10 மே 2013

மருத்துவர் மீது அம்மாவுக்கு அப்படி என்ன கோபம்?


கணேஷ்: என்ன ஜோசப், இந்த வாரம் டிஸ்கஸ் பண்றதுக்கு நிறைய விஷயம் இருக்கு போலருக்கு?

ஜோசப்: ஆமா கணேஷ். மேல நார்த்லருந்து கீழ தமிழ்நாடு வரைக்கும் ஒரே பிரச்சினையால்ல இருக்கு! இப்படியொரு இக்கட்டான நிலைமையில எந்த சென்ட்ரல் கவர்ன்மென்ட்டும் மாட்டிக்கிட்டு முழிச்சதுல்லன்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க பாய்?

ரஹீம்: (சலிப்புடன்) ஆமா ஜோசப். பேப்பர தொறந்தாலே ஏன்டா தொறந்தோம்னு இருக்கு.

கணேஷ்: முதல்ல இந்த காஷ்மீர் ஜெயில்ல பாக்கிஸ்தான் கைதி ஒருத்தர அடிச்சி கொன்னுட்டாங்களே அதப் பத்தி பேசுவோம். இது ஏதோ பழிக்குப் பழிங்கறா மாதிரில்ல இருக்கு? 

ரஹீம்: இதெல்லாம் திட்டம் போட்டு பண்றாங்கய்யா. அதான் நா போன வாரமே சொன்னேனே? ரெண்டு நாடும் சமாதானமா இருக்கறத புடிக்காத யாரோதான் இந்த மாதிரி செய்யிறாங்க.

ஜோசப்: அப்படியெல்லாம் சொல்லிற முடியாது பாய். இது ஒரு சாதாரண ஹ்யூமன் ரியாக்‌ஷன்னுதான் நா சொல்லுவேன். அங்க அடிபட்டு இறந்துபோனவர் நம்ம நாட்டுக்காரர். அவரோட சாவுக்கு  பழிவாங்கனும்னு இங்க இருக்கறவங்க நினைக்கறதுல என்ன தப்பு? அதுவும் ஜெயில்ல இருக்கறவங்களோட மனநிலை இப்படித்தான் இருக்கும் பாய். இதுல சம்மந்தப்பட்டிருக்கற கைதி ஒருத்தரோட தன்னிச்சையான செயல்னுதான் சொல்லணும். ஆனா இப்படியொரு சம்பவம் பாக்கிஸ்தான் ஜெயில்ல நடந்துருக்கறப்ப இங்க நம்ம நாட்டு ஜெயில்ல இருக்கற பாக்கிஸ்தான் கைதிகளுக்கு இந்த மாதிரி ஏடாகூடமா நடக்கறதுக்கு சான்ஸ் இருக்குன்னு சம்மந்தப்பட்ட ஜெயில் அதிகாரிங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். அவங்களோட அஜாக்கிரதையும் இதுக்கு ஒரு காரணம்னு சொல்லலாம். மத்தபடி இதுல வேற எந்த காரணத்தையும் என்னால பாக்க முடியல.

கணேஷ்: நீங்க சொல்றதுதான் சரின்னு நானும் நினைக்கறேன். இனிமேலயும் இந்த மாதிரி இன்சிடென்ஸ் நடக்காம ரெண்டு நாட்டு அதிகாரிங்களும் உஷாரா இருந்தா சரி.

ஜோசப்: பாக்கிஸ்தான்ல நடக்கற எலெக்‌ஷன் ட்ரென்ட் எப்படி இருக்கு பாய்? ஏதாச்சும் ஒங்களுக்கு தெரியுதா? 

ரஹீம்: (சிரிக்கிறார்) என்ன ஜோசப் நீங்களுமா? கணேஷ்தான் என்னெ பாக்கிஸ்தான்காரர்னு நினைச்சிக்கிட்டு இருக்கார்னு நினைச்சேன். 

