22 பிப்ரவரி 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 28

நான் கிளைக்கு பொறுப்பேற்ற முதல் ஒரு வாரத்தில் நான் கண்டவற்றிலிருந்து உணர்ந்ததைத்தான் என்னுடைய விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தேன் என்பதை விளக்கியும் என்னுடைய வட்டார மேலாளர் அதை மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய மறுத்துவிட்டார். அதை மறுத்ததில்கூட எனக்கு வருத்தம் இல்லை. தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் கூடுதல் செலவு செய்தால் என்னுடைய பணியை முடித்திருக்க முடியும். ஆனால் அவர் நான் ஏதோ ஒரு உள்நோக்கத்துடந்தான் கூடுதல் அவகாசம் கேட்கிறேன் என்று என்னிடமே தெரிவித்தபோது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் அவருடன் வாதாடி அதுவரை அவருடன் எனக்கிருந்த சுமுகமான உறவை கெடுத்துக்கொள்ள விரும்பாமல், 'சரி சார். நீங்க அப்படி நினைக்கறதாருந்தா நா ஒன்னும் சொல்றதுக்கில்லை. நீங்க என் அப்ளிக்கேஷன ரிஜெக்ட் பண்ணி அனுப்பிருங்க.' என்று தொலைபேசியை துண்டித்தேன்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை அடுத்த நாள் காலையில் சரியாக பத்து மணிக்கு அவரே என்னுடைய அலுவலகத்தில் ஆஜரானார். ஆய்வு என்ற போர்வையில். சாதாரணமாக ஒரு வட்டார மேலாளர் ஒரு கிளைக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட மேலாளரை அழைத்து அவருடைய வசதியையும் கேட்டு தெரிந்துக்கொண்ட பின்னரே செல்வது வழக்கம்.

ஆகவே எனக்கு அவருடைய முன்னறிவிப்பில்லாத வருகை சற்று எரிச்சலை மூட்டினாலும் அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் 'இதுவும் நல்லதுக்குத்தான்' என்ற நினைப்பில் அவரை வரவேற்றேன்.

வந்தவர் இருக்கையில் அமர்ந்ததுமே, 'சொல்லுங்க டிபிஆர். எந்த டாக்குமெண்ட்சோட ஜெனூயின்னெஸ்ல ஒங்களுக்கு சந்தேகம். Take those documents' என்றது வேறு என்னுடைய எரிச்சலை தூண்டியது. நான் ஏதோ வேண்டுமென்றே முந்தைய மேலாளரை குறை சொல்லும் நோக்கத்துடன் பொய்யாக ஒரு குற்றசாட்டை முன்வைத்து கால அவகாசம் கோரியதுபோலிருந்தது அவருடைய பேச்சு.

இருப்பினும் நான் மறுத்துப் பேசாமல் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து நான் குறித்து வைத்திருந்த கடன்களுடைய பத்திரங்களையும் அவற்றிற்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரங்களையும் மற்று ஆவணங்களையும் எடுத்து வர பணித்தேன்.

அந்த பத்திரங்கள்/ஆவணங்கள் ஆகியவற்றில் நான் கண்டிருந்த குறைபாடுகளை, ஐயங்களை குறித்து வைத்திருந்த குறிப்புகளை அவரிடம் காண்பிக்காமல் அவர் அவற்றை ஆய்வு செய்து முடிக்கும்வரை எனக்கிருந்த மற்ற அலுவல்களைப் பார்த்தேன்.

அடுத்த இரண்டு மணி நேரம் அவர் அதை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டு, 'இதுல நீங்க சொல்றா மாதிரி பெருசா ஒன்னும் குறைகள் இல்லையே டிபிஆர்.' என்றார் சலிப்புடன். நான் அமைதியாக குறித்துவைத்திருந்தவற்றை அவரிடம் நீட்டினேன்.

