மாதவன் நிலைகொள்ளாமல் தன் படுக்கை அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். மனைவியின் செல்பேசியை எடுத்து மீண்டும் ஒரு முறை தொலைந்து போன தன்னுடைய செல்பேசி எண்ணை டயல் செய்தான்.. ‘switched off' என்று வரவே சமாதானமடைந்தான்...
அப்போ வேற எவன் கையிலயும் நம்ம ஃபோன் சிக்கல.... என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான். தன் செல்பேசி பத்திரமாக கடையிலேயே எங்கோ கிடக்கிறது போலும் என்ற நினைப்பே அவனுக்கு நிம்மதியான உறக்கத்தை அளித்தது.
*******
தரகர் கடையிலிருந்து புறப்பட்ட ரவி சிறிது தூரம் சென்றதும் சாலையின் ஓரத்தில் நின்று சாலையின் இருமருங்கிலும் பார்த்தான். மணி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்ததால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலையில் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்து போயிருந்தது.
செல்பேசியை எடுத்து ஆன் செய்தான். ’Insert SIM card' என்றது. அந்தாளோட சிம் கார்ட போடலாமா என்று ஒரு சில நிமிடங்கள் யோசித்தவன், ‘சரி போட்டு பாக்கலாம்... நடுராத்திரியாயிருச்சி...’ என்று நினைத்தவாறே சட்டைபையிலிருந்த மாதவனுடைய சிம்கார்டுகளை எடுத்தான்.. ஆனால் அடுத்த நொடியே இங்க வேணாம் என்று நினைத்தவாறு அங்கிருந்து கிளம்பினான்... மால் இருந்த ஏரியாவுலயே போய் செஞ்சிக்கலாம்... இங்க வச்சி திறந்து திருட்டு போனதுக்கப்புறம் இந்த ஏரியாவுலதான் முதல்ல ஆன் ஆயிருக்குங்கறத பின்னால போலீஸ் கண்டுபுடிச்சா இந்த ஏரியாலவுருக்கற எல்லா கடைகளையும் விசாரிச்சி தரகர் மாட்டிக்கிட்டா நமக்கும் பிரச்சினைதான்....
வாகனத்தை மீண்டும் உயிரூட்டி டிஆர் மால் இருந்த பகுதியை அடைந்து சாலையோரத்தில் மூடிக்கிடந்த கடைகள் ஒன்றின் வாசற்படிகளில் அமர்ந்து தரகர் அலுவலகத்திலிருந்து கொண்டு வந்த ஊசியை பயன்படுத்தி மாதவனின் இரண்டு சிம்களையும் அதில் சொருகி செல்பேசியை ஆன் செய்தான்.
அது உயிர்பெற்று நுழைவு சமிக்ஞை எண்ணை கேட்டதும்... அந்த ஆள் நமக்கு முன்னாலதான அடிச்சான்... என்று எண்ணியவாறு கண்களை மூடி யோசித்தான்.... பிறகு நினைவில் நின்ற எண்ணை தயக்கத்துடன் அடிக்க அவன் சற்றும் எதிர்பாராமல் செல்பேசி அதை ஏற்றுக்கொண்டு திறக்க ஏதோ ஜாக்பாட் அடித்ததுபோல் மகிழ்ந்துபோனான.
செல்பேசியில் ஏராளமான ஆப்கள் (Apps) நிறுவப்பட்டிருந்ததன. அவற்றுள் மூன்று வங்கிகளின் மென்பொருளும் நிறுவப்பட்டிருப்பதை கவனித்தான். ஆனால் அவற்றை திறக்க பாஸ்வேர்ட் அல்லது பின் நம்பர் வேண்டுமே...? செல்பேசியில் இருந்த மற்ற மென்பொருட்களை ஒவ்வொன்றாக மேய்ந்தான்... இறுதி வரிசையில் அவனுடைய கவனத்தை Samsung Notes என்ற மென்பொருள் ஈர்த்தது. திறந்து பார்த்தான். அதில் நிறைய கோப்புகள் இருந்ததை கவனித்தான்.
