நேற்றைய தினம் என்னுடைய தொடைரை எழுத முடியாமல் போனதற்குக் காரணம் என்னுடைய தலைமையலுவலகத்தில் என்னுடைய பதவி உயர்வுக்கான நேர்காணல் நடந்ததுதான்.
கடவுள் கிருபையாலும், என்னுடைய சேர்மன் மற்றும் இயக்குனர்கள் குழுவின் தயவாலும் நான் Asst General Manager பதவியிலிருந்து Deputy General Manager பதவிக்கு உயர்த்தப்பட்டேன்.
என்னுடைய இந்த சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சிக் கொள்ளகிறேன்.
சென்னையிலிருந்து ஒரு வேளை மாற்றப்படலாம். பதவி உயர்வு காரணமாக வேலைப் பளுவும் அதிகமாகலாம். இப்போதுள்ளது போல் தினமும் ஒரு இடுகை பதிய முடியாமலும் போகலாம். எப்பாடு பட்டாவது தொடர்ந்து தினமொரு இடுகையை பதிவேன். முடியாவிட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது பதிவேன்.
உங்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையில்..
இனி, தொடரின் அடுத்த பகுதிக்கு சொல்வோம்..
நான் அவரைப் பார்க்க அவர் என்னை தர்மசங்கடத்துடன் பார்த்தார்.
என்னுடைய மெக்கானிக்கின் முன்பு எங்கள் இருவருக்கும் இடையிலிருந்த விரோதத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாத நான் அவரைப் பார்த்து, ‘உங்களுக்கு ஆட்சேபனையில்லேன்னா உக்காருங்க. உங்கள இறக்கிவிட்டுட்டு போறேன்.’ என்றேன்.
அவரும் உடனே ஏறிக் கொள்ள தஞ்சை நகர பேருந்து நிலையத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினேன்.
சிறிது நேரம்வரை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் மவுனமாகவே பயணம் செய்தோம்.
திடீரென்று அவர் ‘உங்க ப்ராஞ்ச் ஓப்பனிங் வேலையெல்லாம் எங்க நிக்குது சார்? நீங்க தஞ்சாவூர் வந்து ஆறு மாசம் ஆகப்போகுது போல?’ என்றார்.
அதாவது ஆறு மாசமா என்னடா பண்ணிக்கிட்டிருந்தே என்பதுபோல் இருந்தது அவருடைய கேள்வி. எடக்கு மடக்கான கேள்விக்கு எடக்கு மடக்காக பதில் சொல்லலாமா என்று ஒரு நொடி யோசித்தேன்.
ஆனால் அப்படி செய்வது சிறுபிள்ளைத்தனம் என்று நினைத்து, ‘டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சி சார். ------ அன்னைக்கி காலைல பத்து மணிக்கு ஓபனிங். தஞ்சாவூர் பிஷப்தான் இனாகுரேட் பண்றார். எங்க ஜி.எம் தலைமை தாங்க வறார். நாளைக்கு அநேகமாக இன்விடேஷன்ஸ் எல்லாம் ரெடியாயிரும். நீங்களும் கண்டிப்பா வரணும். இன்விடேஷன் ரெடியானதும் நேர்ல வந்து கொடுக்கறேன்’ என்றேன்.
அவர் சந்தோஷத்துடன், ‘நீங்க சொன்னதே போறும் சார். அழைப்பிதழெல்லாம் ஒன்னும் தர வேணாம். அதெல்லாம் உங்க வாடிக்கையாளர்களுக்குதான் கொடுக்கணும். நீங்க ஓபன் பண்றதுக்கு செலக்ட் பண்ணவரும் ரொம்பவும் பொறுத்தமானவர்தான் சார். இந்த ஊர்ல அவருக்கு எல்லா சமயத்தவர்ங்க மத்தியிலும் ஏன் பிசினஸ் கம்யூனிட்டில கூட நல்ல மதிப்பு இருக்கு. இதுக்கு முன்னால எங்களோட ரெண்டு, மூனு பிராஞ்சஸ கூட அவர்தான் திறந்து வச்சார். கலெக்டருக்கப்புறம் இந்த ஊர்ல அவர்தான் ரொம்ப பாப்புலர். நிறைய சமூக சேவையெல்லாம் கூட பண்றாங்க. ஏறக்குறைய ஒரு சுத்துவட்டத்துலருக்கற சுமார் இருபது கிராமங்கள தத்தெடுத்திருக்கறாங்கன்னா பார்த்துக்கங்களேன். எல்லாம் ரொம்ப அழகா, சிஸ்டமேடிக்கா செய்றாங்க. நாமளும் அவங்க ஸ்பான்சர் பண்ற எந்த ஆக்டிவிடியானாலும் தைரியமா லோன் கொடுக்கலாம். டிஃபால்ட்ங்கற பேச்சுக்கே இடமில்லாம அவங்க வாலண்டியர்சே சிஸ்டமாடிக்கா ரிக்கவர் பண்ணி தந்துருவாங்க. நீங்களும் தைரியமா ஃபைனான்ஸ் பண்ணலாம் சார்.’ என்றார்.
அட! பரவாயில்லையே. இவரும் நல்லவராத்தான் தெரியறார். நாந்தான் தப்பா எடை போட்டுட்டேன் போல என்று நினைத்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே பேருந்து நிலையம் வந்துவிட வாகனத்தை நிறுத்திவிட்டு நானும் இறங்கி அவருடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன்.
நானும் அவரும் பேசிக்கொண்டிருந்த அந்த சில நிமிடங்களில் எங்கள் இருவரையும் கடந்து சென்ற பலரும் அவரைக் கண்டதும் நின்று வணக்கம் தெரிவித்து, குசலம் விசாரித்து விட்டுச் செல்வதைப் பார்த்த எனக்கும் அவர்மேலிருந்த மரியாதை மேலும் கூடியது.
படிப்பினை: ஒருவரிடம் ஒரு சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு அல்லது அவர்கள் கூறிய ஓரிரு வார்த்தைகளை மட்டும் வைத்து ஒருவருடைய குணத்தை எடை போடக் கூடாது.
இதை நான் அவரை இரண்டாம் முறை சந்தித்தபோதுதான் புரிந்துக் கொள்ள முடிந்தது.
அச்சம்பவத்திற்குப் பிறகு நானும் அவரும் நெருங்கிய நண்பர்களானோம். அவருக்காகவே, தஞ்சை மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த அவருடைய கூட்டுறவு வங்கி பங்குக் கொண்ட தமிழக அரசின் எல்லா சமூக நலத் திட்டங்களிலும் பங்குக்கொண்டு நானும் என்னுடைய கிளையிலிருந்து முடிந்தவரை நலிந்தோருக்கு எங்களால் இயன்றவரை கடனுதவி அளித்தேன்.
அவரிடம் விடை பெற்றுக்கொண்டு என்னுடைய கிளை உரிமையாளருடைய சகோதரர் கடையை நோக்கிச் சென்றேன். என்னுடைய அலுவலகம் இருந்த தெரு முனையில் நுழையும்போதே கடை வாசலில் கல்லும், மணலும் இறக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.
நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி தளத்தை செப்பனிடும் வேலையைத் துவக்கி விட்டிருந்ததைக் கண்டபோது மகிழ்ச்சியாய் இருந்தது.
என் அலுவலகத்திற்கெதிரிலிருந்த துணிக்கடை வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியதும் நான் கண்டது NTC துணிக்கடை மேலாளரின் முதுகை! அவர் கடைக் கல்லா பெட்டியில் அமர்ந்து உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது.
நான் உள்ளே நுழைவதா வேண்டாமா என்று தயங்கியவாறு நிற்பதை கடை சிப்பந்தி ஒருவர் பார்த்துவிட்டு முதலாளியிடம் சென்று கூற பாய் உடனே எழுந்து என்னை நோக்கி வந்தார். கூடவே மேலாளரும்!
‘வாங்க சார். ஏன் வெளியிலேயே நின்னுட்டீங்க?’ என்ற உரிமையாளரைப் பார்த்து, ‘இல்ல சார்.. வீட்டுக்கு போற வழியில வேலை துவங்கிருச்சான்னு பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அப்படியே என்னையுமறியாம என் ஸ்கூட்டர் உங்க கடை முன்னால நின்னுருச்சி. அப்புறம்தான் நீங்க இவரோட பேசிக்கிட்டிருக்கறத பார்த்தேன். சரி.. டிஸ்டர்ப் பண்ணணுமான்னு நினைச்சேன்..’ என்றேன் தயங்கியவாறு.
பாய் சிரித்தவாறே தன் அருகில் நின்றுக்கொண்டிருந்த NTC மேலாளரைப் பார்த்தார். ‘சார் உங்கள பார்த்துட்டுத்தான் எங்க மறுபடியும் சண்டைக்கு வருவாரோன்னு பயப்படுறார்னு நினைக்கிறேன். என்ன சார்?’
அவர் பதிலுக்கு என்னைப் பார்த்து சிரித்துவிட்டு கையை நீட்டினார். ‘சாரி ஜோசப் சார். நான் காலையில எல்லார் முன்னாலயும் உங்கக் கிட்ட அப்படி பேசியிருக்கக் கூடாதுதான். நம்ம பசங்க முன்னால நான் அப்படி பேச வேண்டிய கட்டாயம். என்னை பத்தி பாய்க்கு நல்லா தெரியும்னு இதுவரைக்கும் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா அவரே உங்க மேல நான் கோபப்பட்டத நிஜம்னு நினைச்சி நம்மளையும் கன்னா பின்னான்னு பேசிட்டார். பரவாயில்லை. நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். நீங்களும் மறந்துருங்க..’ என்றார்.
நான் பதில் கூறாமல் கட்டட உரிமையாளரையும் அருகிலிருந்த அவருடைய சகோதரரையும் பார்த்தேன்.
அவர்களிருவரும் ‘போட்டும் விடுங்க சார்’ என்பதுபோல் என்னைப் பார்க்கவே நானும் உடனே கடை மேலாளரின் நீட்டிய கரங்களைப் பற்றி, ‘அதனாலென்ன சார், பரவாயில்லை.. நீங்க சொன்ன மாதிரியே மறந்துருவோம்.’ என்றேன்.
பிறகு சிறிது நேரம் அவர் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட நானும் உரிமையாளர் மற்றும் அவர் சகோதரர் மட்டும் இருந்தோம்.
நான் அவ்விருவரையும் பார்த்தேன். ‘என்ன சார், நீங்க சொன்னா மாதிரியே தானா? நான் போனதும் அவர் வந்து மன்னிச்சுக்குங்கன்னு சொன்னாரா?’
மூத்தவர் பெருந்தன்மையுடன் சிரித்தார். ‘ஆமா சார். அழாத குறைதான். நம்ம பையன் கிட்டயும் ரொம்ப நேரம் மன்னிச்சிக்குங்க.. மன்னிச்சிக்குங்கன்னு கெஞ்சினார். அவனுக்கும் என்னடா இவ்வளவு வயசானவர் நம்ம கிட்ட இப்படி கெஞ்சிறாரேன்னு ஒரு மாதிரியா ஆயிட்டான். சரி சார்னு அவனும் இறங்கி வந்தான். அப்புறம் அவரும் நாங்களுமா பேசி ஒரு காம்ப்ரமைஸ்சுக்கு வந்திருக்கோம். நாங்க ரிப்பேர் செலவையெல்லாம் ஏத்துக்கிட்டு ரெண்டு வாரத்துக்குள்ள அவர் கவுண்டரையும் சேர்த்து எல்லாத்தையும் முடிக்கணும். அவர் சைடுல இன்னும் ஆறு மாசத்துக்குள்ள எப்படியாவது வேறொரு இடத்துக்கு ஷிப்ட் பண்ணிரணும். பேச்சோட விட்டா சரி வராதுன்னு நம்ம மெட்றாஸ் வக்கீலுக்கு ஃபோன் போட்டு அவர் சொன்னா மாதிரி மேனேஜர் கைபடவே எழுதியும் வாங்கிட்டோம்.’ என்று சிரித்தவாறு மேலாளர் அவருடைய நிறுவனத்தின் லெட்டர் ஹெட்டில் ஒப்பமிட்டுக் கொடுத்த கடிதத்தைக் காட்டினார்.