ஜோசப்: இல்ல... சும்மா ஒரு கேலிக்கித்தான் கேட்டேன். சரி சீரியசா கேக்கறேன். அங்க யார் ஜெயிப்பான்னு நினைக்கறீங்க?

ரஹீம்: ஒன்னும் ஷுவரா சொல்ல முடியல. முஷராஃப் நாமினேஷன ரிஜெக்ட் பண்ணிருவாங்கன்னு யார் எதிர்பார்த்தா? 

கணேஷ்: இதுக்கிடையில் இம்ரான்கான் ஸ்டேஜ்லருந்து கீழ விழுந்து சீரியாசா இருக்கார்னு சொன்னாங்க. அப்புறம் அவர் ஹாஸ்ப்பிடல் பெட்லருந்தே கேன்வாஸ் பண்றார். இதெல்லாம் சிம்பதி க்ரியேட் பண்றதுக்காக அடிக்கற ஸ்டன்டாருக்குமோ?

ரஹீம்: யோவ்.. சும்மா ஏதாச்சும் சொல்லணுமேன்னு சொல்லாதய்யா. அதான் நேரடியா அவர் கீழ விழறதையே டிவியில காட்டுனானே. அத பாத்தா ஸ்டன்ட் மாதிரியா இருக்கு?

கணேஷ்: (சிரிக்கிறார்) எதுக்கு பாய் ஒங்களுக்கு இவ்வளவு கோவம் வருது? நீங்கதான் அந்த நாட்டுக்காரர் இல்லையே?

ஜோசப்: (குறுக்கிட்டு) சரி, சரி. இது போறாதுன்னு இப்போ நவாப் ஷெரீஃப் வேற புதுசா ஒரு அறிக்கை விட்டுருக்காரே பாத்தீங்களா?

கணேஷ்: ஆமா பாத்தேன். அதுவும் ஒரு ஸ்டன்ட்தான். என்னவோ இவர் இந்தியா மேல ரொம்ப பாசமா இருக்காராம். இது எதுக்கு தெரியுமா?

ரஹீம்: (எரிச்சலுடன்) அதையும் நீங்களே சொல்லுங்க. நீங்கதான் பாக்கிஸ்தான் எக்ஸ்பேர்ட்டாச்சே.

கணேஷ்: (சிரிக்கிறார்) கோவப்படாதீங்க பாய். எல்லாமே ஒரு பேச்சுக்குத்தான? நா என்ன சொல்ல வர்றேன்னா, பாக்கிஸ்தான்ல இருக்கற சாதாரண ஜனங்களுக்கு இன்டியன்ஸ் மேல எந்த வித வெறுப்போ கோபமோ இல்ல. அவங்களுக்கு இந்தியாவோட நட்பா இருக்கணும்னுதான் ஆசை. இத இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா அங்கருக்கற பொலிட்டிக்கல் லீடர்ஸ் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்காங்கன்னு நினைக்கறேன். அதான் நவாப் ஷெரீஃப் அவங்கள கவர் பண்றதுக்காக இப்படியொரு அறிக்கைய வெளியிட்டிருக்கார். அதாவது நா ஜெயிச்சி வந்தா இந்தியாவோட சமாதானமா இருப்பேன், அதனால உள்நாட்டுல இனி எந்த வித பெரிய தீவிரவாத கலவரமும் இல்லாம பீஸ்ஃபுல்லா இருக்கும்னு சொல்றார். ஆனா அது தாலிபான் மாதிரி தீவிரவாதிகள் கும்பல்கள உசுப்பேத்தி விடவும் சான்ஸ் இருக்குங்கறத அவர் மறந்துட்டார் போலருக்கு. 

ஜோசப்: அது மட்டுமில்ல இந்த மாதிரி சமரசங்களுக்கு அங்க இருக்கற ஆர்மி தயாரா இருக்கான்னு தெரியலையே. சரி பாய். இப்ப சொல்லுங்க அங்க எந்த கட்சி ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்குன்னு நீங்க நினைக்கறீங்க?