இதுலருந்துதான அவன் சாமான்க லிஸ்ட்ட பாத்தான்... ? இது நம்ம செல்ஃபோன்லருக்கற மெமோ ஆப் மாதிரி போல...
ஒவ்வொரு கோப்பாக திறந்து பார்த்தான்.... நாலைந்து கோப்புகளுக்கு பிறகு திறந்த கோப்பில் இருந்தவற்றை பார்த்து அவனுடைய கண்கள் விரிந்தன.
‘அடப்பாவி எல்லா பாஸ்வேர்டையும் இப்படியா ஒருத்தன் ஒரே ஃபைல்ல சேத்து வைப்பான்?’
இதுல எது பேங்கிங் ஆப் பாஸ்வேர்டா இருக்கும் என்ற சிந்தனையுடன் அந்த கோப்பில் இருந்த அனைத்து விவரங்களையும் ஒன்று விடாமல் வாசித்தான். இறுதியில் அவன் நினைத்தவாறே செல்பேசியில் நிறுவப்பட்டிருந்த மூன்று வங்கிகளுடைய மென்பொருளை பயன்படுத்த தேவையான பின் நம்பர்களும் அதில் சேமிக்கப்பட்டிருந்ததை கண்டு மகிழ்ந்தான்.
சுற்றும் பார்த்தான். ஓரிரண்டு வாகனங்கள் இடமும் வலமும் சென்றதை தவிர சாலை வெறிச்சோடி இருந்தது... ஆனால் மிக அருகாமையில்தான் புறநகர் மின்வண்டி நிலையம் இருந்ததால் அந்த நள்ளிரவிலும் சாலையில் ஆள் நடமாட்டம் இருந்தது. தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு கோப்பிலிருந்த நுழைவு பின் எண்களை பயன்படுத்தி ஒவ்வொரு வங்கியிலும் மாதவன் வைத்திருந்து கணக்குகளுக்குள் நுழைந்து வெளியேறினான். அந்த மூன்று வங்கி கணக்குகளிலும் சேர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேல் இருப்பு இருந்ததை கவனித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.
அங்கிருந்து எழுந்து வாகனத்தில் ஏறி சற்று தூரம் சென்று பக்கவாட்டிலிருந்த குறுகிய சாலையில் நுழைந்து மூடிக்கிடந்த பெட்டிக் கடை வாசலில் அமர்ந்து யோசித்தான். தான் செய்ய போவதின் தீவிரம் அவனை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்தது..... ஆனால் ஒரு சில நிமிடங்களில் அவன் சற்று முன்பு எடுத்த முடிவின் படியே செய்யலாம் என்று மீண்டும் முடிவு செய்து ஒவ்வொரு வங்கியிலிருந்தும் இருபத்தையாயிரம் ரூபாயை தன்னுடைய வங்கி கணக்குக்கு மாற்ற முடிவு செய்தான்.
வேணாம் ரவி... உன் கணக்குல உன்ன பத்திய எல்லா டீட்டெய்லும் இருக்குமே... ஆதார் ஒன்னே போறாது ஒன்னெ காட்டிக்குடுக்க? மாட்டிக்கிட்டா என்னாவறது...? ஒன் வய்ஃப நினைச்சி பாத்தியா? நீ மாட்டிக்கிட்டு ஜெயிலுக்கு போனா அவங்க என்ன பண்ணுவாங்க? என்று மனசாட்சி இடித்தது...
அதை புறக்கணித்துவிட்டு அவன் நினைத்ததை செய்து முடிக்க தீர்மானித்தான். ஆதார் கார்டிலிருந்து அவனுடைய அந்த சமயத்தில் அவன் குடியிருந்த வீட்டின் விலாசம்தான் கிடைக்கும் என்பது அவனுக்கு தெரியும்.... அந்த வீட்டிலிருந்து கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு வீடு மாறியிருந்தான். எந்த வீட்டு உரிமையாளருக்கும் அவன் மாறிச் சென்ற வீட்டின் விலாசம் தெரிய வாய்ப்பில்லை... ’அதனால அத வச்சி நம்மள ட்ரேஸ் பண்ண சான்ஸ் இல்ல....’
அப்போ மால்ல இருக்கற காமரா? அத ஒன்னெ காட்டிக்குடுத்துட்டா? என்றது மனசாட்சி...
