கார்ட்டூன் படம்
என்னுடைய தொடருக்கு மிகவும் பொருத்தமான கார்ட்டூன்! ஹா,ஹா,ஹா!!!
நன்றி: THE HINDU
என்னுடைய இந்த செயல் இரண்டே நாட்களில் பலன் அளித்தது. ஆனால் அதுவே எனக்கு வேறு வழியில் பிரச்சினையாக அமைந்தது..
நான் புனைப்பெயரில் தந்தி அனுப்பும்போது ஏதோ சாமர்த்தியமாக செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன். ஆனால் இப்போது நினைத்துப்பார்த்தாலும் என்னுடைய அந்த செயல் எத்தனை முட்டாள்தனமானது என்று தெரிகிறது. ஒருவேளை அனுபவமின்மைதான் காரணமாயிருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சரி, இது எத்தனை முட்டாள்தனமானது என்று நான் அடித்த தந்தி வாசகத்தை படித்தால் புரியும்.
‘The person who had taken your premises at ... on lease is trying to mortgage the property for a loan of Rs.20.00 lakhs from a bank in Kodambakkam. Please initiate immediate action.’
From a well-wisher
தந்தி கிடைத்த அன்றைய தினமே சொத்தின் உரிமையாளர் வேறொரு தந்தியை நம்முடைய சேட்டுக்கு அடித்து அதில் நான் அனுப்பிய தந்தியின் வாசகங்களை அதே போல் குறிப்பிட்டு விளக்கம் கேட்டிருக்கிறார்.
அது கிடைக்கப் பெற்ற நம்முடைய சேட்டுக்கு இது யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்க பெரிய சி.ஐ.டி மூளை வேண்டுமா என்ன?
வங்கி கடன் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள சொத்தின் விவரங்கள் பத்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து மாறுபட்டவை என்பது சேட், அவருடைய மேலாளர் மற்றும் வங்கியிலுள்ளவர்கள் என ஒரு குறுகிய வட்டத்திலுள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது, இல்லையா?
தானே தன் தலைமீது மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் அளவுக்கு சேட் பைத்தியக்காரர் இல்லை. சேட் தன்னுடைய மேலாளர் மேல் நம்பிக்கை இல்லை என்றால் இவ்வேலையை அவரிடம் ஒப்படைத்திருக்கவே மாட்டார். ஆக, என்னுடைய வங்கியிலிருப்பவர்களுள் ஒருவரால் மட்டுமே இதை செய்திருக்க முடியும் என்பது ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே அவருக்கு தெரிந்து விட்டிருக்கும்.
சேட்டுக்கு தந்தி கிடைத்த மறுநாளே கணக்குபிள்ளையிடமிருந்து என் வீட்டிற்கு தொலைப்பேசி வந்தது. அவருடைய குரலிலிருந்த பதற்றத்திலிருந்தே விஷயம் விபரீதமாகிவிட்டது என்று நினைத்தேன். ‘எய்யா அந்த வீட்டோட ஓனர் கிட்டருந்து ஒரு தந்தி வந்திருக்குய்யா. அது வந்ததுலருந்து சேட் உங்க மேலதான் சந்தேகப்படராறு. உங்க சேர்மன் கிட்ட விஷயம் போனாலும் போகும்னு நினைக்கறேன். முன் சாக்கிரதையா ஏதாவது செய்யுங்க. நான் சொன்னேன்னு தெரிய வேணாம்.’
நான் கலவரமடைந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘சரிய்யா. இந்த விஷயத்தை எனக்கு சொன்னதுக்கு நன்றி’ என்று
கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.
‘யார்ங்க ஃபோன்ல?’ என்று கேட்ட மனைவியிடம் ஒரு பொய்யை சொல்லி சமாளித்தேன்.
நம்முடைய சேட் கைதேர்ந்த எத்தனாயிருக்க வேண்டும் என்று முன்னமே சொன்னேன். அவர் சாதாரண ஜேப்படி திருடனாயிருந்தால் இத்தகைய தந்தி கிடைத்ததுமே வங்கிக்கு வந்து ஒரு பெரிய பிரச்சினை செய்திருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. சொத்தின் உரிமையாளரை எப்படி சரிகட்டினாரோ தெரியவில்லை. அவரோ அல்லது வீட்டின் உரிமையாளரோ இது விஷயமாக நான் தந்தியடித்து மூன்று நாட்கள் கழித்தும் என்னை தொடர்பு கொள்ளவேயில்லை. நானும் அதை கண்டுகொள்ளாமல் let us wait and watch என்று நினைத்துக்கொண்டு இருந்துவிட்டேன். நானாக போய் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லவேண்டாமே! அவர் எத்தனாயிருந்தால் நாம் அவனுக்குமேல் ஜித்தன் என்று காட்ட வேண்டாமா?
