் நினைத்ததற்கு நேர் மாறாக அந்த பெண் அவரைக் கண்டதும் கோபத்தில் ஏதாவது கூறியிருக்க வேண்டும். கோபாலும் கோபத்தில் திருப்பி ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். 

இல்லை.... அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை.... ஏற்கனவே கோபாலை அந்த வீட்டிற்கு வந்து செல்வதை அந்த பெண் பலமுறை பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே அந்த நேரத்தில் அவரை அங்கு பார்த்ததற்காகவே அந்த பெண் கோபம் அடைந்திருக்க வாய்ப்பில்லை. இது கோபாலுடைய சூட்சுமமாக இருக்கத்தான் வாய்ப்புள்ளது. மூடியிருந்த கதவுக்கு முன்னால் தன்னை கண்டதற்கு ஒரு வலுவான சாட்சியத்தை உருவாக்கும் நோக்கத்துடன் கோபாலே அந்த பெண்ணை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்திருக்க வேண்டும்...

இந்த இரண்டு கோணத்திலும் தன்னுடைய சிந்தனையை தொடர்ந்தான். இறுதியில் அவன் இரண்டாவதாக நினைத்ததுதான் சரியானதாக இருக்கும் என்ற தீர்மானத்துடன் நடையை முடித்துக்கொண்டு திரும்பினான்.

அவனுடைய குடியிருப்பின் வளாகத்திற்குள் நுழைந்ததும் எதிரில் சீனிவாசன் அவருடைய பால்கணியிலிருந்து தன்னை நோக்கி சைகை காட்டுவதை கவனித்தான். 'என்ன சார்?' என்றான்.

'ஒரு நிமிஷம் வந்துட்டு போக முடியுமா சார்?' என்றார் சீனிவாசன்.

அன்றைக்கு அவனுக்கு எந்த கேசும் இல்லை. ஆகவே அவர் அழைத்ததுமே தன் குடியிருப்பிற்கும் கூட செல்லாமல் படியேறி முதல் தளத்திலிருந்த சீனிவாசனின் குடியிருப்பை அடைந்தான். வாசற்கதவு திறந்தே இருந்தது. சீனிவாசன் அவனை எதிர்பார்த்து சோபாவில் அமர்ந்திருந்ததைக் கண்டான். வாக்கிங் ஷூவை அவிழ்த்து வாசலில் வைத்துவிட்டு சாக்ஸுடன் அவருடைய வரவேற்பறைக்குள் நுழைந்து அவருக்கருகில் அமர்ந்தான். 'சொல்லுங்க சார்.. ஏதாவது அர்ஜன்டா?'

'இல்ல சார்... நேத்தைக்கி என் மருமகக் கிட்ட பேசினீங்களா... அவ என்ன சொன்னான்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்....'

ராஜசேகருக்கு நளினியிடம் தான் பேசியதை முழுவதுமாக அவரிடம் கூற விருப்பம் இல்லை. அவர் மருத்துவமனையில் இருந்து வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 'அவங்கக் கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் அங்க போனேன் சார்...'

'என்ன விஷயம்?'

'கோபாலுக்கு எதிரா சாட்சியம் சொல்லணும்னு போலீஸ் வந்து கேட்டா ஹெல்த் சரியில்லை... அதனால வர முடியாதுன்னு சொல்லிருங்கன்னு......'

சீனிவாசன் ஒரு சில நொடிகள் பதில் பேசாமல் அமர்ந்திருந்தார். பிறகு அவனை திரும்பி பார்த்த பார்வையில் வேதனை தெரிந்தது. 'அந்த பொண்ணு நினைச்சா பெண் கொடுமைன்னு சொல்லி தனியா ஒரு கம்ப்ளைன்டே குடுத்திருக்க முடியும் சார்... ஆனா அப்படி செய்யலை.... அப்படியிருக்கறப்போ கண்டிப்பா கோபாலுக்கு அகெய்ன்ட்ஸ்டா விட்னஸ் ஸ்டாண்டுல ஏறமாட்டா சார்.... நா சொல்றது சரிதானே?'

'என்னெ அவருக்கு சாதகமா விட்னஸ் குடுக்க கூப்டாதீங்க சார்னும் உங்க மருமக கேட்டா என்று இவர் கிட்ட சொல்லலாமா' என்று நினைத்தவன் பிறகு வேண்டாம் என்று தீர்மானித்தான். 'ஆமா சார்...' என்றான் சுருக்கமாக.

'ரொம்ப நல்ல பொண்ணு சார்... அவளுக்கு இப்ப இருக்கற நிலமையில என்னெ விட்டா சொந்தம்னு சொல்லிக்கறதுக்கு யாரும் இல்ல.... கூட பொறந்த அண்ணன் ஒருத்தன் இருக்கான்னுதான் பேரு..... வய்ஃப் பேச்ச கேட்டுக்கிட்டு இப்படியொரு தங்கை இருக்கறதையே மறந்துட்டான் போலருக்கு..... ஆஸ்பத்திரிக்குக் கூட இதுவரைக்கு வந்து பாக்கலை.... ரெண்டு தரம் ஃபோன் போட்டு சொன்னேன்.. அப்புறம் விட்டுட்டேன்.....' என்ற சீனிவாசன் சற்று நேரம் மவுனமாகிப் போனார்..... பிறகு, 'உங்க சன்  கிட்டருந்து டைவர்ஸ் வாங்க டிசைட் பண்ணிட்டேன் மாமான்னு என் கிட்ட சொன்னப்போ.... நீ எங்கம்மா போவேன்னு கேட்டேன்..... அதுக்குக் கூட பதில் சொல்ல தெரியல பாவம்.... அந்த அளவுக்கு வெகுளி....'

அதற்கு மேலும் அங்கிருந்து பேச்சை வளர்த்து அவரை மனநோகச் செய்ய விரும்பாத ராஜசேகர் எழுந்து நின்றான். 'சாரி சார்... இன்னைக்கி அர்ஜன்டா வேற ஒரு கேஸ் இருக்கு......'

சீனிவாசனும் எழுந்து நின்றார். 'ஓக்கே சார்....' என்றவாறு அவனுடன் வாசல் வரை வந்தவர். 'சார் மகாதேவன் கூப்ட்ருந்தான்.... உங்கக்கிட்ட கோபாலுக்கு முன்னால ஆஜரான வக்கீல பாக்கலாம்னு சஜ்ஜஸ்ட் பண்ணானாம்... ஆனா நீங்க அத கண்டுக்கவே இல்லைன்னு சொன்னான்.... உண்மையா சார்?' என்றார் தயக்கத்துடன்.