அவனையுமறியாமல் அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தன. அதற்கும் அவனிடம் பதிலிருந்தது. பின்னந்தலையில் லேசாக விழத் துவங்கியிருந்த வழுக்கையை மறைக்க எப்போதும் தலையில் அணிந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் தொப்பி அவனை அத்தனை எளிதில் அடையாளம் காட்டிவிடாது என்று நினைத்தான்.... ’அதுவரைக்கும் நாம சென்னையில இருந்தாத்தான?’ எழுபத்தையாயிரம் ருபாய்க்காக காவல்துறை இத்தனை மெனக்கெடுமா என்றும் நினைத்தான்.... ’இந்த செல்ஃபோன கையில வச்சிருந்தாத்தான பிரச்சினை...? வேலைய முடிச்சிட்டு சிம் கார்ட டெஸ்ட்ராய் பண்ணிருவோம்... செல்ஃபோன switch off பண்ணிட்டு கூவத்துல தூக்கி போட்றுவோம்.... IMIE நம்பர வச்சிருந்தா கூட போலீசால என்ன பண்ண முடியும்?
அவன் நினைத்தபடியே பணத்தை அவன் வங்கி கணக்குக்கு IMPS (Immediate Payment Service) முறையில் மாற்றுவதற்கு ஏதுவாக தன்னுடைய வங்கி கணக்கு விவரங்களை ஒவ்வொரு வங்கி மென்பொருளிலும் பதிவு செய்ய முயற்சி செய்தான், ஆனால் முடியவில்லை. செல்பேசியில் டேட்டா இல்லையா அல்லது இரவு நேரங்களில் இவற்றை செய்வதற்கு வங்கிகள் அனுமதிக்காதா என்று தெரியவில்லை.. வேறு வழியின்றி, காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் செல்பேசியை அணைத்து அங்கிருந்து புறப்பட்டு வழியில் திறந்திருந்த ஒரு சிற்றுண்டி உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு தங்கியிருந்த மேன்ஷனை அடைந்தான். .
அவன் அறையை சென்றடைந்த போது அவனுடன் குடியிருந்தவர்கள் அனைவருமே உறங்கிவிட்டிருந்ததால் உடையையும் மாற்றாமல் படுக்கையில் விழுந்தான்.
***
அடுத்த நாள் காலை மாதவனுக்கும் ரவிக்கும் வழக்கம் போல் மலர்ந்தது.
இருவரும் அந்த நாள் தங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்தனர்.
மாதவனுக்கு தொலைந்துபோன தன்னுடைய செல்பேசி தன்னுடைய மனைவிக்கு தெரிய வருவதற்குள் மீட்டு விட வேண்டும். ரவிக்கோ மாதவன் போலீசுக்கு செலவதற்கு முன்பு அவனுடைய வங்கி கணக்குகளிலிருந்த பணத்திலிருந்து தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு சென்னையை விட்டு வெளியேறிவிட வேண்டும்....
மாதவன் காலையிலேயே எழுந்து குளித்து உடைமாற்றிக்கொண்டு கிளம்பினான். ’மால் தொறக்கும்போதே நாம அங்க இருந்தாகணும். வேலை செய்றவங்க எல்லாரும் வர்றதுக்குள்ள நாம போயிறணும்.. அப்பதான் அங்க எங்கயாவது நம்ம ஃபோன் விழுந்துகிடந்தா எடுத்துக்க முடியும்.’
‘என்னங்க காலையிலயே கிளம்பிட்டீங்க? டிஃபன் கூட இன்னும் ரெடியாகலையே?’
‘இல்ல ஷாமிலி.. இன்னைக்கி ஆஃபீஸ்ல அர்ஜெண்டா ஒரு ப்ராஜக்ட முடிச்சி டெலிவரி குடுக்கணும்... காலையிலயே வந்துருங்கன்னு நேத்து ராத்திரியே டீம் லீடர் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்... எல்லாரும் போயி நா மட்டும் போகலின்னா நல்லாருக்காது... டிஃப்ன போற வழியில பாத்துக்கறேன்.’
‘சரி...போய்ட்டு வாங்க.’
இத்தோடு விட்டாளே என்று நினைத்தவனாய் மாதவன் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி விரைந்தான்...
சற்று தூரம் சென்றதும் தான் மனைவியின் செல்பேசியை வாங்காமல் வந்துவிட்டோமே என்று தோன்றியது... ஆனாலும் திரும்பி வீடுவரை சென்று வந்தால் நேரமாகிவிடும் என்ற எண்ணமும் தோன்ற சரி பார்த்துக்கொள்ளலாம் என்று காலை நேர நெரிசலில் கலந்து டிஆர் மாலை நோக்கி வாகனத்தை முடுக்கினான்.
ஆனாலும் அவன் மாலை அடைந்தபோது மணி ஒன்பதைக் கடந்திருந்தது.
******
ரவி கண் விழித்தபோது அவனுடைய அறை சகாக்களில் அவனுடைய நண்பனைத்தவிர மற்ற இருவரும் அலுவலகத்திற்கு சென்றுவிட்டிருந்தனர்.
‘என்னடா ரொம்ப சாவகாசமா எழுந்துக்கறே....’ என்ற நண்பன் ஏளனத்துடன் சிரித்தான். ‘சாருக்குதான் வேல வெட்டி எதும் இல்லையே....சரி...நேத்து இண்டர்வ்யூவுக்கு போனியே என்னாச்சி?’
ரவி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். ‘டேய்... மாசம் முழுசும் முக்கி முக்கி வேலை செஞ்சா ஒனக்கு எவ்வளவு கிடைக்கும்?’
’என்ன ஒரு பதினைஞ்சாயிரம் கிடைச்சா லாபம்... ஏன் எதுக்கு கேக்கற?’
‘ஐயாவுக்கு ஸ்டார்ட்டிங்லயே நாப்பதாயிரத்துல வேல கிடைச்சிருச்சி... இன்னும் ரெண்டு வாரத்துல ஜாய்ன் பண்ணணும்.. ரெண்டு நாள்ல ஆஃபர் லெட்டர் வந்துரும்...’
ரவியின் நண்பனுடைய கண்கள் வியப்பால் விரிந்தன. ‘எந்த கம்பெனிடா?’
‘சஸ்பென்ஸ்... ஆஃபர் லெட்டர் வந்ததும் காமிக்கறேன்... நீயே பாத்துக்கோ..’
‘சரிடா... நா கெளம்பறேன்... அப்ப இன்னைக்கி முழுசும் ஃப்ரீதானே?’
ரவி எழுந்து தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். ஒனக்கு என்ன வருதோ இல்லையோ நல்லா பொய் சொல்ல வருது என்றது அவனுடைய பிம்பம்.
‘இல்லடா... நானும் கிளம்ப வேண்டியதுதான்.... ஊருக்கு போயி வய்ஃப மறுபடியும் கூட்டிக்கிட்டு வரணும்.. ஆஃபர் லெட்டர பாத்தாத்தான் அவ நம்புவா. நா திரும்பி வந்ததும் ஒன்னெ வந்து பாக்கறேன்...’
‘அப்ப ஒன் பைக்?’
‘இங்கேயே இருக்கட்டும்... கொஞ்சம் பர்சேஸ் பண்ணணும்... நா போறப்போ சாவிய ரிசம்ஷன்ல குடுத்துட்டு போறேன்... நா வரற் வரைக்கும் நீ வேணும்னா யூஸ் பண்ணிக்கோ...’
‘சரிடா... நா கெளம்பறேன்.;
நண்பன் அறையிலிருந்து வெளியேறியதும் ரவி பரபரப்படைந்தான்.... குளித்து உடைமாற்றிக்கொண்டு கிளம்பினான். இங்க வச்சி ஃபோன ஆன் பண்ண வேணாம்...மறுபடியும் மால் இருந்த ஏரியாவுக்கே போயிருவோம்... அவன் எப்படியும் காலைல எழுந்ததும் போலீசுக்குத்தான் போவான்... ஆனா பத்து பதினோரு மணிக்கு முன்னால அவன் கம்ப்ளெய்ண்ட் மேல ஆக்ஷன் எதுவும் எடுக்கறதுக்கு சான்ஸ் இல்ல....