ஆனால் இது சேர்மனின் செவிக்கு எட்டிவிட்டால் என் கதை கந்தலாகிவிடுமே என்ற பயமும் உள்ளுக்குள் இல்லாமல் இல்லை.
இதற்கிடையில் குறிப்பிட்ட கடன் விண்ணப்ப படிவத்தின் ஒரு நகலையும் சேட் சமர்ப்பித்திருந்த பத்திர நகலையும் என்னுடைய வங்கியின் சார்ட்டர்ட் பொறியாளருக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி சொத்தை மதிப்பீடு செய்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். நான் எதிர்பார்த்தது போலவே அவரும் இரண்டு நாள் கழித்து சொத்தை மதிப்பீடு செய்து அவருடைய அறிக்கையை அனுப்பிவைத்தார். நான் அனுப்பிய பத்திர நகல்களை அவர் கண்டுக்கொள்ளவேயில்லை. ஆனால் அவருடைய அறிக்கையின்படி சொத் மதிப்பு நான் மதிப்பிட்டதைவிட பதினைந்து லட்சம் குறைந்திருந்தது, அதாவது ரூ.35 லட்சம். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்தேன். Blessing in disguise!
(என்னுடைய வங்கி நியதியின்படி ரூ.20 லட்சம் கடன் பெற சொத்தின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கவேண்டும். ஆக, சேட் கூடுதலாக வேறொரு சொத்து கொடுக்க வேண்டியிருக்கும்.)
இந்த விஷயத்தை சேட்டின் மேலாளரிடம் அறிவிக்க வேண்டும். ஆனால் இதில் நான் தலையிடாமல் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து அவருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க வைத்தேன்.
அத்துடன் நில்லாமல் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து கடன் விண்ணப்பம் மற்றும் பத்திர நகல்களைக் கொடுத்து எல்லா படிவங்களையும் பூர்த்தி செய்து சொத்து விவரங்களை பத்திரங்களுடன் சரிபார்த்து கொடுக்குமாறு ஒப்படைத்தேன்.
அடுத்த நாள் மாலையே மற்ற அலுவலக பணிகளை முடித்துவிட்டு அவர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யத் துவங்கியதை நான் என் அறையிலிருந்து கவனித்தேன். அவர் அடுத்த நாள் காலை என்னிடம் வந்து விண்ணப்பத்தை சரிவர பூர்த்தி செய்வதற்கு தேவையான சில முக்கிய விவரங்கள் தேவைப்படுவதாக கூற, ‘நீங்களே அவருடைய அலுவலகத்திற்கு சென்று தேவைப்பட்ட விவரங்களை பெற்று வாருங்களேன்.’ என்றேன். ‘சரி சார்’ என்று தன்னுடைய இருக்கைக்கு செல்ல முயன்றவரை நான் நிறுத்தி, ‘அதற்கு முன்னால நீங்க இன்னொன்றையும் செய்ய வேண்டுமே.’ என்றேன். ‘என்ன சார்?’ என்று கேட்டவரை என் முன்னே அமர்த்தி அவரிடமிருந்த பத்திர நகலை சுட்டிக்காட்டி ‘நம்ம கிளையிலிருக்கற தமிழ் தெரிந்த ஸ்டாஃப் மெம்பரை கிட்ட வச்சிக்கிட்டு பத்திரத்துலருக்கற சொத்து விவரத்தையும் நம்ம விண்ணப்ப படிவத்துல சமர்ப்பித்துள்ள விவரத்தோடு ஒப்பிட்டு பாருங்கள்.’ என்றேன்.
நான் சொல்வதின் உள்ளர்த்தம் அவருக்கு விளங்கவில்லை. ஏதோ Routine வேலையைத்தான் நான் சொல்கிறேன் என்ற நினைத்துக்கொண்டு உடனே ஒரு குமாஸ்தாவை அழைத்து அவரிடம் பத்திர நகல்களைக் கொடுத்து வாசிக்க சொல்லி விண்ணப்பத்துடன் ஒப்பிட்டு பார்க்க துவங்கினார். நானும் அவர்கள் செய்வதை என் அறையிலிருந்தே ஒருவித ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான் எதிர்பார்த்தது போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் என்னிடம் பதற்றத்துடன் ஓடி வந்தார். நான் ஒன்றும் அறியாதவன்போல் அவரை பார்த்தேன்.
‘சார் இதுல வித்தியாசம் இருக்கே. எனக்கு தமிழ் படிக்க தெரியாததால என்னால கண்டு பிடிக்க முடியலை சார்.’
