01 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 26

அன்று காலையில், என் அறையில் சென்று அமர்ந்ததும் என் உதவி மேலாளர் என்னிடம் ஓடி வந்தார்.

‘சார் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால சேர்மனோட பி.ஏ கிட்டருந்து ஃபோன் வந்தது சார். நீங்க வந்ததும் கூப்பிடச் சொன்னார்.’ என்றார்.

எனக்கு ‘திக்’ கென்றிருந்தது. என் வட்டார மேலாளர் வேண்டு மென்றே சேர்மனிடம் போட்டுக் கொடுத்திட்டார் போலருக்குதே என்று நொந்து போனேன். ‘சரி. நீங்க போங்க. ஒரு பத்து நிமிஷத்துக்கு யாரையும் உள்ளே அனுப்பாதீங்க.’ என்றேன்.

இந்த சேர்மன் பதவிக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. என்னுடைய கிளை திறப்பு விழா தினத்தன்றே என்னுடைய முந்தைய சேர்மன் மரித்த விஷயத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இவர் அதற்கு பிறகு அப்பதவியில் நியமிக்கப்பட்டவர். கேரள மாநிலத்தை சார்ந்தவர். அவர் பதவியேற்றப் பிறகு ஒரே ஒரு முறை தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது சந்தித்திருக்கிறேன்.

சாதாரணமாக என்னுடைய தலைமை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்ளும் சமயங்களில் ஒரு scribbling padல் என்னவெல்லாம் கேட்கவேண்டும் என்று எழுதி வைத்துக்கொண்டுதான் தொலைப்பேசியை எடுப்பேன்.

அதேபோல் அன்றும் சிறிது நேரம் சேர்மன் இதைப்பற்றி கேட்டால் என்ன பதில் சொல்வதென்று எனக்குள்ளேயே சொல்லி பார்த்துக்கொண்டுவிட்டு ஒரு Padல் எழுதிவைத்துக்கொண்டேன். பிறகுதான் சேர்மனின் காரியதரிசியை அழைத்தேன். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் கிளார்க்காக வேலை பார்த்தவர் என்பதால் நல்ல பழக்கம் இருந்தது.

அவர் தொலைப்பேசியை எடுத்ததும் அழைத்தது நான்தான் என்று என் குரலை வைத்தே தெரிந்துகொண்டார். நான் அவரிடம் சேர்மனின் Mood எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவர் உடனே சிரித்துவிட்டார். ‘சார். கவலைப்படாதீங்க. சீரியஸா ஒன்னுமில்லைன்னு நினைக்கிறேன். அவருக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு லோன் குடுக்கற விஷயமான்தான் உங்ககிட்ட பேசப் போறார்னு நினைக்கறேன். இப்போ அவர் ரூம்ல யாருமில்ல சார். உங்கள கனெக்ட் பண்றேன். பேசுங்க.’ என்றார்.

அப்பாடா என்று நிம்மதியடைந்தேன். இருந்தாலும் அவருக்கு தெரிஞ்சவருக்கு லோன் என்றால் ஏதும் வில்லங்கம் பிடித்த விவகாரமாயிருந்தால் என்ன செய்வதென்றும் ஒரு சிந்தனை.

‘மிஸ்டர் ஜோச·ப். எப்படி இருக்கீங்க? உங்க ப்ராஞ்ச் பிசினஸ் எப்படியிருக்கு?’ சேர்மனின் குரல் எதிர்முனையிலிருந்து கேட்டது.

‘நல்லா இருக்கு சார். I could achieve all my last quarter’s business budgets. ’ என்றேன். (அவரை குளிர வைக்க நான் போட்ட சோப்பு தான்)

‘Good. நான் கூப்பிட்டது ரொம்ப முக்கியமான விஷயம் ஜோசஃப். Do you know why I selected your branch for this?’

நான்தானே ஏமாந்தவன்! ‘சொல்லுங்க சார்.’

‘என்னோட பழைய வங்கியின் மிகப்பெரிய கஸ்டமர்களுள் ஒருவர் ரெண்டு, மூனு நாளைல உங்கள வந்து பார்ப்பார். அவர் ஒரு Proposal தருவார். நீங்க அத ரெக்கமெண்ட் பண்ணி அனுப்பனும். லேட் பண்ணக்கூடாது. One more thing Joseph!’

‘எஸ் சார்?’

‘அவரோட ஃபோன் நம்பரை கொடுக்கிறேன், குறிச்சிக்குங்க. அவருக்கு டாப் கிளாஸ் ட்ரீட்மெண்ட் கொடுக்கணும். He should not be slighted at any cost. Do you understand what I mean?’

இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. ‘Yes Sir, I understand.’ என்று அவர் கொடுத்த எண்ணை Padல் குறித்துக்கொண்டேன்.