ரஹீம்: இதுவரைக்கும் நடந்த எலெக்‌ஷன்ல எல்லாம் இப்ப ஆட்சியிலருக்கற பாக்கிஸ்தான் மக்கள் கட்சி, போன தடவ ஆட்சியிலிருந்த நவாப் ஷெரீஃப் கட்சி, இவங்க ரெண்டு பேருக்குள்ளதான் போட்டி இருந்துது. ஆனா இந்த தடவ இம்ரான் கான் நாடு முழுசும் பயங்கர ஆவேசத்தோட டூர் பண்ணி பேசியிருக்கார். அவர் பேச்சுல இருக்கற நியாயத்த யங்கர் ஜெனரேஷன் ஓட்டர்ஸ் அப்படியே ஏத்துக்கறாங்கன்னு கேள்வி. அத்தோட எலக்‌ஷன் மீட்டிங்ல எதிர்பாராத விதமா ஏற்பட்ட இந்த ஆக்சிடென்ட் வேற அவருக்கு நிறைய சிம்பத்தி ஓட்டுகள குடுத்துரும் போலருக்கு. அதனால இந்த தடவ இவங்கதான் ஜெயிப்பாங்கன்னு தெளிவா சொல்ல முடியல. அப்படி ஒருவேளை யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கலைன்னா பெனாசீர் கட்சியும் நவாப் ஷெரீப் கட்சியும் சேர்ந்து கூட்டணி வச்சிக்க வாய்ப்பு இருக்கு. ஏன்னா அவங்க ரெண்டு பேருக்குமே இம்ரான்கான் மேல தனிப்பட்ட வெறுப்பு இருக்குன்னு பேசிக்கறாங்க.

ஜோசப்: சூப்பரா சொல்லிட்டீங்க பாய். நீங்க சொன்னதையேத்தான் பிபிசியும் அவங்க ரிப்போர்ட்ல சொல்லியிருக்காங்க. நம்ம நாட்டுல மாதிரியே இனி அங்கயும் கூட்டணி ஆட்சிதான் போலருக்கு. 

கணேஷ்: அதுலயும் நல்ல விஷயங்கள் நடக்க சான்ஸ் இருக்கு. 

ரஹீம்: என்னய்யா நல்ல விஷயம்? இப்பவும் எதாவது எடக்கு பேசுவியே?

கணேஷ்: (கேலியுடன்) அவங்களுக்குள்ளவே அடிச்சிக்கிட்டு நம்மள மறந்துருவாங்க இல்ல? அது நமக்கு நல்ல விஷயந்தான?

ரஹீம்: (எரிச்சலுடன்) அதான பாத்தேன். இப்படி எதையாச்சும் சொல்லி என்னெ கடுப்படிக்கறதே ஒமக்கு சோலியா போச்சிய்யா.

ஜோசப்: சரி, சரி. ஒங்க ரெண்டு பேரோட சண்டைய தீக்கறதே எனக்கு சோலியா போச்சி. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.

கணேஷ்: நம்ம விஷயம்னா? தில்லியில நடக்கறதா?

ஜோசப்: அத கடைசியா வச்சிக்கலாம். இங்க நம்ம மருத்துவர இன்னமும் ரிலீஸ் பண்ணாம இருக்காங்களே?

ரஹீம்: ஆமா ஜோசப். எப்பவோ போட்ட கேசுங்களுக்கெல்லாம் இப்ப புக் பண்ணி அவர வேணும்னே டார்ச்சர் பண்றா மாதிரி இருக்கு.