அவர் மறுமொழி பேசாமல் மீண்டும் பத்திரங்களை சரிபார்க்க ஆரம்பித்தார். நான் அவருடைய பணியில் தலையிடாமல் என்னுடைய அலுவலிலேயே குறியாயிருந்தேன். மீண்டும் ஒரு மணி நேரம் சென்றது.

இறுதியில் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பத்திரங்களை என்னிடமே திருப்பியளித்துவிட்டு என்னைப் பார்த்தார். 'I am sorry tbr. I should not have suspected your motives. இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க.'

என்னுடைய குறிப்புகளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, 'சார்.. என்னோட பிரடிசெசர ப்ளேம் பண்ணனும்னு எனக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனா ஒரு பிராஞ்சோட சார்ஜ் எடுக்கறப்ப சில விஷயங்கள வெளியில சொல்லாம இருந்தா எனக்கே அது வெனையா முடிஞ்சிருங்கறத நான் ஏற்கனவே அனுபவிச்சிருக்கேன். அதுவுமில்லாம எனக்கு இதுல சந்தேகம் இருக்குன்னு மட்டுந்தான் சொல்லியிருக்கேன். மேற்கொண்டு இந்த டாக்குமெண்ட்ஸ இன்வெஸ்ட்டிகேட் பண்ணணும்னுதான் கேட்டிருக்கேன். நீங்க என் ரிக்வெஸ்ட ரெக்கமெண்ட் பண்ணி அனுப்பனா போதும்.' என்றேன்.

'நீங்க சொல்றது வாஸ்தவம்தான் டிபிஆர். ஆனா இத நா ரெக்கமெண்ட் பண்ணேன்னா ஹெட் ஆஃபீஸ்லருந்து அப்படியென்ன டாக்குமெண்ட்ஸ் மேல டவுட்.. நீங்க ஏற்கனவே இதையெல்லாம் இன்ஸ்பெக்ட் பண்ணதுதானே.. நீங்க ஜோனல் மேனேஜரா இருந்தப்போ குடுத்த லோன்ஸ்தானேன்னுல்லாம் கேள்வி கேட்காம இருக்க மாட்டாங்க. I do not know how it happened? I was entirely dependent on the reports furnished by our previous CM in charge of the credit department in our office. இந்த லோன்ஸ் எல்லாம் குடுக்கறப்பவே இப்படியொரு டிஃபெக்ட்ஸ் ப்ராப்பர்ட்டி டாக்குமெண்ட்ஸ்ல இருந்திருக்குன்னு தெரியவந்தா they will question me also tbr... that's why I hesitated to recommend your request.. That's is the reason I chose to come here and see the documents.. Sorry if you are offended by my sudden visit. I just could not help it.' என்றவர் சிறிது நேரத்திற்குப் பிறகு, 'Could this be the reason why he was transferred? நீங்க என்ன நினைக்கிறீங்க?' என்றார்.

நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் யார் வழியாக இந்த விபரம் தலைமையகத்துக்கு சென்றிருக்க முடியும்? முந்தைய ஓராண்டு காலத்திற்குள் எந்த ஆய்வும் நடந்திருக்கவில்லை. இதே வட்டார மேலாளர் மட்டுமே இருமுறை கிளைக்கு விஜயம் செய்திருந்தார். கடந்த நிதியாண்டின் இறுதியில் கிளையின் ஆண்டிறுதி நிதியறிக்கைகளை வெளியிலிருந்து வந்திருந்த தணிக்கையாளரைத் தவிர வேறு எவரும் கிளையை விஜயம் செய்திருக்காத சூழலில்.. வட்டார அலுவலகத்திற்கும் தெரியாமல் எப்படி இது தலைமையகத்திற்கு அதுவும் வங்கி முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்க முடியும்?