ராஜசேகர் நின்று அவரை திரும்பிப் பார்த்தான். 'அப்படியெல்லாம் இல்ல சார்.... இன்னைக்கி காலையில எழுந்ததுமே அவர கூப்டணும்னு நான் நோட் பண்ணி வச்சிருக்கேன்.... இன்னைக்கி இல்லன்னா நாளைக்கி கட்டாயம் போயி பாக்கறேன்.... எனக்கும் யூஸ்ஃபுல்லா இருக்குமே...'

'தாங்ஸ் சார்..... ஆரம்பத்துல கோபாலுக்கு இது வேணும்னு நினைச்சாலும்... எனக்கும் அவனெ விட்டா வேற ஆள் இல்லையே சார்.... நளினியோட ஃப்யூச்சர நினைச்சாலும் கவலையா இருக்கு..... இதுக்கப்புறம் கோபால் திருந்திருவான்னு எனக்கு நம்பிக்கையிருக்கு.... அதனாலதான் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துறாதம்மான்னு அவகிட்ட சொல்லி வச்சிருக்கேன்.... அப்புறம் பகவான் விட்ட வழி...'

'இந்த கேஸ் முடியறதுக்குள்ள  அவர் கிட்டருந்து டைவர்ஸ் வாங்கிருவேன் சார்...' என்று தீர்க்கமாய் தன்னிடம் நளினி தெரிவித்ததை நினைவுகூர்ந்தான் ராஜசேகர். ஆனால் இதை எப்படி இவரிடம் சொல்வது....? வேணாம். ஒருவேளை கேஸ் முடியறதுக்குள்ள நளினி தன் டிசிசனை மாத்திக்கிட்டாலும் மாத்திக்கலாம்... எதுக்கு நம்ம வீணா அவ சொன்னத சொல்லி இவர் மனச நோகடிக்கணும்?

'சரி சார்... நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்காதீங்க.... கோபால இந்த கேஸ்லருந்து விடுவிக்கறதுக்கு என்னால முடிஞ்சத நா கண்டிப்பா செய்வேன் சார்.... கவலைப்படாதீங்க..' என்ற ஆறுதலான வார்த்தைகளோடு அவரிடமிருந்து விடைபெற்றான். 'நா அந்த லாயர மீட் பண்ணிட்டு வந்து ஃபீட்பேக் தர்றேன்.'

'சரி சார்.... அது போறும்.'

********

'சார்.... நீங்க வந்ததும் ஐயா வரச்சொன்னார்.'

காவல்நிலையத்திற்குள் நுழைந்ததுமே வாசலுக்கருகில் அமர்ந்த ரைட்டர் கூறியதைக் கேட்ட எஸ்.ஐ. தன்ராஜ் பதில் ஒன்றும் கூறாமல் தன் இருக்கையை நெருங்கி அமர ரைட்டர் தன் வலப்பக்கம் அமர்ந்திருந்த ஏட்டையாவை பார்த்தான். 'என்னாச்சிங்க இவருக்கு? ஏன் கேக்காத மாதிரி போறார்?' என்று கிசுகிசுத்தான்.

'சொல்லிட்டேல்ல... உன் வேலைய பாரு.... அவருக்கு எப்ப போவணும்னு தோனுதோ போய்க்கட்டும்... மறுபடியும் அவர் டேபிள் வரைக்கும் போயி நிக்காத..' என்றார் ஏட்டு. 'அவங்க ரெண்டு பேருக்கும் இடையிலதான் கொஞ்ச நாளாவே டேர்ம்ஸ் சரியில்லையே?'

என்னவோ ஏட்டய்யா.... இருக்கறது நாலு பேரு....'

அடுத்த நொடியே ஆய்வாளர் அறையிலிருந்து அழைப்பு மணி கிர்ர்ர்ர்ர் என்று அலற 'உடமாட்டார் போலருக்கே என்றவாறு ஏட்டு எழுந்து அவருடைய அறைக்குள் நுழைந்து விரைப்புடன் சல்யூட் அடித்துவிட்டு நின்றார்.

'யோவ் க்ரைம் எஸ்.ஐ. வந்ததும் என்னெ வந்து பாக்கணும்னு சொல்ல சொன்னேனே சொல்லிட்டீங்களா?'

'ரைட்டர் சார் வந்ததுமே சொல்லிட்டார் சார்... நா வேணும்னா போய் இன்னொரு தபா சொல்லவா சார்?'

ஆய்வாளர் எரிச்சலுடன் ஏட்டை நிமிர்ந்து பார்த்தார். 'வேணாம், வேணாம்... அவர் வர்றப்போ வரட்டும்... நீ போயி வேலைய பாரு.'

'சரிங்கைய்யா..' என்றவாறு ஏட்டு அவருடைய அறையிலிருந்து வெளியில் வரவும் எஸ்.ஐ தன்ராஜ் அங்கு வரவும் சரியாக இருந்தது. 'சார்... ஐயா...' என்று தயக்கத்துடன் அவர் முகத்தைப் பார்த்த ஏட்டு அங்கு எள்ளும் கொள்ளும் வெடிப்பதைப் பார்த்ததும் நமக்கேன் வம்பு என்று வாயை மூடிக்கொண்டார்.

'இப்ப பாரு வேடிக்கைய....' என்று கிசுகிசுத்த ரைட்டர பார்த்து முறைத்தவாறு தன் இருக்கையில் அமர்ந்த ஏட்டு, 'யோவ் கொழுப்பா...? அவங்க காதுல மட்டும் விழுந்திச்சி... நீ தொலைஞ்சே.... மூடிக்கிட்டு வேலைய பார்...' என்றவாறு தன் இருக்கையில் அமர்ந்து தன் அலுவலை பார்க்கலானார்.

ஆய்வாளர் அறைக்குள் நுழைந்த தர்மராஜ், 'சார் கூப்ட்டீங்களா?'

அவர் அறைக்குள் நுழைந்ததை கவனித்தும் கவனியாததுபோல் தன் முன் விரித்து வைத்திருந்த மாதவி வழக்கின் குற்றப்பத்திரிக்கையை படித்துக்கொண்டிருந்த ஆய்வாளர் அப்போதுதான் அவர் வந்ததை உணர்ந்தவர்போல் போலியான ஒரு புன்னகையுடன் தன் முன் இருந்த இரு இருக்கைகளில் ஒன்றை காண்பித்தார். 'உக்காருங்க.'

தன்ராஜ் அமர்ந்து அவராக பேசட்டும் என்று காத்திருந்தார். ஏறக்குறைய முப்பத்தைந்து வருட பணிக்காலத்திற்குப் பிறகு இன்னும் ஓய்வு பெற ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர் பெருமாள். ஆனால் எஸ்.ஐ. தன்ராஜ் நேரடியாக எஸ்.ஐஆக பணியில் சேர்ந்தவர். ஆகவே பெருமாளை தன்னுடைய உயர் அதிகாரியாக ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர். அதற்கு நேர் எதிராக ஸ்ட்ரெய்ட்டா எஸ்.ஐ. ஆயிட்டா நீ என்ன பெரிய கொம்பா.... எக்ஸ்பீரியன்ஸ் என்ன இருக்கு என்ற மனநிலையில் அவரை ஒரு விரோதியாக பாவிப்பவர் பெருமாள். ஒருவருக்கு inferiority complex மற்றவருக்கு superiority complex....ஒருவிதத்தில் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான்....

'உங்க சார்ஜ் ஷீட்ட படிச்சி பாத்ததுல ஒன்னு ரெண்டு பாய்ன்ட்ஸ் விட்டுப்போயிருக்கா மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்.....' என்றவாறு தன்னைப் பார்த்த ஆய்வாளரை எவ்வித சலனமுமில்லாமல் பார்த்தார் தன்ராஜ். 

அவரிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்த பெருமாள் அவர் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்க எல்லாம் திமிர்... என்னன்னு கேட்டா என்ன குறைஞ்சா போயிருவே என்று மனதில் நினைத்தவாறு தொடர்ந்தார்.... 'இருந்தாலும் இப்ப நாம அதப்பத்தி டிஸ்கஸ் பண்ண வேணாம்.... பிபியும் பாத்துறட்டும். அவர் என்ன சொல்றார்னு பாக்கலாம்... என்ன சொல்றீங்க?'

'சரி சார்.' என்றார் தன்ராஜ் சுருக்கமாக.

அடுத்த சில நொடிகளில் தன்ராஜ் தயாரித்திருந்த குற்றப்பத்திரிக்கையில் கையெழுத்திட்டு தன் ஆய்வாளர் பெயர் முத்திரைய பதித்த பெருமாள், 'இங்க நீங்களும் கையெழுத்த போட்ருங்க.' என்றவாறு அதை தன்ராஜிடம் திருப்பி காட்டினார். 'இத ப்ரிப்பேர் பண்ணது நீங்கதானே.... அதான்...'

பதில் ஏதும் பேசாமல் அதை தன்னிடம் இழுத்த தன்ராஜ் பரபரவென்று கையெழுத்திட்டு திருப்பி அளித்தார். பிறகு தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றார், 'வேற ஒன்னும் இல்லையே சார்.... நா போலாமா?' 

பெருமாள் வியப்புடன் அவரை பார்த்தார். 'அப்போ நீங்க இந்த ஃபைல் கூட போகலையா?'

தொடரும்...













25 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 28

முன்கதை

'ஆமா சார்... அவர் கிட்ட வீட்டு சாவி ஒன்னு இருக்குதுங்க... இதுக்கு முன்னால போனப்பவும் சார் அவரோட சாவிய போட்டு திறந்துக்கிட்டு உள்ள போறத பாத்துருக்கேன்... அன்னைக்கிம் கதவ திறந்து உள்ள போறத பாத்துட்டுத்தான் நா பக்கத்து சந்துல வண்டிய பார்க் பண்ணிட்டு ஒக்காந்துருந்தேன்....' என்றார் மணி.

ஆக கோபால் அந்த வீட்டுக்குள்ள போயிருக்கார்.... இத எதுக்கு எங்கிட்டருந்து மறைக்கணும்? அந்த பொம்பள வேணும்னே டைம மாத்தி சொல்லுதுன்னு நம்ம கிட்ட சாதிச்சாரே?

'சார்....' என்று எதிர்முனையிலிருந்து குரல் வர சுதாரித்துக்கொண்ட ராஜசேகர் தன்னுடைய விசாரணையை தொடர்ந்தான்.

'அப்புறம் என்னாச்சி?'

'அஞ்சி நிமிஷத்துல வரேன்னு சொன்னவர் கால் மணி நேரமாயும் வரல சார். அதனால என்னாச்சின்னு பாக்கறதுக்கு நா ரோட்டுக்கு வந்து பாத்தேன். சார் பக்கத்து வீட்டு லேடிகிட்ட என்னமோ சத்தமா சொல்லிக்கிட்டிருந்தார்.  என்னன்னு காதுல விழல... என்னை பாத்ததும் உடனே கிளம்பி வந்துட்டார்.....'

'கோபால் உங்களோட வந்தத அந்த லேடி பாத்தாங்களா?'

'தெரியல சார்.... நா கவனிக்கல.... உடனே ஆட்டோவ கிளப்பிக்கிட்டு வந்துட்டோம்...'

அந்த லேடி பார்த்திருந்தா அதையும் போலீஸ்கிட்ட சொல்லியிருக்கணுமே! அதனால கோபால் ஆட்டோவுல ஏறி போனத அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான் ராஜசேகர்.

'அவர எத்தன மணிக்கி திருப்பி ட்ராப் பண்ணீங்க?'

'எட்டு, எட்டரை ஆயிருச்சி சார்...'

'அப்படியா,எதுக்கு அவ்வளவு நேரம்?'

'அங்கருந்து அடையார் போயி வந்தோம்... அதான் அவ்வளவு லேட்.'

'அடையாரா?'

'ஆமா சார்... கோபால் சார் அந்த வீட்லருந்து வர்றப்போ கையில ஒரு பை வச்சிருந்தார்.... அத அடையார் ஆத்துல போட்டுட்டு போயிரலாம்னு சொன்னார்....'

'அப்படியா? என்ன பை?'

'சாமிக்கு போட்ட பழைய மாலைன்னு சொன்னார் சார்.... அத குப்பையில போட மாட்டாங்களாம். அதான் போற வழியில அடையார் ஆத்துல போட்டுரலாம்னு......'

'ஓ! அப்ப சரி மணி... நீங்க அவர ஆஃபீஸ்கிட்ட ட்ராப் பண்ணிட்டு போய்ட்டீங்க அவ்வளவுதானே?'

'ஆமா சார்... நா வீட்டுக்கு நடந்து போய்க்கிறேன்னு அவர் சொன்னதால நா அவர ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்...'

அதற்கு மேலும் அவரிடம் ஏதும் கேட்க ஒன்றுமில்லை என்ற நினைத்த ராஜசேகர், 'சரிங்க... ரொம்ப தாங்ஸ்..' என்று இணைப்பை துண்டிக்க நினைத்தபோது எதிர்முனையிலிருந்து குரல் வந்தது....