‘I will be closely watching your method of handling this customer and his proposal. It will definitely turn your branch into profit in the first year itself. What else you want? You should be thankful to me.’

எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

‘Joseph, are you there?’ சேர்மனின் குரல் என்னை உசுப்ப, அவசர அவசரமாக, ‘Sorry sir, Thankyou sir.’ என்று தடுமாற அவர் உரக்க சிரித்தார். ‘I understand your anxiety. Handle him well. I will see that you get proper recognition.’

இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒலிவாங்கியையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் ஒரு பிரச்சினை ஓய்ந்தது. இன்னொன்னா?

என் அறைக்கு வெளியே நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த என் உதவி மேலாளரை உள்ளே வரும்படி சைகை செய்தேன்.

‘என்னாச்சி சார்? சேர்மன் வரைக்கும் நியூஸ் போயிருச்சா?’ என்றவரையே சிறிது நேரம் பார்த்தேன். இவரை எந்த அளவுக்கு நம்பலாம் என்று யோசித்தேன்.

நேற்று இவருக்கு உதவுவதற்கு நான் முயற்சி செய்துக் கொண்டிருக்க இவர் சென்னையிலிருந்த வேறொரு அலுவலரிடம் இந்த விஷயத்தை கூறப்போக அது அப்படியே வட்டார மேலாளரிடம் போய், தேவையில்லாத டென்ஷன் எனக்கு. இந்த விஷயத்தையும் இவரிடம் கூறி உடனே இதை அதே அலுவலரிடம் கூறிவிட்டால் வேற வினையே வேண்டாம்.

சேர்மன் என்னிடம் தெரிவித்த விஷயம் வட்டார மேலாளருக்கே தெரியுமோ தெரியாதோ. ஆகவே இப்போதைக்கு இந்த விஷயத்தை ரகசியமாக வைப்பதே மேல் என்று நினைத்தேன். தேவைப்பட்டால் பிறகு கூறிக்கொள்ளலாம்.

‘என்ன சார்? ஒன்னுமே சொல்லாம.. ஏதாவது பிரச்சினையா சார்?’

ஏதோ யோசனையிலிருந்த நான் அவருடைய குரலைக் கேட்டு திடுக்கிட்டு, ‘என்ன கேட்டீங்க?’ என்றேன்.

‘சேர்மனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருச்சான்னு கேட்டேன், சார்.’

‘ஆமா.. ஆனா நான் நடந்த விஷயத்தை முழுவதும் சொல்லிட்டேன். அவர் பெரிசா ஒன்னும் சொல்லலை. பி கேர்ஃபுல் இன் ஃபியூச்சர்னு மட்டும் சொல்லிட்டு வச்சிட்டார். நான் வேறொருத்தருக்கு ஃபோன் பண்ணனும், சாயந்திரம் பேசலாம்.’ என்று ஒரு பொய்யை கூறிவிட்டு அவரை பார்த்தேன்.

அவருக்கு நான் சொல்வதில் நம்பிக்கையில்லை என்பது அவருடைய முகத்தை பார்த்தாலே தெரிந்தது. அவர் கதவைத் திறந்து வெளியேறும்வரை காத்திருந்த நான் சேர்மன் கொடுத்த தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு Call போட்டாலென்ன என்று நினைத்துக்கொண்டு தொலைப்பேசியை எடுக்கவும் அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.

அறைக்கு வெளியே ‘பிள்ளை’ நின்றுக்கொண்டிருந்தார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? எம்.ஜி.ரை அழைக்க உதவியவர்!

பேருந்து கடன்! இவரை எப்படி சமாளிக்க போகிறேன்?

தொடரும்

15 கருத்துகள்:

  1. பெயரில்லா10:52 AM

    சார் நான் உங்களுக்கு மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவன்தான். நீங்க ப்ளாக்ல எழுதறத நீங்க வேணும்னா ரகசியமா வச்சிருக்கலாம். ஆனா அது நம்ம நண்பர் வட்டத்துல ஏறக்குறைய நிறைய பேருக்கு தெரிஞ்சிபோச்சி. என்னைப் போலவே சிலரும் உங்களுக்கு அப்பப்ப பின்னூட்டம் போட்டுக்கிட்டுத்தான் இருக்கறாங்க. நான் தொடர்ந்து போடறதுனால நீங்க கவனிச்சிருக்கீங்க.

    அதுசரி, ஏன் சார் உங்களுக்கு அப்போ கஷ்ட காலம்தான்னு நினைக்கிறேன். இப்படியா தொடர்ந்து தொல்லைகள் ஒன்னுக்கு பின்னால ஒன்னா வரணும்?

    பதிலளிநீக்கு
  2. நன்றி சம்பத்.

    சரி, சரி. நீங்க என் நண்பர்தான் ஒத்துக்கறேன். இனிமே யார்னு கேக்க மாட்டேன். தன்னால தெரியும் ஒரு நாளைக்கு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ராஜ்.

    எதிர்பார்த்து காத்துகிடக்க வைக்கறீங்க.. //

    காத்துக்கிடக்கிறதுலயும் ஒரு சொகம் இருக்கும்பாங்களே கேட்டதில்லே.. அதுமாதிரித்தான்னு வச்சிக்குங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11:40 AM

    சேர்மன் சொல்ற பார்ட்டின்னா நல்ல பார்ட்டியாத்தான இருக்கும். அதுல என்னத்த வில்லங்கத்தை எதிர்பார்த்தீங்க. நீங்க சரியான சந்தேகப் பிராணியா இருப்பீங்களோன்னு தோணுது..

    கோச்சிக்காதீங்க. தமாஸ் பண்ணேன்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா11:52 AM

    அறைக்கு வெளியே ‘பிள்ளை’ நின்றுக்கொண்டிருந்தார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? எம்.ஜி.ரை அழைக்க உதவியவர்!//

    நல்லா ஞாபகம் இருக்கு சார். பந்தா பேர்வழின்னு சொன்னீங்களே.. லோன் குடுத்தா திருப்பி கட்டுவாரா? யோசிச்சி செய்யுங்க சார்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் அய்யா,

    கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. தொடருங்கள். ராஜேஷ்குமாரையும் விஞ்சும் எழுத்துத் திறன். சத்தியமாக நீங்கள் பெரிய எழுத்தாளர்தான்.

    பதிலளிநீக்கு
  7. நீங்க சரியான சந்தேகப் பிராணியா இருப்பீங்களோன்னு தோணுது..//

    எல்லா வங்கி மேலாளர்களுக்கும் மிகவும் அவசியமான Qualificationம் Disqualificationம் இந்த சந்தேகம்தான். Police காரங்க சொல்றா மாதிரி An accused is guilty till proved otherwise கடன்வாங்க வருகிறவர்களெல்லாம் மோசடி பேர்வழிகள்தான் அவர்கள் கடனை திருப்பி கட்டும்வரைன்னு நாங்க நினைச்சுக்குவோம். பலநேரங்கள்ல அது உண்மையாவும் மிகச்சில நேரங்கள்ல அது தப்பாவும் இருந்திருக்கு. இந்த சைக்காலஜிய பத்தி தனி பதிவே எழுதி வச்சிருக்கேன். சமயம் வரும்போது போடறேன்.

    பதிலளிநீக்கு
  8. ராஜேஷ்குமாரையும் விஞ்சும் எழுத்துத் திறன். //

    மூர்த்தி இது கொஞ்சம் அதிகமா படலே?

    அவர் கேட்டா மான நஷ்ட வழக்கு போட்டுடப் போறார். நான் வரலை இந்த விளையாட்டுக்கு. அம்பேல்!!

    பதிலளிநீக்கு
  9. ஜோசப் சார்,
    விறுவிறுப்பு குறையாம போகுது தொடர்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா1:52 PM

    TBR , excellent story narration. Waiting to see what happened next

    பதிலளிநீக்கு
  11. இந்தமாதிரி கஷ்டங்கள் எல்லாமே தொடர்ந்து வர்றதாலேதான் அந்தக் காலத்துலேயே 'பட்ட காலிலே படும்'ன்னு எவ்வளோ எளிமையா சொல்லிட்டாங்க.

    பதிலளிநீக்கு
  12. ஆமாங்க துளசி.

    அந்த காலத்துல சொன்னதுல ஏதாவது பொய்த்திருக்கா? கண்ணதாசனோட அர்த்தமுள்ள இந்துமதம் படிச்சிருகீங்களா? அதுல இந்த மாதிரி நிறைய விஷயங்கள சொல்லி விளக்கியிருப்பார்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஜோ.

    எனக்கு தெரிஞ்சதமட்டுமே எழுதுறதனால தப்பிச்சேன். உங்கள மாதிரி இளைஞர்கள் என்னவெல்லாம் எழுதறீங்க? எல்லாமே வாசிக்க நல்லாவும் இருக்கு Informationம் கிடைக்குது.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா2:41 PM

    அவரை குளிர வைக்க நான் போட்ட சோப்பு தான்"

    உங்கள என்னவோன்னு நினைச்சேன். நீங்களும் சோப்பு மன்னன்தானா?

    பதிலளிநீக்கு
  15. உண்மையிலேயே ரொம்ப அற்புதமாக எழுதுறீங்க.

    பதிலளிநீக்கு