'என்னால இப்போ எதுவும் சொல்ல முடியல சார். ஆனா நம்ம எச்.ஓ குடுத்துருக்கற டைமுக்குள்ள என்னால இத டீட்டெய்லா இன்வெஸ்ட்டிகேட் பண்ண முடியும்னு தோனலை. இத என்னோட சார்ஜ் டேக்கிங் ரிப்போர்ட்லயும் குறிப்பிடாம இருக்க முடியுது. நீங்க தப்பா நினைச்சிக்கக் கூடாது.' என்றேன்.

அவர் உடனே, 'சேச்சே.. I will not prevent you from mentioning it in your report.' என்றார். 'ஆனா அதுக்கு முன்னால இதுக்கு என்ன ரெமடின்னும் யோசிக்கனுமே.'

'நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா அதுக்கு முன்னாலருந்த மேனேஜரோட ப்ரெசென்ஸ் வேண்டியிருக்கும். ஏன்னா இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாமே அவரே கைப்பட தயாரிச்சதுன்னு சொல்றார் நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர். அதனால அவர மறுபடியும் இங்க கொண்டு வரணும். அதுக்கு இந்த டிஃபெக்ட்சையெல்லாம் ரிப்போர்ட் பண்ணித்தான் ஆகணும். ஆனா என்னோட ரிலீவிங் மேனேஜர் ரிப்போர்ட்ல போட முடியாதுங்கறதும் உண்மைதான். அதனால ஒரு கான்ஃபிட்ன்ஷியல் ரிப்போர்ட் அனுப்பலாம்னு நினைக்கிறேன். அதுக்கு ஒங்க பர்மிஷன் வேணும்.'

'Yes.. That's a good idea.'

'அப்புறம், இன்னொரு சிக்கலும் இருக்கு சார்.'

'என்ன சொல்லுங்க?'

'சில டாக்குமெண்ட்சுலருக்கற டிஃபெக்ட்ச சரிபண்றதுக்கு சம்பந்தப்பட்ட கஸ்டமர்சோட கோப்பரேஷனும் வேண்டியிருக்கும்.'

அவர் உண்மைதான் என்பதுபோல் தலையை அசைத்தார். 'ஆனா டிபிஆர். அதுலயும் ஒரு ரிஸ்க் இருக்கே?'

'நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது சார். டாக்குமெண்ட்ஸ்லருக்கற டிஃபெக்ட்ஸ் கஸ்டமர்சுக்கு தெரியவந்துரும்னு சொல்றீங்க.'

'ஆமாம். அப்புறம் அத வச்சே நம்மளால இந்த டாக்குமெண்ட்ச என்ஃபோர்ஸ் பண்ணமுடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டு கடன அடைக்காம இழுத்தடிச்சாலும் செய்வாங்க இல்லையா?'

ஆம்.. என்னுடைய அனுபவத்தில் பல சந்தர்ப்பங்களில் இப்படி நடந்திருக்கிறது. சாதாரணமாக நான் ஒருவருக்கு கடன் வழங்குவதென தீர்மானித்தால் அதை வழங்க வேண்டிய நாளுக்கும் முந்தைய நாளே அமர்ந்து அவர்களிடமிருந்து பெற வேண்டிய அனைத்து ஆவனங்களையும் தயார் செய்து எந்த இடத்திலெல்லாம் அவர்களுடைய கையொப்பத்தைப் பெறவேண்டுமென்பதை பென்சிலால் X குறியிட்டு வைத்துவிடுவேன். (பேனாவால் குறியிடுவது சரியல்ல. ஏனென்றால் அந்த X குறியும் கையொப்பத்தின் ஒரு பாகமாக கருதப்பட்டுவிட வாய்ப்புள்ளது. இதை வைத்தே சில வாடிக்கையாளர்கள் அது எங்களுடைய கையொப்பமல்ல என்று கோர்ட்டில் வாதாடுவார்கள்! அப்படிப்பட்ட எத்தர்கள் நிறைந்த உலகத்தில் என்னைப்போன்ற வங்கி அதிகாரிகள் செய்யும் சிறு, சிறு தவறுகளும் சிக்கலில் முடிவதை பார்த்திருக்கிறேன்.).