'சார்... உங்கக் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.....'

'சொல்லுங்க மணி...'

'இத இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லல சார்.... அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு....'

ராஜசேகர் சிரித்தான். 'தயங்காம சொல்லுங்க....'

'அதுக்கில்ல சார்.... இந்த விஷயம் போலீஸ்க்கு தெரிஞ்சிருமோன்னுதான் பயமாருக்கு.....'

ராஜசேகர் குழம்பினான்.....போலீசுக்கு தெரியக்கூடாத அளவுக்கு அப்படியென்ன விஷயம்? 'கோபால் சார் சம்மந்தப்பட்ட விஷயமா?'

'ஆமா சார்.... அதான் யோசிக்கிறேன்.'

'நான் அவருக்கு சார்பா வாதாடப் போற வக்கீல்னு உங்களுக்கு தெரியுமில்ல? எதுவானாலும் நீங்க சொல்றது எங்கிட்டத்தான் இருக்கும்.... பயப்படாம சொல்லுங்க.'

'சார் ஒரு பை கொண்டு வந்தார்னு சொன்னேன் இல்ல சார்?'

'ஆமா.. அதத்தான் ஆத்துல போட்டுட்டார் இல்ல?'

'ஆமா சார்... ஆனா அத வச்சிருந்த இடத்துல ரத்தக் கறை இருந்திச்சி சார்... அத அடுத்த நாள் வண்டிய கழுவறப்பத்தான் நானே பாத்தேன்....'

இதை எதிர்ப்பாராத ராஜசேகர் எப்படி ரியாக்ட் செய்வதென தெரியாமல் ஒரு நிமிடம் மவுனமாகிப்போனான்....

'சார்....' என்ற மணியின் குரல் எதிர்முனையிலிருந்து வந்ததும் சுதாரித்துக்கொண்டு 'மேல சொல்லுங்க' என்றான்.

'நா உடனே சோப்பு போட்டு நல்லா கழுவி விட்டுட்டேன் சார்.'

'இத என்னெ தவிர வேற யார் கிட்டயாவது சொன்னீங்களா, அவரோட பிஏ ராமராஜன் கிட்ட...'

'எப்படி சார்? கோபால் சார் எனக்கு தெய்வம் மாதிரி சார்... எனக்கு மட்டுமில்ல... எங்க ஆட்டோ ஸ்டான்டுல இருக்கற எல்லாருக்குமே அப்படித்தான்.'

தெய்வமா? கோபாலா? அவருக்கு இப்படியொரு முகமா? 

'என்ன சொல்றீங்க மணி... கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்களேன்.'

'சொல்றேன் சார்.... ஒரு வருஷத்துக்கு முன்னால எம் பொண்ணுக்கு ஹார்ட்ல ஓட்டைன்னு டாக்டர் சொல்லி ஆப்பரேஷன் செஞ்சாத்தான் காப்பாத்த முடியும்னு சொல்லிட்டாங்க. அப்பருந்த ஆட்டோவ வித்து, பொண்டாட்டியோட நகையெல்லாம் வித்து, அங்க இங்க கைமாத்தா வாங்கியும் ஒரு லட்சம் துண்டு விழுந்துது.... அப்போ சார்கிட்டதான் போயி நின்னேன். அவர் ஒன்னுமே பேசாம ஒரு லட்சத்த எடுத்து குடுத்து ஆக வேண்டியத பாரு மணி... இன்னும் வேணும்னா தயங்காம கேளுன்னார்... அன்னையிலருந்து மாசா மாசம் என்னால குடுக்க முடிஞ்சத குடுத்துக்கிட்டுத்தான் வரேன்.... இன்னும் அம்பதாயிரத்துக்கு மேல குடுக்கணும்... வாங்குன கடனையே குடுக்க முடியல... போறாததுக்கு இப்ப ஓட்ற ஆட்டோ லோனையும் சார்தான் ஜாமீன் போட்டு வாங்கி குடுத்தார். எனக்கு மட்டுமில்லீங்க, எங்க ஸ்டான்டுலருக்கறவங்க யார் எப்ப கேட்டாலும் ஏன்னு கேக்காம பணத்த குடுத்து ஹெல்ப் பண்றவர் சார் அவர்... இன்னைக்கி வரைக்கும் வட்டின்னு ஒரு பைசா வாங்கனதில்லைங்க.... அப்படிப்பட்டவர் கொலையே செஞ்சிருந்தாலும் நா மட்டுமில்ல சார்... எங்க ஸ்டான்டுல இருக்கற யாருமே காட்டிக்குடுக்க மாட்டாங்க...'

மலைத்துப்போனான் ராஜசேகர். அதுவரை கோபால் ஒரு பெண் பித்து பிடித்தவர், முதல் மனைவியின் மரணத்துக்கு காரணமானவர், இரண்டாவது மனைவிக்கு தெரியாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தவர், மனைவி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்துபவர் என்றெல்லாம் அவருக்கு மிகவும் நெருங்கியவர்கள் கூற கேட்டிருந்தவனுக்கு அத்தகையவரை தெய்வம் என்று கருதுபவர்களும் இருக்கக்கூடும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.

'அது மட்டும் இல்லீங்க சார்...'

'சொல்லுங்க.'

'அந்த பொம்பளை மாதிரி ஆளுங்கள போட்டுத் தள்றதுல தப்பே இல்ல சார்...'

அவனுக்கும் அது சரிதான் என்று தோன்றியது.. இருந்தாலும் 'எதுக்கு அப்படி சொல்றீங்க?' என்றான்.

'பின்னே என்ன சார்.... கோபால் சாரோட சம்சாரம் ரொம்ப நல்லமாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன்... அப்படியொரு சம்சாரத்த வச்சிக்கிட்டு சார் எதுக்குத்தான் இந்த மாதிரி பொம்பளைக்கிட்ட சகவாசம் வச்சிக்கிட்டிருக்காரோன்னு ஆட்டோ ஸ்டான்டுல இருக்கற எல்லாருமே பேசிக்குவோம்..... சாருக்கும் அந்தம்மா சாவுக்கும் சம்மந்தம் ஏதாச்சும் இருக்குமான்னு எனக்கு தெரியலீங்க... ஆனா அப்படியே இருந்தாலும் நா மட்டுமில்லீங்க... எங்கள்ல சேர்ந்த யாருமே அவர காட்டிக்குடுத்துற மாட்டோம் சார்... அதனாலதான் இத நா இதுவரைக்கும் யார் கிட்டயும் சொல்லல....'

'என் கிட்டயும் சொல்லாம இருந்துருக்கலாம் இல்ல? எதுக்கு சொன்னீங்க?'