கணேஷ்: இருந்தாலும் அவர் சொல்றா மாதிரி எதுவுமே பொய் கேஸ் இல்லையே? சட்டத்த மீறி போராட்டம் பண்றது, போலீஸ் போகாதீங்கன்னு சொல்ற எடத்துக்கு வேணும்னே போறது, பத்து மணிக்கி மேல கூட்டம் போடாதீங்கன்னா என்னா பெரிய விஷயம் கேஸ்தான போடுவீங்க, போட்டுக்குங்கன்னு வீராப்பா பேசறது... இதெல்லாம் தப்புதானே பாய்? ஒரு பொறுப்புள்ள கட்சி தலைவரே இப்படியெல்லாம் செஞ்சா அப்புறம் பாமர தொண்டர்கள எப்படி குத்தம் சொல்றது?

ரஹீம்: இந்த மாதிரி குத்தங்கள எந்த கட்சி தலைவர்தான் செய்யல? ஏன் போலீஸ் தடையையும் மீறி வைகோ போயி கூடங்குளத்துல பேசலையா? இவ்வளவு ஏன், இதுக்கெல்லாம் மூல காரணமா இருக்கற உதயகுமார கைது பண்ணாங்களா? அவர் மேல இல்லாத கேசாய்யா இவர் மேல இருக்கு? எல்லாம் டர்ட்டி பொலிட்டிக்ஸ்ம்பாங்களே அதான், வேற ஒன்னும் இல்ல. அவர் மேல அம்மாவுக்கு என்ன கோபமோ, யார் கண்டா?

ஜோசப்: ஆனா அன்புமணி எல்லா கேஸ்லருந்து எந்த கண்டிஷனும் இல்லாம பெய்ல் குடுத்துட்டாங்களாமே?

ரஹீம்: அதான் ஜோசப் நானும் சொல்றேன். அவர் மேல இவங்களுக்கு என்ன கோவமோ இப்படி பழி தீத்துக்குறாங்க.

கணேஷ்: ஆனா ஒன்னு கவனிச்சீங்களா பாய்? அன்புமணி காடுவெட்டி குரு கூட்டத்துல பேசின விதமும் எங்க கட்சிகாரங்க மகாபலிபுர ரதக் கோயில் மேல ஏறி கொடி ஏத்துனதும் தப்புத்தான் அதுக்கு நா மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொன்னாராமே? அதான் கண்டிஷன் ஏதும் வைக்காமே இங்க திநகர் போலீஸ் ஸ்டேஷன்ல போயி கையெழுத்து போட்டா போறும்னு ரிலீஸ் பண்ணிட்டாங்க. ஆனா கு.க.மணிய ராமநாதபுரத்துலதான் இருக்கணும்னு சொல்லிட்டாங்களாம். அவர்தான் அவங்க கட்சி தொண்டர்ங்கள தூண்டி விடறார்னு ஜட்ஜ் நினைச்சிருப்பர் போலருக்கு.

ஜோசப்: இருக்கும். உங்கள வெளியில விட்டா மறுபடியும் ஒங்க கட்சிக்காரங்கள தூண்டிவிட்டு கலவரம் பண்ணமாட்டிங்கன்னு என்ன உத்தரவாதம்கறா மாதிரி ஜட்ஜே கேட்டாராமே?

ரஹீம்: நானும் படிச்சேன். ஆனாலும் மரக்காணத்துல நடந்த கலவரத்துக்கு ஒரு கட்சிய மட்டும் குத்தம் சொல்றது சரியில்ல ஜோசப். என்ன சொல்றீங்க?

ஜோசப்: நானும் சொல்லணும்னு நினைச்சேன். நீங்களே சொல்லிட்டீங்க. சரி. இப்ப தில்லியில நடக்கறத பாப்போம். நீங்க சொல்லுங்க கணேஷ். இந்த நிலக்கரி ரிப்போர்ட் விஷயத்துல லா மினிஸ்டரும் PMO அதிகாரிங்களும் நடந்துக்கிட்ட விதம் சரியா?