அவருடைய சமயோசிதத்தைப் பார்த்து அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அவருடைய இந்த புத்திக் கூர்மைதான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் வேலை செய்து பிழைக்க தஞ்சையை அடுத்திருந்த கும்பகோணத்திற்கு வந்த அவருடைய குடும்பத்தை இன்று தஞ்சை நகரில் இரண்டு பெரிய துணிக்கடைகளுக்கு முதலாளிகளாக மாற்றியிருக்கிறது என்று நினைத்தேன்.
‘ரொம்ப நல்லதா போச்சி சார். சில கெட்டது நடக்கறதும் நல்லதுக்குத்தான் பெரியவங்க சொல்றா மாதிரி எங்க லாக்கர ஏத்தி அவரோட கடை கவுண்டர் உடைஞ்சதும் ஒருவகையில நல்லதுக்குத்தான் போலருக்கு.. அவரே கடைய காலி பண்ணிடறேன்னு சொல்ற வரைக்கும் கொண்டு வந்திருச்சி.’ என்றேன்.
அவர் எழுந்து என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டார். ‘சார், அதுக்கு உங்களுக்கும் நாங்க ரொம்ப கடமைப் பட்டிருக்கோம் சார். நீங்க மட்டும் காலையில அவர் கோபப்பட்டப்போ பணிஞ்சி போயிருந்தீங்கன்னா அந்தாளு இப்ப சொன்னா மாதிரி சும்மா கோபம் வந்தா மாதிரி நடிச்சேன்னு சொல்லியிருப்பானான்னு யோசிக்க வேண்டியிருக்கு. ஒரே கல்லுல ரெண்டு மாங்காங்கறா மாதிரி நீங்க போட்ட போட்டுல ஆளு இறங்கி வந்துட்டான் வேற வழியில்லாம. இனிமே கடைய காலி பண்றவரைக்கும் எந்த தொல்லையும் கொடுக்க மாட்டான்னு நினைக்கிறேன்.’
அவருடைய நன்றியுணர்வு அவருடைய கண்கள் கலங்கியிருந்ததிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது. தர்மசங்கடத்துடன் என் கரங்களைப் பற்றியிருந்த அவருடைய கரங்களை மெள்ள அழுத்தினேன். ‘என்ன சார் நீங்க? இதப் போய் பெரிசா சொல்றீங்க? உண்மைய சொல்லப் போனா அவர்கிட்டருந்து என்னை விடுவிச்சிருக்கறதுக்கு நான் போட்ட திடீர் ப்ளான் அது..’
அவர் உரக்க சிரித்தார். ‘எப்படியோ.. அது எங்களுக்கும் உதவியா இருந்திச்சே..’
பிறகு, ‘சார் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்க இங்கருந்து இறங்குனதும் மறுபடியும் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்..’ என்றார்.
போலீஸ் இன்ஸ்பெக்டரா? எதற்கு?
தொடரும்..
ஜோசப் சார்,
பதிலளிநீக்குஉங்கள் பதவி உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
டி.பி.ஆர்,
பதிலளிநீக்குபதவி உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாங்க ஜோ,
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
பதவி உயர்விற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குCongrats Mr. Joseph.
பதிலளிநீக்குRegards,
Pedharayudu.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுதர்சன்,சதீஷ், மணியன், பெத்த ராயுடு!