'ராமராஜன் சார் தான் சொன்னார்... நீங்கதான் அவர் பக்கம் ஆஜராவப்போற வக்கீல். உங்கிட்ட அன்னைக்கி சார் கூட போனதப்பத்தி பேசணும்னு சொல்றார்.... எதையும் மறைக்காம நடந்தத அப்படியே சொல்லிருன்னு..... அதான்.....'

ராஜசேகருக்கு தன் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்டு வியப்பாயிருந்தது. அவனுக்கும் மாதவி கொலையுண்டாள் என்பதை கேள்விப்பட்டபோது அது ஒரு இழப்பாக தோன்றவில்லை. எங்கே அந்த வழக்கில் நாம் சிக்கிக்கொள்வோமோ என்றுதான் துவக்கத்தில் கலவரமடைந்தான். ஆனால் மாதவியின் மரணத்திற்கு தான் நேரடி பொறுப்பாளி இல்லை  என்பதை அறிந்துக்கொண்டதிலிருந்து மாதவியின் மரணம் நியாயமானதுதான் என்றும் கூட அவன் நினைத்தான். ஒரே நேரத்தில் பல ஆண்களை தன் அழகால் மயக்கி ஆட்டிப்படைக்கும் மாதவி போன்றவர்களுடைய முடிவு இப்படித்தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்ற கோணத்தில் சென்றது அவனுடைய எண்ணம்.

'என்ன சார் சைலன்டாய்ட்டீங்க? நா செஞ்சது தப்புன்னு நினைக்கிறீங்களா சார்?'

மணியின் குரலில் இருந்த ஒருவித கலக்கம் அவனை உலுக்கியது. 'சேச்சே... இல்ல மணி.... நா ஏற்கனவே சொன்னா மாதிரி நீங்க சொன்னது என்கிட்டருந்து யாருக்கும் போகாது.... வேற ஏதாச்சும் சொல்லணுமா?'

'இல்ல சார்..'

'நா உங்கள ஒன்னு கேக்கலாமா?'

'கேளுங்க சார்..'

'இப்பல்லாம் நீங்களும் ஒங்க ஃப்ரென்ட்சும் அந்த ஆட்டோ ஸ்டான்டுலயே இல்லையாமே ஏன்?'

'எல்லாம் போலீசுக்கு பயந்துதான் சார்.... கோபால் சாரோட ஆஃபீஸ் வாசல்லயே போலீஸ் நிக்கிறாங்களாமே?'

'அதனால உங்களுக்கு என்ன? உங்கள யாரும் போலீஸ் விசாரிச்சாங்களா என்ன?'

'இதுவரைக்கும் இல்ல சார்....நல்லவேளையா அடுத்த நாள்லருந்தே அந்த ஸ்டான்டுக்கு போவல சார்.... கால்ல அடி இன்னும் ஒரு மாசத்துக்கு வண்டி ஓட்ட முடியாதுன்னு எங்க ஆளுங்கக்கிட்ட சொல்லிட்டேன்....'

'ஆனா உங்களுக்கு கால் நல்லாத்தான் இருக்கு....' என்றான் ராஜசேகர் புன்னகையுடன்.

'ஆமா சார்.... ஆனா எதுக்கும் இருக்கட்டும்னு நமக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட சொல்லி ஒரு மாவுகட்டு போட்டுக்கிட்டு இருக்கேன்... நம்ம ஆளுங்களே நம்மள போட்டு குடுத்துறக் கூடாதில்ல, அதுக்காக....'

ராஜசேகர் தன்னையுமறியாமல் வாய்விட்டு சிரித்தான். 'பயங்கரமாத்தான் யோசிக்கிறீங்க. ஆனா அந்த டாக்டர் யார்கிட்டயும் சொல்லிற மாட்டாரா?'

'அதுக்கும் ஒரு பொய் சொல்லியிருக்கேன் சார்.. வண்டி ஆக்சிடென்ட் ஆயிருச்சி.... எனக்கும் காயம்னு சொன்னாதான் என் வண்டியில அடிபட்ட ஆள் போலீஸ் கேஸ்னு போமாட்டான்னு சொல்லி வச்சிருக்கேன்...'

'ஆனா ஒங்க வண்டிக்கு ஆக்சிடென்ட் ஒன்னும் ஆகலை... அப்படித்தானே?'

'ஆமா சார்... எல்லாம் ஒரு செட்டப்தான்.... யாருக்கும் தெரியாது... என்னையும் உங்களையும் தவிர....'

ராஜசேகர் மீண்டும் சிரித்தான். 'கவலைப்படாதீங்க... எனக்கும் அது தெரியாது... போதுமா?'

'தாங்ஸ் சார்...'

'சரி மணி.... எம் மேல வச்சிருக்கற கான்ஃபிடன்சுக்கு ரொம்ப தாங்ஸ்ங்க... இன்னும் எத்தனை நாளைக்கி வீட்ல இருக்கறதா உத்தேசம்?'

'ரெண்டு வாரத்துக்கும் இத கன்டினியூ பண்றதா ஐடியா சார்.'

'அதுவரைக்கும் வருமானத்துக்கு என்ன பண்ணுவீங்க?'

'எப்படியோ மேனேஜ் பண்றேன் சார்...'

'சரிங்க.... வேற ஏதாச்சும் வேணும்னா கூப்டறேன்.'

'சரிங்க சார்...' என்று பதிலளித்த மணி 'இன்னொரு விஷயம் சார்....' என்றும் மீண்டும் இழுக்க.... 'இன்னும் ஏதாச்சும் இருக்கா?' என்றான் ராஜசேகர்.

'இந்த கால நீங்க உங்க ஃபோன்லருந்து டெலீட் பண்ணிட்டீங்கன்னா நல்லதுன்னு சொல்ல வந்தேன் சார்....'

ராஜசேகருக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. 'அட! பரவால்லையே.... நிறைய மர்ம கதை படிப்பீங்களோ?'

'எதுக்கு சார் அதெல்லாம்? இப்பத்தான் டெய்லி பேப்பர்ல வருதே... ஏறக்குறைய எல்லா ரவுடிங்களுமே இந்த செல்ஃபோனாலத்தான மாட்டிக்கிறாங்க?'

'அதுவும் சரிதான்...நீங்க வச்சதுமே முதல் வேலையா டெலீட் பண்ணிடறேன்... அதோட ஒங்க ஃபோன் நம்பரையும் சேவ் பண்ணிக்கலை... போறுங்களா?'