நான் ஒன்றும் அறியாதவனைப் போல் பார்த்தேன். ‘ எனக்கும் அதே ப்ராப்ளம்தான். நான் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கில பள்ளியில் படித்தவன். இரண்டாவது மொழியாக ஹிந்தி எடுத்ததால் எனக்கும் தமிழ் சரியாக படிக்க வராது. இல்லையென்றால் நானே இந்த குளறுபடியை கண்டுபிடித்திருப்பேன்.’ என்றேன்.
நான் இப்படி உண்மைக்கு புறம்பாக பேசியதற்கு வேறு காரணமும் உண்டு. ஒன்று: சொத்தின் உரிமையாளருக்கு நான்தான் தந்தி கொடுத்தேன் என்று சேட் நினைத்திருந்தால் என்னுடைய உதவி மேலாளர் அவரை சந்திக்கும்போது என்னால் தமிழ் படிக்க முடியாது என்பதை தெரிவிப்பார். மற்றொன்று: இக்குறைபாடை இன்றுதான் நாங்களே கண்டுபிடித்தோம் என்று இவர் கூறும்போது சேட்டுக்கு வங்கியிலுள்ளவர் மேல் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அது மறைந்துவிடும் என்று நினைத்தேன்.
அன்று மாலையே என்னுடைய உதவி மேலாளர் சேட்டின் அலுவலகம் சென்று நான் கூறியதுபோலவே நடந்துக்கொண்டார். அவர் சென்ற நேரத்தில் சேட் இல்லாததால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டிய விவரங்களை அவருடைய மேலாளரிடம் கேட்டு குறித்துக்கொண்டவர் அவரிடம் கொடுக்கப்பட்ட பத்திர நகல்கள் அடகு வைக்கப்படவேண்டிய சொத்தை சார்ந்ததல்ல என்றும் கூறியிருக்கிறார்.
‘நான் சாதாரணமா இந்த விஷயத்தை அவர் மேனேஜர் கிட்ட சொன்னவுடனே அவர் பயங்கரமா கோபப்பட்டார் சார். அப்படியெல்லாம் இருக்க முடியாது. உங்க மேனேஜர் நடந்துக்கற முறையே சரியில்லை. எங்க முதலாளி பயங்கரமா அப்செட் யிருக்கார். அப்படின்னு என்னென்னமோ சொல்றார் சார்.’ என்று என்னுடைய உதவி மேலாளர் திரும்பி வந்து என்னிடம் கூறியதும் நான் ‘நாம நெனச்சா மாதிரியே அந்தாளு தந்திய நான்தான் கொடுத்தேன் என்று கண்டுபிடிச்சிட்டார் போலருக்குதே’ என்று நொந்துபோனேன்.
‘சரி, நீங்க போங்க. அவர் கோபப்பட்டா நமக்கென்ன. சரியான பத்திரத்தை கொடுத்த பிறகு இந்த விண்ணப்பத்தை மேலிடத்துக்கு அனுப்புவோம்.’ என்று சமாதானம் சொல்லி அவரை அனுப்பினேன்.
சரியோ, தவறோ தந்தி கொடுத்தது கொடுத்ததுதான். விஷயம் விபரீதமாகப் போகாமல் இருக்க வேண்டுமே என்று கடவுளைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
ஆனால் நாம் நினைப்பதல்லவே நடப்பதும்!
அடுத்த நாள் காலை என்னுடைய தலைமை அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி வந்தபோதுதான் புரிந்தது இந்த உண்மை!
தொடரும்
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குஉங்க பின்னூட்டத்தம் எங்கயும் போகல. அந்த பதிவையே டெலீட் பண்ணிட்டேன்.
அதுல நான் போட்ட கார்ட்டூன் மிஸ் ஆயிருச்சி அதான் மறுபடியும் ஒரு பதிவு போட்டேன்.
வாங்க புதுவை (சரியா உங்க பேரு?)
பதிலளிநீக்குஅடுத்த சாப்டர் நாளைக்குத்தான்.என்ன பண்றது? அப்பப்ப ஆஃபீஸ் வேலையும் பாக்கணுமில்ல?
உங்க ஆர்வத்துக்கு நன்றி.
மேலதிகாரிக்குத் தெரிஞ்சுட்டா என்ன செய்யரதுன்னு எப்பவும் ஒரு தற்காப்பு எண்ணம் மண்டையிலே ஓடிக்கிட்டே இருக்கும் இல்லே?
பதிலளிநீக்குரொம்ப பேஜாரா இருந்திருக்குமே? பாவம்.
சாப்பாடு தூக்கம் எல்லாம் நடந்துச்சா இல்லையா?