அவன் மால் இருந்த பகுதியை அடைந்தபோது மணி ஒன்பதை கடந்திருந்தது..
தொடரும்..
ஆஹா இருதுருவங்களும் மால் ஏரியாவுக்கு வருகின்றன... எதிர்பாராமல் சந்தித்து சண்டை வரலாமோ ?
பதிலளிநீக்குஇருப்பினும் பைக் வைத்து இருக்கும் ரவி அதை நண்பனிடம் கொடுத்து விட்டு, ஓடநினைப்பது வெறும் எழுபத்து ஐந்தாயிரத்துக்காகவா ?
அமௌண்டை உயர்த்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
தொடர்கிறேன் ஐயா...
எழுபத்தையாயிரம் ருபாய்க்காக காவல்துறை இத்தனை மெனக்கெடுமா என்றும் நினைத்தான்.... ’//
பதிலளிநீக்குவாங்க ஜி!
இதுதான் உங்களுடைய கேள்விக்கான பதில். இதற்கு மேல் எடுத்தால் காவல்துறை விடாது என்று நினைத்திருப்பான்.இல்லையென்றால் கணக்கில் இருந்த மொத்த தொகையையும் எடுத்திருப்பானே?
ஓஹோ... ஆக இவன் பணத்தை ஜாலியாக செலவு செய்த பிறகு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதே திட்டம் இல்லையா...
நீக்குசரிதான்.
கரெக்ட்.... அதுதான் அவனுடைய திட்டம். எந்த திருடன் இதுதான் கடைசி திருட்டு... இனி திருட மாட்டேன் என்று திருந்தியிருக்கிறான்....? ஒரு முறை திருடிவிட்டால் அந்த பழக்கம் போகவே போகாது என்பார்கள்....
நீக்குஎந்தக்கதையும்முழுவதும்கற்பனைஇல்லை முழுவதும் நிஜமும் இல்லை இரண்டும்கலந்ததுதான்
பதிலளிநீக்குஎந்தக்கதையும்முழுவதும்கற்பனைஇல்லை முழுவதும் நிஜமும் இல்லை இரண்டும்கலந்ததுதான்//
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது முற்றிலும் சரியே ஜிஎம்பி சார் .
எல்லா பின்னூட்டங்களுக்கும் நீங்கள் பட்டுக்கொள்ளாமல் பதில் சொல்வதிலிருந்து எழுதுவதில் நீங்கள் வேறு என்னவோ திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. தொடர்கிறேன். இருவரும் ஒரே நேரம், ஒரே இடத்தில இருக்கிறார்கள். பார்ப்போம், என்ன நடக்கிறது என்று.
பதிலளிநீக்குநீங்கள் வேறு என்னவோ திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.//
நீக்குபெரிய திட்டமெல்லாம் இல்லை ஸ்ரீராம். சும்மா சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னுதான்:)
அடுத்து என்ன நடக்குமோ என்று யோசிக்க வைத்து வெற்றி கண்டுவிட்டீர்கள். . ஒரு மர்மக் கதையை படிப்பதுபோல் உணர்ந்தேன். . இந்த கதையை படிப்பவர்கள் நிக்சயம் அவர்களது கைப்பேசியில் வங்கியின் கடவுச்சொற்களை சேமித்து வைக்கமாட்டார்கள். வைக்கக்கூடாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்திவிட்டீர்கள். பாராட்டுகள்!
பதிலளிநீக்குஇந்த கதையை படிப்பவர்கள் நிக்சயம் அவர்களது கைப்பேசியில் வங்கியின் கடவுச்சொற்களை சேமித்து வைக்கமாட்டார்கள். வைக்கக்கூடாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்திவிட்டீர்கள். //
பதிலளிநீக்குஉண்மை தான் சார். செல்பைசியைத் தொலைப்பது நம்மையே தொலைத்துவிடுவதற்கு சமம் என்று கனடாவில் வழங்கப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததைப் படிக்க நேர்ந்தது. ஆகவே அத்தகைய திருட்டுகளை சாதாரண திருட்டாக கருதமுடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.