'தாங்ஸ் சார்.... மறுபடியும் கூப்டணும்னா ராமராஜன் சார் கிட்ட சொல்லிட்டீங்கன்னா போறும்... நானே கூப்டறேன்..'
என்றவாறு மணி இணைப்பை துண்டிக்க அமைதியாகிப்போன செல்ஃபோனையே பார்த்தவாறு ஒரு சில நிமிடங்கள் அமர்ந்திருந்த ராஜசேகர் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

தொடரும்...

24 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 27

முன்கதை 

'ஒரு நாளப்போல நடுராத்திரியிலதான் வருவார்.' என்று பதிலளித்தார் நளினி. ' வீட்ல சமைச்சி வச்சத சாப்ட மாட்டார். வெளியிலதான் எல்லாமே.... சனி, ஞாயிறுன்னா கூட வீட்ல தங்க மாட்டார்...... அவர் செல்ஃபோன அவருக்கு தெரியாம எடுத்து பார்த்தப்போ அதுல நிறைய பொண்ணுங்களோட நம்பர் இருந்தத பார்த்திருக்கேன்.....'

அவ ஒரு சரியாத சந்தேகப்பிராணி சார் என்று கோபால் கூறியது ராஜசேகருக்கு நினைவுக்கு வந்தது. பசு மாதிரி அமைதியா இருந்துக்கிட்டு ஹஸ்பென்டோட செல்ஃபோன அவருக்கு தெரியாம எடுத்து இன்வெஸ்ட்டிகேட் பண்ற அளவுக்கு தைரியம் இருக்கா? 

'அதப்பத்தி அவர்கிட்ட எப்பயாச்சும் கேட்டுருக்கீங்களா?'

'இல்ல சார்... கேட்டா கோவப்படுவார்னு தெரியும்..... கோவம் வந்தா மனுசனாவே இருக்க மாட்டார் சார்....'

'என்ன பண்ணுவார்?'

நளினி உடனே சட்டென்று தன் சேலையை முழங்கால் வரை உயர்த்த அதை எதிர்பாராத ராஜசேகர் அதிர்ந்துபோனான். 

'இங்க பாருங்க சார்... எப்படி அடிச்சிருக்கார்னு!'

வேறு வழியில்லாமல் ராஜசேகர் நளினியின் கால்களைப் பார்த்தான். ஒரு அங்குல அகலத்தில் பட்டை, பட்டையாக கருப்பு நிறத்தில் தழும்புகள்... 'இது எப்படிம்மா?' என்றான் தயக்கத்துடன்.

'பெல்ட் சார்.... உடம்பு முழுசும் இருக்கு....' கண்களில் நிறைந்த கண்ணீருடன் தன்னை ஏறிட்டுப் பார்த்த நளினியின் முகத்தை காணச் சகியாமல் குணிந்து தன் குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்த கேள்விகளைப் பார்த்தான்.... ஆனால் கேட்க தோன்றவில்லை. எழுந்து நின்றான். 

நளினி இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவளுடைய கண்களிலிருந்தே தெரிந்தது. 'ஏதோ கேஸ் விஷயமா கேக்கணும்னு சொன்னீங்களே? அவ்வளவுதானா?'

ராஜசேகர் தயக்கத்துடன் அவளைப் பார்த்தான். 'இல்லம்மா நீங்க இப்ப இருக்கற மூட்ல..... இன்னொரு நாளைக்கி வரேன்.'

நளினியின் சிரிப்பிலும் சோகம் தெரிந்தது. 'பரவால்லை சார்.... இது வெறும் வடுதான் சார்..... ஆனா மனசு மரத்துப்போச்சி.... நீங்க கேக்க வந்தத கேட்ருங்க....'

வேறு வழியின்றி ராஜசேகர் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து தொடர்ந்தான். 'மாதவிங்கற பொண்ணோட பழக்கம் வச்சிருந்தது உங்களுக்கு தெரியுமாங்க?'

'மூனு மாசத்துக்கு முன்னாலதான் சார் தெரியும்...அவரோட செல்ஃபோன்ல அந்த பேர பாத்துருக்கேன்... ஆனா எத்தனையோ பொண்ணுங்களோட பேர்ல இதுவும் ஒன்னுன்னுதான் நினைச்சேன்... ஆனா மூனு மாசத்துக்கு முன்னால  என்னெ டைவர்ஸ் பண்ணிட்டு அந்த பொண்ண மேரேஜ் பண்றதா இருக்காரும்மான்னு அவரோட பி.ஏ. ராமராஜன் சொன்னப்பத்தான் அவங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த ரிலேசன்ஷிப்போட சீரியஸ்னஸ் தெரிஞ்சிது...'

'அவர்கிட்ட கேட்டீங்களா?'

'அதுதான் நா செஞ்ச பெரிய தப்புன்னு நினைக்கேன்...'

ராஜசேகர் வியப்புடன் நளினியைப் பார்த்தான். 'எதுக்கு அப்படி சொல்றீங்க?'

'எனக்கு தெரியாம இருக்கறவரைக்கும்தான அது ரகசியம்? எனக்கு தெரிஞ்சிப் போனதுக்கப்புறம் எதுக்கு பயப்படணுங்கறா மாதிரி அவர் நினைச்சார்..... ஆமா அதுக்கென்ன அப்படீன்னார்'

'நீங்க என்ன சொன்னீங்க?'

'நா டைவர்ஸ் குடுக்கறதா இல்லன்னு சொன்னேன்...'

ஓ! அந்த அளவுக்கு தைரியம் இருக்கா என்பதுபோல் ராஜசேகர் அவளைப் பார்த்தான். 

'ஆமா சார்.... தலைக்கு மேல போனது ஜான் போனா என்ன முழம் போனா என்னங்கறா மாதிரி எனக்கு தோனிச்சி.... எங்கருந்தோ வந்த தைரியம்... அது அசட்டு தைரியமான்னு தெரியல.... ஆனா அவர் இந்த பதில எங்கிட்டருந்து எதிர்பார்க்கல போலருக்கு..... வந்த கோபத்துக்க்கு இடுப்புலருக்கற பெல்ட்ட கழட்டி கண்ணு மன்னு தெரியாம அடிச்சி போட்டுட்டு போய்ட்டார்.... ஒரு வாரம் கழிச்சித்தான் வந்தார்.... அன்னைக்கி சாயந்தரம் பாத்திரம் கழுவ வந்த செர்வன்ட்தான் கம்பெல் பண்ணி பக்கத்துலருக்கற க்ளினிக்குக்கு கூட்டிக்கிட்டு போயி ட்ரீட்மென்ட் பார்த்து.... காயம் முழுசா ஆறுறதுக்கு பத்து பதினைஞ்சி நாள் ஆச்சி... ஒரு வாரம் கழிச்சி வீட்டுக்கு திரும்பி வந்த மனுஷன் ஏன்னு ஒரு வார்த்தை கேக்கல சார்.... கையோட கொண்டு வந்த டைவர்ஸ் பேப்பர என் மூஞ்சில தூக்கிப் போட்டு மரியாதையா கையெழுத்து போட்டு குடுத்துரு இல்லன்னா ஒன்னெ கொல்லவும் தயங்கமாட்டேன்னு கத்தினார்....'

துவக்கத்தில் வாய் திறப்பதற்கே தயங்கியவரா இவர் என்று அவளை வியப்புடன் ராஜசேகர் பார்த்தான். கழுத்துக்கு மேல போனதுக்கப்புறம் என்று அவள் குறிப்பிட்டது சரிதான் போலிருக்கிறது என்று தோன்றியது. முழுவதுமாக மூழ்கப் போகிறோம் என்று தெரிந்தபிறகு வரும் அசாத்திய துணிச்சல் இது என்று நினைத்தான். 

'நீங்க உங்க மாமனார் கிட்ட இதப்பத்தி பேசலையா?'

'இல்ல சார்.... அவர் ஏற்கனவே ஹார்ட்பேஷன்ட்... இத வேற சொல்லி ஏதாச்சும் ஆயிருமோன்னு பயந்தேன்.... இன்னைக்கி இருக்கற நிலையில எனக்கு அவர விட்டா சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்ல சார்....' மேலே தொடர்ந்து பேசமுடியாமல் பொங்கிவந்த அழுகையையும் கட்டுப்படுத்த முடியாமல் நளினி அழுவதைப் பார்த்த ராஜசேகர் அவள் அழுது ஓயும்வரை அமைதியாக அமர்ந்திருந்தான். 

பார்வையாளர் நேரம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்களே இருப்பதாக வராந்தாவில் இருந்த ஒலிப்பெருக்கி அறிவித்ததை இருவருமே கேட்டனர். 

நளினி முகத்தை துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். 'சாரி சார்....I just could not....'

'பரவால்லைங்க... கொஞ்ச நேரம் அழுதாலும் துக்கம் தீந்துரும்பாங்க.... You should now feel relieved.....அப்படித்தானே?'

'ஒருவகையில நீங்க சொல்றது சரிதான் சார்..... இத யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்க முடியாம நா பட்ட கஷ்டம் இருக்கே.... உங்க அசிஸ்டென்ட் வந்தப்போ என்னால இந்த அளவுக்கு பேச முடியல சார்..... அப்பத்தான் அட்மிட் ஆயிருந்தேன்.... ப்ரஷர் ஜாஸ்தியாருந்துதுன்னு டாக்டர் அஞ்சே நிமிஷத்துல அவர கெளப்பி விட்டுட்டார்....'

ராஜசேகர் தன் மடியிலிருந்த குறிப்பேட்டை கைப்பெட்டிக்குள் வைத்துவிட்டு எழுந்து நின்றான். 'கவலைப்படாதீங்க நளினி...Everything has a solution.....தைரியமா இருங்க.... முடிஞ்சா இன்னொரு நாள் வரேன்... '

அவன் எழுந்து வாசலை நோக்கி நகர நளினியின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது. 

'தயவு செஞ்சி என்னெ விட்னசா கூப்ட்டுராதீங்க சார்...'

ராஜசேகர் நின்று திரும்பி பார்த்தான். 'நிச்சயமா கூப்ட மாட்டேம்மா.... ஆனா அதே மாதிரி போலீஸ் வந்து கேட்டாலும் நீங்க முடியாதுன்னு சொல்லிறணும்.... சரிங்களா?'

'அத ஏற்கனவே எஸ்.ஐ. தன்ராஜ் இங்க வந்திருந்தப்போ சொல்லிட்டேன் சார்.... எங்க டாக்டரும் நா அவருக்கு எதிரா சாட்சி சொல்ல வரமுடியாதுன்னு சொல்லிட்டார்...'

'அது போறுங்க...' என்ற ராஜசேகர், 'கடைசியா ஒன்னு கேக்கட்டுங்களா?' என்றான் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு. இன்னும் ஒரு சில நிமிடங்கள் இருந்தன.

'என்ன சார்?'

'கோபால் கேட்ட டைவர்ஸ் பத்தி நீங்க என்ன டிசைட் பண்ணிருக்கீங்கன்னு நா தெரிஞ்சிக்கலாமா?'

'இதுக்கப்புறமும் அவரோட வாழ முடியும்னு நா நினைக்கல சார்.... இந்த கேஸ் முடியறதுக்குள்ளவே டைவர்ஸ் வாங்கிறணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்..... என் அண்ணாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னுதான் காத்துக்கிட்டிருக்கேன்.....'

ராஜசேகர் பதிலளிக்காமல் ஒருநிமிடம் அவளையே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியும் தன்னை வந்து பார்க்காத அண்ணனின் சம்மதத்திற்காக காத்திருக்கும் நளினியின் அவல நிலமையை நினைத்தவாறே தன் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவனையுமறியாமல் அவளுக்காக வருத்தப்பட்டான். என்ன மனுஷன் கோபால்.. இத்தகையவரை எதற்காக காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்....

*********

E1 காவல்நிலைய அதிகாரியும் ஆய்வாளருமான பெருமாள் தன்னுடைய அறைக்குள் நுழைந்ததுமே மேசை மீது வைக்கப்பட்டிருந்த உறையைப் பார்த்தார்.

அதன் மீது குற்றப்பத்திரிக்கை - மாதவி கொலை - முதல் தகவல் அறிக்கை எண் 984/13-14 என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்ததும் தொப்பியை கழற்றிவிட்டு அமர்ந்து முதல் வேலையாக அழைப்பு மணியை ஓங்கி அடித்தார். அவர் அதை அடித்த விதமே வெளியில் அமர்ந்திருந்த ரைட்டரையும் தலைமை காவலரையும் பதற வைத்தது. இருவரில் யார் அறைக்குள் நுழைவது என போட்டி போட்டவாறு அமர்ந்திருக்க அழைப்பு மணி மீண்டும் கிர்ர்ர்ர்ர்ர்ர் என்று தொடர்ந்து ஒலித்தது.

ரைட்டர் இருந்த இடத்திலிருந்து அசைவதாக இல்லை. எதையோ மும்முரமாக எழுதுவதுபோல் பாசாங்கு செய்தவாறு ஓரக்கண்ணால் ஏட்டையாவை பார்த்தார் நீங்கதான் போயாவணும் என்பதுபோல்.

வேறு வழியின்றி தலைமைக் காவலர் எழுந்து 'இரு உன்னெ வந்து கவனிச்சிக்கிறேன்.' என்று ரைட்டரைப் பார்த்து பல்லைக் கடித்துவிட்டு ஆய்வாளர் அறைக்குள் நுழைந்தார்.

'எங்கய்யா போயி தொலைஞ்சீங்க? எவ்வளவு நேரம் கூப்டறது?'

'மன்னிச்சிருங்கய்யா' என்றார் ஏட்டு பவ்யமாக.

'இந்த கவர் இங்க எப்படி வந்துது?' என்றார் ஆய்வாளர் தன் மேசை மீது உரையைக் காட்டியவாறு.

'ரைட்டர்தான்...'

'கூப்டுய்யா அந்த ஆள?'

தலைமைக் காவலர் விட்டால் போதும் என்று வெளியில் வந்து, 'யோவ் ஒன்னெத்தான் கூப்டறார்?' என்றார் ஒரு கேலி புன்னகையுடன். ரைட்டர் எழுந்து அறைக்கும் போகும் வழியில் அவரை கடந்து செல்ல, 'என்னைய மாட்டிவிடலாம்னு நினைச்சேல்ல? உள்ளாற போ... இருக்கு ஒனக்கு' என்றார் அடிக்குரலில்..

அதைக் கண்டுக்கொள்ளாத ரைட்டர் ஆய்வாளர் அறைக்குள் நுழைந்து விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து நின்றார். 

'இந்த கவர நீதான் இங்க கொண்டு வந்து வச்சியா?' 

'ஆமாங்கய்யா.... எஸ்.ஐ. ஐயாதான் குடுத்து வைக்க சொன்னாங்கய்யா.'

ஆய்வாளர் பெருமாளுக்கு கோபம் தலைக்கேறியது. என்னாச்சி இந்தாளுக்கு? போற போக்கே சரியில்லையே? இருப்பினும் அவரைப் பற்றி ரைட்டரிடம் குறைபட்டுக்கொள்வதில் அர்த்தமில்லை என்று அவர் உணர்ந்தார். 'சரி.... அவர் குடுத்த டைம டயரியில நோட் பண்ணியாச்சா?'

'ஆச்சி சார்.'

'சரி நீ போ.... அவர் ஸ்டேஷனுக்கு வந்தா ஒடனே வரச் சொல்லு.'

'யெஸ் சார்.' என்று மீண்டும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு ரைட்டர் வெளியேற பெருமாளர் உறையை திறந்து அதில் இருந்த ஆவணங்களில் முக்கியமென கருதப்பட்ட குற்றப்பத்திரிக்கையை எடுத்து வாசிக்கலானார்.


****** 

ராஜசேகர் அன்று இரவு சுமார் பத்து மணிக்கு ராமராஜன் கொடுத்திருந்த செல் நம்பரை அழைத்தான்.

ஒருசில நொடிகளிலேயே எடுக்கப்பட 'நீங்க மணி தான?' என்றான்.

'ஆமா சார்.. மணிதான் பேசறேன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ராமராஜன் சார் கூப்ட்டு சொன்னார். என்ன சார் தெரியணும்?'

ராஜசேகர் மூடியிருந்த தன் படுக்கையறையைப் பார்த்தான். அன்றும் கோகிலா மகளுடன் கீழ்தளத்திலிருந்து அறையிலேயே படுத்துவிட்டிருந்தாள். எனினும் எழுந்து சென்று உள்தாப்பாள் போடப்பட்டுள்ளதா என்று பரிசோதித்துவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்தான்.

'பெருசா ஒன்னும் இல்ல மணி... அன்னைக்கி மிஸ்டர் கோபால் உங்க ஆட்டோவுலதான வந்தார்? அது விஷயமாத்தான்....'

'கேளுங்க சார்...'

'அன்னைக்கி சாயந்தரம் கோபால் ஆட்டோவுல வர்றப்போ எப்படி இருந்தார்? அதாவது ஏதாவது டென்ஷன்ல இருக்கா மாதிரி தெரிஞ்சிதா?'

'இல்லையே சார்... எப்பவும் போல நார்மலாத்தான் இருந்தார்னு நினைக்கறேன்...'

'போற  வழியில யாருக்காச்சும் ஃபோன் பண்ணாரா?'

எதிர்முனையில் மணி லேசாக சிரிப்பதை உணர்ந்தான். 

'எதுக்கு சிரிக்கிறீங்க?'

'பின்னே என்ன சார்? அவர் என்னைக்கி செல்ஃபோன்ல பேசாம இருந்துருக்கார்? ஆட்டோவுல ஏறினா செல்ஃபோன்தான்... இறங்கறவரைக்கும் யார் கூடவாவது பேசிக்கிட்டேதான் இருப்பார்.... அன்னைக்கிம் அப்படித்தான் பேசிக்கிட்டே இருந்தார்...'

'அவர் யார் கிட்ட பேசினார்னு உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சிதா?'

'இப்பல்லாம் ஆட்டோவுல ஏறுர கஸ்டமர்ங்க எல்லாருமே ஃபோன்ல பேசிக்கிட்டுத்தான் டிராவல் பண்ணுங்க... அதெல்லாம் நாங்க எப்படி சார்  நோட் பண்றது? அதுவுமில்லாம அன்னைக்கி செம டிராஃபிக்... சார் வேற சீக்கிரம், சீக்கிரம்னு சொல்லிக்கிட்டே இருந்தார். என்ன அவசரமோன்னு நினைச்சிக்கிட்டு உயிர கையில புடிச்சிக்கிட்டு ஓட்டுனேன் சார்... இடையில ரெண்டு சிக்னல்ல கூட நிக்காம... போலீஸ் கிட்ட மாட்டாம இருந்தது ஆச்சர்யம்தான்...'

'சரி... மாதவி வீட்டுக்கு எத்தன மணிக்கி போய் சேர்ந்தீங்க.... ஞாபகம் இருக்கா? தோராயமா சொன்னா போறும்.'

'ஆறே முக்கால் இருக்கும் சார்...'

'அப்படியா? ஆனா அவர அந்த வீட்டு முன்னால ஏழு மணிக்கி பாத்ததா பக்கத்து வீட்டு லேடி போலீஸ்ல சொல்லியிருக்காங்களே?'

'இருக்கும் சார்... அவர் போயி கால் மணி நேரம் கழிச்சித்தான் வெளியில வந்தார்னு நினைக்கறேன்..'

'வெளியில வந்தாரா? அப்படீன்னா அவர் அந்த வீட்டுக்குள்ள போனாரா?'

தொடரும்..