தொடரும்..

9 கருத்துகள்:

  1. நீங்க எடுத்திருக்கும் நிலைப்பாடுதான்
    சரியானது!

    எப்படி இவ்விதயம் மேலே தெரிந்தது!

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஜி!

    எப்படி இவ்விதயம் மேலே தெரிந்தது!//

    சொல்றேன்.. எல்லா அலுவலகங்களிலுமே அஃபிஷியல் சானலை விட அன்னஃபிஷியல் சானல்தான் வேகமா வேலைசெய்யும்.. சரிதானே?

    பதிலளிநீக்கு
  3. தி.பா 27 பின்னூட்டத்திற்குப் பதிலில்
    நான் அம்பேல் ஆனதைக் குறிப்பிட்டு
    இருந்தீர்கள்
    க்ணினி செயல்பட மறுப்பதைத் தெரிவித்துவிட்டுதான் அம்பேல் ஆனேன்
    அப்படியும் 4 அல்லது 5 முறை
    ப்ரவுஸிங் செண்ட்டர் சென்றேன்;
    'திரும்பிப் பார்'க்க ஆளில்லை;'சூரிய'னுக்கும்
    மேகமூட்டம்.....
    பண விரயம்தான் கண்ட பலன்...
    ஒரே ஆறுதல்.....ப்ரஷ்ஷர் எகிறாமல்
    இருந்ததுதான்!

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஜி!

    ஒரே ஆறுதல்.....ப்ரஷ்ஷர் எகிறாமல்
    இருந்ததுதான்! //

    இதுவே பெரிய ஆறுதலாச்சே..:)

    பதிலளிநீக்கு
  5. அடேங்கப்பா...ஒரு பெருக்கல் குறிய வெச்சி அது கையெழுத்தேயில்லைன்னு சொல்வாங்களா? அது சரி. எனக்கு ஒரு ஐயம். நாம ஒவ்வொரு வாட்டி கையெழுத்துப் போடும் போதும் ஏதாவது ஒரு மாத்தமிருக்குமே. அப்புறம் எப்படி நம்ம கையெழுத்துதான்னு நிரூபிக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  6. வாங்க ராகவன்,

    ஒரு பெருக்கல் குறிய வெச்சி அது கையெழுத்தேயில்லைன்னு சொல்வாங்களா? //

    அது வெறும் பெருக்கல் குறியில்லேன்னு வாதாட முடியும். உதாரணத்திற்கு ஒங்க கையெழுத்தையே எடுத்துக்குவோம். உங்க பேர ஜி.ராகவன்னுதான போடுவீங்க. அதுக்கு முன்னால இங்க்ல ஒரு X இருந்தா அது XG ராகவன்னும் இண்டர்ப்ரெட் பண்லாம் இல்லையா? என் கையெழுத்துக்கு முன்னால Xனு போடற பழக்கம் இல்லை. அதனால இது வேற யாருடைய கையெழுத்தோன்னு வாதாடலாமே..

    நாம ஒவ்வொரு வாட்டி கையெழுத்துப் போடும் போதும் ஏதாவது ஒரு மாத்தமிருக்குமே. அப்புறம் எப்படி நம்ம கையெழுத்துதான்னு நிரூபிக்க முடியும்? //

    நம்ம கையெழுத்துதான் இதுன்னு ப்ரூஃப் பண்ற கடமை நம்மளது இல்லை. இது என் கையெழுத்து இல்லைன்னு நான் சொன்னா அத ப்ரூஃப் பண்ற கடமை என்னோடது.

    அதுபோலவே இது ஒங்க கையெழுத்து இல்லைன்னு யாராவது சொன்னா அதயும் அவங்கதான் ப்ரூஃப் பண்ணணும்.

    வேறொன்னு. எல்லா கையெழுத்துக்குமே ஒரு structure இருக்கு. Signature Experts அது ஒழுங்கா இருக்கான்னுதான் பார்ப்பாங்க. மத்தபடி ஒரு நெளிவு, ஒரு சுளிவு அல்லது ஒரு புள்ளி, கோடு.. இப்படி அப்படியிருந்தா அத கண்டுக்க மாட்டாங்க. எல்லாருக்குமே கால போக்குல கைடெழுத்துல கொஞ்சம் மாற்றம் வரும்னு அவங்களுக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
  7. ஆனா, ஒரு முதலமைச்சரே, தன்னோட கையெழுத்த, தான் போட்டதில்லன்னு சொன்னாங்க, நீதிமன்றத்திலேயே. ஒண்ணு, அவங்க கையெழுத்தில்லன்னு முடிவு பண்ணி, அம்மாதிரி பத்திரம் தயார் பண்ணது மோசடின்னு சொல்லி, நடவடிக்கை எடுக்கச் சொல்லனும். இல்ல, இது அவங்க கையெழுத்து தான், பொய் சொன்னதுக்கு, தண்டன கொடுத்திருக்கனும். இரண்டுமே நடக்கலயே...சட்டமெல்லாம், கட்டுப்பட்டு நடக்கற நம்மள மாதிரி ஆளுங்களுக்கு மட்டும்தான் சார்...


    நீங்க கண்டுபிடித்து வைத்திருந்த குறைபாடுகளை முதலிலேயே காட்டாம இருந்த்துதான் பிரமாதம். நல்லா, மூக்குடபட்டிருப்பார்...

    சொ.செ.சூ.வெ...சார், இத வலைப்பூக்கள்லிருந்துதான் பிடிச்சேன். சொந்த செலவில சூனியம் (இணைவியிடமிருந்து என்பதால், சூடு) வெச்சிக்கிறது சார்...

    பதிலளிநீக்கு
  8. வாங்க கிருஷ்ணா,

    ஒரு முதலமைச்சரே, தன்னோட கையெழுத்த, தான் போட்டதில்லன்னு சொன்னாங்க,//

    மேடம்தானே.. ஏன் சொல்ல மாட்டாங்க?

    நீதிமன்றத்திலேயே. ஒண்ணு, அவங்க கையெழுத்தில்லன்னு முடிவு பண்ணி, அம்மாதிரி பத்திரம் தயார் பண்ணது மோசடின்னு சொல்லி, நடவடிக்கை எடுக்கச் சொல்லனும். இல்ல, இது அவங்க கையெழுத்து தான், பொய் சொன்னதுக்கு, தண்டன கொடுத்திருக்கனும். இரண்டுமே நடக்கலயே...//

    எடுத்தா எடுத்த ஆளையே போதைப் பொருள் கேஸ்ல உள்ள தள்ளிருவாங்களே.. என்ன கிருஷ்ணா நீங்க..

    சட்டமெல்லாம், கட்டுப்பட்டு நடக்கற நம்மள மாதிரி ஆளுங்களுக்கு மட்டும்தான் சார்...//

    அதிலென்ன சந்தேகம். இதத்தான் law abiding citizensனு சொல்றது..

    சொந்த செலவில சூனியம் (இணைவியிடமிருந்து என்பதால், சூடு) வெச்சிக்கிறது சார்... //

    ஓ!இப்ப புரியுது.. என் கதையும் அந்த மாதிரிதான்.. :)

    பதிலளிநீக்கு
  9. <-- அதுபோலவே இது ஒங்க கையெழுத்து இல்லைன்னு யாராவது சொன்னா அதயும் அவங்கதான் ப்ரூஃப் பண்ணணும். -->

    Thanks for your info.
    I had a similar situation When I surrendered my BSNL phone connection.

    பதிலளிநீக்கு