கணேஷ்: (கோபத்துடன்) நிச்சயமா சரியில்லீங்க. அதெப்படி சிபிஐ இன்வெஸ்ட்டிகேஷன் ரிப்போர்ட்ல அதுல சம்மந்தப்பட்ருக்கற டிப்பார்ட்மென்ட் ஆளுங்களே கைய வைக்கறது? திருடன் கிட்டவே அவன் மேல போட்ட FIRஅ காமிச்சி இது சரியா இருக்கான்னு பாருய்யாங்கறா இல்ல இருக்கு? இத்தன வருசத்துல இப்படியொரு கேவலமான சம்பவம் நடந்ததே இல்லையே. அந்த விஷயத்துல சுப்ரீம் கோர்ட் ரொம்ப டேமேஜிங்கா அப்சர்வேஷன் செஞ்சதுக்கப்புறமும் அவர காபினெட்லருந்து நீக்கறதுக்கு இவ்வளவு யோசிக்கணுமா? எதுலதான் டிலே பண்றதுன்னு இல்லையா? இப்படியொரு பிஎம் நமக்கு தேவையா?

ஜோசப்: (சிரிக்கிறார்) நீங்க என்ன கணேஷ் சுஷ்மா ஸ்வராஜ் மாதிரி பொறிஞ்சி தள்றீங்க? ஆனா நீங்க சொல்றதும் நியாயம்தான். இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா சோனியாவே லா மினிஸ்டர ரிமூவ் பண்ணணும்னு ஃபீலர் விட்டுருக்காங்க. ஆனா பிஎம்தான் டிசைட் பண்ண முடியாம தடுமார்றார்னு நினைக்கறேன். 

ரஹீம்: சரிங்க. அவர் விஷயம் அப்படீன்னா இந்த ரயில்வே மினிஸ்டர் பன்சால் விஷயத்துலயாவது உடனே எதையாச்சும் முடிவெடுத்தாங்களா? அதையும் சொதப்பிக்கிட்டேதான இருக்காங்க?

கணேஷ்; வெக்கக் கேடுய்யா. ஒரு சென்ட்ரல் மினிஸ்டரோட சொந்த மருமகனே நேரடியா லஞ்சம் வாக்கறப்ப மாட்டிக்கிட்டார். கேட்டா எனக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லைன்னு மினிஸ்டர் சொல்லிட்டாராம். அதக் கேட்டுக்கிட்டு இப்பத்தைக்கு அவர் மேல எந்த நடவடிக்கையும் வேணாம்னு பிஎம் சொல்றாராம். இதுலயும் சோனியாவுக்கும் அவருக்கும் இடையில டிஃபரன்ஸ் ஆஃப் ஒப்பீனியன் இருக்கும் போலருக்கு.

கணேஷ்: நீங்க என்ன பாய், அதத்தான் போன ரெண்டு நாளா தில்லியிலருக்கற டிவி சானல்ல எல்லாம் கிழிகிழின்னு கிழிச்சிட்டாங்களே, லஞ்சம் வாங்குனவருக்கும் பன்சாலுக்கும் நெருங்குன தொடர்பு ரொம்ப நாளாவே இருக்குன்னு. அது மட்டுமா? மினிஸ்டரோட ரெக்கமன்டேஷன்ல ஒரு பப்ளிக் செக்டர் பேங்க் போர்ட்ல ஒருத்தர மெம்பரா ஆக்குனதும் அவர் மினிஸ்டரோட ஃபேமிலிக்கி கோடி கணக்குல லோன் குடுக்க வச்சதும். கேக்கறதுக்கே கேவலமா இருக்கு பாய். காங்கிரஸ் பேரியக்கம்னு சொல்லிக்கறத விட்டுப்போட்டு ஊழல் பேரியக்கம்னு வச்சிக்கலாம். 

ஜோசப்: (சிரிக்கிறார்) கணேஷ். நீங்க பிஜேபிகாரங்கள விட ஆக்ரோஷமா பேசறீங்க. பேசாம அவங்க கட்சியில சேந்துருங்க.

கணேஷ்: புதுசா வேற சேரணுமா? நா இப்பவே பிஜேபிதானங்க. உங்களுக்கு இதுவரைக்கும் தெரியலையா? அடுத்த ஆட்சி நம்மளுதுதாங்க. அப்புறம் பாருங்க.

ரஹீம்: (கேலியுடன்) என்ன நாட்டுல பாலும் தேனும் ஓடுமா? அடப்போய்யா. அதான் ஒரு அஞ்சி வருசம் ஆட்சி பண்ணீங்களே பாக்கல? அதுக்கு மேல தாக்கு புடிக்க முடியாமத்தான அடுத்த எலக்‌ஷன்ல தோத்தீங்க?

ஜோசப்: சரி கணேஷ். இவ்வளவு பேசறீங்களே நம்ம பக்கத்துலருக்கற கர்நாடகாவுலயே ஒங்க ஆட்சிய தக்க வச்சிக்க முடியலையே, ஏன்?

கணேஷ்: (சலிப்புடன்) என்ன ஜோசப் பண்றது? எல்லாம் அந்த எட்டியும் ரெட்டியும் பண்ண விஷயம்தான். அவனுங்க எல்லாத்தையும் செஞ்சிட்டு கட்சியவிட்டு போய்ட்டானுங்க. அவனுங்க பண்ணதுக்கு கட்சிக்கு அடி.

ரஹீம்: (சிரிக்கிறார்) எட்டியும் ரெட்டியும். நல்லா ரைமிங்கா இருக்கு கணேஷ். ஆனா ஒன்னு ஒங்க ரெண்டு கட்சிங்களுக்கும் கிடைச்ச அடி மரண அடி. அதுலருந்து ஒங்களால எழுந்திரிக்கவே முடியாது.

ஜோசப்: (குறுக்கிட்டு) சரி பாய். மறுபடியும் அவர உசுப்பேத்தி விடாதீங்க. ஆனா இந்த விக்டரிய ராகுல் காந்திக்கு கிடைச்ச விக்டரியா காங்கிரஸ் டாம், டாம் பண்றதும் சரியில்லான்னு நினைக்கறேன். இது முழுக்க முழுக்க பிஜேபிக்கி எதிரா விழுந்த ஓட்டு, அவ்வளவுதான். அவங்களுக்கு மாற்றா அங்க காங்கிரச தவிர வேற கட்சி இல்லாததாலத்தான் அவங்களுக்கு ஜனங்க ஓட்டு போட்ருக்காங்க. இத புரிஞ்சிக்காம காங்கிரஸ் மெத்தனமா இருந்தா அடுத்த பார்லிமென்ட் எலக்‌ஷன்லயே ஜனங்க தங்களோட சுயரூபத்த காட்டிருவாங்க. 

கணேஷ்: கரெக்டா சொன்னீங்க ஜோசப். இதான் உண்மை. கர்நாடகாவுல எதனால பிஜேபி தோத்துதோ அதையேத்தான் சென்ட்ரல்ல காங்கிரஸ் செஞ்சிக்கிட்டிருக்கு. அதனால கர்நாடகா எலக்‌ஷன் ரிசல்ட்ட எந்த விதத்துலயும் வரப்போற பார்லிமென்ட் எலக்‌ஷனுக்கு முன்மாதிரியா எடுத்துக்க முடியாது. என்ன சொல்றீங்க?

ஜோசப்: கரெக்ட். வேற ஏதாச்சும் பேச இருக்கா? இல்லன்னா இந்த வாரம் இத்தோட போறும். 

கணேஷ்: இது போறும்னு நினைக்கறேன். என்ன பாய்?

ரஹீம்: (கேலியுடன்) நீ சொன்னா அதுக்கு அப்பீலே இல்லைய்யா. அடுத்த வாரம் மீட் பண்ணுவோம்.


***********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக