22 பிப்ரவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 85

தஞ்சைக்கு சென்ற புதிதில் நான் நடத்திய வாடகை வீடு வேட்டையைப் பற்றி எழுதியிருந்தேன்.

என் மகள் உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்தே என் மனைவி வீட்டை மாற்ற வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்.

‘டவுண்லருந்து நாம இனியும் இவ்வளவு தூரத்துல இருக்க வேணாங்க. ஊருக்கு வந்த புதுசுலத்தான் உங்களுக்கு யாரையும் தெரியலங்கறதுனால இவ்வளவு தூரத்துல வந்து இருக்க வேண்டியதா போச்சி.. இப்ப என்ன? உங்க கஸ்டமர்ங்கள்ல யார்கிட்டயாவது சொன்னா போறுமே.. அன்னைக்கி மாதிரி பாப்பாவுக்கு மறுபடியும் ஏதாச்சும் உடம்புக்கு வர்றதுக்குள்ள டவுணுக்குள்ளயே வேற வீட்ட பார்த்துக்கிட்டு போயிரலாங்க.’ என்றார்.

எனக்கும் அவர் கூறியது சரியென்றே தோன்றியது. இருந்தாலும் இத்தனை நல்ல வீட்டுக்காரரை விட்டு விட்டு போக வேண்டுமா என்று நினைத்து தயங்கினேன். அதுவுமல்லாமல் நான் கேட்ட உடனே வீட்டைக் கொடுத்தவரிடம் எப்படிப் போய் நான் காலி செய்கிறேன் என்று கூறுவதென்ற எண்ணமும் தோன்றியது.

இருப்பினும் என்னுடைய மனைவியின் நச்சரிப்பை பொறுக்கமுடியாமல் என்னுடைய வாடிக்கையாளர்கள் சிலரிடம் டவுணுக்குள் நல்ல வீடு ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன்.

அத்துடன் நில்லாமல் தஞ்சை ஆயரின் இல்லத்தில் எனக்கு அறிமுகமாயிருந்த பாதிரியாரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது அவரிடமும் இதைப் பற்றி பேச அவர் அடுத்த இரண்டு நாட்களிலேயே அருளாநந்தர் நகரில் வசித்து வந்த ஒரு நண்பரின் வீட்டு விலாசத்தைக் கொடுத்து, ‘போய் பார்த்துட்டு வந்துருங்க. மத்ததையெல்லாம் நான் பேசி முடிச்சித் தரேன்.’ என்றார்.

அவர் கூறிய அருளாநந்தர் நகர் என்னுடைய அலுவலகம் இருந்த பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அப்பகுதியில் பல வசதியான தனி வீடுகள் இருந்ததுடன் பாதிரியார் குறிப்பிட்டிருந்த வீட்டுக்கு மிக அருகிலேயே கத்தோலிக்க கன்னியர்கள் நடத்தி வந்த மகப்பேர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையும் இருக்கவே வீடு மிகச் சுமார் ரகத்தைச் சார்ந்தது என்றாலும் என் மனைவிக்கு அந்த வீடு பிடித்துப் போனது.

வீட்டு உரிமையாளர் தமிழக மின்சார இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெற்ற அந்த காலத்து பொறியாளர். உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றவர். அத்துடன் பரம்பரை பரம்பரையாகவே திரண்ட விவசாய நிலபுலன்களுடன் வாழ்ந்த மிராசுதார் வம்சத்தைச் சார்ந்தவர். அவர் அருளானந்தர் நகரிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பில் - எனக்கு தெரிந்த வரை முக்கனி எனப்படும் மா, பலா, வாழை என எல்லா மரங்களையும் ஒரே தோட்டத்தில் வளர்க்கும் அளவுக்கு விசாலமான தோட்டத்தைப் பார்த்ததே இல்லை அதுவும் டவுணுக்குள்ளேயே - அமைந்திருந்த பழைய காலத்து வீட்டில் வசித்து வந்தவர். வீட்டுக்கு முன்னாலிருந்த சுமார் முப்பதுக்கு அறுபது என்ற முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்காரமான காளை மாட்டு வண்டியைப் பார்த்ததும் அட! என்ற ஆச்சரியத்தில் ஒரு நொடி நின்று பார்த்தோம் நானும் என் மனைவியும்.

வீட்டு வளாகத்தின் முன்னாலிருந்த இரும்பு கேட்டைத் திறந்துக்கொண்டு முற்றத்தைக் கடந்து அவருடைய வீட்டு முகப்புக் கதவை யாரும் அவ்வளவு எளிதாக நெருங்கி விட முடியாது. வீட்டின் முகப்பு வாசலில் இருந்து பார்த்தால் நேராக வீட்டிற்கு பின்புற முற்றத்தில் (அதுவும் முகப்பு முற்றத்தைப் போலவே மிகவும் பெரியது.. கடப்பா கற்களால் ன அம்முற்றத்தில்தான் நெல்லைக் பரப்பி வைத்து காய வைப்பார்கள்) ஒரு இரும்புத் தூணில் கட்டி வைத்திருந்த அல்சேஷன் நாய் குரைக்கும் தோற்றத்தைப் பார்த்தாலே வீட்டிற்குள் அத்துமீறி நுழைய நினைப்பவர்கள் கதிகலங்கிப் போவார்கள் என்பது நிச்சயம்.

தினமும் காலை எட்டு மணியிலிருந்து மாலை விளக்கு வைக்கும் நேரம் வரை முகப்பு வாசலையடுத்த நீள வராந்தாவில் இருந்த சாய்வு நாற்காலியில் (இந்தியன் தாத்தா நாற்காலி நினைவிருக்கிறதா.. நாற்காலியின் நீண்ட கைகளை வைத்தே நெடுமுடி வேணுவைத் தாக்குவாரே.. அதே தான்!) அதன் நீண்ட மரக் கைகளின் மேல் இரண்டு கால்களையும் விரித்து நீட்டி வைத்துக்கொண்டு... ஒரு (.)சிங்கமான கோலத்தில் (ச்சே! விவஸ்தைக் கெட்ட மனுஷன் என்பார் என் மனைவி..) அமர்ந்துக்கொண்டு அரைக்கண் தூக்கத்தில் அமர்ந்திருப்பார் வீட்டு உரிமையாளர்.

ஆறடிக்கும் கூடுதலான ஆஜானுபாகுவான உயரம்.. மைனர் ஸ்டைலில் ஓட்டைகளுடன் பின்னப்பட்ட கையில்லாத பனியன், உயர் ரக மல் வேட்டி.. கண்களை பூதாகாரமாக காட்டி மிரட்டும் பூதக்கண்ணாடி.. வெள்ளை நிறத்தில் அடர்ந்த புருவங்கள், கோடாலி மீசை, எதிராளியைப் பார்வையாலேயே துளைத்தெடுக்கும் கூரிய, பெரிய கண்கள்.. அவருக்குக் கொஞ்சமும் பொறுத்தமில்லாத குட்டையான, குண்டான மனைவி..

இவர்கள் இருவர் மட்டுமே அந்த பெரிய திகில் பங்களாவாசிகள். அவருக்கிருந்த ஒரே மகள் திருமணமாகி அந்த காலத்திலேயே அமெரிக்காவில் குடியேறியிருந்தார்.

அவருடைய வீட்டு மாடியிலிருந்த மெட்றாஸ் டெரஸ் என்ற வகை மரச்சட்டங்கள் தாங்கிய தளத்தைக் கொண்ட இரண்டு படுக்கையறை, ஒரு ஹால்.. பின்னால் பழைய காலத்து பாணியில் மங்களூர் ஓடு வேய்ந்த பெரிய சமையலறை, உணவறை.. அதற்கும் பின்னால் வானம் பார்த்த பெரிய முற்றம்.. முற்றத்திற்கு வலது புறத்தில் தாழ்ந்த ஓட்டு கூரையுடன் டாய்லெட், குளியலறை.. இடது புறத்தில் துணி துவைக்க ஒரு பெரிய கருங்கல்.. அதற்கருகிலேயே சிமெண்டாலான தண்ணீர் தொட்டி..

நான் முன்பிருந்த புது ரக வீட்டை ஒப்பிடும்போது சுமார் பதினைந்து வருடத்திற்கு முன்னால் சென்றதுபோன்ற ஒரு உணர்வையூட்டிய அந்த வீட்டைப் பார்த்ததும் என்னையுமறியாமல் என் மனைவியை ‘இது தேவையா?’ என்பதுபோல் பார்த்தேன்.

என் பார்வையின் அர்த்தம் என் மனைவிக்கு புரிந்ததோ இல்லையோ என்னுடன் மேல் மாடிக்கு வந்த அவ்வீட்டின் வேலையாளுக்குப் புரிந்துவிட்டது.

‘என்னய்யா.. வீடு புடிக்கலையா?’ என்றான் பளிச்சென்று..

என் மனைவி பதில் ஏதும் கூறாமல் வீட்டை சுற்றி பார்ப்பதிலேயே குறியாயிருந்தார். என்னையும் என் மனைவியையும் மாறி, மாறி பார்த்த வேலையாள் புரிந்ததுபோல் தலையை அசைத்துவிட்டு.. ‘அம்மாவுக்கு புடிச்சிருச்சின்னா ஒங்களுக்கும் புடிச்சா மாதிரிதானய்யா..’ என்றான் கேலியுடன்.

பார்றா.. தஞ்சாவூர்ல கூட நக்கல் பண்றதுக்கு ஆள் இருக்கு.. என்று நினைத்தவாறு என் மனைவியைப் பார்த்தேன்.. வேணாம்னு சொல்லிறேன் என்பதுபோல ‘சேச்சே.. அப்படியெல்லாம் இல்லை. எனக்கும் புடிச்சிருக்கு அவங்களுக்கும் புடிச்சிருக்கும். ஏங்க?.’ என்றார் என் மனைவி நேர் மாறாக..

வேறென்ன சொல்ல? வேலையாள் சொன்னது ஒரு வகையில் சரிதான்.. வீட்டம்மாவுக்கு புடிச்சா போறாதா? அவுகதான வீட்ல பொழுதன்னைக்கும் இருக்கப் போறவுக.. நாம காலைல போனா ராத்திரிக்கி வந்து தூங்கறதோட சரி.. என்ன சொல்றீங்க?

‘சரி.. உனக்கு புடிச்சிருந்தா சரி..’ என்றேன் அரை மனதுடன்.

‘என்னங்க சுரத்தே இல்லாம சொல்றீங்க? பக்கத்துலயே ஸ்பத்திரி இருக்கு.. வீட்டுக்கு பின்னால எத்தன மரங்கள் இருக்கு பாருங்க.. ஃபேனே போட வேணாம்.. ஜன்னல திறந்து வச்சா காத்து பிச்சிக்கிட்டு வரும்போலருக்கு..’ என்ற மனைவியைப் பார்த்தேன்..

காத்தென்ன.. அதோட சேர்ந்த மாட்டுச் சாணத்தின் துர்நாற்றமும் வருமே.. துணைக்கு கொசுவும் வரும் என்று நினைத்துக்கொண்டேன்.. வீட்டு வேலையாள் முன்னால் எதற்கு என்று வாயை மூடிக்கொண்டு தலையாட்டினேன்..

‘சரிங்க.. வாங்க, ஓனர்கிட்ட எவ்வளவு வாடகை.. அட்வான்சுன்னு கேளுங்க.. மாசக்கடைசியிலயே இங்க வந்துரலாம்..’

‘அதெல்லாம் நம்ம ஃபாதர் பேசி முடிச்சித் தரேன்னு சொல்லியிருக்கார்.. நாம அவசரப்பட்டு எதையாவது சொல்லி வைக்க வேணாம்..’

‘சரி.. அதுவும் சரிதான்.’

அத்துடன் நானும் என் மனைவியும் வீட்டுக்காரரிடமும் அவருடைய மனைவியிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு வெளியே வந்தோம்.

என் இரு சக்கர வாகனத்தை முடுக்கி அவருடைய வீட்டைக் கடந்ததுமே, ‘இங்க பார், அந்தாளு ஈய பேனாக்கி பேன பெருமாளாக்குற ஆளு மாதிரி தெரியுது. வீட்டுக்கு பின் பக்கம் பார்த்தியா? ஒரு இன்ச் விடாம மரத்த வச்சி, ஒவ்வொரு மரத்த சுத்தியும் பெரிசா குழிய தோண்டி சாணத்த நிரப்பி.. தண்ணிய விட்டு வச்சிருக்கார்.. ராத்திரியான கொசு பிச்சிப் பிடுங்கிரும். சொல்லிட்டேன்.. இப்ப இருக்கற வீடு கொஞ்சம் தூரம்னாலும்.. நாம மெட்றாஸ்லருந்தா மாதிரி வசதியா இருக்கு.. இங்க ஓவர் ஹெட் டாங்க் கூட இல்ல போலருக்கு.. அவசரப்பட்டு வரவேணாம். யோசிச்சி செய்யலாம்.’ என்றேன்.

என் மனைவிக்கு நான் கூறியது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது அவருடைய மவுனத்திலிருந்தே எனக்குப் புரிந்தது. எனக்கு முன்னால் என் கால்களுக்கிடையில் நின்றுக்கொண்டிருந்த என் இரண்டரை வயது மகள்.. ‘அப்பா இந்த வீட்ல நெறயா அணில், குருவி எல்லாம் இருக்குப்பா.. இங்கயே வந்துரலாம்பா..’ என.. அதான் சமயம் என்று.. ‘என்ன இருந்து என்னடி பிரயோசனம்? உங்கப்பாவுக்கு மொசைக் தரையும், தலைக்கு மேல ஷவரும் இல்லே வேணும்.. நாம ரெண்டு பேரும் அந்த காட்டுல தனியா ஒத்தையா கெடந்து படற அவஸ்தை அவருக்கெங்க தெரிய போவுது..’ என்றார்..

ஆக, மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் மெஜாரிட்டிதான் ஜெயித்தது.. கிடந்து ஒரு ரெண்டு மாசம் அவஸ்த்தைப் படட்டும். தன்னால தெரியும் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து நேரே யருடைய இல்லத்திற்குச் சென்று பாதிரியாரிடம் வீடு பிடித்திருக்கிறது என்றேன்.

அவர் பதிலுக்கு, ‘அப்படியா சரி.. வாடகையெல்லாம் பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்.’ என்றார்.

‘ஓக்கே ஃபாதர்’ என்று நான் புறப்பட ‘ஜோசப், அன்னைக்கி ண்டவர் ஒங்க பொண்ண பாக்கணும் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னாரே.. கொண்டு போனீங்களா?’ என்றார்.

அட, ஆமா! மறந்தே போய்ட்டேன் என்று நினைத்த நான். ‘சாரி ஃபாதர்.. நா மறந்தே போய்ட்டேன். இப்ப ஆண்டவர் ஃப்ரியா இருந்தா பார்த்துட்டு போட்டுமா?’ என்றேன்.

தொடரும்..


12 கருத்துகள்:

  1. வீடு மாத்துறதுன்னா சும்மா இல்லை. எங்கப்பா சர்வீஸ்ல இருந்தப்போ மோனு வருசத்துக்கு ஒரு வாட்டம் ஓரு மாத்துவாங்க. அப்பொ மொத்த வீட்டையும் பெட்டி கட்டி மாத்தனும். எங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நான் வீடு மாத்தும் போது புரிஞ்சது. ஆனா பெங்களூருல மூவாயிரம் ரூபா கொடுத்தா அவங்களே பெட்டி கட்டி...தூக்கி வெச்சி...வேடு மாத்தி அடுக்கி வெச்சிராங்க. அப்ப அப்போ சென்னைல இருந்தாங்க. நானும் அம்மாவும் தான். இப்படி செஞ்சுமே எனக்கு என்னவோ பெரிய வேலைய செஞ்ச மாதிரி இருந்தது. அம்மாவுக்கு தூசியத் தட்டி விடுற மாதிரி இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. திருத்திட்டேன் செந்தில்..

    இந்த கன்ஃப்யூஷன் எப்பவுமே வருது..

    வயசாயிருச்சி... முந்தைய இடுகை நம்பர பதிவுல போய் பாக்கறதுக்கு சோம்பேறித்தனம்.. இப்படி என்ன வேணும்னாலும் சாக்கு சொல்லலாம்..

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராகவன்,

    நீங்க சொல்றது ரொம்ப சரி..

    நா இது வரைக்கு 14 எடத்துல வேல செஞ்சிருக்கேன்..

    ஒவ்வொரு எடத்துலயும் போய் சேர்ந்தவுடனே கிடைக்கற வீட்ட புடிச்சி போயிருவோம். அப்புறம் வசதியா வேற வீடு பார்த்து போவோம்.. ஆக ஒவ்வொரு எடத்துலயும் சுருக்கம் ரெண்டு வீடு.. அந்த கணக்குல சுமார் 28 வீடுகள்..

    அப்பா இப்ப நினைச்சிப் பார்த்தாலும் மலைப்ப்பா இருக்கு.. ஒவ்வொரு தடவையும் வீடு மாத்தறப்போ ஏற்பட்ட செலவு கணக்கு பார்த்தாலே தலைய சுத்திக்கிட்டு வரும்..

    இப்ப இருக்கற வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆவுது.. வர்ற மார்ச்சுல டிரான்ஸ்ஃபர் ஆயிருச்சின்னா மூட்டைய கட்டிக்கிட்டு ஓட வேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
  4. Ana Ippadi adikkadi veedu mathravanga Kitta than upayokamatra porul kuraivai irrukukum ena ninakkiren. Only when I was forced to shift from one city in Japan to another city, I found so amny unwanted items were in my house. here in Japan, there are agencies which will shift the house compltely, meaning u have to give them the new house plan and what items u want in which room. They will do it neatly and u just have to move in. thats all. of course, the charge is defintely very high. But, if u shift from one company to another or within the company from one pace to another, all the expenses will be taken care by them. So no probs. Anyhow, shifting house is real headache, no doubt.

    பதிலளிநீக்கு
  5. வீடு மாத்துவதும் வீடு பார்ப்பதும் ஆயாசம் தரும் வேலைதான். அதுவும் பார்த்த வீட்டை தீர்மானிப்பதில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து.

    மெஜாரிடி முடிவென்றாலும் கன்செஸ்ஸஸ் போல இருக்க வேண்டும். இல்லையென்றால் பிடித்திருக்கிறது என்று சொல்லும்வரை விடமாடார்கள்.

    //அந்தாளு ஈய பேனாக்கி பேன பெருமாளாக்குற ஆளு // இந்த சொல்லாடலை நிறையமுறை கேட்டிருக்கிறேன். இதன் பின்னணி என்ன என்று தெரியுமா ? புஷ்பவனம் குப்புசாமியிடம் கேட்க வேண்டியதா :)

    பதிலளிநீக்கு
  6. வாங்க கிருஷ்ணா,

    Ana Ippadi adikkadi veedu mathravanga Kitta than upayokamatra porul kuraivai irrukukum ena ninakkiren.//

    ரொம்ப கரெக்ட்.. ஓட்ட ஒடைசலுனு ஒன்னும் இருக்காது..

    அப்புறம் நீங்க சொல்றா மாதிரி பேக்கர்ஸ் இங்கயும் இருக்காங்க.. ஆனா எப்பவாச்சும் வீடு மாறுனா பரவாயில்லை.. என்னை மாதிரி எப்ப வேணும்னாலும் மார்றவங்க பேக்கர்ஸ் கிட்ட போனா அதுக்கே சொத்து முழுசும் போயிரும்..

    பதிலளிநீக்கு
  7. வாங்க செந்தில்..

    அதாங்க இந்த மனுஷ மூளையோட ஸ்பெஷாலிட்டி..

    எனக்கு நான் வேலைக்கு சேர்ந்த தேதி நல்லா ஞாபகம் இருக்கு.. ஆனா நேத்து என்ன சாப்டேன்னு கேளுங்க.. யோசிச்சித்தான் சொல்லணும்..

    நமக்கு தேவையானதா இருந்தா நல்லா பதிஞ்சி போயிரும்.. மத்ததெல்லாம் சோ, சோ தான்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க மணியன்,

    //அந்தாளு ஈய பேனாக்கி பேன பெருமாளாக்குற ஆளு // இந்த சொல்லாடலை நிறையமுறை கேட்டிருக்கிறேன். இதன் பின்னணி என்ன என்று தெரியுமா ? புஷ்பவனம் குப்புசாமியிடம் கேட்க வேண்டியதா :)

    எதுக்கு பு.கு.சாமி..

    நம்ம டோண்டு சார், இல்லன்னா தருமி அண்ணா.. இவங்கக்கிட்ட கேட்டா போறாது?

    அடுத்த அரை மணியில விடை கிடைக்கும் பாருங்க..

    பதிலளிநீக்கு
  9. வாங்க ராஜ்,

    சொந்த வீடா? அத ஏன் கேக்கறீங்க? அத நான் கட்டி முடிக்கறதுக்குள்ள பட்ட பாடு.. அது ஒரு பெரிய கதை.. பாலு மகேந்திராவோட வீடு படம் பார்த்தீங்களா? ஏறக்குறைய அது மாதிரி இருக்கும்..

    பதிலளிநீக்கு
  10. Ennada ithu namma sir pathivula "Cho" "Cho" innu solrare. enna achi sirukkunnu parthen. Appuram than therinjathu, neenga Cho va sollale, so so innu sonnengannu. Payanthe poyitten!

    பதிலளிநீக்கு
  11. என்னங்க கிருஷ்ணா 'சோ' ன்னா அவ்வளவு பயமா?

    பதிலளிநீக்கு
  12. Amam sir. avaru pakkame porathu illai!!

    பதிலளிநீக்கு