பதிலளிநீக்குCongrats ஜோசப் சார்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை விடாமல் படித்து ஆனால் (சோம்பலினால்) பின்னூட்டமிடாமல் உள்ள நூற்றுக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். வேலை பளுவிருந்தாலும், எப்பாடு பட்டாவது தினம் ஒரு பதிவை தொடரவும். (பின்னூட்டதிற்கே சோம்பல் ..தினம் ஒரு பதிவுனு வேண்டுகோளானு கேட்கிறது தெரியுது )
அன்புடன்
விக்னேஷ்
வாங்க விக்னேஷ்,
பதிலளிநீக்குபின்னூட்டதிற்கே சோம்பல் ..தினம் ஒரு பதிவுனு வேண்டுகோளா?
அதானே.. சரியான கேள்விதான்!
இருப்பினும் உங்க விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பேன்.
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஜோசப் சார்,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். இப்பதவி உயர்வுக்கும், மேலும் பல பதவி உயர்வுகளைப் பெறுவட்தர்க்கும் சேர்த்துதான். அதற்காக நேரமில்லை எழுத முடிவதில்லை அப்படியெல்லாம் அலட்ட கூடாது என்ன?
சும்மா தாமாசு. கோச்சுக்காதீங்க.
இப்போ என்ன போலீஸ்? மேலும் ஒரு பிரச்சனையா? போச்சுடா.
வாங்க இ.கொத்தனார்,
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் அலட்ட கூடாது என்ன? //
சரிங்க.. உத்தரவு..
போலீஸ்னாலே பிரச்சினைதான்னு நினைக்காதீங்க.. ஏதாச்சும் ரிவார்டோ என்னவோ.. ஹி..ஹி..
திங்கட்கிழமை சொல்றேன்..
//Deputy General Manager பதவிக்கு உயர்த்தப்பட்டேன்.
பதிலளிநீக்கு//
Congrats Mr.Joeseph.
-Mathy
congrats on your promotion
பதிலளிநீக்குwishing you ALL THE BEST
hoping i may get some more chances to congratulate you
ஜோசப் சார்,
பதிலளிநீக்குஉங்க பதவி உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நானும் பின்னூட்டம் இடாமல் படிக்கிற கூட்டத்தில ஒருத்தன்.
உங்க 100th பதிவுல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய பின்னூட்டம் போட்டுடுவோம்...என்ன சொல்றீங்க :)
ஜோசப் சார்,
பதிலளிநீக்குஉங்கள் பதவி உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
(இப்பதான் படிச்சேன். really i had lot of work since last 2 weeks.)
வேண்டுகோள்
தினம் ஒரு பதிவை தொடரவும்
Hello TBR
பதிலளிநீக்குபதவி உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Murali
வாங்க மதி,
பதிலளிநீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துகள் ஜோசப் சார். இந்தப் பதவி உயர்வை நீங்கள் திறமையுடனும் ஆற்றலுடனும் பயன்படுத்தி நல்ல செயல்களைச் செய்வீர்கள் என்று வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குகொஞ்சம் வேலையா இருந்துட்டேன் சார். அதான் பின்னூட்டம் குறைஞ்சு போச்சு. இனிமே முடிஞ்ச வரைக்கும் ஒழுங்கா வர்ரேன் சார்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.
இனிமே முடிஞ்ச வரைக்கும் ஒழுங்கா வர்ரேன் சார். //
வாங்க.. மெதுவாவே வாங்க.. வேலைதான் முக்கியம்..
வாங்க டி.ராஜ்.
பதிலளிநீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு நன்றி..
உங்கள் பதவி உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!
பதிலளிநீக்குட்ரீட் பதிவு உண்டா?
Many congrats Sir.
பதிலளிநீக்குAll the very best for your future endeavors.
வாங்க சிபி..
பதிலளிநீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு நன்றி..
ட்ரீட் பதிவு உண்டா? //
நீங்க கேட்டதும் தான் அடடா மறந்துட்டோமேன்னு நினைச்சேன்..
உடனே போட்டுட்டேன்.. சீக்கிரம் போங்க சீட் காலியாயிரப்போவுது.
வாங்க சுதர்சன்.கோபால்.
பதிலளிநீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.
ட்ரிட் இருக்குங்க.. சீக்கிரம் போங்க..