ரொம்ப பேஜாரா இருந்திருக்குமே?//
பதிலளிநீக்குஆமாங்க துளசி! இருந்தாலும் சாப்பாடு எல்லாம் டைமுக்கு ஆயிரும். இல்லன்னா வீட்லருக்கறவங்களுக்கு எல்லாத்தையும் சொல்லணும். அப்புறம் அவங்க டார்ச்சர யார் தாங்குறது?
தூக்கம் வராதுதான்.
அதுசரிங்க இந்த 'பேஜாரு'ங்கறது மெட்றாஸ் பாஷயாச்சே. அது எப்படி உங்களுக்கு?
நமக்குக் குப்பத்து பாஷைகூட அத்துப்படிங்க.:-)))))
பதிலளிநீக்குநமக்குக் குப்பத்து பாஷைகூட அத்துப்படிங்க//
பதிலளிநீக்குநீங்க சகலகலாவல்லிதான் போல துளசி.
ஜமாய்ங்க.
சார் உங்க பழைய அஞ்சாறு பதிவுகள இன்னைக்கித்தான் படிச்சேன்.
பதிலளிநீக்குஇவ்வளவு டீடெய்லா உங்க பாங்க் ரகசியங்கள எழுதணுமா?
படிக்கறதுக்கு த்ரில்லிங்கா இருந்தாலும் கொஞ்சம் அதிகமா ரிஸ்க் எடுக்கறீங்களோன்னு தோணுது.
பார்த்துக்குங்க. சாயந்திரமா ஃபோன் பண்றேன் சார்.
அடேங்கப்பா............திக் திக் தில்லாலங்கடியா இருக்கே.......இப்படியெல்லாம் நடக்குமான்னு நான் வியக்கலை. ஏன்னா இப்போ என்னோட அலுவலகத்துலயும் இது போல என்னோட டீம் மெம்பர்ஸ் செஞ்சாங்க..அதை நான் வேற மாதிரி ஹேண்டில் பண்ணினேன்னு வச்சுக்கோங்களேன். இதெல்லாம் சகஜம்.
பதிலளிநீக்குவாங்க சம்பத்,
பதிலளிநீக்குஎன்னடா ரொம்பநாளா வரலையேன்னு பார்த்தேன்.
நீங்களும் பாங்கலதான வொர்க் பண்றீங்க? அங்க மட்டும் என்ன பண்றீங்க? அதைத்தான் எழுதறேன்.
ரிஸ்க்குன்னு எத சொல்றீங்கன்னு தெரியலை.
நான் யாரைப்பத்தியும் குறிப்பிட்டு எழுதலேன்னு நினைக்கிறேன். அதுமட்டுமல்ல இருபத்தி அஞ்சி வருஷத்துக்கு முன்னால நடந்ததுதானே சம்பத்.
சரி, உங்க ஃபோன் வரும்போது பேசிக்கலாம். பை!
ஏன்னா இப்போ என்னோட அலுவலகத்துலயும் இது போல என்னோட டீம் மெம்பர்ஸ் செஞ்சாங்க..//
பதிலளிநீக்குஎன்ன ராகவன், சீரியசா ஒன்னுமில்லையே. எங்க டெவலப்மெண்ட் டீம்லயும் அப்பப்ப லீடரும் மெம்பர்சும் அடிச்சிக்குவாங்க. தீர்த்து வைக்கறதுக்குள்ள போறும்டா சாமின்னு தோணும். இப்ப நடக்கறதையெல்லாம் நான் ஓய்வு பெற்றதுக்கப்புறம்தான் எழுத முடியும்.
ஹூம்.. காத்திருக்கிறேன். ஏன்னா அவ்வளவு இன்ட்ரஸ்ட்டிங்க விஷயமெல்லாம் நடக்குது.
சார்.. நெஞ்சத் தொட்டு சொல்றேன் சார்.. உங்க அனுபவங்கள் புதுசா பேங்குல வேலைக்குச் சேரும் எல்லோருக்கும் மிகச் சிறந்த பாடமாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
பதிலளிநீக்குவாங்க மூர்த்தி, நன்றி.
பதிலளிநீக்குஉங்க அனுபவங்கள் புதுசா பேங்குல வேலைக்குச் சேரும் எல்லோருக்கும் மிகச் சிறந்த பாடமாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம். //
அப்படி நடந்தா எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கும் மூர்த்தி. இன்றைய சூழ்நிலையில ஒவ்வொரு வங்கி அதிகாரியும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் என்னுடைய இந்த தொடரின் நோக்கமே.
How can i read all your articles? how am i to reach them? wherefrom i can get them?
பதிலளிநீக்கு