06 ஆகஸ்ட் 2010

நாமம் போட்டு பேயை விரட்டும் கிராமம்!

என்று அகலும் இந்த மூட நம்பிக்கை!!

சமீப காலமாக நாட்டுப்புறங்களில் இத்தகைய மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருவதற்கு  தொலைக்காட்சிகள் பூதக்கண்ணாடி, நிஜம் போன்ற பிரத்தியேக நிகழ்ச்சிகள் மூலம் இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புவதும் ஒரு காரணம்.

இத்தகைய நிகழ்ச்சிகளில் தொலைகாட்சி நிரூபர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கிராமவாசிகளை பேட்டிக் கண்டு அவர்கள் கூறுவதை அப்படியே அதாவது எவ்வித தணிக்கைக்கும் உட்படுத்தாமல் ஒளிபரப்புவதன் மூலம் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு பதில் அதை வளர்க்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

கடவுளும் பேயும் மனித மனங்களில்தான் என்பதை என்றுதான் மக்கள் உணர்வார்களோ தெரியவில்லை.
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக